20.6.25

தீண்டாதபோது என் தேகம் வாட நீ தீண்டும் போது இன்பங்கள் கூட

 சீர் கொண்டு வா                            ;                                    பாடும் வானம்பாடி 

இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் 'நான் பாடும் பாடல்' 

வெளியான ஆண்டு  :  1984 ; பாடலை எழுதியவர்  :  கங்கை அமரன்   ;
இசை   : இளையராஜா  ;           தயாரிப்பு   :  கோவைத்தம்பி மதர்லாண்ட் பிக்சர்ஸ்  ;  இயக்கம்  :  ஆர் சுந்தரராஜன்.

இந்தப் படத்துக்கு இரண்டு க்ளைமேக்ஸ் எடுத்து வைத்திருந்தாராம் சுந்தரராஜன்.  இளையராஜா சொன்ன முடிவை க்ளைமேக்ஸாக வைத்து விட்டார்களாம்.

 'சீர் கொண்டு வா' பாடல் சங்கராபரணமாக இருக்கலாம்.  மதர்லேண்ட் பிக்சர்ஸ் படம் என்றால் பாடல்கள் நன்றாயிருக்கும் என்று நம்பிக்கை.  நம்பிக்கை வீண்போனதில்லை.  வீண்போக இளையயராஜா விட்டதில்லை.

நான் இந்தப் படத்தை மதுரை சுந்தரம் தியேட்டரில் பார்த்தேன்.  மச்சானை வச்சுக்கடி என்று தொடங்கும் உருப்படாத பாடல் ஒன்றும் படத்தில் உண்டு.

பாடலைப்பற்றி சொல்லவேண்டும் எனில், அந்த சிறு 'கிளிங்'கில் தொடங்கும் இசை.  கீழிருந்து ஒலிக்கத் தொடங்கும் SPB குரல், தொடரும் ஜானகி அம்மா.

ஒரு Rich ஆன இசையாக இடையிசை.  சரணத்தின் நடுவில் பாடலை 'ஆலாபனை...' என்னும் வரியிலும், 'என்னென்பதோ....' என்னும் வரியிலும்  ஒருவர் குரலிலிருந்து இன்னொருவர் வாங்கும் இனிமை, அழகு, லாவகம்...


SPB : சீர் கொண்டுவா வெண்மேகமே

S Janaki : சீர் கொண்டுவா வெண்மேகமே 
SPB   : இது இனிய வசந்த காலம் 
S Janaki   : இலைகளில் இளமை துளிரும் கோலம் 
SPB   : இதுவே இனி என்றும் நிரந்தரம் 
SPB : சீர் கொண்டுவா வெண்மேகமே 

SPB   : ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே 
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே 
ஆலாபனை ……. 
S Janaki   : ஆஆஆஅ…. ஆலாபனை ஆராதனை 
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் 
SPB   : ஒ..ஒ..ஒ.. காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம் 
S Janaki   : சீர் கொண்டுவா வெண்மேகமே 
SPB   : இது இனிய வசந்தக் காலம் 
S Janaki   : இலைகளில் இளமை துளிரும் கோலம் 
SPB   : இதுவே இனி என்றும் நிரந்தரம் 
 சீர்  கொண்டுவா வெண்மேகமே 

S Janaki   : தீண்டாதபோது என் தேகம் வாட 
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட 
என்னென்பதோ ஓஓ ……. 
SPB   : ஓஓ ஓ என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ 
S Janaki   : ஒ…ஒ…ஒ. அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ 
SPB  : ஓஓஹோ சீர் கொண்டுவா வா வெண்மேகமே 
S Janaki   : இது இனிய வசந்தக் காலம் 
SPB   : இலைகளில் இளமை துளிரும் கோலம் 
SPB   மற்றும் S Janaki   : இதுவே இனி என்றும் நிரந்தரம் 
சீர் கொண்டுவா வெண்மேகமே


=========================================================================================

சினிமா துளிகள் 



பி யு சின்னப்பா அந்தக் காலத்தின் ஆக்ஷன் ஹீரோ.  அவர்நடித்த மங்கையர்க்கரசி படத்தில்தான் கவிஞர் சுரதா "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்கிற வசனத்தை எழுதியிருந்தார்.  அது இன்றளவும் புகழ்பெற்ற வசனமாக / உவமையாக இருந்து வருகிறது.  பி யு சின்னப்பா அந்தப் படத்தில் தாத்தா, அப்பா மகன் என மூன்று வேடங்களில் கலக்கி இருந்தாராம்.

சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த உத்தமபுத்திரன் படம் - அதே படம் - 1940 வது ஆண்டில் பி யு சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார்.  அந்தப் படத்தை கமலா அக்கா பார்க்க விரும்பினால் லிங்க் இதோ...உத்தமபுத்திரன் 1940





இன்று சினிமா உலகில் பிரம்மாண்டம் என்பது முக்கியமாக பேசப்படுகிறது இது என்ன பிரம்மாண்டம் சின்னப்பா நடித்த ரத்னகுமார் படத்தின் விளம்பரத்திற்காக தயாரிப்பாளர் எஸ் எம் எஸ் சுந்தரராமர் ஐயர் பிரம்மாண்டமே நிகழ்த்தினார் நான் அப்போது ஊரில் இருந்தேன் மதுரையை சுற்றிலும் ஒரு விமானம் தாழ்வாகப் பறந்தது விமானத்திலிருந்து ரத்னகுமார் படத்தின் பிட் நோட்டீஸ் போடப்பட்டது அது மட்டும் இல்லாமல் ஒரே ஊரில் இரண்டு தியேட்டர்களில் ஒரே படம் வெளியாகும் இரண்டையும் சின்னப்பாவின் படம் தொடங்கி வைத்தது மதுரையில் இரண்டு தியேட்டரில் வெளியானது.

=============================================================================================

இன்றைய பகிர்வின் இரண்டாவது பாடல் 

பாடும் வானம்பாடி

இந்தப் பாடல்  Patdeep என்னும் ஹிந்துஸ்தானி ராகமாம்.  கேள்விப்பட்டிருக்கீங்களா கீதா? அல்லது KGG?

நா. காமராசன் பாடல்.  பாட் டீப் ராகம். பல்லவி ஒரு ரகம் என்றால் சரணங்கள் இனிமை.  அதுவும் சரணங்களில் 'நெஞ்சில் ஆசை வெள்ளம்' வரியும் 'தேவி போதும் போதும்' வரியும் வரும்போது எஸ் பி பி குரல்.  

இரண்டாவது முறை பல்லவி பாடும்போது 'மார்கழி மாதமோ' வரியில் குழைவு.  படும் வானம்பாடி க்குப்பிறகு வரும் அந்த ஹா எந்த இடைவெளியை நிரப்பவோ, 

நான் சொல்வது   "ச்சே...   என்ன ஒரு பாட்டுங்க...  கொடுத்து வச்சிருக்கேன் இது மாதிரி பாடல்களைக் கேட்க"

பாடும் வானம்பாடி ..ஹாங்  பாடும் வானம்பாடி ஹாங்  . 
பாடும் வானம்பாடி ஹாங்  .. 
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ... ஈரமோ ஓ...
ஏனோ ஏனோ 
 பாடும் வானம்பாடி ஹாங் .. பாடும் வானம்பாடி 

பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூத் தூவும் 
மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலைத் தென்றல் தாலாட்டும் 
நெஞ்சில் ஆசை வெள்ளம் .. 
நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் 
காற்றோடு நான் பாடவா 
 பாடும் வானம்பாடி ஹாங் .. பாடும் வானம்பாடி ஹாங்  .. 
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ...ஈரமோ ஓ... ஏனோ ஏனோ 
பாடும் வானம்பாடி ஹாங்  .. பாடும் வானம்பாடி 

 மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ 
வானம் மாலை சூடும் போது தாகம் கொஞ்சம் தீராதோ 
தேவி போதும் போதும் ஹா... தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது 
 பாடும் வானம்பாடி ஹா . 
பாடும் வானம்பாடி ஹாங் ... 
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ...ஈரமோ ஓ... ஏனோ ஏனோ 
பாடும் வானம்பாடி ஹாங் .. பாடும் வானம்பாடி

16 கருத்துகள்:

  1. பாடும் வானம்பாடீ... எஸ்பிபியின் குரலின் குழைவு வெளிப்படும் பாடல்.

    சீர் கொண்டுவா பாடலையும் பலமுறை கேட்டிருக்கிறேன். நல்ல பகிர்வு.

    மச்சானை வச்சுக்கடி பாடலும் பலமுறை கேட்டதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை,

      ஆம், குறிப்பாக சரணங்களில் இழைந்திருப்பார்.  முதல் பாடல் அங்கீகரிக்கப்பட்ட காதலுக்கான குரல்.  இரண்டாவது பாடல் எதிர்பார்ப்பு மிகுந்த பாடலுக்கான குரல்.

      மச்சானை வச்சுக்கடி பாடல் நான் பகிரவில்லை!!

      நீக்கு
    2. மச்சானை பாடலும் பிடித்த பாடல்தான். வார்த்தைகளை விட்டுவிட்டால்

      நீக்கு
    3. ஓ... எனக்கென்னவோ பிடிக்கவில்லை.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டு பாடல்களுமே நான் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ். பி. பி பாடும் பாடல்களை கேட்க நான் தவற விட்டதில்லை. அவரின் தெய்வீகமான தனிப்பாடல்களும் நன்றாகத்தான் இருக்கும். இன்றும் "ஓம் நமோ ஸ்ரீ நாராயணா" பாடலை அடிக்கடி மாலை பல ஸ்லோகங்கள் சொல்லும் நேரத்தில் கேட்டுக் கொண்டேதான் உள்ளேன்.

    பழைய படங்களும் எப்போதுமே நன்றாக இருக்கும். பி யூ சின்னப்பா படங்களை அப்போதெல்லாம்( இள வயதில்) பார்த்ததில்லை. அப்போதும், இப்போதும் நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவுதான். சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த உத்தம புத்திரன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். (பொழுது போக்கிற்கு வேறு வழியில்லை என்ற நிலையில் பார்ப்பேன்.) இப்போது நீங்கள் தந்த லிங்கில், அந்த பழைய உத்தம புத்திரன் எப்படியிருக்கிறார் என மதுயம் நேரம் கிடைக்கும் போது பார்த்தால் போச்சு.:)) அருமையான பாடல்களின் பகிர்வுக்கும், லிங்க் தந்தமைக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. பட்தீப்/பட்திப் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்.

    நம் கர்நாடக இசையில் - கௌரிமனோஹரியை இதற்குச் சமமாகச் சொல்வார்கள். அதன் அம்சங்கள் கொஞ்சம் இருக்கும்..

    டக்கென்று வேறு பாடல்கள் மனதில் இருந்தாலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. சொல்கிறேன்.

    பாடும் வானம் பாடி பாடல் அருமையான பாடல்...இரண்டுமே. நெட் பிரச்சனையாக இருக்கு. சரியானதும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நினைவுக்கு வந்துவிட்டன. ரொம்பப் பிடித்த பாடல்கள், ஸ்ரீராம். கண்ணா வருவாயா - ரொம்பவே பொருந்திப் போகும் பாடல். சுஹாசினி வருவாங்களே....படம் பெயர் டக்குனு நினைவுக்கு வரலை. - எஸ்பிபி - பூந்தேனில் கலந்து, கடவுள் அமைத்து வைத்த மேடை
    தாஸேட்டன் - மலரே குறிஞ்சி மலரே, தெய்வம் தந்த வீடு,

    சமீபத்திய பாடல் - கண்ணான கண்ணே - சித் ஸ்ரீராம் பாடியது.

    கீதா



    பதிலளிநீக்கு
  6. முதல் பாடலும் ரொம்ப ரசித்த பாடல். அதில் நீங்க சொல்லியிருப்பது போல் சரணத்தில் ஆலாப் ஒருவர் முடிக்கும் முன் மற்றவர் தொடங்குவது செமையா இருக்கும்..ஆரம்ப இசையும். இசை செமையா இருக்கும்

    அது போலதான் ரெண்டாவது பாடலும், அதைக் கேட்கறப்ப

    எப்படி, இளசு, இப்படி ஒவ்வொரு சின்ன கருவிக்கும் சின்னதாக வருவதற்கும் கூட நோட்ஸ் எழுதி வாசிக்க வைத்து இன்டெர் லூடும் சரி பாடும் போது பின்னணியில் வரும் இசையும் சரி....எப்படி இப்படி என்று வியந்ததுண்டு! இப்பவும் கேட்கும் போது அதை நினைத்து வியந்தேன்.

    அடுத்த வீடியோ ஒன்று அப்லோட் போட்டா நெட் வராது. அதுக்குள்ள கமென்ட் போட்டு ஓடிடலாம்னு நெட் ஸ்லோவாகவும் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பி யு சின்னப்பா படம் பார்த்த நினைவில்லை. படம் பார்த்ததே ரொம்பக் குறைவுதானே.

    தகவல்கள் சுவாரசியம். ஏதோ ஒரு படத்துக்கு ஹெலிகாப்டரில் நோட்டீஸ் போட்டாங்க, ஸ்ரீராம். அப்பலாம் ஹெலிகாப்டர்னா ஏதோ சண்டை என்பது போல் பயம் வரும்.

    இப்படியும் நோட்டீஸ் விடுவதற்கும் பயன்படுத்துவாங்கன்னு அப்ப தெரிந்து கொண்டது. என்ன படம் என்று நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பி யு சின்னப்பா படம் பார்த்த நினைவில்லை.// அவர் நடித்த படத்தை என் அப்பாவே பார்த்திருந்திருக்க வாய்ப்பில்லைனு நான் நினைக்கிறேன். ஹாஹாஹா

      நீக்கு
    2. ஹாஹாஹா...நெல்லை,...1940.....50....60...s எல்லாம் இப்பதான் கைக்குள்ளயே வந்திருச்சே!

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
    இன்றும் கேட்டேன்.
    சினிமா செய்திகள் நன்றாக இருக்கிறது.

    பி யு சின்னப்பா, டி,ஆர் ராஜமுமாரி நடித்த படங்கள் தொலைக்காட்சி உபயத்தில் பார்த்து இருக்கிறேன், உத்தமபுத்திரன், ரத்னகுமார் படங்கள் பார்த்தது இல்லை. பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!