மான் தோல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மான் தோல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.1.12

இரட்டைக் குழந்தையும் நாய் நடையும்..... வெட்டி அரட்டை

   
காதல் போயின் ... 


"சேகர்... நான் உங்களை உண்மையா காதலிக்கிறேன்.."  
           

"என் காதல் உண்மைக் காதல்... உண்மைக் காதல் என்றும் தோற்றுப் போவதில்லை.."

இவை ஆங்காங்கு கேட்கும் வசனங்கள்...! காதலில் உண்மைக் காதல், பொய்க் காதல், மீடியம் காதல் எல்லாம் உண்டா என்ன?  

ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி... (பாட்டுங்க...)

ஏதோ ஒரு தடையினால் காதல் நிறைவேறா நிலை வந்தால் நிம்மதிக்காக (!) அந்தக் காதலை விட்டுக் கொடுத்தல் நல்லதா? அல்லது எப்படி இருந்தாலும் விடமாட்டேன் என்று பிடிவாதத் திருமணம் செய்வது உண்மைக் காதலா? 

காதல் என்றால் என்ன?

திருமணத்துக்கு முன் வரும் காதலும் தி. பின் வரும் காதலும் ஒன்றுதானா... வித்தியாசம் உண்டா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லாமல் போனால்....

அட, ஒண்ணும் ஆகாது... அடுத்ததைப் படிங்க...!

******************************************
கண்கண்ட பிரபலங்கள்!  

இசைவிழா அலைச்சல்களின்போது சில பிரபலங்கள் கண்ணில் பட்டார்கள்- பாடுபவர்களைத் தவிர! பாஸ்கி, மாது பாலாஜி,  கிரேசி மோகன், ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன். 
   
கடைசியாகச் சொல்லியிருப்பவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் வாரிசு. கல்கியில் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளிப்பவர். சமீபத்தைய அவரின் பதில் ஒன்றை ரசித்ததாக அவரிடம் சொல்லலாமா என்று சற்று நேரம் தாமதித்தேன். ஐம்பது அகவையைக் கடந்த நாரீமணிகள் அவரிடம் இடைவிடாது கூட நடந்து கேட்டுக் கொண்டு இருந்ததில் என் எண்ணத்தைக் கை விட்டேன். உங்களிடம் பகிர்கிறேன்!

கேள்வி : மான் தோலில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஞானம் வருமா?

பதில் : போலீஸ்தான் வரும்!

*****************************************
பெயரைச் சொல்லவா? 

சில பெயர்கள் எதிரில் உள்ளவர்கள் சொல்லும்போது அரைகுறையாகக் காதில் விழுந்து என்ன பெயர் என்று தெரியாமல் போகும். சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் சொன்ன பெயர் 'பானுமதி சித்தப்பா' என்றே காதில் விழுந்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் கழித்து சரியான பெயர் தெரிந்தது பானு முஸ்தபா...!

பள்ளியில் படித்த காலத்தில் வருடத்தின் முதல் நாளில் மாணவர்கள் அவரவர் பெயரை அவரவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் நிகழ்வின் போது மலேஷியாவிலிருந்து வந்ததாக அறியப் பட்ட புதிய அட்மிஷன் மாணவன் ஒருவன் அவன் பெயரைச் சொன்னது என் (டப்பா) காதில் ஓமே டகாயராஜ் என்று விழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் நண்பர்களுடன் அவனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓரளவு சந்த நயத்தை மட்டும் வெளிப் படுத்தி சமாளித்த பின் சரியான பெயர் அவன் நோட்டைப் பார்த்ததும் தெரிந்தது! அது வரை மலேஷியப் பெயர் அபபடி வைப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! சரியான பெயர் கோமேதக வேலு. ஆனாலும் வித்தியாசமான பெயர்தான் இல்லை? 

***********************************************
 சோழன் 
  
பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது நான் கேள்விப் பட்ட, நல்ல தமிழ்ப் பெயர்கள் சிலவற்றைத் தருகிறேன்.

புகழேந்தி, இலக்கியா, எழிலன், இளங்கோ. 

சோழன் என்ற பெயரில் என்னோடு ஒரு மாணவன் படித்தான். ஆச்சர்யம்!  இதை எழுதும்போதுதான் அவன் ஞாபகம் திடீரென வருகிறது. சேரன், பாண்டியன் பெயரெல்லாம் சகஜம்.... தனியாகச் சோழன் என்று நான் கேள்விப்பட்டது அதுவே முதலும் கடைசியும்! என்னுடன் படித்த இன்னொரு வித்தியாசமான பெயர் கொண்ட நண்பன் சுதாமன்! 

****************************************************

ஓடத் தெரிந்த நாயே ... உனக்கு ...

அப்பா கேட்ட சந்தேகம்..."நாய் ஏன் நடப்பதே இல்லை?" ஒன்று மெல்லோட்டம், அல்லது வேக ஓட்டம். நிதான நடை நடக்கும் தெரு நாயைப் பார்ப்பது அரிது. (வாக்கிங் அழைத்துச் செல்லப் படும் நாய்கள் கணக்கில் வாரா!). 'நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை சரி, ஆனால் ஏன்?

  

*********************************************

முது காவல். 


முதியோர் கல்வி போல முதியோர் வேலை வாய்ப்பு இப்போது பிரகாசமாக இருக்கிறது போலும்.  ஊர் முழுக்கக் கட்டிடங்கள் ஆபீஸ்கள், அபார்ட்மெண்ட்டுகள் என்று... எல்லா கட்டிட வாசலிலும் நீலச் சீருடை அணிந்த காவலாளிகள்....! என்ன, சம்பளம்தான் பத்தாயிரத்தை தாண்டாது போலும்.
    
***************************************
இரட்டைக் குழவி 


  
திரைப் படத்தில் இரட்டைக் குழந்தைகள் என்று காட்டினாலே ஒன்று தொலையப் போகிறது என்று அர்த்தம்! எனவே இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் இளவயதில் எதாவது ஒரு பாட்டைக் குடும்பப் பாட்டாக தெரிவு செய்து கொள்ளுதல் நலம். பின்னால் தொலைந்து போனால் உதவியாக இருக்கும்! 

இசை விழாக்களில் இரட்டையர்கள் நிறைய பேர் பாடுகிறார்கள். இதே பயத்திலும் ஐடியாவிலும்தான் அவர்களுடைய பெற்றோர் அந்த இரட்டையர்களுக்கெல்லாம் சங்கீதம் கற்றுக் கொடுத்திருப்பார்களோ....? 

**********************************************
காணாத கோலம் ... 
   
தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த யோசனை.
  
ஒலியை மியூட் செய்ய முடிகிறது. ஆனால் காட்சி வேண்டாம் என்றால் அதை மறைத்து பாட்டு, அல்லது செய்தி மட்டும் கேட்க முடிவதில்லை! நாம் தலையைத் திருப்பிக் கொண்டால்தான் உண்டு! புதிய வசதிகளில் டிவிக்கள் இதை முயற்சி செய்யலாமே....
   
அல்லது ஏற்கெனவே இருந்து என் சிற்றறிவுக்குத் தெரியவில்லையா?

**********************************************************
தோற்று(ம்) தேற்று மனதை ... 
    
ஆஸ்திரேலியத் தொடரில் தோல்விக்கு,  தோனி காரணங்கள் கண்டு பிடித்திருக்கிறார்.

* பேட்ஸ்மேன் யாரும் சரியாக விளையாடவில்லை. 

* முதல் இன்னிங்க்ஸ்ஸில் முன்னூறு முன்னூற்றைம்பது ரன் எடுத்திருக்கலாம். 

* பவுலர்கள் சரியாக பௌல் செய்யவில்லை. ஆஸி அணியினரை ரன் எடுக்க விடாமல் முன்னரே அவுட் செய்திருக்க வேண்டும். 

:-) இந்த மகேந்திர சிங் முன்பு மன் மோகன் சிங் தோற்றார்! 
  
*****************************************************
நாட் குறிப்பு - நம் தப்பு! 
     
புதிய டைரிகள் வேண்டுமா என்று கேட்டவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.    
  
எல்லோரும் படிப்பார்கள் என்றால் உண்மையை எழுதுவோமா என்ன? 

டைரியை நம்மைத் தவிர யாரும் படிக்கக் கூடாது என்றால் ஏன் எழுத வேண்டும்?

எனக்கு நிறைய மாமாக்கள். ஒரு மாமா சொன்னார். அவர் எழுதி வைத்திருக்கும் டைரியில் அவ்வப்போது ஒவ்வொரு பக்கத்தில் சில கமெண்ட்ஸ் இருக்குமாம்! 

 "முட்டாளே! நீ நினைத்துக் கொண்டிருப்பது தவறு"

"அடுத்த முறை இன்னும் சுவாரஸ்யமாய் எழுது" இப்படி....!

அவரின் அண்ணனான இன்னொரு மாமாவின் வேலை!

*****************************************************