13.6.25

பொன்னை விரும்பும் பூமியிலே இறைவன் இருக்கின்றானா

 பொன்னை  விரும்பும் பூமியிலே       ;       இறைவன் இருக்கின்றானா 

ஆலயமணி திரைப்படம் 1962 ல் வெளியான படம்.  சிவாஜி எஸ் எஸ் ஆர் சரோஜா தேவி முதலானோர் நடித்த படத்தை கே ஷங்கர் இயக்க, கண்ணதாசன் பாடல்களை எழுத, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.

பாடல்கள் யாவுமே ஹிட்.

இந்தப் பாடலில் ஒருமாதிரி சுயபரிதாபம் தெரிந்தாலும் ரசிக்க வைத்த. ரசிக்க வைக்கும் பாடல்.

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவன் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

பறந்து செல்லும்
பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை
அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே


======================================================================================== 




1950 ல் வெளியான படம் பொன்முடி.  பாரதிதாசன் எழுதிய 'எதிர்பாராத முத்தம் எனும் கவிதை நடை கதையை இந்தப் பெயரில் படமாக்கினார்கள்.  எல்லிஸ் ஆர் டங்கன் இயக்குனர்.  அயல்நாட்டு பாணியில் துணிச்சலாக காட்சிகளை எடுத்த அவருக்கு பத்திரிகைகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இளைஞர்கள் பொன்முடி படத்தின் நெருக்கமான காதல் காட்சிகளில் சொக்கிப் போனார்கள்.  நரசிம்மபாரதியும் மாதுரி தேவியும் படத்தின் நாயக நாயகியர்.  கடற்கரையில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று நெருக்கமானதாக கருதப்பட்டதாம் அப்போது.  கடற்கரையை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்திலேயே செட் போட்டு எடுத்தார்களாம்.

இப்போது வரும் படங்களை என்ன சொல்ல?!!

===========================================================================================

இறைவன் இருக்கின்றானா என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் இந்தப் பாடல் இடம்பெற்ற படம் ப. நீலகண்டன் இயக்கத்தில் 1966 ல் வெளியான அவன் பித்தனா திரைப்படத்தில் கண்ணதாசன் எழுத்தில் வந்தது.  இசை ஆர்.  பார்த்தசாரதி.

S S ராஜேந்திரன் அநியாயத்துக்கு நடிக்க முற்பட்டிருக்கிறார்.  துடிக்கிறார்!  அதற்கு விஜயகுமாரி தேவ்சலாம்.  இல்லை, இல்லை பின்னர் அவரும் துடிக்கிறார்!

TMS  : இறைவன் இருக்கின்றானா……
இறைவன் இருக்கின்றானா…
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்

TMS  : நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை

P. சுசீலா  : மனிதன் இருக்கிறானா… ஆ….ஆ…..
மனிதன் இருக்கிறானா…..ஆ….
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்

P. சுசீலா : நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை

குழு : …………………………….

P. சுசீலா : கண்ணிலே உறுதி இல்லை
காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த
மறு நாள் இருக்கவில்லை
குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம்
கூடினால் பல மனது

P. சுசீலா: மனிதன் இருக்கிறானா… ஆ…

TMS  : பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று
கண்ணாடி காட்டுதடி

TMS  : இறைவன் இருக்கின்றானா… ஆ…

P. சுசீலா : ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்

P. சுசீலா : மனிதன் இருக்கிறானா… ஆ…

TMS  : சந்தேகம் பிறந்து விட்டால்
சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை

TMS  : இறைவன் இருக்கின்றானா……ஆ….

P. சுசீலா : மனிதன் இருக்கிறானா……ஆ….

TMS  : இறைவன் இருக்கின்றானா…
மனிதன் கேட்கிறான்

P. சுசீலா : அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்  எங்கே… வாழ்கிறான்…


==========================================================================================

26 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி. வாங்க கமலா அக்கா! வணக்கம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    .இன்றைய பாடல்கள் தலைப்பைப்பார்த்ததும், இருபாடல்களுமே மனத்துள் ஓடியது. ஆனால், தலைப்பை சேர்த்து படிக்கும் போது இது வேறு ஒரு பாடலாக இருக்குமாவென ஒரு விநாடி யோசித்தேன்.

    முதல் பாடல் இறை நம்பிக்கை, இரண்டாவது இறைவன் உள்ளானார் என்ற அவநம்பிக்கை. படத்திற்கேற்றவாறு கண்ணதாசன் அவர்கள் எழுதியிருக்கிறார். இரண்டையும் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்போதும் கொஞ்சம் கேட்டேன். பிறகு முழுதாக கேட்கிறேன்.

    பொன்முடி" என்றொரு படம் வெளி வந்ததை அறியேன் பகிர்ந்த இருபாடல்களிலுமே நடித்த நால்வருமே நல்ல உணர்ச்சிவசப்பட்ட ந(து)டிப்புத்தான். :)) இப்போது இந்தமாதிரி பாடல்களும் இல்லை. நடிப்பும் இல்லை.. இருப்பினும் அனைவரும் சொக்கித்தான் போகிறார்கள். படங்களைப் பற்றிய தகவல்களுக்கும், மற்றும், நல்ல பாடல்களை பகிர்ந்தமைக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடலின் வரிகளும், அந்த வரிகளுக்கு தெரிவு செய்யப்பட டியூனும்..  ரொம்பப் பொருத்தம்.  ராகம் எல்லாம் கீதா வந்து சொல்வார்.  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. ஆமாம், ஸ்ரீராம். ஆனா ராகம் டக்குனு தெரியலை...ரொம்ப ஆராயணும் போலத் தோன்றுகிறது.

      சினிமா பாட்டு எல்லாத்துக்கும் டக்குனு சொல்ல முடியாதுதானே. அவங்க கீ போர்டில் ஒரு சில ராகங்கள் கலந்து போடுவதுதானே!!!!! அவங்க என்ன ராகம் நினைச்சு போடுறாங்களோ? தெரியாது....

      ஆனா நாம மண்டைய பிச்சுக்கிட்ட்டு ஆராய்ச்சி செய்து....இதுஇந்த ராகமாத்த்டான் இருக்கும்....ஆஹா என்னமா போட்டிருக்கார் பாருன்னு....
      .அந்த இடத்துல மட்டும் வேறு வருது...அடுத்தாப்ல வேற ஒன்று போய்ட்டு டக்குனு ஒரிஜனலுக்கு வந்துவிடுகிறார் பாரு....என்னமா இப்படி ராகங்களைத் தொட்டு கடைசில அந்த ராகத்துக்கே வந்து....ஒரே ஒரு நோட்தான்...அதை மாத்திப் போட்டு....என்னமா போடுறாங்க பாருன்னு வியந்து.!!!!!!!....ஹாஹாஹாஹா...

      இப்படி ஆராய்ந்து பல இருக்கு வீடியோக்கள் இதெல்லாம் இசை அமைச்சவங்க பார்ப்பாங்களா? இதுவரை நான் அறிந்து இசை அமைச்சவங்க இது பத்தி பேசினதில்லை. அதாவது ராகம்னு சொல்லி.

      ஸ்ரீராம் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கலாம். இசையமைப்பாளர்கள் தாங்கள் என்ன ராகத்துல போட்டிருக்கோம்னு சொல்லியிருக்கும் வீடியோ, அல்லது செய்தி ஏதாச்சும் இருக்கான்னு சொல்லுங்க தெரிஞ்சா...

      கீதா

      நீக்கு
  3. ஆலயமணி பாடல்களை எப்படி மறக்க இயலும்? பொன்னை விரும்பும்... மிக அருமையான பகிர்வு

    இறைவன் இருக்கின்றானா.... மனக் கஷ்டம் துன்பம் இருக்கும் நேரத்திலெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடலையும் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    இரண்டு பாடல்களும் சூப்பர். பொன்முடி படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  இரண்டு பாடல்களுமே அப்போது ரேடியோவில் பலமுறை ஒலித்தவை இல்லையா?  குறிப்பாக இலங்கை வானொலியில்!   

      பொன்முடி 1949 ஆம் ஆண்டு வெளியான படம்.  நரசிம்மபாரதி, மாதுரி தேவி நடித்தது.

      நீக்கு
  4. /அப்போது. கடற்கரையை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்திலேயே செட் போட்டு எடுத்தார்களாம்./

    கடற்கரையை ஸ்டியோவில் செட் போடுவதென்றால், எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். இந்தப் படம் கிடைத்தால் பார்க்கலாம். மற்ற பாடல்களின் படங்களை முன்பு தொலைக்காட்சி உபயத்தில் பார்த்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ இருக்கிறது லிங்க்!
      https://www.youtube.com/watch?v=ix3PCkeofKY

      நீக்கு
    2. ஐயையோ.. படத்தை முழுவதும் பார்த்துவிட்டு தவைவலி என்று இரண்டு நாட்கள் இணையத்துக்கு வராமல் இருந்துவிடப்போகிறார்

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. அப்படி முழுவதும் பார்க்க மாட்டேன். போரடித்தால் நிறுத்தி மறுபடி ஓர்நாள் பார்ப்பேன். அப்படித்தான் பல படங்கள் பெண்டிஙில் இருக்கின்றன.

      நீக்கு
  5. படத்தின் லிங்க் தந்தமைக்கு நன்றி. நானும் கூகுளில் சென்று படத்தைப்பற்றிய வேறு பல விஷயங்களை பார்த்து வந்தேன். பொன்முடி படத்தை இயக்கிய( எல்லீஸ் டங்கன்) அமெரிக்கரின் விபரத்தை அறிந்து வந்தேன். அவர் இயக்கிய பல படங்கள் நூறு நாட்களை கடந்து ஓடியுள்ளது. (அதில் பக்தமீரா படமும்) உங்களின் படங்கள் நினைவூட்டலில் அறியாத பலவிஷயங்களை அறிய முடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. இந்த ஆர்வம் எனக்கும் சந்தோஷம் தருகிறது.

      நீக்கு
  6. பதில்கள்
    1. முத்துக்குமரா சரணம்!  வாங்க செல்வாண்ணா வணக்கம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    நீங்கள் தந்த லிங்கில் சென்று ஒரு பார்வை பார்த்தேன். படம் தெளிவாகத்தான் உள்ளது. மதியம் வாக்கில் நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டும். எனக்கு பழையகால படமென்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இது பார்க்காத அறியாத படம். (மேலும் நான் பிறப்பதற்கு முன்பே வந்த படம்.)

    ஆரம்பத்தில் டைட்டில் பெயரில் கதை பாரதிதாசன் என மட்டுந்தான் வருகிறது. படத்தின் பின் கதையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும் சிறு மாற்றத்துடன் எழுத வைத்து அதையும் இணைத்திருப்பதாக செய்தி படித்தேனே ..! அவரின் பெயர் காணோமே..!

    படம் எடுத்தவுடன் (ஆரம்பமாக) கடற்கரை (அது செட்டிங் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை) பகுதிதான் வருகிறது. (என் ஆர்வம் காரணமாக உங்களையும் இந்தப்படத்தை எப்போதாவது நேரம் கிடைக்கும் போது பார்க்க வைத்து விடுவேன் என நினைக்கிறேன். ஹா ஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானா?  ஹா...   ஹா..  ஹா..    வாய்ப்பேயில்லை!  பாரதிதாசன் கவிதையாக எழுதி இருந்ததை கருணாநிதி (அப்போது அவர் பத்தோடு பதினொன்று.  புகழ் பெறவில்லை) வசனம் எழுதி இருந்தார் என்று படித்த நினைவு!

      நீக்கு
  8. இந்த வாரம் கமலஹாசனின் நேயர் விருப்பம் போல் உள்ளது. பள்ளி காலத்தில் ஆலயமணி பாடல்களை பாடிக்கொண்டே பள்ளிக்கு சென்றது உண்டு.

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடல் ரொம்பப் பிடித்த பாடல். அருமையான இசை, மெட்டு. படம் பார்த்ததில்லை ஆனால் பாடல் நிறைய கேட்டதுண்டு. டி எம் எஸ்ஸின் குரலில் அருமையான பாடல்.

    இப்பவும் கேட்டுக் கொண்டே கருத்து. இன்டெர்லூட் அருமை.

    பிருந்தாவன் கார்டன் போல காட்சி எடுக்கப்பட்ட இடம். அப்பலாம் ஆ ஓ னா பிருந்தாவனுக்கு வந்துவிடுவாங்க போல!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவது பாட்டும் கேட்டிருக்கிறேன் ஆனால் முதல் பாடல் அளவு இல்லை.

    இரண்டாவது பாடலின் முதல் வரியைக் கேட்டதும் டக்குனு கமல் டயலாக் நினைவுக்கு வந்தது!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டுபாடல்களுமே நாம் சிறுவர்களாக இருக்கும்போது இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் கேட்டிருக்கிறேன். எனது சகோதரர் ஒருவர் பாடல் ஒலிக்கும் போது சேர்ந்து பாடுவார்.

    நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பொன்முடி படம் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டவை, இலங்கை வானொலியிலும், பழைய பாடல்கள் தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பும் போதும் கேட்டு இருக்கிறேன்.

    இன்றும் இரண்டு பாடல்களையும் கேட்டேன்.

    பொன்முடி படம் பழைய படம் தொலைக்காட்சியில் வைத்த போது பார்த்து இருக்கிறேன். மறந்து போய் விட்டது கதை. பாரதி தாசன் கதை முன்பகுதி, பின் பகுதி மு. கருணாநிதி கதை என்று சொல்கிறது விக்கிப்பீடியா

    பதிலளிநீக்கு
  14. பொன்முடி படம் சுட்டி கொடுத்து இருக்கிறீர்கள் பார்க்க வேண்டும்.
    மாதுரி தேவி இரு வேடங்களில் நடித்த ஒரு படம் பார்த்தேன். நன்றாக நடித்து இருந்தார்.

    மந்திரி குமாரியில் நடித்து இருப்பார். வாராய், நீ வாராய் பாடலில் பார்த்து இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. பொன்முடி படத்தை ஓட்டி பார்த்து கதையை நினைவு படுத்தி கொண்டேன். அந்தக்காலத்தில்(1949) தைரியமான பெண்ணாக கதாநாயகியை படைத்து இருப்பது மிகவும் வரவேற்க பட்டு இருக்கும்.

    ஒருவர் மட்டும் அருமையான படம் என்று கருத்து சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நானும் இந்தப்படத்தை இன்று மதியம் சொன்னபடிக்கு பார்த்து விட்டேன். மாதுரி தேவி அழகாக இருக்கிறார். படம் நன்றாக இருந்தது. நீங்களும் ஏற்கனவே பார்த்து ரசித்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!