குமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.6.21

கொலையும் ஒரு கலை

 கத்தியை எடுத்தபோது கூட எப்படிக் கொலை செய்ய வேண்டும் என்கிற சரியான ஐடியா இல்லை.

பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.  நான் கொஞ்சம் சொதப்பாமல் செய்பவன் என்கிற பெயரெடுத்தவர் என்பதால்..

6.10.16

குமுதம், குங்குமம், விகடன் ஒரு பார்வை



     எங்கள் பேப்பர்க்காரர் பேப்பரைத் தூக்கித் தூக்கித் தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்ததாலும், சில வார இதழ்களை போடாமல் விட்டு விட்டு, காசு வாங்கும்போது நான் போட்டேன் என்று சொன்னதாலும் நிறுத்தி விட்டேன்.  



Image result for paper boy 

     இரண்டு மாதங்களாகிறது.  இவையெல்லாம் வாங்காதது
பெரிய நஷ்டமாய்த் தெரியவில்லை.  இணையத்தில் பார்த்து விட முடிகிறது என்பதும் ஒரு காரணம்.  சினிமா விகடன், கல்கி, துக்ளக் வாங்கி கொண்டிருந்தேன்.  தினமணி, இந்து வாங்கி கொண்டிருந்தேன்.  இப்போது தினசரிகளை இணையத்தில் பார்த்து விடுகிறேன்.   மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!






     இரண்டு மாதங்களாகி விட்டதால், சிகரெட்டை நிறுத்தியவன் மறுபடியும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்பானே..   அது போல ஒருநாள் கடைக்குச் சென்று இந்து, தினமணி, தினமலர் பேப்பர் வாங்கி கொண்டு, குமுதம், குங்குமம், ஆனந்த விகடன், துக்ளக் வாங்கி கொண்டு வந்தேன்.


     குமுதம் வாங்கியதற்கு வேறொரு காரணமும் இருந்தது.  என் தங்கையின் இரண்டாவது பெண்ணின் புகைப்படம், சிறு பேட்டி அதில் வந்திருந்தது.


     பழைய முத்து காமிக்ஸ் புத்தகம் வாங்குவோம் பாருங்கள் அந்த சைஸில் இருக்கின்றன குமுதமும், குங்குமமும்!  பாக்கெட் நாவல் கூட கொஞ்சம் பெரிய சைஸாய் காட்சியளிக்கும்!  குமுதம் 20 ரூபாய்.   குங்குமம் 12 ரூபாய்.  விகடன் 25 ரூபாய்.


     குமுதத்தில் தீபாவளி சிறப்பிதழ் என்று 3  புத்தகங்களாம்.


 


 
     ஒரு குமுதத்தின் அட்டையில் "இதனுடன் இணைப்பு மெகா சைஸ்" என்று  அறிவிப்பு.  மெகா சைஸ் என்றால் என்ன?  ரெகுலர் ஆனந்த விகடன் அளவு!  அப்படியானால் குமுதம் சைஸ் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  
     சினிமாவையே பெரிதும் நம்பியிருக்கின்றன இவை மூன்றுமே.. குமுதத்தில் சாரு நிவேதிதா எழுத்து கண்ணில் பட்டது.   குங்குமத்தில் ஜெமோ!  



 
     குங்குமம், மற்றும் குமுதம் அட்டையாவது உள்புறம் மடிந்து படிப்பதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.  விகடன் அட்டை வெளிப்புறமாக மூன்றாகப் பிரிந்து கடுப்பேற்றுகிறது.  கிழித்து எறிந்து விட்டுத்தான் படிக்க வேண்டும்!



 
     விதி விலக்கில்லாமல் எல்லாப் பத்திரிகைகளும் வலைப் பக்கத்தை நம்பியிருக்கின்றன.  வண்டியும் ஒருநாள் ஓடத்தில்..... ! 




     ஒரு ஆச்சர்யம்!   அயன்புரம் த. சத்தியநாராயணன் இன்னும் சளைக்கவில்லை!  



 
     குமுதத்தில் இன்னும் அரசு பதில்கள் வருகிறது.  அரசு வுக்கு இப்போது என்ன விளக்கமோ!
     ஆனந்த விகடனில் இந்தப் பக்கங்களை நான் படிப்பதே இல்லை.







     ஆனந்த விகடனை ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் வாங்கி விட்டார் என்று ஒரு வதந்தி இருந்தது.  மறுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

     ஆனந்த விகடன் நான் வாங்கிய நேரம் தமயந்தியின் கதை வெளியாகி இருக்கிறது!  அவர் கதைகளில் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்.  ஒரு கதையைப் படித்து, இங்கு பகிர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மிக யதேச்சையாக அவர் கண்ணிலேயே அது பட்டு அவர் இங்கு வந்து நன்றியும் சொல்லியிருந்தார் என்று நினைவு.

     பஞ்சு அருணாச்சலம் மறைந்து விட்டார்.  அவர் சொல்லிய விஷயங்கள் தொடராக இன்னும்... 





     குமுதத்தில் எம்ஜிஆர், சிவாஜி பற்றிய தொடர்கள்,  பகோபி தொடர்கதை, சுரேஷ் கண்ணனின் உலக சினிமா, கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா, பாலகுமாரனின் புதிய தொடர்.... இவற்றுடன் சரிதா நாயரின் சுயசரிதை வருகிறது.


     இந்த "மெகா சைஸ்" குமுதம்  சற்று சுவாரஸ்யம்தான்.
 






     குங்குமம் இதழில் ராஜேஷ்குமார் தொடர்கதை, ஈரோடு கதிர் தொடர்...



     கல்கி 15 ரூபாய்.  ஆனால் அது கிடைக்கவில்லை.    இந்தப் பத்திரிகைகளோடு ஒப்பிடுகையில் அது நிச்சயம் பெட்டர் பத்திரிக்கை.
     மறுபடியும் சொல்கிறேன்,  மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!


     பொதுவாக இந்தப் புத்தகங்களுக்கு அவைகளின் பழைய கவர்ச்சி போய்விட்டது.

23.4.11

படித்ததும், பார்த்ததும் நினைத்ததும் .. வெட்டி அரட்டை!

 நீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்ன வாய்ப்பு...எப்படி இருக்கிறது என்று பார்க்க காசு கொடுத்து வாங்கியதுதான்! பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்..!) ப்ளான் பட்டாபி போன்ற படக் கதைகள், அஞ்சு பைசா அம்மு, போன்ற தொடர் சிரிப்பு துணுக்குகள் என்று ஒரு பல்வேறு சுவைகளைக் கொண்ட புத்தகமாய் வெளி வந்த காலம் அது. இப்போது ஒன்றுதான் பிரதானம்...சினிமா...பக்கத்துக்குப் பக்கம்...வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பாவமாக இருந்தது...நான் (வாங்கிய) என்னைச் சொன்னேன்!
                      

************************************************************************* 
      
கல்கியில் பொன்னியின் செல்வன் படமாவது பற்றி வாசகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலனவர்கள்,  விஷப் பரீட்சை என்றே எழுதியிருந்தனர். வந்தியத் தேவன் விஜய், குந்தவை அனுஷ்கா என்றும் காதில் விழும் செய்திகள் கூறுகின்றன. எனக்கு குந்தவையையும் பிடிக்கும் அனுஷ்க்காவையும் பிடிக்கும் ஆனால் அனுஷ்காவை குந்தவையாய் பிடிக்கவில்லை! என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள்? நந்தினியாய் யாரோ..? ஆனால் ஒன்று... ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே... "உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விடேன்.... கதையை படிக்காத எத்தனையோ பேருக்கு அந்தக் கதை போய்ச் சேருகிறதே..." என்கிறான் மகன். ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் கவலை.  
       
**************************************************** 
                                      
ஆனந்த விகடனில் சுகா எழுதும் தொடர் (மூங்கில் மூச்சு?) தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராமலக்ஷ்மி கூட இதைப் பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். வாலி எழுதும் தொடர் படிக்க வாங்கத் தொடங்கியது. விகடன் பரவாயில்லை. சில பல சுவாரஸ்ய பகுதிகள். படிக்கத் தூண்டுவதால் வாங்கவும் தோன்றுகிறது. பொக்கிஷம் என்று பழைய நினைவுகளை போடுகிறார்கள்.

*************************************************  
          
 சினிமா, கவர்ச்சிப் படங்கள் என்று வியாபாரத்துக்காக தன்னை இறக்கிக் கொள்ளாத கல்கியிலும் பல்வேறு சுவாரஸ்ய பகுதிகள் உண்டு. பிரபலங்களை வாசகர்கள் சந்த்தித்திருந்தால் அல்லது அவர்கள் மறக்க முடியாத புகைப் படங்களைக் கேட்டு வாங்கிப் போடுகிறது. அவர்களுடைய முதல் பட்டுப் புடைவை நினைவை கேட்கிறது. பல்வேறு பத்திரிகைகளுக்கும் பயணப் பட்ட ஞானியின் 'ஓ பக்கங்கள்' உண்டு. நினைவுத் திறன் பற்றி லதானந்த் எழுதும் கட்டுரை உண்டு. இவர் ஒரு வலைப் பதிவரும் கூட. கல்கி சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது தெரியுமோ... ஜூன் பதினைந்து கடைசி நாளாம்.

**************************************************   
                               

கணையாழி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. எப்படி இருக்கிறது என்று வாங்கிப் பார்க்க வேண்டும்.

****************************************************  
                        

பாலிமெர் தொலைக் காட்சியில் தலைப்புச் செய்திகள் போடும்போது ஒரு வித்தியாசம் + சுவாரஸ்யம். தலைப்புச் செய்திக்குக் கீழே பெரிய எழுத்துகளில் அந்தச் செய்திக்கு ஒரு கமெண்ட் போடுகிறார்கள்! அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் "சோனியா விடுவாரா?"   
                          
******************************************    
                         
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பக்தர்கள் ஏதாவது அவர் இதில் அற்புதம் நிகழ்த்தக் கூடுமா என்று பிரார்த்தனையுடன் இருக்கிறார்கள். கண்ணீர் மல்க பக்தர்கள் கூடுகிறார்கள். பேட்டியளிக்கிறார்கள் . உள்ளே அனுமதிக்காத அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே சாய்பாபா பற்றி விரிவாக அலசுகிறது.  

 

******************************************************  
                 
       
மக்கள் தொலைக் காட்சியில் இரவு ஒன்பது முதல் பத்து வரை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்று ஒரு நிகழ்ச்சி. அரட்டை என்பது தொலைபேசியில் பேசி மக்களைக் கொல்லும் நிகழ்ச்சிதான். ஆனால் இந்த சேட்டை கொஞ்சம் வித்தியாசம். தொலைபேசி அரட்டைக்கு நடுவில் நான்கைந்து முறை வருகிறது. ஏரல் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்துகிறார். மைக்கும் கையுமாக நல்ல வெள்ளை பேண்ட், ஷர்ட்டில் மக்களை கலாய்க்கிறார். ஷோ ரூம், ஸ்டம்ப், விக்கெட், ரன் அவுட் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் என்ன என்று கேட்கிறார். வரும் பதில்கள் சுவாரஸ்யம். வ உ சி யார் என்றால் மக்களில் சில பேர் காந்தி வரை இழுத்தார்கள்! சரியாகச் சொல்ல முயன்ற ஓரிருவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை என்றார்கள். உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு "அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே" என்பார். அந்தத் திருநெல்வேலி ஸ்லேங்கும் இமான் அண்ணாச்சியின் உடனடி reaction களும் சுவாரஸ்யம். சில முறை பார்க்கலாம்.

************************************************************

CNN IBN னில் ஒரு செய்தி. கேரளாவில் புனித வெள்ளியை தொடர்ந்து வரும் விடுமுறையை அனுபவிக்க மருத்துவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டார்களாம்! புதன் வியாழன் இரண்டு நாட்களில் 21 சிசேரியன் ஆபரேஷன்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற பிரசவ கேஸ்களைக் கூட அழைத்து அறுத்து விட்டதாக பரபரப்பு. நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறதாம்!

******************************************************

ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் (22-04-2011) ராட்சச கெயில் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்க உடன் விளையாடிய நம்மூரு கவர்ச்சிப் பையன் கோஹ்லி பட்ட பாடு சுவாரஸ்யமாக இருந்தது. கெயிலின் சதத்துக்கு இரண்டு ரன்களே தேவை. அணி வெற்றி பெற பத்து ரன் தேவை என்ற நிலையில் இருந்த நிலையிலிருந்து கோஹ்லி அடித்து கொண்டிருக்க, ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் கோஹ்லி தொட்ட ஒரு பந்து நான்கு ரன்னுக்கு சென்று விட, அவரின் குற்ற உணர்வும் பட்ட பாடும்...கெயிலிடம் சென்று பேசி விட்டு வந்து மிச்ச பந்துகளை தடுத்தாடிக் கொண்டிருந்தார். வெற்றிக்கும் கெயிலின் சதத்துக்கும் இரண்டு ரன்களே தேவை! பந்து வீச்சாளர் இந்த நிலையில் ஒரு வைட் பால் போட...கோஹ்லியின் டென்ஷன் எகிறியதை பார்க்கப்  பாவமாகவும் இருந்தது. புதுமையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சக வீரர் சதம் அடிக்க வேண்டும் என்ற அவரின் பொறுப்புணர்ச்சி பாராட்டத் தக்கது. நம்மூரு தினேஷ் கார்த்திக் நினைவுக்கு வந்தார்.   
                
**********************************************************