4.6.25

அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டதுண்டா?

 

நெல்லைத்தமிழன்: 

ஒருவன் உடலுழைப்பு செய்துகொண்டு, சைக்கிளை மாத்திரம் உபயோகித்து, வீட்டில் செய்யும் உணவை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு, வேறு சினிமா போன்ற பொழுதுபோக்குகளே இல்லாமல் இருந்தால், அவனால் அந்த தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்று படித்தேனே. உண்மையா?  

# பணம் சுழற்சியில் இருப்பதுதான் நிதி நிலையில் ஆரோக்கியத்திற்கு அடையாளம் என்ற விவாதத்தின் அடிப்படையில் இது ஓரளவு உண்மைதான்.‌ ஆனாலும் மிச்சம் ஆகிற பணத்தை குழியில் புதைத்து வைக்காமல் வங்கியில் போட்டு வைப்பவர் அதன் மூலமாக நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த ஒரு மறைமுக உதவியே செய்கிறார் என்பதும் சரிதான்.

சமூகத்தின் தன்மையால், ஒருவன் தான் மேற்கொண்ட தனக்கு விருப்பமான ப்ரொஃபஷனில், அறமற்ற செயல்களைச் செய்ய நேரும்போது என்ன நினைப்பான்? (உதாரணம், மக்களுக்குச் சேவை செய்ய மருத்துவம் படித்துவிட்டு வேலை செய்யும் கம்பெனிக்காக சிசேரியன், ஸ்கேனிங் போன்றவற்றை ஆதரிப்பது, மக்களுக்குச் சேவை செய்ய பொது வாழ்வுக்கு வந்து, வாக்கு பெறுவதற்கே மக்களுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருப்பது, மேலிடத்திற்காக பல தவறுகளைக் கண்டுகொள்ளாமல் அல்லது அதற்கு உடன்படுவது). 

# அடிப்படையில் யோக்கியமாக, தவறுகள் இழைக்காமல் இருக்க வேண்டும் என்கிற ஊக்கம் இருக்கிறவர்களுக்குக் கூட சில சமயம் அந்த நேர் வழியில் இருந்து சற்றுப் பிறழ வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுவதை நான் என் வாழ்க்கையிலேயே பார்த்திருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் நமது ஆசை சற்றே தலை தூக்கி, நம்மை சரியான வழியில் செயல்பட விடாமல் தடுப்பதையும் பார்த்திருக்கிறேன்.

பதின்ம வயதுவரை பெண் குழந்தையைவிட பையனைப் பிடிப்பதும், அதன் பிறகு பெண்ணின் மீது பையனை விட அதிகமாக பாசம் காட்டுவதும் இயல்பான ஒன்றா?   (இதை உடனே அரசியல் கேள்வின்னு நினைத்து, அன்புமணி, இராமதாஸ், மகள் வயிற்றுப் பேரன் என்றெல்லாம் கற்பனையை ஓட்டிவிடாதீர்கள்)

# ஒரு குழந்தையைப் பற்றிய அபிப்பிராயம் மற்றொரு குழந்தையை பற்றியதுக்கு மாறாக இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது. அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கும்.  ஆனால் அன்பு பாசம் என்பது,  ஒரு குழந்தையிடம் அதிகம் ஒரு குழந்தையிடம் குறைவு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

என்றாலும்,  விரைவில் திருமணம் ஆகி நமக்குக் கொஞ்சம் அந்நியப்பட்டுப் புக்ககம் போகப் போகிற பெண் என்பதால் மகள் மேல் பாசம் அதிகம் இருக்கிறதோ என்னவோ.‌

எல்லோரும் இயற்கைச் சூழலில் வாழ்வதற்கு ரொம்பப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே. அந்த மாதிரி இயற்கைச் சூழலில் நாம் இப்போது வாழ்வது என்றால், நமக்கு உடல்நிலை மிக fit ஆக இருக்கவேண்டும் அல்லவா? பிபி, ஷுகர், மற்றும் பலவற்றை வைத்துக்கொண்டு நாம் இயற்கைச் சூழலில் எப்படி வாழ்வது? (அவசரத்துக்கு நார்க்கட்டிலில் நான்கு பேர் தூக்கிக்கொண்டு, பல மைல் கடந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்)

# நாம் கற்பனை செய்வது பலவும் கற்பனை செய்யும் போது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அதுவே வாஸ்தவமாக ஆகும்போது அவ்வளவு நன்றாக இருக்குமா என்பது ஒரு பெரிய தேனும் பாலும் ஆறாக ஓடியது என்று சொல்லும் போது அதிலே எவ்வளவு மொய்க்கும் என்பதை நாம் மனதளவில் கற்பனை செய்து பார்ப்பதில்லை. இந்த இயற்கையோடு இசைந்த வாழ்வு என்பதும் அந்த மாதிரி ஒரு பொய்மான். கற்பனையில் மிக நன்றாக இருக்கும். உண்மையாக வரவழைத்துக் கொண்டாள் நூறு பிரச்சனைகள் நாம் எதிர்பாராதது எல்லாம் முன்னே வந்து நிற்கும். இதுதான் உலகம் இப்படியானது தான் வாழ்க்கை.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள, அந்தப் பெண்ணுக்கு முக்கியமாக என்ன என்ன தேவை? (மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அதனை ஏதோ மிகப் பெரிய தியாகம்போலச் சித்தரித்து செய்திகள் வருகின்றனவே அதனால் எழுந்த கேள்வி). அழகு முக்கியமா, உடற்தகுதி-மாற்றுத்திறானாளியாக இல்லாமலிருப்பது முக்கியமா?, ஸ்மார்ட்னெஸா? நன்கு வேலை செய்யும் திறமையா? நல்ல குணமா?  இல்லை தங்களை (பெற்றோர்) வயதான காலத்தில் பார்த்துக்கொள்வாளா என்ற அளவீடா? இல்லை பணமா?

# அழகு, பணவசதி, கைகொடுக்க உறவுகள், ஆரோக்கியம் எல்லாமே முக்கியம் தான். இதில் எது எது எவ்வளவு அமைகிறது என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்தது . இதில் மிக எளிதில் விட்டுக் கொடுக்கக்கூடிய அம்சம்  அழகு அடுத்து பண வசதி.‌

வாழ்க்கைத் துணை அமைவது இறைவன் கொடுத்த வரம், அல்லது நமது கர்மபலன் என்று திடமாக நம்புகிறவன் நான்.

சமீபத்தில் ஸ்ரீராம், பந்தியின் பரிமாறுவதைப் பற்றிய கருத்தில் //சாப்பிடுபவர்கள் தேவை இல்லாததை வேண்டாம் என்று சொல்லப் பழக வேண்டும்.  யார் வீட்டு காசோ என்பது போல வீண் செய்யக் கூடாது. // என்று எழுதியிருந்தார். கொஞ்சம் சாப்பிட்டுப் பார்க்காமல் எப்படி ஒன்றை வேண்டாம் என்று சொல்லமுடியும் நமக்கு அந்த ஐட்டம் பிடிக்காது என்று இருந்தாலொழிய.  கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு வீணாக்குவது அராஜகம். அதைக் குறிப்பிடவில்லை. அதுவும் தவிர, என்ன ஐட்டம் பரிமாறப்போகிறார்கள் என்று பார்ப்பதற்குள்ளேயே இலையில் வேகமாகப் பரிமாறிவிட்டால் என்ன செய்வது?

# இலைக்கு முன் உட்கார்ந்தவுடனேயே " ரொம்ப ரொம்ப கொஞ்சம் " என்று உணர்த்துவது போல கையை இலைக்குக் குறுக்கே வைத்துக் கொண்டு தான் நான் உட்காருவேன். எது பரிமாறினாலும் முதலில் மிகச் சொற்பமான அளவு போதும். நமக்கு பிடித்ததானால் அது நன்றாகவும் இருந்தால் பிறகு கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்ளலாம்.‌ போடாவிட்டாலும் பரவாயில்லை.  இதுதான் என்னுடைய பந்தி மனப் பாங்கு. 

இதிலே ஆபத்து என்னவென்றால்,  நாம் என்னதான் சொன்னாலும் எப்படி சொன்னாலும்,  இயந்திரத்தனமாக ஒரு கரண்டியில் எடுத்து வீசி விட்டுப் போய் விடுவார்கள்.  இது பல பந்திகளில் நான் சந்தித்த சவால்.

இன்றைய வெள்ளி பாடல் (விஜய்) கேட்டபின் எனக்கு எழும் கேள்வி. கதாநாயகன் 80 வயதானாலும் கதாநாயகனாக நடிக்கிறான், தனக்கு 20 வயதுப் பெண்ணை கதாநாயகியாகப் போடணும் என்கிறான். ஆனால் கதாநாயகிக்கு 35 வயதானாலே, கூசாமல் 70 வயது கதாநாயகனுக்கு அம்மா ஆக்கிடறாங்க. இது கொடுமையாகத் தெரியவில்லையா?

# நிச்சயமாகக் கொடுமைதான். ஆனால் படம் என்பது நியாய உணர்வுக்கான போஸ்டர் அல்ல. அது பணம் சம்பாதித்துத் தரக்கூடிய சாதனம்.  நாயகனை அவரது இமேஜ் காரணமாகவும் நாயகியை அழகு கவர்ச்சிக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.‌

நீங்கள் இயக்குநராகி, நடிகர் விஜய், ரஜினி போன்றோரை இயக்கினால், ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு கதாநாயகியாக நடித்த சங்கீதா, ராதிகா, ஹீரா போன்றோரை கதாநாயகியாக ஆக்குவீர்களா?

# நான் எடுக்கும் படம் தோல்வியடைய நானே ஏன் காரணமாக வேண்டும் ?

= = = = = =

& கேள்வி : என்னப்பா @CGSenu நெல்லை கேள்விகளுக்கு நீ ஒன்றும் பதில் சொல்லவில்லையே ! 

@CGSenu: நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! 

கே. சக்ரபாணி சென்னை. 

1.  ஒவ்வொரு  பறவைகளும்  ஒவ்வொரு  விதமாக  ஒலி எழுப்பி  எதையோ தெரிவிக்கிறது.  இதுவரை   யாரேனும். அந்த  ஒலிகளுக்கு  அர்த்தம். கண்டுபிடித்து, அவை என்ன  சொல்கின்றன  என்று கண்டுபிடித்திருக்கிறார்களா?  

# இது பற்றி விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.‌

& ஆம் - பறவைகள் எழுப்பும் ஒலி ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உள்ளது. 

இதை Penguin birdsworth  என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டின் தன்னுடைய புத்தகத்தில் பறவைகள் பாஷையிலேயே குறிப்பிட்டுள்ளார். 

அது இதோ : 

👈👥👼👹

💂💃💥

💘😊👿🙋

💩💃💙

👭💫😻  

இதில் கடைசி வரியின் அர்த்தம் : " பாம்பு மற்றும் பூனைகளிடம் எச்சரிக்கை தேவை - கவனமாக இருங்கள் பிள்ளைகளே (பறவைக் குஞ்சுகளே! ) 

2.  வெல்டிங்கிற்கும்    வெட்டிங்கிற்கும்  உள்ள    ஒற்றுமை  என்ன? 

# இரண்டுமே இணைப்புதான்.

& Wedding : Physical change. Temporary change. No heat, light and sound take place (even during fighting by the wife) 

Welding : Chemical change. Permanent change. Heat, light and sound occur during a chemical change. 

Chemical change and Physical change - lesson in my JTS days! 

= = = = = = = = = = = 
KGG பக்கம். 

பாண்டிச்சேரி பயணப் படங்கள். 

இந்த வாரத்துடன் பா சே பயணப் படங்கள் முடிவடைகிறது. 


கடலலைகளையும், நினைவலைகளையும் பின்னே ஒரு சுமையாக சுமந்துகொண்டு, பாண்டிச்சேரி விட்டுக் கிளம்பிய போது .. 

பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவன் அல்லது சிறுமி ஆற்றங்கரைக்கோ அல்லது கடற்கரைக்கோ சென்றால், தவறாமல் செய்யும் ஒன்று : மணலில் கோபுரம் கட்டுவது. 

நான் கட்டிய கோபுரங்கள் எல்லாமே நாகை கடற்கரையிலும் மற்றும் அந்தக் காலத்து காக்கா பிள்ளையார் கோவில் குளத்தின் கரையில் கொட்டி வைக்கப்பட்ட ஆற்று மணலிலும் நூற்றுக் கணக்கில் இருந்திருக்கும். 

எங்கள் பாண்டிச்சேரி பயணத்தில் நாங்கள் எல்லோருமே 11 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். 

ஆனாலும் அங்கே வேறு யாரோ - சிறு வயது ராஜராஜ சோழன் அல்லது சோழி கட்டியிருந்த கோபுரம் என் கண்ணில் பட்டது. ஒரே கோபுரத்தின் இரண்டு படங்கள். 



கடலோரம் மணலெடுத்து 
கவிதைகளா(ய்) வீடு கட்டி 
கம்பு நட்டு வேலி கட்டி 
கச்சிதமாய் மகிழ்ந்திருந்த 
காலங்களின் நினைவுகளுடன் .. 

பாண்டிச்சேரி பயணப் படங்கள் நிறைவு பெறுகிறது. 

= = = = = = = = = = = = =
படப் போட்டிகள் பற்றி .. 

கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே நாலு மாதங்கள் ஒரு தலைப்பு கொடுத்து, அதற்கான படங்கள் கேட்டு, அவற்றிற்கு வாசகர்களை வோட்டுப் போடச் சொல்லி , சில படங்களைத் தேர்ந்தெடுத்தோம். 

போட்டி என்று பெயரிட்டதால் அதில் பங்கேற்பதற்கு பலருக்கு தயக்கம் ஏற்பட்டது. ஒரு சிலர் மட்டுமே படப்போட்டியின் உண்மைத் தன்மை உணர்ந்து படங்கள் அனுப்பி வந்தார்கள். 

இனி வருகின்ற வாரங்களில், வாசகர்கள், தாங்களே ஒரு தலைப்பு அல்லது தீம் தேர்ந்தெடுத்து, (உதாரணம் : மேகங்கள், நிழல்கள், வித்தியாசமான கோணம் etc ) அதற்கு சில வரிகள் சேர்த்து படத்துடன் விளக்கம் அளிக்கலாம். அந்தப் படம் & வரிகள் பற்றி வாசகர்கள் கருத்துரைப் பகுதியில் தங்கள் கருத்துகளைப் பதியலாம். 

படம் அனுப்புபவர்கள், சுய படங்கள் (selfie) குடும்ப உறுப்பினர்களின் படங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். 

இன்றைய பதிவில் நான் எடுத்த ஒரு வித்தியாசமான படம் இடம்பெறுகிறது. 

நான் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றியுள்ள ஓடு(!) பாதையில் (jogging path ) நடந்தபோது ஒரு கொடுக்காப்புளி காய் / பழம் அதற்குப் பக்கத்தில் ஓர் இலை இரண்டும் கண்ணில் பட்டது. 


மனது அதை 💖U என்று படித்தது. 

உடனடியாக செயலில் இறங்கி, I என்பதைக் குறிக்க ஒரு குச்சி பிறகு ஒரு பூ என்று தரையில் அமைத்து, அதை படமாக எடுத்தேன். 

இதோ அது: 


இது வித்தியாசமான ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான். இதைப் பார்த்து நீங்க யாரும் இலை, பூ, பழம் என்று குச்சி எடுத்துக்கொண்டு ஓடாதீர்கள்! 

நீங்கள் அனுப்புகின்ற படம் + விவரம் engalblog@gmail.com என்ற email விலாசத்திற்கோ அல்லது 9902281582 (குரல் அழைப்புகள் ஏற்கப்படாது ) என்ற whatsapp எண்ணுக்கோ அனுப்பவும். 

= = = = = = = = = =

57 கருத்துகள்:

  1. எங்கள் பிளாக் பகுதிக்காக நீங்கள் I L U படத்திற்கு மெனெக்கிட்டது நன்று.

    கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுக்குப் பின்னால் ஒரு இளம் பெண் நடந்துவருகிறார் சிறிது தூரத்தில். நீங்கள் நகர்ந்த பிறகு அவள், இந்த ஆள் தரையில் என்ன செய்தார் எனப் பார்க்கிறாள். இந்த இரண்டையும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து (3-4 floor) ஒரு வேலையற்ற வம்புப் பேச்சுக்காரி கவனித்துக்கொண்டிருக்கிறாள். என்ன ஆகும்?

    இந்த வம்பு உங்களுக்குத் தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) இந்த வில்லங்கங்கள் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து, படம் எடுத்தவுடனேயே அதைக் கலைத்துப் போட்டுவிட்டேன்! நானும் தனுசு ராசி சார்!

      நீக்கு
  2. மணல் வீடு, நான் தாமிரவருணி ஆற்றின் மணலில் வீடு, அதைச் சுற்றி அகழி போலச் செய்து அதில் மீன் குஞ்சுகளை விட்ட காலத்தை நினைவுபடுத்தியது.

    அப்கோதெல்லாம் படித்துறையிலிருந்து ஆற்றுக்குப் போகும்போது, சலனமில்லாமல் இருக்கும் நீரில் வானம் முழுமையாகத் தெரிவது கண்டு நீரில் கால் வைக்க பயந்திருக்கிறேன், ரொம்ப ஆழமாக இருக்கிறதோ என நினைத்து

    பதிலளிநீக்கு
  3. பறவைகளின் ஒலிக்கு நிச்சயம் அர்த்தம் இருக்கிறது. அது அவர்கள் மொழி என நிச்சயம் நம்புகிறேன். சமீபத்தில் பல முறை காக்கை கூடு இருக்கும் மரங்களின் கிளையில் குயில் கூவுவதைக் கண்டிருக்கிறேன். தன் மனைவியைக் கூப்பிட்டு இங்கு வந்து முட்டையிடு, ஆள் யாரும் இல்லை என்று சொல்லுவதாகவே மனதில் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  4. //மிக எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடிய அம்சம் அழகு, பணம்//- ஒரு பெண் குணவதி என்பதும், அவளுடைய பெற்றோர், சகோதர்ர்கள் நல்லவங்க என்பதும் , சமையல் வீட்டைப் பார்த்துக்கொள்வது தெரிந்தவள், பொறுப்பானவள், ஊதாரியல்ல என்பதெல்லாம் பெண்ணைப் பார்க்கும்போது எப்படித் தெரியும்? அதனால இந்தப் பதிலில் உண்மைத் தன்மை இல்லை, எதிர்பார்ப்பின் ஆசைதான் இருக்கிறது என நினைக்கிறேன்.

    மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  5. பஃபே சிஸ்டம் பற்றியும் எழுத வேண்டியிருக்கிறது. உணவை வீணாக்குவது அநியாயம் அல்லவா? இல்லை, இலையை எறியும்போது மிச்சமுள்ளது யாருக்கேனும் உதவுவதால் தவறில்லையா?

    பதிலளிநீக்கு
  6. Wedding, welding ஒப்புமை சிறப்பு.
    'அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டதுண்டா?' என்னும் கேள்வியை யாராவது கேட்டார்களா? பதிலைக் காணோமே..??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்து விட்டது, சக்ரபாணி அவர்களின் கேள்விக்கு நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு.

      நீக்கு
  7. ​நெல்லையைத் தவிர மற்றவர்கள் கேள்வி கேட்பதை விட்டு விலகி விட்டார்களே! ஏன்? புதன் கேள்வி.

    இன்றைய கேள்வி பதில் ஒரு அரட்டை அரங்கமாக இருக்கிறது. வெல்டிங் வெட்டிங் கேள்வியின் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை எனலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்று

      நீக்கு
    2. // வெல்டிங் வெட்டிங் கேள்வியின் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை எனலாம்.// நீங்கள் எதிர்பார்த்த பதிலை இங்கே எழுதுங்க சார் !

      நீக்கு
    3. வெல்டிங், வெட்டிங் இரண்டும் ஒன்றல்ல. இரண்டு வெவ்வேறு செடிகளை ஒட்டி, அதன் மூலம் இரண்டு செடிகளின் குணங்களையும் கலந்த கனிகளை வரச்செய்வது திருமணத்தின் நோக்கம் (ஒட்டுமாங்கனி போன்று). வெல்டிங், இரண்டு துண்டுகளை நன்றாக இணைப்பது. வெட்டிங்-வளர்ச்சியை நோக்கி. வெல்டிங்-ஒரு பயனை நோக்கி.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. //பாம்பு மற்றும் பூனைகளிடம் எச்சரிக்கை தேவை - கவனமாக இருங்கள் பிள்ளைகளே..//

    அருமை

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது. ரசனையான கேள்விகள். அதற்கேற்ற நல்ல பதில்கள்.

    பாண்டிச்சேரி படங்கள் அருமை. கடலின் படங்கள் மனதில் மகிழ்வை தருபவை. என்றுமே மன நிறைவு. கடல் மண்ணில் யாரோ செய்த கோபுரங்கள் அழகாக உள்ளன. அருகே அதை எழுப்பிய சோழன்/ சோழியின் கால் பாதங்களையும் கண்டேன்.

    பரிசு போட்டியின் விபரங்கள் தங்களின் விபரமான முன்னோட்டம் பார்த்து/படித்து புரிந்து கொண்டேன். நானும் அப்படியே முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய தலைப்பு அருமை. முதல் வரிகளுடன் அந்தப் பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயுள்ளது. பறவை, விலங்குகளின் பாஷை அறிந்த மன்னர்கள் வாழ்ந்த உன்னத பூமி இது. இப்போது பறவைகளை நமக்கு இடையூறாக நினைத்து விரட்டும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. தேனும் பாலும் ஆறாக ஓடியது... இங்கு எழுதிவிட்டேனா எனத் தெரியவில்லை. எனக்கு இனிப்பென்றால் கொள்ளைப் பிரியம். எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். நான் 2-3ம் வகுப்பு படித்தபோது, தொண்டி கடற்கரைக்கு அப்பா கூட்டிச் சென்றிருந்தார். என்னிடம் கடல் நீர் ரொம்ப திதிப்பா இருக்கும், போய்ச் சாப்பிடு என்றார். (அப்போல்லாம் கதை கேட்பேன். பாற்கடல்லாம் தெரிந்துவைத்திருந்தேன்). ரொம்ப ஆர்வமா ஓடி பருகினால் உப்பு கரித்தது. ஏமாற்றமடைந்தேன். அங்கு அப்பாவுடன் தோணியில் சிறிது தூரம் (50 அடிகள் இருக்கலாம்) பயணம் செய்த நினைவு வருகிறது.

    அப்பான்னா எனக்கு அவ்வளவு பிரியம். அவங்க எனக்குச் செய்ததற்கு, நான் ஒரு கைம்மாறும் செய்ததில்லை. அண்ணன் தம்பி போல வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொன்னால் அது வெற்று சமாதானம். "உவத்த நீர் போல உற்றவர்க்கு ஒன்றுமிலேன்" என்பதுதான் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நாளா பாற்கடல்னு ஒண்டு இருக்கு, அது முழுவதும் பால் பாயாசத்தினால் ஆனது என நம்பிக்கொண்டிருந்தேன். அதற்குப் பதிலாக வெல்லப் பாயசமாக இருந்தால் எவ்வளவு அருமையா தித்திப்பாக இருக்கும் என எண்ணியதுண்டு (சிறு வயது நினைவு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா !! என்னுடைய சிறுவயது fantasy ஒன்று : உலகில் உள்ள கண்ணாடி எல்லாம் கற்கண்டாக மாறினால் எவ்வளவு நல்லா இருக்கும்!

      நீக்கு
  14. //உடலுழைப்பு செய்துகொண்டு// இந்தக் கேள்வியில் ஒரு த்த்துவம் இருக்கிறது. கிருஷ்ணர் சொல்கிறார், இயங்காமல் இருப்பதால் பாவச்சுழற்சியிலிருந்து விடுபட முடியாது (ஒன்றைச் செய்தால்தானே பாவம் புண்ணியம் சம்பவிக்கும். தனிமையிலேயே வாழ்க்கையைக் கழித்துவிட்டால் பாவமே வராதல்லவா என நினைக்கக்கூடாது) மனிதன் இயங்கிக்கொண்டே இருக்கணும், விளைவை என்னிடம் கொடுத்தவிடவேண்டும், அதாவது கிருஷ்ணார்ப்பணமாகவே அனைத்தையும் செய்யவேண்டும் என்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் கோமதி அரசு அவர்கள் வெளியூர்ப் பயணத்தில் இருக்கின்றார்களோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. ஆனால் facebook பதிவுகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு உள்ளார்.

      நீக்கு
    2. மகள் ஊரிலிருந்து வந்து இருக்கிராள், உடல் நலமும் இல்லை.

      facebook பழைய பதிவுகளை காட்டியது அப்படியே அதை ஷேர் செய்தேன்.
      புதிதாக ஒன்று போடவில்லை

      நீக்கு
    3. விளக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
    4. பதிவுக்கு போனிலிருந்து கருத்து போட முடியவில்லை.

      facebook ல் கருத்து , லைக் போட முடிகிறது அது தான் காரணம்.
      உடல் நிலையும் சரியில்லை.

      நீக்கு
    5. விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.

      நீக்கு
  16. நெல்லையின் முதல் கேள்விக்கு ஆசிரியரின் பதில் - யெஸ் அதேதான்.

    பணச் சுழற்சி மிக முக்கியம். GDP அப்போதான் நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா). என் அக்கவுண்ட் நம்பர் உங்களுக்கு அனுப்பியிருக்கேன். ஜிடிபி நல்லா இருக்க, உங்களால் ஆன பணச் சுழற்சி செய்யறீங்களா?

      நீக்கு
    2. ​GDP என்பது GD பார்த்தசாரதி. அவருக்கு பணம் அனுப்புவது தான் சுழற்சி. பணம் அனுப்பியாயிற்று.

      Jayakumar

      நீக்கு
    3. ஹாஹாஹா....நெல்லை, அது பத்தி எழுதணும்னா நிறைய விஷயங்கள் இருக்கு. ஒரு ஃபேக்டர் ஜிடிபி க்கு அவ்வளவுதான். வேறு பல இருக்கு.

      பணச் சுழற்சி along with increased economic activity (இதுல பேசவும் நிறைய இருக்கு. பி ஏ வகுப்பில் Monetary economics எடுத்த ஆசிரியை வகுப்பில் சின்ன கருத்தரங்கம் கருத்துரையாடல் , விவாதங்கள் என்று வைத்தது நினைவுக்கு வருது.

      கீதா

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. கேள்விபதில்கள் நன்று.

    பாண்டிச்சேரி கடலும் , மண்கோட்டையும் அழகாக இருக்கிறது.

    பறவைகளின் பாஷை புரிந்தால் ரசனையே. எங்கள் வீட்டில் உணவு உண்ண வரும் காகங்கள், புறாக்கள், கொண்டைக்குருவி, கருக்குருவி அணில்கள், இவற்றின் பாஷைகளை ரசிப்பதுண்டு. உணவை பார்த்துவிட்டு ஜோடியை அழைப்பது, குஞ்சுகளை அதட்டி வைப்பது என அழைப்புகள் வித்தியாசமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. பாண்டிச்சேரி படங்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றன.

    மணற்கோபுரங்கள் படங்கள் அழகு கூடவே எத்தனையோ நினைவுகள் நான் அமைத்த கோபுரங்கள் நான்கு பக்கமும் அடியில் ஓட்டை போட்டு அழகான கூழாங்கற்கள், சிப்பிகள் வைத்து தோரணம் போன்று வாயில் அமைத்து கோபுரத்தின் உச்சியிலும் வடிவமைத்து என்று விளையாடிய நினைவுகள் ஆற்றின் கரையில், சிறிய வயதில்

    அதன் பின் மகன் வந்த பிறகும் ஆற்றின் கரையிலும் கடற்கரையிலும் இருவரும் விளையாடுவோம் அழகு படுத்தி என்று...நிறைய நினைவுகள்.

    நீங்களும் சிறுபிள்ளையாகி இருப்பீங்க, கௌ அண்ணா இல்லையா!? இந்தப் பயணத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சந்தோஷமாக இருந்தன வருடத்தின் கடைசி மூன்று நாட்கள்.

      நீக்கு
  20. பறவைகளின் ஒலிக்குக் கண்டிப்பாகப் பொருள் உண்டு. விலங்குகள் பறவைகள் ஏன் இயற்கையின் ஒலிகள் அனைத்திருக்கும் உண்டு.

    விலங்குகள் பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு அதுதானே பயன்படும்.

    கூடவே மனிதர்களுடனும் அவை சம்சாரிப்பதுண்டே தங்கள் உடல் மொழி, சத்தம் இவற்றால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும் பதில்களும் அருமை.
    பட போட்டிக்கு இப்படி அனும்பலாம் என்று கெளதமன் சார் எடுத்த படங்கள் நன்று.

    நேரம் கிடைக்கும் போது பதிவு பக்கம் வருவேன். ஜூலை வரை இப்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் விளக்கத்திற்கும் நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!