24.5.25

வைபவ் மற்றும் நான் படிச்ச கதை

 

என்னை தேடி ஒரு புதுவிதமான Internship candidate வந்தார் !!! அவன் பெற்றோர் தெற்கு தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பகுதியின் கிராமத்தில் உங்களை சந்திக்க வந்தோம் என்றார்கள் ....

நாங்களும் படித்தவர்கள்தான் ஆனால் எங்கள் மகன் ஒரு சிறந்த இளம் விஞானி , கிராமத்தில் படித்த எங்களை போன்று வாய்ப்பு கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதால் உங்களிடம் சிஷியான சேர்த்துவிட வந்தோம் என்று குறிப்பட்டார்கள் !!!
அவனிடம் பேச ஆரம்பித்தேன் !!! ..........
நான் :
உன் பெயர் என்ன,உனக்கு என்ன தம்பி வேண்டும் !! ,
வைபவ் : வைபவ் சார் உங்கள் நிறுவனத்தில் internship வேண்டும் சார்..
நான் : இங்க வந்து என்ன பண்ண போகிறாய் ?
வைபவ் :அதற்கு மேல் நான் இயற்பியல் பாடத்தில் நோபல் பரிசு வாங்கவேண்டும் !!
நான் : சரி என்ன படிக்கிறாய் ? உன்ன வயது என்ன ?
வைபவ் : வயது 14 , 9 ம் வகுப்பு முடித்து இருக்கிறேன் :
நான் : உனக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை பற்றி சொல் என்றேன் ....
வைபவ் : எனக்கு சைன்ஸ் அதில் பிசிக்ஸ் நன்றாக தெரியும் ..
நான் : பிசிக்ஸ்ல சைன்ச்ல என்ன தெரியும்
வைபவ் : குவாண்டம் பிசிக்ஸ் தெரியும் .....
நான் : குவாண்டம் பிசிக்ஸ்ல அடுத்த லெவல் என்ன தெரியும் ... ?
வைபவ் : குவாண்டம் மெக்கானிசம் தெரியும் , அதற்குள் என்ன தெரியும் என்று கேட்பீர்கள் !!!
அதற்குள் குவாண்டம் communication பற்றிய ஆராய்ச்சி செய்கிறேன் !!
நான் : குவாண்டம் communication ல உன் ஆராய்ச்சி பற்றி விளக்கவும் ,......
--------- அவன் கொடுத்த விளக்கத்தை கேட்டு அசந்து போனேன் .... இவ்வளவு பெரிய ஜீனியஸ் மாணவனை நான் சந்தித்ததே இல்லை !!! ஆனாலும் சின்ன பையனா இருக்கான் !!!
இவன் கொடுத்த ஆராய்ச்சி செய்முறை ஆக்கினா மொத்த நாட்டிற்கே பெருமை தான் !!! ...
சர் சி வி ராமன் என்றால் யார் என்றே தெரியாத மாணவர்கள் வாழும் இந்த யுகத்தில் ராமனுக்கே டப் கொடுக்கும் அசாத்திய அறிவு படைத்தவனாக திகழ்கிறான் வைபவ் !!!
ராமன் என்றால் யார் என்றே தெரியாத விசிலிடச்சான் குஞ்சுகள் மத்தியில் , உலகத்தில் நோபல் பரிசு வென்ற ஒவ்வொரு விஞ்ஞானி மற்றும் அவர்கள் கண்டுபிடிப்புகள் பற்றி செய்முறையோடு விளக்கம் கொடுக்கிறான் !!
குவாண்டம் பிஸிக்ஸ் மட்டுமல்ல -- Python , AI , Gen AI , ML , NLP , மிகவும் ஆழமாக பேசுகிறான்...
அதுமட்டுமல்ல ஆல்கஹால் உங்க உடலில் இருந்தால் அதை கண்டறிந்து எப்படி வண்டியின் வேகத்தை குறைக்க முடியும் என்ற ஆராய்ச்சி செய்து அதற்கு பேட்டர்ன் publish செய்து இருக்கிறான் ...
எங்கள் IT நிறுவனத்தின் colleague மத்தியில் அவன் ஆராய்ச்சி பற்றி சொற்பொழிவு கொடுக்க சொல்லி ,அவர்களை கேள்வி கேட்க சொன்னேன் ,
அனைவரின் கேள்விக்கும் , IT ல ஒரு பல வருடடங்கள் அனுபவ மிக்கவின் போல பேசியதை கேட்டு அனைவரும் வியந்து போனோம் ...
இதற்கும் இவனுக்கு வீட்டில் டிவி இல்லை , கேம் போன் இல்லை !! , நல்ல laptop கூட இல்லை !!! அதிகமான ஆராய்ச்சி அவனுக்கு ஆழந்த அறிவை வளர்த்து இருக்கிறது
ஆக எங்களுது நிறுவனத்திற்கு ஒரு விஞானி வாரிசாக கிடைத்தான் என்று உடனே internship வாய்ப்பை கொடுத்துவிட்டேன் .
பிகு :
இந்த இளம் விஞானியை இந்தியா நிச்சயம் ஊக்கிவிக்க வேண்டும் , அரசாங்கம் ஊக்கிவிப்பதை பற்றி கவலைப்படாமல் ...
எங்கள் shinelogics நிறுவனம் ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளது , ஒரு highend laptop அவனுக்கே கொடுத்து , எங்களது product thinking ல குறிப்பாக erp மற்றும் ecommerce system த்தில் ,மிக அதிகமான data வை எப்படி எளிதாக கையாளுவது எப்படி என்ற குவாண்டம் பிசிக்ஸ் விஞானத்தை அவனிடம் கொடுத்து இருக்கிறேன் ...
கொடுத்த இரண்டு நாளில் அவன் வேகமாக பாதி வேலையை முடித்துவிட்டான் !!!
நிச்சயமாக வைபவ் எதிர்காலத்தில் ஒரு பெரிய விஞானியாக வருவான் , இன்னும் ஊக்கிவித்தால் நிச்சயம் நோபல் பரிசுகளை அள்ளி குவிப்பான் .... 14 வயதுதான் ஆகுது ... இன்னும் பயணிக்கவேண்டியது நீண்ட தூரம் ..................


Thank you JKC Sir.
=======================================================================================

Screen Shot taken from a Video.
=====================================================================================

Thank you JKC Sir.

===================================================================================


Thank you JKC Sir.
==============================================================================

யு.பி.எஸ்.சி தேர்வு
இந்திய அளவில் மிக முக்கிய போட்டி தேர்வு ஆக, குடிமைப் பணி தேர்வுகள் இருந்து வருகின்றன. இந்தத் தேர்வு மூலம் ஐ.ஏ.lஎஸ், ஐ.பி.எஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்தியாவில் உள்ள உயரிய அரசு பதவிகளில் இடம் கிடைக்கும்.
சிவில் சர்வீஸ் தேர்வு என சொல்லக்கூடிய இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதல்நிலைத் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும். இதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் போட்டியாளர்கள் பெரும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்தாண்டு வெளியான ஐபிஎஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருந்தனர்.
ஐ.எப்.எஸ் தேர்வு முடிவுகள் - IFS Results
இந்திய வனப்பணி சேர்வதற்கான தேர்வுகள் நடந்து நடந்து முடிந்து, தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருந்தனர். இந்திய அளவில் 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. முதலில் முதல்நிலை தேர்வு முடிந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜனவரி மாதம் மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழ்நாட்டில் இருந்து 10 பேர் தேர்ச்சி
இதனைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெற்றது. இந்தியாவில் இந்தத் தேர்வுகளில் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 10 மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 4 பேர் பெண்கள்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நிலபாரதி என்பவர் இந்திய அளவில் 24 வது இடத்தை பெற்றுள்ளார். தமிழ்நாட்டு அளவில் இவர் முதலிடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நிலா பாரதி ?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அமையப்பட்டு கிராமத்தை சேர்ந்த கவிஞர் வெண்ணிலா - முருகேசன் தம்பதியின் மகள் நிலா பாரதி. கவிஞர் வெண்ணிலா பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கவிஞர் வெண்ணிலா, " எங்களின் அன்பு மகள் மு வெ நிலாபாரதி தற்போது வெளியாகியுள்ள UPSC, IFOS தேர்வில் இந்திய அளவில் 24வது இடம் பிடித்திருக்கிறாள்.
கடின உழைப்பு, இடைவிடா முயற்சியில் இவ்விடத்தை அடைந்திருக்கிறாள். இரு மகள்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கிற இந்நேரத்தில் என் அப்பாவை, நண்பர்களை, உடனிருந்து வழிகாட்டும் தோழமைகளை மகிழ்வுடன் நினைத்துக்கொள்கிறேன். வாழ்த்துகள் தங்கக்குட்டி என பதிவு செய்துள்ளார்.
ஒரே வீட்டில் ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ்
கவிஞர் வெண்ணிலா முருகேசன் இரு தம்பதியினரின் மூத்த மகள் கவிமொழி அண்மையில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 546 வது இடத்தை பெற்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கவின்மொழி குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அவரது தங்கை நிலா பாரதி தற்போது வனப் பணிக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
நன்றி: ABP நாடு

===========================================================================================================================================================

 

சொல்ல விரும்பும் கதை (உண்மை)

JKC

புள்ளி வைக்க மறந்துட்டேன்.

 

மூன்று  வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது, நான் படிச்ச கதை பகுதியை நான் எழுதத் தொடங்கி. வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் எல்லாம் எழுதியும் வரவேற்பு குறைவாக இருந்ததால் தற்காலங்களில் ஒரே டெம்ப்ளட்டில் கதை, கதை ஆசிரியர் பற்றிய குறிப்பு, முன்னுரை, பின்னுரை. எனது கருத்துக்கள் என்று எழுதி வெளியிடுகிறேன். இப்போக்கு எனக்கும் போரடித்துவிட்டது. ஒரு மாறுதலுக்காக நான் பணி புரிந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட சில சின்ன மறக்க முடியாத அனுபவங்களை இங்கு அவ்வப்போது எழுதலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். அதன் விளைவே இக்கதை (உண்மை கதை). உங்களுடைய வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.  

ஒன்றை இங்கே முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு technical வார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதங்கள் தெரியாது. ஆகவே தமிழும் ஆங்கிலமும் கலந்தே கதை சொல்லப்படும். மன்னிப்பீர்களாக.   

நான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. 1970 ல் பணியில் சேர்ந்து 39 ஆண்டுகள் குப்பை கொட்டி 2009 இல் ஒய்வு பெற்று ஹாயாக இருக்கிறேன். No tension.

சேர்ந்தது, தேர்ந்தெடுக்கப்பட்டது என்னமோ காம்ப்டோமீட்டர் (comptometer) உதவியாளர் (assistant) என்ற பதவி. ஆனால் இன்று வரை இந்த  காம்ப்டோமீட்டர் என்ற உபகரணத்தை கண்டதில்லை. எனக்குக் கொடுக்கப்பட்டது கீழே படத்தில் உள்ள Facit mechanical calculator தான். போஸ்டிங் செக்சன் purchase. 

Vendor code, Material code, Indent register, Purchase Order register, section budget, Limited Tender opening மற்றும் sorting போன்ற யாருக்கும் வேண்டாத சில அலுவல்கள் என்னுடைய பொறுப்பில் விடப்பட்டன. உதாரணமாக வாங்கப்படும் ஹார்ட்வேர், சைஸ் உருப்படிகளாகக் குறிப்பிடப்படும். அவற்றின் எடை கண்டுபிடித்து எடையின் அடிப்படையில் விலை கண்டுபிடிக்க வேண்டும் (rods, plates, flats, angles, channels, tubes etc.) இது போன்ற சமாச்சாரங்களுக்குத் தான் Facit கால்குலேட்டர்.

இதில் கூட்டல், கழித்தல் செய்யலாம். பெருக்கல் என்பதை கூட்டல்களின் எண்ணிக்கையாகவும், வகுத்தல் என்பதை கழித்தல்களின் எண்ணிக்கையாகவும் செய்ய வேண்டும்.

அப்போது மையத்தில் இருந்தது இரண்டே கம்ப்யூட்டர்கள், ஒன்று ருசியா நிர்மிதமான Minsk கம்பியூட்டர், மற்றது . IBM 1620 என்ற அமெரிக்க கம்ப்யூட்டர். Minsk கம்ப்யூட்டர் சாதாரண ராக்கெட் ஏவுதலுக்கு பயன் பட்டது. IBM 1620 ஆராய்ச்சிக்கு பயன் படுத்தப்பட்டது.. 1620 பழையதாகி விட்டதால் IBM 360, மாடல் 44 வாங்க முடிவு செய்து ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. சில மாதங்களில் வந்து விடும்.  

அதன் முன்னோடியாக “All comptometer assistants are advised to appear for an aptitude test being conducted for assessing the eligibility for  computer programmer post. Comptometer assistant posts will be abolished. “ இப்படி ஒரு ஆணை  போடப்பட்டது. அதன் பிரகாரம் நானும் தனித்திறமை தேர்வு (aptitude test) எழுதினேன். 62 சதவீத மதிப்பெண்களோடு தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய பதவி junior programmer என்றாகியது.  இந்த மாற்றம் என்னுடைய பதவி உயர்வுகளுக்கு ஒரு மார்க்கமாக இருந்தது… அதாவது purchase என்ற administrative செக்ஷனில் இருந்து technical பிரிவுக்கு மாறுதல் பெற வழி கோலியது.

புதிதாக வரப்போகும் கணினி IBM 360 யைப் பற்றி சில வார்த்தைகள். 1970களில் மூன்று வகை கம்ப்யூட்டர்கள் தான் இருந்தன. மெயின்பிரேம், மினி, ஹைபிரிட். தற்போதைய பி சி போன்றவை அக்காலத்தில் பரீட்சார்த்தமானவையாக இருந்தன. . IBM 360 என்பது 1960களில் வடிவமைக்கப்பட்ட ஒரு 3rd ஜெனெரேஷன் மெயின் பிரேம் கம்ப்யூட்டர். Core memory உடையது. CPU (Central processing Unit), disc storage units, tape storage units, card reader. High speed printer, card punch, console and console typewriter, என்று தனித்தனி மெஷின்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு. இவை எல்லாவற்றையும் இயக்கும் மூளை தான் OS (Operating system) DOS மற்றும் PS/44. 

திறனறி தேர்வில் (aptitude test ) வெற்றி பெற்றேன் என்று சொன்னேன் அல்லவா? அதன் பின்னர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். பயிற்சி எங்கள் மையத்திலேயே நடந்தது.  வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.  

அன்று இரண்டு கம்ப்யூட்டர் நிரலாக்க மொழிகள் பரவலான உபயோகத்தில் இருந்தன. அவை FORTRAN, மற்றும் COBOL. எனக்கு அடிப்படை பயிற்சி, மற்றும் COBOL நிரல் எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி தரப்பட்டது.

ஆயிற்று ராஜா வந்தார். அவருக்கென பிரத்தியேக குளிரூட்டப் பட்ட கண்ணாடி அறையில் விளக்குகள் மின்ன, காண்பவர் வியக்க, அவரது ஆட்சியை துவங்கினார்.

அன்று கம்ப்யூட்டர்களை இயக்க கட்டளைகள், தரவு (data) ஆகியவை IBM card என்ற அட்டைகளில் துளையிடப்பட்டு card reader வழியாக கொடுக்க வேண்டும். இதன் output பிரிண்டர் வழியாக தரப்படும்.

நாங்கள் எங்கள் நிரலாக்கத் திறமையை காட்ட நிரல் எழுதி மேலே கொடுத்துள்ள கார்டுகளில் கார்டுக்கு ஒரு வரி என்ற முறையில்  punch செய்து  அடுக்கி டெக் உண்டாக்கி  கம்ப்யூட்டரில் கொடுக்க வேண்டும்.  

ஒரு டெக் என்பது 3 தரம் கார்டுகள் அடங்கியது. முதலில் வரும் // கார்டுகள் job control card எனப்படும். இந்த கார்டுகளின் முதல் இரண்டு  column “//” என்று இருக்கும்.  /* கார்டு comment கார்டு எனப்படும். இவை இல்லாமல், நாம் தரும் நிரல் (program), மற்றும் தரவு (data) கார்டுகளை அனுபந்தமாக சேர்க்க வேண்டும்.   

ஒரு ஜாப் என்பது 3 நிலைகளை தாண்டி சரியானதாக இருந்தால் தான் கம்ப்யூட்டர் அந்த கட்டளைகளை நிறைவேற்றி முடிவை தெரிவிக்கும். முதல் நிலை compilation எனப்படும். இந்நிலையில் தரப்பட்ட நிரல் கஃம்ப்யூட்டருக்கு புரியும் பைனரி மொழியில் மாற்றப்பட்டு கட்டளை கம்ப்யூட்டருக்கு புரியும்படியாக மாற்றப்படும். இரண்டாம் நிலை link/edit என்பது. இதில் நிரல் செயல்பட தேவையான மற்ற லைப்ரரி functions சேர்க்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு முழுமையான பைனரி ப்ரோக்ராம் ஆக்கப்படும்.  மூன்றாம் நிலை load/run எனப்படும். இது கட்டளைகள் பிரகாரம் செயல்பட்டு கொடுத்த வேலையை தீர்ப்பது.  

எல்லாம் சரி. வேலையை துவங்கலாம், ப்ரோகிராம்களை தரலாம் என்று கூற, நானும் எனது ப்ரோக்ராம்  அட்டை அடுக்கை கொடுத்தேன். சிறிது நேரம் கழித்து output கிடைத்தது. 30 வரி நிரலில் 300 syntax பிழைகள். ஆக ப்ரோக்ராம்,  compilation என்ற முதல் கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டது.  

தோல்வியே வெற்றிப்பாதையின் முதற்படி. பிழைகள் பட்டியலில் உள்ள விவரங்கள் எல்லாம் புதிராக இருந்தன. அப்போது தான் கண்டேன். நிரலில் முதல் வரி IDENTIFICATION DIVISION. என்றிருக்கவேண்டும். இருந்ததோ கடைசியில் full stop இல்லாமல் வெறும் IDENTIFICATION DIVISION மாத்திரம் தான்.  

COBOL ப்ரோக்ராமில் full stop என்பது மிக முக்கியம். ஒவ்வொரு வாக்கியமும் full stop இல் முடிய வேண்டும். இது தலைப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி IDENTIFICATION DIVISION என்பது புள்ளி இல்லாமல் இருக்கிறது. நான் புள்ளி வைக்க மறந்துட்டேன். புள்ளி வைக்க மறந்துட்டேன். ஆக compiler  அதற்கப்புறம் வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிழை என்று கணக்காக்கி 300 பிழைகள் என்று கொடுத்து விட்டது.  

முற்றுப் புள்ளி வைத்தேன். Compilation OK. syntax error இல்லை. ஆனாலும் எதிர்பார்த்தபடி வேலை நடக்கவில்லை.  Run time error என்று message. ஒன்றுமே புரியவில்லை. விற்பன்னர்களிடம் காட்டி என்ன பிழை என்று கேட்டேன். அவர்களுக்கும் புரியவில்லை. கடைசியில் தான் கேட்டார்கள் “tape ஏதும் உபயோகிக்கிறாயா?” என்று. “ ஆமாம் tape எழுதுகிறேன். “ என்று. அப்போது தான் அவர்கள் “// LBLTYP TAPE “ கார்டு வச்சியா”. “இல்லை”. “வை சரியாகும்” என்றனர். அதே போல் செய்ய எல்லாம் சரியானது. அதாவது நான் டேப் லேபிள் எழுத மெமரி யில் இடம் ஒதுக்க வில்லையாம்.

முதன் முதலாக ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதி அது வெற்றிகரமாக செயல்பட்டபோது கிடைத்த ஆனந்தம் அளவிட முடியாத ஒன்று. ஏதோ சாதித்தது  போன்ற உணர்வு.  

இப்படியாகத்தானே நானும் ஒரு COBOLAN (கோபாலன்) ஆனேன். அதன் பலன் ட்ரான்ஸ்பெர். கம்ப்யூட்டர் டிவிசனுக்கு ஜூனியர் ப்ரோக்ராமர் ஆக மாற்றினார்கள். . ஆனால் கோபியர் தாம் இல்லை. கம்ப்யூட்டர் டிவிசன் முழுக்க ஆண்கள் தாம். காரணம் ஷிப்ட் டூட்டி. கம்ப்யூட்டர் பூதத்திற்கு  24 மணி நேரமும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.         

இந்தக்கதை ஒரு பாடம் கற்பிக்கிறது. அது தான் Artificial Intelligence க்கும் Normal human intelligence க்கும் உள்ள வித்தியாசம். சாதாரண நல்ல புரோகிராமர் எழுதிய நிரலை முதலில் பார்த்தவுடன் full stop வைக்கவில்லை பார் என்று சொல்லி விட்டு வேலையை கவனிப்பார்கள். AI அப்படியில்லாமல் ஒவ்வொரு வார்த்தையும் தவறு என்று 300 குறைகளை பட்டியலிடும்.. இதுதான் வித்தியாசம்.

23 கருத்துகள்:

  1. வைபவின் கதை அபூர்வம். அவனுக்குக் கை கொடுத்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    விளையாட்டு, மற்றும் மற்ற திறமைகளைவிட அறிவுத்திறமை ஒருவனை வேகமாக முன்னேற்றிவிடும். வாய்ப்புகளும் வந்துவிடும்.

    குற்றாலீசுவரன் போன்ற திறமையாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள், ஸ்பான்சர்கள் மற்றும் பல சப்போர்ட்டுகளும் தேவை. அதனால் சரியாக இவை அமையாது. அதனால்தான் ஒரு கட்டத்துக்குமேல் அவர் மிளிரவில்லை.

    அபூர்வப் பிறவி வைபவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உன்னி ராஜன் அவர்களுக்குப் பாராட்டுகள். (ஏஐ போட்ட படம் போல் இருக்கிறார்).

    அருண்ஐஸ்க்ரீம் ஏற்கனவே படித்ததுதான். இவரைப் போன்ற ஏகப்பட்டபேர் அந்த நாடார் சமூகத்தில் இருக்கிறார்கள். கனவுகளைத் துரத்தி பிரம்மாண்டமாக வளர்ந்தவர்கள். (ஷிவ் நாடார்-திருச்செந்தூர் கோயில் சீரமைப்புக்கு அசால்டா இருநூறு கோடி கொடுக்கும் அளவு, வி ஜி பன்னீர்தாஸ், சரவணா ஸ்டோர்ஸ், வசந்தம், விகேடி பாலன் விருதுநகர் அய்யநாடார் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு
  3. ஜெயகுமார் சாரின் அனுபவத் தொடர் நன்றாக இருக்கிறது.

    நான் இவருக்கு, கணிணியில் அடுத்த ஜெனரேஷன். எனக்கு கணிணி சொல்லிக்கொடுத்தவர் ஓரிரு வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழக ஐபிஎம் கணிணியில் டெக் கார்டு மூலம் நிரல்கள் எழுதி கம்பெனிகளுக்கு உதவினார்.

    என் ஆரம்ப காலமும் கோபால் மொழியில் நிரல் எழுதுவது. ஓரிரவுல் 3500 வரிகள் எழுதுவேன் என் அனுபவம் பின்னால், யோசித்து -எழுதலாமா என, எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  4. எங்க (பழைய) ஆளு, மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் ஆகிவிட்டார். தன் ஆளு, வெட்டும் புலி தீப்பெட்டிக்குக் கூட பிராண்ட் அம்பாசிடர் ஆகலையே என்ற கோபத்தில், பாசிடிவ் செய்தியில் ஶ்ரீராம் இதனைப் புறக்கணித்துவிட்டாரோ? ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  5. நமது எங்கள் ப்ளாக் லைஃப் மேம்பால தமன்னா அவர்கள் மைசூர் சான்டா செப் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதால்நாம் அனைவரும் இனி அந்த சோப்பையே வாங்கி அவரை கவுரவிப்பது நம்கடமையாகும்.
    கே. சக்ரபாணி சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி சக்ரபாணி சார். தமன்னா உபயோகித்த மைசூர் சாண்டல் சோப்பை எனக்கு வாங்கித் தருவது உங்கள் பொறுப்பு.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....அச்சச்சோ!!...நெல்லை, தமன்னா உபயோகித்த மைசூர் சாண்டல் சோப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அதுவும் நீங்களா!!!

      கீதா

      நீக்கு
  6. லைஃப் மெம்பர்என்று படிக்கவும். இது ஆட்டோ மிஸ்டேக்ஆகிவிட்டது

    பதிலளிநீக்கு
  7. மன்னிக்கவும் சான்டல்சோப் என்று படிக்கவும்.
    இதுவும் ஆட்டோ மிஸ்டேக்ஆகிவிட்டது.
    தமன்னா என்றவுடன் செல் கீ போர்டும்தடுமாறுகிறது.
    காவலரா நீக்கு காவாலா.
    சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. திறமையுடன் செயலாற்றும், மற்றும் படித்து பட்டம் பெற்ற அனைவருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    இன்றைய கதை பகுதியில் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் அலுவலக மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு புள்ளி வைக்காவிட்டால் என்னென்ன சிரமங்கள் விளைந்ததென தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய டாப் செய்தி, வைபவ் மேட்டர் தான்.

    வியக்க வைக்கிறார் வைபவ். கிடைக்கும் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இந்தியாவிற்கு நோபல் பரிசுகளை வென்று வருவார் என்று வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எல்லா பாசிட்டிவ் செய்திகளும் சூப்பர். ஜெ கே அண்ணா நிறைய கொடுத்திருக்கிறார்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இந்த கோபால் ப்ரோக்ராம் நானும் கற்றுக் கொண்டு அப்புறம் அதைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது. நான் கற்றுக் கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். திருவனந்தபுரத்தில் இருந்தப்ப, அப்ப அரசு சார்பாக கணினி படிப்பு சும்மா ஒரு ஷார்ட் டேர்ம் கோர்ஸ் ப்ரோக்ராம் எழுதுவது பற்றிக் கற்றுக் கொடுத்தாங்க அதில் ஒன்று இது...
    உங்க அனுபவம் சுவாரசியம், ஒரு 'புள்ளி'யினால் வந்த பிரச்சனை!!! (கேரள பாஷையில் 'புள்ளி' என்றால் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமே!!)

    எனக்குப் புள்ளி வைச்சா கோலம் போடத் தெரியும்...ஆனா இந்தப் புள்ளி ப்ரோக்ராம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். அப்ப இது ஃபேமஸ். இப்ப தெரியலை அதெல்லாம் மாறியிஉக்கும் கணினி உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உன்னி ராஜன் - மேட்டரும் சூப்பர் மேட்டர்!! உழைப்பு விடா முயற்சி! பாராட்டுவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ​நாலு பேருக்கு நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா இப்படி உங்கள் அனுபவங்களை அவ்வப்போது எழுதலாமே.

      புனைவுக் கதைகள் வருவதற்கு இடையில் இப்படியான உண்மை அனுபவங்கள்.

      கீதா

      நீக்கு
  14. வைபவுக்கு உதவிய கரங்களுக்கு முதலில் பாராட்டுகள் கூறவேண்டும். வளர்க அவர் திறமைகள்.
    திரு.ஜெயக்குமார் அவர்களின் அனுபவ கட்டுரை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  15. இந்தப் பகுதியிலிருந்து பாஸிட்டிவ் செய்திகளைத் தூக்கினால் தான் மற்ற ந்து ஒன்றைத் தலைப்பிட்டு எழுதினாலும் அதற்கு தனி அந்தஸ்து கிடைக்கும். செவ்வாய், வியாழன், சனி நாட்கள் எபிக்கு மற்ற தளங்களில் இல்லாத தனி கெட்டப்பைக் கொடுப்பவை. மற்ற விஷயங்களில் கலந்து நீர்த்துப் போகக்கூடாதவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனுங்கோ - என்னுடைய புதன் பதிவுகள் என்ன பாவம் செய்தன!

      நீக்கு
  16. ** மற்ற எது ஒன்றைத் தலைப்பிட்டு

    பதிலளிநீக்கு
  17. வைபவுக்கு வாழ்த்துக்கள் இள வயதில் நல்ல திறமை.

    //முதன் முதலாக ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதி அது வெற்றிகரமாக செயல்பட்டபோது கிடைத்த ஆனந்தம் அளவிட முடியாத ஒன்று. ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. //

    வெற்றிகரமாக செயல்படும் போது மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்யும்.
    சாரின் அலுவலக அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. பாசிடிவ் செய்திகளில் முதல் செய்தியை ஏற்கனவே முகநூலில் படித்தேன். செவித்திறன் அற்றவர் IASல் தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    JKC சாரின் அனுபவங்கள் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!