16.5.25

அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும் அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்...

 

2001 ஆம் வருடம், எனது திருமண நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று வெளியானது "பூவெல்லாம் உன் வாசம்" திரைப்படம்.  ரசிக்கத்தக்க ஒரு படம்.

ஜோதிகா நடித்த பாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவை அணுகினார்களாம்.  நல்லவேளையாக அவர்கள் மறுத்துவிட, ஜோதிகா அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்து ரசிக்க வைத்தார்.

இந்தப் படத்துக்கான பாடல்களை வைரமுத்து எழுத, வித்யாசாகர் அருமையாக இசை அமைத்திருந்தார்.  'யுக்தாமுகி' , 'செல்லா உன் வீட்டுக்கு' பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.  இன்று இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்களை இங்கு பகிர்கிறேன்.

முதல் பாடல் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய 'புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து' 

இந்தப் பாடலின் ஆரம்ப இசை, பிறகு பாடகருடன் குழுவினர்சொல்லும் 'டுண்டுண்டாரா டுண்டுண்டாரா   டுண்டுண்டாரா...'...!  நடன அசைவுகளும் ரசிக்க வைக்கும்.

அழகான அமைதியான நடன அசைவுகள்..     நாயகனுக்கு காதல் வந்து விட்டது என்பதை நாயகியிடம் மட்டுமில்லாமல் சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம் சொல்கிறார்..  சுகமான கற்பனை, சுகமான ரசிக்கும்படியான பாடல்..

குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
ஹோய்
{தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)

புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
கிசு-கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து
காதல் வந்ததே

இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து
காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே

குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)

கூவ சொல்லாதே குயிலை நிறுத்து
ஆட சொல்லாதே அலையை நிறுத்து
காய சொல்லாதே நிலவை கொளுத்து… ஓ

முட்டி வழிகின்ற அருவி நிறுத்து
சுற்றி வருகின்ற பூமி நிறுத்து
பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து

இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிடல் வேண்டும்
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்
நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும்
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்

கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ
கை அசைவில் வானம் விழ பெண் அசைவில் நானும் விழ

காதல் வந்ததே காதல் வந்ததே
காதல் வந்ததே காதல் வந்ததே

குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)

நனனனனனனா…….நனனனனனா…..

காதில் வேல் வீசும் கொலுஸை நிறுத்து
சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து
வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து

கண்கள் களவாடும் மின்னல் நிறுத்து
கதறி அழுகின்ற இடியை நிறுத்து
கத்தி எழுகின்ற மலையை நிறுத்து

அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்
இதழ் வழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்
அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும்
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்

சிந்தி விழும் முதல் மழை வந்து விழும் முதல் அலை
எந்திரிக்கும் முதல்வரை சுந்தரிக்கு சொந்தமாகவே

காதல் வந்ததே காதல் வந்ததே
காதல் வந்ததே காதல் வந்ததே

புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
கிசு-கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து
காதல் வந்ததே

இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து
காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே

{தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
ஹோய்
{தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)



ஷங்கர் மகாதேவனுக்கு அமைகின்ற பாடல்கள் எல்லாமே சவாலான பாடல்களாகத்தான் அமையுமா என்று தோன்றும்.  

இதோ, இன்று பகிரும் "தாலாட்டும் காற்றே வா" பாடல், 'வராக நதிக்கரை ஓரம் பாடல், 'உனைக்காணாமல் நான் இங்கு நான் இல்லையே', பாடல்,  'சந்தனத்தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா'  'தனியே தன்னந்தனியே' இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  'உனைக்காணாமல்' பாடல் எல்லாம் இந்தக் கால பாஷையில் 'வேற லெவல்'

இன்றைய பாடலில் அந்த உயரத்தில் ஆரம்பிக்க முடியுமா என்பது ஒரு புறம் இருக்க  'என்னுயிரே நீ வா' என்னும் இடத்தின் உயரம் நினைத்துப் பார்க்க முடியாதது.

இரண்டு பாடல்களிலும் அழகான, இளமையான அஜித், ஜோதிகா.  காட்சியையும் ரசிக்கலாம்.  பாடல்களையும் ரசிக்கலாம்.

ஆராதனா பாடல் மாதிரி சாலையில் ஜீப்பில் பாடி வரும் அஜித்தின் குரல் ரயிலுக்குள் ஜோதிகாவுக்கு கேட்கும் அபத்தம் எல்லாம் மீறி ரசிக்க வைக்கும் பாடல்.  

பாடலில் ரிதம் ரயிலின் தண்டவாள தாளக்கட்டு போல தொடரும் ரசனை.

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா 
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என்
ஜென்மம் வீணென்று போவேனோ 
உன் வண்ண திருமேனி சேராமல் என்
வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி 
போவேனோ
என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா 
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

கண்ணுக்குள் கண் வைத்து கண்இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ

பேச்சிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை முகராமல் போவேனோ

உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய 
மாட்டேனோ  (2)
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் அதை உனக்கு ஒளிபரப்ப மாட்டேனோ
என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா

ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து திருநாள்
காணாமல் செத்தொழிந்து போவேனோ

தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி இலையெல்லாம்
உன் பேரை எழுதாமல் போவேனோ

உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ
உன் கண்ணீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ

 உன் உடலை உயிர் விட்டு போனாலும் என் உயிரை உன்னோடு
பாய்ச்சேனோ  (2)
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் 
வாழ்வேனோ
என் உரிமை நீ தானோ என் உரிமை நீ தானோ

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா 
தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று
போவேனோ 
உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று 
ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ

என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ நீ தானோ

29 கருத்துகள்:

  1. அன்பான வாழ்த்துக்கள்.
    ஆகஸ்ட் 17.. ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் வரும் பொழுதே அடுத்த நாளுக்கு அடுத்த நாள் என்று நினைவில் பூத்து விடும் நல்ல நாள்!
    வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இனியும் காக்க முடியாது, ஆவணி முதல் தேதியே பிக்ஸ் பண்ணுங்கள் என்று சொன்ன நாள்!!!!

      வாங்க ஜீவி ஸார்...வணக்கம்.

      நீக்கு
  2. ப்ரீத்தி ஜிந்தாவை அணுகி அப்புறம் அது மாறினது மட்டும் தான் உங்கள் நினைவிலிருக்கிறதா?
    பாடல்களுக்கு யாரை முதலில் அணுகினார்கள் என்று தெரியவே தெரியாதா? இல்லை, தெரிந்ததைத் தான் மறந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, நீங்கள் நினைப்பது போலில்லை.  அப்போது இவரும் நன்றாக இசை அமைத்துக் கொண்டிருந்தார். 

      நீக்கு
  3. நல்ல ரசனை..

    ஆனாலும்
    மனம் ஒன்றவில்லை

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இன்றைய பாடல்கள் தொகுப்பு நன்றாக உள்ளது. அன்றைய புதிருக்கு இன்று விடை கிடைத்தது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    இந்தப்பாடல்களையும், இசையையும், நடனங்களையும் நானும் அப்போது ரசித்துள்ளேன். அஜீத், ஜோதிகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும். நீங்கள் பகிர்ந்ததில் இரு பாடல்களுமே ஒரே பாடலாக (வீடியோ) உள்ளது. இரண்டாவது பாடலுக்கான வீடியோ வரவில்லையே.. விபரமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா, வணக்கம். 

      //  அன்றைய புதிருக்கு இன்று விடை கிடைத்தது. மனம் நிறைந்த வாழ்த்துகள். //

      ஹா..  ஹா..  ஹா..  நன்றி கமலா அக்கா.


      // இரண்டாவது பாடலுக்கான வீடியோ வரவில்லையே..  //

      ஐயையே..  சரியாகத்தான் இணைத்தேன்..  பார்க்கிறேன்..

      நீக்கு
    2. பார்த்தேன். சரியாகத்தானே அக்கா இருக்கிறது!

      முதல் பாடல் புது மலர் தொட்டுச் செல்லும்

      இரண்டாவது பாடல் தாலாட்டும் காற்றே வா

      சரியாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
    3. ஆம். இப்போது சரியாக உள்ளது. நான் பார்க்கும் போது இரண்டும் முதல் பாடலின் வீடியோவை மட்டுமே காட்டியது. என்ன மர்மமோ? முதல் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். (தொலைக்காட்சியில்தான்.) இரண்டாவதையும் கேட்டு, பார்த்து விட்டு வருகிறேன்

      இந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் அச்சு பதித்தாற் போல வரிகள் மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. ஆனால், இசை, பாடுபவரின் குரல், வித்தியாசமான நடனமங்கள் கவரும். இன்று இரண்டு பாடல்களை பாடிய இருவருக்குமே நல்ல குரல் வளம். அருமையான பாடல்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. இன்றைய பாடல்கள் சூப்பர் கேட்டிருக்கிறேன்.

    இனிய நாளை நினைத்துத்தான் இந்தப் பாடல்பகிர்வுகள் வந்துள்ளன வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. முதல் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் வரிகள் பார்த்ததும் நினைவு வரவில்லை, படமும் டக்கென்று நினைவு வரவில்லை. இந்தப் படம் பார்த்திருக்கிறேன். டீசன்ட் படம். நானும் ஜோ வின் நடிப்பை ரசித்தேன். படம் டைரக்ஷன், கதிர்?

    ஸ்ரீராம் பார்த்தசாரதி நல்ல பாடகர். அதிகம் பாடியதில்லையோ?

    வித்தியாசாகர் இசையும் நன்றாக இருக்கும். இந்தப் பாட்டு மோஹனம் அடிப்படை. ஆனா இடையில் கொஞ்சம் வேறு ஸ்வரம் எட்டிப் பார்க்கிறதோ என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வராக நதிக்கரை ஓரம் பாட்டையும் இதோட மெட்லி பண்ணலாம் போல.

      கீதா

      நீக்கு
    2. வராக நதிக்கரையோடு ஒத்துப் பொங்கறதா, தெரியவில்லை.  ஆனால் பாடல் சுகம்.

      நீக்கு
  7. 'சந்தனத்தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா' //

    ஸ்ரீராம் இந்தப் பாட்டு ஹரிஹரன் பாடினது இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எனது திருமண நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று வெளியானது "பூவெல்லாம் உன் வாசம்" திரைப்படம்.//

    அதான் வெளியான தேதி வருடம் நினைவிருக்கு!!!!!!

    உச்ச ஸ்ருதியில் பாட்டு ....என்னுயிரே அந்த இடத்துல ஸ்ருதி 8---9 க்குப் போய்விடுகிறாரோ!!!!!!! அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துப் பாடியிருப்பார்...ஆனா சங்கர்மஹாதேவனுக்கு இது அசால்டா பண்ணியிருப்பார். ஸ்ரீராம். அவருடைய குரல் ரீச் அசாத்தியம். இப்ப அவர் மகனும் பாடுகிறார். ஆனா அதிகம் கேட்டதில்லை.

    இந்தப் பாட்டும் ரிதம் அருமையா இருக்கும் பாடல் நீங்க சொல்லியிருக்காப்ல தண்டவாள ரிதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஸ்ருதி 8---9 க்குப் போய்விடுகிறாரோ!!!!!!! //

      உண்மையிலேயே அபாரம்.  ஹரிஹரனுக்கு இவ்வளவு உயரம் வராது.

      நீக்கு
  9. ...ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து திருநாள்
    காணாமல் செத்தொழிந்து போவேனோ //

    கேள்வி !

    இரண்டாவது பாடலை எழுதியதும் முத்துவைரந்தானா ?

    பதிலளிநீக்கு
  10. இவர் எழுதிய பாடல்களில் எனக்குப் பிடித்தது:

    அந்திமழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...
    ----
    ----
    சிப்பியில் தப்பிய நித்திளமே
    ரகசிய ராத்திரி புத்தகமே...

    எஸ்பிபி, ஜானகி - என்னமாய்ப் பாடியிருக்கின்றனர்..
    ஹ்ம்.... அது ஒரு காலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பாடல்கள் உண்டு ஏகாந்தன் ஸார்... காதல் ஓவியம் படத்தின் பாடல்கள் உட்பட.

      நீக்கு
  11. இரண்டாவது பாடல் - 'ஆராதனா' ஹிந்தி படத்தின் - Mere sapnon ki rani kab aayegi tu - சீனை மட்டும் காப்பி அடித்து டியூனை மாற்றிய பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சி ஓகே. நானே சொல்லி இருக்கிறேன். பாடல் ஒத்துவராது.

      நீக்கு
  12. இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது.முதல் பாட்டு அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!