நெல்லைத்தமிழன் :
இந்த தேசம்தான் அணு ஆயுதம் அதற்கான முயற்சி செய்யலாம், இவங்கள்லாம் அதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று வளர்ந்த நாடுகள் நினைப்பது, செயல்படுத்துவது சரியா?
# அணு ஆயுதங்களை பொருத்தவரை எந்த தேசமுமே அதை வைத்திருக்கக் கூடாது பயன்படுத்தக் கூடாது பயன்படுத்துவேன் என்று பயமுறுத்தவும் கூடாது என்பதுதான் என் கட்சி. இந்தியா அணுகுண்டு தயாரித்த பின் அணு ஆயுதங்கள் பற்றிய நமது பார்வையே முற்றிலுமாக மாறிப் போய்விட்டது. அதற்கு சில நியாயங்களும் இருக்கலாம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். அந்தக் காலத்தில் ராஜாஜி சொன்ன மாதிரி எல்லாரும் எல்லா அணு ஆயுதங்களையும் அழித்திருந்தால் உலகம் எவ்வளவோ நல்லபடியாக முன்னேறி இருக்கும்.
& அணு ஆயுதங்களை எல்லா நாடுகளும் கைவிடவேண்டும் என்பதுதான் எனக்கும் ஆசை. நாம சொன்னா யார் கேட்குறாங்க !
பானுமதி வெங்கடேஸ்வரன்:
உங்கள் வாழ்க்கையில் அதிக விலை கொடுத்து கற்றுக் கொண்ட பாடம் ஏதாவது உண்டா? அதிக விலை என்பது பணம் அல்ல.
# அதிக விலை கொடுத்தேனே தவிர பாடம் கற்றதில்லை !!
& F and O Option trading என்பது ஒரு மாய மான் என்பதுதான் நான் கற்ற பாடம்.
ராமாயணத்தில் தர்மத்தின் வழி நின்ற ஸ்ரீராமனின் முடிவு ஏற்கும்படி இல்லையே?
# வால்மீகி ராமாயணம் பட்டாபிஷேகத்தோடு முடிவடைந்து விடுவதாகவும், உத்தரகாண்டம் என்ற பிற்பகுதி பின்னர் வேறு யாரோ எழுதிச் சேர்க்கப்பட்டதாகவும் சொல்லுகிறார்கள. நீங்கள் ராமனின் முடிவு என்று எதைச் சொல்லுகிறீர்கள் ? சீதையை யாரோ ஏதோ சொன்னதால் காட்டுக்கு அனுப்பினார் என்பதையா, அல்லது ஸ்ரீ ராமர் சரயு நதியில் இறங்கி தன் உயிரை விட்டார் என்பதையா ?
& சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் (இராமாயணம்) படித்திருக்கிறீர்களா? (PDF வடிவில் என்னிடம் உள்ளது.) அந்தப் புத்தகத்தின் முடிவுரைப் பகுதியில் ஒரு பகுதி இது:
கே. சக்ரபாணி சென்னை 28:
1. எத்தனையோ மருமகள்கள் மாமியாரை அம்மா என்று கூப்பிடுவதுண்டு. ஆனால் யாரேனும். மாப்பிள்ளைகள். மாமனாரை. அப்பா. என்று. கூப்பிட்டு. பார்த்திருக்கிறீர்களா?
# நான் பார்த்ததில்லை என்பதால் அப்படி அழைப்பவர்களே இல்லை என்று ஆகிவிடாதல்லவா ?
& உறவுகளுக்குள் நடக்கும் திருமண பந்தங்களில் மருமகள்கள் இப்படி அழைப்பது இல்லை என்று நினைக்கிறேன்.
மருமகள்கள் மாமியார் மற்றும் மாமனாரை அம்மா, அப்பா என்று அழைப்பது ஒரே வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டியிருப்பதால் சாத்தியம் ஆகிறது.
ஆனால் மருமகன்கள் மாமியார் மாமனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வாழ்வது இல்லை. அதனால் அம்மா அப்பா என்று அவர்களுடைய ஒரிஜினல் பெற்றோர்களையே அழைக்கலாம்!
2. சிறுவயதில் அந்தாட்சரி விளையாடியிருக்கிறீர்களா? இலங்கை வானொலியில் அந்தகாலத்தில் திரு. சாகுல்ஹமீது. அவர்கள் சுத்த தமிழில் கம்பீரமாக அந்தாட்சரி நிகழ்ச்சி நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?
# எனக்கு அந்தாக்ஷரியில் நாட்டமில்லை என்பதால் நான் சாகுல் ஹமீது நிகழ்ச்சிகள் பார்த்ததில்லை .
& சா ஹ அந்தாக்ஷரி நினைவில் இல்லை. ஆனால், விவிதபாரதி தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் பி கே அந்தாக்ஷரி போட்டிகளை நிறைய வாரங்கள் கேட்டு இரசித்தது உண்டு. நாங்களும் (நான், என் அண்ணன், சித்தப்பாவின் மகன்கள், மகள் எல்லோரும் ) அந்தாக்ஷரி வகையில் பாட்டுப் பாடி மகிழ்ந்தது உண்டு.
= = = = = = = =
படமும், பதமும்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
ரொம்ப வருடங்கள் முன்னாலதான் கிராமத்துல இந்த மாதிரி பூப்புனித நீராட்டு விழாலாம் நடக்கும்னு சொல்வாங்க. இது என்ன..இதைப்போய் விளம்பரப்படுத்திக்கிட்டு, இதெல்லாம் தனிப்பட்ட விஷயம் அல்லவா என்றெல்லாம் நாம ரியாக்ஷன் கொடுத்திட்டிருந்தோம். இந்தக் காலத்திலெல்லாம் இப்படி நடக்காது, காரணம் எல்லாரும் படிச்சவங்கன்னுலாம் கருத்து தெரிவிச்சிட்டிருந்தோம். இந்தப் பதாகை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய ஹோட்டலில் பார்த்தேன். இது நவீன பூப்புனித நீராட்டு விழா. ஆங்கிலத்தில் பந்தாவா போட்டிருக்காங்க.
= = = = = =
KGG பக்கம்.
மேலே பா வெ மேடம் அனுப்பியிருந்த ஒரு பூ இரண்டு வர்ணங்கள் படம் எனக்குக் கிடைப்பதற்கு ஒருநாள் முன்பு, பெங்களூரில் காலை உணவு உண்ணவும் மற்றும் சில பொருட்கள் வாங்கவும் எங்கள் பகுதியில் சிற்றுலா சென்றோம்.
அப்போது ஒரு கடை வாசலில் இருந்த இரு வர்ண செடி என் கவனத்தைக் கவர்ந்தது. அது, இங்கே :
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு. எத்தனையோ மருமகள்கள் மாமியாரை அம்மா என்று கூப்பிடுவதுண்டு. ஆனால் யாரேனும். மாப்பிள்ளைகள். மாமனாரை. அப்பா. என்று. கூப்பிட்டு. பார்த்திருக்கிறீர்களா? //
பதிலளிநீக்குஎஸ், எங்கள் வீட்டிலேயே! என் மகனுக்கு நான் சொன்னதும் அதுதான்.
கீதா
பெண் மாமியார் மாமனாராய் அம்மா அப்பா என்று அழைப்பது போல் ஆணும் தன் மாமியார் மாமனாரை அம்மா அப்பா என்று அழைக்க வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து.
நீக்குகீதா
ஆச்சரியமாக இருக்கிறது
நீக்குகீதா ரங்கன் க்கா க்கு என்னாச்சு? மாப்பிள்ளைக்கு மாமனார் மாமியார் எப்படி அப்பா அம்மாவாக முடியும்? நீங்கள் (பெண்கள்) ஜிங்சக் அடிப்பதற்காக ஆண்களும் ஜால்ரா போடமிடியுமா?
நீக்குஉங்க அம்மா குழம்புக் கரண்டியால் ஒன்று போட்டால் உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்? மாமியார் சுடுசொல் சொன்னாலே ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
அப்ப பெண்களுக்கும் மாமனார் மாமியார் அம்மா அப்பா எப்படி ஆக முடியும்....ஒரு சில சமூகத்தில்....மாமா மாமின்னே கூப்பிடலாமே ஏன் அம்மா அப்பான்னு கூப்பிடணும்?
நீக்கு//உங்க அம்மா குழம்புக் கரண்டியால் ஒன்று போட்டால் உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்? மாமியார் சுடுசொல் சொன்னாலே ரியாக்ஷன் எப்படி இருக்கும்?//
நான் என் மாமியார், என் அம்மா இருவரையுமே ஒரே போலதான் நினைத்துப் பேசியது. பார்க்கப் போனால் என் அம்மாவை விட என் மாமியாரிடம் தான் அதிகமாகப் பேசியது. ஷேர் செய்து கொண்டது. வாசிப்பது அவங்க வாசிப்பது என் மாமானாரிடமும் கூட. இருவருமே என்னிடம், என் அம்மா அப்பாவை விட நிறைய பேசுவாங்க.
கீதா
பானுக்கா இப்படியான பூ பார்த்திருக்கிறேன்.. இப்படி ஒரு முறை நான் படமும் வரைந்ததுண்டு அழகிற்காக. கடைசில இப்படி இயற்கையில் பூத்ததையும் பார்த்ததும் அட ! என்று தோன்றியது.
பதிலளிநீக்குஇதற்கு காரணங்கள் இருக்கலாம். ஒன்று வெள்ளைச் செம்பருத்தியும் சிவப்பும் கலப்பினச் செடியாக இருக்கலாம். இல்லை என்றால் அச்செடியியை வைரச் தொற்று தாக்கியிருக்கலாம் அல்லது பிக்மெண்டேஷன் பிரச்சனையால் இருக்கலாம்.
கீதா
அட!
நீக்குஇந்த பூ என் சகோதரியின் வீட்டில் பூத்ததாம். பல வருடங்களாக இருக்கும் அந்தச் செடியில் ஒரு நாள் மட்டும் இப்படி பூத்திரிக்கிறது. அடுத்த நாள் கூட சாதாரண செம்பருத்திதான். ஒரு வேளை எதோ தொற்று அல்லது பிக்மெண்டேஷன் பிரச்சனையோ என்னவோ? தகவல்களுக்கு நன்றி.
நீக்குமற்ற இதழ்களையும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தெரியும் சிவப்பு பின்னில் கொஞ்சம் தெரியும் பாருங்க...வெள்ளையாக இல்லாமல்...
பதிலளிநீக்குகீதா
மன்னர் சிலை செம அழகு. அந்த உடையைப் பாருங்க என்னா ஃபேஷன். இப்ப இது மாதிரிதானெ வருது. பார்க்கப் போனா இப்படி பழைய கால வரலாற்றில் உள்ள படங்களின் உடைகளைப் பார்த்துதான் ஃபேஷன் டிசைனிங் செய்வதுண்டாம்...
பதிலளிநீக்குகீதா
இல்லை நெல்லை இப்பவும் பூபுனித நீராட்டுவிழா இப்படி விளம்பரப்படுத்தி நடத்தறாங்க. நீங்க வேற இதுவும் இப்ப கல்யாணங்கள் மாதிரி நடக்கத் தொடங்கிவிட்டது நடனம் அது இது என்று.
பதிலளிநீக்குடைரக்டர் முருகதாஸ் தன் பெண்ணின் இம்மாதிரியான நிகழ்வுக்கு பெண்ணுடன் டான்ஸ் செய்யறாரே அதுவும் தற்போதைய பாடல் ஒன்றிற்கு பாட்டு மறந்து போச்சு.
அவர் மனைவி பெண்ணை அழைப்பதே நடனம் ஆடி அழைச்சாங்களாம் கூடவே பல பெண்களும்.
ஊர்ல கும்மி அடிப்பாங்க சுத்தி அது இப்ப இப்படி!!!
கீதா
பூப்பெய்தல் விழா எல்லாம் என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட கருத்து. வெளியில் தெரியக் கூடாது.
பதிலளிநீக்குஒரு காலத்துல செஞ்சாங்கனா அது பரிசம் போடுறதுக்காக.....ஊருக்கு அறிவிப்பு. இந்தா எங்க வூட்டுப் பொண்ணு சமைஞ்சுருச்சு....கல்யாணத்துக்கு ரெடின்னு ...பொண்ணை ஒரு வார்த்தை கூடக் கேக்க மாட்டாங்க அது அந்தக் காலம்...
என்னைக் கேட்டா இப்படிச் செலவு செய்வதற்குப் பதில் பெண்ணை நன்றாகப் படிக்க வைக்க அந்தக் காசை செலவு செய்யணும் என்பேன். பல ஏழ்மைக் குடும்பங்களிலும் கூட கடன் வாங்கியாவது இப்படிச் செய்வதைப் பார்க்கறப்ப....
கீதா
கௌ அண்ணா நீங்கள் எடுத்திருக்கும் படம் அந்தச் செடியின் கலர் என்ன ஒரு அழகான கலர்! இல்லையா? பச்சையும் அந்தக் கலரையும் என்ன கலர் என்று சொல்வது? பிங்க்? ரொம்ப அழகா இருக்கு
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குகௌதமன் சார் பகிர்ந்திருக்கும் செடியை நான் பார்த்திருக்கிறேன்.
நீக்குஆமாம் இங்கு காக்கைகள் அரிது. பார்க்க முடிகிறது ஆனால் ரொம்பக் குறைவு. காக்கைகள் போல புறாக்கள்தான்! நம்ம வீட்டுப் பக்கத்துலயும் புறாக்கூட்டம் கொத்தா பறக்கும் பார்க்க அழகாக இருக்கும். ஏரிகளிலும் கூட அங்குமிங்கும் பறந்து பறந்து வந்து ஏரி ஓரங்களில் அமர்வது அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
அதே, அதே!
நீக்கு
பதிலளிநீக்குராமாயணம் கதைப்பொருள் ஓன்று. ஆனால் கதை வடிவங்கள் பல. முக்கிய கதையை சாறாக எடுத்துக்கொண்டு மற்றவற்றை சக்கையாக தவிர்க்க வேண்டியதுதான்.
இருவர்ண செம்பருத்தி சாதாரணமானது தான். வீட்டில் வெள்ளை பிங்க் என்ற இருவர்ண செம்பருத்தி பூக்கும் செடி இருந்தது,
Jayakumar
தகவல்களுக்கு நன்றி.
நீக்குஇராமாயணம் பல மொழிகளிலும் அவரவர் எழுத்துப் பாணியில் பலவிதமாக வந்திருக்கிறது. படங்களாகவும்,.நாடகங்களாகவும் அவ்வாறே சொல்லப்படுகின்றன.
பதிலளிநீக்குபூக்கள் இதுபோன்று மலர்வதுண்டு கண்டு இருக்கிறேன்..
நான் சிவப்பு, மஞ்சள் இரண்டு மரங்களை ஒரே சாடியில் நட்டு விட்டேன். சிவப்பு மரம் பட்டு விட்டது. மஞ்சள் தழைத்து ஓரிரு வருடமாக பூக்கின்றதுஅதன் ஒரு கிளையில் சிவப்பு மலர் மட்டும் தொடர்ந்து பூத்து வருகிறது. இரண்டையும் ஒன்றாக நாட்டியதில் வேரில் ஒட்டி மாற்றம் வந்திருக்கும் என நினைக்கிறேன்.
பூப்பு நீராட்டு இங்கும் பெரிதாக நடப்பதுண்டு. இது அவரவர் விருப்பம்.
கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. மருமகன்கள் மாமனாரை அப்பா என்று அழைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இதுவரை நானும் உறவுகளில் அப்படி அழைத்துப் பார்த்ததில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வது போல நமக்குத் தெரியாத சில இடங்களில் அப்படி அழைக்கப் பழக்கப்பட்டிருக்கலாம்.
பெரிய நகரம் போன்ற இடங்களில் பூப்பு புனித நீராட்டு விழா விமர்சையாக அனைவரும் அறியும்படி கொண்டாடுவது அரிதுதான். கிராமத்தில்தான் இப்படி கொண்டாடும் பழக்கம் உள்ளது. பொதுவாக நம் வீடுகளிலும்விமர்ச்சையாக இல்லாவிடினும் உறவுகளை அழைத்து கொண்டாடுவோம் .
சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் பகிர்ந்த மாறுபட்ட பூ,வும், தாங்கள் எடுத்த கலர்ப்பூக்களையும் இப்போதுதான் பார்க்கிறேன். நன்றாக உள்ளது. புறாக்களின் அணிவகுப்பு நன்றாக உள்ளது. அவைகளும் அந்நாளைய காக்கைகளைப்போல (பள்ளிக்கூடம்) வரிசையாக அமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்து விட்டன. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்குபோரில்லா நல் உலகம் வேண்டும்.
ராமாயணத்தில் தர்மத்தின் வழி நின்ற ஸ்ரீராமனின் முடிவு சரயு நதியில் இறங்கி விண்ணுலகம் போவது போல முடித்து இருப்பார்கள் ஒரு படத்தில் சீதாதேவியை பூமித்தாய் அழைத்து செல்வதாக காட்டுவார்கள்.
ஏற்றுக் கொள்ள முடியாதவைகள் சில ராமாயணத்தில் இருக்கிறது, நல்லதை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.
புகுந்த வீட்டுக்கு போகும் பெண்ணிடம் பெண்ணின் தாயார் இனி கணவர் வீடுதான் உன் வீடு ,உன் கணவரின் அம்மா, அப்பாதான் உனக்கு அப்பா, அம்மா போல அவர்களை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்புவார்கள்.
ராமாயணத்தில் எதை எதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை? யுக தர்மம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?
நீக்குஇரண்டு வர்ண செம்பருத்தி நானும் ஒரு பூங்காவில் பார்த்து இருக்கிறேன். முன்பு காமிரா, செல்போன் இல்லாத காலத்தில்.பார்த்து இருக்கிறேன். நீங்கள் பகிர்ந்த பூ படம் அழகாய் இருக்கிறது பானு.
பதிலளிநீக்குசரபோஜி மன்னர் சிலையை இந்த கோயிலுக்கு சென்ற போது எடுக்க மறந்து விட்டேன். சக்ரபாணி கோயில் பதிவு போட்ட போது "மன்னர் படம் எடுக்கவில்லையா?" என்று நெல்லை கேட்டார்.
பதிலளிநீக்குஅருமையாக எடுத்து இருக்கிறார். அந்த சிலை இருந்த இடம் சற்று இருட்டாக இருக்கும்.
இரு வர்ண செடி புதர் செடி போல இருக்கும் இதை வட்ட வடிவமாக வெட்டி அழகு படுத்தி இருப்பார்கள், மகள் வீட்டில். மேலே குறுந்து இலைகள் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.
பதிலளிநீக்குஅழகாய் இருக்கிறது இரு வர்ண செடியும் மாடியில் இருக்கும் மாடி புறாக்களும்.
மாமியாரை அம்மா..அப்பா.. ஆனால் மாப்பிள்ளை மாமனாரை.... இந்தக் கேள்வியில் நியாயம் உண்டு. மாப்பிள்ளை தனித்துவம். சோப் போடவேண்டிய அவசியமில்லை. என்னதான் அம்மா அப்பா என்று சொன்னாலும் பெற்றவர்கள்தாம் உண்மையான அம்மா அப்பா.
பதிலளிநீக்குகொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்.. என்ற பழமொழி நினைவிலிருக்கா?
என் மனைவி வித்தியாசமான காரணம் சொல்றா. திருமணத்திற்குப் பின் பெண்ணின் கோத்திரம் மாறுகிறது. அதனால் கணவனுக்கான உறவுகள் மனைவிக்கும் அதுவேயாகிறது. ஆனால் திருமணத்தினால்கணவன் கோத்திரம் மாறாது. அதனால் மாமனார் மாமனார்தான்
பதிலளிநீக்குபெண் திருமணமாகி செல்லும் வீட்டை புகுந்த வீடு என்போம், ஆண் திருமணமாகி உறவில் நுழையும் வீட்டை வேற்றகம் என்போம். ஆனால் இப்போது சில ஆண்கள் மாமனார், மாமியாரை அப்பா,அம்மா என்று அழைக்கிறார்கள்.
பதிலளிநீக்கு//நீங்கள் ராமனின் முடிவு என்று எதைச் சொல்லுகிறீர்கள் ? சீதையை யாரோ ஏதோ சொன்னதால் காட்டுக்கு அனுப்பினார் என்பதையா, அல்லது ஸ்ரீ ராமர் சரயு நதியில் இறங்கி தன் உயிரை விட்டார் என்பதையா ?// ஸ்ரீ ராமர் சரயு நதியில் இறங்கி தன் உயிரை விட்டார் என்பதைத்தான். ராமனுடைய கேலிபருக்கு இது சூட் ஆகவில்லை. மேலும் தற்கொலை செய்து கொள்வதை இந்து மதம் ஏற்றுக் கொள்ளைவில்லை. அப்படியிருக்க, அவதார புருஷனாகிய ராமன் தற்கொலை செய்து கொண்டான் என்பது நெருடலாக இல்லையா?
பதிலளிநீக்கு