புதன், 19 ஜூன், 2024

விளையாட்டுகளை நேரிலோ அல்லது டி வி யிலோ பார்ப்பதில் என்ன நன்மை?

 

நெல்லைத்தமிழன்: 

சில பல உறவினர்கள் அவங்க வீட்டில் அசந்தர்பங்கள் (டைவர்ஸ் ஆவது, குழந்தையின்மை, வேற்று ஜாதித் திருமணம் போன்று) நிகழ்ந்துவிட்டால் பிறருடன் பேசுவதையோ இல்லை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வருவதையோ தவிர்த்துவிடுகிறார்களே.. அது ஏன்? நம் கையை மீறி நடக்கும் விஷயங்களுக்கு நாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? என்பது என் மனதில் தோன்றும் கேள்வி.

# இது அவரவர் எதை "அவமானகரமான" தாகக் கருதுகிறார்கள் என்பதைப் பொருத்த விஷயம். அந்த உணர்வு சரிதானா என்பது பற்றி நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை.

& அவரவர் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் வெட்கமோ வேதனையோ அடையத் தேவை இல்லை என்பதுதான் என் கருத்தும். 

மனிதன் செத்த பிறகு எங்கு செல்கிறான் என்றெல்லாம் ஆராய்ச்சிகளும், ஆன்மீக வாதிகளின் விசாரங்களும் நடைபெறுகிறதே.. ஒருவன் செத்த பிறகு எங்கு சென்றால் என்ன? அதை அவனும் நம்மிடம் வந்து சொல்லப்போவதில்லை, நாமும் பார்க்கப்போவதில்லை. அப்படி இருக்க அதைப் பற்றித் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம்? 

# மரணத்திற்குப் பின் நமக்கு நல்ல அனுபவங்கள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு, அல்லது நாம் தண்டிக்கப்படுவோமோ என்கிற பயம் இந்த இரண்டில் ஏதோ ஒன்று மனிதனை மரணத்திற்கு பின் என்ன என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது - அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது.

& இருக்கின்றார்; இல்லாமல் ஆகிவிடுகிறார். சுருக்கமாக இவ்வளவுதான். இதில் ஆராய்ச்சிகள், விசாரங்கள் தேவை இல்லை. 

இறைவன் உலகைப் படைத்தது உண்மையானால், அவருக்குத் தெரியாதா எந்த எந்த நிலத்தில் என்ன என்ன வளரவேண்டும் என்று? அப்படி இருக்க, சைனாவின் டிராகன் பழம், மலேஷியாவின் டுரியன் பழம் என்று வேற்று நிலங்களுக்கு இயற்கையானவற்றை நாம் ஏன் விளைவித்து உண்ணுகிறோம்? ஓட்ஸ், மக்காச்சோளம் போன்றவற்றைப் பற்றியும் அதே எண்ணம்தான்.   

# மனிதர்களாகிய நாம்  நமது ஐம்புலன்களின் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம் எனவேதான் புதுப்புது சுவை புதுப்புது அனுபவங்களை நாடி அலைகிறோம்.‌ ஓட்ஸ் மக்காச்சோளத்தை பொருத்தவரை அது ஏதோ அரிசியைவிட சத்து மிக்கது அல்லது கெடுதல் செய்யாதது என்கிற மூடநம்பிக்கைதான் அவற்றை நாம் நாடுவதன் காரணம்.

& டிராகன் / டுரியன் / கிவி எல்லா பழங்களின் விலையும் மிக மிக அதிகம். நம்ம ஊரு வாழைப்பழத்தில் இல்லாத சுவையா / சத்துகளா மற்ற பழங்களில் வந்துவிடும்? 

கிரிக்கெட்டோ இல்லை எந்த ஸ்போர்ட்ஸோ.. அதை நேரலையில் பார்ப்பதால் என்ன நன்மை? பிறகு ரிசல்ட் தெரிந்துகொண்டால் போதாதா? சரி... கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் விளையாடுபவர்களை ஸ்டேடியத்திலிருந்து பார்ப்பதால் என்ன நன்மை?

# விளையாட்டு மைதானத்திற்கு நேராகச் சென்று அங்கு எல்லோரும் சேர்ந்து உற்சாகக் கூச்சல் போட்டு நமது முகம் தொலைக்காட்சித் திரையில் தெரிகிறதா என்று பார்த்து ஆனந்தப்படுவது - இது ஒரு வகை ஜாலி. இதனால்தான் மக்கள் மைதானங்களுக்கு நேரடியாகச் சென்று விளையாட்டுகளைக் காண விழைகிறார்கள்.

& இளைஞர்கள் / இளைஞிகள் விளையாட்டு மைதானம் சென்று விளையாட்டைப் பார்ப்பதற்கு வேறு சில காரணிகளும் இருக்கும்! 



மனிதர்கள் பொதுவாக ஏன் வயதானவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதில்லை? அடுத்து அந்த இடத்துக்குத்தான் தாங்கள் செல்கிறோம் என்று ஏன் அவர்களுக்குப் புரிவதில்லை?

# பொதுவாக வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே இருக்கிற வயது வேறுபாடு அவர்களுடைய மனப்போக்கு வெவ்வேறு விதமாக அமையக் காரணமாக இருக்கிறது.

பெரியவர்கள் என்கிற ஒரே காரணத்தினால் அவர்கள் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்று நினைப்பதும் சரி இல்லை அல்லவா ?  

இந்தக் காலத்தில் பல விஷயங்களில் பெரியவர்களை விட இளையவர்களிடம் அறிவும் அனுபவமும் சரியான கண்ணோட்டமும் இருப்பதைக்  கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆனால் நமக்கு நாம் சொல்வதுதான் நியாயமானது அதுதான் சரியானது என்கிற திடநம்பிக்கை இருப்பதும் கருத்து வேறுபாட்டுக்கு ஒரு காரணம். 

வயதானால் ஆபீசிலிருந்து ரிட்டயர் ஆகிவிடுகிறோம் ஆனால் வீட்டு நிர்வாகத்திலிருந்து ரிட்டயர் ஆக மறுக்கிறோம். கருத்து வேற்றுமைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. முன்பெல்லாம் 20 24 வயதுக்குள் பையன்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடந்து விடும். இப்போது அப்படி இல்லை. அந்த காலத்தில்  அனுபவம் இன்மை காரணமாக பெரியவர்களை திருமண விஷயத்தில் கேட்டு நடப்பது வழக்கமாக இருந்தது . இப்போது அப்படி இருக்க வேண்டும் என்கிற  நியாயமோ, கட்டாயமோ இல்லை.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சினிமாக்களிலும், சீரியல்களிலும் வரும் துப்பறியும் நிபுணர்கள் எக்ஸென்ட்ரிக்காகத்தான் இருக்க வேண்டுமா?

# முன்னோடிகள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்கிறார்கள். ரசிகர்கள் ஆவலைத்‌ தக்க வைத்துக் கொள்ள இப்படி சில யுக்திகள் செய்யப் படுவது சகஜம்.

அது சரி, இப்போது துப்பறியும் சினிமா - தொடர்‌ ஏதும் வருகிறதா என்ன ?

& எல்லாம் ஷெர்லாக் ஹோம்ஸ் கேரக்டர் பார்த்து காபி அடிக்கப்பட்டவை ! 

தொடர்ந்து ஒரே வகை பழத்தையே சில நாட்கள் சாப்பிடுவது அலுத்து விடாதா?

( இது போன வாரம் - நெல்லையிடம் ஸ்ரீராம் - பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி - நெ. த பதில் சொல்லட்டும்!) 


இதுவும் போன வார பின்னூட்டத்திலிருந்து .. 

துரை செல்வராஜூ

இத்தனைக்கும் கழுதைக்கு பஞ்ச கல்யாணி ன்னு பேர்..

ஸ்ரீராம்

ஆமாம். அப்படி பெயர் உண்டு. ஆனால் ஏன்?

  1. பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க! 

  2. மேலும் .. 

  3. இத்தனை வார புதன் கிழமைகளும் அந்தப் பகுதி KGS--ஸா
    இல்லை, இந்த வாரம் தான் KGS-- ஸா?..

  4. & அடக் கடவுளே ! புதன் பதிவுகளை ஊன்றிப் படிப்பவர்கள் நாலு பேர்தான் போலிருக்கு - அந்த 4 பேரில் இருவர்:  KGG & ஸ்ரீராம். மற்ற இருவர் :?? 

  5. = = = = = = = =

  6. KGG பக்கம் :

    முதலில் இரண்டு வாரங்கள் (ஜூன் 5 மற்றும் 12 ) காணாமல் போனதற்கு இந்தப் பகுதியை தவறாமல் படிக்கும் வாசகர்கள் ( அப்படி யாரும் இருக்கீங்களா? ) என்னை மன்னிக்கவும். திருமதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், இணைய வசதி இல்லாத இடங்களில் வாசம் செய்யவேண்டி இருந்ததாலும் எந்தப் பதிவும் போட இயலவில்லை.

    KGG பக்கம் என்று நான் ஆரம்பித்தது - ஏப்ரல் 12 - 2023 புதன் அன்று. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தொடங்கினேன்.

    இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று கூட கருதலாம்.

    எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து - என்னுடைய கண்ணோட்டத்தில் - என்னுடைய அனுபவங்களும் - அவற்றை நான் பார்த்த கோணமும் - வரிசைக் கிரமமாக எழுத ஆரம்பித்தேன்.

    மேலும் இது ஒரு வகையில் நாகப்பட்டினம் என்ற ஊர் 1957 முதல், 1971 வரை என் பார்வையில் எப்படி இருந்தது என்பதையும் எழுதி வந்தேன்.

    அவை எல்லாவற்றையும் தொடர்ந்து கவனமாக ஏதோ நாலைந்து பேர் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    நாகையில் டிப்ளோமா பரிட்சை ( DME - Diploma in Mechanical Engineering ) படித்து முடித்த உடனேயே எனக்காக Hindu பேப்பர் appointments பக்கங்கள் பார்க்க ஆரம்பித்தார் என் அப்பா.

    ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு மூன்று அப்ளிகேஷன் அனுப்பினேன் !

    அந்த காலகட்டத்தில் - அப்ளிகேஷன் எழுதுவது எப்படி என்ற ஞானம் எனக்கு இல்லை. அப்பாதான் எப்படி எழுதுவது என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லித் தந்து, என் கையெழுத்திலேயே என்னை எழுத வைத்தார்.

    ஒருநாள் ஒரு விளம்பரத்தில் அப்ளிகேஷன் அனுப்ப ஏதோ தபால் பெட்டி எண் கொடுத்திருந்தனர்.

    அப்பா, என்னிடம் - நீ முதலில் ஒரு டிராப்ட் அப்ளிகேஷன் எழுது. அதை நான் திருத்தித் தருகிறேன்.  பிறகு அதை வெள்ளை பேப்பரில் எழுதலாம் என்றார்.

    நான் from அட்ரஸ் / to அட்ரஸ் எழுதிவிட்டு பிறகு
    Sub :
    Ref :
    எழுதி
    அதன் கீழே

    Dear Box No 508,

    With ref to your advertisement calling for ….

    என்று எழுத ஆரம்பித்தேன்.

    அப்பா அதைப் பார்த்துச் சிரித்துவிட்டு - box no க்கு அப்ளிகேஷன் அனுப்பினாலும் - Sir / Madam என்றுதான் தொடங்கவேண்டும். உன் அப்ளிகேஷனை box படிக்காது - மனிதர்தான் படிப்பார்  என்றார்.

    பரிட்சை ரிசல்ட் வருவதற்கு முன்பே ஹிந்து பேப்பரில் அசோக் லேலண்ட் கம்பெனியின் அப்ரென்டிஸ் சேர்க்கை விளம்பரம் வந்திருந்தது ( மே / ஜூன் 1971) அதில் அந்த வருட டிப்ளோமா பரிட்சை எழுதி, ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

    உடனே விண்ணப்பம் அனுப்பினோம்.

    அசோக் லேலண்டிலிருந்து ஆகஸ்ட் 16 - 1971 written டெஸ்ட் எழுத அழைத்திருந்தார்கள்.

    அசோக் லேலண்ட் கம்பெனியில் பணி புரியும் ஒரு அதிகாரி ( ஊஹூம் - பேர் சொல்லமாட்டேன்) அப்பொழுது நாகையில் உள்ள அவருடைய வீட்டிற்கு லீவில் வந்திருந்தார். அவரைத் தெரிந்த ஒருவர் (என் அப்பா - அவரிடம் கொஞ்சநாட்கள் கணக்கர் ஆக வேலை பார்த்தார்) அந்த அதிகாரியைப் போய்ப் பார்க்க பரிந்துரைத்தார்.

    நானும் அப்பாவும் அவரைப் போய்ப் பார்த்தோம்.

    அவர் என்னிடம், க்விஸ் டைப் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால், written டெஸ்ட் சுலபமாக பாஸ் செய்யலாம் என்றார்

    ஆகஸ்ட் 6 காயத்ரி  ஜபம் முடித்து ஓரிரண்டு நாட்களில் நாகை விட்டுக் கிளம்பி, சென்னை வந்து சேர்ந்தேன்.

    பாகம் 1 - நாகை வாழ்க்கை முடிந்தது.

    இனி பாகம் இரண்டு - சென்னை வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறது.

    அடுத்த வாரம் பார்ப்போம்!

    = = = = = = =

66 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் மிக சுவாரசியமாக உள்ளது. அருமையான கேள்விகளுக்கு தகுந்த அழகான பதில்களை ரசித்தேன்.

    உங்கள் பக்கம் அருமை. நான் எப்போதும் (ஒரிரு தடவைகள் மிஸ்ஸாகி இருக்கலாம்.) விடாமல் உங்கள் பக்கங்களை படித்து ரசிப்பேன். ( அந்த இருவரில் ஒருவர் நானும்தான் எனச் சொல்லிக் கொள்ளவே பிரியப்படுகிறேன். .ஹா ஹா ஹா) இந்த வார பகுதியும் நன்றாக உள்ளது. உங்கள் அப்பாவின் உதவியும், அறிவுரைகளும் தங்களுக்கு கிடைத்தது நல்ல அதிர்ஷ்டந்தான். உண்மைதான்..! அந்த காலத்தில் மகன், மகள்களின் வேலை விஷயத்தில் அறிவுரைகள், ஒத்துழைப்புக்கள் எனத்தருவது பெரும்பாலும் தந்தையின் கடமையாக பொறுப்பாக இருந்தது. பல நல்ல விபரங்களுக்கு நன்றி. மேலும் தங்களின் வேலை கிடைத்த அனுபவங்களை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் கமலா அக்கா... உங்கள் பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    3. சகோதரி கமலா அவர்கள் பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
      இறைவன் அருளால் அனைத்து நலங்களும் கிடைக்கட்டும்.

      நீக்கு
    4. வாழ்த்துகிறோம். : எ பி ஆசிரியர்கள்.

      நீக்கு
    5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

      சகல செல்வங்களும் நலன்களும் கிடைக்க ஆசீர்வதிக்கிறோம்.

      நீக்கு
    6. வணக்கம் அனைவருக்கும்.

      என் பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள். தங்கள் அனைவரின் ஆசிர்வாதங்கள் அவள் வாழ்க்கையை வளமுறச் செய்து செம்மை படுத்தட்டும். மீண்டும் மகிழ்வுடனான நன்றிகள் அனைவருக்கும். 🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்க வாழ்த்துவோம்.

      நீக்கு
    2. கெளதமன் சார், இப்போது உங்கள் துணைவியார் பூரண நலம் பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் பக்கத்தை படித்து வருகிறேன் தொடர்ந்து.

      நீக்கு
    3. நலமடைந்து வருகிறார். நன்றி.

      நீக்கு
  5. கேள்விகளும் பதில்களும் அருமை.
    அப்பாவின் நினைவுகள் அருமை.
    உங்கள் முன்னேற்றத்தில் அப்பாவின் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் . என்றும் நினைவை போற்றி வணங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. Latrine என்பது Toilet ஆனது, இப்போது wash room, rest room என்கிறார்கள். இந்த  பரிணாம மாற்றம் எப்படி,ஏன் நிகழ்ந்தது?..

    என்ற கேள்விக்கான கருத்துகளின் வழியே நான் எழுதியது அது..

    பஞ்ச கல்யாணி ந்ற பேர் இருந்தாலும் கழுதை ங்கற பேர் தான் சிறப்பு... அது மாதிரி ஒப்பனை அறை ன்னு பில்ட் டப்பு பண்ணினாலும் கக்கூஸ் கக்கூஸ் தானே!..

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரம் புதன், கேள்விகள் நிறைந்து மழையில் நிரம்பிய குளம் போல் இருக்கிறது. பகுதி புத்துயிர் பெற்றதற்கு நெல்லைக்கும் பா வெ மேடத்திற்கும் நன்றி.

    நெல்லை வேற்று நாடு உணவு வகைகள் என்று ஏதோ சில பாகுபாடுகளை முன்வைக்கிறார். அப்படி ஆராய்ந்தால் நாம் உண்ணும் பல காய்களும் வேற்று நாட்டில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு இங்கு காலூன்றியவைதான். மிளகாய், தக்காளி, உருளைக் கிழங்கு போன்று பலவற்றைக் கூறலாம். அவர் குறிப்பிட்ட ட்ராகன் பழம், டுரியன் பழம் இங்கு தமிழ்நாட்டிலேயே விளைவிக்கிறார்கள்.

    சுய சரிதை சிறிது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அடுத்தவன் பற்றி அறிவதில் யாருக்குத்தான் விருப்பம் இல்லை. கிசு கிசு?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்தவன் பற்றி அறிவதில் யாருக்குத்தான் விருப்பம் இல்லை. கிசு கிசு?//

      ஹா... ஹா.. ஹா...

      நீக்கு
    2. // சுய சரிதை சிறிது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அடுத்தவன் பற்றி அறிவதில் யாருக்குத்தான் விருப்பம் இல்லை. கிசு கிசு?// :))))))

      நீக்கு
  8. அதே.. அதே..
    சபாபதே!...

    ×××××××××××××

    பஞ்ச கல்யாணி!..

    வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்...

    இப்படியிருக்குமோ -

    கடின உழைப்பு
    மிகுந்த பொறுமை
    குறைந்த உணவு
    சிறந்த உழைப்பு..
    தன்னை அறிதல் என்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்...

    !?...

    பதிலளிநீக்கு
  9. பஞ்ச கல்யாணி!..
    இப்படியும் இருக்கலாம்...

    1) கடின உழைப்பு

    நாத்தத்துக்கு நாத்தம் ந்னு
    அழுக்குத் துணிய சுமந்துகிட்டு நடக்கறது தான்!...

    2) மிகுந்த பொறுமை

    ஊர்ல என்ன நடந்தாலும் நடக்கட்டும்... காள்... காள்... ன்னு கத்திக்கிட்டு இங்கேருந்து அங்கே ஓடறது...
    அங்கேருந்து இங்கே ஓடியாறது...

    3) குறைந்த உணவு

    பஞ்சம் வந்தாலும் பயப்படுறதில்லை..
    காயிதம் கிடைச்சாப் போதும்..

    4) மிகுந்த உழைப்பு..

    நமக்கு நாமே சொல்லிக்கிட வேண்டியது தான்!..

    5) தன்னை அறிதல்

    அறிஞ்சு என்ன பிரயோசனம்?.. நல்ல வேட்டி எடுத்து கட்டிக்கிட முடியுதா?..

    !!?...

    !!?

    பதிலளிநீக்கு
  10. கிரிக்கெட் உடன் தமன்னா படங்களும் வந்துவிட்டன. தமன்னாவின் படங்களைப் போடுவதற்காகத்தான் கிரிக்கட் செய்திபோல் தெரிகிறது.:)) தொடரட்டும் பகிர்வுகள்.

    "Box படிக்காது" மிகுந்த ரசனை.

    பதிலளிநீக்கு
  11. நெல்லையின் முதல் கேள்வி - இதெல்லாம் நம் சமூகத்தின் செயல்பாடுகளால் அவர்கள் பயந்து தயக்கத்துடன் ஒதுங்குகிறார்கள். இப்போது மாறி வருகிறதுதான். என்றாலும் ஒரு சில இடங்களில் இருக்குதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நெல்லையின் இரண்டாவது கேள்வி - என்னைப் பொருத்த வரை தேவையில்லை. இந்த ஆராய்ச்சிகள். மனிதனை ஒழுங்குபடுத்த இவை எல்லாம் சொல்லப்பட்டன பாவம் புண்ணியம் என்று என்றாலும் தேவையில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஒரே பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் போரடிப்பதில்லை எனக்கு!!! ஆனால் இடையில் வேறு பழம் சாப்பிடக் கிடைத்தால் விரும்புவதும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நாகையில் நான் என்கிற கௌதம்..

    மறக்க இயலா நாட்கள்...

    பதிலளிநீக்கு
  15. எல்லா கேள்வி-பதில்களும் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  16. கழுதையின் மற்றொரு பெயர் பஞ்சகல்யணி? எனக்குத் தெரிந்து பஞ்சகல்யாணி என்ற ஒரு வகை குதிரை.... புராணங்களின் படி. ஹயக்ரீவர் குதிரை வடிவம் ஐந்து வகை சக்திகள் கொண்டது என்ற பொருளில் பஞ்சகல்யாணி

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கௌ அண்ணா நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்தல் அடுத்த பகுதியா!!

    இப்பகுதியில் சொல்லப்பட்டது போல், சிறு வயதில் எனக்கும் விண்ணப்பங்கள் நிரப்புவது எல்லாம் எப்படி என்று யாரும் சொல்லிக் கொடுத்தது இல்லை. எப்படியோ கற்றுக் கொண்டாலும், இப்போதெல்லாம் கூட சில விண்ணப்ப படிவங்களில் கேட்கப்படும் கேள்விகள் ஆங்கிலமும் சரி தமிழும் சரி புரிவதே இல்லை. யாரிடமேனும் கேட்டு நிரப்பும் போதுதான் தோன்றும் இதுக்கு இப்படியா கேப்பாங்க இப்படி இல்லையா கேட்க வேண்டும் என்று தோன்றும். யாரப்பா இந்த படிவங்கள் எல்லாம் தயார் செய்யறாங்கன்னு தோன்றும். மொழி சரியாகத் தெரியாதவர்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி சார் அப்பாவிதான் ஆனால் பசு போன்ற அப்பாவியா தெரியலை அக்கா கௌ என்று எழுதுவதால் டவுட்டு

      நீக்கு
    2. " அம்மா " (பசு கத்துகிறது!)

      நீக்கு
  18. KGG பகுதியை நான் விரும்பிப் படிப்பேன். அதில் இருக்கும் அப்பாவித்தனம் புத்திசாலித்தனம் உண்மைத் தன்மை இளவயது கஷ்டத்தை இயல்பாக எழுதுவது, பயங்கர ஞாபகசக்தியுடன் நிகழ்வுகளை எழுதுவது என்று பல்வேறு காரணங்களுக்காக.

    பிரிவோம் சந்திப்போம் பாகம் 2 போல் இனி சென்னை அனுபவம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "ஹா ஹா ஹா ஹக்சூ" (தும்மல்) நெ த வைத்த ஐஸால் வந்தது.

      நீக்கு
  19. கேஜிஜி சாரை விரைவில் அக்காவுடன் சந்திக்கணும்.

    பதிலளிநீக்கு
  20. சரி சரி தமன்னாவின் படங்களைப் போட்டு அடுத்த புதன் கேள்விகள் மனசுல எழுகிறது

    இவங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும், ரசிகர்களும் எந்தக் காரணத்திற்காக என்பது அவர்களுக்குப் புரிந்திருக்குமா?

    அந்த அது-இளமை தொலைந்த பிறகு யாராலும் கவனிக்கப்படாமல் போகும்போது அவங்க மனநிலை எப்படி இருக்கும்?

    இந்தக் கேள்விகளுக்கு பதிலை யோசிக்குமுன் தகுந்த தமன்னா அனுஷ்கா படங்களை கேஜிஜி தேடுவாரா இல்லை பதிலை யோசிப்பாரா?

    பதிலளிநீக்கு
  21. KGS பகுதி மனதில் தாக்கத்தை உண்டுபண்ணியது. அன்று நான் அதைப்பற்றி feedback எழுத விட்டுப்போனது. இளமையில் வறுமை சிக்கனம் என்பது வளரும் குழந்தைகளுக்குக் கஷ்டம்

    பதிலளிநீக்கு
  22. அப்ளிகேஷன் தபால் பெட்டி.... நான் டிகிரி முடித்த வருடம் எதுக்கோ அப்ளிகேஷன் போடச் சொன்னார் அப்பா. எல்லாச் சான்றிதழ் காப்பி கடிதம் கவருணன் போஸ்ட் ஆபீஸ் சென்று கவரில் போட்டு ஒட்டி போஸ்ட் செய்தேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா எவ்வளவுக்கு ஸ்டாம்ப் வாங்கி ஒட்டின எனக் கேட்டதும்தான் அப்படி ஒன்று இருப்பதே நினைவுக்கு வந்தது

    வேலக்குப்போன முதலிரு வருடங்கள் பேங்க் வேலை முழுவதும் தம்பி எனக்குச் செய்வான். ஒருமுறை அவன் நீ வரும்போது டெபாசிட் பார்ம் பேங்கில் வாங்கி fill up பண்ணிக் கொடு நான் நாளை டெபாசிட் பண்ணறேன் என்றான். நானோ வித்டிராயர் பார்மை எடுத்து சிலவற்றை fill up பண்ணி மீதி இடங்களில் என்ன எழுத என்று அலனிடம் கேட்டேன். டெபாசிட் பார்முக்கும் வித்டிராயல் பார்முக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலை இனி நீதான் உன் பேங்க் வேலைகளைப் பாத்துக்கணும் என்று சொல்லிட்டான்

    பதிலளிநீக்கு
  23. பஞ்ச கல்யாணி என்றால் அந்த குதிரைக்கு நான்கு கால்களிலும் அதன் கணுக்கால் பகுதியில் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதோடு நெற்றியில் பொட்டு வைத்தது போல வெள்ளை நிறத்தில் இருக்கும். இப்படி ஒரு குதிரைக்கு ஐந்து இடத்தில் வெள்ளையாக இருந்தால் அது பஞ்சகல்யாணி குதிரை என்பார்கள்.

    இப்படி சொல்கிறார்கள் பஞ்ச கல்யாணி பற்றி.

    பதிலளிநீக்கு
  24. ஒரே பழம்... மாம்பழத்திலும் பங்கனப்பள்ளி ரஸ்பூரி மல்லிகா பதாமி மல்கோவா, நாட்டுப்பழம் என வித விதமாக வாங்கினாலும் ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். இதேதான் திராட்சை ரகங்களுக்கும். இருந்தாலும் சீசன் ஓரிரு மாதக்கள்தாம் (நவாப்பழம் ஒருசில வாரங்கள், ..) என்பதால் வாங்கிவந்துவிடுவேன்

    பதிலளிநீக்கு
  25. ஒரே பழம்... மாம்பழத்திலும் பங்கனப்பள்ளி ரஸ்பூரி மல்லிகா பதாமி மல்கோவா, நாட்டுப்பழம் என வித விதமாக வாங்கினாலும் ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். இதேதான் திராட்சை ரகங்களுக்கும். இருந்தாலும் சீசன் ஓரிரு மாதக்கள்தாம் (நவாப்பழம் ஒருசில வாரங்கள், ..) என்பதால் வாங்கிவந்துவிடுவேன்

    பதிலளிநீக்கு
  26. புதன் வியாழன் பகுதிகளை நான் ஊன்றிப் படித்துவிடுவேன்

    ஷதாப்தி யிலிருந்து எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  27. இத்தனை வாரமும் KGS-ஆ என்று கேட்டதற்குக் காரணம், ஹி..ஹி..
    தெரிஞ்சே செஞ்ச ஒன்று
    தான் அது!...

    KGG-யின் பெயரை அடித்து KGS பெயரைப் போட்டிருந்ததை அது வரை கவனிக்காதவர்களின் கவனத்தைக் கவர்வதற்குத் தான்!

    .இருவரின் எழுத்து நடைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைத் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்தும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். ஸ்ரீராம் பதிலளிக்கும் வரை யாரும் 'அந்த விஷயத்தை'க் கவனிக்கவேயில்லை என்பதை என்னவென்று சொல்ல?..

    பதிலளிநீக்கு
  28. கேள்வி - பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    கே.ஜி.ஜி. பக்கம் - சென்னை அனுபவங்களை படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!