திடீரென ஒரு நாள் வானொலியில் சீர்காழி கோவிந்தராஜனும் அவர் மகன் சீர்காழி சிவசிதம்பரமும் பாடி அருளிய 'சகலகலாவல்லி மாலை' ஒலிபரப்பினார்கள். அப்புறம் அது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. அப்பா எங்கிருந்தோ சகலகலாவல்லி மாலை சிறு புத்தகம் கொண்டு வந்தார். தினமும் எங்களை படிக்கச் செய்தார். "படிப்பு நல்லா வரும்டா..."