ஜெயகுமார் சந்திரசேகரன்:
நெல்லையைத் தவிர மற்றவர்கள் கேள்வி கேட்பதை விட்டு விலகி விட்டார்களே! ஏன்?
& அடுத்த கேள்வியைப் பாருங்க! (மேலும் கேள்விகள் கேட்பவர்களுக்கு நாங்கள் எந்தத் தடையும் போட்டது இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் - கிண்டலோ - சீரியஸ் கேள்விகளோ கேட்கலாம். )
கேள்விகள் கேட்காத வாசகர்களுக்கு ஒரு இனிய தண்டனை : கேள்வி & பதில் வடிவில் இருக்கும் சினிமா பாடல்களை கருத்துரை பகுதியில் பதியவும்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
தீ, சின்மயி யாருடைய முத்த மழையை ரசித்தீர்கள்?(நான் தக் லைஃப் படப்பாடலைப் பற்றி கேட்டேன்)
# பார்க்கவில்லை - கேட்கவுமில்லை.
& சின்மயி பாடியது நன்றாக உள்ளது என்று facebook விமரிசகர்கள் அதிகம் பேர் எழுதிவருகிறார்கள். அதை மட்டும் படித்தேன். தீ யார் என்பதோ அவர் குரல் எப்படி இருக்கும் என்பதோ எனக்குத் தெரியாது.
நெல்லைத்தமிழன் :
தோசை மெஷின்னு வந்திருக்கிறதே..அது பயனுள்ளதா? தோசை வார்ப்பது அவ்வளவு கடினமா என்ன?
# ஒருவேளை ஓட்டல்களுக்கு பயன் தரலாம்.
& என்னுடைய அனுபவத்தில், மெல்லிய, வட்டமான தோசை வார்ப்பது மிகவும் கடினம். அப்படியே வார்த்துவிட்டாலும் அதை பங்கம் இல்லாமல் திருப்பிப் போடுவது இன்னும் கடினம்.
என்னுடைய சில தோசை அனுபவங்கள், இன்றைய படமும் வரிகளும் பகுதியில் கண்டு களியுங்கள்! (சிரிங்க !!)
எதனால் பசங்களுக்கு கலந்த சாதம், டிபன் பாக்சில் வைப்பது பிடிப்பதில்லை? ரொம்ப சுலபம் என்று அடிக்கடி அதனைச் செய்துகொடுத்துவிடுவதாலா? (உப்புமா போல)
# கலந்த சாதம் நேரம் கழித்து உண்டால் சுவைக்காது என்பது என் கருத்து.
& நான் படித்த காலத்தில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் என்னுடைய டிஃபன் பாக்ஸில் தயிர் சாதம் & உப்பு நார்த்தங்காய் மட்டுமே அம்மா வைத்துக் கொடுப்பார்கள். எனக்கு இட்லி பிடிக்காது. வேறு எந்த டிஃபன் சாப்பிட்டாலும் பசி அடங்காது !
என்னுடைய குழந்தைகளுக்கு அவர்களின் அம்மா என்ன வைத்துக் கொடுத்தாலும் அவர்கள் அதை ரசித்துச் சாப்பிடுவார்கள்.
முன்பெல்லாம் யூடியூப் வீடியோக்கள் நிறைய வந்துகொண்டிருந்தது. இப்போ பலர், ஷார்ட்ஸ்தான் நிறைய வியூ கிடைக்கிறது, பலரும் நெடிய வீடியோக்களைக் காண விரும்புவதில்லை என்று சொல்கிறார்கள். மக்கள் அவ்வளவு சோம்பேறிகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்களா என்ன?
# வசதிகள் பெருகப் பெருக சோம்பல் அதிகரிக்கும்.
ஓடிடி என்று ஒன்று இல்லை என்றால், டூரிஸ்ட் ஃபேமிலி, ஜோ போன்ற நல்ல படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்குமா?
# என்வரை ஓ டி டி இல்லை என்றால் சினிமா இல்லை. ஜோ பார்க்கவில்லை. (அது பற்றிக் காதில் விழவில்லை)
& நேரம் கிடைத்தால் பார்க்கிறேன்.
முதலில் மசூர் தால், துவரம்பருப்பை விட சத்தானது, குறைந்த விலை என்றார்கள். பிறகு மசூர்தாலினால் உடலுக்கு பிரச்சனை வரும் என்றார்கள். இதுபோலவே பாமாலினையும் முன்பு நல்லது என்றார்கள், பிறகு மூட்டுப்பிரச்சனை வரும் என்கிறார்கள். மைக்ரோவேவ் அவனால் (இந்த 'அவன்' என்று எழுதுவதால் 'ஆணாதிக்கம்' என்று எண்ணி கீதா ரங்கன், 'ஓவன்' என்று எழுதச் சொல்கிறார். அவனில்லாவிட்டால் சமையலேது?) கேன்சர் வரலாம் என்று சொல்லி ஜப்பானில் மைக்ரோவேவ் அவனை உபயோகப்படுத்துவதில்லை என்கிறார்கள். யுகம் யுகமா குக்கர் உபயோகித்தது போய், இப்போ குக்கரில் சாதம் வடித்தாலோ இல்லை காய்கறிகளை வேகவைத்தாலோ ஒரு புண்ணியமும் இல்லை, சத்துக்குறைவு, பிரச்சனைகள் வரும் என்கிறார்கள். போகிற போக்கில் நம்மை விறகடுப்பில் அல்லது குமுட்டியில் மண் பாத்திரத்தில் சாதம், குழம்பு பண்ணச் சொல்லிவிடுவார்களோ?
# விஞ்ஞான வளர்ச்சி என்று இப்படி முரணான தகவல்கள் வருவது வழக்கம்தான். என்ன செய்வது ? புறம் தள்ளவியலாத நெருக்கடிதான்.
வழிபாட்டுத் தலங்களில் (அது வீடோ, கோயிலோ அல்லது எந்த இடமானாலும்) ஏன் பாடல்கள்/கீர்த்தனைகள் போன்றவைகளை ரொம்பவே சத்தமாகப் பாடுகிறார்கள் (இதுபோல் டோலக் மிருதங்கம் போன்றவற்றையும்)? தங்களுக்காவது கேட்கவேண்டும் என்பதற்காகவா, இல்லை கடவுளுக்கு நன்றாகக் கேட்கவேண்டும் என்பதற்காகவா இல்லை இடத்தைச் சுற்றி இருப்பவர்களிடம் தங்கள் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ளவா?
# " கடவுளர் வழிபாடு எனும் நல்ல காரியம் நடக்கிறது ! வந்து கலந்து கொள்ளுங்கள் " என்று அக்கம்பக்கத் தவர்களுக்குச் சொல்வதற்கு வசதியாக, அந்தக் காலத்தில் சற்று ஓசை அதிகமாகவே பஜனை செய்வார்கள். பூஜையைப் பொருத்தமட்டில் அதிகம் சப்தம் செய்வது வழக்கம் இல்லை. ஆனால் பல பேர் கூடி செய்யும் ஐயப்ப பூஜை பிரபலமாக ஆனதன் பின்பு பூஜைகளும் சப்தம் மிகுந்தவை ஆகிவிட்டன. கேரளாவில் கோவில் நிகழ்ச்சிகளில் செண்டை எக்காளம் போன்றவைகளைக் கொண்டு மிக அதிக ஒலி எழுப்புவதைக் கவனித்திருக்கலாம்.
ஆடம்பரமாக பூஜை பஜனை இவை செய்யப்படும் போது ஒலியின் அளவு மிக அதிகமாக இருக்கும்.
எல்லார் கவனமும் கவரப்பட வேண்டும் என்பது மட்டுமே ஒரே காரணம் என்பது என் கருத்து.
கப்பல் கவிழ்ந்தால் கன்னத்தில் கை வைக்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கியது யார்?!!
& ' கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே' என்பதுதான் அந்த முதுமொழியின் முழு வடிவம்.
அந்தக் காலத்தில் (ரயில், விமானம் எல்லாம் இல்லாத நாட்களில்) பெரிய பணக்காரர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை பெரும் அளவில் அயல் நாடுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி, அங்கு விற்பனை செய்து பெரிய லாபம் ஈட்டி வந்தார்கள். சிறிய வியாபாரிகள், உள்ளூர் வர்த்தகம் மூலம் பொருள் ஈட்டி வந்தார்கள்.
பெரிய வியாபாரிகளின் கப்பல்கள் சில சமயங்களில் கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்து விட்டால், அந்த வியாபாரிகள் பெருத்த நஷ்டம் அடைவார்கள். அந்தக் காலத்தில் வருமானத்திற்கு வேறு வழியில்லாதவர்கள் கொள்ளை அடிப்பதை / திருடுவதை ஒரு தொழிலாக செய்து வந்தனர். கன்னக்கோல் என்பது அந்தக் காலத்து திருடர்கள் பயன்படுத்திய சுவர்களில் துவாரம் போட உதவிய ஒரு கருவி.
(கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி!
அவன் கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பலகோடி!)
பெருத்த நஷ்டம் வந்தாலும் வியாபாரிகள் கன்னக்கோலில் (திருடுவதில்) நாட்டம் செலுத்தக் கூடாது என்பதை வலியுறுத்த சொல்லப்பட்டதுதான், 'கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே' என்பது.
= = = = = = = = = =
KGG பக்கம் :
படமும் அது பற்றி சில வரிகளும் பகுதிக்கு நெல்லைத்தமிழன் அனுப்பியுள்ளது :
படம் : -
நாட்டுல மக்களுக்கு பறவைகள், நாய்கள், பூனைகள் பற்றிக் கவலையே இல்லை போலிருக்கு. திருமண மண்டபத்துக்குப் போய்ப் பார்த்தால் இலையெல்லாம் அலம்பினபிறகுதான் வெளீல போடுவாங்க போலிருக்கு. அரை வடை, கொஞ்சம் ஸ்வீட், இல்லைனா பாதி தோசையோட இலையை வெளீல போட்டா என்ன? சரி இந்தப் பசங்களாவது லேஸ் சிப்ஸ் பாக்கெட்ல ஏதேனும் ஒண்ணு ரெண்டு மிச்சம் வச்சு வெளீல போடுவாங்கன்னு பார்த்தா...சுத்தம்... இவங்கள்லாம் பெரீசான பிறகு, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று லெக்சர் அடிக்கப்போறாங்க - இப்படித்தானே இந்த இரண்டு அண்டங்காக்கைகளும் மனசுல நினைச்சிருக்கும்? - நெல்லைத்தமிழன்.
= = = = = = = = =
படங்களும், வரிகளும் : (KGG )
வட்ட வட்ட தோசைகள்
வார்த்திட நெஞ்சில் ஆசைகள்!
வந்த தென்னவோ என்றும்
விசித்திர கோணல் வடிவங்கள்!
= = = = = = = = =
அது எப்படி தோசை வார்த்தால் வட்ட வடிவமாக வராது என்று சொல்கிறீர்கள்? கரைத்தமா தோசை முதற்கொண்டு எனக்கு வட்டமாகத்தான் வரும்.
பதிலளிநீக்குசில சமயம், அதீத ஆசையால், வெங்காயம் போன்றவை நிறைய மேலே பரப்பி, விளிம்புவரை தடிமனாக வார்க்கும் தோசை மாத்திரம், திருப்பிப் போடும்போது விளிம்பைத் தாண்டி விழும்.
நீங்கள் எதற்கு வம்பு என சட்சட் என சின்னச் சின்ன தோசைகள் வார்ப்பீர்கள் போலிருக்கு
பல வருடங்கள் கழித்து, வட்ட தோசை வித்தையைப் பழகினேன். இப்போ மீண்டும் டச் விட்டுப் போச்சு!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்கள் பக்கத்தில், சகோதரர் நெல்லைத்தமிழர் அனுப்பிய படத்தையும், அதற்கான வரிகளையும் ரசித்தேன். நல்ல சிறப்பான கற்பனை. பாராட்டுகள். இந்த மாதம் போட்டிகளின்றி படமும், விமர்சனமும் இப்படித்தான் வெளியிட்டு விடுவீர்களா?
தங்களின் தோசை படங்களும், தோசை கவிதையும் அருமை. சில சமயங்களில் (அதுவும் நான்ஸ்டிகில் கோதுமை மாவு கரைத்து வார்த்தால்) இப்படித்தான் ஓடி பல உருவங்களோடு உருப்பெற்று வரும்.) சாதரண தோசைக்கல்லில் அது வட்டமாகதான் உருவம் கொள்ளும். அரைத்த இட்லி மாவென்றால், எந்த பிரச்சனையையும் அவைகள்( தோசைகல்கள்) சந்திக்காது.
"கன்னத்தில் கை வைப்பது" படித்தவுடன் எனக்கும் முன்பே அதை படித்தறிந்தது நினைவுக்கு வந்தது. நேற்று அதை குறிப்பிட மறந்து விட்டேன். அதுதான் மூத்தோரின் ஒவ்வொரு பழமொழிகளுக்கும் ஒவ்வொரு பொருள் உள்ளதென குறிப்பிட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கும் விளக்கமான கருத்துரைக்கும் நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குபுதன் கேள்வி பதில் பகுதி படிப்படியாக சீரடைவதில் மகிழ்ச்சி.
தோசை படங்கள் பயமுறுத்துவனவாக உள்ளன. ஆவிகள் தோசைக்கல்லில் அவதரித்தது போல் உள்ளது. தோசை எப்படியானாலும் சரி, கடைசியில் பிய்க்கப்படும் என்ற ஞானம் உதவிக்கு வந்தது. .
சிறுவர்களாக இருந்தபோது பாடிய
தோசை அம்மா தோசை
பாடல் நினைவில் வந்தது.
Jayakumar
ஆம்! தோசை அம்மா தோசை பாடல் தெரியாத தமிழ்நாட்டு குழந்தைகளே இல்லை என்று சென்ற நூற்றாண்டு வரை ஒரு நிலை இருந்தது. கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுத்த மழை பாடலை இன்னும் கேட்கவில்லையா..?? சோஷியில் மீடியாவில் இருக்கும் தகுதியை இழந்து விடுகிறீர்களே?
பதிலளிநீக்குகேட்டால்தானே !!
நீக்குதோசைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.. சின்ன வயதில் கரைத்த தோசை சரியாக எடுபடாமல் விண்டு விண்டு போனால் வீட்டுப் பெரியவர்கள், "ஏப்படியும் விண்டுதானே சாப்பிட போகிறோம்,, அதனால் பரவாயில்லை" என்பார்கள். ருசியாக இருக்கும் வரை வடிவம் ஒரு குறை இல்லை.
பதிலளிநீக்குஆம்! அதே, அதே!
நீக்குதோசைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.. சின்ன வயதில் கரைத்த தோசை சரியாக எடுபடாமல் விண்டு விண்டு போனால் வீட்டுப் பெரியவர்கள், "ஏப்படியும் விண்டுதானே சாப்பிட போகிறோம்,, அதனால் பரவாயில்லை" என்பார்கள். ருசியாக இருக்கும் வரை வடிவம் ஒரு குறை இல்லை.
பதிலளிநீக்குஅப்படியென்றால் பாவெ மேடம் முறுக்கு செய்து தந்தால் அது வட்டமாக இருக்க உத்தரவாதமல்ல என்று எடுத்துக்கொள்ளலாமா?
நீக்குஎன் மனைவியிடம் சொல்லுவேன், அவள் தயார் செய்யும் முறுக்கு மாவு ரொம்ப ருசி, அதனால் முறுக்கு செய்ய ரொம்ப சிரமப்படவேண்டாம், உடைத்துத்தானே சாப்பிடுவேன், அதனால் சுலபமா சூப்பியாகச் செய்துவிடு என்பேன். அவள் என்னவோ முறுக்கு செய்வதுதான் சரி என்கிறாள்
:)))))
நீக்குதோசை படங்கள் நன்றாக உள்ளன. கவிதை நன்று.
பதிலளிநீக்குஎனது பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பம்போல் சிறு வயதில் ஆனை பூனை கோழி, போன்று தோசைகள் செய்வதுண்டு. இப்போது பேரன் ஸ்மைலி பேஸ், சாட் பேஸ், மொன்சர் என்று ,செய்து தாருங்கள் என்று செய்து குடுப்பதுண்டு காலம்மாறும்போது தோசை உருவும் மாறுகிறது. :)
நல்ல கருத்து. நன்றி.
நீக்குdhee பாடிய முத்தமழை வெர்ஷன் பிடித்தது.
பதிலளிநீக்குஇங்கு dhee யையும் சின்மயியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல என்பது என் கருத்து. dhee சின்னப் பெண். சின்மயி வயசு என்ன? அவங்க குரல் இன்னும் பண்பட்டு இருக்கும்...dhee சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவங்க நல்லா பாடியிருக்காங்க. ஆனா அதுல dhee யின் பார்ட் எவ்வளவு வருதுன்றதே சந்தேகமா இருக்கு...பின்னணி இசையும், கோரஸும் தான் கூடுதலாக இருக்கு....
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குdhee பாடிய முத்தமழையும் கேட்டதில்லை. சின்மயியையும் கேட்டதில்லை.
நீக்குசின்மயி குரல் அசாத்தியமான குரல். அசாத்திய உழைப்பு. இப்பவும் கூட அவங்க குரல் அப்படியே இழைகிறது. சின்மயி யும் முத்தமழை நல்லா பாடியிருக்காங்க. எனக்கு அவங்க பாடுவது ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குஆனால் என் கருத்து மேலே சொன்னது...
கீதா
சரி.
நீக்குசின்மயி கேட்டதேயில்லை
நீக்குஸ்ரீராம், நெஞ்சில் ஜில் ஜில் பாட்டு - கேட்டதில்லையா?
நீக்குநல்ல ஞானம் உள்ளவங்க. அவங்க அம்மாவும் தான். ரெண்டு பேருமே ஸ்வரங்களை, ராகங்களைப் பிரிச்சு மேய்வாங்க!!!!
கீதா
(இந்த 'அவன்' என்று எழுதுவதால் 'ஆணாதிக்கம்' என்று எண்ணி கீதா ரங்கன், 'ஓவன்' என்று எழுதச் சொல்கிறார். அவனில்லாவிட்டால் சமையலேது?) //
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன்...இந்த ஆங்கிலமும், உச்சரிப்பும்....அதைத் தங்கிலிஷ் படுத்தறப்ப வர ஒரு odd உணர்வும்...போங்கப்பா...நான் ஓவன் அல்லது ஒவன் என்றே குறிப்பிடுவேன். என்ன தப்பு?
கீதா
:)))
நீக்குநான் முதலில் ஓவன் என்றுதான் குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் சில உச்சரிப்புகளை என் மகன்கள் கிண்டல் செய்வார்கள். அதில் இதுவும் ஒன்று! உதாரணமாக Above என்பதை நான் எபவ் என்பேன். ஆனால் அபவ் என்று சொல்லக் சொல்வார்கள்! போடா.. நான் எப்படி சொல்வேனோ அப்படிதான் சொல்வேன். இப்போ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டர்ஸ், ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர்ஸ் எல்லாம் பேசும் இங்கிலீஷை திருத்த முடியுமா என்பேன்!
நீக்குஸ்ரீராம் ஹைஃபைவ்!!!!!! அப்படிப் போடுங்க....உச்சரிப்பு பார்த்தீங்கனா....ப்ரிட்டிஷ், அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலமே கூட வித்தியாசமா இல்லையா? ஐரோப்பிய உச்சரிப்பு, மெக்சிக்கன் உச்சரிப்பு, ஆங்கிலம் தானே!!!
நீக்குOven உச்சரிப்பு அப்படித்தான் 'அவன்' அதாவது அதுவும் சரியல்ல....ஃபோனிட்டிக்ஸ் படி uh-ven ....O மற்றும் u வைச் சேர்த்து உச்சரிப்பு...கேட்கும் போது 'அவன்' என்றுதான் கேட்கும்.
அவன் அவன் என்றால் தமிழ்ல நல்லால்ல....அதான் நான் அப்படிப் பயன்படுத்துகிறேன்.
இலங்கைத் தமிழர், கேரளத்தவரின் ஆங்கில உச்சரிப்பு கேட்டிருக்கிறோமே...
கீதா
நான் பாபாஜோன்ஸ் பிட்சா தலைமையகத்துடன் (யு.எஸ்) ஒரு கான்ஃபரன்ஸ் காலில் இருந்தேன். நான் சொல்லச் சொல்ல, அங்கிருந்த சிலருக்குப் புரியவே இல்லை. உடனே அவர்களின் மார்க்கெடிங் ஹெட், அது இண்டியன் இங்கிலீஷ் என்று சொல்லி விளக்கினார். ஹாஹா. என் பசங்க, வெளிநாட்டில் வளர்ந்ததால அவங்க ஆங்கிலம் நல்லா இருக்கும்.
நீக்குவழிபாட்டுத் தலங்களில் (அது வீடோ, கோயிலோ அல்லது எந்த இடமானாலும்) ஏன் பாடல்கள்/கீர்த்தனைகள் போன்றவைகளை.........//
பதிலளிநீக்குஇதுக்குச் சிலர் அதாவது விளக்கங்கள் சொல்பவர்கள் சொல்வது, பாசிட்டிவ் அதிர்வலைகள்....அதனாலதானே மந்திரம் ஜெபிக்கறது, ஸ்லோகம் சொல்வது, உச்சாடனம் செய்வது என்று சொல்றாங்க....அர்ச்சனை செய்வதும் சத்தமாகத்தானே செய்வதும் அதுக்குத்தான்னு...(வீட்டில் செய்யப்படும் 'அர்ச்சனை' !!!!! ஆனா அதுக்கும் தாக்கம் உண்டே. எதிர்மறையாக. அதனாலதான் நல்ல வார்த்தைகள், பாடல்களைச் சத்தமாகச் சொல்றப்ப அந்த நேர்ம்றை அதிர்வுகள் நலல்துன்னு சொல்றாங்க...
இதை அறிவியல் ரீதியாக நிரூபிச்சிருக்காங்களாம்.
ஆனால் கொட்டுச் சத்தம் டெசிபல் அதிகமாக இருந்தால், சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உடையவங்களுக்கு உடம்பு உதறல் எடுத்து மயங்கி விழுவாங்க இல்லைனா...வேறு சொல்லலை இங்கு. அது தப்பாகிவிடும் செண்டிமென்ட்ஸ் உடையவர்கள் இருப்பதால்.
கீதா
புதிய தகவலாக இருக்கு.
நீக்குsound vibration ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, கௌ அண்ணா.
நீக்குயோகா வகுப்பில் கூட, ஓம் என்று சத்தமாகச் சொல்லி மூச்சுப் பயிற்சி செய்வது அது போல அதன் அதிர்வுகள் நலல்து என்பதால்...இசை தெரப்பி கூட இருக்கிறதே.
நெல்லை சொல்லிருப்பது போல, ஸ்பீக்கர் போட்டு அலறவிட வேண்டாம். அது நியூசென்ஸ். ஆனால் ஒரு பெரிய அரங்கில் அலல்து கோவிலுக்குள் செய்வது நல்ல நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
கீதா
சம்ஸ்கிருத மந்திரங்கள் உச்சரிப்பிலும், வார்த்தைகளின் மாத்திரை அளவிலும் சொல்லபப்டும்போதுதான் பலன் ஏற்படும் சாத்தியக்கூறு இருக்கிறது என்று சொல்வார்கள்.
நீக்குசந்தியாவந்தனத்திலும் காயத்ரி மந்திரமோ, பிராணாயாம மந்திரமோ அதை உச்சரிக்கும் விதத்தில் உச்சரித்து இடைவெளி விட்டு மூச்சை பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்வார்கள்.
ஆமாம், இதை சொல்ல வந்தேன், ஸ்ரீராம்....சரியாக உச்சரிப்பு
நீக்குகீதா
//காயத்ரி மந்திரமோ, பிராணாயாம மந்திரமோ அதை உச்சரிக்கும் விதத்தில் உச்சரித்து// சரி சரி... ஸ்ரீராமுக்கு என்ன. நல்லதாப் போச்சுன்னு, காயத்ரீஜபம் அன்னைக்கு மெதுவா 1008 காயத்ரீ சொல்லிட்டு வர்றதுக்குள்ள இரவு உணவே தயாராயிருக்கும். அன்றைக்கு சமையலுக்கு ஸ்ரீராம் உதவச் செல்லவே வேண்டாம்.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குநெல்லை, உங்க படம் நல்லாருக்கு. ஆனா அதுக்கான விளக்கம்.....
பதிலளிநீக்குஏன் இலையில் மிச்சம் வைக்கணும்? எச்சல்தானே? மிச்சம் வைச்சுத்தான் போடணுமா? ஏன் புதுசா ஏதாச்சும் வாங்கிப் போடலாமே. அப்படி மிச்சம் வைச்சுப் போடுவதால் பறவைகளோ, நாய்களோ அதை இழுத்து ரோடில் போடுவதும் உண்டே.
மிச்சம் வைத்ததைப் போடுவது என்பதை விட, நம் உணவில் பகிர்வது, அதையும் கூட இலையில் ஓரத்தில் வைத்துப் போட வேண்டும் என்றில்லை. ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துப் போடலாம். அல்லது புதிதாக வாங்கிக் கொடுப்பது என்பதுதான் நல்ல எண்ணம்.
எச்சலைப் போடுவது என்பது என்னைப் பொருத்தவரை நல்ல பழக்கமில்லை. அதைச் சில மனம் பிறழ்ந்த மனிதர்களும் கூடச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். எந்த உயிருக்குமே அப்படிப் போடுவது நல்லதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
கீதா
நல்ல கருத்து.
நீக்குகாக்கைக்கு நாம சாதம் செஞ்சதும் எடுத்து வைக்கிறோம் இல்லையா? பசுவுக்கு என்று எடுத்து வைப்பதில்லையா?
பதிலளிநீக்குஇன்னொன்று....முன் பிறவி அடுத்த பிறவி நம்பிக்கை உடையவங்க பலரும் பேசுவதுண்டு, அப்படி நினைச்சுப் பார்க்கலாமே. அந்தக் கோணத்தில் என் கேள்வி, போன பிறவியில் நாம் இப்படி எச்சலை சாப்பிடும் பிறவியாக இருந்திருப்போமோ (வெளி உடல் தான் வேறு உள்ளே இருக்கும் உயிர் அதைத்தானே பார்க்கணும்) அல்லது இனி வரும் பிறவியில் இப்படியான ஜீவனாக நினைத்தால்? செய்வோமா?
கீதா
எனவே புதிதாகவோ, இல்லை பகிர்ந்து உண்ணுவதையோ இப்ப உள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்
நீக்குகீதா
புதன் கேள்வியா?
நீக்குஓ கேள்விக் குறி வந்துவிட்டதோ...சரி அப்படியும் எடுத்துக்கோங்க கௌ அண்ணா
நீக்குகீதா
இந்தம்மா என்னா சொல்றாங்க? மனுஷங்களுக்கு புதிய உணவு என்பது சரிதான். ஆனால் காக்கைகள் இந்த உணவையும் சாப்பிடுமே. நல்லவேளை, சுடச் சுட குழம்பு சாதம் செய்து காக்கைக்குப் போடுங்கன்னு சொல்லாமப் போனாங்களே.
நீக்கு:))))
நீக்குகௌ அண்ணா, முதல் தோசை - கண்ணு...வாய் 'ஹெ' என்னை என்ன இப்படி ஊத்தியிருக்க என்று சிரிப்பது போல இருக்கு!!!!
பதிலளிநீக்குஇரண்டாவது படம் தோசை - மூளையின் வடிவம் போல!!! இல்லைனா ஸ்டென்ஸில் கட் போல இருக்கு!
மூன்றாவது - கௌ அண்ணா, ஏன் அப்படி - இப்படிச் சொல்லிக்கோங்க...பாருங்க தோசையிலும் நான் வரைபடம் வரைஞ்சிருக்கேன் பாருங்க....ஒரு பெரிய நிலப்பரப்பு அதைச் சுத்தி எத்தனை தீவுகள்..... பாருங்கன்னு!!!
நான்காவது - தோசை மாவில் வரைந்திருக்கும் இந்த உருவத்தைக் கண்டுபிடிக்கறவங்களுக்கு....ஹிஹிஹி ஒரு தோசை அதே வடிவத்தில் கிடைக்கும். (எனக்கு காளைகள் ஒன்றின் மீது ஒன்று உட்கார்ந்திருப்பது போலத் தோன்றியது!!!!)
வரகரசி தோசை - பெண்மணி ஒருவரின் முகம் போன்றும் பின்னாடி கொண்டையும், காதுக்கு மேலே தலையில் இலை போன்று ஒன்று நகையோ பூவோ செருகி வைத்திருக்காப்ல!!!
கடைசி - அடை - தோசை - ம்ஹூம்....!!!!!
கீதா
:)))) நன்றி.
நீக்குநெல்லை எடுத்திருக்கும் புகைப்படத்தில் ஆப்டிகல் இல்லுஷன் போல அந்த காக்காவின் தலைக்கு மேல் இருக்கும் குப்பை காக்கை தலைக் கொண்டை போல தோற்றம் கொடுத்து ஒரு புதிய பறவை போல நினைக்க வைக்கிறது. உடனே சிவாஜி எங்கே, சரோஜா தேவி எங்கேன்னுல்லாம் தேடக்கூடாது!
பதிலளிநீக்குஉடனே சிவாஜி எங்கே, சரோஜா தேவி எங்கேன்னுல்லாம் தேடக்கூடாது!//
நீக்குசிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...
ஹைஃபைவ், ஸ்ரீராம், அதே..அதே....ஆப்டிக்கல் இல்லூஷன்... இதுவும் சொல்ல வந்தேன் ....கொண்டை போல...புதுசா இருக்கே...
கீதா
எங்க வளாகத்துல சிட்டுக்குருவிபோல ஆனால் கொஞ்சம் கருமையான பறவைகள் நிறைய இருக்கிறது. ரொம்ப நாளைக்கு அதுகள் ஏன் வாயைப் பிளந்துகொண்டே இருக்கின்றன என்று யோசித்திருக்கிறேன் (சட் சட் என்று பறந்துவிடும் என்பதால்). பிறகுதான் மேல் உள்ளது கொண்டை போல, கீழே உள்ளதுதான் அலகு என்று புரிந்தது. ஒருநாள் படம் பகிர்கிறேன்.
நீக்குஆம். அதே வகை பறவை என் வீட்டுத் தோட்டத்திற்கும் வருகிறது.
நீக்குஸ்ரீராமின் கேள்வி - புன்னகைக்க வைத்தது!
பதிலளிநீக்குஅவர் வேணும்னே மாற்றிக் கேட்டிருக்கிறார்!!!
கீதா
ஸ்ரீராம் கேள்வி நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
நீக்குகேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாடல் இன்னும் கேட்கவில்லை.
தோசை மெஷின் மகன் வீட்டில் வாங்கி இருக்கிறார்கள்.
நிறைய தோசை செய்ய வசதியாக இருக்கிறது. (வீட்டில் விழாக்கள் சமயம் நிறைய கூட்டம் வரும் போது )
கெளதமன் சார் தோசை படங்கள் முன்பும் இடம் பெற்று இருக்கிறது.
வரகரசி தோசை கொஞ்சம் திகில் ஏற்படுத்துகிறது.
பேரன் , பேத்திகளுக்கு டிசைன் டிசைனாக தோசை சுட்டு கொடுத்து இருக்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி
நீக்கு//படமும் அது பற்றி சில வரிகளும் பகுதிக்கு நெல்லைத்தமிழன் அனுப்பியுள்ளது : //
பதிலளிநீக்குபடமும், கருத்தும் நன்றாக இருக்கிறது.
அவர் சார்பில் நன்றி.
நீக்கு//தீ, சின்மயி யாருடைய முத்த மழையை ரசித்தீர்கள்?(நான் தக் லைஃப் படப்பாடலைப் பற்றி கேட்டேன்)//
பதிலளிநீக்குஇந்த பாடலை பற்றி எல்லோரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். பானுவும் கேட்டு விட்டார்கள்.
இந்த பாடலை இப்போதுதான் கேட்டேன் இருவர் பாடலையும்
பாடல் பழைய இந்தி பாடலை நினைவு படுத்துகிறது.
மூங்கில் காற்று முரளிதரனும் இந் பாடல் பற்றி பதிவு போட்டு இருக்கிறார்.
தகவலுக்கு நன்றி
நீக்கு//நெல்லை எடுத்திருக்கும் புகைப்படத்தில் ஆப்டிகல் இல்லுஷன் போல அந்த காக்காவின் தலைக்கு மேல் இருக்கும் குப்பை காக்கை தலைக் கொண்டை போல தோற்றம் கொடுத்து ஒரு புதிய பறவை போல நினைக்க வைக்கிறது. /
பதிலளிநீக்குநானும் அந்த குப்பை கொண்டையை பார்த்தேன்.
:))))
நீக்கு