மசூர் தால் ப்ரெட்
தேவையான பொருள்கள்:
மசூர் தால் - 2கப்
சமையல் எண்ணெய் - 3/4 கப்
உப்பு - 1 1/2 டீ ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீ ஸ்பூன்
பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள்(optional) - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மசூர் தாலை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து வடிய வைக்கவும்.
தண்ணீர் நன்கு வடிந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்க வேண்டும். அரைக்கும் பொழுதே எண்ணெயை ஊற்றி அரைக்கலாம்.
அரைத்த மாவில் உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி, ப்ரெட் லோஃப் செய்ய பயன்படும் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பர் போட்டு, அதில் ஊற்றி, பூசணி,சூரியகாந்தி விதைகள் மேலே தூவி, ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில்(pre heated oven) 350 டிகிரி ஃபாரன் ஹீட்டில் அரை மணி நேரம் பேக் பண்ணவும்.
ட்ரேயை வெளியே எடுத்த பிறகு ஒரு குச்சியால் குத்தினால் அதில் மாவு ஒட்டக்கூடாது. அப்படி வரும் பொழுது ட்ரேயை வெளியே எடுத்து, ஆறியதும் பார்ச்மெண்ட் பேப்பரை எடுத்து துண்டுகள் போடலாம்.
சுவைக்க கிட்டத்தட்ட நம் அடை போலத்தான் இருக்கிறது. காரம் கிடையாது. என் மகள் செய்த பொழுது, "உன்னுடைய எங்கள் பிளாகிற்கு அனுப்பலாமே" என்றாள், அனுப்பி விட்டேன்.

முருகா சரணம்
பதிலளிநீக்குகுவைத்தில் இருந்த போது இதனை அதிகமாகப் பயன்படுத்தி விட்டேன்... அதன் விளைவாக இன்னும் வேதனை...
பதிலளிநீக்குயூரிக் அமிலத்தை இரத்தத்தில் அதிகரிப்பதாக செய்திகள்...
இத்துடன் பேக்கிங் சோடா வேறு!...
வாங்க துரை சார். மசூர்தால் உடலுக்கு நல்லதிலிலை என்றார்கள். பிறகு நல்லதூ என்றும் செய்திகள் வந்தன. கருத்துக்கு நன்றீ.
நீக்குபேக்கிங் சோடாவினால் பேக்கரிப் பொருட்களை முழுமையாக கைவிட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன...
பதிலளிநீக்குசாதாரண வடையில் கூட பேக்கிங் சோடாவைப் போட்டு உள்ளூர் சமையல் விஞ்ஜானிகள் ( விஞ்ஞானி) கை வரிசையைக் காட்டுகின்றனர்...
பதிலளிநீக்குமசூர் தால் இதுவரை உபயோகித்ததில்லை. உடலுக்கு நல்லதல்ல என்று எங்கோ படித்த நினைவு.
பதிலளிநீக்குஇது எண்ணெயில்லாத, பேக்கிங் செய்த அடை போலத் தோன்றுகிறது. இதில் காரம் சேர்க்காத்தால் கொஞ்சம் சப் என்று இருக்குமா?
ஆனால் இதன் செய்முறையைப் பார்த்தால் அடை மாவையே (தண்ணீர் விடாமல் அல்லது மினிம்ம் விட்டு, அரிசி இல்லாமல்) கோஸ் போன்றவற்றைக் கலந்து செய்யலாமோ என யோசனை வருகிறது.
ஆம். தங்களின் செய்முறை எண்ணெயில் பொரிக்காத குணுக்குப் போல இருக்குமோ? இருப்பினும் இதற்கு துணைப்போக எங்கள் வீட்டில் "அவன்" இல்லை.
நீக்குஇப்போதெல்லாம் அவனுக்குப் பதில் மணல் போட்ட இலுப்புச் சட்டியோ இல்லை குக்கரோ உபயோகிக்கிறார்கள் எனப் படித்தேன். இருந்தாலும் குனுக்கு போல வருமா?
நீக்குகமலா ஹரிஹரன் மேடம்.. நேற்றுதான் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என் அம்மா உளுந்து, வெல்லம் சேர்த்து அரைத்து எண்ணெயில் உருண்டையாகப் பொரித்தெடுப்பதையே குனுக்கு என்பார். அடைபோன்ற மாவில் பொரித்தெடுத்து என் அம்மா செய்த நினைவுல்லை.
வெறும் உளுந்தும், வெல்லமுமா? எண்ணெய்யில் போட்டதும் அழன்று போகாதா? ஆனால், நல்ல செய்முறை. சாப்பிட மிருதுவாக இருக்குமென தோன்றுகிறது. . கூடவே கொஞ்சம் அரிசியையும் சேர்ததரைத்தால், அது கார்த்திகை தீபமன்று செய்யும் அப்பமாகி விடும். .
நீக்குஅடை மாவில் செய்வதை தான் எங்கள் வீட்டிலும் குணுக்கு என்று சொல்வார்கள். குணுக்கு என்றாலே காரம் தான் நினைவுக்கு வருகிறது! இனிப்பில் இதுவரை குணுக்கு பார்த்ததில்லை ; சுவைத்ததில்லை.
நீக்குஎன் அம்மா வீட்டில் குனுக்கு என்றால் இனிப்பு. எள்ளுச்சாதமும் வெல்லம் சேர்ப்பதால் இனிப்பா இருக்கும். மனைவி வீட்டில் இரண்டும் காரம்
நீக்குக.ஹ. மேடம் .. சிறிது அரிசி மாவும் சேர்த்திருப்பார்கள். ரெசிப்பி தெரியாது
நீக்குஅவன் அவன் என்று குழப்பிக் கொள்வதை விட ஒவன் என்றே சொல்லிடலாம்னு எனக்குத் தோன்றும்!!!! கமலாக்கா ஒவன் தேவை இல்லை, கல் உப்பு இல்லைனா மணல் சட்டியில் பரப்பி அதில் லைட் வெயிட் பாத்திரம் வைத்தும் செய்யலாம்.
நீக்குநெல்லை, இனிப்புக் குனுக்கு என் பாட்டி செய்வார். உளுந்து ஒரு கப் நா ஒரு டேபிள் ஸ்பூன் ப அரிசி இல்லைனா இட்லி அரிசி ஊற வைத்து நன்றாக வடைக்கு அரைப்பது போல் அரைத்து, ஆனால் கெட்டியாக, தேங்காய் துருவல் அல்லது, தேங்காயை சின்னதாகக் கீறிக் கொண்டு போட்டு பொரிக்கலாம்.
வீட்டில் பெண்கள் வயதுக்கு வந்த போது பாட்டி இதைச் செய்ததுண்டு.
வேறு சில சமூகத்தில் உளுந்தக் களி செய்வது போல்....
கீதா
ஒரு கப் உளுந்துக்கு அரை கப் வெல்லம் சொல்ல விட்டுப் போச்சு
நீக்குகீதா
வெல்லம் சேர்த்து அரைக்கும் போது நீர் விட்டுக் கொள்ளும் என்பதால் சாதாரணமாக வடைக்கு அரைக்கும் போது நீர் தெளிச்சு செய்வோம் இல்லையா அப்படி இல்லாமல் வெல்லம் சேர்த்த பின்னும் மாவு வடை மாவு போல இருக்காப்ல அரைச்சுக்கணும்
நீக்குகீதா
ஆம், காரம் சேர்க்காத அடை போலத்தான் இருந்தது. ராஞ்ச் எனப்படும் தயிர் போன்ற ஒன்றொடு சேர்த்து சாப்பிட நன்றாக இருந்தது.
நீக்குஎன்ன இருந்தாலூம் நம்முடைய அடை ஆகாது.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான மசூர்தால் பிரெட் நன்றாக வந்துள்ளது. சுவையாக இருக்குமென்று தோன்றுகிறது. இந்த மசூர்தாலில் எப்போதாவது மதிய உணவுக்கு காய்கறி கூட்டுக்கள் செய்துள்ளேன்.
மசூர்தாலில் மைசூர்பா ஒரு தடவை செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டே உள்ளேன். அதற்கான நேரம் அமையவில்லை. இப்படியும் பிரெட் வகைகளுக்கு இந்த மசூர்தாலை கொண்டு செய்யலாம் என தெரிந்து கொண்டேன். ஆனால், "அவன்" இப்போதைக்கு எங்கள் வீட்டில் வாங்கவில்லை. ஆனால், "அவன்" நினைத்தால் இதைச் செய்து பார்க்க வாய்ப்பு உண்டு. இதை இங்கு பதிவிட உதவிய தங்கள் மகளுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Red Lentil எனப்படும் இது பிரச்னைக்குரியது. ..
பதிலளிநீக்குவளைகுடா நாடுகளில் இது பிரபலம்...
சுத்திகரிக்கப்பட்ட நீரில் இது மிக எளிதாக வெந்து விடும்...
நம்ம ஊர் துவரம் பருப்பு பெப்பே தான்!..
சாதாரணமாக பச்சை பயறை அரைத்து ஆவியில் வேக வைத்து செய்யும் சீராளன் கறி என்ற பதார்த்தம் போல் உள்ளது.
பதிலளிநீக்குJayakumar
:))
நீக்குபா வெ கனடாவில் இருப்பதால் அந்த ஊர் canadian red lentils உபயோகித்து ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குJayakumar
இதை செய்தது என் மகள். நான் எ.பி.க்கு சமையல் குறிப்புகள் அனுப்புவதால் எனக்கு படங்கள் எடுத்துக் கொடுத்தாள்.
நீக்குபானுக்கா end product நல்லா வந்துருக்கு.
பதிலளிநீக்குஅடுத்த முறை, இயற்கையாகப் புளிக்க வைத்து காய்கள், காரம் இப்படிச்சேர்த்து செஞ்சு பாருங்க....இந்தப் பருப்புக்குப் பதிலாக, து ப, பா ப வில். நல்லா வரும்.
கீதா
ஆமாம், இயற்கையாக புளிக்க வைத்து செய்யலாம் என்று மகளூம் கூறினாள். ஆனால் "இதற்கு பதில் அடையே செய்து விடலாம்"என்று முடிவெடுத்து விட்டோம்.
நீக்குமைசூர் பருப்பு உடல்நலத்துடன் நல்லதல்ல என்றுதான் சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குஆனால் நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் பருப்பு கறி இதில்தான் செய்கிறார்கள். விரைவில் வேகுவதால் என நினைக்கிறேன்.
உங்கள் செய்முறை அடைப்பால் உள்ளது. நீங்கள் கூறியதுபோல மரக்கறிகள் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும் .
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமைசூர் பருப்பு நான் பயன்படுத்துவது இல்லை.
பதிலளிநீக்குதுவரம்பருப்பில் , பேக்கிங் சோடா சேர்க்காமல் செய்யலாம்.
செய்முறை படங்கள் எல்லாம் அருமை.
நன்றி. அப்படியும் முயற்சிக்க வேண்டும்.
நீக்கு