"வேண்டாம்.. விட்டுடுங்க... எனக்கு இதெல்லாம் பிடிக்காது.." கெஞ்சினேன்.
வெறுப்பாக இருந்தது. கிளம்பி விடலாம் என்று வெளியில் வந்தால் மறுபடி அழைத்து மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வேலை சொல்லி என்று ஒரே ரோதனை.
இப்போது தப்பிக்க வேண்டும்.
'மது அருந்தும் பழக்கத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற பதட்டம்' என்றால் சிரிப்பார்கள்! நீண்ட நாட்களாக என்னையும் அவர்கள் குழுவில் சேர்த்து விடத் துடிக்கிறார்கள். இன்று தப்பித்து விட்டேன். இனியும் தப்பிக்க வேண்டும். கடவுளே.. மனா உறுதியைத் தா! மனம் வேண்டிக் கொண்டது!