சதா குறைப்பட்டுக்கொண்டு குறை இல்லை என்று பாடினால் எப்படி ? என் மன நுலையை உள்ள படிக்கு கண்ணனிடம் சொல்ல முடிவு செய்தேன்:
(ராஜாஜி & எம்.எஸ் மன்னிக்கட்டும்)
குறையென்றும் உண்டு மறைமூர்த்தி கண்ணா
குறையென்றும் உண்டு கண்ணா...
1
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்பதால் எனக்கு
குறை யென்று உண்டு மறை மூர்த்தி கண்ணா.
2
வேண்டியதைத்தந்திட வேங்கடேசன் நீயிருந்தும்
வேண்டுவது மிகவுண்டு ..மறை மூர்த்தி கண்ணா..
3
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
எனவேதான் குறைரொம்ப எனக்குண்டு...
4
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா.
குறைபலவுமுண்டு மறை மூர்த்தி கண்ணா
5
கலி நாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
சிலையாகக் கோவிலில் காணாது நிற்கின்றாய்
எனவேதான் குறையுண்டு எனக்கு மறை மூர்த்தி கண்ணா
6
யாரும் மறுக்காத மலையப்பா
உன்மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
எனக்குப் பராமுகமாய் இருப்பதென்றன் குறையே
என்று இது நீங்கும் மறைமூர்த்தி கண்ணா..




