10.6.25

சிறுகதை : ஷ்யாம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

 

ஷ்யாம்

பானுமதி வெங்கடேஸ்வரன்.  

வீடே சோகத்தில் மூழ்கி கிடந்தது. ஷியாம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். லேசான மாரடைப்பாம்.   

இரண்டு மாதங்களுக்கு முன் அவனைப் பார்த்த மருத்துவர் அவன் வெயிட்டை குறைக்க வேண்டும், எடை அதிகம் என்றார். கண்டிப்பாக வாக்கிங் செல்ல வேண்டும்  என்றார். வெறும் நடைபயிற்சி மட்டும் போதாது என்று, ஒரு உடற்பயிற்சியாளரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி பயிற்சிகளை கற்றுக் கொடுத்து, செய்ய வைத்தார்கள். உணவிலும் கட்டுப்பாட்டை கொண்டு வந்ததில் எடையை குறைத்திருந்தான். இருந்தாலும் இப்படி... 

தாத்தா இப்படி அழ ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. தாத்தாவுக்கு அவன் வெகு செல்லம். அவனோடு விளையாடுவதென்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதிகப்படி பாசத்தை வைத்து விட்டார். இப்போது தாங்க முடியவில்லை.

பாட்டி கேட்கவே வேண்டாம், கன்னத்தில் கை வைத்தபடி முற்றத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆஸ்பத்திரிலியிலிருந்து நல்ல செய்தி வர வேண்டும் என்ற கவலை

முரளிக்கும் வீட்டிற்குள் போக மனம் வரவில்லை. உள்ளே சென்றால் ஷ்யாம் வளைய வந்த இடங்கள் அவன் நினைவை எழுப்புகின்றன. ஊருக்குள் எல்லோருக்கும் வரும் கொடிய வியாதிக்கு அவனும் ஆளாகி விட்டானோ? கவலை மனதை அரித்தது.   

"கவலைப் படாதே! நாய்க்கெல்லாம் கோவிட் வராது, அவை கேரியர் ஆகத்தான் இருக்கும். தவிர ஷ்யாம் இப்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டான்". என்று அப்பா தேற்றியதும் முரளி மனதில் அமைதி பரவியது.  

(பி.கு.: மத்யமரில் மூன்று புகைப்படங்கள் கொடுத்து அதற்கு பொருத்தமாக கதை எழுதச் சொல்லியிருந்தார்கள், அதற்கு எழுதப்பட்ட கதை.)

20 கருத்துகள்:

  1. முதல் கமென்டே இப்படி இருக்கக்கூடாது. என்ன பண்ண?

    நல்லதொரு கதை படிக்கலாம் என நினைத்தால் கடியாகிவிட்டதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஒரு பக்க கதையின் இலக்கணத்தை நான் மீறவில்லை என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  2. இந்தப் படங்களை வைத்து விரைவில் நான் கதை எழுத முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களால எல்லாம் டக்டக்குனு எழுத முடிகிறதே நெல்லை, அதுக்கே பாராட்டணும்.

      மீக்கெல்லாம் ம்ஹூம்....சுத்தமாக வருவதில்லை.

      கீதா

      நீக்கு
    2. நினைத்தால் எழுத முடியும், ஆனால் கதையின் ஓரிடத்தில் நின்றுவிடும், முழுமை பெறாது. அதுக்கு கதை எழுதும், நிறைய யோசிக்கும் திறமை வேண்டும். அது மீக்கு இல்லை. பாதி சொல்வோம் மீதி என்ன என்ற நிலையில் முடிந்துவிடும்.

      நீக்கு
    3. இந்தப் படங்களுக்கேற்ற கதை அழகா எழுதுங்க நெல்லை. வாழ்த்துகள். காத்திருக்கிறேன்.

      ஆனால்,

      இந்தப் படங்களுக்கு எழுதப்ப கதை அல்ல இது. அவை வேறு படங்கள். இந்த படங்கள் இந்தக் கதைக்கு தயாரிக்கப்பட்ட படங்கள்!!

      நீக்கு
  3. பானுக்கா, டிப்பிக்கல் குமுதம்ல வரும் ஒரு பக்கக் கதை போல, ட்விஸ்ட் வித் பல்ப்!!!!!!!! அந்த வகை ஜெர்னர்!

    கதையில் கொஞ்சம் ஒரு விகிதம் தான்...நிறையனு இல்லை.... மறைமுகமான ஒரு கேலி/சர்க்காசம் மறைஞ்சிருக்கோ!!!!!!!!??

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    ஒருபக்ககதை நன்றாக உள்ளது. படங்களுக்கேற்றபடி சுருக்கமாக இறுதியில் ட்விஸ்ட் வைத்து எழுதியது சிறப்பு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  5. கதையின் கற்பனை நல்ல திருப்பம். கடியானாலும் பாராட்டுக்கள்.
    கேரளா தீரத்தில் ஒரு கப்பல் கவிழ்ந்ததிற்கும் ஒரு கப்பல் எரிந்ததிற்கும் வினையாக மூன்று பேரும் கன்னத்தில் கை வைத்து கவலைப்படுகிறார்கள் என்று நினைத்தேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைத்து கவலைப்படக் கூடாதென்பது மூத்தோர் முது(பழ) மொழி.

      நீக்கு
    2. கப்பல் கவிழ்ந்தாள் கன்னத்தில் கை வைக்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கியது யார்?!!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. இது கண்டிப்பாக நாம்தான் போலும்.! பழமொழியை திருத்தி பழையமொழியாக்குவதே நம் வழக்கமாயிற்றே..! (இங்கு, நாம், நம் என்பது மாறிவரும் இந்த இளைய கலாச்சாரத்தை குறிப்பிடுவதாகும். மற்றபடி யாரையும் குறிப்பிடவில்லை. ) ஆனால் அந்த மூத்தோரின் அனைத்துப் பழமொழிகளும், கூர்ந்து கவனித்தால், சில ஞானமார்க்கம், சில அஞ்ஞானம், பல விஞ்ஞானம் போன்றவற்றை சார்ந்திருக்கும்.

      நீக்கு
    4. நன்றி ஜே.கே.சி. சார். ஒரு பக்க கதையின் ட்விஸ்ட் உங்களுக்கெல்லாம் கடி என்று ஏன் தோன்றுகிறது? நான் நேற்றே உங்களுக்கும் பதில் கொடுத்திருந்தேன். அதைக் காணோமே??

      நீக்கு
  6. ஆகா! கதை முடிவு ட்விஸ்ட்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. உள்ளே சென்றால் ஷ்யாம் வளைய வந்த இடங்கள் அவன் நினைவை எழுப்புகின்றன.//

    கதை நன்றாக இருக்கிறது. மேலே உள்ள வரிகளை படித்தவுடன் வளர்ப்பு செல்லத்தைப்பற்றி தான் கதை என்று தெரிந்து விட்டது.
    பானு சின்ன கதையை அழகாய் சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  9. //மேலே உள்ள வரிகளை படித்தவுடன் வளர்ப்பு செல்லத்தைப்பற்றி தான் கதை என்று தெரிந்து விட்டது.//வாசிப்பு அனுபவம்! மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!