2.5.25

இந்த மகாராணி அவனை ஆளுவாள்....

 

1980 ல் எம் ஏ காஜா இயக்கத்தில், முத்துராமன், வடிவுக்கரசி நடிப்பில் வெளியான படம் பணம் பெண் பாசம்.  இந்தப் படம் பற்றி எல்லாம் எனக்கு ரொம்ப தெரியும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.இணையத்தில் கிடைக்கும் விவரங்கள்.  அவ்வளவுதான்.  சங்கர் கணேஷ் இசையில் பாடல் வரிகளை கண்ணதாசன், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு மற்றும் பூங்குயிலன் ஆகியோர் எழுதி இருந்தனர்.

S P பாலசுப்ரமணியம், S P ஷைலஜா பாடி இருக்கும் இன்றைய பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்று சொல்கிறது யு டியூப்!  ஷைலஜா வெறும் ஹம்மிங் மட்டும் செய்ய, SPB ஓங்கி குரல் கொடுத்து பாடுகிறார்.



லக்ஷ்மி வந்தாள் மகாராணி போல்
எனையாளவே நன்னாளிதே
வானோடும் மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
வானோடும் மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்

லக்ஷ்மி வந்தாள் மகாராணி போல்
எனையாளவே நன்னாளிதே

கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கை எனும் வரம் தந்தாள்

கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள்
காதலெனும் கவி தந்தாள்
வாழ்க்கை எனும் வரம் தந்தாள்

திருமகள் அன்புக் கலைமகள்
ஆசை மலைமகள் என் வசம்
மணமகள் நாளை மருமகள்
இன்பத் தமிழ் மகள் என்னிடம் ஹா...ஹா... ஆ..…..

லக்ஷ்மி வந்தாள் மகாராணி போல்
எனையாளவே நன்னாளிதே

அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம்

அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம்

இரவுகள் என்ன கனவுகள்
நல்ல உறவுகள் ஆயிரம்
வரவுகள் யாவும் வரவுகள்
ஜோடிப் பறவைகள் காவியம்

லக்ஷ்மி வந்தாள் மகாராணி போல்
எனையாளவே நன்னாளிதே
வானோடும் மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்

வானோடும் மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்

=======================================================================================

தமிழில் ஈஸ்ட்மென் கஜலரில் முழுவதுமாக வெளிவந்த முதல் தமிழ்ப்படம் கர்ணன்.  1964 ல் வந்தது. சிவாஜி, முத்துராமன், அசோகன், NTR என்று பெரிய அந்ட்சத்திர பட்டாளம் நடித்த திரைப்படத்திலிருந்து ஒள்று பாடல்.

கண்ணதாசன் பாடலுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் இசை.  எனக்குப் பிடித்த ராகங்களில் ஒன்றான கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள பாடல்.  TMS அவர்களும் சுசீலாம்மாவும் பாடி இருக்கிறார்கள்.

ஆமாம், ஏன் இன்று இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்?
ஆமாம், ஏன் இன்று இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்?


P. சுசீலா: மகாராஜன் உலகை ஆளலாம்

இந்த மகாராணி அவனை ஆளுவாள்
மகாராஜன் உலகை ஆளலாம்

P. சுசீலா : புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்

TMS : மகாராணி அவனை ஆளுவாள்
அதில் மகாராஜன் மயங்கியாடுவான்
மகாராணி அவனை ஆளுவாள்

TMS : புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழுவார்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணுவார்
உலக இன்பம் காணுவார்
மகாராணி அவனை ஆளுவாள்

P. சுசீலா : நான்கு பக்கம் திரைகளாடும்
பாமலர் மஞ்சம்
அதன் நடுவினிலே குடை பிடிக்கும்
காதலர் நெஞ்சம்

TMS : மான் கொடுத்த சாயலங்கே
மயங்கிடும் கொஞ்சம்
அந்த மயக்கத்திலே
தலைவியிடம் தலைவனே தஞ்சம்

P. சுசீலா : பாதத்தில் முகமிருக்கும்
TMS : பார்வை இறங்கி வரும்
P. சுசீலா : மேகத்தில் லயித்திருக்கும்
TMS : வீரம் களைந்திருக்கும்

இருவர் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..

P. சுசீலா : மகாராஜன் உலகை ஆளலாம்

TMS : கண்ணனையும் அந்த
இடம் கலக்கவில்லையா
இந்த கர்ணனுக்கு மட்டும்
என்ன இதயமில்லையா

P. சுசீலா : வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா
எந்த மன்னவர்க்கும் வழங்குவது
மனைவியில்லையா

TMS : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
பெண் : அந்தி பகல் துணையிருக்கும்
TMS : உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
பெண் : உலகமே மறந்திருக்கும்

இருவர் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..

P. சுசீலா : மகாராஜன் உலகை ஆளலாம்

68 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. இதில் முதல் பாட்டு கேட்டதில்லை. கேட்கிறேன். இரண்டாவது தெரிந்த பிரபலமான பாடல். அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.

    /ஆமாம், ஏன் இன்று இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்?/

    ஹா ஹா ஹா நீங்கள் இரு தடவைகள் கேட்டும், எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.

    ஒருவேளை வெள்ளியென்பதால் "லஷ்மி மகாராணி போல எனையாளவே வருகிறாள்" என்று இருபாடல்களுக்கும் ஒற்றுமை இருப்பதால் இதை இன்று பகிர்ந்திர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். இரு பாடல்களும் நன்றாக உள்ளது. கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...  ரெண்டு தடவையா வந்துடுச்சு?  ஏதோ பிழை போல...  சரி செய்கிறேன்...

      முதல் பாடலை இன்னும் கேட்கவில்லையா?  இரு பாடல்களுள் என்ன ஒற்றுமை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

      நீக்கு
    2. க ஹ - உங்கள் ஜி மெயில் பார்க்கவும். இரண்டு நாட்களாக விவரங்களுக்கு காத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. வணக்கம் கௌதமன் சகோதரரே

      நேற்று இரவுதான் 11 மணியளவில் உங்கள் ஜிமெயிலை பார்த்தேன்.பரிசெல்லாம் எதற்கு? குழந்தைகளுக்கு உங்களின் அன்பான வாழ்த்துகளும், அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அனைவரிடமிருந்தும், தங்களிடமிருந்தும் கிடைத்த பாராட்டுகளும் போதுமே..! போட்டியில் வெற்றி பெற்றதாக பேத்தியிடம் சொன்ன போது மிகவும் சந்தோஷபட்டாள். அந்த சின்ன மனதின் சந்தோஷமே எனக்கும் ஒரு நிறைவை தந்தது. அதனால்தான் இப்படிச் சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என் கருத்து தங்களுக்கு தவறாகபட்டிருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. நடுவில் உங்கள் ஜி மெயில் நிரம்பி வழிந்து ஓவர் லோட் ஆனதால் வேலை செய்யவில்லை என்று சொல்லி இருந்தீர்கள்.  இப்போது பார்க்க முடிவது குறித்து மகிழ்ச்சி.

      நீக்கு
    5. இப்போதும் சில சமயங்களில் வேலை செய்யவில்லை. புகைப்படங்களின் நிரப்புதலால் . மகள் ஏதோ ஒரு ஆப்பில் சென்று அதையெல்லாம் சின்னதாக்கி ஏதோ செய்யவும், சிலதுகள் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இன்னமும் உங்கள் புகைப்படங்களில்தான் ஜிமெயிலுக்கு குறை என்ற செய்தி வந்து கொண்டேதான் உள்ளது.

      இப்போதும் சென்ற வாரம் வெளியில் சென்ற போது, ஆர்வம் காரணமாக பதினைந்து படங்களை கைப்பேசியில் கூடுதலாக எடுத்து விட்டேன்.

      நீக்கு
    6. படங்களை குடும்ப க்ரூப்பிலோ எங்கேயோ ஷேர் செய்த உடன் அவற்றை அழித்து விடுங்கள்.  முக்கியமாக வீடியோக்கள் இருந்தால் அவற்றை அழையுங்கள்...  அவைதான் ரொம்ப கனம்.  பென் டிரைவில் கூட சேமித்து வைக்கலாம்.

      நீக்கு
    7. அருமையான யோசனைகளுக்கு நன்றி. அப்படித்தான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன். ஆனால், குடும்ப க்ரூப்பில் இருந்துதான் நிறைய போட்டோக்கள் என் கைப்பேசிக்கு வந்திருக்கிறது.முக்கியமானது எதுவென்று தீர்மானம் செய் என மகளும் சொல்லியபடி உள்ளாள்.

      /முக்கியமாக வீடியோக்கள் இருந்தால் அவற்றை அழையுங்கள்... /

      அப்படி அழைத்ததால்தான் விருப்பமுடன் நிறைய வந்துள்ளது. ஹா ஹா ஹா.

      நீக்கு
    8. அச்சச்சோ...  எழுத்துப்பிழையாயிடுச்சு...   

      அழியுங்கள் என்று சொல்ல வந்தேன்!  படங்கள் வீடியோக்களை உங்கள் விருப்பத்தில் டவுன்லோட் செய்யுமாறு செட்டிங்ஸ் வைங்க...

      நீக்கு
    9. :)) புரிந்தது. வேண்டுமென்றுதான் ஒரு நகைச்சுவைக்காக கேட்டேன்.

      நீக்கு
  3. முதல் பாடல் எப்போவோ ஓரு பழங்காலத்தில் கேட்ட நினைவு.

    இரண்டாவது பாடல் நிறையக் கேட்டிருக்கிறேன். கர்ணன் படப் பாடல்களை வரிசைப்படுத்தினால், இதுதானே கடைசிப் பாடலாக (ரசனையில்) இருக்கும் என்பது என் எண்ணம். காட்சிக்கும் இந்த மாதிரி எண்ணம் வருவதில் பங்கிருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழங்காலத்தில் கேட்டாலும் நல்ல பாடல், இல்லையா நெல்லை?

      கர்ணனின் எல்லா பாடல்களுமே இனிமையோ இனிமை என்றாலும் இந்தப் பாடல் ஒரு வாரமாக மனதில் - இப்போதும் அந்த இசையும் டி எம் எஸ் குரலும் - ஓடிக்கொண்டே இருக்கிறது!

      நீக்கு
  4. முதல் பாடலின் இசை ஆரம்பித்த விநாடியில் எனக்கு லவ் பேர்ட் லவ் பேர்ட் பாடல் நினைவுக்கு வந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முதல் பாடலின் இசை ஆரம்பித்த விநாடியில்  //

      ஏனெனில் அது லவ்பர்ட்ஸ் என்று ஒற்றை வார்த்தை சொல்வது போல இருக்குரியதுதான்.  ஆனால் நெல்லை, அது ஆரம்ப இசை அல்ல,  பூங்காவைக் காண்பித்ததும் காற்றை வயலின்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கின்றனவே, அதுதான் ஆரம்ப இசை.

      நீக்கு
  5. தலைப்பைப் பார்த்ததும் திடீரென்று 'இன்று செவ்வாய்க்கிழமையோ' என்றுமனசுக்குள் ஒரு தடுமாற்றம். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...   ஈஸியா ஹின்ட் கொடுக்கறீங்களே...!

      நீக்கு
    2. எத்தனையோ கதாநாயகிகள் தமிழ் திரையுலகில் வந்து போயிருக்கலாம். ஆனால் தேவிகாவும் பத்மினியும்
      என்னால் மறக்க முடியாதவர்கள். இரண்டு பேருக்கும் இருந்த
      சில ஒற்றுமைகள் தாம் காரணமோ என்னவோ?

      நீக்கு
    3. // இரண்டு பேருக்கும் இருந்த
      சில ஒற்றுமைகள் தாம் காரணமோ என்னவோ?// அவை யாவை?

      நீக்கு
    4. // ஆனால் தேவிகாவும் பத்மினியும் இந்தக் காலத்தில் தமன்னா, அனுஷ் போல அந்தக் காலத்தில் அவர்களுக்கு இவர்கள்.  என் அப்பாவுக்கு குமாரி கமலா என்றால் ஒரு கிக்!!!என்னால் மறக்க முடியாதவர்கள். //

      இந்தக் காலத்தில் தமன்னா, அனுஷ் போல அந்தக் காலத்தில் அவர்களுக்கு இவர்கள்.  என் அப்பாவுக்கு குமாரி கமலா என்றால் ஒரு கிக்!!!

      நீக்கு
    5. ''' சில ஒற்றுமைகள் தாம் காரணமோ என்னவோ?// அவை யாவை? //

      ஹிஹிஹி  இரண்டு பேருக்குமே கொடியிடை என்று பாடல்கள் எழுதுவார்கள்.  ஆனால் இருவருக்குமே தடியிடை! 

      இரண்டு பேர் வீட்டிலிருந்தும் ஒரு நடிகை நடிக்கவந்தார்கள்.  ஷோபனா, கனகா.

      நீக்கு
    6. ஷோபனா கனகா... இரண்டுபேருங்கும் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதிலும் ஒற்றுமை. இருவரும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்கள் என்பதும்தான்

      நீக்கு
    7. ஷோபனாவுக்கு என்ன?  நாட்டிய வாழ்க்கை.  நன்றாகத்தானே இருக்கிறார்?

      நீக்கு
  6. காக்க காக்க
    கனகவேல் காக்க

    பதிலளிநீக்கு
  7. மகாராஜன் உலகை ஆளுவான்
    இந்த மகாராணி அவனை ஆளுவாள்!..

    உண்மை தானே...

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவது பாடல், படத்தில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். இரண்டு முறைக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று என் மனதில் ஒரு சந்தேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். படத்தில் இடம்பெறாத பாடல் 'மகாராஜன் உலகை ஆளுவான்' பாடல்.

      'லஷ்மி வந்தாள்' பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அது பற்றிய சிறப்புக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. நானும் படம் பார்க்கவில்லை!

      நீக்கு
  9. ஜீவி சார் கதைத் தலைப்பு இப்போதுதான் எனக்கு நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இரு பாடல்களுமே கண்ணதாசன் அவர்கள் இயற்றியது. இரு பாடல்களுக்கும் இரட்டையர்கள் இசையமைத்தது. இதையும் இரு பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமையாக கொள்ளலாம் அல்லவா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே.. சூப்பரா ஒற்றுமை லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களே...

      நீக்கு
  11. அட! ஜீவி அண்ணாவின் கதையின் தலைப்பு. முதலில் வெள்ளி தானே இன்று என்று ஒரு டக்கென்று குழப்பம். கிழமையை பார்த்துக் கொண்டேன். அந்த அளவு மனம் கொஞ்சம் சோர்ந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய் என்று சொல்கிறது! தூக்கமும் தான்! ஹிஹிஹி

    அடுத்து, ஒரு வேளை வெள்ளிக்கிழமை கன்டென்ட் மாற்றி புது முயற்சி ஏதாச்சும்னோன்னு தோன்றியது அப்புறம் கீழ பார்த்த பிறகுதான் ...பாட்டு வெள்ளிதான் என்று உறுதியாச்சு! ஹாஹாஹாஹா. இந்த இத்துனூண்டு 1.5 கிலோ மூளைக்குள்ள ஒரு சில நொடிகளில் என்னென்ன ஓட்டங்கள் பாருங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ..  ஒரு சஸ்பென்ஸை யாரும் விட்டு வைக்க மாட்டாங்க போலிருக்கே....

      நீக்கு
    2. சஸ்பென்ஸ் புரிந்து விட்டது. கேட்கலாமா என்ற சந்தேகம் எனக்கு காலையில் லேசாக வந்தது. ஆனால், சகோதரி மாதேவி வந்து அதை ஊர்ஜிதபடுத்தி விட்டார். நன்றி சகோதரிக்கு. மதிய வேளை முடிந்ததும் நீங்களும் வந்து சஸ்பென்ஸை விடுவித்து விடுங்கள். வாழ்த்துகள்.

      நீக்கு
  12. இன்னைக்கென்ன ஒரே "அச்சச்சோ" மயமாக இருக்கிறது. எல்லோருக்கும் பதில் தரும் பாணியில் இது கூட ஒரு பிளாட்டிங்க் பேப்பரோ (ஒற்றுமையோ) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ அதிகமாயிடுச்சோ!

      நீக்கு
    2. :)))) அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் "அச்சச்சோ சித்ரா" நினைவுக்கு வருகிறார்.

      நீக்கு
    3. அவள் ஒரு தொடர்கதையா வேறுபடமா?

      நீக்கு
    4. அச்சச்சோ. அ. ஒ. தொ. க என தவறுதலாக சொல்லி விட்டேன். அது அரங்கேற்றம் படத்தில் அவர் அறிமுகம்.

      நீக்கு
    5. இன்றும் இடம் பெறும் அரட்டைகளை பார்க்கும் போது இன்று வியாழனா , வெள்ளியா, என்ற சந்தேகம் இப்போது வருகிறது. :))

      நீக்கு
  13. முதல் பாட்டு வரிகளைப் பார்த்ததும் டக்கென்று பிடிபடவில்லை. அப்புறம் பாடல் கேட்டப்ப ஆரம்ப இசை கேட்டதும் வரிகளின் மெட்டு வந்துவிட்டது. ஆனாலும் ஒரு டவுட் அந்தப் பாடல்தானா என்று அப்புறம் எஸ் பி பி ஹை பிச்சில் பாடத் தொடங்கியதும் ...சரிதான் நாம் நினைத்தது என்று...

    நல்ல பாடல் பல முறை கேட்ட பாடல், ஸ்ரீராம். இதில் எஸ்பிபியின் குரல் தான் ரசிப்பது...ஹை பிச்சில் பாடுவது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் 'ஓங்கி' என்று சொல்லி இருக்கிறேன்!  ஆமாம், ராகம் சொல்லவில்லையே...

      நீக்கு
  14. இரண்டாவது பாடலும் அருமையான பாடல், ஸ்ரீராம். நிறைய கேட்டு ரசித்த பாடல். அழகான கம்பீரமான ராகம் இது.!

    இப்பவும் கேட்டுக் கொண்டேதான் கருத்து! குரலும் இசையும் என்று கலக்கலான பாடல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்களையும் இந்த இரண்டு நாள்களில் நான்கு முறை கேட்டு விட்டேன்!!

      நீக்கு
    2. அவசியமாக இருக்கும் போது அவசியம் கேட்டுத்தானே ஆக வேண்டும். ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. மனதிற்குகந்த பாடல்களை அடிக்கடி கேட்பேன்.  அர்த்தம் இருக்காது!

      நீக்கு
  15. கர்ணன் படப்பாடலாகிய இரண்டாவது பாடல் அப்படத்தில் இடம் பெற வில்லையென்பது எனக்கு ஒரு அறிந்திராத தகவல். சென்னையில் அந்த படம் புதுப்பித்த காப்பியுடன் வந்திருந்த போது பார்த்தோம். அப்போது அப்பாடல் படத்தில் இருந்ததே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை அப்போது சேர்த்திருக்கலாம்.  நானும் கூட அந்த ரிலீஸில் பார்க்க நினைத்திருந்தேன்.  முடியவில்லை.

      நீக்கு
  16. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் அருமையானபாடல்கள்.

    "மகாராணி அவனை ஆளுவாள்" இன்று உங்கள் திருமணநாளோ ?உங்கள்வீட்டு மகாராணியை நினைத்து பாடல்கள் பகிர்ந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. எங்களுக்கெல்லாம் தோன்றாததை சகோதரி மாதேவி அவர்கள் சரியாக சொல்லி விட்டார் என நினைக்கிறேன். அப்படியாயின் உங்கள் திருமண நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉.

      நீக்கு
    2. என் மகாராணி எப்போதும் என் மனதில்.    காரணமும் அர்த்தமும் வேறாயிருக்கலாம்;  நாளை தெரியலாம், தெளியலாம்!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    முதல் படப் பாடல் இப்போதுதான் முழுதாக கேட்டேன். கேட்கும் போது ஏற்கனவே கேட்ட பாடல் மாதிரிதான் இருந்தது. எஸ்பிபி யின் குரலில் பாடல் அருமை. இப்போது இந்தப்படத்தையும் யூடியூப் பில் போட்டு பார்த்தேன். நவரச திலகத்தின் படங்கள் ஒரளவிற்கு நன்றாக கதையம்சத்துடன் இருக்கும். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் நீங்கள் பகிர்ந்த பாடல் படத்தில் வந்தது. (அதனால் , இப்படப் பாடலும் படத்தில் உள்ளதா, இல்லையா என்ற நம் சந்தேகங்கள் தீர்ந்தது) வடிவுக்கரசி மனநிலை சரியில்லாதவராக வருகிறார். ஏனென்ற பிளாஷ்பேக் இனிதான் வரும். மீதி படத்தை இரவு வேலைகள் முடிந்ததும் நேரம் உள்ள போது பார்க்கிறேன். ஏனென்றால் எனக்கு ஒரு திரைப்படமோ, கதையோ, பார்த்து/ படிக்காமல் முடிக்கவில்லையென்றால், எப்போதும் அதன் நினைவாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  நீங்கள் என் பாஸ் போல என்று நினைக்கிறேன்.   அவரும் இப்படி பார்த்த உடன் படம் பார்த்து விடுவார்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    நேற்று அந்த கல்யாண போட்டோவை பகிர்ந்து (ஊஞ்சல் கல்யாண போட்டோ) அந்த விஐபி யாரென்று தெரியவில்லையே என எங்களுடன் சேர்ந்து நீங்களும் அங்கலாய்த்துக் கொண்டீர்கள். தன்னைப் பார்த்து தானே யாரென புதிர் போடும் அந்த மனிதரை அடையாளம் கண்டு கொண்டேன். இன்றைய நாளுக்கான முன்னோட்டம் என்று இப்போதுதான் மனது சொல்கிறது.

    "வந்தாள் மஹாலக்ஷ்மியே..! என் வீட்டினில் என்றும் அவள் ஆட்சியே..!" என்ற கமல் பாடலும் விடை கண்ட என் மனதுக்குள் இப்போது ஓடிக் கொண்டேயுள்ளது. :))

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணிப்பு, பொருத்தமான கற்பனை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தவறு!

      நீக்கு
  19. ஸ்ரீராம்க்கும் அவர் பாஸுக்கும் திருமண நாள் வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்

    இரண்டு பாடல்களும் கேட்ட பாடல்கள். இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டது முதல் பாடல் காட்சி இல்லாமல் ரேடியோவில் கேட்டது.
    ஊஞ்சல் படம் இதற்கு தானா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கணிப்பு(ம்) தவறு அக்கா!  பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  20. நேற்று திருமணநாள் கொண்டாடிய ஸ்ரீராம் தம்பதியினர்களுக்கு இனிய வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆனால் உங்கள் கணிப்பு தவறு என்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்

      நீக்கு
  21. தாமதமான திருமண நாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களுமா கீதா அக்கா... உங்களுக்கு தெரியுமே... 1,2,3 க்ரீட்டிங் கார்ட்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      இப்பொதுதான் உங்கள் பதில்களை பார்க்கிறேன். பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். எல்லாரும் உங்கள் திருமண நாளுக்கு வாழ்த்துகளை தந்து விட்டோம். நீங்கள் பதிவை அழகான பாடல்களுடன் வெளியிட்டதும், அதில் "இன்று ஏன் இந்தப்பாடலை பகிர்கிறேன்." என்ற வினாவும், வந்த கருத்துரைகளின் வார்த்தைகளின் விளையாட்டும் எங்களை அவ்வாறு எண்ண வைத்து விட்டது.

      அதனாலென்ன..! கணவன் மனைவியை மனதாற நேசிக்கும் பரஸ்பர தம்பதிகளுக்கு தினமும் கல்யாண நாட்கள்தான்இல்லையா?

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
    3. // அதனாலென்ன..! கணவன் மனைவியை மனதாற நேசிக்கும் பரஸ்பர தம்பதிகளுக்கு தினமும் கல்யாண நாட்கள்தான்இல்லையா? //


      ஹா..  ஹா..  ஹா...  உண்மைதான் அக்கா.

      நீக்கு
    4. நீங்களுமா கீதா அக்கா... உங்களுக்கு தெரியுமே... 1,2,3 க்ரீட்டிங் கார்ட்!//ஜந்தேகம் வந்தது. ஆனால் ஜோட்யியிலே ஐக்கியமாகிடுவோம்னு ஒரு எண்ணம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!