பழையாறை வடதளி
பிற்காலப் பல்லவர்கள், ஏறத்தாழ 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டுவரை கோலோச்சியவர்கள், அதாவது கிபி 500லிருந்து 900 வரை. இந்தக் காலகட்டத்தில்தான் பெரும்பாலான நாயன்மார்களும் (சைவத் திருமுறைகளை உண்டாக்கியவர்கள்), ஆழ்வார்களும் (வைணவ பிரபந்தங்களை உண்டாக்கியவர்கள்) வாழ்ந்தனர். பல்லவர்களுக்கு முற்பட்ட காலத்தில் கோயில்கள் செங்கற்களாலும் மரங்களாலும் ஆனவைகளாக இருந்தன. இவற்றைக் கற்றளியாக (கற்களை வைத்துச் அமைத்தது) ஆக்கியவர்கள் பல்லவர்கள். தமிழகத்தில் குகைக்கோயில்களை உருவாக்கியவர்களும் அவர்கள்தாம்.
இதற்கு தர்க்கரீதியான விளக்கமும் இருக்கிறது. சமணர்கள் பெரும்பாலும் குன்றுகளில் வாழ்ந்துவந்தனர். உணவுக்காக மாத்திரம் அவர்கள் நிலப்பகுதிக்கு வருவர். அவர்களுடைய இடத்தில் கற்களாலான படுக்கைகளையும் தங்குவதற்கான குகைகளையும் இப்போதும் காணலாம். அதுவன்றியும் அவர்கள் காலத்தில்தான் வழிபாட்டிற்காக குன்றுகளில் தீர்த்தங்கரர்கள் போன்றவர்களின் சிலையும் அங்கு செதுக்கப்பட்டிருந்தன. அதனால் ஆரம்பத்தில் சமண சமயத்தைச் சார்ந்திருந்த பல்லவ அரசர்கள் (இதிலும் சில வேறுபாடுகள் உண்டு. சில அரசர்கள் வைணவத்தையும் சார்ந்திருந்தனர்) திருநாவுக்கரசர் காலத்தில் சைவ சமயத்தைத் தழுவினர்.
வடமொழி என்பது தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது. அதனால்தான் தமிழில் பல வடமொழிச் சொற்கள் கலந்திருந்தன. (அதுபோல தற்காலத்தில் ஆங்கில, போர்ச்சுக்கீசியச் சொற்கள் பலவும் தமிழில் கலந்துள்ள நிலை கவனிக்கத்தக்கது) ஆனால் இலக்கியங்களுக்கான இலக்கணம் (தொல்காப்பியர் போன்று) முழுமையான தமிழ்ச் சொற்களே பயன்படுத்தவேண்டும் என்று சொன்னது.
களப்பிரர்கள் தொண்டை நாட்டின் ஒரு பகுதியையும், சோழநாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டுவந்தனர். இவர்கள் காலத்தை இருண்ட காலம் என்று வரலாறு வருணிக்கும். சோழர்கள் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு மிகச் சிறிய நிலப்பகுதியை (தஞ்சாவூர் முத்தரையர் வசம் இருந்தது) ஆண்டுவந்தனர். இவர்கள் களப்பிரர்களுக்குக் கட்டுப்பட்டு ஆண்டு வந்தார்களா என்பது தெளிவில்லை. ஆனால் உறையூர்தான் சோழர்களின் தலைநகரம். உறையூர் வைணவக் கோயிலின் தாயார் கமலவல்லி நாச்சியார் என்பவர் சோழகுலத் தோன்றல். கிபி 250-550 வரை களப்பிரர்களே பாண்டிய நாட்டை ஆண்டனர். 550வாக்கில் பாண்டிய மன்னர்கள் தலையெடுக்க ஆரம்பித்தனர். (கடுங்கோன் என்பவன் முதல் பாண்டிய மன்னன்)
நாம் பார்க்கப்போவது பல்லவ அரசர்கள் பற்றி. அதில் சிம்ம விஷ்ணு, வைணவ சமயத்தைச் சார்ந்தவன். சிம்ம விஷ்ணுவே புதுக்கோட்டை வரையிலான பகுதியை வென்று பல்லவ அரசனாக ஆண்டான். அவனுடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன், பட்டம் பெற்ற பிறகு சமண மதத்தைத் தழுவியிருந்திருக்கலாம். மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள ஆதிவராகர் கோவில் சிம்மவிஷ்ணு காலத்தில் அமைக்கப்பட்டது. மகேந்திரவர்ம பல்லவன் கிபி 615லிருந்து 630 வரை அரசாண்டான். முதலில் சமண சமயத்தைச் சார்ந்தவனாக இருந்த இவன், அப்பர் சுவாமிகளால் சைவ சமயத்தைத் தழுவிய செய்தியை முன்னரே பார்த்தோம். இவன் காலத்தில்தான் குகைகளைக் குடைந்து கோவில்களாகச் அமைப்பது நடந்தது. பாறைகளைக் கோயில்களாக மாற்றியவனும் இவனே. ஆரம்பத்தில் சமணர் சொற்கேட்டு திருநாவுக்கரசருக்குக் கொடுமைகள் இழைத்ததும் பிறகு சைவ சமயத்தைத் தழுவியதும் பல சிவன் கோயில்களையும், வைணவக் கோயில்களையும் அமைத்ததை இவனுடைய வரலாறு சொல்லும். அரசன் சைவனாக மாறியதும், குடிமக்களும் சைவர்களாக ஆனார்கள். அதனால் இவன் காலத்தில்தான் தமிழகத்தில் சைவ சமயம் வளர்ச்சியுற்றது என்று கூறலாம். மகேந்திரவர்ம பல்லவன், திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் அழித்து அங்கிருந்த கற்களை உபயோகித்து கடலூர் அருகில் திருவதிகையில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினான் (இவனுடைய பட்டங்களுள் ஒன்றான குணபரன் என்பதை வைத்து குணபரனீச்வரம் என்று அந்தக் கோயில் பெயர் பெற்றது)
இவன் காலத்தில் சித்தன்னவாசல் சமணர் கோயில் குடையப்பட்டது. இவனே மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் போன்ற இடங்களில் குன்றைக் குடைந்து வைணவக் கோயில்களை அமைத்தவன். அதுபோல பல்லாவரம், திருக்கழுகுன்றம், சிராப்பள்ளி போன்ற இடங்களில் சிவன் கோயில்களைக் குடைந்தான். இவன் காலத்தில் குடையப்பட்ட கோயில்கள், மலைச் சரிவுகளைக் குடைந்து (அதாவது மலையின் நடு பாகத்தில்) அமைக்கப்பட்டன. (இந்த வரலாறையெல்லாம் படிக்கும்போது எப்படி சைவ மற்றும் வைணவர்களுக்குச் சொந்தமான இந்தக் குடைவரைக் கோயில்களில் சில இப்போது முஸ்லீம்கள் வசம் சென்றிருக்கிறது, அதில் இருந்த மூர்த்தங்களை நீக்கிவிட்டு அவற்றை தொழுகை செய்யும் இடமாக ஆக்கியிருக்கிறார்கள் என்ற செய்திகளையும் படிக்க நேர்கின்றன)
நாமக்கல் மலைக்கோயில் (அரங்கநாதர் கோயில்) மகேந்திரவர்மன் காலத்தது. மிக அழகுற அமைந்துள்ள கோயில் இது. இங்குள்ள நரசிம்மர் கோயிலை நரசிம்மவர்மன் கட்டினான் என்றும் கூறுவர்.
மகாபலிபுரத்திலும் மகேந்திரவர்மன் சில குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளான் (அவன் தந்தை அங்கு ஆதிவராகர் குடைவரைக் கோயிலை அமைத்திருந்தார்). பிறகு மகேந்திரவர்மனுடைய மகன் நரசிம்மவர்மன் நிறைய கோயில்களையும் சிற்பங்களையும் அங்கு அமைத்தான் என்பது நமக்குத் தெரிந்த வரலாறு.
நரசிம்மவர்மன், தான் கட்டிய குடைவரைக் கோயில்களில் உள்ள தூண்களை தந்தை காலத்தில் இருந்ததைவிட வேறு வகையில் அமைத்தான் (என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைய தூண்கள் தட்டையாக, சதுரமாக, கனமாக இருக்கும். ஆனால் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தையது உருண்டையாகவோ இல்லை கீழ்ப்பகுதியில் சிங்கம் அமைந்திருப்பது போலவோ இருக்கும். இத்தகைய தூண்களை நாம் மகாபலிபுரப் பகுதியில் கண்டிருக்கிறோம். திருவெள்ளறையிலும் ஒரு பெரிய குடைவரைக் கோயில் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். (திருவெள்ளறை கோயில் பற்றி அதற்குரிய சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். ஆயினும் குடைவரை மற்றும் தூண் படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன்)
திருவெள்ளறையில் முழுமை பெறாத குடைவரைக் கோயில் (நரசிம்மவர்ம பல்லவன் காலத்தது).
முதல் படம்-திருவெள்ளறை. இரண்டாவது படம் மகாபலிபுரம். இரண்டுமே நரசிம்மவர்மன் காலத்தையது. இத்தகைய தூண்களை (தூண்களின் கீழ்ப்பகுதியில் சிம்மம் உட்கார்ந்திருப்பதுபோல) திருவரங்கம் கோயிலிலும் காணலாம். அதை பல்லவர் மரபையொற்றி சிற்பிகள் பிற்காலத்தில் அமைத்ததாகக் கொள்ளலாம்.
மகாபலிபுரத்தில் இருக்கும் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தைய குடைவரைக் கோயில் தூண்களைப் பார்த்தாலே தெரியும்.
இது மகேந்திரவர்ம பல்லவன் காலத்தையது. (மகாபலிபுரம்). தூண்களின் வித்தியாசத்தைப் பாருங்கள்.
சரி.சரி.. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். நாம் இப்போது பார்த்துக்கொண்டிருப்பது பழையாறை வடதளிக் கோயில். சமணர்களிடமிருந்து இதனை மீட்டு சைவ சமயத்துக்கு அளித்தவன் மகேந்திரவர்ம பல்லவன். இனி கோயிலில் உள்ள சிற்பங்களைப் பார்ப்போம்.
மாதொருபாகன். எவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கின்றனர் என்று பாருங்கள். வலதுபுரம் சிவன், இடது புறம் உமையவள்.
அருள் பொழியும் முகத்துடன் விஷ்ணு துர்கை/மஹிஷாசுரமர்த்தனி.
சிறிய கிணறா இல்லை சுரங்கப் பாதையா? நானென்ன பழுவேட்டரையரா, இதனைத் தெரிந்துவைத்திருப்பதற்கு?
இன்றைக்கு பல்லவர் காலத்தைய வரலாற்றில் ஆரம்பித்து அவர்களுடைய குடைவரைக் கோயில்களின் அமைப்பையும் சிறிது பார்த்தோம். ஆனால் நாம் இருப்பதோ சோழர் காலத்தில் மஹோன்னதத்தைப் பெற்ற பழையாறை வடதளி சோமேசுவரர் ஆலயம். இந்த இடங்களில்தான் ராஜமாதா செம்பியன் மாதேவி, தன் பேரன் ராஜராஜ சோழன், பேத்தி குந்தவை ஆகியோரோடு நிறைய முறை வந்திருந்திருப்பார், திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்கள், மகேந்திர பல்லவன் தொட்டு எப்படி சைவ சமயம் வளர்ந்தது என்பதையெல்லாம் குழந்தைகளிடம் சொல்லியிருப்பார். அதுதான் பிற்காலத்தில் தில்லை சிதம்பரம் கோயிலில் செல்லரித்துக்கிடந்த திருமுறைகளை மீட்டெடுக்க வைத்து, மீண்டும் படிகள் தயார் செய்ய வைத்து, திருமுறை கண்ட சோழன் என்ற பெயரை ராஜராஜ சோழன் பெறும்படி வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. இனி அடுத்த வாரம்தான்.
(தொடரும்)
= = = = =
சமண மதக்கோட்பாடுகளுக்கும் சைவ, வைணவ கோட்பாடுகளுக்கும் அடிப்படையில் வித்திதாசங்கள் என்னென்ன என்று வகுத்து விட்டால்
பதிலளிநீக்குபல்லவ மன்னர்களின் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றம் என்பதெல்லச்ம் அடிபடையில் பெரிதாக என்ன மாற்றம் இவர்களில்
ஏற்பட்டிருக்கிறது என்பதை மேலோட்டமாகவேனும் புரிந்து கொள்ள உதவும்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு மாற்றம் தானா சைவத்திலிருந்து
வைணவத்திற்கு -- வைணவத்திலிருந்து சைவத்திற்கு --என்பதையும்
ஒரளவுக்கானும் உருப்படியாக என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
வாங்க ஜீவி சார்.
நீக்குபாரதீய மதங்களை இரண்டு பிரிவாகக் கொள்ளமுடியும். பாரதத்தின் சிறப்பே இங்கு உதித்த அநாதிகாலமான வேதங்கள்தாம். ஒன்று வேத்த்தை அடிப்படையாக்க் கொண்டிருந்த மதங்கள், வேதக் கருத்துகளைக் கொள்ளாது தனித்திருந்த மதங்கள்.(இந்த விஷயங்களுக்குள் உட்புகுந்தால் சில வேறுபாடுகளும் இருப்பதைக் காணலாம்). இங்கு இருபதுக்கும் மேற்பட்ட மதங்கள் இருந்தன, அவற்றில் முக்கியமாக ஆறு சமயங்கள் இருந்தன எனக் கொள்வர்.
இருபதுக்கும் மேற்பட்ட மதங்களா எனத் திகைக்க வேண்டாம். சைவம் வைணவம் அடிப்படையில் வேத்த்தை ஒட்டியது. இதில் நாராயணனை முழுமுதற் கடவுளாக்க் கொண்டது வைணவம். அது சரிதான், ஆனால் நாங்கள் முதன்மையாக வழிபடுவது சிவனைத்தான் என்பது சைவ மதம். சைவத்திலும் வீர சைவம், என்றெல்லாம் இருப்பது உங்களுக்குத் தெரியும். (வீர சைவர்கள் பிராமணர்களல்லர். பிராமணர்களில் வைணவர்கள், ஸ்மார்த்தர்கள் என இரு பிரிவுகள் இருந்தன என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்)
நீக்குஎப்படி வைணவ மத்த்தை முறையாகப் பின்பற்றுபவர்கள் விஷ்ணு கோயில் தவிர வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லக்கூடாது என்ற நியதி வந்ததோ, அதுபோல-அல்லது அதைப் பார்த்து, சிவனைத் தவிர வேறு யாரையும் தொழக்கூடாது என்ற கடப்பாடு வீர சைவர்களிடம் தோன்றியது. அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் சமயம், அவன் தீவிரமாக அதனை ஒழுகுவதைப் பொறுத்து, கோயில்களிலும் நுழைந்தது. உதாரணத்திற்கு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சிவன் சந்நிதிக்கு அருகே பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதி உள்ளது. இது கோயிலின் ஆரம்ப காலத்தில் இருந்திருக்க வேண்டும் (தில்லையைப் போன்று). ஆனால் பிற்பாடு அந்த சன்னிதி முழுமையாப மண் கொண்டு மூடப்பட்டது. சென்ற நூற்றாண்டில் எஆஞ்சி பரமாச்சாரியார் அங்கு சென்றபோது அவர் இங்கு விஷ்ணு சன்னிதி இருக்கும் என உணர்த்தி, அதனைத் தேடி சுவரைப் பிரித்தபோது இந்த சன்னிதி திரும்ப வழிபாட்டுக்கு வந்தது எனச் சொல்வர். தில்லை போன்று பெரிய உருவம் கொண்ட பெருமாள் இவர்.
நீக்குபல சிவன் கோயில்களில் பெருமாளுக்கு சன்னிதி உண்டு. காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோயில் பிராகாரச் சுற்றில் தனிச் சன்னிதி கொண்டிருக்கும் பெருமாளுக்கு நிலாத்துண்ட பெருமாள் என்று அழகான பெயர்.
நீக்குகுடைவரை என்றாலே அது சமணர் படுகைகள் வழி வந்தவை தான். காலப்போக்கில் பல குடவரைகளில் சைவ, வைணவ கோயில்கள் பல்லவ மன்னர்களுக்கு பிற்பட்ட காலத்தில் மாற்றம் கண்டிருப்பதாக கருதுவதற்கு இடமுண்டு. காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் பகுதிகள் தவிர சமணக்காஞ்சியும் உண்டு. காஞ்சிபுரம் ஒட்டி தூசி என்ற பெயரில் ஒரு குட்டி கிராமம் உண்டு. இங்கு சிலகாலம் நான் வசித்திருக்கிறேன். இந்த கிராமத்தில் குடவரைக்கோயில் உண்டு. குரங்கணில்முட்டம் என்ற பெயர் கொண்ட தலத்தில்
(குரங்கு+அணில்+காகம் சேர்ந்து வணங்கியதாக ஐதிகம்) வாலீஸ்வரர் -- வளையம்மை அம்மன் கோயில் கொண்டுள்ளனர்.
திருஞானசம்பந்தப் பெருமான் பாடல் பெற்ற தலம் இது.
ஆமாம் ஜீவி சார். எல்லா சிவன் கோயில்களிலும் பெருமாளுக்கு சன்னிதி உண்டு, விதிவிலக்கில்லாமல் (குறைந்தபட்சம் சிலைகள் உண்டு)
நீக்குசமணர் படுக்கை... அங்கிருந்து வளர்ந்ததுதான் குடைவரைக்கோயில்கள் என்பது எனக்கும் தோன்றியது.
காஞ்சி நான்கு பிரிவுகளாக மிகப் பெரும் நகரமாக இருந்தது. நகரேஷு காஞ்சீ. புத்த காஞ்சி, ஜைன காஞ்சி, விஷ்ணு காஞ்சி, சைவ காஞ்சி. இரண்டு திவ்யதேசங்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வர்ர் மற்றும் காமாட்சியம்மன் (?) கோயில்களில் அமைந்துள்ளது. காஞ்சி ஒரு காலத்தில் வெள்ளத்தால் அழிந்துபட்டதால் பல கோயில்களில் மாற்றம் ஏற்பட்டன. பல கோயில்கள் அழிந்துபட்டு மூர்த்தங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன எனக் கருத இடமுண்டு. எங்கள் முன்னோர்கள் காஞ்சி நடாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இப்கோது அது எங்கு இருக்கிறது என்பது தெரியாது.
நன்றி
ஆஹா! இன்று படங்கள் அவை எடுக்கப்பட்ட கோணங்கள் எல்லாமே மலைப்பேற்படுத்தும் வகையில் அற்புதம்!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜீவி சார்.
நீக்குகளப்பிரர்கள் காலத்தை இருண்டகாலம் என்று சொல்லி கடந்து விடுவதே வழக்கமாகி விட்டது. வரலாற்று ரீதியில் பார்க்கப்போனால் கடைச்சங்க காலத்து இறுதி கட்டத்தில் களப்பிரர்கள் தலையெடுத்தார்கள் என்று கொள்ளலாம். சோழ வம்சத்தோடு தொடர்பு கொண்டிருந்த முத்தரையர்கள் களப்பிரர் வழி வந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குகளப்பிரர் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கும் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் நூலொன்றை வாசித்த நிழல் போன்ற நினைவுகள் மனத்தில் படிந்திருக்கின்றன. களப்பிரர்களைப் பற்றிப் பேச்சு வரும் பொழுதெல்லாம் அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வாசிக்க வேண்டும் என்று ஏற்படும் எண்ணம் இப்பொழுதும் ஏற்பட்டிருக்கிறது, நெல்லை.
இதைப் பற்றியும் இந்தத் தொடரில் எழுதியிருக்கிறேன் ஜீவி சார்.
நீக்குவரலாற்றுக்கு இரண்டு மூலங்கள் அடிப்படை. ஒன்று இலக்கியங்கள், இரண்டு கல்வெட்டு/பட்டயங்கள். இந்த இரண்டும், அனேகமாக களப்பிர்ரின் முந்நூறு நானூறு ஆண்டு காலத்தில் அனேகமாக இல்லை. அதனால்தான் வரலாற்றாசிரியர்கள் இதனை இருண்டகாலம் என்கின்றனர். களப்பிர்ர்களுக்கு முன்பே இந்த மண்ணின் பாண்டிய, சேர, சோழ மன்னர்கள் வம்சம், சங்க காலம் இருந்தன.
ஒரு dynasty இன்னொரு நிலத்தில் உதயமாகும்போது, இனக் கலப்பு தவிர்க்கமுடியாது. அப்படித்தான் வெவ்வேறு காலகட்டங்களில் இங்கு தெலுங்கைத் தாய்மொழியாக்க் கொண்டவர்கள் தமிழ் சமூகத்தில் கலந்தனர். அதனால் களப்பிர்ரின் ஒரு பிரிவு முத்தரையர்கள் எனக் கொள்ளலாம். அந்தப் பகுதி வரும்போது பேசுவோம்.
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துகள்
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
நீக்குகோமதி அக்கா உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்... இதில நாங்கள் மட்டும் தனிக்கட்சி:)).. பிரித்தானியாவில மட்டும் அன்னையர்தினம் மார்ச் மாதம்தான் வரும்... எங்களுக்கு இன்று இல்லை.
நீக்குவரலாறும் விளக்கமும் , படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குநாமக்கல் குடைவரைக் கோயில் படம் மலை பின் புறம் தெரியும் அந்த படம் அழகு. திருவெள்ளறை கோயில் தூண்களுடன் உள்ள மண்டபம்
படம் மிக அழகு.
வாங்க கோமதி அரசு மேடம். நன்றி
நீக்குதிருவெள்ளறை குடைவரைக் கோயில் படங்களும், மகாபலிபுரம் குடைவரை கோயில் படங்களும் அருமை.
பதிலளிநீக்குதூண்களின் வித்தியாசத்தைப் பார்த்தேன்.
பழையாறை வடதளிக் கோயில் படங்கள் எல்லாமே அருமை.
மாதொருபாகன் சிலை அழகு, புதிதாக மருந்து சாற்றி இருக்கே!
கோஷ்டத்தில் இருக்கும் இறைவன் சிலைகள் எல்லாம் அழகு.
//அருள் பொழியும் முகத்துடன் விஷ்ணு துர்கை/மஹிஷாசுரமர்த்தனி.//
ஆமாம், அருள் பொழியும் முகத்துடன் துர்க்கை மனதை கவர்கிறது.
கோயில் பிரகாரம் மற்றும் அனைத்து படங்களும் கோவிலை சுற்றிப்பார்த்த உணர்வை தருகிறது.
//சோழர் காலத்தில் மஹோன்னதத்தைப் பெற்ற பழையாறை வடதளி சோமேசுவரர் ஆலயம். இந்த இடங்களில்தான் ராஜமாதா செம்பியன் மாதேவி, தன் பேரன் ராஜராஜ சோழன், பேத்தி குந்தவை ஆகியோரோடு நிறைய முறை வந்திருந்திருப்பார், திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்கள், மகேந்திர பல்லவன் தொட்டு எப்படி சைவ சமயம் வளர்ந்தது என்பதையெல்லாம் குழந்தைகளிடம் சொல்லியிருப்பார்.//
நினைத்து பார்ப்பது நன்றாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் கதையில் கல்கி நினைப்பது போல இருக்கிறது. எங்களையும் உங்கள் கற்பனை உலகத்திற்கு இட்டு செல்கிறீர்கள்.
மாதொருபாகன் சிலைக்கு புதிதாக மருந்து போட்டு, சிலையைச் சீர்செய்திருக்கிறார்கள். அதனால்தான் பளபளவென இருக்கிறது.
நீக்குஎனக்குமே அந்த அந்தக் கோயில்களுக்குச் செல்லும்போது யார்யாரெல்லாம் அங்கு வந்திருந்திருப்பார்கள் என்று கற்பனை ஓடும். அதிலும் பழையாறை போன்ற சோழர் அரசகுலத்தவர் இருந்த இடம், நிச்சயம் அரசகுலத்தவர் கால்தடங்கள் பதிந்த இடம். அதனால் எழுந்த கற்பனை. நன்றி
நரசிம்மவர்மன் காலத்து தூண்கள் வித்தியாசம் கண்டுகொண்டோம். பாழையாறு வரலாற்றுடன் மகாபலிபுரத்தையும் எடுத்துக் காட்டியது நன்று
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன. .
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குபடங்கள் சூப்பர், நெல்லை. இன்று படங்கள் அவ்வளவாக இரண்டிரண்டாக இல்லை. சேர்ந்து இருப்பவை க்ளோசப் காட்சிகள் என்பதால் நல்லாவே தெரியுது. சிங்கங்கள் அந்த மண்டபத்தையே கோவிலையே தாங்கி நிற்பது போல இருக்கின்றன. அழகான சிற்பங்கள்.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் அக்கா (இனிமேல் க்கா என்றெல்லாம் எழுதக்கூடாது என்பது அதிராவின் கட்டளை ஹா ஹா).
நீக்குவெறும் தூணையே எவ்வளவு கலைநயமாகச் செதுக்கியிருக்கின்றனர் பாருங்கள்? ஏதோ ஒரு சிற்பி மனதில் உதயமானதுதானே இந்த டிசைன். அவர் யாரோ? ஆனால் அவர் செய்தது காலங்களைக் கடந்து நிற்கிறது
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
நீக்குநெல்லை, குடைவரைக் கோயில்களே அழகு. நீங்க சொல்லியிருப்பது போல, சமணர்கள் வாழ்ந்தவை இப்படியான குகைகளில் அவை பின்னில் கோவில்களாகவும் உருமாறின...சமணர்கள் தங்கியிருந்த அடையாளங்கள் பல அதில் காண முடியும்.
பதிலளிநீக்குதிருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் குடைவரைக் கோயில் இருக்கே. ரொம்ப வருஷம் முன்ன பார்த்தது.
திருச்சியில் நிறைய குடைவரைக் கோயில்கள் உண்டு என்றும்...
திருமயம் குடைவரைக் கோயில்....
அப்புறம் ஆந்திராவில் குண்டூரில் உண்டவல்லிக் குகைகள் (குப்தர்கள் காலத்தில்---வைணவத்தைப் பின்பற்றியவர்கள்) குடைவரைக் கோயில் ரொம்ப அழகா இருக்கும். ஆனால் இது பௌத்த துறவிகள் வாழ்ந்த இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது., என் ஓட்டைக் கேமராவில் பிடித்ததை பதிவும் போட்டிருக்கிறேன். ஒற்றைக்கற்களில் அமைந்திருக்கும்.
அங்கும் சயனக் கோலத்தில்தான் பெருமாள், நரசிம்மர், ஆஞ்சு, ராமாயணக் கதைகள் என்று பல இருக்கும், நாலு மாடி அடுக்குக் குகைக் கோயில்! ஏறுவதற்கான படிகளே கற்களால்..
கீதா
நிறைய குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன கீதா ரங்கன். செங்கல்ல கட்டும் கோயில்களைவிட இவை மிகுந்த நேரமும் உழைப்பும் கோருபவை.
நீக்குஓட்டைக் கேமரா என்றெல்லாம் எழுதாதீங்க. லென்ஸுக்கான ஓட்டை இல்லை என்றால் எந்த கேமராவும் படம் பிடிக்காது.
சில சமயங்களில் நீங்கள் இப்படி எழுதும்போது, ஒருவேளை புத்தம் புதிய கேமரா இருந்தால், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமைவிட (இது வேற ஸ்ரீராம்) நன்றாக படங்கள் எடுப்பேன் என்று சொல்கிறாரோ என்று தோன்றும்.
மாதொருபாகன் சிலை என்ன அழகு இல்லையா? ஆனால் சிலை பெயர்ந்து வந்திருச்சோ இல்லை புதுசா செஞ்சு வைச்சிருக்காங்களா.....அடியில் சிவப்பு அரக்கு வைச்சு ஒட்டியிருக்காப்ல இருக்கு. கீழ பீடமும் கூட கற்களுக்கு இடையில் மண் வைத்து அடைத்து நிறுத்தி வைச்சிருக்காப்ல இருக்கு.
பதிலளிநீக்குகீதா
பல இடங்களிலும் மாதொருபாகன் சிலையைப் பார்த்திருக்கிறேன். அதைவிட துர்கை போன்ற சிற்பங்கள் மிக மிக அழகாக இருப்பதாகத் தோன்றும் (ஒரே கல்லில் 8 கைகளையும் அவற்றில் ஆயுதங்களையும் கொண்டுவரணும். வேலை செய்யும் இடத்தில் மனைவி வந்து 'என்னாங்க.. நைட்டுக்கு என்னா சமையல் பண்ணணும்?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால் உளி தவறுதலாக வேறு ஒரு கையில் பட்டுவிட வாய்ப்புண்டு)
நீக்குநீங்க நிற்கும் படம் அந்த செட் இரண்டும் சேர்க்கப்பட்டிருப்பதால் கலை வடிவகளைப் பார்க்க முடியலை லாங்க் ஷாட்....உங்களைத் தெரியலைன்னு சொல்லலை ஹிஹிஹிஹிஹி....சிற்பங்களைச் சொன்னேன்.
பதிலளிநீக்குகீழ இருக்கும் ரெண்டும் க்ளோசப் ஸோ சேர்த்துப் போட்டாலும் நல்லா தெரியுது.
கல்லெல்லாம் குடைஞ்சு பைப் எல்லாம் எதுக்குப் போட்டிருக்காங்க? உள்ளே அபிஷேகத்துக்குத் தண்ணிக்காகப் பைப் போட்டிருக்காங்களோ எளிதாக எடுக்க? ஆனா இப்படிக் குடைஞ்சா கற்களில் சிற்பங்களில் பிளவு வந்திடும் இல்லையா? பாதிப்பு ஏற்படுமே.
கிணறு போலத்தான் தெரிகிறது. டைம் மெஷின்ல போய் பழுவேட்டரையர்கிட்ட கேட்டா போச்சு!!!!
இரண்டாக வருவதில் தெளிவு கம்மியாகுது. தனித்தனியாகப் போட்டால் பதிவு நீளமாகிடும்னு இப்படிச் செய்யறது ஓகே தான்
நான் தனித்தனியாகப் போடுவதால்தான் பதிவு ரொம்ப நீளமாகிடும்னு பல பகுதிகளாகப் போட வேண்டியிருக்கு.
கீதா
அந்த கோபுரம் பிற்கால கோபுரம் என்பதால் அதில் உள்ள சிற்பங்களுக்கு நான் முக்கியத்துவம் தரலை. அதனால் க்ளோசப்பில் போடவில்லை. ஆனால் எப்போவாவது, கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் (சமீபத்தில், 200-300 வருடங்கள் பண்ணியது என்றாலும்) எல்லாம் ஒரு பேட்டர்ன், ஒழுங்குமுறையைத் தொடர்கிறது என்று காண்பிக்க ஆசை. உதாரணமா, கோபுரத்தின் வலது ஓரத்தில் கீழ்ப்பகுதியில் கிருஷ்ண லீலா, என்றெல்லாம் ஒரு ஒழுங்குமுறை உண்டு.
நீக்குஞாயிறு பதிவைப் பொறுத்தவரையில் நான் புகைப்படங்களுக்கே முக்கியத்துவம் தரணும் என்று நினைக்கிறேன். அதனால் 18-25 படங்கள் ஒரு பதிவில் வந்துவிடும் - தனித்தனிப் படங்கள். 10 படங்கள் போட ஆரம்பித்தால் நிறைய பதிவுகள் இழுக்க வேண்டியிருக்கும்.
பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் வரலாறு சுவாரசியம். அதிலும் மாமல்லன் கட்டிய குடவரைக் கோயிலுக்கும் மகேந்திரன் காலத்துக்கும் உள்ள வித்தியாசங்களைத் தூண்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மஹாபலிபுரத்துக்கு 50 ஆண்டுகள் முன்னர் போனது. அதன் பின்னர் போகவே முடியலை. திருவெள்ளரைக் கோயிலெல்லாம் பார்த்திருக்கேன்.. நீங்கள் சரித்திரத்தை ஆராய்ந்து சொல்லும் விதம் ஏற்புடையதாகவும் இருக்கிறது. மிகவும் ஆழமாக ஆராய்ச்சிகள் செய்து சொல்லி வருகிறீர்கள்.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம்... ரொம்ப வாரங்களுக்கு (மாதங்களுக்கு)ப் பிறகு வந்திருக்கிறீர்கள். எவ்வளவு ஆக்டிவ்வா ஒரு காலத்துல இணையத்துல வலம் வந்தீங்க என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு ஆன்மீக மற்றும் வரலாற்று விஷயங்களை உங்கள் பிளாக்குகளில் எழுதியிருக்கீங்க.
நீக்குபல இடங்களில் புகைப்படங்கள் எடுத்து, வரலாற்றைப் படிக்கும்போது அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வரலாற்றில் சொல்வது நன்றாகப் புரிந்துவிடுகிறது. எனக்குப் புரிந்ததைத்தான் இங்கு பகிர்கிறேன் (புரியாத விஷயங்களும் உண்டு. அவற்றைப் பெரும்பாலும் எழுதுவதில்லை). உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
இப்போதுதான் 'கோடை காலம்' என்ற தலைப்புக்கு நான் எடுத்த படங்களைத் தேடினேன். அப்படித் தேடும்போது, மாமா சொல்லி நான் தென்காசி சென்ற புகைப்படங்கள், காணொளிகள் பார்த்தேன். சாம்பசிவம் மாமாவை நினைத்துக்கொண்டேன் (அரை மணி நேரம் முன்பு)
பழையாறைக் கோயில் போனதில்லை. தஞ்சைத் தளிக்குளத்தாரைத் தேடிக் கொண்டு போனால் பெரிய கோயில் இருக்குமிடம் அது தான் என்றார்கள்.
பதிலளிநீக்குகும்பகோணம் வந்திருந்தால் இந்தக் கோயில்களை மிஸ் செய்ய வாய்ப்பில்லை. தஞ்சை தளிக்குளத்தார் கோயில் பழுதுபட்டு அழிந்துபட்டது என்பதை நான் படித்தேன். அந்தக் கோயில் இருந்த இடத்தில் தஞ்சை பெரிய கோயில் கட்டப்படவில்லை என்பதையும் படித்தேன். தற்போதுள்ள வைணவ திவ்யதேசங்களே (தஞ்சை மாமணிக்கோயில் மணிக்குன்றம் நரசிம்மர் கோயில்) தஞ்சையிலிருந்து வெண்ணாற்றங்கரைக்கு பிரித்துக்கொண்டு சென்று புதிதாகக் கட்டப்பட்டவை
நீக்குஉண்மையில் நான் ஸ்கூலில் படித்தபோது, இந்த சமயப்பிரிவுகள் அரசர்மார்களின் பெயர்கள் எல்லாம் படிச்சுப் பாடமாக்கினேன்..
பதிலளிநீக்குவைஸ்ணவ சமயம் சமண சமயம் என்றெல்லாம், ஆனால் பின்னர் நினைச்சேன் அவையெல்லாம் அந்தக் காலத்தோடு போய் விட்டது, இந்து சமயம் மட்டுமே இப்போ இருக்கு, நமக்குள் பிரிவில்லை என.
ஆனா இந்தியாவில் இப்பவும் இருப்பது பார்த்து வியந்தேன். இலங்கையில் இந்து சமயம் தவிர வேறு பிரிவினர் இல்லை என்றே நினைக்கிறேன்.
வாங்க அன்னபூரணி அதிரா.. (ஆமாம் உங்க பசங்களுக்கு மற்றும் கணவருக்கு சமைச்சுப் போடுவதால் மாத்திரம் நீங்க அன்னபூரணி என்று பெயர் வைத்துக்கொள்ள முடியுமா? எனக்குத் தெரிந்து எங்கள் பிளாக்கில் இருக்கும் ஒருவருக்குக் கூட நீங்கள் சாப்பாடு போட்டதாக நினைவில்லை, ஏன் அஞ்சுவுகும்கூட)
நீக்குஇந்தியாவில் இருந்த பல்வேறு சமயங்களை (சைவம், வைணவம், அமணம், பௌத்தம், சீக்கியம்.....) மொத்தமாக 'இந்து மதம்' என்று கொண்டுவந்துவிட்டார்கள். இது அரசாங்கத்தின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. அதுவும் தவிர, கடந்த 200 வருடங்களாக இந்த மதங்கள் தங்களின் தனித்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து-சீக்கிய மதம் அதனை இழக்கவில்லை, எல்லாமே கலந்துவிட்டிருக்கிறது. உதாரணமா ஜைன மதத்தில் லக்ஷ்மி வழிபாடு, வைணவ மதத்தில் இருப்பவர்களும் பிள்ளையார் சதுர்த்தி போன்றவைகளைக் கொண்டாடுவது என்று ஆகிவிட்டிருக்கிறது.
இந்து சமயம் தவிர, கிறித்துவம், முஸ்லீம் ஆகிய சமயங்கள் உண்டல்லோ?
இந்த டவுட்டைப் புதன்கிழமை கேள்விக்கு எடுத்துப் போயிருக்கிறேன்:).
நீக்குஇந்து சமயத்துள் பெளத்தமும் வருதோ இதென்ன புதுக்கதையாக்கிடக்கு...
இலங்கையில் நாங்கள் சைவ சமயத்தோர் எல்லோருமே எல்லா விரதங்களும் பிடிப்போம்.. ஆனா பின்புதான் கேள்விப்பட்டேன் இந்தியாவில் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு விரதம் வருமாம்... சைவ சமயத்துக்குள்ளேயே இப்படியா என வியந்தேன் அறிஞ்சதும்... இன்னும் நிறைய குழப்பம் எனக்குள் இருக்கு இதுபற்றி...
முஸ்லிம் மதம் மட்டும்தான் பிரிவினை இல்லை என நினைக்கிறேன், நான் சைவமும் அப்படி ஒன்றே ஒன்றுதான் என நினைச்சிருந்தேன், இலங்கையில் அப்படித்தான்.
அன்னபூரணி சமைச்சுக் கொடுப்பது வெளியில தெரியக்கூடாதெல்லோ:))) ஹா ஹா ஹா...
எல்லா சமயங்களிலும் பிரிவுகள் உண்டு. இதில் விதிவிலக்குகள் கிடையாது. முஸ்லீம் மதத்தில் ஷியா, சன்னி என இரு பிரிவுகள். இது தவிர சூஃபி, அஹமதியா என்று பல பிரிவுகள் உண்டு.
நீக்குவிரதம் - இதில் சில சில வித்தியாசங்கள் உண்டு. இருந்தாலும் ஒவ்வொரு விரதத்திற்கும் ஒரு நல்ல மெனு உண்டு. பிள்ளையார் சதுர்த்தி-கொழுக்கட்டை, திருவாதிரை-களி என்று ஒரு பெரிய லிஸ்ட் உண்டு. அதெல்லாம் எதுவும் உங்கள் சேனலில் வரவில்லை (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். தெரிந்தால் செய்து வீடியோ போடமாட்டேனா என்று நீங்கள் நினைக்குமுன் எனக்குத் தெரிந்துவிடுகிறது)
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. இப்படியான இனிப்பு வகைகள் களி வகைகள் வீட்டில ஆருக்கும் பிடிக்குதில்லை, அதனாலதான் அவற்றை இன்னும் செய்து போடாமல் இருக்கிறேனாக்கும்:)))
நீக்குகோயில் சிற்ப வேலைப்பாடுகள் அழகோ அழகு, முக்கியமாக இப்போதைய கோயில்கள் எல்லாம் சுத்தமாக காட்சி அளிப்பது, மனதுக்கு பொஸிடிவ் வைஃப் தருகிறது[ஹையோ இது வேற வைஃவ் ஆக்கும் கர்ர்ர்:))].
பதிலளிநீக்குஹாஹாஹா... தற்காலங்களில் பல கோயில்கள் சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. இருந்தாலும் கோயிலில் தரும் குங்குமத்தை சுவற்றில் அல்லது தூணில் தீட்டுவது, பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு கையை தூணில் துடைப்பது என்றெல்லாம் இருக்கின்றன.
நீக்குஇறைவன் சன்னிதியில் இருக்கும்போது நமக்கு நேர்மறை எண்ணங்கள் வந்துவிடும் அல்லவா? (எதுக்கு பொஸிடிவ் வைbப்,வைஃப்ப் என்றெல்லாம் எழுதிக் குழப்பணும்?)
நம் மக்களைத் திருத்த முடியாது:(.
நீக்குஉண்மையில நெல்லைத்தமிழன், எனக்கு நேர்மறை.. எதிர்மறையில் குழப்பம்.. நீங்கள் ஆரம்பம் எங்கோ எழுதித்தான் இப்படி இரு சொற்கள் இருப்பதே தெரிஞ்சுது தமிழில்:)) ஹையோ சிமியோன் ரீச்சர் ரத்தக் கண்ணீர் வடிக்கப்போகிறா:)))
அதனால பொசிடிவ் எது நெகடிவ் எது என தடுமாற்றம் உண்டு... ஆனா இன்று மனதில ஏத்திட்டேன்.. அதாவது நேரான பாதை எனில் பொசிடிவ் இப்படி நினைச்சிட்டேன் அப்போ நேர்மறை:))) இனி மறக்க மாட்டேன்:))
சின்ன வயசில ஸ்பெல்லிங் பாடமாக்குவது, ஆங்கிலம் தொடுத்தெழுதுவது எல்லாம் அம்மா தான் சொல்லித் தருவா, ஒரு தடவை பாடமாக்கியபோது ரேடியோவுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் கஸ்டமாக இருந்தது... அப்போ அம்மா சொன்னா...
ஆர் ஏ டி..... ஐயோ...ஓஓஒ என சொ ல்லிப்பார் மறக்க மாட்டாய் என்று ஹா ஹா ஹா அன்றிலிருந்து சூப்பராக ஆர் ஏ டி ஐயோ... ரேடியோ எனப் பாடமாக்கிட்டேன் ஹா ஹா ஹா.
அதேபோல சயன்ஸ் அட்டவளைக்கும் ஒரு பாட்டிருக்கு...
ஏச் ஏச் கி லிசின் ரு பிபிஸி நொட் ஒன் ஃபிரைடே... மக்கன் அல்ல சிவாஜி பொய் சொல்லிக் குழப்புகிறான் அருள் கள்ளக் கருப்பன்... இப்படி வரும் ஹா ஹா ஹா:))..
நீங்க குழம்பியிருப்பீங்கள் இப்போ:))
உங்கள் கருத்துகள் அனைத்தும் படித்தேன். பல கருத்துகள் என் நினைவை எங்கோ இழுத்துப் போகின்றன. அம்மா அப்பா, சிறு வயது நினைவுகள் என.... இப்போது தோன்றியது, என் வடகிழக்குப் பயணத் தொடரில் என் சிறுவயது நினைவுகளைப் பகிருவோம் என்று.
நீக்குபிறகு வந்து பதிலளிக்கிறேன்.
//ஸ்பெல்லிங் பாடமாக்குவது, ஆங்கிலம் தொடுத்தெழுதுவது எல்லாம் அம்மா தான் சொல்லித் தருவா,// என்னுடைய அப்பா எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆங்கிலம் மற்றும் கிராமர் சொல்லித்தருவார். நான் 6ம் வகுப்பு படிக்கும்போதே கிராமர் எல்லாம் ரொம்பவே நன்றாகத் தெரியும். ஆங்கிலம் இரண்டாம் தாள் பேப்பரை அரை மணிக்குள் முடித்துவிடுவேன். பரீட்சை ஆரம்பித்து அரை மணி கழித்து பெல் அடிப்பார்கள். அதற்குப் பிறகுதான் எழுதின பேப்பரைக் கொடுக்க முடியும்-இரண்டு மணி நேரம் பரீட்சை என்று நினைவு. ஆங்கிலம் இரண்டாம் தாள் மாத்திரம் 30 நிமிடங்களில் எழுதி முடித்து ஆசிரியரிடம் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிடுவேன். அதில் எனக்கு அவ்வளவு பெருமை. ஆனா பாருங்க, அதை வைத்து நான் நிறைய டெவலப் பண்ணிக்கலை.
நீக்கு//ஆனா பாருங்க, அதை வைத்து நான் நிறைய டெவலப் பண்ணிக்கலை.//
நீக்குஅது த ராசி எனில் அப்படித்தான், எவ்வளவு திறமை இருப்பினும் ஓரளவுக்கு மேல் மிளிர விடாது... குடத்தில் ஏற்றிய விளக்கு போலவாம்:)).
தானா முளைச்ச மரம் தனியாக நின்ற மரம் ஏன் முளைச்சதென்றாயோ....[ஶ்ரீராமின் வெள்ளிப்பாடலில்தான் இதனை முதன்முதல் கேட்டு பின்பு அப்படத்தையும் தேடிப்பார்த்தேன், 3,4 வருடங்கள் முன்பாக இருக்கும்].
பதிலளிநீக்குஅப்படி ஒற்றையாக நிற்கும் தென்னைப்பிள்ளையும் அழகுக்கு மெருகூட்டுகிறார்.
அந்தப் பாடலைத் தேடி இப்போது கேட்டேன். ஆஹா ஓஹோ என்ற பாடல் இல்லையே (இதோ எந்தன் தெய்வம் படப்பாடல்). எப்படி உங்கள் நினைவில் இருக்கிறது?
நீக்குநான் இன்னொரு கோயிலில் ஒற்றைப் பனைமரம் பார்த்திருக்கிறேன். 9ம் நூற்றாண்டிலேயே பிரபந்தப் பாசுரத்தில் அந்த ஒற்றைப் பனை மரத்தைப் பற்றி வரும். அங்கு வேறு பனை மரங்கள் கிடையாது. ஒரு நாள் பகிர்கிறேன்
இல்ல நெ தமிழன் அது ஒரு பீலிங்கான பாட்டெல்லோ... படமும் அப்படித்தான்.. கொஞ்சம் கவலைப்படம் அதனால மனதில் நின்றுவிட்டது.
நீக்குஹா ஹா ஹா எங்கட அம்மா ஊரும் அப்பா ஊரும் அடுத்தடுத்த ஊர்தான், நாங்கள் அம்மா ஊரில்தானே இருப்போம், அப்போ அப்பா ஊருக்கும் போகும்பாதையும் ரெட்டைப் பனைமரம் ஒன்றிருந்தது.. அதில் இரவில பேய் வரும் என பயமுறுத்தியிருந்தார்கள்...
அப்போ சில பின்னேரங்களில் ஊருக்குப் போயிருக்கும் காலத்தில், அண்ணன் என்னைக் கூப்பிடுவார் அப்பம்மா வீட்டுக்குப் போகலாம் வா என, ஏனெனில் அவருக்கு இந்தப்பனையை தாண்டி தனியே திரும்பிவரப்பயம்:)) துணைக்கு என்னை அழைப்பார் ஆனா அதைச் சொல்லமாட்டார் பின்னாளில் நானே கண்டுபிடிச்சேன்..
திரும்பி வரும்போது இருட்டிடும் எப்படியும்.... அப்போ அண்ணன், தன் பயத்தைப்போக்க எனக்குச் சொல்வார்[சைக்கிளில் முன்னுக்கு இருப்பேன் நான்] , அதிரா பயப்பிடாதே அதோ தெரியுதெல்லோ ரெட்டைப்பனை என, உடனே நான் இரு கண்களையும் இறுக்கி மூடியபடி சைக்கிள் கண்டிலைச் சுற்றி இறுக்கிப் பிடிச்சபடி இருப்பேன்... வீடுவந்துவிட்டது என்றதும் தான் கண்களைத் திறப்பேன் ஹா ஹா ஹா எங்கிட்டயேவா:)))
உங்கள் இளவயது படிக்க நன்றாக இருக்கு. அப்பாவைப் பற்றி நீங்கள் எழுதி நான் படித்த நினைவு இல்லை. இப்போ உங்கள் ஊரில் உங்கள் உறவினர்களெல்லாம் இருப்பார்கள் இல்லையா?
நீக்குநான் பதின்ம வயதில் இருந்த ஊருக்குச் சென்றபோது அந்த உணர்வு மீண்டும் வரும். ஆனால் அப்போ இருந்த ஊரை இப்போது தேடமுடியாது. அதாவது தெரிந்தவர்கள், ஊரின் நிலை, ஆற்றின் நிலை எல்லாமே ரொம்பவே மாறிவிட்டது.
என் பையனுடன் ஒரு தடவை போயிருந்தபோது, அங்கிருந்தவர், என் சிறு வயது வால்தனங்களையெல்லாம் என் பையனிடம் சொன்னார். (கொஞ்சம் அதிகப்படியாகச் சொன்னாரா இல்லை நானே அப்படித்தானா என்பது தெரியலை. இருந்தாலும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. பையன், அப்பாவைப் பற்றிக் கொண்டுள்ள நினப்பு வேறு அல்லவா?)
எனக்கு மின்னலைக் கண்டால் இப்போதும் பயம். மின்னல் இடி இடித்தால் வெளியே வரமாட்டேன். வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவேன்.
நீக்குஅப்பாவின் அட்வைஸ் என எழுதியிருக்கிறேன் போஸ்ட்டாக, ஆனா பாருங்கோ என்னுடைய பல சொந்தக் கதைகள் இப்படிக் கொமெண்ட்டில தான் அதிகம் இருக்கும், சுடச்சுட படிச்சால் மட்டுமே தெரியும் பின்பு ஆர் படிக்கப் போகினம் ஹா ஹா ஹா...
நீக்குநீங்கள் வெட்கப்பட்டீங்கள் எனும்போதுதான் நினைக்கிறேன், இங்கே பிள்ளைகளுக்குச் சொல்வோம் அவர்கள் குட்டியாக பண்ணிய விசயங்களை.. அவர்களும் கேட்கும்போது வெட்கம்தான் படுகிறார்கள் ஹா ஹா ஹா...
சின்ன வயசு நினைவுகளையும் அப்பப்ப பகிருங்கோ படிக்க நன்றாக இருக்கும்தானே.
சுரங்கப் பாதை.. ஒருக்கால் இறங்கிப் பார்த்திருக்கலாமே:))..
பதிலளிநீக்குஇலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலி என நினைக்கிறேன் எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் ஊர்தான்...
அங்கு சீதைக்காக வந்த ராமன், இளைப்பாறிய இடமாம், அப்போ இளைப்பாறும்போது தன் அம்பை நிலத்தில் குத்தி ஊன்றிவிட்டு இளைப்பாறினாராம்..... அது பெரிய கிணறாகி சுரங்கமாகி இந்து சமுத்திரத்தில் கலக்கிறது...
அந்தக்கிணறு இப்பவும் உள்ளது, சிலர் குதித்து நீந்துவர்... ஒரு 20-25 சதுர அடிகள் இருக்கும் அக்கிணறு.
பின்னாளில் ஆண்ட அரசர்களின் தேரும் அப்பாதையி[உள்சுரங்கத்தில் இப்பவும் இருப்பதாக படம் போட்டிருக்கினம்.... இம்முறை போனபோது குட்டி வீடியோ எடுத்து வந்தேன் இன்னும் போடவில்லையே...
கிணற்றின் பெயர் "நிலாவரைக் கிணறு"... நிலாவரை அந்த இடத்தின் பெயராக்கும்.
இலங்கைக்கு ஒரு வாரப் பயணம் செல்லவேண்டியதை (யாத்திரை) நான் சில மாதங்களுக்கு முன்பு கேன்சல் செய்துவிட்டேன். நீங்கள்லாம் இருந்தால், பார்க்கலாம் என்று வந்திருக்கலாம் (அதுவும் அன்னபூரணி வேறு. நல்ல சைவச் சமையல் செய்து தந்திருக்க வாய்ப்பு இருக்கிறது).
நீக்குகாணொளி போடுங்கள். நான் அனைத்தையும் - அசைவச் சமையல் தவிர, பார்த்துவிடுவேன்.
ஆஆஆஆ அம்மா இப்போ ஊருக்குப் போகிறா.. நீ மட்டுமாவது வா எனக் கூப்பிடுறா.. சொல்ல முடியாது நான் என்ன பண்ணப்போகிறேன் என .. வாங்கோ எங்கட ஊர்க்கோயில் ஐயரிடமே உணவு ஒழுங்குபண்ணிவிடுறேன் ஹா ஹா ஹா.
நீக்குஎங்கள் சொந்தத்தில் பலரும் சைவம்தான் நெ தமிழன்... நாங்கள் கூட[நான் குறைவு] இப்போ அம்மா எல்லாம் யாழ்ப்பாணத்து முழுக்கோயிலும் விரம்/சைவமாக இருப்பா.. இதனால வருடத்தில கையால எண்ணக்கூடிய நாட்களே அசைவ நாட்கள்...
காணொளி எடுத்திருக்கிறேன் ஒழுங்காகப் போட மனமும் நேரமும் வருகுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. 2023 இல் போன காசி யாத்திரையே இன்னும் எடிட் பண்ணாமல் இருக்குது...
அதிரா... இப்போ பல நாடுகளின் வாழ்க்கை அளவீடுகளையும் சௌகரியங்களையும் பார்த்துவிட்டு, உங்கள் ஊருக்குச் (இலங்கை) சென்றால் அங்கு இரண்டு வாரங்கள் கழிக்க முடியுமா? சின்ன வயதில் இருந்த அதே எஞ்சாய்மெண்ட் இருக்குமா? ஒருவேளை நாம் அந்த சிறுவயது நினைவை இழந்திருப்போமோ இல்லை மீட்டெடுக்க உதவுமா? நிச்சயம் அம்மாவுடன் சென்றுவாருங்கள். வளர்ந்த இடம் அல்லவா?
நீக்குஇப்போ மாங்காய் மற்றும் பலாப்பழ சீசன். நல்லா சாப்பிட்டு இரண்டு மூன்று கிலோ எடை அதிகரியுங்கள்.
ஶ்ரீராமுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:))))))
பதிலளிநீக்குஇனிமேல் ஒருவர்:)) தனியாக, வேட்டி எல்லாம் கட்டி நிண்டு படமனுப்பினால்... அருகில சீலை கட்டிய தமனாக்கா படத்தை இணைச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்... ஹா ஹா ஹா...:)))
அதிரா.. என் மனைவி அதற்கு அனுமதி தரலை. சமீபத்தில்கூட அவளுடைய படம் - முகத்தை மாத்திரம் ஷேட் பண்ணி இங்கு வந்திருந்தது.
நீக்குநான் இப்போது வடகிழக்குப் பயணம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் அதில் அவளுடைய படம் போடுவேன் என்று சொல்லியிருக்கிறேன் (காரணம் வேறு ஒன்றும் இல்லை. சில இடங்களில் இருவரும் சேர்ந்துதான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். தனியான நான் மாத்திரம் இருக்கும் படம் இல்லை)
///
நீக்குநெல்லைத்தமிழன்11/5/25 6:05 PM
அதிரா.. என் மனைவி அதற்கு அனுமதி தரலை.///
ஹா ஹா ஹா இல்லை இல்லை நான் உண்மையில் அப்படி தமனாக்காவைப்போட்டால் சூப்பராக/கொமெடியாக இருக்கும் எனச் சொன்னேன்.. மற்றும் படி எதுக்கு அண்ணிபடம் போடுறீங்கள்.. அது பலருக்கும் பிடிக்காது பொதுவெளியில் பகிர,
//முகத்தை மாத்திரம் ஷேட் பண்ணி இங்கு வந்திருந்தது//
நானும் கொமெண்ட் போட்டிருந்தேனே...
ஶ்ரீராம் இன்னும் தன்னைக் காட்டுறாரில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) ஹா ஹா ஹா
/தமனாக்காவைப்போட்டால் சூப்பராக/கொமெடியாக இருக்கும் // இந்த ஆண்கள் யாருக்கும் லாயல்டியாக இருக்கமாட்டார்கள் அதிரா. அந்த பாஹுபலி தமன்னா இப்போது இல்லையே. அப்புறம் எப்படி இன்னும் நான் அவருடைய ரசிகனாக இருக்கமுடியும்?
நீக்குஸ்ரீராமை கீதா ரங்கன் மாத்திரம்தான் சந்தித்திருப்பார் என்று தோன்றுகிறது.