இன்று சன் டி வி இல - சுகி சிவம் இரண்டாவது முறையாக - நேரம் வீணாக்காமை பற்றிப் பேசினார். முக்கியமாக - பொது நிகழ்ச்சிகளில் ஒரு கும்பல் குத்துவிளக்கேற்றி - கூட்டத்தில் உள்ளவர்களது நேரத்தை வீணடித்தல் - மற்றும் பள்ளிக்கூடம் போன்ற ஸ்தாபனங்களில் கூட நிறைய பேச்சாளர்களை அழைத்து - அவர்கள் ஒவ்வொருவரும் - பேசிப் பேசி - அறுவடை செய்வது - மேலும் வரவேற்புரை - அறிமுக உரை - இணைப்புரை - என்று ஆளுக்காள் - அவரவர் செய்யும் உரைகள் (நேர விரயம்) எல்லாம் விளக்கிக் கூறினார். இணைப்புரை கூறுபவர் - பேச்சாளர் பேசிய பேச்சுக்கு மறுப்புரை கூறிய அபத்தம் - ஆகியவை குறித்தும் அவர் கூறினார்!
எங்கள் blog படிக்கும் வாசகர்கள் - அவர்கள் பின்பற்றும் - நேரம் மிச்சப் படுத்தும் யுக்திகள் குறித்து engalblog@gmail.com என்ற ஈ மெயில் விலாசத்திற்கு எழுதினால் - எல்லோருக்கும் பயன்படும் விதமாக - அதை ஒரு கட்டுரையாக வெளியிடுவோம்.