சனி, 31 ஜூலை, 2010

ஜேகே -- மரணத்துக்குப் பின்னும் தொடரும் எண்ணம்.


(ஒரு கணிசமான இடை வேளைக்குப் பிறகு...)
..
ஒருவரின் பூத உடல் மரித்தபின்னும் எண்ணம் தொடர்கிறது. இது நிரூபிக்கப் பட்ட ஒன்று. எண்ணம் என்பது தொடர்ச்சிதான். எல்லாம் சொன்னபின், நீங்கள் என்பது யார்? நீங்கள் ஒரு எண்ணக்குவியலின் உருவம்தான் அல்லவா? ஒரு பெயர், ஒரு உருவம், பணம் இப்படியான பல எண்ணங்களின் உருவம்தான் நீங்கள். ஒரு கருத்துக் குவியலின் வடிவம். அந்த எண்ணங்களை, கருத்துக்களை நீக்கிவிட்டால், அந்தப் பெயர், பதவி இவற்றை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் "நீங்கள்" யார்? எண்ணங்கள் " நான் " எனும் குவியத்தில் இருப்பதுதான் நீங்கள்! எண்ணங்கள் தொடரவேண்டும், மேன்மையடையவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். காரணம் எண்ணங்கள் வழியே உண்மை என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எண்ணங்களின் மேம்பாடு என்னை பூரணத்துவம் அடையச் செய்யும் என்று நினைக்கிறீர்கள். அதனால்தான் எண்ணங்கள் தொடரவேண்டும் என்று விரும்புகிறீர்கள். எண்ணங்கள் சத்தியத்தை, கடவுளை, இப்படியாக என்ன பெயர் சொன்னாலும் சரி, அதை அடைய வழி வகுக்கும் என்று நம்புகிறீர்கள்.


மரணம் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்


பருவுடல் வயது, மூப்பு, நோய், விபத்து இப்படியாக ஏதோ ஒரு காரணத்தால் அழிகிறது. இது மாற்றமுடியாதது. இது நடப்பதை தொடர்ந்து கண்டுவருவதால் இதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால், உடலுக்கும் அப்பால், " நான் " என்று ஒன்று இருக்கிறது. என் ஒட்டு மொத்தப் புரிதலின் வடிவமாக அது இருக்கிறது. நான் சேகரித்த அனுபவங்கள், என் செயல்கள், நான் ஆசைப்பட்டு குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதன் பலன், இவை யாவும் பௌதிக உடல் அல்ல. மனரீதியிலான " நான் " ஆகும். இது என் நினைவுகளின் மொத்த உரு. இதை அழிவின்றி தொடர்ந்து வைத்துக் கொள்ள நான் ஆசைப் படுகிறேன். மரணம் அல்ல, இந்த சேமிப்புகள் முடிவுக்கு வருவதுதான் நமக்கு உண்மையான அச்சம் தருவதாகும்


வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் பகுப்பு எதுவும் இல்லை. தம் பௌதிக சேமிப்புகளின் மேல் கொண்டுள்ள பற்றுதலாலும், அவை தொடரவேண்டும் என்ற மூடத்தனமான அற்ப ஆசையாலும், மனிதன் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஒரு பாகுபாடைக் கொண்டுவருகிறான். அந்த மாதிரியான மக்கள், மறு ஜன்மம் என்ற கொள்கையை தம் அச்சத்தை மூடி மறைக்கவும், தாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆசையாலும் பற்றிக்கொள்கிறார்கள். எண்ணங்கள் தொடர்கின்றன என்பது வெளிப்படையாகத் தெரியும் ஒன்றுதான். ஆனால் உண்மையை நாடும் எவரும் எண்ணங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை. காரணம், எண்ணங்கள் உண்மைக்கு கொண்டு செல்வதில்லை என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். " நான் " மறு ஜன்மம் வழியே உண்மையைத் தேடலைத் தொடர்வதாக எண்ணிக்கொள்வது பொய்மையானது.  

வெள்ளி, 30 ஜூலை, 2010

எங்கள் வாசகர்கள் சினிமாட்டிக்(கெட்)டிக் ‌‍‌


முதலில் இரண்டு தவறுகளுடன் வெளியான புதிருக்கு,  மணி (ஆயிரத்தில் ஒருவன்) எல்லா விடைகளையும் சரியாக எழுதி, ஒரு தவறையும் எடுத்துக் காட்டி எழுதி இருந்தார்.  மணிக்கு இருபதுக்கு இருபது.

அதே சமயத்தில், ஸ்ரீமாதவன், பத்து சரியான விடைகளை எழுதி இருந்தார்.

புதிர் வெர்ஷன் இரண்டு வெளியிடப்பட்டது. அப்பாவி தங்கமணி (குணசுந்தரி தவிர) எல்லா விடைகளையும் சரியாக எழுதி, ஒரு தவறு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார். அவருக்கும் இருபதுக்கு இருபது.

பிறகு வந்த பதில், ஹேமா அவர்கள் அனுப்பியது. எல்லாமே சரி. அவருக்கு 20/20.
பிறகு எல்லா பதில்களும் சரியாக அனுப்பியவர் பெயர் சொல்ல விருப்பமில்லை (20/20) 


Altruist http://brindhaavanam.blogspot.com/  இவர் அனுப்பியிருந்த பதில்கள் இருபதுக்கு பதினேழு சரி.

கடைசியில் பதில்கள் அனுப்பி, இருபதுக்கு பத்தொன்பது பெற்றார், மீனாக்ஷி SPS. 
இவர்கள் எல்லோருடைய ஆர்வமும், சினிமா ஞானமும், பாராட்டுக்குரியவை. 

இது குறுக்கெழுத்துப் புதிர் அமைப்பதில், எங்கள் முதல் முயற்சி. அடுத்த முயற்சியில், தவறுகள் இல்லாமல் அமைப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றி. 

வியாழன், 29 ஜூலை, 2010

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ? எண்காலி 04

டிர்ர்ரிங் ...... டிர்ர்ரர்ர்ரிங் ................
ட்டடக் ..... டக் .....  டக் ....
ஞீ ஈ ஈ .......... ஈ
(என்ன இதெல்லாம்? )
ஒன்று : வழக்கமான டெலிபோன் சத்தம் இல்லை.  வாசல் அழைப்பு மணி சத்தம்.
இரண்டு : தாழ்ப்பாள் விலக்கும் சத்தம்.
மூன்று : கதவில் உள்ள (எண்ணைப் பசையே காணாத) கீல், கதவைத் திறக்கும்பொழுது எழுப்பிய ஓசை.

"வாடா வா. என்ன ஏதோ மென்பொருள் வன்பொருள் எதையோ ரிச்சி ஸ்ட்ரீட்லேயிருந்து வாங்கிகிட்டு வந்திருக்கேன் என்று சொன்னாயே அது என்ன? என்ன செய்யும்?"

"அவசரப் படாதே! இதோ பாரு இந்த சிறப்புக் கருவிக்கு, "ஒலி - எழுத்து, யோசி, அச்சிடு, பேழையிடு' என்று பெயர்."

"இது எதற்கு? என்ன செய்யும்?"

"என்ன இப்படி கேட்டுட்டே? இங்கே பாரு இந்த பச்சை சுவிட்சை ஆன் செய்."

"செஞ்சிட்டேன் - அப்புறம் என்ன செய்யணும் என்பதையும் சொல்லிவிடு."

"இப்போ பால் கிட்டே - உனக்குத் தோன்றுகிற கேள்வி எதையாவது கேளு."

"இதோ கேட்கிறேன். எங்க வீட்டு நாற்காலிக்கு எவ்வளவு கால்கள்?"

என்ன ஆச்சரியம்? உடனே அந்த கருவியில் ட்டிர்ர் டிக் டிக் டிக் என்ற சப்தத்துடன் நான்கு காப்சூல்கள் வந்து விழுந்தன. 

"என்னடா இது? ஒருநாளைக்கு, ஒரு வேளைக்கு ஒன்றாக இரண்டு வேளைகள், இரண்டு நாட்களுக்கு இந்த காப்சூல்களை சாப்பிடணுமா?"

"போடா பக்கி. அதெல்லாம் எதுவும் இல்லை. இந்த காப்சூல்களை அப்படியே எண்காலி கிட்டே போடு. அது ஒரு காப்சூலை எடுத்து கொடுக்கும்."

அவ்வாறே செய்கிறான். பால் ஒரு காலால் ஒரு காப்சூலை எடுத்து வெளியே போடுகிறது. 

"அட! ஆமாம். இரு அது எடுத்துக் கொடுத்த இந்த காப்சூலுக்குள் என்ன இருக்கிறது பார்க்கிறேன்! ஹூம் ரொம்ப சுலபமான கேள்வி கேட்டேன், அது என்னடா என்றால், மூன்று கால்கள் என்று எழுதிய பேப்பரை எடுத்துக் கொடுத்திருக்கு!"

"அப்படியா?"

"ஹ ஹ ஹா - எண்காலிக்கு ஒரு நாற்காலிக்கு எவ்வளவு கால் என்று கூடத் தெரியவில்லை. இதை எல்லாம் வெச்சிகிட்டு ஏதாவது ஜோசியம் பார்த்துச் சொன்னால் எவனாவது நம்ம முதுகுல டின் கட்டிடுவான்!" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந் ...

'டமால்' 

பிளாஸ்டிக் நாற்காலியின் ஒரு முன் பக்கக் கால் 'பப்பரப்பா' என்று விரிந்து ஒடிந்து கீழே விழுந்தான் நம் கதா நாயகன். எண்காலி ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்டு 'புர்ர்க்' என்று சிரித்தது.

**********
கதா நாயகன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், பால் கேள்வி பதில்கள் மேலும் கொஞ்சம் :

? நான் உட்கார்ந்து, கௌரவமான தொழில் செய்து சில்லறை சேர்க்க ஆசைப் படுகிறேன். என்ன தொழில் செய்யலாம்?
! கட்டணக் கழிப்பிடம் வைக்கவும். !

? நான் பொழுதெல்லாம் சும்மா உட்கார்ந்து கழிக்க ஆசைப் படுகிறேன். என்ன செய்யலாம்? 
! மேற்கண்ட கட்டணக் கழிப்பிடம் போய் பொழுதெல்லாம் கழியவும் - சாரி கழிக்கவும்! 

? ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் என்கிறார்கள்; எதிர் வரும் தேர்தலில் அலை வீசவேண்டும் என்றால் என்ன செய்வது?
! தேர்தல்கள் எல்லாவற்றையும் கடலோர மாவட்டங்களில் மட்டும் வைக்கவும்!

(தொடரும்)  

புதன், 28 ஜூலை, 2010

படப்பெயர்கள் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர்


மேலிருந்து  கீழ்: 
1) சிவாஜி பாரதியாராக வந்தார் ஒரு பாடல் காட்சியில். (தமிழர், மலையாளத்தவர், தெலுங்கில் பாட்டுப் பாடி போட்டிங் போவது பற்றி.) (படப் பெயர் 9 எழுத்துக்கள்)

2) KSG என்னும் மூன்றெழுத்து இயக்குனர் இயக்கிய நான்கெழுத்து நடிகை நடித்த மூன்றெழுத்துப் படம். அப்புறம் இதே பெயரில் ஒரு தொலைக்காட்சி சீரியலும் பிரபலம்.

4) நடிகர் திலகமும், சூப்பர் ஸ்டாரும் நடித்த நான்கு எழுத்துப் படம். 

5) நல்ல 'குண'மும் 'அழகு'ம் ஒருங்கே கூடிய பெண்.

6) செண்பகப் பாண்டியனுக்கு சந்தேகம் வந்தது. நாகேஷுக்கு நகைச்சுவை சிகரத்தைப் பிடிக்க சந்தர்ப்பம் வாய்த்தது!

8) ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும் ....  பாடல் இடம் பெற்ற மூன்றெழுத்துப் படம். இந்தப் படப் பாட்டில் ஒரு சிறப்பு, கதிர் அறுக்கின்ற  நாளை, நெல்லின் மணநாளாக சித்தரித்து ஒரு வித்தியாசமான வரி.

10) அரசி Honey bee 

11) Running river.

12) சிவாஜி. நடிப்பில் அவர் ஒரு - - - - (நான்கெழுத்து) 

13) அந்தக் காலத்தில் வந்த, முன்னாள் முதல்வர் (பேயாக) நடித்த மூன்றெழுத்து பேய்ப் படம்.

14) 16) 17)  சமீப கால sports படம். ( 4 + 3 + 2 ) எழுத்துக்கள்.


19) இதுவும் ஒரு மூன்றெழுத்துப் படம்தான். இரண்டு முறைகள் இதே தலைப்பில் படம் வந்துள்ளது. முன்பு வந்த படத்தில் நடித்தவர் பெயரும் மூன்றெழுத்து + மூன்றெழுத்து. பிறகு நடித்தவர் பெயரும் மூன்றெழுத்து + மூன்றெழுத்து.

இடமிருந்து வலம் :  
1) இந்த மூன்றெழுத்து உள்ள டாக்டர்களுக்கு எப்பொழுதுமே டிமாண்ட் இருக்கும். 

3) ஒரு மூன்றெழுத்து முதல்வரின் மூன்று இலக்க படம். இதில் வந்த ஒரு பாடல் காட்சி, அந்த முதல்வர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாட்களில் பட்டி தொட்டி எங்கும் பாடப் பெற்றது.

7) சிலர் இந்த மூன்றெழுத்துப் படப் பெயரை விளையாட்டாக '3D' என்பார்கள். 

9) முடி எங்கேயாவது வணங்குமா? அது பற்றி வந்த ஐந்தெழுத்துப் படம். 

15) உயர்ந்த மனிதனில் கலக்கிய இரண்டு நடிகர்கள் இந்த நாலெழுத்துப் படத்தில் ரசிகர்கள் எல்லோரையும் அறுத்து ஓட ஓட தியேட்டரை விட்டு விரட்டினர் என்று சொல்வார்கள். 

18) கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த பாம்புப் படம். ஸ்ரீப்ரியா கண்களில் ஸ்பெஷல் லென்ஸ் பொருத்திக்கொண்டு நடித்தார் என்று சொன்னார்கள். 

வலமிருந்து இடம் :

8) இரவுச் சூரியன் என்பதன் எதிர்ப் பதங்கள். 

மேலிருந்து கீழும் இல்லை; இடமிருந்து வலமோ அல்லது வலமிருந்து இடமோ கிடையாது: 

18) முன்காலத்தில் வந்த ஓரெழுத்துப் படம்.   


மணி (ஆயிரத்தில் ஒருவன்) இந்தப் புதிருக்கு ஏற்கெனவே முழுவதும் விடை சரியாக எழுதிவிட்டார். அவருக்கு எங்கள் ப்ளாக் அளிக்கும் பரிசு 1001 பாயிண்டுகள் உரித்தாகுக! 
ஸ்ரீமாதவன் அவர்களும் நிறைய சரியான விடை அனுப்பி உள்ளார். 


இங்கே க்ளூ கொடுக்கப்பட்டுள்ள இருபது படங்களின் பெயரையும், (அல்லது தெரிந்த அளவுக்கு ) வாசகர்கள், engalblog@gmail.com ஜி மெயிலுக்கு அனுப்பவும். 

படப் பெயர் - புதிர்.


மணி (ஆயிரத்தில் ஒருவன்) நீங்கள் எழுதிய எல்லா விடைகளும் சரிதான்.
பதிவில், திருவிளையாடலுக்கும், தெய்வ மகனுக்கும் எந்த எழுத்தும் பொது இல்லை என்பதும் சரி பார்க்கப்படவில்லை.

இ(அ)ந்தப் புதிரை பதிவிட்ட ஆசிரியர், வேறு ஒரு சரியான புதிரை விரைவில் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். அதுவரையிலும் மக்கள், கீழ்க்கண்ட கலக்கல் பதிவைப் படிக்கும்படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.  

 http://konjamvettipechu.blogspot.com/2010/07/blog-post_26.html 
  

திங்கள், 26 ஜூலை, 2010

இட்லியும் தோசையும்

சுடச் சுட சில கேள்விகள்!

இட்லியும் தோசையும் சற்றேறக் குறைய ஒரே கலவையால், ஒரு கரண்டி மாவு கொண்டு தயாரிக்கப்படுபவை. ஆனால், ஹோட்டல்களில், இட்லியை விட தோசை விலை அதிகம். ஏன்?


சீரியஸ் கேள்வி அல்ல. தமாஷான பதில்களும் வரவேற்கப்படுகின்றன.


பசியோடு இருக்கும் உங்களிடம், மேலும் ஒரு கேள்வி, இட்லிக்கு மற்றும் தோசைக்கு, என்ன சைட் டிஷ் உங்களுடைய தெரிவு என்பதையும் பதிந்து, படிப்பவர் மனதில் ஆசை ஏற்படுத்துங்கள். 



வெள்ளி, 23 ஜூலை, 2010

என்ன என்ன வார்த்தைகளோ? எண்காலி 03

டிர்ரிங்........ டி ர்ர்ர் ர்ரிங் ....

"ஹலோ இந்தப்பக்கம் கோடீஸ்வரன் கோணச்சாமி. அந்தப்பக்கம் யாரு?"

"உம்? கேடி கேனையன்! கோடீஸ்வரன் கோணச்சாமியா?  - இது  யாரு கொடுத்த பட்டம்டா?"

"பட்டமா? போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக் கணக்கு! நான் இப்போ மெய்யாலுமே கோடீஸ்வரன். தெரியுமா? விளம்பரம் எங்கள் ப்ளாக் ல போட்டுட்டாங்கடா. பார்த்த உடனேயே எல்லா பத்திரிக்கை ஆபீஸ்லேயிருந்தும் ஏகப்பட்ட கால். எல்லோரும் இந்த விளம்பரத்தை இலவசமாகவே போடுகிறோம், என்கிறார்கள்"

" நீ என்ன சொன்னே? "

" பார்ட்னருடன் கலந்தாலோசித்து பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன்."

" வெரி குட் - இப்ப என்னுடைய ஆலோசனை தேவையா?"

"உன்னுடைய ஆலோசனை எவனுக்கு வேணும்? நான் என்னுடைய பார்ட்னரை கலந்தாலோசித்து அப்பவே ஓ கே சொல்லிட்டேன்."

"யாருடா அந்த பார்ட்னர்?"

"பால்."

"அடப்பாவி!"

"அடப்பாவி இல்லேடா, அஷ்ட காலி, என் அதிர்ஷ்ட காலி."

" டேய் பால் ஜோசியம் பற்றி ஐடியா நான்தானே கொடுத்தேன்? விளம்பர ஐடியா வரையிலும்  நான்தானே உனக்குப் பார்ட்னர்? அதற்கு எனக்கு ஃபீஸ் எதுவும் கிடையாதா?"

"எவ்வளவு வேண்டும்?"

" ஒரு கோடி."

" இன்னும் அரை மணி நேரத்தில் குரியர்ல உனக்கு செக் அனுப்புகிறேன்."

" வாவ்! ஒரு கோடி ரூபாய்க்கா?"

" இல்லை, 10000000 - 900 = 9999100 ரூபாய்க்கு. நீ இந்த பதிவில் இதுவரை ஒன்பது கேள்வி கேட்டிருக்கிறாய். அது எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு கேள்விக்கும் நூறு ரூபாய் கழித்தாயிற்று."

'டமால்!'

"ஹல்லோ? ஹல்லோ ?? அடப்பாவி! கொஞ்ச நேரம் விளையாடிப் பார்த்தேன், அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்துவிட்டான் போலிருக்கே!"
* * * * *
பி ஏ வின் இடது கை மயக்கம் தெளிந்து எழுவதற்குள், பாலிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளையும், பதில்களையும், அதற்கு பால் சார்பில் போடப்பட்ட கட்டண விவரத்தையும் பார்ப்போம். சில கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டன. அவைகளை முழுவதுமாக இங்கு வெளியிடவில்லை. (ஆனால் கட்டணம் எல்லோரிடமும் விடாமல் வசூல் செய்யப்பட்டது!)

? ஹல்லோ, நான் பால் கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?
! கேட்கலாம்!. (ரூ நூறு)

? இது ஜெர்மனியிலிருந்து வந்த எண்காலி, பாலா?
! ஆமாம்! (ரூ நூறு)

? நீங்க செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா?
! இருக்கு! (ரூ நூறு)

? எனக்கு, சின்னவீடு அமையுமா?
! அமையும். அப்புறம் அதை இடிச்சு பெரிய வீடா கட்டிக்குவீங்க. (ரூ ஆயிரம்)

? ஊரைவிட்டு ஓடிப்போன என் (ஃபைனான்ஸ் கம்பெனி)  கணவர், எனக்குத் திரும்பக் கிடைப்பாரா?
! முதலில் போலீசுக்குக் கிடைக்கட்டும். (கட்டணம் இல்லை, இலவசம்)

? எங்க மாமா சொத்தை நான் எப்படி அடைவது?
! அவரைப் போன்றே ஸ்வீட் சாப்பிட்டு! (ரூபாய் நூறு)

? வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நின்றால் எனக்கு வெற்றி கிட்டுமா?
! வெற்றி உங்களுடையதே, நிறைய தர்ம காரியங்கள் செய்தால்! (ரூபாய் ஒரு லட்சம்)

? தர்ம காரியங்கள் என்றால் என்ன? 
! வோட்டுக்கு துட்டு, ஆரத்தி தட்டிலே துட்டு, அடியாட்களுக்கு துட்டு, இப்படி நிறைய இருக்கு. (ரூபாய் ஐநூறு)

? ஐநூறு ரூபாயா? எப்படி?
! இந்த இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து. (கட்டணம் - ஏற்கெனவே சொல்லியாயிற்று)

? நான் காதலிக்கும் பெண்ணை மணக்க முடியுமா?
! இதை அவர் காதலிக்கும் ஆளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். (இலவசம். ஐயோ பாவம்) 

? இரண்டாயிரத்துப் பன்னிரெண்டில் உலகம் அழியுமா?
! அழியாது. (ரூபாய் நூறு)

? அப்ப, எப்பத்தான் உலகம் அழியும்?
! உலகத்தை விடப் பெரிய அழி ரப்பர் உருவாகும் பொழுதுதான் உலகத்தை அழிக்கமுடியும்! (கட்டணம் கிடையாது. ஜோக் எழுத சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி)
********

பி ஏ வின் இடது கை மயக்கம் தெளிந்து எழுந்து, " ஹா! நான் எங்கே இருக்கிறேன்?"
ஃபோனில் (இன்னும் தொடர்பு துண்டிக்கப்படாததால்) ..."நீங்க எங்கே மயக்கம் போட்டு விழுந்தீங்களோ அதே இடத்தில்தான் ! (கட்டணம் ரூ நூறு)"
இதை கேட்ட பி ஏ இடது கை மீண்டும் மயக்கம் வருவது போல உணர்வுடன் .......
(தொடரும்) 

பின் குறிப்பு. சொப்பன சுந்தரி அனுப்பி வைத்த அவருடைய மேக் அப்புடன் உள்ள ஃபோட்டோ அடையாளம் தெரியாத இருவரால் கடத்தி செல்லப்பட்டுவிட்டது. கடத்த வந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் Father என்றும், Lord என்றும் அழைத்துக்  கொண்டனர் என்று கேள்விப் பட்டோம்.  

புதன், 21 ஜூலை, 2010

உள் பெட்டியிலிருந்து....இந்த மாதம்.

பொது அறிவுக் கேள்வி. 

கண் தெரியாத, காது கேட்காத, படிக்காத, ஊமைப் பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவளைத் தொடாமல் அவளிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும். எப்படி?
=========================================================================
ஊக்க வரிகள்: 


இப்போது இல்லை என்றால் எப்போது? உன்னால் முடியாதென்றால் யாரால் முடியும்?
======================================================================
இரண்டாவதாய் வருபவன் சொல்வது..."முடியும்...ஆனால் கஷ்டம்.."

முதலாவதாய் வருபவன் சொல்வது,"கஷ்டம்..ஆனால் முடியும்"
============================================================
கனவுகளைக் கண்ணில் தேக்கினால் கண்ணீராய் கீழே விழுந்து விடும். அதையே இதயத்தில் நிறுத்தினால் ஒவ்வொரு இதயத் துடிப்பும் அந்தக் கனவுகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். (யாரோ)
============================================================
நல்ல எண்ணமா, நடிப்பா?

தோற்றவன் புன்னகையைத் தொலைக்காமல் இருந்தால், வென்றவனுக்கு வெற்றி பெற்ற திருப்தியோ / சந்தோஷமோ  இருக்காது.
=========================================================
நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர்த் துளிகளுக்கு மதிப்பில்லை. கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீர்த் துளிகளுக்கு வேலை இல்லை.
=========================================================  
ஷேக்ஸ்பியர் :
காரணமே இல்லாமல் வருவதுதான் உண்மையான அன்பு. காரணம் இருந்தால் அது உண்மை அன்பு அல்ல. (அப்படியா?)
==========================================================
ஜப்பான் பஸ்-ஸ்டாப்பில் பார்த்த வாசகம்: 
இங்கு பஸ்கள் மட்டுமே நிற்கும். உங்கள் நேரம் அல்ல. உங்கள் இலக்கை நோக்கி நடந்து கொண்டே இருங்கள்.  
======================================================
அனுபவங்கள் ஆண்களை முழுமையானவனாக்குகின்றன. பெண்கள்? அவர்கள் பிறக்கும்போதே முழுமையானவர்களாகத்தான் பிறக்கிறார்கள். (perfect)
=====================================================
மும்தாஜ் ஷாஜஹானின் ஏழு மனைவிகளில் நான்காவது மனைவி.
ஷாஜஹான் மும்தாஜை மணக்க அவரது முதல் கணவனை போரில் கொன்றுவிட்டுதான் அவர் கைப் பிடித்தார். மும்தாஜ் தன் பதினாலாவது பிரசவத்தின்போது இறந்து போனார்.
தாஜ் மஹால் காதலின் சின்னம்தானே! 
==========================================================
உங்களுடைய தவறுகளை அறிந்து கொள்ள உங்கள் எதிரிகளின் பேச்சைக் கேளுங்கள். உங்கள் தவறுகளை உங்களை விட அறிந்தவர்கள் அவர்கள்தான்.
=================================================================.
ஒவ்வொரு மழைத்துளியும் உன் புன்னகை என்றால், உன் வாழ்வில் கண்ணீர்த்துளிகளுக்கு இடமே இல்லாமல் பெரு மழை பெய்ய வேண்டுகிறேன்.
========================================================
நீங்கள் சரியாயிருக்கும் பட்சத்தில் கோபப் பட வேண்டிய தேவை இல்லை. நீங்கள் தவறாயிருக்கும் பட்சத்தில் கோபப் பட உரிமையில்லை. - மகாத்மா காந்தி.
====================================================
பாதை அழகாயிருந்தால் அது எங்கு செல்கிறது என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ஆனால் இலக்கு சரியானதாக இருந்தால் பாதை எப்படி இருந்தாலும் கவலைப் படாதீர்கள். (யாரோ)  
=========================================================
குறு விளக்கங்கள் :
*மரணம் : வாழ்க்கை முடியுமிடம்.
*வெறுப்பு : அன்பு முடியுமிடம்.
*விவாகரத்து : திருமணம் முடி(றி)யுமிடம்.
*கடல் : நிலப்பரப்பு முடியுமிடம்.,
*நட்பு : "நான்" மறைந்து "நாம்" ஆரம்பிக்குமிடம்.
======================================================
அடுத்தவர் திறமையை அடியொற்றுவது ஆரம்பம் என்றால் நம் திறமையை அடுத்தவர் அடிக்கொள்வது முடிவு...கே. ஜி. ஜவர்லால்.
=======================================================
வாழ்க்கை ரசாயனம் :
துன்பங்களை நீர்த்து, கவலைகளை ஆவியாக்கி, தவறுகளை வடிகட்டி, மமதையைக் கொதிக்க வைத்தால் மகிழ்ச்சி எனும் படிமங்களைப் பெறலாம்.
============================================================
எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பது என்பது ஒரு நோயாக உன்னைத் தின்று விடும். இது எப்படி என்றால் கெட்ட பெயரோடு நல்ல வாழ்க்கை வாழ்வதை விட நல்ல பெயரோடு மோசமான வாழ்க்கை வாழ்வது என்பதைத்தான் தரும்.
===============================================================
தாமதமாக உணரும் உண்மை...தத்துவம்!
சிறுவயதில் எப்போதடா பெரியவனாக ஆவோம் என்று ஏங்குகிறோம். ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, உடைந்த இதயங்களையும், கசப்பான கண்ணீர் அனுபவங்களையும் விட உடைந்த பென்சில்களும் முடிக்காத வீட்டுப் பாடங்களுமே தேவலாம் என்று தோன்றுகிறது!

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா. 
===============================================================

செவ்வாய், 20 ஜூலை, 2010

என்ன சொல்லப் போகிறாய் எண்காலியே? 02


டிர்ரிங் ....டிர்ரிங்........ 

"ஹலோ இந்தப் பக்கம் ..... பால் கொண்ட பரந்தாமன். அந்தப் பக்கம் யாரு?"

"என்ன? பால் கொண்ட பரந்தாமனா? யாருடா உனக்கு அந்தப் பட்டம் கொடுத்தது?"

"பட்டம் எல்லாம் யாராவது கொடுப்பார்களா? நம்பதான் ஒரு கையால கொடுத்து, இன்னொரு கையில வாங்கிக்கணும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்துக்கொள்ளவேண்டும். எல்லா நாளும் அரசியல்வாதிங்களுக்கு நடுவே ஜல்லி அடிச்சுகிட்டு இருக்கற உனக்குத் தெரியாதா?"

"சரி, என்ன ஆச்சு எண்காலி? வந்துடுச்சா?"

"அது வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. நீ வந்து கலெக்ட் பண்ணிக்கிறயா அல்லது டோர் டெலிவரியா?"

"எவ்வளவு செலவு ஆச்சு?"

"செலவா? அது ஆச்சு ஒன்றரைக் கோடி. பில் அனுப்புகிறேன்."

"பில் எல்லாம் எனக்கு அனுப்பாதே. பில் அமவுண்டை நீ சம்பாதிக்க ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஐடியா வெச்சி நாம்ப செலவு பண்ணியதற்கு மேலாக சம்பாதிச்சிடலாம். ஆமாம் அது ஒரிஜினல் பால் தானே? டூப்ளிகேட் இல்லையே?"

"ஏண்டா போலி சான்றிதழ், போலி டாக்டர், போலி சாமியார், போலி மருந்து போல இதுலயும் போலி இருக்கும்னு நெனக்கிறியா? ஆனா போலி இல்லை ஒரிஜினல்தான் என்று வந்தவுடனேயே அதுக்கு ஒரு டெஸ்ட் வெச்சி தெரிஞ்சுகிட்டேன்."

"அட! என்ன டெஸ்ட் வெச்சே?"

"இன்றைக்கு நடக்கற வாய்ச் சண்டையில் யார் ஜெயிப்பாங்க என் மனைவியா அல்லது அம்மாவா என்று தெரிந்துகொள்ள, இரண்டு பேருங்க பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி, ஆக்டோபஸ் இருக்கின்ற புட்டியில் போட்டேன். அது என் மனைவி பெயர் கொண்ட சீட்டை, பவ்யமாக எடுத்து என்னிடம் எடுத்துக் கொடுத்தது."

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? அம்மா வாய்ச்சண்டையில் தோற்று, பக்கத்துத் தெருவில் இருக்கின்ற என் தங்கை வீட்டுக்குப் போய்விட்டார்கள்"

"அட! அப்போ உன்னிடம் இருப்பது ஒரிஜினல் பால்தான்!"

"இந்த ஆக்டோபஸ்சை  வெச்சிகிட்டு, நான் எப்படி ஒன்றரைக் கோடிக்கு மேல் சம்பாதிப்பது? அதைச் சொல்லு முதலில்."

"இரு. அமைச்சர், பி ஏ வோட வெளிநாடு டூர் போயிருக்காரு, நான் உன் வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கேன். ஒரு விளம்பரம் தயார் பண்ணியிருக்கேன். அதை எல்லா தினசரிப் பத்திரிகைகளிலும், ஒரு வாரம் தொடர்ந்து வெளியிடுவோம். பிறகு பாரு நமக்கு வருமானம் எப்படி வருகிறது என்று."

இருவரும் சேர்ந்து விவாதம் பண்ணி, பிறகு தயார் செய்த விளம்பரம் இது:
(தொடரும்) 

திங்கள், 19 ஜூலை, 2010

என்ன விலை .....எண்காலியே? 01

கால் பந்து ரசிகர்களுக்கு, பால் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். இரண்டு கால் இருப்பவர்களுக்கே கால் பந்தாட்டத்தில் இவ்வளவு ஆர்வமும், வெறியும் இருக்கும்பொழுது, எட்டு கால் கொண்ட பால் எவ்வளவு ஆர்வம கொண்டிருக்கும்? குறைந்த பட்சம் நான்கு பங்காவது அதிக ஆர்வம இருக்கும். அது மட்டுமா? ஜோசியத்தில் என்ன கலக்கு கலக்கி, ஜெயிக்கும் அணியை முன்னதாகவே சுட்டிக் காட்டியது! 

ஆமாம் இப்போ அதுக்கு என்ன என்று கேட்கிறீர்களா?  எண்காலி பற்றியும், அது சொன்ன ஜோசியம் பலித்தது பற்றியும் பேப்பரில் படித்தவண்ணம் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த போது...

திடீர் என்று தொலைபேசி மணி டிர்ரிங் டிர்ரிங்கியது. 

"ஹலோ இந்தப் பக்கம் இடி அமின், அந்தப் பக்கம் யாரு?"

"டேய் உதை படுவே. பெயரை எப்போ மாத்திகிட்டே?"

"ரொம்பப் பெரிய பெயரா இருக்கே!"

"சரி சரி விளையாட்டை எல்லாம் விடு. நான் அமைச்சரோட பி ஏ வோட வலது கை என்று உனக்கு தெரியும்தானே?"

"தெரியும். அதோடு அமைச்சருடைய பி ஏ இடது கை பழக்கக்காரர், அவருடைய வலது கையா நீ இருக்கறதுல எந்த பிரயோஜனமும் ..."

"அப்ப நான் பி ஏவுக்கு இடது கை."

" ஹி ஹி ஹி ஹ ஹா ஹா. என்ன வேண்டும் பி ஏ இடது கையே?"

" அமைச்சருடைய வாய் மொழி உத்திரவு. பால் அப்படிங்கற பேருல யாரோ ஒரு காலிப்பய இருக்கானாமே, அவனை என்ன செலவு ஆனாலும், நம்ப ஊருக்கு கொண்டு வரணுமாம்."

" கையைக் காலை ஓடிச்சா ஓடிக்காமயா?"

" கையை காலை எல்லாம் ஓடிச்சுடாதே! அவன் என்னவோ கால் ஜோசியம் சொல்லுவானாமே?"

"கால் ஜோசியமா? ஃபோன் கால் பண்ணி உன்னுடைய ராசியை சொன்னால், உடனே 'சிவகாமி' ஜோசியம் போல பட பட என்று ஒரு பாட்டம் சொல்லுவார்களே அதுவா?"

" இல்லைடா. ஏதோ எட்டு கால் பூச்சின்னு அமைச்சர் சொன்னாரே?"

"அடப்பாவி - அது எட்டு கால் பூச்சியோ அல்லது காலிப்பயலோ இல்லைடா - எண்காலி - ஆக்டபஸ் - கால் ஜோசியம் இல்லை, கால் பந்தாட்ட ஜோசியம். அது எதுக்குடா உங்க அமைச்சருக்கு? புதுசா எவனாச்சும் ஆமைவடை போல ஆக்டோபஸ் வடை ரெசிபி ஏதாவது சொல்லி உசுப்பேத்திட்டானா?"

"இல்லைடா - இப்ப அந்த பால் எட்டு காலிக்கு ஏக டிமாண்ட்."

"ஏண்டா? நம்ப ஊருல ஏதாவது கால் பந்து போட்டி வெக்கப்போறீங்களா? எனக்கு சொல்லுடா. ஸ்டால் காண்டிராக்ட், பால் காண்டிராக்ட், கோல் போஸ்ட் காண்டிராக்ட், எல்லாம் எடுத்து நானும் மால் பார்க்கிறேன்."

"அலையாதே. சென்ற வாரம் எங்கள் கட்சி உள்பட நமக்குத் தெரிஞ்ச எல்லாக் கட்சியினரும், ரகசிய ஆலோசனை செய்து, அந்தப் பால் என்கிற ஆக்டோபஸ்சை எப்படியாவது வரவழைத்து, ஜோசியம் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார்கள்."

" அப்போ உள்ளூர் ஜோசியர்கள் எல்லோருக்கும் தலையில் துண்டுதானா?"

"அது அவங்க விதி. அதெல்லாம் எதுக்கு இப்போ?  நீதான் டிராவல் ஏஜென்சி வச்சிருக்கியே. பால் ஊருலே இருந்து வருபவர்கள் யாரையாவது பிடித்து, பாலுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கி, இங்கே வரவழைத்துவிடு."

" செலவு நிறைய ஆகுமே?"

" நான் சொல்லும்பொழுது, செலவு பத்தி யோசிக்கவே யோசிக்காதே. நாளைக்கே பால் நம்ப ஊருல இருக்கணும். எவ்வளவு செலவாகும்?"

" செலவா? ஒரு கோடி ஆகும்." 

"அவ்வளவுதானே? இரண்டு கோடி ஆனாலும் பரவாயில்லை. ஐ வான்ட் பாஸ்ட் ஆக்க்ஷன்."

" ஓ கே நாளைக்கு பால் தரிசனம் பண்ண ரெடியா இரு."

(தொடரும்) 

சனி, 17 ஜூலை, 2010

அகட விகடம் 170710

ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல். 
ஆத்தூரிலேயே நீர் இல்லை என்றால், மக்கள் 'ஆற்றாமை' கொள்வது சரிதான்.

கூட்டுப் படைகளை எதிர்கொள்ள தயார்: மாவோயிஸ்ட்.
இப்படி சொன்னால் கூட்டுப் படையினர் குழம்பிப் போய்விடுவார்களோ?


கம்ப்யூட்டரில் இந்திய ரூபாய் குறியீடு.
இந்திய ரூபாயின் மதிப்புக் குறையாமல் ஈடு செய்வதில் குறியாக இருந்தால் நலம்


புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்.
(வாசகர்கள் கமெண்டுக்கு )



விருதுநகர் கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்சேர்க்கை.
* மாணவர்கள் படிப்போடு டூ விடாமல், சேர்க்கையாக இருந்தால் சரி. 
** சேர்க்கை சரியில்லை என்று பிறகு பெற்றோர் சொல்லாமல் இருக்கவேண்டும். 


ஊழல் வழக்கு: எச்.பி.சி.எல்., இயக்குநர் கைது.
மற்றவர்கள் தப்பிவிட்டார்களோ? 

வான்வழி தாக்குதலில்: 17 தாலிபான்கள் பலி.
தாலிபான்களுக்கு பலி கொடுத்துதானே பழக்கம்? 


மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு.
(வாசகர்கள் கமெண்டுக்கு )


குப்பையில் தபால்கள் : மக்கள் அதிர்ச்சி.
* junk mail என்று தபால்காரர் நினைத்துவிட்டார் போலிருக்கு. 
** பழிக்குப் பழி என்று மக்கள், தபால் பெட்டியில் குப்பை போடாமல் இருந்தால் சரி. 


சரக்கு அடித்துவிட்டு, லாரியை தண்டவாளத்தில் ஓட்டி சென்ற லாரி டிரைவர்! 
அப்போ ஒரு சரக்கு ரயில் வந்து லாரியில் மோதிடிச்சோ? 


வாக்காளர் பட்டியல் திருத்தம் : நரேஷ்குப்தா தகவல். 
என்ன மார்க்?  அது பற்றிய தகவல் உண்டா?


+2 போலி சான்றிதழ் தயாரிக்க ரூபாய் பத்தாயிரம்.
அடேங்கப்பா - படிச்சு மார்க் வாங்கறது சிக்கனமா இருக்கும் போலிருக்கு. 

ஐநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மரத்திற்கு, தொல்காப்பியர் பெயர்.
தொல்காப்பியர் காலம் இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு. (May 1, 865 BC says Wiki) நமக்கு ரொம்ப தெரிஞ்ச தமிழ் உரை, 'கோனார் தமிழ் உரை' என்பதால், அவர் பெயரை வைத்திருக்கலாம் என்கிறார் எஸ் எஸ் எல் சி பரீட்சை இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் என் தாத்தா. 


அணையை பார்வையிடச் சென்ற முன்னாள் முதல்வர் கைது.
அவரே 'அன்னை'யை பார்க்க சென்றிருந்தால், வரவேற்பு கிடைத்திருக்கும். 


நித்யானந்தா பக்தர்கள் பெங்களூருக்கு பாத யாத்திரை.
மாளவிகா போன்ற பக்தைகளை தரிசனம் செய்யவோ?


போலி என்கவுண்டர் வழக்கில் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை.
12 பேரும் ஏதாவது போலி டாக்டரிடம் போலி சான்றிதழ் பெற்று, Poly கிளினிக்ல அட்மிட் ஆகி தப்பிப்பார்களாகுக!


மன வேதனையை விலக்க படம் பார்த்தார் எடியூரப்பா.
சுறா பார்த்திருந்தா மன வேதனை இன்னும் அதிகரித்திருக்கும். 


கபில் தந்த உலகக் கோப்பை! ஸ்ரீக்காந்த் பெருமிதம்.
கபில் தந்ததா? International Cricket Council தந்தது இல்லையா? 

புதன், 14 ஜூலை, 2010

கவனம் + கற்பனை = காசு

ஆங்கிலத்தில்,  Observation + Imagination = Money என்று ஒரு Formula எப்பவோ படித்த ஞாபகம். தமிழில் சொன்னால், இதை, 
அவதானிப்பு + படைப்பாற்றல் திறன் = பணம் என்று கூறலாம்.
இதற்கு நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல உதாரணங்களைக் காட்டமுடியும். பிட்சா முதல் செல் ஃபோன் உறை வரை.


அவதானிப்பு, அவதானித்தல் என்றால் என்ன?
சதாவதானி, தசாவதானி என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பல வெவ்வேறு விஷயங்களை கவனத்தில் (ஒரே நேரத்தில்) கொண்டு, அவற்றில் தேவையானவற்றை,  நினைத்த மாத்திரத்தில் வெளிக்கொண்டு வருகின்ற  திறமையை அவதானித்தல் என்று கொள்ளலாம். பத்து விஷயங்களில் இதைச் செய்பவர்களை தசாவதானி என்று கூறுவர். இது போல நூறு விஷயங்களை கவனத்தில் கொண்டு செய்யக் கூடியவரை சதாவதானி என்பர். எனவே, அவதானித்தல் என்றால், மனக்குவிப்பு (concentration of the mind) செய்து விஷயங்களை கிரஹித்துக் கொள்வது. (உங்கள் ஊரில் நீங்க நடந்து செல்லும் பொழுது, எந்த எந்த கடைகளில் அதிகக் கூட்டம் இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா?)

Imagination அல்லது Creativity  (நமக்குப் பரிச்சயமான வார்த்தை படைப்பாற்றல் திறன்  ) Creativity is generation of ideas to achieve a target. படைப்பாற்றல் என்பது, சுருக்கமாக, ஓர் இலக்கை அடைய உற்பத்தி செய்யப்படும் பற்பல யோசனைகள், செயல்கள். பள்ளிக்கூடக் காலத்திலோ அல்லது அலுவலக நாட்களிலோ பொய் சொல்லி (உண்மை சொல்லி அல்ல) லீவு எடுத்தவர்கள் எல்லோருமே படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள்தான். 

அவதானிப்பால் பெற்ற ஞானத்துடன், நம் மனத்தின் படைப்பாற்றல் திறனை கலந்து, புதிய பொருளை அல்லது ஒரு புதிய சேவையை உருவாக்கி, அதனை வைத்து, பணம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற சமாச்சாரம்.

வாசகர்கள், சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?