புழுக்கு
கேரள சாப்பாட்டிற்குள்ள (சத்யா) துணைக்கறிகள் அவியல், தோரன்,
எரிசேரி, ஓளன், தீயல், என்பவை.
இவை
அல்லாமல் கேரள கஞ்சிக்கு என்று ஒரு சிறப்பு துணைக்கறி உண்டு. அது தான் புழுக்கு. நெல்லை புழுங்கி
உண்டாக்குவது புழுங்கல் அரிசி. அது போல் கிழங்குகளை புழுங்கி உண்டாக்குவது
புழுக்கு.
அடுத்துள்ள
ஈழவர் (நாராயண குருவை பின் பற்றுபவர்கள்) குடும்பங்கள் நீத்தார் நினைவு நாளன்று
முன்னோர்களுக்குக் கஞ்சியும், புழுக்கும், மாங்காய் ஊறுகாயும் படைத்து, அடுத்துள்ளவர்க்கு
தந்து உண்பர்.
சாதாரணமாக
உருளைக்கிழங்கு தவிர்த்து, மரவள்ளி, வாழைக்காய், சேனை, சேம்பு, காய்ச்சில்,
சிறுகிழங்கு, கூர்க்கன் கிழங்கு, சர்க்கரைவள்ளி போன்றவற்றை வேவித்து (புழுங்கி)
செய்யப்படும் ஒரு கறிவகை தான் புழுக்கு. எல்லா கிழங்குகளும் வேண்டும் என்பது
இல்லை, உள்ளது போதும், இவற்றை குழைத்து சேர்த்து வைப்பது, மத்தங்காய்
(பரங்கிக்காய்), மற்றும் தேங்காய் அரவை. கூடுதலாக கருப்பு கொண்டைக்கடலை,
சேர்க்கப்படும். கிட்டத்தட்ட எரிசேரி போன்றது தான்.
ஒரு துண்டு
மரவள்ளி (மரசீனி, கப்ப, குச்சி கிழங்கு) இருந்தது. புழுக்கு செய்யலாம் என்று ஒரு
தோணல். மேலும் ஊறவைத்த கொண்டைக்கடலை பிரிட்ஜ்ல் இருந்தது. ஆக கிடைத்த/எடுத்த
பொருட்கள்:
படம் கீழே.
எடுத்துக்கொண்ட காய்வகைகள்.
மரவள்ளி கிழங்கு 1 துண்டு
சேனை கிழங்கு 1 துண்டு.
வாழைக்காய் 1
துண்டு
வெள்ளை கொண்டை கடலை 1 கப் (கருப்பு கடலை இல்லை. வெள்ளைக்கடலை பாணி பூரிக்கு
ஊறவைத்தது இருந்தது)
பரங்கிக்காய் 1 துண்டு.
இவ்வாறு காய்களை/கிழங்குகளை எடுத்துக்கொண்டு
மளிகைக்காக பாஸை நாடினேன். பாஸ் எடுத்து வைத்த மளிகை சாமான்கள் படம் கீழே.
மிளகு, சீரகம், மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பூண்டு.
இதைப் பார்த்து எனக்கும் பாசுக்கும் இடையே பட்டிமன்றம் தான் .
நான் “பூண்டு சேர்ப்பதில்லை, மிளகு சீரகம் மட்டும் போதும்.” என்று வாதிக்க பாஸ்
“உங்களுக்கு ஒன்னும் தெரியாது (Boss
is always right !!😔),
நீங்க போய் உங்க கம்ப்யூட்டரை நோண்டுங்க” என்று அடுக்களையில் இருந்து ‘get out’
சொன்னார். பின் சாப்பிட வந்தபோது செய்யப்பட்ட புழுக்கை மொபைலில் படம் பிடித்தேன்.
காய்களை/கிழங்குகளை/கடலையை குக்கரில் வேக வைக்கவும். ஆறியபின் வாணலியில்
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு மிக்ஸியில் அரைத்த மிளகு, சீரகம், தேங்காய்
துருவல் இவற்றை சேர்த்து,
வெந்த காய் கலவையை போட்டு பிரட்டி எடுத்தால் போதும். பாஸ் கூடுதலாக பூண்டை
அரவையில் சேர்த்திருக்கிறார். கடுகு, கறிவேப்பிலை,காயப்பொடி வற்றல் மிளகாய் தாளித்து கொட்டியிருக்கிறார்.
சுவைக்கும் வாசனைக்கும் சுக்குப்பொடி சேர்ப்பது உண்டு. பாஸ் சுக்குபொடியும்
இல்லை, சொக்குபொடியும் இல்லை என்று கூறிவிட்டார். சுக்குப்பொடி சேர்த்ததை
சாப்பிட்டிருக்கிறேன். தற்போது
செய்த புழுக்கு ஓகே ரகம்.
வெயில் புழுக்கம் தாங்க முடியலை. இதுல சமையலிலும் புழுக்கா ?
= = = = = = = =
மகாராஜன் -- மகாராணி இரண்டு பேரும் சேர்ந்து சமையலறையை ஆள்வது அசாத்தியமான காரியம் தான் (நெல்லை என்ன சொல்வாறோ?)
பதிலளிநீக்குஎன்பதை நானும் பார்த்திருக்கிறேன்
வேண்டுமானால் காய்கறி நறுக்கித் தருகிறேன் என்று பெரிய மனது பண்ணி ஒப்புக்கொண்டு வெளி ஹாலில் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டே வேலை முடிந்ததும் ஜகா வாங்கி விடுவது ஐயா வழக்கம்.
மஹாராணி சமையல் அடுப்பை விட்டுக் கொடுக்கவில்லையே. என்னை கெட் அவுட் சொல்லிவிட்டு வேக வைத்து பினிஷ் செய்தது அவர் தானே பூண்டு சேர்ப்பது உட்பட.
நீக்குJayakumar
நான் காய்கறி கட் பண்ணுவது, பெரும்பாலும் கீரை ஆய்வது போன்றவற்றைச் செய்வேன். சில நேரங்களில் பருப்பு குக்கரில் வைப்பது போன்ற சமையலுக்கான தயாரிப்பு வேலைகளைச் செய்வேன். இதெல்லாம் உதவி என்பதைவிட பல நேரங்களில் உபத்திரமாகிவிடும்.காரணம் அன்றைக்கான சமையலை மாற்றிக்கொண்டே இருப்பதால்.
நீக்குபுழுக்கு என்று படித்ததும் அசைவமோ என்று நினைத்து கொஞ்சம் டர்ஜ் ஆகி விட்டேன். ஆனால் செய்முறையையை படித்ததும் பிடித்தது. நன்றி. செய்து பார்க்கிறேன். தாளிக்க தேங்காய் எண்ணையா?
பதிலளிநீக்குஆ!! பானுக்கா, பாலக்காடு குடும்பம் இல்லையா மாமா குடும்பம்? கண்டிப்பாக உங்க மாமா குடும்பத்தினர் இதைச் செய்யாம இருக்கமாட்டாங்களே.
நீக்குகீதா
நேற்று எதிர் வீட்டு "மினி"யோட மாமியாருக்கு நினைவு நாள். புழுக்கும் கஞ்சியும் கிடைத்தது.
பதிலளிநீக்குஆஹா!
நீக்குகீதா
சிறுகிழங்கும் கூர்க்கனும் வேறு வேறா? இரண்டும் ஒன்றுதான் என எண்ணி, பஹ்ரைனில் மார்க்கெட், சூப்பர் மார்கெட்டுகளில் சிறு கிழங்கை வாங்கியிருக்கேன்.
பதிலளிநீக்குஇல்லை நெல்லை இரண்டும் ஒன்றுதான். பாலக்காடு பக்கங்களில் இதை காவத்த கிழங்குன்னு சொல்றாங்க. மறு பெயர் சீவக்கிழங்கு.
நீக்குகீதா
ஜெ கே அண்ணா, புழுக்கு செய்முறை நன்று. இது கேரள மக்களின் திருவாதிரை புழுக்கு.
பதிலளிநீக்குமற்றபடி அவங்க தனித் தனியாக கப்பை புழுக்கு, சேனைக்கிழங்குப் புழுக்கு என்று செய்வாங்க. அதுவும் வட கேரளத்தின் செய்முறையும் தென் கேரளத்தின் செய்முறையும் வித்தியாசப்படுகிறது.
கோயிலில் கஞ்சியோடு புழுக்கு இப்படி எல்லாம் கலந்து செய்யறாங்க மலபார் சைடில்.
ஆனால் பாலக்காடு சமூகத்தின் புழுக்கு செய்முறை வித்தியாசப்படும்
தேங்காய், வரமிளகாய் ஜீரகம் இந்த மூன்றும் தான். கொர கொரவென்று அரைத்துச் சேர்ப்பது. பிசைந்து சாப்பிட என்றால் கொஞ்சம் தளர. இல்லைனா கெட்டியாக.
கப்பை அல்லது சேனை அல்லது வாழைக்காய். அல்லது சேனையும் வாழையும் கலந்து. ஆனால் இந்த மூன்றும்தான் அரைத்துவிடுவாங்க கொண்டைக்கடலை சேர்க்காம.
திருவனந்தபுரத்திலுமே கூட இங்கு நான் பாலக்காட்டு சமூகம் செய்வது போலத்தான் செய்வாங்க, குறிப்பிட்ட சமூகம். ஹோட்டல்களில் இரு வகையும்.
கீதா
நீக்குபுழுக்கு பற்றிய விரிவான விவரங்கள் தந்தமைக்கு நன்றி. சிறு கிழங்கு பல வடிவங்களில் பல சைஸுக்களில் இருக்கும். கூர்க்கன் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும், தற்போது கிடைக்கிறது.
Jayakumar
ஆமாம் கூர்க்கன் ஒரே சைசில் இருக்கும் ஆனால் அதை அவங்கப் பிரித்து அப்படிச் சேர்த்து வைப்பதாக மார்க்கெட் காரர் சொல்லியிருக்காங்க திருவனந்தபுரத்தில் பெரும்பாலும் மார்க்கெட்டில் தமிழர்கள் இருப்பாங்களே.
நீக்குகீதா
பாலக்காடு சமூகத்தினர் பூண்டு சுக்கு எதுவும் சேர்க்க மாட்டாங்க.
பதிலளிநீக்குஆனால் மற்றபடி தேங்காய் ஜீரகம் வர மிளகாய் அல்லது ப மிளகாய் பூண்டு சேர்த்து அரைத்து ஒரு சிலர் சேர்ப்பதுண்டு. சுக்கு பொதுவாகப் போடுவதில்லை. ஒரு சிலர் தான்.
துளசி வீட்டிலும் சுக்கு சேர்ப்பதில்லை
கீதா
இப்புழுக்கில் சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய், சேர்த்து அரைத்து விட்டுச் செய்வதும் உண்டு. பொதுவாகத் தாளிதம் கிடையாது. தேங்காய் எண்ணையில்தான் செய்வதுண்டு. அதுவும் அடுப்பிலிருந்து எடுக்கும் முன், தேங்காய் எண்ணை மேலாப்ல விட்டு அதில் கருகப்பிலையும் போட்டு கலந்து எடுப்பதுண்டு. நல்ல வாசமாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
புழுக்கு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமேலதிக விபரங்களை தந்த திருமதி கீதா அவர்களுக்கு நன்றி.
வெங்காயம், பூண்டு, சுக்குப்பொடி சேர்க்காமல் பண்ணிக்கணும். எரிசேரிதான் கிட்டத்தட்ட
பதிலளிநீக்குஆஹா ஜேகே ஐயாவும் இப்போ சமையல் அனுப்புகிறாரோ ஹா ஹா ஹா நல்லது நல்லது.
பதிலளிநீக்குபுழுக்கு.......... இப்படி ஒரு பெயரை இன்றுதான் கேள்விப்படுகிறேன். புழுங்கல் என்றால் அவித்தல் எனப்பொருள்படும்தானே.. அப்போ அவியலைத்தான் புழுக்கு என சொல்றீங்களோ என நினைக்கிறேன்...
வாறேன் படிச்சிட்டு...
நாங்கள் பொய் எனும் சொல்லுக்கு புழுகாதே எனத்தான் ஊரில சொல்லுவேன், எழுத்துவடிவாக வரும்போதுதான் பொய் என்போம், பேச்சு வழக்கில் புழுகாதே.. ஒரே புழுகிக்கொண்டிருக்கிறார் அவர்.. இப்படிச் சொல்லுவோம் ஹா ஹா ஹா.
புழுக்கு-வேகவை, புளுகு-பொய்
நீக்கு///நெல்லைத்தமிழன்5/5/25 1:55 PM
நீக்குபுழுக்கு-வேகவை, புளுகு-பொய்///
ஆஆஆஆஆவ்வ்வ்வ் அச்சச்சொ எங்கின கொண்டுபோய் என் தலையை வைப்பேன் டமில் புரொபிஸரிடம் மாட்டுப்பட்டிட்டனே ஹா ஹா ஹா...
எனக்கு வித்தியாசமே தெரியுதில்லை நெ தமிழன்... நான் நினைச்சேன் வேம்... அதுக்குத்தான் புளு என வருமாக்கும் இந்த ளு என ஹா ஹா ஹா..
உங்க சிமியோன் ரீச்சர் போய்விட்டால் என்ன, இந்த நெல்லைத் தமிழன் இருக்கும்வரை, அவர் எழுதுவதில் தமிழ் பிழை இருந்தாலும் அதிரா எழுதுவதில் தமிழ் பிழை இருந்தால் உடனே வந்துவிடுவார் சுட்டிக் காட்ட
நீக்குஹா ஹா ஹா எனக்கு அதில் மகிழ்ச்சிதான் நெ தமிழன், ழு, ளு எனக்கு வருகுதேயில்லை... 2008,9 இல் எல்லாம் விழையாட்டு எனத்தான் எழுதுவேன்.. பின்பு பலர் முக்கியமாக இமா... திருத்தி திருத்தி விட்டுத்தான் அதைப் பழகினேன்... அஞ்சுவும் அப்பப்ப சொல்லித்தருவா இப்போ, என்னால வித்தியாசம் கண்டுபிடிக்கவே முடியவில்லை, மற்ற எதிலும் பிழை விடமாட்டேன், பிழை வந்தால் அது தவறே தவிர தப்பில்லை, ஆனா இந்த ழு ளு மட்டும் தெரியாமல்தான் எழுதுகிறேன்..
நீக்குசில சொற்களில் ஸ்/ஷ் க்கும் தடுமாற்றம் வரும்... :)))
வெங்காயம் கிடையாது. பூண்டு தேவை இல்லை. சுக்கு பொடி போடவில்லை. செய்முறை எளிது. தேங்காய் தான் அநியாய விலை. ஆனால் தேங்காய் வீட்டு தேங்காய் ஹி ஹி.
பதிலளிநீக்குJayakumar
ஆஹா முதல் பந்தியிலேயே முழு விளக்கமும் சொல்லிட்டீங்கள்... புழுங்கல் அரிசி எனத்தான் நாங்களும் பேசுவோம்... அதாவது கைக்குத்தல் அரிசியை... நாங்கள் ஆட்களைக் கூப்பிட்டு வீட்டிலேயே புழுங்கல் அரிசி தயாரிப்போம் ஊரில்...
பதிலளிநீக்குஎங்கள் ஊர்க் குத்தரிசி எல்லாம் சிவப்பு அரிசியிலேயே தயாரிப்பது. சிவப்பாகவே இருக்கும்.. கைக்குத்தல் அரிசி, புழுங்கல் அரிசி, மொட்டைக்கருப்பன்... இப்படிப் பெயர்களில் கிடைக்கும் இலங்கைத் தமிழ்க் கடையில்.
ஆனால் இப்போ கொஞ்ச வருசமாக இங்கு தஞ்சாவூர்ப் பொன்னிப் புழுங்கள் அரிசி என பால் வெள்ளை நிறத்தில் கிடைக்குது... எனக்கு ஒரே ஆச்சரியம் வெள்ளை நிறத்தில் புழுங்கல் அரிசியோ என, இப்போ அதையும் வாங்கிச் சமைக்கிறேன் நல்ல சுவை.
ஆஹா இந்தக் கறி வித்தியாசமாக இருக்கு, சுவையாகத்தான் இருக்குது என நம்புகிறேன். படத்தில் சூப்பராக இருக்குது, குருமா கறிபோல்.
பதிலளிநீக்குஆனா ஒன்று கறி வகைகள் மற்றும் சமையல் வகைகளுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழ் நாட்டவரை ஏன் இந்தியா முழுவதும் ஆராலும் அடிக்கவே முடியாது, ஏன் தெரியுமோ.. நாங்களும் இப்படி அப்படி எல்லாம் கறிகள் வைப்போம் ஆனா அனைத்துக்கும் கறி எனத்தான் பெயர் ஹா ஹா ஹா... குழம்பு, பிரட்டல், வெள்ளைக்கறி இவ்வளவும்தான் சொல்லுவோம்...
பதிலளிநீக்குதூள் சேர்த்து பிரட்டி வச்சால் பிரட்டல் கறி[உள்ளே என்ன உள்ளது என்பதனையும் சேர்த்து சொல்வோம்].. உ கிழங்குப் பிரட்டல், கத்தரிக்காய் பிரட்டல் முருங்கைக்காய் பிரட்டல் இப்படி... இதனை தண்ணியாக பால் சேர்த்து வைத்தால்.. அதன் பெயர் குழம்பு...
வெறும் பச்சை மிளகாய் மிளகு சேர்த்தால் வெள்ளைக்கறி.. அதனை தண்ணியாக்கினால் சொதி.. இவ்ளோதான் ச்ச்ச்ச்சோ..ஓஓஓஓ ஈசி ஹா ஹா ஹா.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகேரளத்து கறிகள் பதிவிலேயே உள்ளன.
நீக்குதமிழ் நாட்டு தொடு கறிகள்
பொரியல், வறுவல், அவியல், பச்சடி, பால்கறி, துவையல், ஊறுகாய், எரிசேரி, கூட்டு, கடைசல், சாறு, பிரட்டல், மெழுகு புரட்டி, வதக்கல், மற்றும் இலங்கை இம்போர்ட் சம்பல், சுண்டல் ஆகியவை தான்.
அதேபோல, பொரியல் வகைகளிலும் பெயர் சொல்கின்றனர்.... நாங்கள் எண்ணெயில் போட்டெடுத்தால் அதுக்குப் பெயர்"பொரியல்" அவ்வளவுதான் மஞ்சூரியன், 65 இப்படியெல்லாம் சொல்வதில்லை ஆனால் பொரியல் எனும் பெயரில எல்லாம் செய்வோம் ஹா ஹா ஹா.
நீக்குஅதேபோல சாம்பாறு எனில், வீட்டில் என்ன என்ன மரக்கறி இருக்கோ அனைத்தையும் சேர்த்து செய்வோம்.. அனைத்தும் சேர்ந்தால்தானே அது சாம்பாறு.., ஆனா நீங்க எல்லாம்... முருங்கைக்காய் சாம்பாறு, கத்தரிக்காய் சாம்பாறு இப்படிச் சொல்வது ஆரம்பம் எனக்கு ஆச்சரியமாக இருந்துது.... இப்போ எல்லாம் பழகிட்டுது:)
பதிலளிநீக்குசாம்பாரில் எங்கள் வீட்டிலும் எல்லா காய்களும் போட்டால்தான் பிடிக்கும் அதிரா. ஒரு காய் மட்டும் போட்டு சாம்பார் செய்யவே மாட்டேன்.
நீக்குசாம்பார் பலதரப்படும். துவரம்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார், டிபன் சாம்பார், ஹோட்டல் சாம்பார், புளி இல்லா சாம்பார், அரைச்சு விட்ட சாம்பார், பிட்லை என்று மளிகை பொருட்கள் பயன்படுத்தும் விதத்தில் மாறுதல்கள் உள்ளவையாகவும், மற்றும் பயன்படுத்தப்படும் காய்களின் பெயரால், வெங்காய சாம்பார், இஞ்சி சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், பூசணிக்காய் சாம்பார், கதம்ப சாம்பார் என்று பெயர்கள் கொண்டிருக்கும். இதில் கூறப்பட்ட சாம்பார் ஒவ்வொன்றிற்கும் தனி மனம், சுவை, உபயோகம் இவற்றில் வித்தியாசம் தெரியும். இவை இல்லாமல் உபயோகத் தன்மையால் விளிக்கப்படும் இட்லி சாம்பார், பொங்கல் சாம்பார், சாம்பார் வடை சாம்பார் என்ற சாம்பார்களும் உண்டு. பருப்பிலா சாம்பார் என்ற ஒரு பேஸ்மெண்ட்டே இல்லாத சாம்பாரும் உண்டு.
நீக்குJayakumar
ஹா ஹா ஹா இதைத்தான் சொன்னேன் பலவகைப் பெயர்களில் கிடைக்கிறது அங்கு...
நீக்குகோமதி அக்கா, அப்போ என் இனம் நீங்கள்:))
புழுக்கு செய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநாங்களும் செய்வோம். எங்கள் வீட்டிலும் பூண்டு, சீரகம் சேர்ப்போம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் புழுக்கு செய்முறை நன்றாக உள்ளது. தாளதம் பாணி. ஆனால், அதில் எல்லா காய்கறியும் இடம் பெறும். (பூண்டைத்தவிர) அவியலும் அப்படித்தானே....! எரிசேரி வாழையும், சேனையும் மட்டுமே சேர்த்து செய்வோம். இன்று இந்த செய்முறைகளும் , படங்களும் நன்றாக உள்ளது.பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாளதத்துக்கு எள் வறுத்துச் சேர்ப்போம் நாங்கல்லாம். அதிலே முக்கியமா நாட்டுக்காய்கள் மட்டுமே. பறங்கி, பூஷணி, வாழை, சேனை இத்யாதி
நீக்கு
நீக்குஒரு நாள் தாளதம் செய்து படங்கள் எடுத்து எ பி க்கு அனுப்பலாமே. தாளதம் என்ற சொல்லே எனக்கு புதியது. முயற்சி செய்யுங்கள்.
Jayakumar
இன்றைய சமையல் குறிப்பான புழுக்கு நிறைய வாசகர்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. வந்து கருத்து கூறியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குJayakumar
தாளதத்தில் நீர்க்கப் புளியும் விடுவோம்.
பதிலளிநீக்கு