கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
சிறப்பு பட்டிமன்றத்தில் தலைப்பு கொடுக்கச் சொன்னால் என்னென்ன தலைப்புகள் தருவீர்கள்?
நெல்லைத்தமிழன் :
1. பழைய காலத்தில் கிணற்று, ஆற்று நீரைத்தான் உபயோகித்தார்கள், அரணிக்கட்டையைத்தான் உபயோகித்தார்கள் (நெருப்பு உண்டாக்க), நடந்துதான் போனார்கள் என்று இப்போதைய காலத்திலும் அதையே தொடர்வது சரியா? (சன்னியாசிகளும்)
# சரி தப்பு என்று சொல்ல நாம் யார் ? " நீயும் ஏன் அப்படிச் செய்வதில்லை " என்று கேட்டால் பதில் சொல்லலாம். இஷ்டப்பட்டுச் செய்வதும் வேண்டாம் என்று தவிர்ப்பதும் அவரவர் இஷ்டம். எனக்கு அப்படிப் பழைய வழக்கங்களை கஷ்டப்பட்டு தொடர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் சரியாகத் தோன்றவில்லை.
என் நண்பரின் தந்தையார் ஆசாரசீலர். மகன் வசிக்கும் ஃப்ளாட்டில் தங்க மாட்டார். நீர் அருந்த மாட்டார். கிணற்று நீர் மட்டுமே குடியல் குளியல். அவர் ஆசாரம் அப்படி. பெரிய வித்வான். சநாதனி.
& அந்தக் காலத்துக்கு சரியாக இருந்த பல விஷயங்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது.
2. இரண்டு நாட்களில் வாக்கு செலுத்தும் நாள், நாளைக்கு வாக்கு எண்ணிக்கை, என்று இருந்தாலும், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு என்று அதில் நாம் ஆர்வம் காட்டுவதன் காரணம் என்ன?
# எனக்கும் அது புரியவில்லை. சில நாட்களில் சரியான தகவல் வரும் என்று இருக்கும் போது செலவு செய்து ஊகங்களைப் பெறுவது என்ன பிரயோசனம் ? அது சரியாகவும் இருப்பதில்லை.
& சும்மா பொழுதுபோக்குதான் !
3. யாராக இருந்தாலும், நம்ம ஆளு, நம்ம ஊரு, நம்ம மொழி, நம்ம மாநிலம், தென்னிந்தியா, நம்ம நாடு என்று பாகுபாடு பார்த்து நட்புக் கொள்கிறோமே அதன் காரணம் என்ன?
# மனிதருக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் இருக்கிற குழுப் பிடிமானம்தான். பாதுகாப்பை நாடுவது உயிர்களின் இயல்பு. அது சாதி முதலான உள்வட்டங்களில் இருப்பதாக நினைப்பது பழக்க வழக்கத்தினால் தொடர்கின்ற குணவிசேஷம்.
4. அரசின் இலவசங்களை நீங்கள் வாங்கியிருக்கீங்களா? நம்மால் பணம் கொடுத்து வாங்க முடியும் என்ற நிலையிலும் ரேஷன் பொருட்கள், இலவசங்களை நாம் வாங்கிக்கொள்வது நியாயமா?
# எனக்கு விருப்பமில்லாமலே நான் இல்லாத சமயம் வீட்டுக்கு வந்து தரப்பட்ட மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வெவ்வேறு கிடைக்காதவர்களுக்குக் கொடுத்து சரி செய்ததாகத் திருப்திப் பட்டேன் ! இலவச ரேஷன் நான் வாங்கியதில்லை.
& சென்னையில் இருந்தவரை எந்த இலவசப் பொருட்களையும் நான் வாங்கியதில்லை. வோட்டுக்குப் பணம் வாங்கியது இல்லை. எனக்கு ரேஷன் கார்டு கூட எப்பொழுதோ இருந்ததை அ தி மு க காலத்திலேயே ஏதோ ஒரு அரசனங்க அலுவலகத்தில் கொடுத்து - அதன் பிறகு அவர்கள் திருப்பித் தரவில்லை. சில நாட்கள் தொடர்ந்து கேட்டதும் கிடைக்காததால், அதன் பிறகு அதை மறந்துவிட்டேன்.
5. இலவசமாகக் கிடைப்பதை நாம் ஏன் இவ்வளவு ஆசைப்பட்டு பெற்றுக்கொள்கிறோம், தேவை இல்லாவிடினும்? இயல்பாகவே மனித மனம் கஞ்சத்தனமானது என்று எடுத்துக்கொள்ளலாமா?
# " கடனாகக் கிடைத்தால் கனவானுக்கு இரண்டு யானை " என்று ஒரு சொல் வழக்கு உண்டு. மலிவு, இலவசம் இரண்டுக்கும் ஒரு கவர்ச்சி உண்டு. பொது மேடையில் நம்மை அழைத்து ஒரு அறுபது ரூபாய் பூப்போட்ட டவலை பொன்னாடை என்று சொல்லி அணிவித்தால் ஒரு திருப்தி உண்டாவது போல். (எனக்கு ஒருமுறை நிகழ்ந்தது) இது கஞ்சத் தனமல்ல மலிவான ஆசை.
= = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
விதவிதமான இராணுவ உடைகள். பெண்கள் அணியும் சுடிதாரின் பாட்டம் போல இருக்கிறதே என எண்ணாதீர்கள். பெண்கள், ஆண்களிடமிருந்துதான் நாகரீகங்களைக் காப்பியடித்தார்கள் என்று சொன்னால், மறுக்க இயலுமா?
இல்லை..இல்லை... நான் இன்னும் அந்த வேலைக்குப் போகலை. அரசர்கள்லாம் இருந்திருந்தால் அவங்க பக்கத்துல நின்னு படம் பிடிச்சிருக்கலாம். இல்லையே.. இருந்தது சிப்பாய்கள்தாம். சரி போனாப் போகுதுன்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன்.
நெப்போலியன் போனபர்ட் - சமாதி.. ஃப்ரான்ஸ். யாருப்பா அந்த நெப்போலியன்னு கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஃப்ரெஞ்ச் தளபதி, அரசர். ஃப்ரான்ஸின் 17ம் நூற்றாண்டு வரலாற்றில் முக்கியமானவர். இவருடைய கதை சுவாரசியமானது. அவர் செயிண்ட் ஹெலெனா தீவில் புதைக்கப்பட்டார் (ஆஃப்ரிகா, 1821). பிறகு 1840ல் அங்கிருந்து அவரது சவப்பெட்டி அகழ்ந்து எடுக்கப்பட்டு பாரிஸில் இந்த இடத்தில் வைக்கப்பட்டது.
அங்கு சாதாரண (அதாவது இராணுவத்தில் முக்கியஸ்தர்கள், ஆனால் அரசர்கள் அல்லர்) மற்றவர்களுக்கும் சுவற்றில் சமாதி இருந்தது. அந்தப் பகுதியே கொஞ்சம் அமானுஷ்யமாகத் தெரியுதா?
நெப்போலியன் சமாதி: அதில் சேர்க்கவேண்டிய விஷயங்கள்: வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர் என்று எடுத்துக்கொண்டால் அதில் முதலாவதாக இருப்பது நெபோலியன் போனபர்ட். அவனது வாழ்நாட்களைவிட அதிகமாக அவனைப்பற்றி புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. சுமார் 30,000. அவனை, அவனுடைய கடைசி காலத்தில் ஆர்சனிக் விஷத்தை வைத்து அவனுடைய ஜெனெரல் மோந்தோலன் கொன்றுவிட்டான் என்று அபிப்ராயப்படுகின்றனர். செயிண்ட் ஹெலெனா தீவில் இருந்த அவனது சமாதியை அகழ்ந்தெடுத்து பாரிசில், இராணுவ மியூசியம் அருகே அடக்கம் செய்த படத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அகழ்ந்தெடுக்கும்போது, சவப்பெட்டியையும் திறந்து பார்த்தார்களாம். அவனுடனிருந்தவர்கள் மிக வயதாகியிருந்தபோதும், நெபோலியனின் சவம் கிட்டத்தட்ட அப்படியே இருந்ததாம். இதன் காரணம் செயிண்ட் ஹெலெனா தீவின் வெப்பநிலை அல்லது ஆர்சனிக் விஷம் நெப்போலியன் உடலில் இருந்த தண்ணீரை உறிஞ்சியது இருக்கலாம் என்கின்றனர்.
சிறப்புப் பட்டிமன்றத் தலைப்பில்,
பதிலளிநீக்குஇன்றைய இளைய தலைமுறைக்கு பக்தியை ஏற்படுத்துவதில் யாருக்குப் பங்கு அதிகம், பெற்றோர்களுக்கா அல்லது சமூகத்துக்கா?
பள்ளியில் நீதிபோதனை, தமிழ் பக்தி இலக்கியங்களின் பாடல்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமா இல்லை தற்காலத்துக்குச் சம்பந்தமில்லாதவைகளா?
போன்ற நல்ல தலைப்பெல்லாம் நினைவுக்கு வரவில்லையா?
இனி சரோஜாவைப் பிடிக்கும் என்று சொல்லி யாரேனும் அடிக்க வந்தால் இப்படிச் சொல்லித் தப்பிக்க முடியுமா என்று பார்க்கணும்.
பதிலளிநீக்குசிந்துபாத் படக் கதையை வரியா எழுதினால் ஒரு வாரத்துக்கு ஒரு பத்தி கூடத் தேறாது. அந்த டெக்னிக்கில் நீங்க கதை எழுதறீங்க.
இரண்டு மூன்று மடங்குகள் ஒரு வாரத்தில் எழுதினால் பெட்டரா இருக்கும்.
அந்தக் காலத்தில் சரியாகிருந்த விஷயம் இப்போது பொருந்தாது என்று தெரிந்தும் கல்லுரல், குமுட்டி அடுப்பு, மண்பானை பரணி என பின்னோக்கிப் போறாங்களே. அதற்கு என்ன சொல்றீங்க?
பதிலளிநீக்குஇந்த அல்பமான ஆசையைத்தான் கவுண்டமணி, ஃப்ரீயா குடுத்தா மக்கள் பினாயிலயும் குடிக்கத் தயங்க மாட்டாங்கன்னு சொன்னாரோ?
பதிலளிநீக்குசரோஜாதேவிக்கு பதில் எல்.விஜயலெஷ்மினா எங்க காலத்து சுவாரஸ்யம் கிட்டியிருக்கும். தவிர எல்.வி.க்கு கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை.
பதிலளிநீக்குகொஞ்சம் இருங்க.வாசல்பக்க காலிங் பெல் அடிக்குது..
அநேகமாக நா.நா.வாகத் தான் இருக்கும்.
பார்த்துட்டு வர்றேன்.
ஜீவி சார், சரோஜா தேவி பெயரைப் படித்து வந்தாரா இல்லை விஜயலக்ஷ்மி (வரலெக்ஷ்மி கேள்விப்பட்டிருக்கேன்) பற்றிக் குறிப்பிய வந்தாரா இல்லை தொடர்கதை படிக்கும் ஆசையில் வந்தாரா என்று பட்டிமன்றம் வைக்கலாம் போலிருக்கே
நீக்குமக்களை அதிகம் கெடுப்பது இரண்டுமல்ல. இணையம்.
பதிலளிநீக்குஆண் பெண் திருமணத் தடைக்குக் காரணம் பெற்றோர்கள். இருவருக்கும் 23,24 க்குள் திருமணம் செய்துவைக்காமல் காலத்தை நீட்டிக்கிட்டே போனால், இருவரும் ரொம்பவே மெச்சூராகி, எதிர்பார்ப்புகள் எங்கோ போய், குடும்ப அமைப்பு சிதைவதில் முடியுது.