திகில்வரிகளின் முதல் பாகம் ( ! ) பெற்ற ஆதரவினால் (சொன்னா நம்பணும்!) இப்போது இரண்டாம் பாகம்! ஆனால் இனி தொடராது என்று உறுதியளிக்கிறேன் - இப்போதைக்கு!
எல்லையற்ற வானில்
ஏகாந்தமாய்ப் பறக்கும்
கனவுக்கு நடுவே
ஏதோ சத்தம் கேட்டுக்
கண்விழித்தேன்.
கடைசிப் பகுதி மண்ணை
ஏகாந்தமாய்ப் பறக்கும்
கனவுக்கு நடுவே
ஏதோ சத்தம் கேட்டுக்
கண்விழித்தேன்.
கடைசிப் பகுதி மண்ணை
என் முகத்தின்
மேலே போட்டு
குழியை மூடினார்கள்.
=======================
குழியை மூடினார்கள்.
=======================

குளிர்கிறதே
என்று போர்த்திக் கொள்ளத்
துணியைத் தேடியபோதுதான்
தெரிந்தது
பாவிகள்
துணிகளை உருவிக்கொண்டுதான்
புதைத்திருக்கிறார்கள் என்று!
=======================

'இரவில்
தனியாக இருக்கிறோமே
விளக்கை அணைக்க வேண்டுமா என்ன?'
என்று யோசித்தபோது
'வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது'
என்றது
அருகில் ஒரு குரல்
=========================
தனியாக இருக்கிறோமே
விளக்கை அணைக்க வேண்டுமா என்ன?'
என்று யோசித்தபோது
'வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது'
என்றது
அருகில் ஒரு குரல்
=========================
காற்றேயில்லாமல்
இப்படிப் புழுங்கும்
என்று தெரிந்திருந்தால்
புதைக்க வேண்டாம்
எரித்து விடுங்கள்
என்று சொல்லியிருக்கலாம்.
=======================
கனவிலிருந்து
விழித்துக் கொண்டபோது
கரண்ட் இல்லை என்றுதான் நினைத்தேன்
கல்லறை என்று
பின்னர்தான் தெரிந்தது!
===================
திகில் கதை
படித்துக் கொண்டிருந்தேன்.
திகிலே இல்லை.
முதல் வரியை மறுபடி படிக்கவும்
என்றது
கடைசி வரி.
மீண்டும் மேலே சென்றேன்.
எந்த வரிகளையுமே காணோம்!
===============
அப்போ பரவாயில்லை!

குனிந்து பார்த்தபோது
என் உடலைக் காணோம்...
பதறி எழுந்து சென்று
கண்ணாடியில் பார்த்தேன்.
அட,
முகத்தையும் காணோம்!
என் உடலைக் காணோம்...
பதறி எழுந்து சென்று
கண்ணாடியில் பார்த்தேன்.
அட,
முகத்தையும் காணோம்!








