வியாழன், 25 ஆகஸ்ட், 2022

புலிக்கு பலி

 உத்தரப்பிரதேசத்தில் பிலிபிட் என்றொரு இடம் இருக்கிறது.  இங்கு இந்த ஊரின் 23 சதவிகித அளவு வங்களால் சூழப்பட்டதுதான்.  இந்த ஊரில் உள்ள வனப்பிரதேசத்தை 2014 ல் மத்திய அரசு  புலிகள் சரணாலயமாக அறிவித்தது.  இங்கு சுமார் 25 புலிகள் இருக்கக்கூடும் என்கிறது பழைய தகவல் ஒன்று.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சிறுகதை : செல்லமே செம்பகமே - கீதா ரெங்கன்

 

(எபி ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி. அவர் வீட்டு வாசலில் கடைசி தருணங்களைக் கழித்த செம்பகம் பற்றி, அவர் காசிக்குச் சென்று வந்த பின் ஓரிரு மாதங்களில் நடந்த நிகழ்வு. அவர் பதிவும் போட்டிருந்தார். அப்போது உருவான கதையை இப்போது முடித்து அனுப்ப, அவர் எனக்கு அப்போது அனுப்பியிருந்த படங்களைத் தேடினால் அவை கேடான ஹார்ட் டிஸ்கில் மீட்கப்படாமல் இருக்க...எங்கள் ப்ளாகிலும் பதிவைத் தேடினேன் டக்கென்று கிடைக்கவில்லை. ஸ்ரீராமிடம் சொல்ல அவரே படங்களை அனுப்பிட ...ஸ்.....பாஆஆஅ ஒரு வழியா கதையை முடித்து அனுப்பினேன். மீதி விவரங்கள் கருத்தில்!)

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

'திங்க'க்கிழமை பதிவு - கேரட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 இந்த வருடத்தில் இதுதான் முதல் தி. பதிவு என்னிடமிருந்து. நிறைய எழுதாததற்கு மன்னிக்கவும். சோம்பேறித்தனம் மற்றும் ஆர்வமின்மைதான் காரணம். இந்த வருடமே என் priority மாறிவிட்டதால், சமையலறைப் பக்கம் ஒதுங்குவதில்லை. முன்பெல்லாம் இணையத்தைப் பார்த்து ஏதாவது செய்ய முயல்வேன். நான் எழுதிவைத்திருக்கும் செய்முறைகளையே இன்னும் செய்துபார்க்கவில்லை (தேன்மிட்டாய், கம்மர்கட்.....)

அன்புடன்

நெல்லைத்தமிழன்

சனி, 20 ஆகஸ்ட், 2022

சொந்த ஊர் என்றதுமே... மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

பெரம்பலுார்:சொந்த கிராமத்துக்கு, 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவிய கிராம வாலிபருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : பயத்தில் மனது தவிக்கின்றது... இருந்தும் விருந்தை நினைக்கின்றது

 இந்த ஆல்பத்திலிருந்து சில பாடல்களை ஏற்கெனவே பகிர்ந்தாயிற்று.  இன்று இன்னுமொரு பாடல்.  இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு..

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

சின்னப்புறா ஒன்று..

 சந்தோஷமோ, துக்கமோ, வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லைதான்.  என் வருத்தம் சட்டென 24 மணிநேரத்தில் குறைந்தது எனக்கே ஆச்சர்யம்தான்..

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

'திங்க'க்கிழமை  :  கத்திரிக்காய் சாதம் இரு முறைகளில்! - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 ஊருக்குப் போறச்சே வாங்கி வைச்ச கத்திரிக்காயை நேத்திக்குக் கறி பண்ணினாலும் நாலு மிச்சம் இருந்தது. அதில் இன்னிக்குக் கத்திரிக்காய் சாதம் பண்ணினேன். ஆரம்பிக்கையில் படம் எடுக்கும் எண்ணமோ போடும் எண்ணமோ இல்லை. கத்திரிக்காய் வதங்கும்போது தான் படம் எடுத்துப் போடும் எண்ணம் வர சரினு கறி நிலைமையில் கத்திரிக்காய் இருக்கும்போதே படம் எடுத்தேன்.

சனி, 13 ஆகஸ்ட், 2022

இகழ்ச்சி அடையா முயற்சிகள் - மற்றும் - நான் படிச்ச கதை (JC)

 மதுரை:'இஸ்ரோ'வின், 'ஆசாதி சாட்' செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : வானில் தோன்றும் மாலை சிவப்பு.. விழிகளில் பாதி விரல்களில் பாதி..

 எழுதியவர் யார்?  தெரியாது!  இசையமைத்தவர் யார்?  தெரியாது.  ஒருவேளை புகழேந்தியாய் இருக்கலாம்.  பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

என் உயிர் நான்தானே... உன் உயிர் நான்தானே

 முன்னர் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒரு நண்பர் பற்றி எழுதி இருந்தேன்.  செய்வினை, அதன் நீக்கம் பற்றிய அனுபவத்தையும் எழுதி இருந்தேன்.  அந்த சம்பவத்தில் அந்த நபருக்கும் (சட்டென) குணமாக,  இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

திங்கக்கிழமை  :  தாலி பீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சில வருடங்கள் முன்னர் காலையில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு சமயத்தில்  தினம் ஒரு புது வித உணவு தயாரிப்பில் ஈடுபடுவேன். அப்படி ஒரு முறை. மராத்திய உணவு வகைகளில் ஒன்றான  தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக.

சனி, 6 ஆகஸ்ட், 2022

எளிமை டாக்டர் + மற்றும் நான் படிச்ச கதை (JC)

 பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், பெற்றோரை இழந்த ஏழை பிள்ளைகளை தத்தெடுத்து, படிக்க வைத்து வருகிறார்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

வெள்ளி வீடியோ : மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..

 சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரமும் ஒருமுறை சேர்ந்து சிதம்பரம் கோவிலுக்குச் சென்றபோது

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

இஸ்க்கு... .

 'ஊபர் பைக்'குக்காகக் காத்துக் கொண்டு செல்லை நோண்டிக் கொண்டிருந்தபோது வலது முழங்கையில் யாரோ தொட்டார்கள்.  சட்டையைப் பிடித்து லேசாக இழுத்தது போல இருக்க, திரும்பிப் பார்த்தபோது ஒரு உருவம் தெரிந்தது.