அனுஷ்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுஷ்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.6.18

அனுஷ்கா என்னைவிட அழகா என்ன?



என் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார்.  அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.

7.6.18

பண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கும் அதிசய நிலா அனுஷ்கா அழகான பூ!



இப்போது ஊபர், ஓலா போன்றவை புக் செய்தபின் அவர்களுக்கு வழி சொல்லவேண்டும்.  அவர்களுக்குக் காட்டும் ஜி பி எஸ் ஸை நம்பினால் பெரும்பாலும் கதை கந்தல் ஆகிவிடும்!  நம் இருப்பிடத்துக்கு நேர் பின்னால் சாலை, அல்லது முன்னால் சாலையில் வந்து நின்றுகொண்டு கூப்பிடுவார்கள்.   

23.4.11

படித்ததும், பார்த்ததும் நினைத்ததும் .. வெட்டி அரட்டை!

 நீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்ன வாய்ப்பு...எப்படி இருக்கிறது என்று பார்க்க காசு கொடுத்து வாங்கியதுதான்! பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்..!) ப்ளான் பட்டாபி போன்ற படக் கதைகள், அஞ்சு பைசா அம்மு, போன்ற தொடர் சிரிப்பு துணுக்குகள் என்று ஒரு பல்வேறு சுவைகளைக் கொண்ட புத்தகமாய் வெளி வந்த காலம் அது. இப்போது ஒன்றுதான் பிரதானம்...சினிமா...பக்கத்துக்குப் பக்கம்...வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பாவமாக இருந்தது...நான் (வாங்கிய) என்னைச் சொன்னேன்!
                      

************************************************************************* 
      
கல்கியில் பொன்னியின் செல்வன் படமாவது பற்றி வாசகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலனவர்கள்,  விஷப் பரீட்சை என்றே எழுதியிருந்தனர். வந்தியத் தேவன் விஜய், குந்தவை அனுஷ்கா என்றும் காதில் விழும் செய்திகள் கூறுகின்றன. எனக்கு குந்தவையையும் பிடிக்கும் அனுஷ்க்காவையும் பிடிக்கும் ஆனால் அனுஷ்காவை குந்தவையாய் பிடிக்கவில்லை! என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள்? நந்தினியாய் யாரோ..? ஆனால் ஒன்று... ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே... "உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விடேன்.... கதையை படிக்காத எத்தனையோ பேருக்கு அந்தக் கதை போய்ச் சேருகிறதே..." என்கிறான் மகன். ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் கவலை.  
       
**************************************************** 
                                      
ஆனந்த விகடனில் சுகா எழுதும் தொடர் (மூங்கில் மூச்சு?) தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராமலக்ஷ்மி கூட இதைப் பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். வாலி எழுதும் தொடர் படிக்க வாங்கத் தொடங்கியது. விகடன் பரவாயில்லை. சில பல சுவாரஸ்ய பகுதிகள். படிக்கத் தூண்டுவதால் வாங்கவும் தோன்றுகிறது. பொக்கிஷம் என்று பழைய நினைவுகளை போடுகிறார்கள்.

*************************************************  
          
 சினிமா, கவர்ச்சிப் படங்கள் என்று வியாபாரத்துக்காக தன்னை இறக்கிக் கொள்ளாத கல்கியிலும் பல்வேறு சுவாரஸ்ய பகுதிகள் உண்டு. பிரபலங்களை வாசகர்கள் சந்த்தித்திருந்தால் அல்லது அவர்கள் மறக்க முடியாத புகைப் படங்களைக் கேட்டு வாங்கிப் போடுகிறது. அவர்களுடைய முதல் பட்டுப் புடைவை நினைவை கேட்கிறது. பல்வேறு பத்திரிகைகளுக்கும் பயணப் பட்ட ஞானியின் 'ஓ பக்கங்கள்' உண்டு. நினைவுத் திறன் பற்றி லதானந்த் எழுதும் கட்டுரை உண்டு. இவர் ஒரு வலைப் பதிவரும் கூட. கல்கி சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது தெரியுமோ... ஜூன் பதினைந்து கடைசி நாளாம்.

**************************************************   
                               

கணையாழி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. எப்படி இருக்கிறது என்று வாங்கிப் பார்க்க வேண்டும்.

****************************************************  
                        

பாலிமெர் தொலைக் காட்சியில் தலைப்புச் செய்திகள் போடும்போது ஒரு வித்தியாசம் + சுவாரஸ்யம். தலைப்புச் செய்திக்குக் கீழே பெரிய எழுத்துகளில் அந்தச் செய்திக்கு ஒரு கமெண்ட் போடுகிறார்கள்! அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் "சோனியா விடுவாரா?"   
                          
******************************************    
                         
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பக்தர்கள் ஏதாவது அவர் இதில் அற்புதம் நிகழ்த்தக் கூடுமா என்று பிரார்த்தனையுடன் இருக்கிறார்கள். கண்ணீர் மல்க பக்தர்கள் கூடுகிறார்கள். பேட்டியளிக்கிறார்கள் . உள்ளே அனுமதிக்காத அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே சாய்பாபா பற்றி விரிவாக அலசுகிறது.  

 

******************************************************  
                 
       
மக்கள் தொலைக் காட்சியில் இரவு ஒன்பது முதல் பத்து வரை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்று ஒரு நிகழ்ச்சி. அரட்டை என்பது தொலைபேசியில் பேசி மக்களைக் கொல்லும் நிகழ்ச்சிதான். ஆனால் இந்த சேட்டை கொஞ்சம் வித்தியாசம். தொலைபேசி அரட்டைக்கு நடுவில் நான்கைந்து முறை வருகிறது. ஏரல் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்துகிறார். மைக்கும் கையுமாக நல்ல வெள்ளை பேண்ட், ஷர்ட்டில் மக்களை கலாய்க்கிறார். ஷோ ரூம், ஸ்டம்ப், விக்கெட், ரன் அவுட் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் என்ன என்று கேட்கிறார். வரும் பதில்கள் சுவாரஸ்யம். வ உ சி யார் என்றால் மக்களில் சில பேர் காந்தி வரை இழுத்தார்கள்! சரியாகச் சொல்ல முயன்ற ஓரிருவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை என்றார்கள். உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு "அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே" என்பார். அந்தத் திருநெல்வேலி ஸ்லேங்கும் இமான் அண்ணாச்சியின் உடனடி reaction களும் சுவாரஸ்யம். சில முறை பார்க்கலாம்.

************************************************************

CNN IBN னில் ஒரு செய்தி. கேரளாவில் புனித வெள்ளியை தொடர்ந்து வரும் விடுமுறையை அனுபவிக்க மருத்துவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டார்களாம்! புதன் வியாழன் இரண்டு நாட்களில் 21 சிசேரியன் ஆபரேஷன்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற பிரசவ கேஸ்களைக் கூட அழைத்து அறுத்து விட்டதாக பரபரப்பு. நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறதாம்!

******************************************************

ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் (22-04-2011) ராட்சச கெயில் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்க உடன் விளையாடிய நம்மூரு கவர்ச்சிப் பையன் கோஹ்லி பட்ட பாடு சுவாரஸ்யமாக இருந்தது. கெயிலின் சதத்துக்கு இரண்டு ரன்களே தேவை. அணி வெற்றி பெற பத்து ரன் தேவை என்ற நிலையில் இருந்த நிலையிலிருந்து கோஹ்லி அடித்து கொண்டிருக்க, ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் கோஹ்லி தொட்ட ஒரு பந்து நான்கு ரன்னுக்கு சென்று விட, அவரின் குற்ற உணர்வும் பட்ட பாடும்...கெயிலிடம் சென்று பேசி விட்டு வந்து மிச்ச பந்துகளை தடுத்தாடிக் கொண்டிருந்தார். வெற்றிக்கும் கெயிலின் சதத்துக்கும் இரண்டு ரன்களே தேவை! பந்து வீச்சாளர் இந்த நிலையில் ஒரு வைட் பால் போட...கோஹ்லியின் டென்ஷன் எகிறியதை பார்க்கப்  பாவமாகவும் இருந்தது. புதுமையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சக வீரர் சதம் அடிக்க வேண்டும் என்ற அவரின் பொறுப்புணர்ச்சி பாராட்டத் தக்கது. நம்மூரு தினேஷ் கார்த்திக் நினைவுக்கு வந்தார்.   
                
**********************************************************