15.1.26

முத்தமொன்று கேட்கிறது சத்தமின்றி மலர்ந்திருக்கும் ஒற்றை ரோஜா

 


மேலே இருப்பது வைகுண்ட ஏகாதசி முடிந்து துவாதசி அன்று ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு.

முன்பு சில வருடங்களுக்கு முன் விரதம் இருந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா..   மறுபடியும் இருந்து பார்த்தால் என்ன என்று தோன்றவே, மறுபடியும் சென்ற சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தேன்.  அப்படி சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்பதை வீட்டாருக்கு காலையில்தான் அறிவித்தேன்.  இரண்டு காரணங்கள்.  என் மனம் மாறிவிட்டால் கேன்சல் செய்து விடலாம்.  இரண்டாவது அவர்கள் யாராவது ஏதாவது பேசி கலைத்து விட்டால்..?!!

முன்பு உண்ணாவிரதம் ஒரு நாளில், மௌன விரதம் ஒருநாளில் என்று தனித் தனியாக இருந்தது போக, இந்த முறை உண்ணா விரதத்துடன் மௌன விரதமும் சேர்த்தே இருக்கத் தீர்மானித்தேன். காலை விஷயம் தெரிந்ததும் பாஸ் அதிர்ச்சி அடைந்தார்.  அப்புறம் சிரித்தார்.  அப்புறம் சில உறவுகளுக்கு இதை ஒலி பரப்பினார்   ஏதேதோ பேசிப் பார்த்தார்.  

"மௌனவிரதம் என்றால் வாயை இப்படி இருக்க மூடிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன?"

கேள்வி நியாயம்தான்.  ஆனால் வாயைத் திறந்து வைத்து என்ன செய்வது?  காற்றா வாங்கப் போகிறோம்?  அல்லது மறந்துபோய் பேசி விட்டால்?  இப்படி உதடுகளை அணைத்தபடியே வைத்திருந்தது எனக்கும் கொஞ்சம், செயற்கையாகத்தான் இருந்தது.

நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் பசி என்ற உணர்வு இல்லை.  இதற்கு கவலைப்படணுமா என்று தெரியவில்லை!  பாஸ் வற்புறுத்தி காலை மாலை காஃபி தவிர எக்ஸ்டரா ஒரு டீயும் கொடுத்து விட்டார்.  எபப்டியோ ஒரு நாள் கழிந்தது.  சட்டென யாராவது அழைத்தால் உடனே பதில் குரல் கொடுக்கும் அபாயம்  இருந்தது.  என் தங்கை, அவள் பெண்கள், பேத்தி  வீடியோ காலில் அழைத்தது அழைத்து வம்பு செய்தார்கள்.

பாஸ் பொங்கல் கணு பர்சேஸ் என்று மருமகளுடன் வெளியே செல்ல, மகன்கள் இருவரும் வேறு வேலையாக வெளியே சென்று விட, அவர்களவ்வப்போது என்னை போனில் அழைத்து சில விஷயங்களை என்னிடம் கன்வே செய்ய முயன்றது வேடிக்கை.  என்னை உம் கொட்ட சொன்னார்கள்.  நான் மனதுக்குள் ஊஹூம் என்று சொல்லிக் கொண்டேன்!  நாங்கல்லாம் யாரு...   ஸ்ட்ரிக்ட்டு...  ஸ்ட்ரிக்ட்டு..  ஸ்ட்ரிக்ட்டு...

தற்செயலாக நான் இப்படி விரதம், அதுவும் மௌன விரதமும் சேர்த்து இருந்திருந்தாலும், கீதா அக்கா பிளாக் படித்தபோது கூடாரவல்லிக்கு முதல் நாளும் விரதம் இருப்பார்கள் என்று தெரிய வந்ததது.  கூடாரவல்லி அன்று காலை குளித்தபின்தான் பேசினேன்!  காலை டிஃபன் சாப்பிடாமல் கூடாரவல்லி சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன்.

வரும் சனிக்கிழமை 'கணு' என்பதால் 'உ வி', 'மௌ வி' இருக்க முடியாது!

==============================================================================================

ஒருநாள் எங்கள் வீட்டு ரோஜாச்செடியில் இந்த தோற்றம் பார்த்ததும் படம் பிடித்து வைத்தேன்.  சில நாட்களுக்குப் பின் திடீரென மனதில் தோன்றி அதற்கு கீழே உள்ளதை எழுதி இன்ஸ்டாவிலும், ஸ்டேட்டஸிலும் வைத்தேன்.  ஸ்டேட்டஸில் நானாக வைக்கவில்லை.  எதிர்பாராத விதமாக ஒரு விபத்து போல அதில் இடம்பெற, பல வருடங்களுக்கு முன் எனக்கு அதிகாரியாய் இருந்த ஒரு பெண் அதிகாரி எனக்கு வாட்ஸாப்பில் 1 2 1 ல் குறிப்பிட்டு கட்டைவிரல், ஆட்காட்டிவிரலை ஒன்று சேர்த்த எமோஜி போட்டு பாராட்டி இருந்தார்.  பின்னும் சில மறந்து போன காண்டாக்ட் லிஸ்ட் நட்புகள் பாராட்டின!  இப்போதெல்லாம் அவ்வப்போது நானே ஸ்டேட்டஸ் வைக்கிறேன்!  அடுத்து வைத்த ரோஜா ஒன்றையும் கூடவே தருகிறேன்!


மொட்டாய் மலராய்
தோற்ற மயக்கம் காட்டி 
தேற்ற முயல்கின்றன 
மலர்காணா செடியின் 
ஏக்கத்தை 
துளிர் இலைகள் 

*****************************************

(2)


முத்தமொன்று கேட்கிறது
குத்தும் முள் பாதுகாப்பில் 
சத்தமின்றி மலர்ந்திருக்கும் 
ஒற்றை ரோஜா
முட்களின் பாதுகாப்பில் 
பூக்களின் இளவரசி!

பறிக்கவும் மனமில்லை - விட்டு
நகரவும் முடியலை!
சத்தம் வராமல், ரத்தம் சிந்தாமல் 
முத்தம் கொடுக்க
யுக்தி ஒன்று சொல்லுங்கள்!

இதற்கு 20 வயது தம்பி ஒருவன் பதில் அனுப்பி இருந்தான்.  அவனிடமிருந்து அதை நான் எதிர்பார்க்கவில்லை.  சட்டென பிடித்துப்போய் அவனைப் பாராட்டினேன்.  அவன் அனுப்பி இருந்தது...

சத்தம் வராமல் முத்தமிட....
தூதுவிடுங்கள் காற்றிடம்....
அது கொண்டு சேர்க்கும் பூவிடம்...🌸


திருப்பெருந்துறையுறை சிவபெருமானே 
உறுபிழை பொருத்தருள்வாய் 
மறுமை வேண்டேன் - அன்பில் 
வறுமை வேண்டேன் - என்பால் 
பொறுமைகொண்டு எனக்கும் 
அந்த மேன்மையை 
போதித்து காத்தருள்வாய் எம்பெருமானே 

(செல்வாண்ணா தனது தளத்தில் பகிர்ந்திருந்த திருவெம்பாவை பாடல் ஒன்றை ஒட்டி எழுத முயன்றது!)
=================================================================================================================

சென்ற வெள்ளியன்று காதல் ஜோதி படத்திலிருந்து SPB குரலில் ஒலித்த பாடல் கொடுத்திருந்தேன்.  இன்று அதே படத்திலிருந்து  இன்னொரு பாடல்.  அந்தக் காலத்தில் இந்த மாதிரி மாட்டு வண்டிகள் சகஜம்.  எனவே பரபரப்புடன், ஈடுபாட்டுடன் காட்சியை ரசித்திருப்பார்கள்.  இப்பொழுது 'பார்றா..  இப்படி எல்லாம் வண்டி இருந்திருக்கிறது' எனும் எண்ணத்தில் ரசிக்கலாம்!

மாடுகளை விரட்டி ஓட்டிக்கொண்டு,  வாலியின் பாடலை, T K ராமமூர்த்தி இசையில், சீர்காழி கோவிந்தராஜன் குரலில், பாடிக் கொண்டே ஓட்டுபவர் ரவிச்சந்திரன்.

ஓடிக்கொண்டிருக்கும் இரட்டை மாடுகளை  அவர் 'ஓஹோஹோஹோ' என்று நிறுத்தி, பாதையில் போவோருக்கு வழிவிட்டு, தொடர்ந்து பாடுவார்.  காட்சியில் பெரிய சாலையாக எல்லாம் இருக்காது.  அந்தக் கால சாலை!  இதை அடுத்த பாடலிலும் பார்க்கலாம்!  அதில் வேறு மாதிரி!

இன்னொன்று, "மோட்டார் என்ன சைக்கிள் என்ன எல்லாம் எனக்கு பின்னாடி..  போட்டா போட்டி வச்சா ங்கே நான்தான் போவேன் முன்னாடி"  எனும் அணுகுமுறை ரசிக்கத்தக்கதாயிருக்கும்.  தன்னம்பிக்கை, உற்சாகம்.  

முத்து படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாட்டில், பாடலின் இறுதியில் தன்னை முந்திச் செல்லும் கல்லூரிப் பேருந்தை ரஜினி மறுபடி விரட்டி, குதிரை வண்டியால் வெற்றி கொள்வார்.  அந்தக் காட்சியையும் நான் ரசிப்பேன்.

'ஓரம் போ ஓரம்போ ருக்குமணி வண்டி' வருது பாடல்  நினைவுக்கு வருகிறது.  நடந்து சென்று கொண்டே பாடினாலும் 'பார்த்துப் போ... ஏய் பார்த்துப் போ... நீ நடந்து போகும் சாலையிலே ஒரு நண்பரும் வரக்கூடும்..  சில நரிகளும் விளையாடும்' வரிகளும் நினவுக்கு வருகிறது.

=============================================================================

C A பாலன் எழுதிய 'தூக்குமர நிழலில்' என்கிற கதையை 'இன்று நீ நாளை நான்' என்று  படமாக இயக்கினார் மேஜர் சுந்தரராஜன்.  சிவகுமார், ஜெய்சங்கர். லக்ஷ்மி நடித்திருந்த படத்துக்கு இசை இளையராஜா.  படத்தில் இன்னும் சில  அழகான பாடல்கள் உண்டு.  ஓரிரு பாடல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். 

இன்று அதிலிருந்து ஒரு வண்டி ஓட்டும் பாடல்.  

இங்கே கங்கை அமரன் எழுதிய பாடலை S P பாலசுப்ரமணியம் குரலில் இளையராஜா இசையில் சிவகுமார் பாடிக் கொண்டே ஓட்டுகிறார்!  இதில் ரயில்வே கேட் மூடியதும் ஓவ் ஓவ் ஓவ் என்று வண்டியை நிறுத்துவார் SPB!  கங்கை அமரனின் இயல்பான நகைச்சுவையும் பாடலில் இடையே இடையே உண்டு.

எனவே இன்றைய பாடல்கள் பகிர்வின் 'தீம்'  மாட்டுவண்டி ஒட்டிக் கொண்டே வித்தியாசமாக பாடுவது.  'பாரப்பா பழனியப்பா', 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' போன்ற இன்னும் சில பாடல்கள் எல்லாம் வேறுரகம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

=======================================================================================

தெரியுமோ.....







உலகில் 3 பேருக்கு அரிய வகை ரத்தம்: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பாங்காக்: தாய்லாந்தில், மனித ரத்தத்தின் ரகசியங்களை ஆராயும் விஞ்ஞானிகள் உலகில் மூன்று பேருக்கு மட்டுமே, அரிதிலும் அரிதான ரத்த வகை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.  தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சிரிராஜ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், 5.44 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர்.

அவர்கள் பரிசோதனைகளின் போது, பொதுவான 'ஏ','பி','ஓ' ஆகிய ரத்தக் குழு அமைப்பில் ஏற்படும் சிறு மாறுபாடுகளை ஆராய்ந்தனர்.  அப்போது 0.15 சதவீத நோயாளிகள் மற்றும் 0.03 சதவீத ரத்த கொடையாளர்களின் ரத்த மாதிரிகளில் வித்தியாசங்கள் தென்பட்டுள்ளன.

அந்த மாதிரிகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, ஒரு நோயாளி மற்றும் ரத்த தானம் செய்த இரண்டு பேருக்கு, 'பி(ஏ)' என்ற அரிய ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 'பி' ரத்த வகையின் கலப்பு வடிவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ரத்த வகைகள், ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஆன்டிஜென்கள்' எனப்படும் புரதம் மற்றும் சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன.
'ஏ', 'பி' ஆன்டிஜென்கள் மற்றும் ஆர்.எச்., காரணி ஆகியவற்றின் கலவையால், 'ஏ', 'பி', 'ஏபி', 'ஓ', என்ற குழுக்கள், 'நெகட்டிவ்', 'பாசிட்டிவ்' என்ற காரணிகள் அடிப்படையில், ரத்த வகைகள் எட்டாக பிரிக்கப்படுகின்றன.  ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள 'பி(ஏ)' ரத்த வகை என்பது 'ஏ.பி.ஓ.,' மரபணுவின் மாற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  அந்த ரத்தத்தில் 'பி' ஆன்டிஜென்களுடன், 'ஏ' ஆன்டிஜென்களின் தன்மை சிறிது இருந்ததால், பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 'பி(ஏ)' ரத்த வகை தோராயமாக ஒரு லட்சத்து 80,000 பேரில் ஒருவருக்கு காணப்படும் ஒரு மரபணு வினோதம் என்று கூறியுள்ளனர்.  அரிய ரத்த வகைகளைக் கொண்ட நபர்களுக்கு மாற்று ரத்தத்தை ஏற்ற முடியாது. இதனால் அவசரகாலத்தில் தகுந்த ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது.  எனவே உலக சுகாதார அமைப்பு, ரத்தப் பரிசோதனை முறைகளை மேம்படுத்துவதுடன், உலகளவில் தானம் செய்வோரின் தரவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


=======================

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா சமீபத்தில் காலமானார். அவரின் 90வது பிறந்த தினம் இன்று(டிச., 8). இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட பதிவில்...

"என் அன்பான இதயமே.... பிறந்தநாள் வாழ்த்துகள். இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது நீங்கள் என்னை விட்டு பிரிந்து இதயம் நொறுங்கி போய் உள்ளேன். அதை மெதுவாக சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து கொண்டிருக்கிறேன்.

நமது இனிய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை. அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பதே எனக்கு பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நமக்கு கிடைத்த அழகிய ஆண்டுகளுக்காகவும், நம்முடைய அன்பை உறுதிப்படுத்தும் நம்முடைய இரு அழகிய மகள்களுக்காகவும், என் இதயத்தில் எப்போதும் தங்கியிருக்கும் அத்தனை அழகான, மகிழ்ச்சியான நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

உங்கள் பிறந்தநாளில் உங்கள் பணிவுக்காகவும், இதயத்தின் நன்மைக்காகவும், மனிதநேயத்தின் மீதான அன்புக்காகவும் நீங்கள் பெரிதும் தகுதியான அமைதியின் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கடவுள் உனக்கு அருள்வாராக என்று பிரார்த்திக்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே... நம்முடைய இனிய 'ஒன்றாக' இருந்த தருணங்கள்...!" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நன்றி தினமலர். 

==============================================================================

                   Eko - மலையாள ஒரிஜினல் - தமிழில் நெட்ஃப்ளிக்ஸ் 




"Eko" has several meanings depending on the language and context, most commonly referring to the firstborn child in Indonesian/Javanese culture (from "eka" meaning "one"), a Japanese Buddhist term for the transfer of merit, or the name for Lagos, Nigeria, in the Yoruba language, meaning "cassava farm". It's also a brand name for various tech companies, like Eko Health (digital stethoscopes) or an employee experience platform

படத்தின் தலைப்புக்கு அர்த்தம் இதுதான்.  ஒன்று.    குரியச்சனும் போத்தனும் மலேசியாவிலிருந்து சில அரியவகை நாய் வகையை இந்தியாவுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தி விற்க முடிவு செய்கிறார்கள்.  அந்த ப்ராசஸில் அங்கு நாய்களை வைத்திருந்த ஒருவரை அணுகுகிறார்கள்.  அவருக்கு ஒரு இளம் மனைவி.  அவர் இறந்த செய்தியை அவர் மனைவியிடம் சொல்ல அங்கு போனால் அந்த நாய்கள் இவர்களை பக்கத்திலேயே நெருங்க விடமாட்டேன் என்கின்றன.  ஒருவழியாய் பெரிய நாய்களைக் கொன்று, சில குட்டிகளுடனும், அந்த பெண்ணுடனும் இந்தியா வருகிறார் குரியச்சன்.  

குரியச்சன் என்னும் அந்த மர்ம நபர் எங்கே இருக்கிறார் என்று ஒவ்வொருவராக வந்து தேடுகிறார்கள்.  அவரைப் பழிவாங்க ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அவர் அழைத்து வந்திருக்கும் அந்த மலேஷியப்பெண் மந்திர தந்திரங்கள் தெரிந்தவர் என்றும் பேச்சு அடிபடுகிறது ஊருக்குள். நாய்களுக்கு ஒரு எஜமான்தான் இருக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.  செம கதை. செம படம். 
'சட்சட்'டென திருப்பங்கள்.  நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதில் ஊசலாடும் காட்சிகள்.  மிக மிக அருமையான லொகேஷன்கள்.  இவர்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி எல்லாம் கதை கிடைக்கிறதோ என்று தோன்றுகிறது.  அவசியம் பார்க்க வேண்டிய படம்.  முடிவை நாம் புரிந்து கொள்ளும் வகையில்  காட்டி இருக்கிறார்கள்.  முன்னதான வசனங்களை கவனிக்க வேண்டும்.  நான் தமிழ் வசனத்தில்தான் பார்த்தேன்.

நெட்ஃபிளிக்சில் நான்  படங்களில் ஒன்று.

================================

Drive - ஒரிஜினல் : தெலுங்கு - பிரைமில் தமிழில் 





இந்தியாவுக்கு வெளியே இருக்கும் மகா பணக்கார ஆதி ஒரு மீட்டிங் முடித்து வீட்டுக்கு கிளம்புகிறார்.  வழியில் வருகிறது ஒரு ஃபோன்.  அவனுடைய இந்த பயணம் உடனடியாக முடிவுக்கு வரக்கூடிய பயணம் இல்லை என்கிறது மர்மக் குரல்.  குரலுக்குரியவன் ஆதி சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் ஹேக் செய்திருக்கிறான்.  முதலில் எடுத்தெறிந்து பேசும் ஆதி, இவன் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவர, வெளிவர அதிர்கிறான், பதட்டமாகிறான், பணிகிறான், கெஞ்சுகிறான்.  செய்திச் சேனல்கள் பரபரக்கின்றன.  அடுத்தடுத்து ரகசியங்கள் வெளியாகின்றன.   க்ளட்ச் எடுத்து உடனடியாக படத்தின் வேகம் டாப் கியரில் பறக்கிறது.  போலீஸால் கூட செய்ய முடியாத ஹேக் போன்ற சமாச்சாரங்களை வில்லன் செய்வது நம்ப முடியாவிட்டாலும், படங்களில் பார்த்து பழகி விட்டதால் பெரிய இடையூறாக தோன்றவில்லை.  அந்த ஹேக்கர் கடைசியில் கதாநாயகன் என்று சொல்லப்படும் ஆதியை படமுடிவில் என்ன செய்கிறான் என்பது கதை.  இரண்டாம் பாகத்துக்கான முன்னுரையோடு படம் தற்காலிகமாக முடிகிறது.  பார்க்கலாம் டைப் படம்.  பரபரபரவென நகர்கிறது.

========================================================================================================




நாரண துரைக் கண்ணன் - சில நினைவுகள்

1960 ஆம் ஆண்டு வில்லிவாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. அதன் தலைவா ஜீவா என்றழைக்கப்பட்ட நாரண துரைக் கண்ணன். பழுத்த தேசியவாதி, பாரதியார் கவிதைகளை நாட்டுடைமையாக்கப் பாடுபட்டவர்களில் ஒருவர். பல ஆண்டுகள் பிரசண்ட விகடன் என்னும் பத்திரிகை ஆசிரியராகப்பணியாற்றியவர். புதிய இளம் எழுத்தாளாகள். கவிதைகள். சுதைகள் சுட்டுரைகள் வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.

தொ.மு.சி. .அழகிரியார் எழுத்தாளராக வேண்டும் என்ற பெருங்கனவோடு வந்த போது அவர்களை ஆதரித்து பிரசண்டவிகடன் பத்திரிகையில் உதவியாசிரியராக நியமித்துக் கொண்டார்.  அவர்கள் எழுதிய கதைகளை வெளியிட்டு எழுத்தாளராக அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் தலைவராக இருந்த செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் செயலாளர்,
நா. கிருஷ்னாமூர்த்தி துணைச் செயலாளர். அதனால் அவரை அடிக்கடி சந்தித்து வந்தோம். பிரசண்ட விகடனில் அவர் என் முதல் சிறு கதையை வெளியிட்டார். அதோடு கதை நன்றாக இருக்கிறது. எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார். ஆனால் நான் எழுதிய முதல் கதை என்னிடம் இல்லை. அதன் பெயரும் நினைவில் இல்லை. அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி. லட்சுமி போன்றோரின் முதல் சிறுகதைகளையும் பிராண்டவிகடந் தான் வெளியிட்டது.

1961ஆம் ஆண்டில் செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாடு வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் பொருளாளக இருந்த டி. பார்த்தசாரதி மாநாட்டில் சிறப்புரை ஆற்ற அறிஞர் அண்ணாவை அழைத்து வந்தார்.  கா.ஸ்ரீ..ஸ்ரீ,  வெ.சாமிநாதசர்மா ஆகியோர் வாழ்நாள் சாதனையைப் போற்றி பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது.  அந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா சொன்னார், 
'எழுத்தாளர்கள் கவிதைகள், கதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கக்கூடாது. சமூக சரித்திர வரவற்று நூல்களையும் எழுதவேண்டும். செங்கற்பட்டிலும் சென்னையிலும் பல ஆறுகள் இருக்கின்றன். அவற்றில் எப்போதும் நல்ல நீர்  ஓடாவிட்டாலும், வாழ்வாதாரத்திற்கு ஆறுகளே அடிப்படையாக இருக்கின்றன. அவை பற்றியும் எழுத வேண்டும். நான் செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னால் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அது அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கள் கடைசி நாள் பற்றியும் அவரைக் கொல்வதற்கு ஆயத்தமான ஜான்வர்க்கிப்பூத் பற்றியும் மாறி மாறி சொல்லும் புத்தகம்.  1865 ஏப்ரல் 14 தேதி நடந்த மகத்தான சோக நிகழ்ளை அப்படியே சித்தரிப்பது.

அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி வெற்றிபெற்று விட்டார். ஆறு நாட்கள் ஆகி இருந்தன. எதிர்த்துப் போராடிய மாநிலங்களின் தலைமை தளபதி சரணடைந்து விட்டார். அடிமை ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மீது கோபம் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அடக்கமாகவே தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அவர் புத்தகம் படிப்பதிலும், இசை கேட்பதிலும் நாடகங்கள் பார்ப்பதிலும் ஆர்வங்கொண்டவர்.

தலைநகர் வாஷிங்டன் டிசியில் போர்டு கலையரங்கில் பல நாட்களாக நம் அமெரிக்கஸின்' என்ற நாடகம் நடைபெற்று வந்தது. அதைைக் காண 14 ஆம் தேதி இரவு ஜணதிபதி புறப்பட்டு சென்றார். அவர் குடும்பத்தினரும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர் நாடக அரங்கில் அமர்ந்ததும் நாடகம் தொடங்கியது. இரவு பத்து மணி.  சிரிப்பும். கோண்டாட்டமுமாக நாடகம் நடத்து கொண்டிருக்கும் போதே ஜணதிபதியின் மெய்க்காவலர் நால்வர் தண்ணீர் குடிக்க வெளியில் சென்று விடுகிறார். கொலைகாரன் ஜனாதிபதிக்குப் பின்னால் உட்கார்ந்து நாடகம் பார்ப்பது போல நடித்துக் கோண்டிருக்கிறான். கொலைகார ஜான் வேர்க்ஸ்ஸபூத நிஜத்தில் நாடக நடிகன்தான்.

அமெரிக்கனின் நாடகத்தில் மூன்றாவது காட்சி, நகைச்சுவையானது பார்வையாளர்கள் கைதட்டி கொண்டும். சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். திடீரென்று துப்பாக்கிச் சப்தம் கேட்கிறது. நாடகத்தில் தான் நுப்பாக சூடு நடக்கிறது என்று பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டு ஓடுகிறார்கள். நாடகக்காரர்கள் துப்பாக்கி சூட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நாடகத்தைத் தொடர்கிறார்கள். ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தலை சாய்கிறது. கழுத்தில் இருந்து ரத்தம் வழிகிறது. சுதந்திரம் என்று கத்திக் கொண்டு பூத் வெளியில் ஓடுகிறான் பிடிகக வந்தவர்களை கத்தியால் குத்திவிட்டு, சுவர் ஏறி குதித்து ஓடிவிடுகிறான்.

புத்தகம் என் மனம் சுவர்ந்தது. சோகத்தின் ஊடாக சொல்லப்பட்டு உள்ளது. புத்தகத்தின் பெயர் ஆபிரகாம் லிங்கள் கடைசி நாள். எழுதியவர் மோஸ்ஒயிட் என்று பேசினார் அறிஞர் அண்ணா.

1962 ஆம் ஆண்டில் செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு பல்லாவரத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் சங்கத் தலைவர் நாரண துரைக்கண்ணன் என்னும் ஜீவா. நா. கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தனபால் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருமலைப்பிள்ளை சாலையில் இருந்த முதலமைச்சர் கே.காமராஜ் இல்லத்திற்குச் சென்றார். சிறிது நேரம் காத்திருந்தோம். முதலமைச்சருக்கு நாரண துரைக்கண்ணன் நன்கு தெரிந்தவராக இருந்தார். எங்களை உட்காரச் சொல்லி என்ன காரியம் என்று விசாரித்தார்.

"செங்கற்பட்டு மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்க இரண்டாவதுமாநாடு பல்லாவரத்தில் நடைபெறுகிறது. அதனை நீங்கள் தொடங்கி வைக்க வேண்டும்"
.
"எப்பொழுது?"

"தங்களுக்கு வசதிப்படும் ஒரு தேதியில்"

முதல்வர் நாரண துரைக்கண்ணனை ஒரு பார்வை பார்த்தார். பிறகு "யாரையெல்லாம் அழைக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.

"அண்ணாதுரை அவர்  செங்கல்பட்டு மாவட்டத்துக்காரர்."

"அவர் இருக்கும் போது நான் எதற்கு? நீங்கள்  அவரையே வைத்துக் கொண்டு மாநாட்டை நடத்திக்கொள்ளுங்கள்" என்றார்.

"அவர் மாலையில்தான் வரப் போகிறார் நீங்கள் காலையில் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறீர்கள். மறுக்காமல் வரவேண்டும். இளம் எழுத்தாளர்கள் உங்கள் பேச்சைக் கேட்க ஆவலாக இருக்கிறார்கள்."  நாரண துரைக்கண்ணன் கூறினார்

காமராஜ் ஒரு சிரிப்பு சிரித்தும் கொண்டு, "ஆட்டும் பார்க்கலாம்" என்று எங்களுக்கு விடை கொடுத்தார். அவர் வருவது உறுதியாகி விட்டது என்று கீழே வந்தோம்.

1906 ஆம் ஆண்டில் நாரண துரைக்கவிணன் பிறந்தார் அவர் அவ முன்னோர்கள் முன்னோர் மாமல்லபுரத்து அருகில உள்ள நாழிப்பட்டுர் ஊரில் இருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்தவாகள். இளம் வயதில் இருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். டி.என்.சேஷாசலம், மறைமலை அடிகள், திரு.விக, பசுபதி  என்று பல தமிழ்ப் புலவர்களிடம் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஆகவே அவர் நவீன படைப்பு எழுத்தாளராகவே விரும்பினார் ஆங்கிலம், தமிழ் உரைநடைப்படைப்புகள் படித்து நாவல், சிறுகளதகள் எழுதினார்.

பிரசண்ட விகடன் பத்திரிகையில் ஆசிரியராக முப்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். அதோடு ஆனந்த போதினி ஆசிரியராகவும் இருந்தார். அவர் சிறுகதைகள், நாவல்கள் அதிகமாகப் படிக்கப் பட்டன. 1942 ஆம் ஆண்டில் அவர் எழுதிய உயிரோவியம் என்ற நாவல் பிரசித்தி பெற்றது. டிகே. சண்முகம் சகோதரர்கள் உயிரோவியத்தை நாடகமாகித் தமிழ்நாடு முழுவதும் நடித்தார்கள் 'நான் ஏன பெண்ணாய்ப்பிறந்தேன்,  நடுத்தெரு நாராயணன், தரங்கிளி' அவரின் முக்கியமான நாவல்கள்.  வாழ்க்கை அறப்பண்புகள் 
கொண்டதாகவும் ஒழுக்கநெறிக கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களோடு எழுதினார். ஒரு வகையில் அவர் , மு.வ., நா.பார்த்தசாரதிக்கு முன்னோடி என்றே சொல்ல வேண்டும். அவர் பல பெரியவர்கள் பற்றி வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.  அதில் முக்கியமானது 1938 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜாஜி.

நான் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாடகளில் அண்ணநகர் திருமங்கலத்தில் இருந்து சைக்கிளில் போய் சூளைமேட்டில் வசித்த நாரண துரைக்கண்ணளைய பார்த்து பேசிக் கொண்டு இருப்பேன்.  1987 ஆம் ஆம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சூளைமேட்டில் வசித்து வந்த அவரைக் காண சைக்கிளில் சென்றேன். வா என்று வரவேற்றார். பாரதிதாசனைப் பார்க்கப் போகிறேன். சைக்கிளை இங்கேயே வைத்துவிட்டு என்னோடு வா என்றார்.
தியாகராயநகரில் ராம தெருவில் வசித்த கவிஞர் பாரதிதாசன் வீட்டிற்கு ஓர் ஆட்டோவில் சென்றோம். பாரதிதாசன் பென்சிலில் எழுதிக் கொண்டு இருந்தார். எங்களைப் பார்த்ததும் அட்டையையும் பென்சிலையும் மேசையில் வைத்து விட்டு நாரண துரைக்கண்ணனைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

"கவிஞருக்குத்தாள் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அதான் பார்த்துவிட்டுப் போகலாம். என்று வந்தோம்."
 
"உடம்புக்கு எள்ன? அது நன்றாகத்தான் இருக்கிறது. மனசுதான் சரியாக இல்லை. இந்த சினிமாகாரர்களை நம்பி வந்தது தப்பாகப் போய்விட்டது. ஒரு காரியமும் நடக்கவில்லை. மனத்திற்கு வருத்தமாக இருக்கிறது." என்றவர் என்னைப் பார்த்து தம்பி யார்? என்று கேட்டார். 

"இவர் எழுத்தாளார்.  நன்றாக எழுதக்கூடியவர். ஆகையால் தங்களைப் பார்க்க அழைத்துக்கொண்டு வந்தேன் என்றார். 

"கவிதை எழுதுவியா” என்று பாரதிதாசன் கேட்டார். "சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றேன். 

"எழுதினாலே கவிஞர்தான். நான் தமிழ்க் கவிஞர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கிறேன். நீயும் கையெழுத்துப் போடு" என்று பென்சிலையும் காகிதங்கள் நிறைந்த அட்டையையும் ஈடுத்து நீட்டினார்.  சரியாக பெரிய கோட்டாவில் காபி வந்தது. மூவரும் குடித்தோம்.

"சுகவிஞரே மனக்  கவலையை விட்டுவிட்டு எழுதங்கள்" என்று சொல்லியபடி நாரண துரைக்கண்ணன் எழுந்தார். நானும் எழுந்து புரடசிக்கவிஞருக்கு வணக்கம் சொன்னேன்.

கவினார் பாரதிதாசன் இரண்டடிகள் எடுத்து வைத்து முன்னே வந்து எங்களுக்கு விடை கொடுத்தார்.

நாரண துரைக்கண்ணன் வழியாக நான் பெற்றது. அதிகம் அவர் தொண்ணூறாவது வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.

சா.கந்தசாமி - 2017 அமுதசுரபி தீபாவளி மலர்.


 ஜோக்ஸுக்கு சென்று இந்த வியாழனை நிறைவு செய்யலாமா?!!







35 கருத்துகள்:

  1. காலை வணக்கம், பெருமக்களே!
    இன்றைக்கு விஸ்தாரமான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TVM,  வணக்கம்..   முரட்டு பதிவா இருக்கே என்று சொல்ல செல்வாண்ணா வருவார்...!

      நீக்கு
  2. நீங்கள் ஏகாதசி விரதம் இருந்தது, மௌன விரதம் இரண்டும் மனதைக் கவர்ந்தன. நான் இதுவரை இருந்ததில்லை. முதலில் மௌன விரத்த்தில் ஆரம்பிக்கலாமா என யோசிக்கிறேன்.

    ஆமாம் மௌன விரதம் என்றால் நாம் வாயைத் திறந்து பாடக் கூடாதா அல்லது மற்றவர்களிடம் பேசக் கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   பாடுவதா?  என் பெரிய பலவீனமும் அதுதான் என்றாலும் குரல் வெளியே வராமல் இருப்பதுதான் சரி.  அன்று  இளையவன் உள்ளேயிளிருந்து அப்பா என்று  திடீரென்று ஓங்கி குரல் கொடுத்ததும் "ஆ.." என்று கொடுத்து விட்டேன்.  அது மட்டும் தவறு.  மற்றபடி ஓகே.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    அனைவருக்கும் இனிதான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி. இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. உங்களுக்கு பொங்கல் பானை காலை 7 3/4க்கா இல்லை 10 1/2 மணிக்கா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உங்களுக்கும் இனிதான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். காலை வேலைகள் இருப்பதால், 10.1/2மணிக்குத்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் அந்த காலத்தில் சூரியோதத்திற்கு முன்பே பொங்கலிட வேண்டுமென ஆர்வங்கள் நிறைய இருந்தது. அம்மா வீட்டில் இருந்த போது, அதிகாலை எழுந்ததுமே பால் பொங்கியாச்சா? வயிறு வீங்கியாச்சா? என அக்கம்பக்கம் உறவுகள் ஒருவருக்கொருவர் கேட்டு வாழ்த்துகளைச் சொல்லி விசாரித்துக் கொள்வோம். .இப்போது நமக்கென நல்ல நேரங்களை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். உங்கள் வீட்டில் எப்படி.? நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. பொதுவா எங்களுக்கு மடம் அல்லது ஆஸ்ரமத்திலிருந்து இத்தனை மணிக்கு பொங்கல்பானை இட வேண்டும் என்ற தகவல் வரும். அதன்படித்தான் இதுவரை நடக்கிறது. ஏன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களைச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது.

      மனைவியிடம் எனக்கு ஒரு ஸ்பூன்தான் வேணும் என்று சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
    4. வாங்க கமலா அக்கா... வணக்கமும், பிரார்த்தனைகளும்.. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      நீக்கு
    5. // இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. //

      ஹா ஹா ஹா நெல்லை.. எனக்கும் தோன்றியது. எனக்கு வேறு நிலை. இரண்டு நாட்களாக தாமதமாக எழுகிறேன். இன்று இன்னும் கஷ்டம். பதில் சொல்வது வேறு சில வேலைகளுக்கு சிரமமாய் இருக்கிறது!

      நீக்கு
    6. // ஏன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களைச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. //

      பொதுவாகவே வைணவர்களுக்கு தனி நியமங்கள், நேரங்கள், நாட்கள் அமையும்.  இன்று ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் சொன்னால் அந்த வேளை தவறி விட்டால் மனம் கஷ்டப்படுமே என்று இரண்டு நேரம் சொல்கிறார்கள்!!!!  ஏழே முக்காலுக்கு தயார் செய்தால் பத்தரைக்காவது வைக்க முடியுமே...  ஹிஹிஹி!

      நீக்கு
  4. //நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் பசி என்ற உணர்வு இல்லை. இதற்கு கவலைப்படணுமா என்று தெரியவில்லை! // perfectly alright. இரண்டு வகையான பசி உண்டு. முதலாவது, வழக்கமான நேரத்துக்கு வேளாவேளைக்கு வருவது; அது பொய்ப்பசி! கொஞ்சம் போல வயிற்றில் அமிலம் சுரக்கும். அவ்வளவுதான்.
    இரண்டாவதுதான் autophagyஉடன் தொடர்புடையது; உண்மையாபன பசி. இது வந்தால், உணவு உள்ளே செல்லும் வரை நிற்காது. இந்தப்பசியை நன்கு உணரத்தான் (ஜைன) முனிவர்கள் நின்றுகொண்டே தவம் செய்வார்கள்!

    பதிலளிநீக்கு
  5. ரோஜாவின் இளந்தளிர் என்பது பிறகுதான் புரிந்தமு.

    கவிதைகளும் இளைஞனின் யோசனையும் மனதைக் கவர்ந்தன.

    அது சரி.. நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிடைத்த வாசனையான ரோஜா இப்போது ஏன் கிடைப்பதே இல்லை? குல்கந்து தவிர? எசன்ஸ் எடுத்து எடுத்து ரோஜாவின் மணமே மறைந்துவிட்டதா?

    பதிலளிநீக்கு
  6. வியாழனைத் தொட்டடுத்து வெள்ளி வருகிறது. வியாழனில் பாடல் பதிவு நல்ல மாறுதலா?

    பதிலளிநீக்கு
  7. மௌன த்யானம் #1
    நான்கு துறவிகள் சில நாட்களுக்குப் பேசாமல் மௌனமாகத் தியானம் செய்ய முடிவு செய்தனர். முதல் நாள் இரவு ஆனதும், மெழுகுவர்த்தி மினுமினுத்து அணைந்து போனது.
    முதல் துறவி சொன்னார், "ஐயோ!! மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது."
    இரண்டாவது துறவி பதிலளித்தார், "நாம் பேசக்கூடாது என்றுதானே முடிவு செய்திருந்தோம்?"
    இதைக் கேட்ட மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள் இருவரும் ஏன் மௌனத்தைக் கலைத்தீர்கள்?"
    நான்காவது துறவி அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னார், "ஹா ஹா! நான் மட்டும்தான் பேசாமல் இருந்தேன்..!!"

    பதிலளிநீக்கு
  8. யதேச்சையாக ஈகோ படம் நெட்ஃப்ளிக்சில் வந்த அன்று பார்த்தேன் (நாலு தவணையில், மூன்று நாட்களில் பார்த்து முடித்தேன்). மலையாள திரையுலகில் அனேகமாக எல்லாத் திரைப்படங்களுமே வித்தியாசமான கதைகளுடன் வருகின்றன. தமிழ்த்திரைப்படங்கள் அப்படி அல்ல. ஒருவேளை பா பட வரிசைகளைத் தந்த அந்தக்கால தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் கேரளத்தில் மறுபிறப்பு எடுத்திருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  9. மௌன த்யானம் #2
    ஜென் பௌத்த துறவியாக விரும்பிய ஒருவனை ரோஷி (குரு) அறிவுரைகளை வழங்கி ஏற்றுக்கொண்டார். பிறகு, "ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். இங்கே நாங்கள் மௌன விரதம் கடைப்பிடிக்கிறோம். ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் நீங்கள் மூன்று வார்த்தைகள் மட்டுமே பேச முடியும்" என்றார். அதற்கு அவன், "சரி" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

    பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "சாப்பாடு மட்டமாக இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றான்.

    மேலும் பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் மீண்டும் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "படுக்கை கடினமாக இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றான்.

    மேலும் பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆமாம், நான் விலகுகிறேன்!" என்றான். அதற்கு ரோஷி, "உன்னைக் குறை சொல்ல முடியாது. நீ இங்கு வந்ததிலிருந்தே புலம்பிக்கொண்டே இருக்கிறாய்" என்றார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... நமக்கு வேண்டாம் அந்த மடம். மௌன விரத் இருக்கணும் என்றாலும் நல்ல படுக்கை, மேசையில் லேப்டாப், பார்க்க தொலைக்காட்சி வேண்டும். அது எப்படி ஒருவனால் சும்மா இருக்க முடியும்?

      நீக்கு
    2. இல்லையா பின்னே? :-)

      நீக்கு
  10. நாரண துரைக்கண்ணன் அவர்கள் பற்றிய பகுதி அருமை. தெரியாத நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவதுதான் சுவாரசியம். தெரிந்த சினிமா அக்கப்போர்களை மீண்டும் படிப்பதில் என்ன கிடைக்கும்? ஶ்ரீராம் இந்த மாதிரி எழுத்தாளர்கள், பழைய வரலாறுகளைத் தேடிப் படித்துப் பகிர்வாரா?

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. உங்களின் விரத மகாத்மியங்கள் நன்றாக உள்ளது. கூடவே துவாதசி பாரணை படமும் சிறப்பு. நானும் ஏகாதசி விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், ஒருதடவை மட்டும் உணவருந்தி. ஒருதடவை நீங்கள் சொல்வது போல் எதுவும் சாப்பிடாமல் என.

    மெளன விரதம் வியாழன் தோறும், ஒரு வருடம் இருந்தேன். பிறகு அதுவும் போச்சு. விரதங்கள் மனதையும், வயிற்றையும் சுத்தமாக்கும். புத்துணர்ச்சி தரும். ஆனால் தொடர்ந்து இருக்கத்தான் இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. மௌன த்யானம் #3
    நான்கு முனிவர்கள் (காஷ்ட மௌனம் கடைபிடிக்கிறவர்கள்) ஒரு கோவிலில் தியானம் செய்துகொண்டிருந்தபோது, ​​திடீரென்று கொடி பலத்த ஓசையுடன் படபடக்கத் தொடங்கியது.
    அவர்களில் இளைய முனிவர் தனது தியானத்திலிருந்து வெளிவந்து, "கொடி படபடக்கிறதே" என்றார்.
    அதிக அனுபவமுள்ள இரண்டாவது முனிவர், "காற்றுதான் படபடக்கிறது" என்றார்.
    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்த மூன்றாவது முனிவர், "மனம்தான் படபடக்கிறது" என்றார்.
    பழுத்த பழமான நான்காவது துறவி, "வாய்கள்தான் படபடக்கின்றன!" என்றார்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம், ஞானியாகறதுக்கான முதல் படியா! ஓகே ஓகே!!!!

    ஆல் த பெஸ்ட்!! தொடர...சில டிப்ஸ் ஹிஹிஹி

    அடுத்த ஸ்டெப்பாக மொபைல் அல்லது டிவி ஏதேனும் ஒன்றைத் துறந்து....அதற்கு அடுத்த ஸ்டெப்பாக இரண்டையும் துறந்து...அடுத்த ஸ்டெப்பாக ஏதேனும் ஓர் அமைதியான இடம்....மலைப்பகுதி நதிப்பகுதிக்குப் போய் இருந்து....!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப் பகுதி ந்திப் பகுதிக்குப் போனா, பாம்பு வருமா கரட்டான் ஓணான் வருமான்னு மனம் படபடக்குமே.

      நீக்கு
  14. மௌன த்யானம் #4
    இரண்டு பழைய நண்பிகள் சந்தித்தனர்.
    "உன் கணவர் இன்னும் வேலையில்லாமல்தான் இருக்காரா?"
    "இல்ல, இல்ல, இப்போ அப்டியில்ல."
    "தேவலையே. இப்போ அவர் என்ன செய்றார்?"
    "இப்போ அவர் அடிக்கடி தியானம் செய்றார்."
    "தியானமா! அது என்ன?"
    "எனக்குச் சரியாத தெரியல, ஆனா சும்மா உக்கார்ந்திருக்கறதை விட இது பரவாயில்ல!"

    பதிலளிநீக்கு
  15. இமயமலைக்குப் போயிருந்தப்ப அதையும் நதிகளையும் பார்த்த பிரமிப்பில், வாய் பிளந்து அப்புறம் மூடி மனதுக்குள் பரவசமடைந்து.....intermittent விரதம் போல மௌனம் ப்ளஸ் சாப்பாடு (அது வேற ஒண்ணுமில்லைங்க பிரயாணம் செஞ்சப்ப நல்ல ஹோட்டல் வேணுமில்ல? அது இல்லைவழியில்!!!!!) ஆனால் பிரமிப்பில் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் வாவ் போட்டுக் கொண்டு மௌனமாக....அது ஒரு அழகான தருணம்!!!

    ஊருக்கு வந்த பிறகு, உண்ணா விரதம் இருந்து பார்ப்போமேன்னு இருந்தா நடைப்பயிற்சி போனப்ப, சர்க்கரை அளவு குறைந்துவிட்டது! உடம்பு வெலவெலத்து.....ஏற்கனவே கட்டுப்பாடான சாப்பாடா...ஸோ...அதன் பிறகு இருப்பதில்லை.

    மௌன விரதம் வீட்டில் சாத்தியப்படவில்லை. ஆனால் பல சமயங்களில் நம்மை அறியாமல் இருந்ததுண்டே!!!!!!!!!!!!!!!!!!! கோபம், வருத்தம்...என்று அதுவும் நல்லதாக இருந்தது வார்த்தைகள் வெளியில் வந்து விழாது பாருங்க!!! ஹாஹாஹாஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வாய்வழி பேசாவிட்டாலும் மனம் மௌனமாக இருக்க வேண்டுமே!!!!! ஆ ஆ ஆ ஆ இதை சொல்லிவிட்டேனே இங்கு! சரி இதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டேன்!!!!!!!!!!!!!! ஸ்ரீராமிற்குப் புரியும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மௌன விரத்த்தின் உண்மையான அர்த்தம் மனம் பேசாமை. தியானத்தின் வழி அது

      நீக்கு
    2. யெஸ் நெல்லை....அதை நான் வேறு ஒன்றில் பயன்படுத்தியிருக்கேன் நெல்லை அதனால் இங்கு அதைப் பத்தி பேசலை

      கீதா

      நீக்கு
  17. விரதம் என்று சொல்லிக் கொண்டு அன்று பாசிப்பருப்பு வெல்லம் போட்டக் கஞ்சி, உப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி என்று சாப்பிடுவது விரதத்தோடு சேர்த்தி அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    ஏனென்றால் அவை நன்றாகக் கலோரியை பார்த்துக் கொள்ளும். பசி எழாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனவன் அரிசியை உடைத்து சாதமாகச் சாப்பிட்டால் விரத்த்துக்கு பங்கமில்லைனு நினைக்கறாங்க. என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் மட்டுமே அருந்தி இருப்பதுதான் விரதம்.

      பாலும் பழமும், போர்ன்விட்டா, காஃபி, போன்றவை வித்தியாசமான டயட்டில் இருக்கிறேன் என்று சொல்ல உதவும். உடனே, வச்சா குடுமி சரைச்சா மொட்டையா எனக் கேட்காதீர்கள். நான் சொன்ன விரத்த்துக்கான பாதை இது.

      நீக்கு
    2. நெல்லை நான் கேட்க மாட்டேன். நீங்க சொல்றதுதான் என் தனிப்பட்டக் கருத்தும்

      கீதா

      நீக்கு
  18. என்னாங்கடா இது இன்று ப்ளாகர் ஒவ்வொரு கருத்து போடும் போதும், ரெஃப்ரெஷ் செய்யச் சொல்லுது! போட மாட்டேங்குது...

    ட்ராஃபிக் ஜாம் போல....போடவே மாட்டேங்குது ரொம்ப டைம் எடுக்கிறது. வேலைகள் முடித்துவிட்டு வருகிறேன். பொங்கல் வேலைனு இல்லை மற்ற வேலைகள்...

    எபியில் மட்டும்தான் திடீரென்று கருத்து வழங்க முடியலை. வெங்கட்ஜி, கோமதிக்கா தளத்தில் முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! என் ஐடியிலிருந்துதான் பிரச்சனையாகிறது திடீரென்று இங்கு மட்டும்,,

      இப்ப பாருங்க அந்தக் கருத்துவந்துவிட்டது

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!