15.5.25

"Can you please spare me ten rupees please.."

 

ஒரு மிடில்க்ளாஸ் ஃபேமிலி மேன் தோற்றம்.  சாதாரணமான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்நதவர் போன்ற தோற்றம்.  மன்னிச்சுக்குங்க..  அப்பப்போ மேஜர் ஞாபகம் வந்துடுது!  ஆடம்பரம் இல்லாத ஆனால் சாதாரணமான பேண்ட் ஷர்ட்..

அது என்னவோ இந்தக் காலத்திலும் கண்ணாடி போட்டாலே ஒரு படித்த லுக் வந்து விடுகிறது.  இவர் போட்டிருப்பார்.  எனவே ஒரு கௌரவமான தோற்றம் என்று சொல்லலாம்.

அவரை எடுத்த புகைப்படத்தை அப்படியே போடாமல் ஜிப்லி செய்து போட்டிருக்கிறேன்.  ஜிப்லி அவர் புன்னகைப்பது போல படத்தை  மாற்றிக் கொடுத்திருந்தாலும் அவர் முகம் எப்போதும் ஸீரியஸாகத்தான் இருக்கும்!  அதே சாட் ஜிபிடியில் ஜிப்லியிலிருந்து ஒரிஜினல் தோற்றம் கிடைக்குமாயின், நீங்கள் இந்தப் படத்தை அதில் போட்டு அவர் ஒரிஜினல் தோற்றத்தைப் பார்க்கலாம்.  ஆனால் அது அவ்வளவு முக்கியமா என்று எனக்குத் தெரியவில்லை.

சாட் ஜிபிடி எப்படி மாற்றிக் கொடுக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்...   அழகான எம் ஜி ஆர் முகமும், 




அதை சாட் ஜிபிடியில் போட்டும் ஜிப்லியாக்கியதும் அது மாற்றிக் கொடுத்த உருவமும்...


கொஞ்சம் கொடுமையாயில்லை?!!

சரி, இன்றைய விஷயம் ஒன்றும் பெரிசில்லை.  இவர் (இவர் என்றால் எம் ஜி ஆர் அல்ல.  முதல் படத்தில் இளிப்பவர்..  ச்சே...   இருப்பவர்) கேரக்டர் பற்றி சொல்லத்தான்.  எங்கள் ஏரியாதான்.  இவரை நான்  மூன்று நான்கு வருடங்களாக பார்க்கிறேன்.  முதலில் பார்த்ததற்கு இப்போது சற்று கறுத்துப் போயிருக்கிறார்.  ரொம்ப அலைகிறார் இல்லையா?!   வீடு எங்கிருக்கிறது தெரியாது.  சமீபம்தான் இருக்க வேண்டும்.  அவர் வீட்டில் யாரும் இவர் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  ஆனால் இந்த ஏரியாகாரர்களுக்கு இவர் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஒருநாள் அங்கிருந்த கடையில் ஏதோ பொருள் வாங்கிக் கொண்டிருந்தேன்.   சற்று தூரத்திலிருந்து இவர் என்னையே பார்த்துக் கொண்டு வருவதை கவனித்தேன்.  என்னை நெருங்கியவர் ஏதோ அந்தரங்கமாக பேச விரும்புபவர் போல அருகில் வந்தார்.  முத்தமே  கொடுத்து விடுவாரோ என்று பயம் வந்த நேரத்தில்  "எக்ஸ்க்யூஸ் மீ....   ஒரு ஐந்து ரூபாய் உங்களால் எனக்கு கொடுக்க முடியுமா?  சிகரெட் வாங்கணும்" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.  இந்த துல்லிய தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை எனினும் உடனடியாக 'இல்லை' என்று மறுத்து விட்டேன்.

பின்னரும் இது போல இரண்டு மூன்று முறை என்னை அணுகி தோல்வியுடன் திரும்பி இருக்கிறார்.

ஒருநாள் அவரைத் தாண்டிக் கொண்டிருக்கும் ஆட்டோவை நிறுத்தியதை பார்த்தேன்.  நானும் நெருங்கி விட்டேன்.  எங்கோ செல்லப் போகிறார் என்றுதான் நானும் நினைத்தேன்.  ஆனால் போய்க்கொண்டிருக்கும் ஆட்டோவை நிறுத்தி, அந்த ஆட்டோ டிரைவரிடம் இதே கேள்வியைக் கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  டிரைவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.  பதிலே சொல்லாமல் அடுத்த நொடியே ஆட்டோ டிரைவர் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்.  அப்புறமும் சில இடங்களில் அவர் ஆட்டோவை நிறுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

அப்புறம் சிலமுறை ஆட்டோவில் ஏறி செல்வதையும் பார்த்திருக்கிறேன். ஆட்டோவை நிறுத்தி ஒரே மாதிரி விளையாடுவது அவருக்கே போரடித்திருக்கும் போலும்.  நானும் ஆட்டோவில் அலுவலகம் செல்லும் அப்படியான சில சந்தர்ப்பங்களில்தான் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்தது.  நாங்கள் இருப்பது சற்று உள் ஏரியாவில்.  ஆட்டோவில் ஏறி, மெயின்ரோடுக்கு வந்து இறங்கி மறுபடி உள்ளே நடந்தார்!  அதாவது அவர் ஆட்டோ ஏறிய அதே இடத்துக்கு!!  காசு கொடுத்தாரா, தெரியாது.  சறுக்குமரம் ஆடும் குழந்தை போல தெரிந்தார் என் கண்களுக்கு.

காசு கிடைத்து விட்ட சில நாட்களில் அவரை ஏதாவது ஒரு இடத்தில், தெரு ஓரத்தில் அல்லது கடை வாசலில் சிகரெட் பிடித்தபடி ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.   சொர்க்கத்திலிருப்பது போல ஒரு முகபாவம் தெரியும்.

அந்த சிகரெட் இழுப்புதான் அவர் வாழ்வின் ஒரே சொர்க்கம்.  அதற்குதான் அவர் இப்படி அலைவார்.  என் பழைய ஆஸ்தான ஆட்டோக்காரரும் இவர்பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்.  

இதோ சென்ற வாரம் மறுபடி என்னிடம் வந்தபோது, -  ஏனோ ஒரு மாறுதலுக்கு இந்தமுறை பணம் கொடுப்பது என்று தீர்மானித்தேன்.   அவரை நான் அவசரமாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பாக்கெட்டில் ஐந்து ரூபாய் தேடினேன்.  கிடைக்கவில்லை.  பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தபோது அவர் கேட்டுக் கொண்டிருந்தார்..  

"Can you please spare me ten rupees please..  டீ குடிக்கணும்"  

அவர் எதற்கு கேட்கிறார் என்று தெரியும் என்றாலும் பணத்தை அவரிடம் கொடுத்ததும் வேகமாக தாண்டிச் சென்று விட்டார்.  இதற்கு ஒரு வாரம் முன்பு நடைப்பயிற்சி இடையே ஒரு கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தபோது இவர் கடையின் உள்ளே வந்து என்னிடம் கேட்டபோது இல்லை என்று சொல்லி விட்டு பாஸிடம் இவர் பற்றி சொல்லி இருந்தேன்!

அவர் வாழ்க்கை அப்படி.

=========================================================================================

நன்றி சரவணன் (உண்மைத்தமிழன்),  ஃபேஸ்புக் 

நீர் வீழ்ச்சி தெரியும்! தீ வீழ்ச்சி தெரியுமா?
கலிபோர்னியாவின் யோசெமிட்டி இந்த இடத்தில் உள்ள அருவிதான் இந்த தீ வீழ்ச்சி:


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில், சூரியன் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மறையும்போது, அதன் ஒளி அருவியை ஒரு அற்புதமான ஆரஞ்சு நிற ஒளியுடன் ஒளிரச் செய்கிறது.
இது தண்ணீர் தீப்பிடித்து எரிவது போன்ற காட்சியை உருவாக்குகிறது.
இந்த மூச்சடைக்க வைக்கும் இயற்கை நிகழ்வு, சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும்..
===================================================================================

மகரிஷி பற்றி ஜெயமோகன் - கந்தசாமி ஸார் பகிர்வு. மகரிஷியின் புகைப்படம் எனக்கு கிடைப்பதே இல்லை. முகம் அறியா புகழ்பெற்ற எழுத்தாளர் :

பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். அவருடைய கதைகள் குமுதம் இதழ் வழியாக வெளிவந்து பெருவாரியாக வாசகர்களைப்பெற்றன. பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.
மகரிஷி பாலகுமாரனுக்கு உடனடி முன்னோடி. சொல்லப்போனால் பாலகுமாரனை எழுத்துமுறையில் மகரிஷியின் அடுத்த கண்ணி என்றே சொல்லிவிடலாம். மகரிஷியிடம்தான் பாலகுமாரனில் நாம் காணும் ‘நிதானமாக வாழ்க்கையைப்பற்றிப் பேசும் பெண்’ என்னும் கதாபாத்திரத்தை நாம் காண்கிறோம். ஆனால் பாலகுமாரனிடமில்லாத தெளிவான ஒழுக்கநோக்கு மகரிஷியிடம் உண்டு. பாலகுமாரனை அடுத்தகட்டத்தவர் ஆக்கியது அவருடைய மீறல்தான்.
சொல்லப்போனால் ஜானகிராமன் உட்பட இவர்கள் அனைவருமே அவர்களின் காலகட்டத்தைச் சேர்ந்த ஒழுக்கவியல் நம்பிக்கைகளைச் சற்றே சீண்டுவதன் மூலமே வாசகனிடம் நிலைகுலைவை உருவாக்கி கவனம் பெற்றனர். அந்தச் சீண்டல் இயல்பு முற்றிலும் இல்லாதவர் என்பதே இவர்களில் மகரிஷியை விலக்கி நிறுத்துகிறது. மகரிஷி மரபான நடுத்தரவர்க்க ஒழுக்க, அறநோக்கையே வெளிப்படுத்துகிறார். அதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் இருந்தது. ஆனால் ஒழுக்க நோக்கின் அடிப்படையில் தன் கதைமாந்தரை எப்போதுமே அவர் கீழிறக்குவதில்லை.
உதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பு ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’. இது காபரே ஆடும் ஒரு பெண்ணுக்கும் அவளால் ஆதரிக்கப்படும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பைப் பற்றிய கதை. அதை இரு உள்ளங்கள் ஒன்றை ஒன்று கண்டடையும் எதிர்பார்பே அற்ற தூய நட்பு என மகரிஷி வரையறை செய்கிறார். அந்நட்பின் வழியாகவே கதைநாயகி மேலானவள் ஆகிறாள். அதை இயல்பான நிகழ்வுகள், உரையாடல்கள் வழியாக உணர்த்திச் செல்கிறார்
இறுதியில் கால்களை இழந்து சக்கரநாற்காலியில் இருக்கும் நடனமங்கையான கதைநாயகியை உதறிவிட்டு வந்துவிடும்படி அவளால் படிக்கவைக்கப்பட்டு வாழ்க்கையில் வெற்றிபெற்ற தோழியிடம் அவள் காதலன் சொல்கிறான். அவள் அவனை துறந்துவிடுகிறாள். ‘வெறுமே காத்திருப்பதை விட ஒரு இலட்சியத்துடன் காத்திருக்க எனக்கு வாய்ப்பு கொடு’ என அவள் நடனமங்கையிடம் சொல்லுமிடத்தில் முடியும் அக்கதை தமிழின் இலக்கியப்படைப்புகளின் பட்டியலிலும் சேர்க்கத்தக்கதே. இன்றைய பெண்ணிய நோக்கு மென்மையான முறையில் வெளிப்பட்ட கதை அது.
வெறும் உடலாகவே பார்க்கப்பட்ட சுரண்டப்படும் பெண்ணுக்குள் இருக்கும் தன்னியல்பான விடுதலையை, ஆளுமைப்பண்பை கூறிய படைப்பு என அதை இன்று கருதுகிறேன். அவர்கள் இருவரும் ஆண்களின் உலகிலிருந்து தங்களை விலக்கிக்கொள்கிறார்கள். தங்கள் உலகைப் படைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கசப்பில்லாமல், எதிர்மறைநோக்கு இல்லாமல் இயல்பாக அதைச் செய்கிறார்கள். நவீனத்தமிழிலக்கியத்தில் ஒழுக்கம்சார்ந்த அளவீடுகள் இல்லாமல் பெண்ணை நோக்கி அவள் ஆளுமையைச் சித்தரித்த குறிப்பிடத்த படைப்புக்களில் ஒன்று இது.
ஜானகிராமனிடமிருந்து இந்த மரபினர் பெற்றுக்கொண்டது சரளமான தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாகக் கதையைக் கொண்டுசெல்வது. புறச்சூழலை இவர்களில் பி.வி.ஆர் மட்டுமே ஓரளவேனும் நன்றாகச் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும் நிகழ்ச்சிகளின் ஒழுக்காக அமைபவை இவர்களின் கதைகள். நடுத்தரவாழ்க்கையின் ஒழுக்கச்சிக்கல்களைச் சார்ந்தவை பெரும்பாலான கதைக்கருக்கள். உறவுகளின் உணர்ச்சிமிக்க தருணங்கள்தான் கதைகளின் உச்சங்களாக அமைந்துள்ளன. மகரிஷியும் உரையாடல்களை சிறப்பாக எழுதுபவர்.
பொதுவாசிப்புக்கான எழுத்தில் மகரிஷி போன்றவர்களை எப்படி வரையறை செய்யலாம்? பொதுவாசகர்களுக்கான எழுத்திலேயே பல நிலைகள் உண்டு. பொதுவாக இத்தகைய எழுத்துக்கள் வாசகர்களின் உணர்வுநிலைகளை பொதுமைப்படுத்தி அவற்றில் சிலவற்றை மாற்றிமாற்றி இணைத்து அவர்களுடன் ஓர் உணர்வுவிளையாட்டை நிகழ்த்துவனவாகவே அமையும். செண்டிமெண்ட், மெலோடிராமா என்றெல்லாம் இவற்றையே சொல்கிறோம். உயரிய உணர்ச்சிகளோ, ஆழ்ந்த உணர்ச்சிகளோ இவற்றில் இருக்காது. உணர்வுநிலைகள் ஊகிக்கக்கூடியனவாகவும் அமையும்.
ஆனால் இவ்வகை எழுத்துக்களிலேயே ஒரு பகுதி சற்றே கூர்மைகொண்டு மேலெழுந்து புதிய திசைகளைச் சுட்டிக்காட்டுவதாகவும், பன்முகவாசிப்புக்குரியதாகவும், அறிவார்ந்ததாகவும் அமையும். ஏனென்றால் அத்தகைய வாசகர்வட்டமும் பொது வாசிப்பில் உண்டு. இலக்கியத்திற்கு மிக அருகே வந்துகொண்டிருக்கும் எழுத்து இது. இவற்றில் அவ்வப்போது பல படைப்புக்கள் ஆழமான இலக்கியப்படைப்புக்களாகவும் ஆகக்கூடும். மகரிஷி இவ்வரிசையைச் சேர்ந்தவர். நதியைத் தேடிவந்த கடல், வட்டத்திற்குள் ஒரு சதுரம் என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவையே
ஆனால் இவை வணிக இதழ்களில் வெளிவந்தமையாலேயே இலக்கியவாசகர்களால் கவனிக்கப்படவில்லை, இலக்கிய விமர்சனத்தால் அடையாளம் காட்டப்படவுமில்லை. ஆகவே அந்தத் தலைமுறைக்குப்பின் வாசிக்கப்படவும் இல்லை. இதை நான் முன்னரே சுட்டிக்காட்டியிருக்கிறேன். நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் உட்பட அனைத்து நூல்களிலும் இத்தகைய ஆக்கங்களைச் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.
இதற்கு மறுபக்கம் சிற்றிதழ்ச்சூழலில் வெளிவந்தமையாலேயே, ஒரு மெல்லிய அரசியல்சாயல் கொண்டிருப்பதனாலேயே சாரமற்ற தேர்ச்சியற்ற எழுத்துக்களும் இலக்கியமாகக் கருதப்படுவது. தமிழ் நவீன இலக்கியச்சூழலில் இலக்கியப்பட்டியல்களில் இடம்பெறும் நூல்களில் கால்வாசி படைப்புக்கள் வட்டத்திற்குள் ஒரு சதுரம் அளவுக்கு தரமானவை அல்ல என்பது ஓர் உண்மை. சிற்றிதழ்ச்சூழல் என்னும் அந்த உருவக வட்டம் இன்று இல்லாமலாகிவிட்டது. இன்று நாம் அழகியல்சார்ந்த விமர்சன அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியிருக்கிறது
மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை.
-ஜெயமோகன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜீவி ஸார் 'எங்கள் பிளாக்'கில் ஆறு வருடங்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில்..

பிலஹரி அந்நாளைய மனம் கவர் எழுத்தாளர். இவரது விகடன் சிறுகதை 'ஜடம்' தான் 'தெய்வத்தின் தெய்வம்' என்ற சிவாஜி நடித்த படம்.

பிலஹரி விகடனில் அலுவலக குமாஸ்தா (க்ளார்க்) ஒருவரை முக்கிய பாத்திரமாகக் கொண்டு தொடர்கதை ஒன்று எழுதியிருந்தார். அந்தத் தொடரின் பெயர் 'நெஞ்சே நீ வாழ்க'-- என்பது போலவான ஒரு பெயர்! மறந்து விட்டது. அந்தக் கதை பின்னால் திரைப் படமாகியிருந்தது. ஏவிஎம் தயாரிப்பு என்று நினைவு. திருமலை (மற்றும் இன்னொருவர் பெயர் மறந்து விட்டது) சேர்ந்த இரட்டையர் டைரக்ஷன்.

அந்தப் படம் பார்த்து மனம் நெகிழ்ந்த உணர்வில் அன்று இரவே உட்கார்ந்து அந்த டைரக்டர்களுக்கு எழுதுகிற மாதிரி நீண்ட கடிததில் என் உணர்வுகளை வடித்து எழுதி குமுதத்திற்கு அனுப்பி விட்டேன்.

அடுத்த இதழில் எனது கடிதத்தை நடுபக்கத்தில் பிரசுரித்து அந்த இயக்குனர்களில் படங்களையும் போட்டு பிரமாதமாக குமுதம் பிரசுரித்திருந்தது.

ஒரு வாரம் கழித்து எனக்கு போஸ்டல் கவர் ஒன்று வந்தது. பிரித்துப் பார்த்தால் 'எங்களை குமுதம் பத்திரிகையில் அறிமுகப்படுத்தி தமிழ் மக்களுக்கு எங்களைத் தெரியப்படுத்திய உங்கள் நல்ல மனத்திற்கு தெண்டனிட்ட நமஸ்காரங்கள். உங்களுக்கு நாங்கள் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறோம். உங்கள் உதவிக்கு நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி.. என்று எழுதி அந்த இரட்டையர் இயக்குனர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

அந்தக் கடிதம் பள்ளிக்கூட (அந்த நாட்களில் 40 பக்க நோட்) ரூல் போட்ட நோட் புத்தகக் காகிதம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது. சாய்த்து சாய்த்து எழுதிய மை பேனா எழுத்துக்கள். போஸ்டல் கவர். ஒவ்வொரு அம்சத்திலும் ஏழ்மை தாண்டவமாடியது மனசை ரொம்பவும் நெகிழ்த்தி விட்டது. உண்மையான கலைஞர்களின்
நிலை எந்நாட்களிலும்.. என்ன சொல்வது.. இப்பொழுது அதை நினைத்தாலும் நெஞ்சில் பாரம் ஏறி உட்கார்ந்த மாதிரி இருக்கிறது.

சாவி பிற்காலத்தில் ஆசிரியராக இருந்த பொழுது தான் தினமணிக் கதிரில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதரகள்' பிரசுரமானது. இந்த தொடருக்கு ஆரம்பத்தில் 'காலங்கள் மாறும்' என்று தலைப்பிட்டு விட்டு பின்னால் 'சி.நே.சி. மனிதர்கள்' என்று ஜெயகாந்தனே மாற்றினார்.. தினமணிக்கதிரில் ஜெயகாந்தனின் சோதனை முயற்சிகளை வெளியிட்டு மகிழ்ந்தவர் சாவி. அவரைப் போய்....

===============================================================================================================

சும்மா இரண்டு கேள்விகள்....

இந்த கொளுத்தும் கோடையில் நீங்கள் தோசை வார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் போதும் என்றே சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொறுமை இருக்குமா?

ஒருவர் தன்னைப் பற்றியே நிறைய பேசிக் கொள்கிறார். பெருமை பேசுகிறார். தன்னைத்தானே பரிதாபப்பட்டு கொள்கிறார். உண்மை நிலை உங்களுக்குத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு உச் கொட்டுபவர்கள் அதிகம். ஒரு அளவுக்கு பொறுமையாக கேட்கலாம். எல்லை தாண்டினால் என்ன செய்வீர்கள்?

===============================================================================



மேட்சிங்காய் நிறம் அமைந்து
கேட்சிங்காய் சட்டை அமைந்திட
வாகான நிறம்
வக்கணையாக கிடைக்கவில்லை
என்றே
வெட்டிப்போட்ட மீதியில்தான் 
வேகவேகமாக தைத்து வந்தாயோ..
பட்டுக்கயிறு ஒன்றையும் 
அடியில் முடிச்சிடவே  
பாங்குடனே 
கவர்ந்து வந்தாயோ 


முத்தழகி 
முன்பக்கம் மட்டும் 
திரும்பிவிடாதே 
அதிச்சிகளைத் தாங்கும் 
இதயம் 
எனக்கில்லை!
================================================================================================

கமலா காமேஷை எம் ஜி ஆர் பாராட்டிய விதம்


=================================================================================================

பொக்கிஷம்

மகரிஷியின் இந்த ஐந்து வார தொடர்கதை கைவசம் உள்ளது. அநேகமாக இணையத்தில் வேறெங்கும் வெளிவந்திருக்காது. இதை சில செவ்வாய்களில் வெளியிட ஆசை. பொறுமை இருக்கும்போது செய்கிறேன்!

========================================

1978 ன் கல்லூரி மாணவி ஒருவர் - இப்போது 65 வயதிருக்கும்- அப்போதைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை சமாளித்த விதம் பற்றி இ.பே - ல் பகிர்ந்திருக்கிறார்.  

இதேபோன்ற என் அனுபவம் மாறுபட்டது.

சென்னை வந்த புதிதில் நான் ஒருமுறை க்ரோம்பேட்டையிலிருந்து கிண்டி வரை வந்த நான் ராமாபுரம் செல்ல ஏதோ குழப்பத்தில் சாலை மாறி எதிர்ப்புறம் சென்று பஸ் ஏறி டிக்கெட் கேட்டதும் கண்டக்டர் "அடுத்த ஸ்டாப்புல இறங்கி எதிர்ப்பக்கம் போய் பஸ் ஏறுங்க" என்று சொல்லி ஒரு ஸ்டேஜுக்கான டிக்கெட்டைக் கிழித்து கையில் கொடுத்து காசு வாங்கி கொண்டார்!  என்னை நம்பி என்னுடன் வந்த அப்பாவுக்கு ஏக கடுப்பு..  "நீ போறது தப்புடா...  இந்தப் பக்கம்தான் பஸ் ஏறணும்" என்று அவர் சொல்லிக் கொண்டே இருந்தார்!  "அவ்வப்போது சென்னை வரும் உனக்குத் தெரியுமா, இங்கேயே இருக்கும் எனக்குத் தெரியுமா?"  என்று தெனாவெட்டாய் கேட்டு நான் செய்த வேலை, அவருக்கு எரிச்சல் வராமல் இருக்குமா?!  நான் எப்படி குப்பை கொட்டப்போகிறேன் என்று அவருக்குக் கவலை வந்திருக்கும்!


1978 இதயம் பேசுகிறது அரசியல் கார்ட்டூன்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அப்போது இதயத்தில் டைஜஸ்ட் என்றொரு பக்கம் வரும்.  பல்வேறு விதமான செய்திகளை சிறு சிறு துணுக்குகள் போல தொகுத்துத் தந்திருப்பார்கள்.  அதில் வந்த ஒன்று...


அதே மருந்து பற்றிய இப்போதைய நிலை....


===================

இந்த செய்தியில் இருப்பவருக்கும் இப்போது 65 வயது இருக்கும்.  எங்கே இருக்கிறாரோ...  எப்படி இருக்கிறாரோ...

==========================

ஒரு பக்கக் கதை பற்றிப்பேசி இருக்கிறோம்.  இது அரைப்பக்கக் கதைகள்...  இதயம் ஸ்டைல்!

========================================================================================================

ஜோக்ஸ் :






 

112 கருத்துகள்:

  1. சேலத்தில் மரவநேரி என்ற பகுதியில் நாலாவது பாரத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.ஸி. வரை நான் படித்த பாரதி வித்யாலயா பள்ளி இருந்தது.
    மரவனேரி பகுதியின் இன்னொரு பக்கம் மரவனேரி எக்ஸ்டென்ஷன்.
    அந்தப் பகுதியில் தான் SEES (Salam Erode Electricity System) அந்நாளைய
    TNEB அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தில் தான் மகரிஷி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் பள்ளிப் பருவ காலத்திலேயே அந்த அலுவலகத்திற்குப் போய் மகரிஷி அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். மகரிஷியின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். பள்ளிப் பருவத்திலேயே பத்திரிகை பாசம் பீடித்த பைத்தியம் நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்.. வணக்கம். ஆமாம் நீங்கள் அவர் இயற்பெயர் பற்றி முன்பும் சொல்லி இருக்கிறீர்கள். வாரப்பதித்திரிகைகளை வாடகைக்கு விட்டதையும் சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  2. பட்டுக் கயிறு ஒன்றையும்
    அடியில் முடிச்சிடவே ..
    ...........................................
    ..........................................

    (ஹையோ.. ஹையோ..
    அடிமனம் பூராவும்
    ஐஸ் கட்டினது
    போலாச்சு ஐயா....)

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்! சுவையான கதம்பம்.

    என்னுடைய சிறு வயதில் நாங்கள் வசித்த திருச்சி உறையூரில் "ஒன் ருபி ப்ளீஸ்" "ஒன் ருபி தர முடியுமா?" என்று கேட்டுக் கொண்டு ஒருவர் வருவார். அழுக்கு வேஷ்டி, நீள வாட்டத்தில் கோடு போட்ட சட்டை, ஹவாய் செருப்பு அணிந்து கொண்டிருப்பார். வேகமாக நடப்பார். அவர் பி.ஏ. படித்தவர், நன்றாக ஆங்கிலம் பேசுவார் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...

      அப்போ ஒரு ரூபாய்...  இப்போ ஐந்து ரூபாய், அப்புறம் பத்து ரூபாய்.. 

      என் பள்ளிக்காலங்களில் இட்லி சாப்பிடணும் பத்து பைசா கொடுங்கள் என்று பள்ளிச் சிறுவர்களாகிய எங்களிடம் வந்து டிராயர் போட்ட ஒரு மெகா சைஸ் இட்லி குண்டன் கேட்பான்.  ஒருமுறை அவனை யாகப்பா தியேட்டரில் எங்களை விட கூடுதல் கட்டிணத்தில் அமர்ந்திருப்பதையும் பார்த்தேன்.

      ஆங்கிலம் பேசுவதும் சகஜம் போலிருக்கு!

      நீக்கு
  4. இந்த ஃபைவ் ருபீஸ் ப்ளீஸ் தலைப்பு மனதை என்னவோ செய்தது. கஷ்டப்படும் ஐம்பதைத் தாண்டியவர்கள் எல்லோரும் என் மனதில் சலனத்தை ஏற்படுத்துவார்கள். பிறந்தபோது அவருடைய பெற்றோர்கள் கொண்டாடியிருப்பார்கள் என்று ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் தோன்றும்.

    லண்டனில் இரவு எட்டுமணிக்கு, கூட்டமாக இருந்த இடத்தில் ஒரு கறுப்பினர் ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டுக்கொண்டு வந்தார். ஆஜானுபாகுவான முப்பது வயதுத் தோற்றம். அதைக் கவனித்த நான் பயத்தில் உடனடியாக அந்த இடத்தைவிட்டு அகன்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Five rupees இல்லை! Tenrupees. உங்களுக்கு தோன்றுவது போல எனக்கும் தோன்றும் தான் ஆனால் என்ன செய்ய இப்படியும் இருக்கிறார்களே

      நீக்கு
  5. ஜெயமோகன் என்றதும், போச்சுடா.. இன்றும் வியாழன் பதிவு ரொம்ப நீளமாக இருக்கப் போகிறது என்று தோன்றியது. நல்ல வேளை. ஆனால் அவருடைய எழுத்து கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை... கொஞ்சம் - கொஞ்சம் தான் சின்ன வியாழனாக வைத்ததனால் பிழைத்தேன்!!

      நீக்கு
  6. போண்டாவின் வித்தியாசம் மனதைக் கவர்ந்தது. முடியைக் கட்டி வைப்பது, பழைய புகைப்படத்தைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டது.

    நான் ஆறாம் வகுப்பு படித்த காலங்களில் என் அப்பா, நான் குனிந்து படித்துக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்கு வருபவர்களை, அல்லது அவரே, கையை முகத்தின் கீழே நீட்டிப் பார்க்கச் சொல்லுவார். படிப்பதுபோல் தூங்கி பலமுறை பிடிபட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தை படித்து விட்டு, ஆமாம் படித்தீர்களோ? பொசுக்கென லாஸ்ட் போர்ஷனுக்கு சென்று விட்டீர்கள் போல!!

      நீக்கு
  7. கவிதை எழுதப் போகிறேன் என்ற சாக்கில் படம் பிடித்தீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் விஷமல்லவா? நான் புகைப்படத்தின் பெண்ணைச் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் சமீபத்தில் ஒரு திருமணத்தில் எடுத்தேன். அதை எப்படி வெளியிடுவது என்று தெரியவில்லை. ஜிப்ளியில் கொடுத்தால் அது சமத்தாக பின்னால் நிறைய மூடி கொடுத்தது!!! ஒரிஜினல் அடிபட்டு போகுமே... எப்படியும் முகம் தெரியவில்லை என்று அதே புகைப்படத்தை அப்படியே பகிர்ந்தேன். அதற்கு என்ன விளக்கம் கொடுப்பது என்று யோசித்தபோது இப்படி தோன்றியது!!

      நீக்கு
    2. //இந்தப் படம் சமீபத்தில் ஒரு திருமணத்தில் எடுத்தேன்.// நானும் ஒரு திருமணத்தில் இப்படி blouse அணிந்து வந்திருந்த பெண்ணை செல்லில் படமெடுத்து, படத்தில் தெரிந்த பெண்ணின் முதுகில் 'இங்கே நோட்டீஸ் ஒட்டாதீர்கள்' என்று எடிட் செய்து எங்கள் குடும்ப வாட்சாப் குழுவில் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
    3. அப்படீன்னா இப்போ நிறைய பேர் இப்படி பிளவுஸ் அணிகிறார்களா?  கடவுளே...

      நீக்கு
  8. ​அதுதான் உங்க நெற்றியிலே "ஏமாந்தவன்" என்று எஸுதி ஒட்டியிருக்கே என்பார் பாஸ். அவர் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சித்து கொண்டிருக்கிறார். முயற்சிகளில் ஒன்று தான் கையில், பையில் பைசா இல்லாமல் வெளியில் இறங்கி நடப்பது. ஆனாலும் சிகரெட் பூதம் விடமாட்டேன் என்கிறது.

    //இந்த கொளுத்தும் கோடையில் நீங்கள் தோசை வார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் போதும் என்றே சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொறுமை இருக்குமா?

    ஒருவர் தன்னைப் பற்றியே நிறைய பேசிக் கொள்கிறார். பெருமை பேசுகிறார். தன்னைத்தானே பரிதாபப்பட்டு கொள்கிறார். உண்மை நிலை உங்களுக்குத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு உச் கொட்டுபவர்கள் அதிகம். ஒரு அளவுக்கு பொறுமையாக கேட்கலாம். எல்லை தாண்டினால் என்ன செய்வீர்கள்?​//

    முதல் கேள்விக்கு பதில். நான் ஹோஸ்டேலில் செய்வது போன்று 3 தோசை மட்டும் அவருக்கு தந்து விட்டு நகர்ந்துவிடுவேன்.
    இரண்டாவது கேள்வி எங்களுக்கு தெரிந்த யாரையோ மனதில் வைத்து கேட்கப்பட்டதாக தோன்றுகிறது. எல்லை என்பது எது என்பதை என் காதுகள் தீர்மானிக்கும். தேவைப்படும்போது காதுகளை மூடிக்கொள்ளும் ஒட்டகம் நான்.
    கவிதை போர். முதுகு ஒரு கவர்ச்சி பிரதேசம் இல்லை.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. முதுகு கவர்ச்சிப் பிரதேசம் இல்லை என்பது அந்தப் பெண்ணுக்கு அல்லவா தெரிய வேண்டும்!!

    இரண்டு கேள்விகளுக்குமான பதிலில் அவ்வளவு 'சுஸ்து" இல்லை!!

    சிகரெட்டுக்கு காசு கேட்பவர் பற்றி பாசிட்டிவாக யோசித்து இருக்கிறீர்கள்.

    நன்றி ஜே கே சி சார்

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா....   தெய்வமே.....   வணக்கம்.  அப்பப்போ பொசுக்கு பொசுக்குன்னு காணாம போயிடறீங்களே....

      நீக்கு
    2. /தெய்வமே..... வணக்கம். /ஹாஹாஹா. சிரிப்பை அடக்க இயலவில்லை. இந்த மாதிரி தீடீரென உடல்நிலை ரொம்ப முடியாமல் போகும் போது, நானும் தெய்வமாகி விடுவேனோ என்ற ஒரு பயம் எனக்கு வருவதுண்டு. ஹா ஹா ஹா. இந்த தடவையும் வந்தது. அதனால்தான் "பொழைத்து கிடந்தால்" , "கடவுள் புண்ணியத்தில்" என்ற வார்த்தைகளை நான் அடிக்கடி வீட்டில் உபயோகிப்பேன். அதென்ன" கடவுள் புண்ணியத்தில்" நீ ஏதும் புண்ணியமே செய்வதில்லையா..? எனவும், நாளை ஏதும் செய்யலாமென பாஸிட்டிவாக நினைக்க மாட்டாயா? எனவும்.வீட்டில் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள். எனக்கு பிறந்த வீட்டில் அப்படி சொல்லித் தந்து பழக்கமாகி விட்டது. எளிதில் மாற்றிக் கொள்ளத் தெரியவில்லை.

      நீக்கு
    3. ஏன் அப்படியெல்லாம் அதீதமாக கற்பனை செய்கிறீர்கள் கமலா அக்கா? அதெல்லாம் ஒன்றும் ஆகாது. கடவுள் இருக்கிறார்.

      எங்கள் வீட்டிலும் "கடவுள் புண்ணியத்துல" "பொழச்சி கிடந்து" என்கிற வார்த்தைகள் உபயோகிக்கும் வழக்கம் உண்டு!

      நீக்கு
    4. கமலாக்கா என்னாச்சு? காணாமப் போய்ட்டீங்க!

      கீதா

      நீக்கு
  11. // பிலஹரி விகடனில் அலுவலக குமாஸ்தா (க்ளார்க்) ஒருவரை முக்கிய பாத்திரமாகக் கொண்டு தொடர்கதை ஒன்று எழுதியிருந்தார். அந்தத் தொடரின் பெயர் 'நெஞ்சே நீ வாழ்க'-- என்பது போலவான ஒரு பெயர்! மறந்து விட்டது. அந்தக் கதை பின்னால் திரைப் படமாகியிருந்தது. ஏவிஎம் தயாரிப்பு என்று நினைவு. திருமலை (மற்றும் இன்னொருவர் பெயர் மறந்து விட்டது) சேர்ந்த இரட்டையர் டைரக்ஷன்.//
    'நெஞ்சே நீ வாழ்க ' சரிதான். ஆனால் அது ஆனந்தவிகடனில் முத்திரைக் கதையாக வந்தது என்று ஞாபகம்
    திரைப்படம் : ' ஆலயம்' டைரக்ஷன் திருமலை - மகாலிங்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Aalayam was produced by Sunbeam Productions, owned by A Bhim Singh. His associates Thirumalai and Mahalingam directed the film, while Bhim Singh wrote the screenplay. It was based on the popular stage play Nenje Nee Vaazhgha by ‘Bilahari’ S Raman, many of whose plays were also made into films.

      நீக்கு
    2. 'ஆலயம்' - 1967 ஆம் ஆண்டு, தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாம் இடம் பெற்ற படம். அந்த ஆண்டு தி மு க அரசால் தொடங்கப்பட்ட திரைப்பட விருது ! அப்போது முதல் இடத்தைப் பெற்ற திரைப்படம் எது தெரியுமா ? எம்ஜியார் நடித்த 'காவல்காரன்' திரைப்படம் !! மூன்றாவது இடம் ' பாமா விஜயம்'

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    ஒரு வார காலமாக எனக்கு மிகவும் உடல்நலமில்லாமல் போய் விட்டது. இப்போது (இரண்டொரு நாட்களாக) நலமாகி உள்ளேன். அதனால்தான் அனைவரின் பதிவுகளுக்கும் வர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். நேற்றுதான் விடுபட்ட பதிவுகள், கருத்துரைகளை படித்தேன். அதில் என்னைக் காணாது தேடிய உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் அனைவரின் அன்பிற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. இறைவனுக்கும் நன்றி.

    இனி தொடர்ந்து எப்போதும் போல் வருவேன் என நினைக்கிறேன்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி உடல்நலமில்லாமல் போகிறது உங்களுக்கு.  ஒரு Full Body Check Up செய்து விடுவதுதானே...

      நீக்கு
    2. எங்கள் சார்பாக தினமும் இறைவனிடம் ப்ரார்த்திக்கும் 'வேலை'யைச் செய்பவர் வரவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாகிவிடுகிறது. வேறு யாரை அந்த போஸ்டுக்கு அப்பாய்ண்ட் செய்ய இயலும்? அதனாலத்தான் நாங்கள் (நான்) தேடினேன். சில நேரங்களில் நமக்கு உடம்பு சரியில்லாமல் போவது, நமக்கு ரெஸ்ட் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இறைவன் கொடுக்கும் சிக்னல்.

      நீக்கு
    3. /வேறு யாரை அந்த போஸ்டுக்கு அப்பாய்ண்ட் செய்ய இயலும்? /

      ஹா ஹா ஹா. சிரித்து விட்டேன் சகோதரரே. உண்மைதான்.. அதற்காகத்தான் ஒரு வாரம் பாடாய் படுத்தி, அதற்கு ரெஸ்டும்தந்து தந்து மறுபடி வேலைக்கு அனுப்பி விட்டார் இறைவன். இனி என் பிரார்த்தனைகளும் , கூடவே அறுவைகளும் தொடரும்.ஹா ஹா.

      நீங்கள், சகோதரர்ஸ்ரீராம், மற்றும் கீதாரெங்கன் கீதா சாம்பசிவம் சகோதரிகள் தேடியதை பார்த்து மனம் நெகிழ்ச்சியடைந்தேன். உடனே ரம்பமாக கருத்துரைகளுடன் வந்து விட்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
    4. உடல் நலத்தில் கவனம் வையுங்கள் கமலா அக்கா. அவ்வப்போது நல்ல ஓய்வு எடுங்கள்.

      நீக்கு
    5. கமலாக்கா, என்னாச்சு? ரொம்ப உடம்புக்கு முடியாம? ஜுரமா? அக்கா அவ்வப்போது நல்லா ஓய்வு எடுக்க வேண்டும் என்ற ஒரு எச்சரிக்கை மணிதான் இது. ஒன்னும் ஆகாது. உடம்பைப் பார்த்துக்கோங்க,

      நெல்லை - சிரித்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
    6. //அதற்காகத்தான் ஒரு வாரம் பாடாய் படுத்தி, அதற்கு ரெஸ்டும்தந்து தந்து மறுபடி வேலைக்கு அனுப்பி விட்டார் இறைவன்.//

      ஹாஹாஹா கமலாக்கா...கடவுள் பாவம் அவருக்கு வேற ஆள் இங்க கிடைக்கறது கஷ்டம்...

      இதுல எல்லாம் "shadow work" கூட என்னால எல்லாம் முடியாது!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பதிவில் தங்களது முதல் பக்க அனுபவங்கள் படித்ததும் மனதை வருத்தியது. யாசகம் கேட்பது தவறெனினும் அவரின் வீட்டு சூழ்நிலைகள் அவரை இந்த நிலைக்கு அவரை தள்ளி விட்டிருப்பது வருந்ததக்கதுதான். என்ன செய்வது..? அவர் வீட்டிற்கு தெரியுமோ தெரியாதோ ? தெரிந்த பின் அவர் நிலைமை எப்படியாகுமோ?

    நான் அம்மா வீட்டில் இருந்த போது, எங்களுக்கு உறவில் ஒரு குடும்பத்தில் ஒரு வீட்டு மாமியார் தன் மருமகள் தனக்கு வயிறார உணவே தருவதில்லையென பொது வெளிகளில் (கோவில் வாசல்) கையேந்தியதை பார்த்த பின் நாங்கள் எங்கள் வீட்டில் வருத்தப்பட்டு பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. பிறகு அவர்கள் வீட்டில் அந்த தகவல் யார் மூலமாகவே தெரிந்த பின் அந்த மாமியாருக்கு கிடைத்த பேச்சும், பேச்சும் கொடுமையாக இருந்தது. அது இப்போது நினைவுக்கு வருகிறது.

    இன்றைய கவிதை நளினம். இப்போதெல்லாம் இது பேஷன் ஆகி விட்டதென அந்தப் பெண்ணிற்கு முன்பக்கமிருக்கும் "பெருமாள்" சற்றும் அதிர்ச்சியின்றி புன்னகையுடன் நம்மிடம் கூறுவதாக நினைத்துக் கொண்டேன். :))

    மகரிஷி அவர்களின் கதைகள் எனக்கு பிடித்தமானது.பகிர்வுக்கு நன்றி. பிறகு வருகிறேன்..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வர் வீட்டிற்கு தெரியுமோ தெரியாதோ ? தெரிந்த பின் அவர் நிலைமை எப்படியாகுமோ? //

      'துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே' என்று பாடிக்கொண்டிருப்பாரோ...

      ஆனால் மாமியார்களை நான் நம்ப மாட்டேன்.... ஹா.. ஹா.. ஹா...

      // பெண்ணிற்கு முன்பக்கமிருக்கும் "பெருமாள்" சற்றும் அதிர்ச்சியின்றி புன்னகையுடன் //

      ஹா.. ஹா.. ஹா... இது இன்னும் சூப்பர்!

      நீக்கு
    2. /ஆனால் மாமியார்களை நான் நம்ப மாட்டேன்.... ஹா.. ஹா.. ஹா.../

      யாரையுமே நம்ப முடியாது. மனித மனம் இல்லையா? நான் சொல்வது அந்த காலம். மாமியார்களை மருமகள்கள் கொஞ்சம் பொறுத்துப் போகும் காலம். அந்த மருமகளுக்கு எங்கள் அம்மா வயது. அவர் தன் கணவருக்கே அவ்வளவாக பசியாற பரிமாற மாட்டார் என உறவுகள் சொல்லக் கேள்வி. ஆனால், சொன்னாலும், அப்போதும் சரி, எப்போதும் சரி.. மனித மனங்களை சட்டென எடை போட முடியாது. அவை என்றுமே விசித்திரமானவை .

      நீக்கு
    3. உண்மைதான். ஒவ்வொரு மனித மனமும் ஒரு தீவு என்று சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்கள். எதில் என்ன, யாருக்குள் யார், என்பதெல்லாம் அளவிட முடியாதது தான்!

      நீக்கு
    4. எதை வேண்டுமானாலும் கையாண்டுவிடலாம், ஆனால் மனித மனங்களைக் கையாள்வதுதான் சவால்.

      கீதா

      நீக்கு
    5. // பெண்ணிற்கு முன்பக்கமிருக்கும் "பெருமாள்" சற்றும் அதிர்ச்சியின்றி புன்னகையுடன் //

      படைக்கும் இயற்கைக்கு தன் படைப்பின் ரகசியம் தெரிவதால்....இன்னொன்று மறைக்கப்பட்டும் இருப்பதால் ஒரு ஆசுவாசம்.

      ஆனால் இது கூட ஓகே. எத்தனையோ விழாக்களில் இன்னும் மோசமாக, சபை நாகரீகமற்ற முறையில் தானே உடை போட்டுக்கறாங்க. பழையகால படங்களில் கூட உண்டு. இப்படிச் சொன்னால் நாம பூமர்ஸ். அட போங்கப்பா....

      கீதா

      நீக்கு
  14. ஜோக்குகள் பரவயில்லை ரகம். குடுமியை ஆணியில் கட்டிவிட்ட ஜோக்கை பார்த்தபொழுது ஒரு ஆசிரியை நினைவுக்கு வந்தார். அவர் பிராமணர்கள் குடுமியை ஆணியில் கட்டிக்கொண்டு படித்து விடுவார்கள்" என்பார்.
    நீங்கள் பகிர்ந்திருக்கும் படத்தில் இருக்கும் பெண்ணைப் போல் சட்டை போட்டிருக்கும் பெண்களைப் பார்த்தால்,'இங்கே சுவரொட்டி ஒட்டக் கூடாது' என்னும் அறிவிப்பு நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சட்டைதான் என்று உறுதியாக நம்புகிறீர்களா பானு அக்கா?  சட்டம் போல விளிம்புகள்தான் இருக்கிறது!

      நீக்கு
  15. பொக்கிஷம் பகுதிக்கு ''இதயம் பேசுகிறது' வை நாடுகிறீர்கள் போலிருக்கிறது. 1992 பிர்வரி, அல்லது மார்ச் இதழ் கிடைத்தால் எனக்கு அனுப்புங்கள். அதில் கடைசி பக்கத்தில் சத்தியமூர்த்தி என்னைப் பற்றி எழுதியிருப்பார். நான் வைத்திருந்தேன், வீடுகள் மாற்றியதில் எங்கோ தொலைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதயம் பேசுகிறதை நான் நாடவில்லை.  இருக்கும் ஒரு பைண்டிங் புத்தகங்களில் அது ஒன்று.  இதயம் பேசுகிறதில் வந்த சிறுகதைகள்.  அதிலிருந்து எடுத்துப் போடுகிறேன்.  அஷ்டே!

      நீக்கு
    2. // அதில் கடைசி பக்கத்தில் சத்தியமூர்த்தி என்னைப் பற்றி எழுதியிருப்பார். //

      யார் சத்தியமூர்த்தி?  தீரர் சத்யமூர்த்தியா?

      நீக்கு
    3. S.சத்தியமூர்த்தி, IAAS. ஹேமா சத்தியமூர்த்தி என்று டெல்லி ஆகாஷவாணியில் தமிழ் செய்திகள் வாசிப்பாரே அவருடைய கணவர், (ஆனால் அவர்கள் இருவரும் பிரிந்துதான் வாழ்ந்தார்கள்).

      நீக்கு
    4. ஓ.. அப்படியா? நான் அறிகிலேன். என்னிடம் 92 ஆம் வருடத்து இதயம் பேசுகிறது இல்லை.

      நீக்கு
    5. பானு அக்கா உங்களைப் பற்றி என்ன எழுதியிருந்தார் அதைக் குறிப்பிட்டிருக்கலாமே.

      கீதா

      நீக்கு
  16. ஸ்ரீராம் தலைப்பு எனக்குப் பரிச்சயமான அதலைப்பு. இந்த வரி உங்களுக்குப் புரியும், நான் என்ன சொல்ல நினைத்துக் கடந்து செல்கிறேன் என்று.

    ஜிப்லி படுத்தும் பாடு....எம்ஜியார் படம் கொடுமை.

    முதல் படம் நல்லாருக்கு ஏன்னா ஒரிஜினல் எங்களுக்குத் தெரியாது. கூடவே ஒரு பதிவுக்கான படம் தானே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்த வரி உங்களுக்குப் புரியும், நான் என்ன சொல்ல நினைத்துக் கடந்து செல்கிறேன் என்று.//

      ஒருமாதிரி குன்ஸா புரிகிறது.  அதுதானா என்று தெரியவில்லை!

      முதல் படம் என்றால் பத்து ரூபாய்க்காரர் படமா? அவர் முகத்தில் சிரிப்பு இருக்காது. ஜிப்லி அவரை சிரிக்க வைத்து தந்திருக்கிறது!

      நீக்கு
  17. //ஒருவர் தன்னைப் பற்றியே நிறைய பேசிக் கொள்கிறார். பெருமை பேசுகிறார். தன்னைத்தானே பரிதாபப்பட்டு கொள்கிறார். உண்மை நிலை உங்களுக்குத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு உச் கொட்டுபவர்கள் அதிகம். ஒரு அளவுக்கு பொறுமையாக கேட்கலாம். எல்லை தாண்டினால் என்ன செய்வீர்கள்?// எனக்கு நிஜமாகவே அப்படி ஒரு தோழி உண்டு, அவரிடம் இருக்கும் வேறு சில நல்ல குணங்களுக்காக அவரை சகித்துக் கொண்டிருக்கிறேன். இது புதனுக்கான கேள்வி இல்லையே?

    பதிலளிநீக்கு
  18. யோசேமிட்டி - நிகழ்வு ஆச்சரியப்படுத்தும் ஒன்று.

    யோசேமிட்டி தேசீயப்பூங்கா பற்றி நிறைய ஆச்சரியமான தகவல்கள் உண்டு, ஸ்ரீராம். வாசித்திருக்கிறேன் இந்த விஷயம் உட்பட.

    நம்ம வீட்டவர் யோசேமிட்டி போயிருக்கிறார். அங்கு ஒரு சில மாதங்கள் இருந்தப்ப. ஆனால் இந்த நிகழ்வு சமயம் சென்றதில்லை என்பதால் பார்த்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானெல்லாம் படங்கள் பார்த்து கதை படிப்பவன்தான்!

      நீக்கு
  19. ஜெமோ வின் கட்டுரைகளும் திரும்பவும் வாசித்தால்தான் புரியும் போல!

    அது சரி, அப்ப புரியாதமாதிரி எழுதினால்தான் இலக்கியம் என்று சொல்லவருகிறாரா! அவர் சொல்வதைப் பார்த்தால் மற்றவை எல்லாம் இலக்கியமே அல்ல என்று? கதைகள் 'இலக்கியம்' என்ற பிரிவுக்குள் வர அளவுகோல் இருக்கிறதோ? அது என்ன அளவுகோல்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கியம் என்றால் என்ன என்று சொல்வது மிகவும் கடினம்.  மக்கள் மனதில் தங்கி காலகாலத்துக்கும் பதிந்து போவது இலக்கியமாகலாம்.

      நீக்கு
  20. ஜீவி அண்ணாவின் கருத்து சுவாரசியம். நிறைய பத்திரிகைகளுக்கும் எழுதியிருக்கிறார் என்பது அவரது பல கருத்துகளிலும் பதிவுகளிலும் தெரியும். கடைசி வரி அப்படியே நிற்கிறதே முடிவுபெறாமல்? சாவி பற்றிய பகுதிக்கு அவர் கொடுத்திருந்த கருத்தோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்திரைக் கதைகள் பற்றிய ஒரு வரிக்கு...

      நீக்கு
  21. 1. அப்படி தோசை வார்த்ததுண்டு, ஸ்ரீராம். அதுவும் சென்னையில்...ஒரு காலத்தில். அப்போதிருந்த பொறுமை இப்பதான் இல்லையோன்னு சில சமயம் தோன்றுவதுண்டு.

    2. எல்லை மீறினால் நாமும் எல்லை போட்டுக் கொண்டுவிட வேண்டியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2 . வதுக்கு அடுத்த நீட்சி - இப்படி என் உறவு வட்டத்தில் உண்டு. இருவருக்கு எல்லை போட்டுக் கொண்டுவிட்டேன். ஒருவருக்குப் போட வில்லை. காரணம் அவரது நல்ல மனசு.

      மற்றவர்கள் நம்மைப் பேசவே விடமாட்டாங்க. அவங்க சுயபுராணமாவேதான் இருக்கும். என்னவோ உலகில் யாருமே அப்படி இல்லைன்றது போல! தன்னை மாதிரி யாரும் கஷ்டமும் பட்டதில்லைன்னும்....தியாகச் சித்திரங்களாக...

      எனவே எல்லை வகுத்துக் கொள்ளும்படி ஆகிடுச்சு.

      கீதா

      நீக்கு
    2. சரி, ஓகே..  முதலாவது கேள்வியில் ஒரு துணைக்கேள்வி.  அப்படி ஒரு மனிதர் எவ்வளவு தோசை சாப்பிட முடியும்?!!

      இரண்டாவது :  அது அவ்வளவு சுலபமானதாக இல்லாவிட்டால்?

      நீக்கு
    3. இந்தக் கேள்விக்கு பதில் வருகையில் மேலும் சில அனுபவங்கள் கிடைக்கின்றனவே...!!

      நீக்கு
    4. ஒரு மனிதர் எத்தனை சாப்பிட முடியும்? 5, 6? அதையும் விடவா இல்லை போறும்ன்ற வார்த்தையே வராம, இன்ஃபினிட்டியா!!! போதும்ன்ற வார்த்தையே வரவில்லை என்றால் கஷ்டம்தான் ஸ்ரீராம்....

      இரண்டாவது : அது அவ்வளவு சுலபமானதாக இல்லாவிட்டால்?//

      எல்லை போட முடியாமல் போ,னால், தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லைனா காதில் விழாதது போல பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். எதுவுமே சாத்தியப்படலை என்றால் கஷ்டம்தான் ஆனால் ஏதேனும் ஒன்றை சாத்தியப்பட வைப்பது நல்லது!

      கீதா

      நீக்கு
    5. எண்ணிப்பார்க்க முடியாத அளவு தோசை சாப்பிட்ட ஒருவர்!!

      இரண்டாவது : இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவே கேட்டேன்.

      நீக்கு
    6. காலையில் எழுத நினைத்து மறந்துவிட்டேன். என் பதின்ம வயதில் என் உறவினர் வீட்டில், மாமா பெண் சப்பாத்தி பண்ணிப்போட்டுக்கொண்டு இருந்தார். என் சகோதரன் முறையில் உள்ளவன் எழுந்துக்கவே இல்லை. சாப்பிட்டுக்கிட்டே இருக்கான். அப்புறம் அவர் வந்து, ஆச்சு அவ்ளோதான் என்று சொன்னதுக்குப் பிறகுதான் எழுந்தான். சிலர் நிறையச் சாப்பிடுவார்கள், ஆனால் ஒல்லியா இருப்பாங்க. அது இறைவன் கொடுத்த வரம்.

      எனக்கு ஹோட்டலில் ரவா தோசை மேல் அவ்வளவு ஆசை. தேங்காய் சட்னி, சாம்பார் கொஞ்சம் விட்டுக்கொண்டு சாப்பிடுவேன். ஆசையில் இரண்டாவது ஆர்டர் செய்தாலும் பாதி முடிப்பதற்குள் ஏண்டா ஆர்டர் செய்தோம், முதல் ரவா தோசையுடன் எழுந்திருந்திருந்தால் மனதுக்கு சந்தோஷமா இருக்குமே என்று தோன்றும்.

      வீட்டில், முறுகல் தோசை, மி.பொடியுடன் 4லாம் சாப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
  22. ஸ்ரீராம் உங்க கவிதை வாசித்து இன்னும் சிரிப்பு அடங்கவில்லை!!!!! அதுவும் கடைசில .....!!!!

    ஒன்று தெரிகிறது. அவருக்கு முதுகு தேய்க்க கை நன்றாக எட்டுகிறது என்று!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு எட்டுகிறதோ, இல்லையோ மற்றவர்களுக்கு சௌகர்யம் - முதுகு தேய்த்து விட, சொரிந்து விட!  ஆனால் ஒரு கஷ்டம்..  முதுகில் அழுக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!  திட்டு திட்டாக அழுக்கு இருந்தால்?

      நீக்கு
    2. அவர் சிக்கனமாக (உடைச்) இருக்க முயன்றிருக்கிறார். அது நாட்டுக்கு நல்லதுதானே. அதைவிட்டுவிட்டு ரொம்ப ஓவராக விமர்சிப்பது தவறல்லவா? தான் எப்போதும் புறமுதுகிட்டதில்லை என்பதை இதற்கு முந்தைய ஒரு ஜென்மத்தில் காட்ட முடியாத நிலை அந்த உயிரின் மனதில் பதிந்து இந்த ஜென்மத்தில் தைரியமாகக் காட்டுகிறது (என்ன ஒண்ணு இந்தப் பிறவியில் பெண்ணாகப் பிறந்திருக்கிறது) என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
    3. முதுகில் அழுக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! திட்டு திட்டாக அழுக்கு இருந்தால்?//

      ஹாஹாஅஹா, ஸ்ரீராம், அதான் முதுகு பாருங்க நல்லா பளிச்சுன்னு இருக்கே கை நல்லா எட்டுதுன்னு தெரிகிறது! அதான் சொன்னேன்.

      கீதா

      நீக்கு
    4. நெல்லை ஹாஹாஹா.....அது சரி சிக்கனம் நல்லதுதான் இப்படித்தானே பலரும் இப்ப இன்னும் சிக்கனமாகவேதானே இருக்காங்க.

      கீதா

      நீக்கு
    5. ஆனால் இது மாதிரி உடைகள் அணிந்து வெளியிடங்களுக்கு வரமுடியாது என்று நினைக்கிறேன். கல்யாணம் போல ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் விழா என்றால் ஓகே!

      நீக்கு
    6. நாடு கெட்ட கேட்டுக்கு, எனக்கு முட்டியில் கிழிந்த ஜீன்ஸ் போட்டுக்கொண்டு வருபவர்களைப் பார்த்தால் பிடிக்காது. அதிலும் இப்போல்லாம் ஆம்பளப் பசங்களும் அப்படி வர்றாங்க. இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?

      நீக்கு
  23. கமலா காமேஷ் - எம் ஜி ஆர்...சுவாரசியமான தகவல்.

    மகரிஷி கதையை பகிருங்க ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சு வாரம் கீதா... பொறுமை வேண்டும். பார்க்கிறேன்!

      நீக்கு
    2. //கமலா காமேஷ் -// சில நேரங்களில் சிலரைப் பற்றிய கிசுகிசு மற்றும் பலர் சொல்லும் செய்திகளைக் கேட்டு, அவரைப் பற்றிய மதிப்பீடே மாறிவிடுகிறது. அதனால் என்னதான் பாசிடிவ் ஆக எழுதினாலும் நல்ல எண்ணம் வராது. அதில் கமலா காமேஷும் ஒருவர்.

      நீக்கு
    3. கமலா காமேஷ் பற்றி நான் தவறாக எதுவும் கேள்விப்பட்டதில்லையே....

      நீக்கு
  24. சமாளித்தேன் - ஆர் மாலினி அவங்க நல்லா சமாளிச்சிருக்காங்களே!!! பதட்டம் வந்திருக்கும் ஆனாலும் மாத்தி யோசித்து.....ஆனா அவங்க நேரம் நல்லாருந்திருக்கு. சில கண்டக்டர்கள் கேட்டுட்டு ஏற மாட்டியான்னு அந்த ஸ்டேஜ் வரை கூட டிக்கெட்டுக்குப் பைசா கேட்டிருந்தா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரிசூலம் படத்தில் சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா பற்றி சொல்வது போல.., "இப்போ அந்த மாதிரி நீ எங்க இருக்காங்களோ......"

      நீக்கு
    2. திருத்தம் : திரிசூலம் படத்தில் சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா பற்றி சொல்வது போல.., "இப்போ அந்த மாலினி எங்க இருக்காங்களோ......"

      நீக்கு
    3. ஓ! அதிலும் மாலினின்னு கேரக்டரா...

      கீதா

      நீக்கு
    4. இல்லை.  அதில் கே ஆர் விஜயா பெயர் சுமதி.  ஆனால் ஸ்ரீப்ரியா பெயர் மாலதி.

      நீக்கு
    5. மாலதி , மாலினி, ஸ்ரீபிரியா, சுமதி, விஜயா குழப்பறாங்களே!

      நீக்கு
  25. ஜோக்ஸ் சில முன்பு படித்ததுதான் ரசனை.

    முதுகை விட கவிதை பரவாயில்லை என்று தோன்றியது.

    தோசை எல்லாம் விற்கு அடுப்பி.ல் கூடமுன்பு வார்த்ததுண்டு.

    தன்னைப்பற்றியே நிறையப்பேசுபவர்கள் சில நேரம் பொறுத்து வேறுதிசைக்கு கதையை மாற்றிவிடுவேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​// முதுகை விட கவிதை பரவாயில்லை என்று தோன்றியது/

      ஹா.. ஹா.. ஹா...

      நன்றி மாதேவி.

      நீக்கு
  26. அன்றைய இன்ட்ராஃபீரன் பற்றி வாசித்த போது இன்றையது பற்றி போட்டிருப்பாரே ஸ்ரீராம் என்று அடுத்து பார்த்தால் இருக்கிறது.

    பொதுவாகவே ப்ரோட்டீன் பல வகைகளில் உதவுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. சர்க்கரைவியாதி உட்பட. கூடவே muscle கும் muscle பயிற்சிகள் செய்தால் பயன்கள் நிறைய என்றும் சொல்லப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இந்த மருந்து சம்பந்தமாக ஒரு சம்பவம் உண்டு. இங்கு பகிர முடியாது.

      நீக்கு
  27. அந்த அஃநிலோ அன்று வருத்தபப்ட்டிருக்கிறாரே...அப்ப அதன் பின் என்னாச்சோ? நீங்கள் கேட்ட கேள்வியே எனக்கும் வந்தது ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்தாவது, பனிரெண்டாவது படித்து முடிக்கும் மாணவ, மாணவியர்கள் பல லட்சியங்களை எதிர்கால திட்டமாக அடுக்குவார்கள்.  பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து அவர்களை எல்லாம் Follow up எடுக்க வேண்டும் என்று  எனக்குத் தோன்றும்!

      நீக்கு
  28. அவன் - கதை வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது கல்யாணம் தான் என்று. அரைப்பக்கக் கதை நல்லாருக்கே....'அவள்' தான் புரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. பொக்கிஷம் ஜோக்ஸ் ஓகே...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    /இந்த கொளுத்தும் கோடையில் நீங்கள் தோசை வார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் போதும் என்றே சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொறுமை இருக்குமா?/

    இந்த கேள்விக்கு பதில் ஆம..சிலர் அப்படி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுகிறவர்களுக்கு போதும் என்கிற வரை வார்க்க வேண்டியதுதான். வேறு வழி..? தோசைப்பிரியர்களென்றால் குறைந்தது பத்து தோசை சாப்பிடுவார்கள். அதுவும் மிக ஒல்லியாக வார்த்தால். சிறிது குண்டாக இருந்தால் ஆறேழுக்கு பின் சாப்பிடுவது கடினம். "தோசைக்கு இடம் கொடுக்கும் சொனை கெட்ட வயிறு" என்றொரு பழமொழி உண்டே...!

    இதை படித்ததும் எனக்கு எங்கள் அம்மா சொன்ன ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போது எங்கள் பிறந்த வீட்டுக்கு (நாங்கள் சிறுவயதாக இருக்கும் போது.) பிராமணர் ஒருவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதிதியாக வருவார். (வேதபாராயணம் பாடிக் கொண்டே.. ) அப்படி வருகிறவர்கள் வீட்டில் சாப்பிடவும் செய்வார்கள். சாப்பிடச் சொல்வதும், அவர்களுக்கு வயிறார உணவளிப்பதும் நம் கடமை அல்லவா? . அவர் அப்படி காலை டிபனுக்குள் வந்து விட்டால் தோசை எவ்வளவு (அதுவும் விறகடுப்பில்) வார்த்து போட்டாலும், தனக்கு போதுமென்ற மனதை வெளியில் சொல்லவே மாட்டாராம். அவருடன் சேர்ந்து சாப்பிடும், அப்பா, அண்ணா எல்லோரும் சாப்பிட்டு எழுந்த பின்பும், தோசை கடை தொடர்ந்தபடி இருக்குமாம். பிறகு அவரே கொஞ்சம் மனமிறங்கி "உங்கள் வீட்டில் காலையிலேயே மதிய சமையலும் ஆகி விடுவதால் தயக்கமின்றி சாப்பாட்டையும் முடித்துக் கொள்கிறேன்." என்பாராம் . வேறு வழியின்றி மதிய சாப்பாட்டை அவர் முடித்து எழுந்ததும், எங்களுக்கு மறுபடி அம்மா சமையல் செய்வார்களாம். நான் அப்போது சிறுவயதாகையால். வளர்ந்த பிறகு அம்மா சொல்வதை கேட்க ஆச்சரியமாக இருக்கும்." எப்படிம்மா அவரால் அப்படி சாப்பிட முடிந்தது "என வியந்திருக்கிறேன். அவர் பெயர்" வலுக்கட்டாய பிராமண போஜனம்" என அப்போது வைத்திருந்தோம் . இப்படியும் சிலர் தோசை பிரியர்கள் அந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். இப்போது உணவகங்களுக்குப் போனால், ஒரு தோசைக்கு மேல் நம்மால் சாப்பிட இயலவில்லை. வீட்டிலும், மூன்றுக்கு மேல் சாப்பிடுவது சிரமம்தான்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டில் தோசை சாப்பிடும்போது "உங்களுக்கு எப்போது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நிறுத்தி விடுங்கள்: என்று கண்டிஷனாக சொல்லி விட்டு சாப்பிட்டார்.  எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் நாங்கள் விழித்தோம்!

      விறகடுப்பில் தோசை வார்ப்பது இன்னும் கொடுமை.

      நீக்கு
    2. /"உங்களுக்கு எப்போது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நிறுத்தி விடுங்கள்:// அட... இது என்ன புதுசா இருக்கு. இதுதான் சாக்கு என்று பத்து தோசையை வார்த்துவிட்டு, மொத்தமாக அவர் தட்டில் போட்டால் என்ன செய்வார்? மடியில் இருக்கும் பிளாஸ்டிக் பையில் 8 தோசையைப் பேக் பண்ணிடுவாரா?

      நீக்கு
    3. /எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எங்கள் வீட்டில் தோசை சாப்பிடும்போது "உங்களுக்கு எப்போது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நிறுத்தி விடுங்கள்: என்று கண்டிஷனாக சொல்லி விட்டு சாப்பிட்டார். எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் நாங்கள் விழித்தோம்!/

      இதுவும் புதியதொரு செய்தி. இப்படியும் மனிதர்களா என வியப்பு வருகிறது.

      நீக்கு
    4. எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

      நீக்கு
    5. // மடியில் இருக்கும் பிளாஸ்டிக் பையில் 8 தோசையைப் பேக் பண்ணிடுவாரா? //

      அப்போது எங்கள் வீட்டில் தோசைகள் மெல்லிசாக இருக்கும். தொட்டுக்கொள்ளவும் சுவையாக இருக்கும். எனவே சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்!

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    இன்றைய மற்ற பகுதிகளும் சுவாரஸ்யமாக இருந்தது.

    அக்னி அருவி வித்தியாசமான பகிர்வு. பார்க்க தந்தமைக்கு நன்றி. இதயம் பேசுகிறது பகிர்வுகள் அருமை. கமலா காமேஷை மக்கள் திலகம் கௌரவித்த முறை நன்று. அரைப்க்க கதை "அவள்" கொஞ்சம் புரியவில்லை. ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. போண்டா வித்தியாசம் ரசித்தேன். தபால் முறை கராத்தேயும், புயல் கரைகடந்து வந்த நகைச்சுவையும் அருமை. அத்தனை பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. /கமலாக்கா, என்னாச்சு? ரொம்ப உடம்புக்கு முடியாம? ஜுரமா? /

    ஆம் சகோதரி. அத்துடன் வயிற்றுப்போர் அக்கப்போராக தொடர்ந்தது. நான்கு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் உடம்பு பலகீனமாகி விட்டது. "பசியில்லை... ருசியில்லை...அதனால் வீட்டில் சமையலும் அமையில்லை." என்றாகி, பின் ஒரளவிற்கு சகஜ நிலை திரும்பியது. :)) என்னைப்பற்றி விசாரித்தமைக்கும், ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலம் பெற்று சகஜ நிலை அடைந்து விட்டது மகிழ்ச்சி.
      உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள் கமலா.

      நீக்கு
  33. நவீன பாணி யாசகமாக உள்ளது. தீ வீழ்ச்சி பகிர்வு ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன். ஆச்சரியமான நிகழ்வு.

    தூங்காமல் பரீட்சைக்குப் படிக்க வைக்கும் அம்மாவின் ஐடியா, அம்மாவால் அதிகாலையில் எழுப்பப்பட்டு தூங்கித் தூங்கி விழுந்தபடி நானும் தங்கையும் பரீட்சைக்குப் படித்த காலத்தை நினைவூட்டியது :).

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  34. ஆங்கிலம் பேசி காசு கேட்பவர் போல நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். இப்படி சிகரெட் வாங்க காசு கேட்டால் கொடுப்பார்களா? டீ குடிக்க , வயிற்று பசி சாப்பிட பணம் கொடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் கேட்டால் எப்படி கொடுப்பார்கள் படித்தவன் வேலை பார்த்தால் என்ன என்று நினைப்பார்கள்.

    //கலிபோர்னியாவின் யோசெமிட்டி இந்த இடத்தில் உள்ள அருவிதான் இந்த தீ வீழ்ச்சி: //

    வாட்ஸப்பில் வந்தது எனக்கும்.


    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    மகரிஷியின் கதை சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு 1977ல் வெளி வந்தது மாலை மதியில் இந்த கதையை படித்து இருக்கிறேன்.
    தமிழ் விக்கியில் இவரின் இளமை, முதுமை படம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, எவ்வளவு நேர்மையாகக் கேட்கிறார் பார் என்று சிலபேர் கொடுப்பார்கள்.  ஆனால் நிறையபேர் கொடுத்து விடுகிறார்கள்.

      நன்றி அக்கா.  விக்கியிலிருந்து படம் எடுத்து வாட்ஸாப்புக்கு அனுப்பி இருந்தீர்கள்.,  நான் அங்கே முயற்சிக்காமல் போய்விட்டேன்!

      நீக்கு
  35. ஜீவி சார் பழைய பதிவு பின்னூட்டம் பகிர்வு அருமை.
    வெயில் காலத்தில் சமையல் அறையிலிருந்து தோசை சுட்டு கொண்டே இருப்பது கஷ்டம் தான்.
    நரிக்குறவர் பெண்கள் இப்படி பிளவுஸ் அணிவார்கள். விகடன் அட்டை படங்களில் வரும் . அதற்கு கவிதை எழுதியது வீட்டில் தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நரிக்குறவர் பெண்கள் இப்படி பிளவுஸ் அணிவார்கள். விகடன் அட்டை படங்களில் வரும் . அதற்கு கவிதை எழுதியது வீட்டில் தெரியுமா? //

      ​ஹா.. ஹா.. ஹா... நம்ம பெண்கள்தான். வீட்டில் தெரியும். செம பாட்டு... கவிதைக்கு அல்ல. படத்தைப் பகிர்ந்ததற்கு!

      நீக்கு
  36. மற்ற பதிகளையும் படித்தேன், சிரிப்பும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!