சைவ இறால் தொக்கு
திண்டுக்கல் சமையல்
மறுபதிப்பு - JKC. நன்றி முகநூல்.
ஸ்ரீராம் பெரிய்ய்ய ஹோட்டலில் சைவ இறால் சாப்பிட்டதை குறிப்பிட்டு அதை படமும் எடுத்து வெளியிட்டார். நான் சைவ இறால் என்றால் என்ன, எதைக் கொண்டு சைவ இறால் செய்யப்படும் என்ற கேள்வியை எழுப்பினேன். பதில் கிடைக்கவில்லை. கேள்வி மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது.
அப்போதுதான் இந்த சமையல் குறிப்பை முக நூலில் கண்டேன். நான் அறிந்த சைவ இறால் தொக்கு செய்யும் முறையை எ பி வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற ஆர்வத்தால் இங்கே பதிவாக தந்துள்ளேன்…..ஸ்ரீராம் வெளியிடுவார் என்ற நம்பிக்கையில்.
சைவ இறால் தொக்கு செய்வது எப்படி .....
தேவையான பொருட்கள்
பனீர் – 100 கிராம்,
வெள்ளை கொண்டைக் கடலை – 150 கிராம்,
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,
மைதா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு,
கருவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் வெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே தண்ணர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை யில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஊற வைத்திருந்த கொண்டைக் கடலை யை அதில் சே ர்க்க வே ண்டும். பிறகு பனீரை நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் அரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூளை சேர்த்து, கடலை மாவையும், மைதா மாவையும் சே த்து நன்றாகப் பிணைந்து கொள்ளுங்கள்.
தேவைப்படும் பட்சத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் மட்டும் தண்ணீரைச் சேர்த்து பிணைந்து கொள்ளலாம். அதிகளவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதை நன்றாக பிணைந்து மிருதுவான மாவாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து நீள வாக்கில் உருட்டி அதில் கத்தியை பயன்படுத்தி இறால் போல நடுவில் லேசாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்படி அனைத்து மாவையும் இறால் வடிவத்தில் தயார் செய்து அதை சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து இறாலை பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணையை ஊற்றி இறாலை போட்டு லேசாகச் சிவக்கும் வரை போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
மீதம் இருக்கும் எண்ணையிலேயே பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு மீதம் இருக்கும் மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், க்ரம் மசாலா இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேன்டும்.
பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். இவை அனை த்தும் நன்றாக வதங்கிய பிறகு இதில் கால் டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் இறாலை அந்த தொக்கில் போட்டு இறால் நன்றாகத் தொக்கை உரியும் அளவிற்குப் பிரட்டி விட வேண்டும். சிறிது நேரத்தில் இறால் அந்தத் தொக்கை அனைத்தையும் உறிந்து விடும். இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை கொத்தமல்லியை தூவி இறக்கினோம் என்றால் சுவையான சைவ இறால் தொக்கு தயாராகி இருக்கும்...
#திண்டுக்கல்சமையல்
சமையல் இரண்டு பகுதிகள். முதலில் இறால் செய்ய வேண்டும். அதற்கு பனீர், கடலை மாவு, ஊற வைத்த சன்னா அரைத்தது, மைதா, மிளகாய் தூள் சேர்த்து கட்டியாக பிசைந்து, இறால் வடிவ பொம்மைகள் உண்டாக்கி எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
பின்னர் தொக்கு உண்டாக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, ஆகியவற்றை பேஸ்ட் பருவம் வரும் வரை எண்ணையில் வதக்கவும்.
பொரித்த சைவ இறால்களை இந்த பேஸ்டில் நன்றாகப் பிரட்டிய பின் பொரித்த கருவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
செய்முறையில் உப்பைப் பற்றி கூறவில்லை, தேவைக்கேற்ப உப்பு சேர்க்க மறக்காதீர்கள்.
அசைவப் பெயர்களை உபயோகித்து, நம்புகள் இவை சைவ தயாரிப்புகள் தாம் என்று சாப்பிடுவதில் என்ன திருப்தியோ தெரியவில்லை.
பதிலளிநீக்குஅப்படி சாப்பிட்டவர் ஸ்ரீராம். அவர் தான் பதில் கூற வேண்டும்.
நீக்குJayakumar
"ஆ... அசைவ பெயரில் உணவு வகைகள்.. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.." என்று தேடியா நாங்கள் சென்றோம்? புகழ்பெற்ற அந்த சைவ ஹோட்டலில் - கவனிக்கவும், சைவ, சைவ ஹோட்டலில் - சாப்பிடச் சென்றதும் இவைகள் எல்லாம் இருக்கின்றன என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.
நீக்கு"ஆ.. பார்றா... இப்படி எல்லாமும் யாவாரம்" என்று உலகிற்கு சொல்ல நான் அதை பதிப்பித்தேன்.
குற்றமா? :)))
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார சமையல் பதிவு. நன்று. ஆனால் பெயரைச் உச்சரிக்க மனது கொஞ்சம் சிரமபடுகிறது. என்னதான் செய்முறைகள் சைவம் என்றாலும், கூடவே ஒரு ""அ" நினைவுக்கு வந்து நிற்கிறது.
/இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் இறாலை அந்த தொக்கில் போட்டு இறால் நன்றாகத் தொக்கை உரியும் அளவிற்குப் பிரட்டி விட வேண்டும். சிறிது நேரத்தில் இறால் அந்தத் தொக்கை அனைத்தையும் உறிந்து விடும். /
இதைப்படிக்கும் போது ஏனோ மன பிரட்டல்களும் வருகிறது. (இப்படி உண்மையை சொன்னதற்கு அசைவ பிரியர்கள் மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.) மற்றபடி செய்முறை நன்றாக உள்ளது. இதற்கு "கொண்டைக்கடலை குருமா" என்று பெயர் வைத்திருக்கலாம். ஹா ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுதான் சைவ இறால் தொக்கா?
பதிலளிநீக்குஅசைவம் பழக்கம் இல்லாதவர்களுக்குப் பெயர் தான் கொஞ்சம் பின் வாங்க வைக்கும். இந்தச் செய்முறை நன்றாகவே இருந்தாலும். எதற்கு இப்படி ஒரு ஷேப் செய்து இப்பெயரை வைக்க வேண்டும்?
இப்படி எல்லாம் வடிவம் செய்யாமல், உருட்டிப் போட்டு கோஃப்தா என்று செய்து அதை கெட்டி கிரேவியாகச் செய்திருந்தாங்க என் நெருங்கிய உறவினர் வீட்டில் முதன் முறை சென்றிருந்த போது 10 வருடங்களுக்கு முன். பனீர் சன்னா ஃப்ரை கோஃப்தா மசால்னு, சப்பாத்தியுடன் கொடுத்தாங்க. ஆனால் உருட்டிப் போட்டு கோஃப்தா பொரித்திருந்தாங்க. முதலில், பொரித்ததை கோஃப்தா என்று தனியாகச் சுவைக்க வீட்டிலேயே அவங்க செய்திருந்த தக்காளி சாசுடன், மிளகாய் சட்னியுடன் கொடுத்தாங்க. அதுவே நன்றாக இருந்தது. அதன் பின் அவங்க அந்த கோஃப்தாவை இப்படி மசாலாவில் கலந்து கொதிக்க விட்டு சப்பாத்தியுடன் கொடுத்தாங்க.
பொரிப்பதற்கு அவங்க மைதா சேர்க்காமல் Corn flour சேர்த்திருந்தாங்க ஸோ கோஃப்தா நல்லா க்ரிஸ்பியாக இருந்தது உள்ளே மிருதுவாக. ஆனால் மசாலாவுடன் போட்டு வதக்கியதும் கூட கொஞ்சம் க்ரிஸ்பியாக இருந்தது ஆனால் நேரம் ஆனதும் ஊறிவிட்டது. மசாலா கம்மியாகப் போட்டு செய்திருந்ததால் சாப்பிட இதமாகவும் இருந்தது.
அவங்ககிட்ட கத்துக்கிட்டு நானும் செய்து பார்த்தேன்.பொரித்த கோஃப்தாவே செலவாகி விட்டதால் எஞ்சி இருந்ததை மசாலா செய்து திக் கிரேவியாக்கினேன். இதெல்லாம் மகன் இங்கு இருந்தவரை. அதன் பின் இப்ப இங்கு இப்படிச் செய்வது அரிதாகிவிட்டது.
இப்ப உங்க ரெசிப்பி பார்த்ததும், கொஞ்சமேனும் செஞ்சா என்னனு செய்யலாமோ என்று தோன்றுகிறது. கோஃப்தா ஸ்டைலில்தான்.
கீதா
அசைவ இரால் தொக்கு குறிப்பு மிக அருமை! ரொம்பவும் வித்தியாசமாக இருப்பதால் செய்து பார்க்க வேண்டுமென நினைத்துள்ளேன். இதற்கு முன் இதைப்பொன்ர குறிப்புகளை கடந்து வந்துள்ளேன். ஆனால் செய்து பார்க்கும் ஆர்வம் வந்ததில்லை. ஆனால் இதன் அளவுகள், எழுதியிருந்த விதம் இதை செய்யத்தூண்டுகிறது! கீதா எழுதியிருப்பது போல கொஞ்சம் கார்ன் மாவும் சேர்த்து செய்ய வேண்டுமென நினைத்துள்ளேன்.
பதிலளிநீக்குதோற்றத்தில் அப்படியே இறாலை கொண்டு வந்ததற்கு புகைப்படம் எடுத்தவரையும் குறிப்பு பதிவு செய்தவரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
சைவ மீன் குழம்பு என்று வாழைக்காயிலும் வாழைப்பூவிலும் செய்பவர்கள் இருக்கிறார்கள். முயற்சியும் ஆர்வமும் தேடல்களும் தான் இந்த வகையான கண்டுபிடிப்புகள்! ஒரிஜினல் சுவையை இதனாலெல்லாம் கொண்டு வர முடியாது.
மற்றபடி அசைவம் சமைப்பதும் பேர் வாங்குவதும் மிகவும் சிரமமான காரியம். அதற்கு பொறுமையும் சுத்தமும் மிகவும் வேண்டும்.
இதைப்போன்ற
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குசைவ இறால் தொக்கு பேரை கேட்டால் செய்ய தோன்றாது.
பதிலளிநீக்குவேலையும் அதிகமாக இருக்கிறது.
கீதா சொல்வது போல சோளமாவு சேர்த்து கோஃப்தாவாக செய்யலாம்.
தெரிந்து கொள்ள ஆவலாக தேடி இங்கு பதிவு செய்து விட்டீர்கள்.
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இந்த மாதிரி பதார்த்தங்கள் தேவையில்லை. அசைவம் சாப்பிடுபவர்கள் "அவலை நினைத்து உரலை இடிக்கும்" கதையாக இப்படி செய்து சாப்பிடுவது உண்டு. வடக்கு மற்றும் பல நகரங்களிலும் கடல் உயிரினங்கள் கிடைப்பது அரிது, கிடைக்காது. அவர்களுக்கு இந்த மாதிரி செய்ய பிடிக்கும்.
பதிலளிநீக்குJayakumar