ஸ்ரீராம் :
வர வர மாமி கழுதை போல் ஆனாளாம் என்பது போல - இந்தப் பழமொழி ஏன் சொல்கிறார்கள், என்ன அர்த்தம்?
# வர வர மாமியார்..
மருமகள் வந்த புதிதில் அதீத அன்பாகப் பேசிய மாமியார் நாட்கள் செல்லச் செல்ல, கிட்டே போனால் உதைக்கிற கழுதை மாதிரி மாறிப் போனாள் என்று சொல்லும் சொற்றொடர். அந்தக் காலத்தில் மருமகளை சித்ரவதை செய்த மாமியார்கள் சகஜம். அம்மாவோடு சேர்ந்து கொண்டு கணவர்களும் மனைவியைப் பாடாகப் படுத்தியது உண்டு. இன்று அடுத்த இன்னிங்ஸ் நடக்கும் வீடுகளும் உண்டு.
& சென்ற வியாழன் பதிவில், ஸ்ரீராம் கேட்ட இந்தக் கேள்விக்கு, வாசகர், பதிவர் கமலா ஹரிஹரன் அவர்கள் கொடுத்திருந்த பதில் :
வணக்கம் சகோதரரே!
"வரவர மாமி கழுதை போலானாளாம்." என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் ஓரிடத்தில் படித்தேன். இதில் கழுதை என்ற இடத்தில் "கயிதை" என வர வேண்டுமாம். (சென்னையில் கூட இப்படி கழுதைக்கு "கயிதை" என்றுதான் குறிப்பிடுவார்கள்.கேட்டிருக்கிறேன். ) கயிதை என்றால் ஊமத்தம்பூ. இந்தப்பூ பூக்கும் போது மென்மையாக அழகானதாக பூத்து நாட்பட்ட, நாட்பட்ட அதன் காய் விஷமுள்ள முட்கள் அடங்கிய கடின தோற்றத்தை பெற்று விடும். அது போல மாமியார்கள் ஆரம்பத்தில் இந்த மென்மையான பூவைப் போல அன்பாக இருந்து, பின் வம்பாக பேசி, நாளடைவில் மருமகள்களுக்கு வேம்பாக அந்த ஊமத்தங்காயைப் போல கசந்து விடுவார்கள். அதனால்தான் இந்த "வரவர மாமியார் "பழமொழி உண்டாயிற்றாம். ( ஆனால், இறுதிவரை அன்பாகவே இருக்கும் மாமியார்களை வணங்கிக் மன்னிப்பும் கேட்டுக் கொள்வோம்.) ஏதோ படித்ததை பகிர்ந்தேன். நன்றி.
நெல்லைத்தமிழன்:
சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகள் இப்போது உயிருடன் மீண்டால் கொலையாளிகளாக ஆவார்களா இல்லை ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்களா? (ஏன் காமராஜரே இப்போது உயிருடன் வந்தால், அவருடைய உறவினர்களே கொலைகாண்டு ஆவதற்கான சூழலே இப்போது இருக்கிறது இல்லையா?)
# எல்லாவற்றுக்கும் இடம் பொருள் ஏவல் என்று இருக்கிறது. ஸ்ரீ ராமபிரானே இன்று வந்தால்கூட சற்றுத் திணறுவார் என்று நான் நினைக்கிறேன். அவரவர் சூழலில் அவரவர் காலத்தில் அவரவர் நாயகர்.
இந்த யோகா மாஸ்டர்கள், எடை குறைப்புக்காக உடற்பயிற்சிகள் சொல்லித்தரும் யூடியூப் வீடியோக்கள் என்னைக் கடுப்படிக்கும். அவங்க மாதிரி ஸ்லிம்மா இருந்தால் எல்லா யோகாவும் சுலபமாகச் செய்துவிடலாமே. உடற்பயிற்சிகளும். குண்டாக இருப்பவர்கள்தாம் யோகா, உடற்பயிற்சிகள் சொல்லித்தர, காண்பித்துத்தர உகந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?
# குண்டாக இருக்கிறவர் யோகா சொல்லிக் கொடுத்தால் நீங்கள் வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம். பலர் அவர் மேல் நம்பிக்கை வைக்கவே மாட்டார்கள்.
ஒரு விபத்தோ இல்லை மோசமான நிகழ்வுகளோ நடந்தால் உடனடி ரியாக்ஷன் கொடுப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறிர்கள்? (காஷ்மீர் தீவிரவாதச் சம்பவம் நடந்த உடனேயே, தங்கள் காஷ்மீர் விடுமுறைப் பயணத்தை, அது இரண்டு மூன்று வாரங்கள் கழித்து என்றாலும் கேன்சல் செய்பவர்கள், விமான விபத்தைப் பார்த்து விமானப் பயணங்களை கேன்சல் செய்பவர்கள்)
# ரியாக்ஷன் கொடுப்பது தவறு என்று சொல்ல முடியாது. அது மனித இயற்கை. அப்படி ஒரு செய்தியை பார்த்து தமது பயண திட்டங்களை மாற்றிக் கொள்கிறவர்களுடைய நடவடிக்கையும் புரிந்து கொள்ளக் கூடியதுதானே.
ஒரு விபத்தில் இவ்வளவு பேர் 250+ மரணமடைவதைப் பார்த்து, இவ்வளவு பேருக்கும் அன்று ஆயுள் முடிந்திருக்குமா, ஜாதகப் பிரகாரம் என்ற சந்தேகம் வருகிறது. அதிலும் ஒரே ஒரு ஆள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்ததைப் பார்த்ததும் இப்படி ஆயுள் கெட்டியாக இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. ஆயுள் Bபாவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
# பொதுவாகவே ஜாதகம், இராசி பலன் இவற்றில் எல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. சரியாக ஒத்துப் போகிற சில நிகழ்ச்சிகளும் கூட தற்செயலானவை என்பதே என்னுடைய எண்ணம்.
& ஒருவேளை அன்று (வியாழன்) மதியம் 1.10 க்கு(?) கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாக 1.30 க்கு இராகு காலத்தில் கிளம்பியதுதான் விபத்துக்குக் காரணமோ என்று எனக்குத் தோன்றியது.
சுப்பன் குப்பன்லாம் தங்கள் இஷ்டப்படி, இப்படித்தான் விபத்து நடந்திருக்கலாம் என்று அனுமான யூடியூப் காணொளிகள் போடுவது, கிடைக்கற நேரத்தில் பணம் பார்த்துவிடலாம் என்ற ஆசை காரணமாகவா?
# பொதுவாகவே சமூக ஊடகங்களில் தமது பதிவுகளை அதிகம் பேர் பார்க்கிறார்கள் அதிகம் பேர் விரும்பி லைக் செய்கிறார்கள் என்கிற நிகழ்ச்சி பலருக்கும் பெருத்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்ன செய்தாவது அதிக ரசிகர்களை பெற்றுவிட வேண்டும் என்கிற துடிப்பு மிகப் பரவலாக ஆகியிருக்கிறது
யாரேனும் செத்துப்போயிட்டாங்கன்னா RIP Rest In Peace என்று சொல்றாங்க இல்லையா? அப்படீன்னாக்க என்னா?
# கிறிஸ்தவ நம்பிக்கையின் படி , இறந்தவர்கள் மீண்டெழும் நாள் வரை அமைதித்துயிலில் இருந்து கேப்ரியலால் எக்காளம் ஊதி எழுப்பப் பட்டு நியாயத் தீர்ப்புப் பெற்று இறைவன் சந்நிதானத்தில் இன்புறுவதோ நரகத்தில் இடர்ப் படுவதோ நடக்குமாம். சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு அமைதியாக இருக்கட்டும் என்பதை RIP குறிக்கிறது.
வாட்சப் க்ரூப் ஒரு விஷயத்துக்காக ஆரம்பித்தால் அதில் குட்மார்னிங், கடவுள் பற்றி பார்வேர்ட் பண்ணும் வியாதி உள்ளவர்களை எப்படி குணப்படுத்துவது?
# சில நோய்களுக்கு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
1. a). தங்கள் குழந்தைகள் போர்ட் எக்ஸாம் எழுதப் போகிறார்கள் என்று கேபிள் டி.வி. இணைப்பை துண்டிக்கும் பெற்றோர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
# சூழ்நிலை மனிதனின் இயல்புகளை உருவாக்குகிறது என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த மாதிரி செய்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் பிள்ளைகள் பெரியவர்கள் யாரானாலும் தமது காரியத்தை கவனத்துடன் செய்கிற திறன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது சரியா இல்லையா என்பது பற்றிப் பல வேறு கருத்துக்கள் இருக்கக்கூடும்.
b). நீங்கள் அப்படி. செய்தீர்களா?
& நான் அப்படி செய்தது இல்லை. ஆனால், என்னுடைய பையன் அவனுடைய பையன்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்பதால் டாடா பிளே இணைப்பை நிறுத்திவிட்டான்.
இங்கே என் மகளின் நண்பர்கள் சிலர் ஒரு குருவை பின்பற்றுகிறார்கள். அவர்களில் சிலரின் வீடுகளில் டி.வி. ,உண்டு, ஆனால் அதில் யூ டியூபில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் பார்ப்பார்களாம். நோ கார்டூன், நோ சினிமா ஸ்டஃப். இப்படி குழந்தைகளை வளர்ப்பது சரியா?
# இது கொஞ்சம் சிக்கலான விஷயம். ' விளையும் பயிர் முளையிலே ' என்று சொல்வார்கள் அல்லவா ? வேண்டாத விஷயங்களைத் தவிர்த்து, பிள்ளைகளை சரியான சூழ்நிலையில் வளர்ப்பது என்பதில் ஒரு அடிப்படை நியாயம் இருக்கிறது. ஆனால் அதனால் மட்டும் பிள்ளைகள் சரியான முறையில் வளர்ந்து விடுவார்களா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். காரணம் வெளி உலகில் நாம் சரியல்ல என்று நினைக்கக்கூடிய பழைய விஷயங்கள் அவர்களது கவனத்தைக் கவரக் கூடும். அதை தவிர்ப்பது நமக்கு இயலாததாக இருப்பதால் நம் எதிர்பார்ப்புகள் நடவாமல் போவதும் சாத்தியம்தான்.
என்றாலும், ஒரு கருத்து என்று வைத்துப் பார்க்கும்போது, இந்த மாதிரி வேண்டாத விஷயங்களைத் தவிர்த்து நல்ல சூழ்நிலையைத் தொடர்ந்து வீட்டில் இருக்கச் செய்வது என்பது ஒரு நல்ல விஷயமாகவே படுகிறது. இதை நடைமுறைப்படுத்துவதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். அவற்றையும் மீறி சரியான முறையில் தொடர்ந்து இருக்க முடியுமானால் நன்றாகத்தானே இருக்க வேண்டும் ?
திருமணமாகாத பெண்கள் இந்த ஸ்லோகத்தை சொன்னால் விரைவில் திருமணம் நடக்கும் என்று பெண்களுக்கு பிரத்யேக ஸ்லோகங்கள் இருப்பது போல திருமணமாகாத ஆண்களுக்கு ஸ்லோகங்கள் ஏன் இல்லை?
# உண்மையில் அதுதான் தற்போதைய அவசரத் தேவை.
" பெண் வீட்டார்கள் கொஞ்சம் இறங்கி வர வேண்டும். ரொம்பப் பிடிவாதமா இருக்காங்க " என்று ஒரு ஜோசியர் மனம் நொந்து போய் என்னிடம் சொன்னார்.
" நூற்றாண்டுகளாக மாப்பிள்ளை வீட்டார் செய்த அட்டூழியங்களுக்கு ஒரு இருபத்தைந்து வருஷமானும் பழி வாங்கணும் " என்று முடிவு செய்து விட்டார்களோ ?
& திருமணம் நடக்க ஆண்கள் சொல்லவேண்டிய சுலோகம் ஒன்றை சுவாமி கௌதமானந்தா எழுதியுள்ளார். அது :
திரிகால சம்பூர்ண திரிஷாய நமஹ -
திருமண வரம் அருள்வாயாக!
பொன்னியின் செல்வியே போற்றி
பொருத்தமான ஜோடி அருள்வாய்
நயன தாரை நட்சத்திர ரூபாய நமஹ
நாயகி வாய்க்க நல்வரம் அருள்வாய்!
விக்னேஷ் சிவனின் தாரமே போற்றி
விவாக வரம் அருள்வாய் போற்றி !
கே. சக்ரபாணி சென்னை 28:
1. எங்கு சென்றாலும் கையில். வாட்டர் பாட்டில் எடுத்துச்செல்வது மிகவும் நன்று. அது எனக்கு இரண்டு முறை. மானத்தை காப்பாத்தியது. ஒருமுறை ஊட்டி சென்றபோது. மறுமுறை. திருவள்ளூர் அருகே ஒரு ஊருக்கு சென்ற போது. இதேபோல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறதா?
# நான் பழக்கமில்லாத தண்ணீர் குடித்தால் ஒவ்வாமை இருமல் வந்து அவதிப் படுவேன் என்பதால் தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியே போவதில்லை.
2. சாதாரணமாக 420 என்ற. நம்பருக்கு. ஒரு அவப்பெயர் உண்டு. அதை சிலர். ஃபோர் ட்வன்ட்டி. என்றும். வடமாநிலங்களில் சார் சௌபீஸ் என்பார்கள். எப்படி அந்த. அவப்பெயர் வந்தது?
# இந்திய குற்றவியல் பிரிவு 420 மோசடி / ஏமாற்றல் குறித்தது.
@CGSenu :
இந்தியக் குற்றவியல் சட்டம் (IPC) பிரிவு 420 என்பது மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களைப் பெறுதல் என்ற குற்றத்தை விவரிக்கிறது.
IPC Section 420 – விளக்கம்:
இந்த பிரிவு கீழ்க்கண்ட காரியங்களை குற்றமாக அறிவிக்கிறது:
"மோசடியாகவும், அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் ஒருவரை ஏதேனும் சொத்துக்களை ஒப்படைக்கச் செய்வதும், அல்லது ஏதேனும் மதிப்புடைய பொருளை வழங்கச் செய்வதும், அல்லது அவ்வாறு செய்வதற்கான ஒப்புதலை பெறுவதும்" என்ற குற்றமாகும்.
தமிழ் விளக்கம்:
ஒருவர் ஏமாற்றும் நோக்கத்துடன், மற்றொருவரிடம் இருந்து பணம், சொத்து அல்லது மதிப்புள்ள பொருள் பெற்றால் அல்லது பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்தால், அவர் மீது குற்றவியல் சட்டம் 420 படி வழக்கு பதிவு செய்யலாம்.
இந்த பிரிவின் கீழ்:
இது ஓர் அபராத தண்டனைக்குட்பட்டதும், பிடிபடக்கூடியதும், வழக்குத் தொடரக்கூடியதும் ஆகும்.
குற்றவாளிக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மேலும் அபராதமும் விதிக்கப்படும்.
= = = = = = = = = =
படமும், பதமும் !
இந்த வாரம் நெல்லைத்தமிழன் மற்றும் பானுமதி வெங்கடேஸ்வரன் இருவரும் பல படங்கள் + பதங்கள் அனுப்பியுள்ளார்கள். நெ த அனுப்பியவற்றில் சில இந்த வாரமும், மீதியுள்ளவை அடுத்த வாரமும் இடம் பெறும்.
1) நெல்லைத்தமிழன்:
காளான்கள் என்றதும் எண்பதில் எங்கள் பள்ளியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பாட்டனி ஆசிரியர் நினைவுக்கு வருகிறார். அவர் ஹாக்கி சாம்பியனாக இருந்தவர். பிஜி படித்த ஆசிரியர்கள் வேலைக்கு வருவது தொடங்கியிருந்த சமயம்.
பதிலளிநீக்குஎங்களுக்கு வகுப்பில் காளான் வளர்த்தல், தான் லேபில் வளர்த்த காளான் போன்றவற்றைக் காண்பித்து இது மிகப் பெரிய பிஸினெஸ் வாய்ப்புள்ளது என்றார். அந்த வயதில் புரியவில்லை. அவரே அந்தத் தொழிலில் இறங்கியருந்தால் பெரும் பணக்கார்ராயிருந்திருப்பார்.
காளான் வளர்ப்பு பற்றி நானும் ஊடகங்களிலும் புத்தகங்களிலும்
நீக்குதெரிந்துகொண்டேன். ஆனால் எனக்கு காளான் பிடிக்காது.
ரொம்ப ரெஸ்ட்ரிக்ஷன் இருப்பது ஒரு ஒழுங்குமுறையில் குழந்தைகளை வளரச் செய்யலாம் அல்லது அதற்கு நேர்மாறாகவும் போகலாம். வீட்டில் பசங்களைப் படி படி எனச் சொல்லிவிட்டு வேண்டாத சீரியல்களில் ஆழ்ந்துவிடுவதைவிட இது எவ்வளவோ மேல்.
பதிலளிநீக்குஇந்த முறை, மிகச் சரியாக வேலை செய்யுமா என்றால், தற்கால பிராமண குழந்தைகள் எப்படி இருக்கின்றன என்பதை அவதானித்தாலே தெரிந்துவிடும்.
அப்படி அவதானித்தல் அவ்வளவு சுலபமான வேலை இல்லை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய புதன் கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
திருமணமாகாத ஆண்களுக்கான ஸ்லோகத்தை தந்த ஸ்வாமி கௌதமானாந்தரை வணங்கி ஆண்கள் பயன் பெறலாம். ஸ்லோகம் அருமை. ஹா ஹா ஹா.
நானும் இப்போதெல்லாம் கையில் வீட்டில் நிரப்பிய தண்ணீர் பாட்டில் இல்லாமல் எங்கும் பிராயணிக்க மாட்டேன். வேறு தண்ணீர் குடித்தால், தொண்டை கமறல் வந்து விடுகிறது. தங்களதும் நல்ல பதில்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கான என் பதிலையும் இங்கு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.
மற்ற கேள்விகளை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குஆண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க சொல்லவேண்டிய மந்திரம். ஸ்ரீ லஸ்ரீ. கௌதமானந்தா சொன்ன மந்திரம்
நீக்குசூப்பர் நம் கௌதமன் சார். எப்போது. கௌதமானந்தா
சுவாமிகள் ஆனார். கூடவே. கௌதமியம்
இருப்பாரோ
கே. சக்ரபாணி
:))))
நீக்குநெல்லை கேள்வி உற்பத்தி செய்யும் AI வைத்திருக்கிறாரா? சும்மா சராசரவென்று இஸ்ரேல் பாம்ப் போடுவது போல் அள்ளி வீசுகிறார்!
பதிலளிநீக்குகழுதை கேள்வி எனக்கு ஜான் ஆப்ரஹாமின் "அக்கிரகாரத்தில் கழுதை" யை நினைவு ஊட்டியது.
Jayakumar
:))))
நீக்குகேள்வி பதில் சுவாரஸ்யம்!. திருமணம் ஆக வேண்டி ஆண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் அற்புதம்! இதை 90 கிட்ஸ்களிடம் கொடுத்தால் சொன்னலும் சொல்வார்கள், குறிப்பாக அவர்களின் டெஸ்பரேட்டாக இருக்கும் அவர்களின் பெற்றோர்கள்.
பதிலளிநீக்கு:)))) நன்றி
நீக்கு//ஆண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்// என்ன அநியாயமா இருக்கு இவங்க பாராட்டு. எல்லா ஆண்களும் திரிஷா, நயனதாரா இவங்களை நினைச்சுக்கிட்டு வழிபட்டு பெண்ணைத் தேடினால் கிடைச்ச மாதிரிதான். பேசாம, சேலையே நமஹ, சுடிதாரே நமஹ ஷார்ட் டிரௌசரே நமஹ கிழிந்த ஜீன்ஸே நமஹ என்று வழிபட்டால் யாராவது அகப்படுவாங்க.
நீக்கு:))))
நீக்குஅந்த பசு வெள்ளைப் பசுவும் அல்ல, அது நிற்பது தோட்டமும் அல்ல, இருந்தாலும், எனக்கு 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி, நாவால் நக்குது வெள்ளைப் பசு, பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி' பாடல்தான் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஅட! ஆமாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று மற்ற கேள்விகளையும் , அதற்கு தகுந்ததான பதில்களையும் ரசித்துப் படித்தேன். அருமை. படமும், பதமும் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. (ஜீன் மாத புகைப்படங்களுக்கான போட்டி இப்படித்தான் என இந்த வாரம் புரிந்து கொண்டேன்.சென்ற வாரமும் இதுபற்றி புரிந்து கொள்ள கேட்டிருந்தேன் என நினைக்கிறேன்.) சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களுக்கும், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
காளான் படங்களைப்பார்த்தேன். தொடர் மழையில் இப்படி பெரிதான காளான் பூத்திருக்கிறது. இப்போது காளான்களை அனைவரும் உணவில் சத்து மிகுந்ததென சேர்த்துக் கொள்கிறார்கள். எனக்கு அதைப்பார்த்தாலே கொஞ்சம் அருவெறுப்பாக உள்ளது. அந்த காலத்தில் மழை காலத்தில் ஆங்காங்கே பூக்கும் இதை நாங்கள் "நாய்குடை" என்போம். "பூஞ்சாளம்" என்ற பெயரிலும் கூறுவோம். (ஒருவேளை இப்போதைய காளான் என்பது வேறோ?) இப்போது இது சிறந்த உணவாகி விட்டது. விலையும் ஏகமாக ஏறி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காளான் 🍄 களில் சில வகைகள் மட்டுமே உண்ணத் தகுந்தவை.
நீக்குநாய்க்குடை வகை உண்ணக்கூடாது.
கேள்விபதில்கள் பலதையும் தருகின்றன.
பதிலளிநீக்குகாளான், பசு படங்கள் நன்றாக இருக்கின்றன.
நன்றி .
நீக்கு& திருமணம் நடக்க ஆண்கள் சொல்லவேண்டிய சுலோகம் ஒன்றை சுவாமி கௌதமானந்தா எழுதியுள்ளார். அது : //
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன் கௌ அண்ணா! நல்ல கற்பனை!!!
கீதா
நெல்லை, மற்றும் பானுக்காவின் படங்கள், குறிப்புகள் நல்லாருக்கு.
பதிலளிநீக்குபசுவும் கன்றும் அழகு!
வெளிநாட்டில் வித்தியாசமான இப்படியானவை ரசிக்க வைக்கின்றன
கீதா
கௌ அண்ணா, போட்டிருக்கும் காளான் போன்று நானும் பார்த்திருக்கிறேன்
பதிலளிநீக்குஎன் மாமியார் வீட்டில் இப்படித் தென்னையின் அடியில் வளர்ந்தவை அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தன எங்கள் வலைத்தளத்தில் போட்ட நினைவு.
கீதா
கடைசி காளான் படம் மஞ்சள் பூஷனிக்காயை வெட்டி கவிழ்த்துப் போட்டது போல இருக்கு!
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு