23.5.25

காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே

 

மலையோரம் மயிலே        ஏத்தமையா ஏத்தம்          ஏறாத மலைமேலே

​இன்று மூன்று மலேஷியா வாசுதேவன் பாடல்களை பகிர்வோம் என்று மூன்று பாடல்களைத் தெரிவு செய்துகொண்டு வந்தேன்.  பார்த்தால் முதல் பாடலின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பார்த்தால் அங்கேயே அமிழ்ந்து விடுவேன் போல லிஸ்ட்.  இருந்தாலும் வாக்கு மாறாமல் ஜுகுராக மலேஷியா வாசுதேவனிடமே நிற்கிறேன்!

மலேஷியா வாசுதேவன், சித்ரா பாடி இருக்கும் மலையோரம் மயிலே பாடல் முதல் பாடல்.  பொன்னடியான் எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா.  இந்தப் படத்தின் மற்ற பாடல்களுக்கு ராகம் சொல்லி இருக்கும் விக்கி, இந்தப் பாடலுக்கு மட்டும் சொல்லவில்லை.  நானாக மோகனம் பேஸ் என்று நினைத்துக் கொள்கிறேன்.  கீதா ரெங்கன் வந்து இல்லை என்று சொல்லும் வரை அதுதான் ராகம்!!

'ஒருவர் வாழும் ஆலயம்' என்பது படத்தின் பெயர்.  1988 ஆம் வருடம் வெளியானது.  ஷண்முகப்ரியன் என்பவர் இயக்கி இருக்கிறார்.  படம் சுமாராக ஓடி இருக்கும் என்று நம்புகிறேன்.  அதெல்லாம் நினைவில் இல்லை.  நினைவில் இருப்பது படத்தின் பாடல்கள்..  என்ன பாடல்கள்?  அம்மாடி..  இளசு இளசுதான். படத்தின் மற்ற பாடல்களையும்  காலக்கிரமத்தில் இங்கு பகிர்வேன் என்று சொல்லிக்கொண்டு...

இந்தப் படம்தான் நடிகர் ஆனந்தராஜுக்கு முதல் படமாம்.  பாடலில் பிரபுவுடன் ஆடும் நடிகையைத் தெரிகிறதா?  'நிழல்கள்' நாயகி ராது.  அந்தப் படத்துக்குப் பின் இந்தப் படம்தான் ரீ என்ட்ரி.  ஒன்றும் தேறியதாக தெரியவில்லை.

நாட்டுப்புற பாடல் பாணியில் அமைந்திருக்கும் பாடல்.  சரணங்களில் அப்படியே குழைய வைத்திருப்பார் இளசு.  சர்க்கரைப் பொங்கல்.  குதித்து ஆடும் பாடலின் பல்லவியைத் தொடர்ந்து "பூமரக் காத்து சாமரம்தான்..  வீசுது இங்கே சாமரம்தான்.." என்று குழையும் மலேஷியாவின் குரல் சுகம்.  இளையராஜாதான் மலேஷியாவுக்கு பற்பல இதமான பாடல்களைக் கொடுத்தார் என்று அடித்துச் சொல்வேன்.  இருங்க..  எங்கே தள்ளிப் போறீங்க?  உங்களை எல்லாம் அடிக்க மாட்டேன்!

மலேஷியா  : மலையோரம்……விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
சித்ரா  : ஆங்….அப்புறம்
மலேஷியா : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
சித்ரா : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

சித்ரா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலேஷியா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித் தந்ததாரு
சித்ரா : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

சித்ரா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலேஷியா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

மலேஷியா : பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
சித்ரா : பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மலேஷியா : மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத் தானே சேரனும் நீயே
சித்ரா : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ….

மலேஷியா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
சித்ரா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலேஷியா : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
சித்ரா : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

சித்ரா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலேஷியா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

மலேஷியா : ………………..
சித்ரா : ……………….

மலேஷியா : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
சித்ரா : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
மலேஷியா : ஆடிடும் பூவும் ஆசையைத் தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
சித்ரா : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ….

மலேஷியா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
சித்ரா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலேஷியா : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
சித்ரா : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

சித்ரா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலேஷியா : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே


=======================================================

87  ல் வெளியான ஒரு படம் 'நினைவே ஒரு சங்கீதம்'.  விஜயகாந்த், ராதா, ரேகா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தது.  கே ரெங்கராஜ் இயக்கம்.  கங்கை அமரன் பாடல்களுக்கு இசை இளசு.  படம் சுமார் என்றுதான் நினைக்கிறேன்.  மேலே சொல்லி இருக்கும் இரண்டு படங்களும் பார்க்கவில்லை.  அதே சமயம் பாடல்களை கேட்காமல் விட்டதில்லை!

'பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்' பாடலும், 'எடுத்து வச்ச பாலும்' பாடலும் இந்தப் படத்தின் மற்ற நல்ல பாடல்கள்.  முதல் பாடல் எஸ் ஜானகியம்மா பாடியது.  இரண்டாவது பாடல் தலைவர் பாடியது.  எனினும் இன்று நான் மலேஷியா வாசுதேவன் பாடலைத்தான் பகிரப்போகிறேன்.  இந்தப் படத்தின் மூன்றாவது நல்ல பாடல்.  அல்லது முதல் நல்ல பாடல்!

இந்தப் பாடல் ஹரிகாம்போதியில் அமைக்கப்பட்டிருப்பதாய் விடை சொல்லி விட்டார்கள்.  பாடலை எழுதியது இளையராஜா.  கொஞ்சம் அங்கங்கே பாடல் வரிகள் பல்லிளிக்கிறது.  ஆனாலும் சுவாரஸ்யமான, ரசிக்கக்கூடிய, இனிமையான நாட்டுப்பாடல்.  கேட்போமா..

சரணங்களில் முதல் பகுதி முடிந்த உடன் சித்ரா கேள்வி கேட்பது போல பாடும்போது ஒவ்வொரு வரிக்கும் வயலினில் ஒரு இழுப்பு இழுப்பார் இளையராஜா...


மலேஷியா : முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம்
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க சோற்கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணும்மையா………

மலேஷியா : ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்

சித்ரா : ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்

சித்ரா : கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

சித்ரா : கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

மலேஷியா : கோவணமுமில்ல கையில் காசுமில்ல
பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலை போல உன்ன கண்டதால்
ஏத்தம் கெடுதே கன்னிபுள்ள

சித்ரா : சேலைய பார்த்தாலே சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா அந்த வெட்டி பேச்சு ஏன் மாமா
மலேஷியா : காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சணும்
பஞ்சத்த தீக்கணும் பசி தாகம் போக்கணும்

சித்ரா : ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்

சித்ரா : ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா

சித்ரா : ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா

மலேஷியா : எந்திரம் வச்சு வேல செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள

சித்ரா : மண்ணு விளைஞ்சாலே அது வேணாங்குதா மாமா
கையில் பொண்ணு நிறைஞ்சாலே
அது பொல்லாததா மாமா

மலேஷியா : விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு
மனுஷன் மனசு கூட மிஷின் ஆகிபோச்சு போ புள்ள

சித்ரா : ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்

மலேஷியா : ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்


============================================================================================

நம் மூன்றாவது பாடல் முதல் மரியாதை படப் பாடல்.  ஏற்கெனவே 'முதல் மரியாதை' படம் பற்றிய விவரங்களை பேசி இருக்கிறோம்.  பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா, மலேஷியா வாசுதேவன், சிவாஜி, ராதா...

மலேஷியா : ஏறாத மல மேலே…. ஆ…
எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா… ஆ…
எசப் பாட்டு படிக்கட்டுமா
எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா

மலேஷியா : ஏறாத மல மேலே….

எஸ். ஜானகி : ஆ…
ஏ… எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பி விட
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு

சிவாஜி  : ஏ புள்ள சரோசா
இங்க எவளாது
எம் பாட்டுக்கு எசப் பாட்டு பாடுனிக

வயக்காட்டு பெண் 1  : ஏனுங்க நாங்க பாட்டு பாடற
மாறியா இருக்கோம்
உங்க பாட்டுக்கு எசை பாட்டு
பாட முடியுமா

சிவாஜி : எலே ராக்கு நீ பாடுனவ

வயக்காட்டு பெண் 2  : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான்
கொரசல் ஆக்கும்

மலேஷியா : அடி மாங் குளத்து கர மேல… ஏ…
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து…
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா

மலேஷியா : பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா

எஸ். ஜானகி  : பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்

மலேஷியா : அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப

பெண் எஸ். ஜானகி : ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்

மலேஷியா : ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
அடி ஓடப் பக்கம்….

51 கருத்துகள்:

  1. மலையோரம் மயிலே... மிக அருமையான பாடல். மலேஷியா குரல்ல சூப்பர்.

    ஏறாத மலைமேல.... எத்தனை முறை கேட்டிருப்பேன். மிக அருமையான பாடல்.

    இரண்டாவது பாடல் மனதில் கேட்ட மாதிரித் தோணலை. பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  எனக்கு ஒரு கேள்வி..   நான் பாடல்களை இப்படி பகிரும்போது, 'ஓ..  இந்தப் பாடலா?  எனக்குத் தெரியுமே' என்று செல்வீர்களா?  அல்லது இப்போது ஒரு தரம் கேட்டுப் பார்ப்பீர்களா?

      இரண்டாவது பாடல் இப்போது மற்றவர்கள்  தூங்குவதால் கேட்க முடியாது என்று நினைக்கிறேன்.  கரெக்ட்டா?

      நீக்கு
    2. நான் நிறைய தடவை கேட்ட பாடல்கள் வரிகளைப் படிக்கும்போதே மனதில் ஒலிக்கும். அதனால் பெரும்பாலும் கேட்பதில்லை. காலையில் சீக்கிரம் தளத்துக்கு வந்தால் கேட்காத பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்பதில்லை. நடைப்பயிற்சியின்போது கவனம் சிதறும் என்பதால். எல்லாமே 12 மணிக்குப் பிறகுதான்.

      நீக்கு
    3. இரண்டாவது பாடலை இப்போது கேட்டேன். முன்பும் கேட்டிருக்கிறேன். நல்ல பகிர்வு.

      அன்னதானம் மற்றும் பிற தானங்களைச் செய்த, நல்ல குணங்களையும் அனைவரையும் அரவணைக்கும் குணம் கொண்டிருந்த விஜயகாந்த் பற்றிய நினைவுகள் மனதில் வந்து, ஏன் அவர் கஷ்டப்படும்படியாக ஆனது என்ற எண்ணம் மனதுக்குள் வந்துவிட்டது.

      நீக்கு
    4. நடைப்பயிற்சியில் கவனம் சிதற என்ன இருக்கிறது நெல்லை?  பெரும்பாலும் அப்போதுதான் நிறையபேர் இசையை கேட்பார்கள்.

      நீக்கு
    5. ஒருவேளை நாம் தர்மம் நியாயம் என்று தப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ...   மாற்றி ..வாழவேண்டுமோ.. 

      அல்லது மேலுலகத் தேர்தலில் கடவுள் டெபாசிட் இழந்து சாத்தான் வெற்றி பெற்றிருக்கிறதோ? 

      அவர்களின் காலக்கணக்கு வேற வேறுவகை...  இன்னும் எத்தனை காலம்தான்...

      நீக்கு
    6. நான் சொல்லிக்கொண்டிருக்கும் சஹஸ்ரநாமாவில் கவனம் சிதறி ஒருவேளை பாடல் வரிகள், இசை மனதில் ஆக்கிரமிக்கலாம். இதனை சில முறைகள் அவதானித்திருக்கிறேன்.

      நீக்கு
    7. ஓ...  சரி..  சரி...  ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டே நடைப்பயிற்சி செய்வீர்களா?  புரிகிறது.

      நீக்கு
  2. 'மலையோரம் வீசும் காற்று' பாடல் மட்டும் என்ன பாவம் செய்தது? கூட்டத்தோடு கூட்டமா அதையும் கொண்டு வந்து
    நிறுத்தியிருக்கறது, தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...  அது முதலிலேயே பகிர்ந்திருக்கிறேன் என்பது மட்டும் விஷயமில்லை.  அந்தப் பாடல் இந்த லிஸ்ட்டில் வராது.   ஏன் என்று சொல்லுங்கள்..

      நீக்கு
    2. அந்தப் பாட்டின் ஆரம்ப வரியின் பாதிப்பில் தான் இந்தப் பாட்டும் என்று என்னளவில் சொன்னாலும் மா வா.வின் லிஸ்ட்டில் வராதுன்னு ரொம்ப சிம்பிளா நீங்க முடிச்சு வைச்சிடுவீங்க.. கரெக்ட்?

      நீக்கு
    3. இல்லை..  இவை நாட்டுப்பாடல்கள் மாதிரியான சேர்ப்பு.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கமும், நன்றியும்!

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முதல் பாடல் முதல் வரிகளை பார்த்தவுடன் பாட்டு மனதில் ஓட ஆரம்பித்து விட்டது. இரண்டாவதும் அடிக்கடி கேட்டுள்ளேன். தெரிந்த பாட்டுத்தான். மூன்றாவதாக முதல் மரியாதை பாடல் அப்போது படம் வந்த புதிதில் கேட்ட நினைவு. பிறகு அடிக்கடி கேட்டதில்லை. இப்போது மூன்று பாடல்களையும் பிறகு நீங்கள் சகோதரர் நெல்லைத் தமிழருக்கு சொன்ன மாதிரி வீட்டில் அனைவரும் தூங்கி எழுந்த பின் அவரவர்களுடைய வேலைகளில் அவரவர்கள் ஆழ்ந்த பின் கேட்கிறேன்.

    நீங்கள் ஒவ்வொரு பாடலையும், ரசித்து அனுபவித்து அந்தப் பாட்டுக்களுடையே ஒன்றி, அதைப்பற்றி எழுதுவது நன்றாக இருக்கிறது. இந்த அளவு வரிகளை நான் ரசிப்பதில்லையோ எனவும் சமயங்களில் தோன்றுகிறது. முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பிரபுவின் ஸ்டைலும், கூடவே நடிக்கும் நிழல்கள் பட நாயகியின் அழகும் எனக்கு இப்பாடலில் மிகவும் பிடிக்கும். முன்பு தொலைக்காட்சியில் பார்க்கும் போது பாடல் முடியும் வரை நகராமல் இருந்து பார்த்திருக்கிறேன். வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பும் போது கேட்டிருக்கிறேன். பாடல் முழுவதும் வரிகள் நினைவிருக்குமா என்றால், இல்லையென்ற பதில்தான் என்னிடமிருந்து வரும். நீங்கள் ஒவ்வொரு பாடலையும் ஆழ்ந்து ரசிக்கிறீர்கள் . உங்கள் ரசனைக்கு வாழ்த்துகள்.

    மலேஷியா வாசுதேவன் சித்ரா அவர்களின் குரலினிமை எப்போதுமே நன்றாக இருக்கும். பிறகு மூன்றையும் கேட்டு ரசித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.   பாடல்களை மனதார கேட்பது என்பது ஆரம்பத்திலிருந்தே பழகி விட்டது.  இதில் வீட்டில் கூத்தாடி பாடல்கள், பக்தி பாடல்கள், கர்னாடிக் பாடல்கள் என்றெல்லாம் உன்னால் முடியும் தம்பி டைப் சண்டை எல்லாம் வரும்.  என்னைப்பொறுத்தவரை மனதுக்குப் பிடித்த எந்த இசையும் இசைதான்.  இன்று என் அன்புக்குரிய மாமா ஒருவரின் பிறந்தநாள்.  பாடல்கள் பற்றிய விஷயத்தில் எங்கள் இருவருக்கும் ஒத்த கருத்துதான்.  பாடல்கள் நான் கேட்கும்போது வீட்டில் யாராவது பேசிக்கொண்டிருந்தாள் என் மனதுக்கு ஒவ்வாது!

      நீக்கு
    2. யார்..? சகோதரர் கௌதமன் அவர்களுக்கா? இல்லை உங்களின் மற்றொரு மாமாவிற்கா? யாராயினும், உங்கள் அன்பிற்குரிய மாமாவிற்கு எனதன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். பணிவான நமஸ்காரங்களும். .

      நீக்கு
    3. இல்லை, கொரோனாவில் மறைந்த என் மாமா.

      நீக்கு
  5. இன்றைய பாடல்கள் அனைத்துமே மனதுக்கு இதமானவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இனிமையான நாட்டுப்புற மெட்டுகள்.

      நீக்கு
  6. தற்கால டப்பா கூச்சல்களுக்கு மத்தியில் பம்பு செட் பாடல் சிறப்பு தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. வரிகளின் தெளிவு.

      நீக்கு
    2. அவ்வப்போது துரை செல்வராஜு சாரை இங்கு காண முடிவதில் மகிழ்ச்சி. இப்போது கண் பரவாயில்லையா? உடல் நிலை சரியாகிறதா?

      நீக்கு
  7. ஒருவர் வாழும் ஆலயம்' 1988 ல் வெளியானது...ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்கள், இசையினால்தான் நன்றாக ஓடி இருக்கும்.

      நீக்கு
  8. ஸ் ஆஹா ஆஹா முதல் பாடல் மலையோரம் மயிலே என்னமான சூப்பர் பாடல் இல்லையா ஸ்ரீராம்.

    எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மலேஷியா வாசுதேவன் அவர்களின் குரலில் ஹையோ!! ஆனால் குரல் ரொம்ப வித்தியாசமான குரல் இந்தப் பாட்டில் இல்லையா...

    அழகான கல்யாணி பாட்டிலும் சரி, இசையிலும் சரி இன்டெர் லூடிலும் சரி விலகாமல் கல்யாணி.......தாரு என்பதை சித்ரா கமகத்துடன் இழுக்கும் போது ....அதில் அப்படியே

    கேட்டு ரசித்துக் கொண்டே கருத்த் அடிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நானாக மோகனம் பேஸ் என்று நினைத்துக் கொள்கிறேன். கீதா ரெங்கன் வந்து இல்லை என்று சொல்லும் வரை அதுதான் ராகம்!!//

    ஹாஹாஹாஹா....இந்தப் பாட்டிலிருந்து இப்படிப் பாடிப் பாருங்க....கலைவாணியே உனைத்தானே......அம்மா என்றழைக்காத உயிரில்லையே,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதும் இப்போதும் அவை எனக்கு கனெக்ட் ஆகவில்லை! :-))

      நீக்கு
    2. கல்......ஆணி.....கல்யாணி....

      இளையராஜா கல்யாணியில் நிறைய பாடல்கள் போட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் பலவிதம். அப்படினா கனெக்ட் ஆகாத வகையில் போட்டிருக்கிறாரோ!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அவர் மேதை. இசைச்சித்தர்.

      நீக்கு
  10. படம் பெயர் எல்லாம் ம்ஹூம்....பாட்டு மட்டும்தான் தெரிகிறது.

    இளையராஜாதான் மலேஷியாவுக்கு அருமையான பாடல்களைக்கொடுத்தவர் என்பதை நானும் அடிச்சுச் சொல்கிறேன்!!!!!! ஹிஹிஹி நான் கேட்ட பாடல்கள், அறிந்த வரையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பெயர் கொடுத்திருக்கிறேனே...

      நீக்கு
    2. கொடுத்திருக்கீங்க ஸ்ரீராம்....ஆனா படம் பெயர் எல்லாம் கேட்டதாகவே தெரியலைன்னு

      கீதா

      நீக்கு
    3. ஓ..  அப்படிச் சொல்றீங்களா?!

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. ரெண்டாவது பாட்டு இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். அந்தப் படப் பெயரே ம்ஹூம். இப்படி எல்லாம் படம் வந்திச்சான்னு!!

    பாட்டு நல்லாருக்கு. இதுல மலேஷியாவின் குரல் தெரிகிறது. பாட்டும் சீனில் இயற்கையும் அத்தனை அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸுக்கு அந்த இன்னொரு பாடல் - SPB  பாடியது - ரொம்பப் பிடிக்கும்!

      நீக்கு
    2. எஸ்பிபி பாடியதையும் கேட்கிறேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. மூன்று பாடலகளையு கேட்டேன். முதல் இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
    மூன்று பாடமும் சோக படம் . ஆனால் பாடல்கள் நன்றாக இருக்கும். மலேஷியா வாசுதேவன் நிறைய நல்ல இனிமையான பாடல்கள் பாடி இருக்கிறார்.
    பாடல் பகிர்வு அருமை.
    உங்கள் சகோதரியின் கணவர் தானே அந்த மாமா ?அவருக்கும் உங்களுக்கும் ஒத்த கருத்துக்கள் உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா.  கொரோனாவில் மறைந்தவர்.  எனக்கு(ம்) ரொம்ப நெருங்கியவர்,  நான் முதல் மரியாதை படம் மட்டும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  14. மூன்றாவது பாட்டும் இப்பதான் கேட்கிறேன், ஸ்ரீராம் கேட்ட நினைவில்லை.

    ஆனா முதல்மரியாதை படத்தில் நினைவிருக்கும் மத்த பாடல்கள்

    ராசாவே உன்னை நம்பி, அந்த நிலாவை நான் தான் கையில பிடிச்சேன், பூங்காற்று திரும்புமா - மலேஷியா அருமையான பாடல், ஏ குருவி - மலேஷியா, வெட்டி வேரு வாசம் - மலேஷியா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ இன்னொரு பாட்டும் கேட்டிருக்க மாட்டீங்க... 

      "ஏய்..  ஏரியிருக்கு குளமிருக்கு எரிக்கரையிருக்கு.." 

      நீக்கு
    2. இன்றைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் பாடல்கள்.

      முன்பும் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்.

      நீக்கு
    3. "ஏய்.. ஏரியிருக்கு குளமிருக்கு எரிக்கரையிருக்கு.." //

      ஸ்ரீராம், வார்த்தைகளைப் பார்க்கறப்ப ஏதோ மெட்டு நினைவுக்கு வருது...கேட்டுப் பார்க்கிறேன் அதேதானா என்று..

      கீதா

      நீக்கு
    4. ஏய் கிளியிருக்குன்னு சொல்லிச்சி கூகுள்...ஆனா முதல்மரியாதைன்னு போட்டுக் கேட்டேன்....பாட்டு கேட்டிட்டுருக்கேன்......முன்ன கேட்டதில்லை..

      கேட்டுக் கொண்டே வேலை.

      கீதா

      நீக்கு
  15. இதே சிவாஜி தான். ஏறாத மலைதனில் - ஜோரான கெளதாரி ரெண்டு -- என்று அந்தக் கால தூக்கு தூக்கி படப்பாடல் ஒன்றுண்டு..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!