நீச்சல் குளம் மிக அழகாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது. அதில் பல்வேறு பகுதிகள். ஒன்றில் தண்ணீரில் வாலிபால் விளையாடுவது போல, இன்னொன்றில் நீச்சலடிக்கும்போது கடற்பகுதி தெரியும்படியாக இருக்கும். ஆங்காங்கே டிரிங்க்ஸ் தருவதற்கான சிறிய கடைகள் (எல்லாம் இலவசம்). நான் எடுத்த படங்களில் அவை தெரியாது. நான் பகலெல்லாம் ரொம்ப பிஸி. நடுவில் விடுமுறை தினம் இல்லை. அதனால் பகலில் இந்தக் கடைகள் இருக்கும்போது படங்கள் எடுக்கவில்லை.
இந்த டிரிங்க்ஸ் பற்றி எழுதும்போது எனக்கு ஆரம்ப கால நினைவுகள் வருகின்றன. முதல் முதலில் வேலைக்குப் போன இடம் (நிறுவனம் என்ற அளவில்) இந்தியாவில் சேலத்தில். அங்கு ஒரு பெரிய தொழிற்சாலையில் கணிணி நிபுணனாகப் போனேன். (அதைப் பற்றி எழுதினால் சுய தம்பட்டமாகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்).
எங்களுக்கு ஒரு ஸ்பெஷலைஸ்ட் சாஃப்ட்வேர் தயாரித்து அளிப்பதற்காக பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு காண்டிராக்ட் கொடுத்திருந்தார்கள். அதனை டெஸ்ட் செய்து அப்ரூவ் செய்யும் வேலை என்னிடம் வந்தது. நானோ எப்போதுமே ரொம்பவே ஸ்டிரிக்ட் ஆன ஆசாமி. வளைந்துகொடுப்பது என்பதே என்னிடம் கிடையாது. அதனால் அவர்கள் ஒவ்வொரு தடவை டெலிவர் செய்யும்போதும் அதில் உள்ள தவறுகளை பெரிய லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிடுவேன்.
இப்படிப் போய்க்கொண்டிருந்தபோது, அந்த கம்பெனியின் டைரக்டர் என்னிடம் ஒரு நாள், வாங்க டிரிங்க்ஸ் சாப்பிடலாம் என்றார் (எல்லோரும் பிராமணர்களே). நானோ அவரிடம், அந்தப் பழக்கமே எனக்கு இல்லை என்றேன். என்னது இது.. கம்ப்யூட்டர் துறையில் இருந்துகொண்டு டிரிங்க்ஸ் பழக்கம் கிடையாதா? ஐபிஎம் கம்பெனில எல்லாம், டிரிங்க்ஸ் அடித்துக்கொண்டேதான் சாஃப்ட்வேர் எழுதும் வழக்கம் உண்டு என்றார் (1990). இது மாதிரி பல சந்தர்ப்பங்கள் அங்கு. வெளிநாட்டில் வேலை பார்த்தபோதும், பல நேரங்களில் business meetings (வெளி ஆட்களுடன் தான்) நடக்கும்போது ஆஃபர் பண்ணுவாங்க. அதற்கு முந்தைய கம்பெனியில் நான் கன்சல்டண்ட் ஆக இருந்த போது, எங்கள் ஜி.எம். என்னிடம், நாம கஸ்டமர்களுடன் மாலையில் டிரிங்ஸ் சாப்பிடும்போது எல்லோரும் சகஜமாவாங்க, நட்பு இன்னும் அதிகமாகும் என்று சொல்வார். நான் எப்போதும் என் நிலையிலிருந்து மாறியதே இல்லை.
அங்கு இருக்கும்போது என்னுடன் வேலை பார்த்த ஒருவன் சொல்வான், "சார்.. தமிழ்நாட்டுல தண்ணியடிக்காத I.T. companyகாரனே கிடையாது, நீங்க அபூர்வம்" என்பான். கொஞ்சம் அதீதமாகச் சொல்லியிருக்கிறான், இருந்தாலும் நானே பல நேரங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
என்னுடைய குணக் குறை என்று பார்த்தால், கோபப்படுவது. எதிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதால், ரொம்பவே வளைந்து கொடுக்க மாட்டேன். என்னை எதிலும் குறை சொல்லமுடியாதபடி பார்த்துக்கொள்வேன்.
எங்கள் நிறுவனம் பல சூப்பர் மார்க்கெட்டுகள் வைத்திருந்தது. அதிலும் இந்த ஹைபர் மார்கெட் கான்சப்ட் வருவதற்கு பலப் பல வருடங்களுக்கு முன்பே மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்கள் வைத்திருந்தார்கள். அதில் பன்றி இறைச்சி முதற்கொண்டு எல்லாமே இருக்கும். பேக்கரி தனி செக்ஷன், விலங்கு உணவு தனி செக்ஷன் என்று பலப் பல செக்ஷன்கள். அதைத் தவிர அவர்கள் டிரிங்க்ஸ் சப்ளை செய்யும் கடலோர ரெஸ்டாரண்ட் ஒன்றும் வைத்திருந்தார்கள். எல்லாமே நல்லா போய்க்கிட்டிருந்தது (நல்ல லாபத்துடன்) திடும் என்று கம்பெனி ஓனர், இனி நாம் இஸ்லாத்தில் ஹராம் என்று சொல்லப்படுபவைகளை விற்கக் கூடாது என்று நினைத்துவிட்டார். உடனே பன்றி இறைச்சி விற்பனை நின்றது. கடலோர ரெஸ்டாரண்டில், டிரிங்க்ஸ் செக்ஷனுக்கு தடா. விளைவு இரண்டு பிஸினெஸும் வரவை இழந்தது. English customers வரவும் மிகவும் குறைந்துவிட்டது. பிறகு அந்த தேசத்தில் பல ஹைப்பர் மார்க்கெட்டுகள் வர ஆரம்பித்துவிட்டது.
ஆட்கள் இல்லாதபோதுதான் படங்கள் எடுத்திருக்கிறேன். ரிசார்ட்டின் அழகு தெரியணும் என்று.
நீச்சள் குளத்திற்கும் கடலுக்கும் இடைவெளியே
இல்லாதது போல இருக்கிறதல்லவா? அதுதான் இந்த ரிசார்ட்டின் அழகு. ஆனால் நல்ல இடைவெளி உண்டு.
அரபிக்கள் பொதுவா பெண்களுக்கு மிக மிக மரியாதை தருவார்கள். அதனால் கல்ஃப் தேசங்களில் பெண்களுக்கு எதிராகச் செயல்படுவது மிகக் கடினம். யாரேனும் கம்ப்ளெயிண்ட் செய்தால் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள். நாம் ஒரு அறையில் வேலை செய்துகொண்டிருந்தாலும், யாரேனும் அரபிப் பெண் அங்கு ப்ரேயர் பண்ண வந்துவிட்டால், நாம் உடனே அந்த அறையை விட்டு அகன்றுவிட வேண்டும். மற்ற பெண்களும் நம்மேல் எதுவும் குற்றச்சாட்டு வைத்துவிடாதபடி நாம் நடந்துகொள்ளவேண்டும்.
நான் யாரிடமும் வழியாமல் ஜாக்கிரதையாக என் வேலை உண்டு நான் உண்டு என்று இருப்பதாலும், உதவி வேண்டுமானால் உதவத் தயங்கமாட்டேன் என்பதாலும் அங்கு வேலை பார்க்கும் லோகல் பெண்கள் மற்றும் வெளி தேசப் பெண்களும் நன்கு பழகுவார்கள் (அவங்க மேல பட்டுவிடக்கூடாது).
இப்படி இருக்கும்போது ஒரு தடவை ரொம்ப சீனியர் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர், நான் துபாயில் இருந்தபோது போன் பண்ணி, 'ஒரு பிரிண்டர் அவசரமாக வேண்டும், உடனே வாங்கிக்கொள்ளவா' என்றார். நான் அதற்கு அனுமதி தரவில்லை. அதுவும் தவிர, 'ஏன் முதலிலேயே எனக்கு இதைப்பற்றிச் சொல்லவில்லை, ஸ்பேர் இருக்கிறதா, என்ன தேவை, என்ன பிராண்ட் சரியாக இருக்கும் என்றெல்லாம் ஆலோசனை செய்ய நேரம் வேண்டாமா?' என்று கேட்டேன். 'இல்லை, நான் உடனே வாங்கிக்கொள்ளப்போகிறேன்' என்றார். நான், 'அது உங்கள் முடிவு, நான் பொறுப்பாளியல்ல, நான் அனுமதி தரவில்லை என்பதைச் சொல்லிவிடுவேன்' என்றேன். கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். அத்தோடு அதை மறந்துவிட்டேன். ஒரு மணி நேரம் கழித்து என் பாஸ் போன் செய்து, 'நீ அந்தப் பெண்ணுடன் தவறாக நடந்திருக்க மாட்டாய், நீ வெளி தேசத்தில் இருக்கிறாய், என்ன நடந்தது? அவள் எம்.டி.யிடம் போய் அழுதிருக்கிறாள்' என்றார். நான் நடந்ததைச் சொன்னேன். 'நீ செய்தது சரிதான், நான் பேசிக்கொள்கிறேன்' என்றார். இதை எழுதும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
இதற்கு முந்தைய கம்பெனியில் ப்ராஜக்டுகளுக்கு நான் இன்சார்ஜ் ஆக இருந்தேன். அந்த கம்பெனியில் வேலை செய்ய ஆரம்பித்து 1 ½ வருடங்கள் இருக்கும் - ஒரு நாள் அந்த கன்சல்டன்சி கம்பெனி பொது மேலாளர் என்னிடம், 'ஒரு பெண் வந்திருக்கிறார், இண்டர்வியூ பண்ணி எனக்குச் சொல்' என்று சொன்னார். அவள் கேரளப் பெண். ஒரு அரை மணி நேரம் பல கேள்விகளுக்குப்பின், அவளை நான் தேர்வு செய்ய முடியாது, என்ன மாதிரி வேலை அவளுக்குச் சரியாக இருக்கும் என்றெல்லாம் நான் இண்டர்வியூ முடிவில் சொன்னேன். பத்து நிமிடங்கள் இவற்றைச் சொல்லியிருப்பேன். அவளோ அழ ஆரம்பித்துவிட்டாள். நான் பயந்துவிட்டேன். கான்ஃபரன்ஸ் அறையில் நானும் அவளும். அவள் அழுதுகொண்டே வெளியில் சென்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அவளிடம் காரணம் கேட்டதற்கு, தான் சில பல இண்டர்வியூக்கள் சென்றிருப்பதாகவும் யாரும் இந்த மாதிரி அக்கறை எடுத்துக்கொண்டு சொன்னதில்லை என்றாள். நான் அவளிடம் கண்ணைத் துடைத்துக்கொள், இல்லைனா, மற்றவர்கள் என்னைத் தவறா நினைக்கப் போறாங்க என்றேன். இது எழுதும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. (அது அடுத்த வாரம்)
அதெல்லாம் மடக்கி வைத்திருக்கும் குடைகள். வெயிலோ மழையோ இருந்தால் விரித்துக்கொள்வதற்கு. காற்று மிக அதிகமாக இருந்தால் குடை பறந்துவிடும்.
ஏம்பா… இவ்வளவு போட்டோக்கள் இருக்கு. ஒன்றிலும் குளிக்கும் அழகிகள் இல்லையா? என்று கேட்காதீர்கள். எனக்கு அவ்வளவு தைரியம் கிடையாது.
(நெல்லை! நீங்க எனக்கு தனியே அனுப்பின 'அந்த' ரெண்டு படங்களை இங்கே நான் போடக்கூடாதா! அதிலும் அந்த ரெண்டாவது படம் .. .. அய்யோ அது பத்தி இங்கே ஒண்ணும் சொல்லக் கூடாது! ✀✀ )
நல்ல காலநிலையின்போது இந்த மாதிரி கடலுக்கு எதிரே உட்கார்ந்துகொண்டு/சாய்ந்துகொண்டு கடலைப் பார்ப்பதும், கடற்காற்றை அனுபவிப்பதும் எவ்வளவு சுகம்.
இன்றைக்கு நாமே அந்த நீச்சல் குளங்களின் வெவ்வேறு
பகுதிகளில் குளித்தமாதிரி இருக்கிறதா? மற்றவை
வரும் பதிவுகளில்.
(தொடரும்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னாங்கோ படங்களுக்கும் எழுதிய கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லீங்களே!
பதிலளிநீக்குபடங்கள் ஆரம்பித்த சுப்ஜெக்ட்டில்....மெக்ஸிகோ பயணம்... ஆனா கட்டுரை பழைய கம்பெனிகள், மாட்டாமல் தப்பித்த தருணங்கள் என்று போகிறது.
சரி போகட்டும். இரண்டும் நன்றாகத்தான் உள்ளன. அதிலும் கட்டுரை கொஞ்சம் பழைய நிகழ்ச்சிகளை கற்பனை செய்ய வைக்கிறது. தப்பித்தது முழுதும் தம்புரான் புண்ணியம்.
Jayakumar
படங்கள் நன்றாக இருந்தாலும் ஆட்கள் இலலாததால் ஓவியம் போல இருக்கிறது. கடலைப் பார்த்த மாதிரி இருக்கும் நீச்சல்குளம் அழகு. அடுத்த படங்களில் ஓரங்களில் கடைகளைக் கற்பனை செய்துகொண்டேன். கேரளப்பெண் ரொம்ப அப்பாவியாய் இருப்பாள் போல.. இப்போது எங்கிருக்கிறாரோ...!
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மெக்சிகோ ரிச்சார்ட் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. , கடலும் அருகிலேயே நீச்சல் குளமும் அமைந்த மாதிரியான படங்கள் அழகாக உள்ளது. கூடவே அழகான மேகங்களின் இயற்கையான படங்கள். அனைத்தும் கண்களுக்கு விருந்து.
உங்களின் அலுவலக செயல்பாடு, நல்ல குணங்கள் பற்றி அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்.
நீச்சல் குளத்தில் அமைந்திருக்கும் இருக்கைகளில் அமர்ந்தபடி, கடலை, அதன் அலைகளை ரசிக்கும் வாய்ப்பு மிக நன்றாகத்தான் இருக்கும். உங்களுக்கும் அது கிட்டியிருக்கும் என நினைக்கிறேன். அழகான படங்கள். அதற்கேற்றபடி அருமையான நல்ல எழுத்து.
நீங்கள் சொன்னபடி காலையில் எழுந்ததுமே பதிவை படிக்கையில், படங்களை பார்த்ததில், ஜில்லென்ற அந்த நீர் நிலைகளில் குளித்த உணர்வு மனதுக்குள் வருகிறது. (இங்கு இப்போது தடபவெப்பநிலையும் சற்று குளிராகத்தான் உள்ளது.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மெக்ஸிகோ பயணக்கதை என்ற தலைப்பிற்கு தொடர்பு இல்லாவிட்டாலும் படிக்க சுவாரஸ்யம். ரிஸார்டை நன்றாக சுற்றிக் காண்பித்திருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்கு