ஜெயகுமார் சந்திரசேகரன் :
தாளிப்பு என்பது தமிழ் சமையலில் முக்கிய அம்சம். சிலர் முதலில் தாளித்து பின்னர் படிப்படியாக நறுக்கிய காய்களை சேர்த்து வேக வைத்து இறக்குகின்றனர் (உ-ம் பொரியல்). சிலர் முக்கிய பதார்த்தை செய்து முடித்து இறக்குவதற்கு முன் தாளித்து சேர்க்கின்றனர் (உ-ம் கூட்டு). இவை இரண்டில் எது சரி, ஏன்?
# அது என்ன தயார் செய்கிறோம் என்பதைப் பொருத்தது.
உப்மாக்கு முன் பச்சடிக்கோ பின்
தப்பாது தாளிப்பின் சிறப்பு.
கே. சக்ரபாணி சென்னை
கிரிப்டோகரன்சி என்பதுபற்றி முழுவிவரம் அளிக்க இயலுமா?
# அதிகம் சிக்கல் படுத்தாமல் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்பதை அறிய முற்படுவோம்.
ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான் ஆயிரம் "நீலி" என்ற பெயர் கொண்ட ஒரு மாயப்பணத்தை தோற்றுவிக்கிறேன்.
இந்த ஆயிரம் ரூபாய்க்கு மேல் இந்த நீலி உற்பத்தி செய்யப்படமாட்டாது. ஆனால் இந்த முதலீடான ஆயிரம் ரூபாயை நான் தனியாக வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
யாரும் நீலி வாங்க முற்பட்டால் அவர்கள் ஒரு ரூபாய்க்கு கேட்டால் நான் கொடுப்பதாக இல்லை. 1.10, 1.50, 2.50 என்று விலை ஏறி வரும். 2.50 கிடைத்தால் பத்தே பத்து நீலி இரண்டரை ரூபாய் க்கு விற்கிறேன். 2.50 க்கு வாங்கியவர் அதை மூன்றரை ரூபாய்க்கு விற்க தயாராக இருப்பார். அது ஐந்து ரூபாய் ஆகும் போது நான் இன்னும் ஒரு பத்தே பத்து நீலி விற்கிறேன். வைத்திருக்கும் நானும் வாங்கிய இரண்டு பேரும் விற்கத் தயாராக இல்லாவிட்டால் வாங்குபவர்கள் அதிகமாகவும் விற்பவர்கள் மூன்றே மூன்று பேராகவும் இருப்பார்கள். விலை பத்து ரூபாய்க்கு போகும்போது இன்னும் ஒரு ஐந்தே ஐந்து நீலி நான் விற்கிறேன்.
இப்படியாக நானும், வாங்கியவர்களும் மிக அதிக விலையில்தான் விற்போம் என்றாகி விட்டால், விலை கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறுவது இயல்பு. ஏனென்றால் இரண்டரை ரூபாய்க்கு வாங்கியவர் ஐந்து ரூபாய்க்கு விற்கிறார் என்கிற செய்தி தீ போல் பரவும்.
இதை உண்டாக்கியது நான் என்பதால் விலை படிப்படியாக உயரும் போது படிப்படியாக என்னுடைய ஆயிரத்தையும் நான் விற்று விட முடியும். இதற்கு மேல் யாரும் புதிதாக தயார் செய்து விற்க முடியாத நிலையில் கையிருப்பை மேலும் மேலும் அதிக விலைக்கு விற்கவும் மேலும் மேலும் அதிக விலைக்கு வாங்கவும் நபர்கள் முன்வருவார்கள்.
இதுதான் கிரிப்டோ பின்னணி என்று நான் அறிந்து வைத்திருப்பது. எந்த காலத்திலும் யார் யாருக்கு என்ன விலைக்கு விற்றார்கள் என்கிற செய்தி வெளிப்படையாக தெரிந்தவாறுதான் இருக்கும். எனவே மோசடி எதுவும் செய்ய இயலாது என்பதும், இந்தக் கணக்கு வழக்குகளை யாரும் சேதப்படுத்த முடியாது என்பதும் இதன் மிக பலமான பின்னணிக்குக் காரணம்.
இது நன்றாக பிரபலமாகும் போது ஒரு பேங்க் என்கிற அமைப்பு இல்லாமலே மக்கள் பணத்துக்கு உண்டான மதிப்பைப் பெற முடியும். இகர நாணயங்களை போல் இதன் மதிப்பு இறங்குமுகம் ஆவதற்கு வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை இருக்கும் வரை இதன் விலை படிப்படியாக மேலே மேலே போய் அசாத்தியமான உயரங்களை எட்டக் கூடும்.
@CGSenu : கிரிப்டோகரன்சி (Cryptocurrency) என்பது டிஜிட்டல் அல்லது வழக்கமான பணமாக பயன்படுத்தக்கூடிய வர்த்தக பரிமாற்றங்களை செய்யும் ஒரு வகையான பணம் ஆகும். இது பொதுவாக கிரிப்டோகிராபி (Cryptography) எனப்படும் குறியீட்டு வழிமுறைகளைக் கொண்டு பாதுகாப்பு செய்யப்படுகிறது, அதனால் இதன் பரிமாற்றங்களைப் பாதுகாப்பாக மற்றும் முறையாகச் செய்ய முடிகிறது.
கிரிப்டோகரன்சியின் முக்கிய அம்சங்கள்:
-
டிஜிட்டல் தன்மை: கிரிப்டோகரன்சி என்பது மெய்நிகர் பணமாகும். இதன் பதிப்பு மற்றும் பரிமாற்றங்கள் முழுமையாக இணையத்தில் நிகழ்கின்றன.
-
பாரம்பரிய மத்தியசேவை இல்லாமை: இது, மத்தியர்கள் (வங்கிகள் அல்லது அரசாங்கம்) இல்லாமல், நேரடி பரிமாற்றங்களை (P2P - Peer to Peer) செய்வதற்கு உதவுகிறது.
-
பாதுகாப்பு: கிரிப்டோகிராபி பயன்படுத்துவதால், கிரிப்டோகரன்சியின் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக உள்ளன. இது அதன் மாறுபட்ட பாதகங்களை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
-
விரிவான பயன்பாடு: கிரிப்டோகரன்சி, குறிப்பாக பிட்காயினை (Bitcoin) பயன்படுத்தி, பொருளாதார பரிமாற்றங்களை உலகெங்கிலும் உள்ள நபர்களுடன் துரிதமாக மேற்கொள்கின்றனர்.
-
தன்னாட்சி: கிரிப்டோகரன்சி என்பது மத்திய ஆளுமையால் கட்டுப்படுத்தப்படவில்லை. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது, மேலும் இந்த தொழில்நுட்பம் பரிமாற்றங்களை திறந்த மற்றும் திருப்தி அளிக்கும் முறையில் பரிசோதிக்க உதவுகிறது.
கிரிப்டோகரன்சியின் சில பிரபல வகைகள்:
-
பிட்காயின் (Bitcoin): உலகின் முதன்மையான கிரிப்டோகரன்சி. 2009 ஆம் ஆண்டு துவங்கியது.
-
இத்தேரியம் (Ethereum): ஒரு கிரிப்டோகரன்சி மட்டுமல்ல, ஒரு செயலி அல்லது ஸ்மார்ட் கொன்ட்ராக்டுகளை உருவாக்க உதவும் தளம்.
-
லிட்காயின் (Litecoin): பிட்காயினை சார்ந்த மற்றும் வேகமான பரிமாற்றங்களை வழங்கும் கிரிப்டோகரன்சி.
-
ரிபிள் (Ripple/XRP): உலகளாவிய பரிமாற்றங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி.
கிரிப்டோகரன்சியின் பயன்பாடுகள்:
-
நகல்கள் மற்றும் பரிமாற்றங்கள்: கிரிப்டோகரன்சியில் பண பரிமாற்றங்களை வேகமாகவும் குறைந்த கட்டணங்களுடன் செய்ய முடிகிறது.
-
புத்தகங்கள் மற்றும் செயலி வளர்ச்சி: பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ள ஆராய்ச்சிகள் மற்றும் செயலிகள் மேம்படுத்தப்படுகிறது.
-
நிதி முதலீடு: பிட்காயினின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்புகள் ஏறி இறங்குவதால், அது முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் வழங்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது.
எதிர்காலம்:
கிரிப்டோகரன்சி நிதி உலகில் புதுமைகளை உருவாக்கி வருகிறது, ஆனால் அதோடு பல நாடுகளில் இது சட்டரீதியாக இன்னும் மதிப்பிடப்படவில்லை. எதிர்காலத்தில், கிரிப்டோகரன்சி பெரும்பாலான நாடுகளில் சட்டத்தை உட்படுத்தும் அல்லது அது காப்பாற்றப்படும் பரிமாற்றங்கள் ஆகவே, அதன் நிலையை மாறலாம்.
இந்த முறையில், கிரிப்டோகரன்சி, உலகின் பொருளாதாரங்களை மாற்றி அமைக்க முனைப்புடன் இருக்கிறது!
& crypto வில் நுழைந்து பார்க்க ஆர்வம் இருந்தாலும், பயம் பன்மடங்கு உள்ளது. எனவே இன்றளவில் நான் அதை எட்டிப் பார்க்கவோ, எட்ட இருந்து பார்க்கவோ முயற்சி செய்யவில்லை!
நெல்லைத்தமிழன்:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள்தண்டனை என்ற தீர்ப்பில் கருத்துக்கள் கூறும் வாசகர்கள், தூக்கிலிடவேண்டும் காலை வெட்ட வேண்டும் என்றெல்லாம் விதவிதமாக எழுதுகிறார்கள். அதுபோல கிரிக்கெட்டில் யாரை விலக்கவேண்டும் எடுக்கவேண்டும் என்றெல்லாம் எழுதுகிறார்களே. மனித மனத்தின் வியாதியா இது?
.
# பொது ஊடகம் விரிவடைந்த பின்பு மக்கள் மனம் போனபடி எழுதிப் பரப்பிக் கிளர்ச்சி அடைகிறார்கள். யாரைக் குறித்தும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலை சமூகத்துக்கு நல்லதல்ல. இதை விநோதமாகப் பார்க்கிறவர்கள், பார்த்துக் கவலை அடைபவர்கள் இருக்கிறார்களே அன்றி கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள் இலர்.
= = = = = = = = =
KGG பக்கம்:
ஞாபகம் இருக்கட்டும் - கோடை காலம் தலைப்பிற்கு படங்கள் அனுப்ப கடைசி தேதி மே 19, மாலை ஆறு மணி.
இதுவரை 23 படங்கள் வந்துள்ளன.
பரிசைவிட பங்கேற்பு முக்கியம்.
= = = = = = = =
பாண்டிச்சேரி பயணப் படங்கள், மேலும் சில ..
இன்றைய படங்கள் எல்லாவற்றிற்கும் பொதுத் தலைப்பு : நாம் மூவர்!
வந்த அலை ரசித்து, வரும் அலை பார்த்து ..
அலட்சியமாக அடுத்த அலை எதிர்பார்த்து ..
வா அலையே - தைரியம் இருந்தால் என் இடது காலைத் தொடு!
நிலம், நீர், ஆகாயம், காற்று + வெகு தூரத்தில் அக்னி (சூரியன்)
நரை முடி போல நுரை அலை !
அலைக்கு மேலே அலை வருகிறது ! அலை கரை மீது நிழல்களுக்கு மேலே ஏதோ எழுதியுள்ளது போல / வரைந்தது போல உள்ளது!
நுரைக் குழந்தையை கரையில் விட்டு, திரும்பிச் சென்ற அன்னை அலை ..
அதோ அங்கே ஆர்ப்பரிக்கும் அலை!
இங்கே வந்ததும் அடங்கிவிட்டது !
மீதி படங்கள் பிறகு = = = = = = = = = = =
பிட்காயின் என்றதும் என் மனதில் தோன்றுவது, என் பையனின் அறிவுரை. 2011ல் என்னை பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணுங்க என்றான். அவன் அப்போ ஏழாவது. அதை ஏற்றிருந்தால் அப்போதே பத்து பிட்காயின்களை வாங்கியிருக்கலாம். சின்னப் பையன் என்றிருந்துவிட்டேன். அவனுக்கு நிறைய நாலட்ஜ், நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கு என என்னுடன் பணியாற்றிய சீனியர் என்னிடம் சொன்னான்.
பதிலளிநீக்குஅது சரி.. அதிக காசு வர வர, அது நமக்கு அதிப் பிரச்சனைகளைக் கூடக் கூட்டிவரும். இல்லையா? - புதனுக்கான கேள்வியாக்க் கொள்ளலாம்.
பிட்காயின் பற்றி ஒரு ' குரங்கு 🐒 கதை பகிர நினைத்திருந்தேன். எங்கள் பகுதியில் ஏர்டெல் நெட்வொர்க் ஐந்து மணி நேரம் தடை பட்டதால் அதை பகிர இயலவில்லை.
நீக்குஎனக்கு கடலின் அலைகள் மீது பய உணர்ச்சி உண்டு. வர்கலா சமுத்திர அலை மிக அதிக ஆபத்தானது.
பதிலளிநீக்குஉலகத்திலேயே ஆபத்தில்லாத கடற்கரை பஹ்ரைனில் உள்ள சில கடற்கரை
நீக்குமே ஒன்றாம் தேதி இரண்டாம் தேதி மகனும் மருமகளும் வர்கலா கடற்கரைக்கு சென்று வந்தனர்.
நீக்குஎன்னுடைய பையனும் பேரன்களும் கடல் காதலர்கள்.
நீக்குமூன்று வித்தியாசமான கேள்விகள், ஒரு டஜன் ஒரே மாதிரி படங்கள்... பிட் காயின் பற்றி நிதானமாக படிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி மீண்டும் வருக. 12 படங்களுக்கும் அலைகளும் விளக்கங்களும் வித்தியாசமானவை!
நீக்குதாளிப்பு குரல் .. குறள் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குபிட்காயின் என்பதும் தங்கம் போன்றது தான். விலை இருக்கும், ஆனால் பிரயோஜனப்படாது. நினைத்தவுடன் விற்க முடியாது.
கடலூரில் கடற்கரை ஓரம் தேவனாம்பட்டினத்தில் ஹௌசிங் போர்டு யூனிட்ஸில் வளர்ந்தவன் நான். பொழுபோக்கு கடற்கரை தான் எப்போதும். ஆனால் நீச்சல் தெரியாது. கற்றுக்கொள்ள அனுமதி கிடைக்கவில்லை. தற்போதும் திருவனந்தபுரத்தில் கடற்கரை அதிகம் தூரம் இல்லாத இடத்தில வசிக்கிறேன்.
Jayakumar
கடலூர், நாகை, சென்னை என்று கடல் சார்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்த எனக்கு, பெங்களூரு வந்த பிறகு, கடல் காணா ஏக்கம் சிறிது உண்டு.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரவணா
நீக்குஎனது தளத்தில் நலம் விசாரித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த நன்றி
நலம்தானே?
நீக்குகடல் பிரியர்களுக்கு பாண்டிச்சேரி வித்தியாசமான கடலலைகள் ரசனை தருகின்றன.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் நின்றபடியே தலைநகரில், கடலைப் பார்க்கலாம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
ஆஹா!
நீக்குவா வா கடல் அலையே.....வளரும் நிலவோடு வா!!
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் சூப்பர் கௌ அண்ணா
கீதா
நன்றி கிரிப்டோகரன்சியைப்பற்றி தெறிந்துகொண்டேன்
நீக்குகே. சக்ரபாணி
2 நன்றி, பாராட்டுகளுக்கு!
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாணிடிச்சேரி கடற்கரை படங்கள் எல்லாம் அருமை.
அலைகள் பற்றிய அழகான வரிகள்.
ஆர்பரிக்கும் அலை மிக அருமை.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குபிட்காயின் பற்றிக் கொஞ்சம் புரிஞ்சாலும் ஏனோ கள்ளப்பணம் வைச்சிருக்கும் உணர்வு வரும் போல! நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது.
பதிலளிநீக்குஆம்.
நீக்குதாளிப்புத் தான் உணவில் மணம் கூட்டிச் சாப்பிடத்தூண்டச் செய்யும் என்னளவில். அதிலும் கடுகு தாளிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தது. அதை மட்டும் தனியாகப் பொறுக்கிச் சாப்பிடுவேன். :)
பதிலளிநீக்கு:))))
நீக்குசொந்த அண்ணா, தம்பி, அக்கா, தங்கை உறவெல்லாம் திருமணம் வரை இருக்கும் நெருக்கம் அவரவர் குழந்தைகள் என்றான பின்னர் விரிசல் ஏற்படுவது ஏன்? என்னளவில் சகோதரர், குழந்தைகளுடன் நெருக்கம் காட்டினாலும் அவங்க நெருங்குவது இல்லை. இதுவும் கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு! Wednesday question!
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குஇத்தனைக்கும் அண்ணா பையர், தம்பி பையர், அண்ணா பெண்ணெல்லாம் அதிகமாய் என்னிடமே வளர்ந்தவர்கள். ஆனால் அவரவர் குடும்பம் என்றான பின்னர் ஒரு ஒதுக்கம், விஷயங்களைப் பகிர்வதில் ரகசியம் காத்தல் என்றெல்லாம் இருப்பதும் வருத்தமாய் இருக்கும்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சமயம் செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்படுகின்றனர். உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா?
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குசென்னை உங்களைக் கவர்ந்தது உண்டா? இப்போது சென்னையில் இல்லை என்பதால் வருத்தம் இருக்கா?
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குஎன்னைப் பொறுத்தவரை முதல் முதல் பத்து வயதில் சென்னைக்கு வந்தோம். திருப்பதியில்/திருமலையில் அண்ணா, தம்பி இருவரின் உபநயனம் முடிந்து சென்னை வழியாக மதுரை போனோம், அப்போது சென்னைக்கு வந்தோம். எல்லா இடமும் சுற்றிப் பார்த்தோம். ஆனாலும் மனதில் ஓர் வெறுமை! ஏன்? புரியலை! சீக்கிரமா மதுரை போகணும்னு இருந்தது. அதன் பின்னர் பல முறை சென்னைக்கு வந்து வந்து போயிருக்கேன். பின்னர் கல்யாணம் ஆகிச் சென்னைக்கே வந்தேன். ஆனாலும் மனம் ஈடுபடாமல் தான் இருந்து வந்திருக்கேன்.
பதிலளிநீக்குIntrinsic hominophilia!
நீக்குசென்னையில் எனக்குப் பிடித்தது அக்கம்பக்கம் மனிதர்கள் செய்யும் உதவியும், பழகும் முறையும். என்ன இருந்தாலும் இங்கே அது இல்லை. 54 குடித்தனம் இருக்கும் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் சப்தமே இருக்காது. தாழ்வாரங்கள் எல்லாம் வெறிச். யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். நவராத்திரியில் கூட அழைத்த அன்று மட்டும் தான் வருவாங்க. தினம் தினம் கூப்பிட்டால் அவங்க நம்மை ஒரு மாதிரிப் பார்ப்பாங்க. :)
பதிலளிநீக்குநீங்க தினம் சுண்டல் தராமல், ஒவ்வொரு நாளும் ஒரு இனிப்பு தாங்க, நானே வர்றேன்
நீக்கு:))))
நீக்குசாதாரண கரென்சியே இன்னும் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறது. பிடித்தாலும் நிற்கமாட்டேன் என்கிறது....
பதிலளிநீக்குஆனால், க்ரிப்டோ கரென்ஸி, ஏஐ கரென்சி..என்று போய்க்கொண்டே இருக்கிறது உலகம். போன தூக்கம் போனதுதான்...
அதே, அதே!
நீக்கு