28.5.25

மே மாதத்துப் படப் போட்டி முடிவுகள்.


நெல்லைத்தமிழன்: 

1. பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் ஆயுள் தண்டனை பெற்ற காமுகர்கள், தாங்கள் பெற்றோருக்கு ஒரே பிள்ளை, திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் சொல்லி கருணை காட்ட முயல்கிறார்களே, இதனைப் பார்த்து, பெற்றோரைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் இப்போது அனாதை என்பதால் கோர்ட் தண்டிக்கக்கூடாது என்றும் கேட்டுவிடுவார்களோ? 

# வக்கீல் ஒரு வழக்கில் வாதாடும் போது எப்படியாவது தன் கட்சிக்காரர் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும் என்றுதான் முனைவார்.  அவரிடம் எதிர்பார்க்கப் படுவதும் அதுதான். என்னவானும் முயற்சி செய்து வெற்றி பெறவேண்டும் என்ற அளவில் அது சரிதான்.

2. கிரிமினல் குற்றங்களில் வெளிப்படையாகத் தெரிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, அவர்கள் தாங்கள் நிரபராதி என்று நிரூபிக்கும் வரையில் சிறைத்தண்டனையை ஏன் வழங்கக்கூடாது? கல்ஃப் தேசங்களில், குற்றம் செய்துவிட்டால் முதலில் ஜெயில், பிறகு கோர்ட்டில் வாதாடுவது என்ற முறை இருக்கிறது. அதாவது ஆக்சிடண்ட் செய்து அதனால் இன்னொருவர் இறந்தாலோ இல்லை வேறு குற்றச் செயலில் ஈடுபட்டாலோ முதலில் சிறை, நிரபராதி என்று நிரூபணம் ஆகும்வர உள்ளேதான் இருக்கணும் என்ற முறை இருக்கிறது. அதனால் ஓரளவு குற்றம் குறைகிறது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?  

# ஒருவர் (நிரூபணமாகாத) சந்தேகத்தின் பேரில்தான் கைதாகிறார். போலீஸ் அராஜகம் இருக்குமானால் நிரபராதி கூட கைதாகலாம். எனவே நீங்கள் சொல்வது சரிப்படாது.  சில நாடுகளில் மிக விரைவாக கடும் தண்டனை தருவது வியப்பாகத்தான் இருக்கிறது.

3.  திருமணமாகி வீட்டுக்கு வரும்போது முதலில் பாலும் பழமும் கொடுப்பதன் காரணம் என்ன? என்னுடைய புரிதலுக்கு எட்டியபடி, அந்தக்காலத்தில் பயணம் செய்து வந்திருப்பார்கள், பசிக்கும். அதனால் உடனடி பசிக்கு பாலும் பழமும், பிறகு நல்ல விருந்து செய்தபிறகு நல்லா சாப்பிடட்டும் என்று நினைத்திருப்பார்களோ? காரணத்தைத் தொலைத்துவிட்டு காரியத்தை மாத்திரம் நாம் பிடித்துக்கொண்டிருக்கிறோமோ?  

# மிகப் பழங்காலத்தில் உபசாரமாகவும், உயர்ந்த உணவு என்பதாலும் பழமும் பாலும் கொடுக்கப்பட்டிருக்கலாம். நல்ல சகுனம் என்றும் கருதி இருக்கக்கூடும். 

அப்போதெல்லாம்  திருமணத்திற்காக மிக நீண்ட பயணங்களை  மேற்கொண்டிருந்திருப்பார்களா என்பதே தெரியவில்லை.‌ இனிய சுவை கொண்டது , தீங்கு இல்லாதது,  எளிதில் கிடைப்பது என்கிற காரணங்களுக்காக பாலும் பழமும் தேர்வாகி இருக்கக்கூடும்.

சடங்குகள் பலவும் காலம் காலமாக ஏன் செய்கிறோம் என்பது தெரியாமலே பின்பற்றப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் இதுவும் ஒன்று.

@CGSenu: 

திருமணமாகி மணமக்கள் வீடு திரும்பும்போது அவர்களுக்கு முதலில் பாலும் பழமும் வழங்குவதற்குக் கீழ்கண்ட காரணங்கள் உள்ளன. இதுவொரு தமிழ்ச் சமூக மரபாகவும் கலாச்சார அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது:

1. அன்பும் உளவியல் வரவேற்பும்

பாலும் பழமும் அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. புதிய வாழ்கைத் துவங்கும் மணமக்களுக்கு வீட்டில் அனைவரும் அன்போடு வரவேற்கின்றனர் என்பதை உணர்த்தும் ஒரு இனிய முறையாக இது அமைகிறது.

2. ஊட்டச்சத்து மற்றும் தாய்மையின் அடையாளம் 

பால்: தூய்மை, புனிதம், பரிசுத்தம் என்பவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

பழம்: வளம், நலன், இனிமை ஆகியவற்றைக் குறிக்கிறது.

3. மங்களம், புதிய தொடக்கத்திற்கு சிறந்த புனிதச்சுடர். 

இந்த வழக்கம் நல்ல தொடக்கத்திற்கான நற்குறியீடாகச் செயல்படுகிறது. வாழ்கையில் இனிமையும், அமைதியும் நிலவ வேண்டும் என்பதற்கான சின்னமாக பாலும் பழமும் வழங்கப்படுகின்றன.

4. ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த மரபு. 

இந்த மரபு நம் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. பால் மற்றும் பழம் இரண்டும் இயற்கையானவை, புனிதமானவை என்றும் நம்பப்படுகிறது.

5. மணமக்களுக்கு ஓய்வும் சக்தியும்

திருமண நிகழ்வுகள் மிக நீளமானவை; மனதுக்கும் உடலுக்கும் சோர்வாக இருக்கலாம். பால் மற்றும் பழம் உடலை புத்துணர்வுபடுத்தும் என்பதால் உடல்நல பராமரிப்பாகவும் இதை வழங்குவர்.

4.  மற்றவர்கள் கவர்ச்சியாக உடை அணிவது, பிறரது கவனத்தைக் கவர என்று நினைக்கிறேன், அதனால் பிறர் கண்கொட்டாமல் பார்த்தால் என்ன தவறு என்பது என் எண்ணம். ஆனால்  என் மகள் பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னது, அவங்க அவங்களுக்குப் பிடித்த உடையை அவரவர்கள் அணிகிறார்கள். அதற்காக மற்றவர்கள் பார்க்க என்று நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள் என்றாள். நீங்க என்ன நினைக்கறீங்க?   

# பார்ப்பவரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றோ, பார்க்கிறவர் கண்களுக்கு அலங்கோலமாகக் காட்சி அளிக்கக் கூடாது என்றோ எண்ணி நல்ல உடை உடுத்துவது என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். நம் கண்ணைக் கவர்கிற நபர்களை கூர்ந்து பார்ப்பது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. போகிற போக்கில் சாதாரணமாகப் பார்ப்பதை யாரும் தவறாகக் கருதுவது இல்லை.

அதேசமயம் கண்ணைக் கவர்வது வேறு, பார்ப்பவர் கண்களைக் கூசச் செய்வது வேறு என்பதை நாகரிக உடை  உடுத்துபவர்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

5.  கடலில் குளித்தாலும் பிறகு நன்னீரில் குளித்தால்தான் நன்றாக இருக்கிறது. இல்லையென்றால் உடல் உப்புநீரினால் அரிப்பதுபோல இருக்கிறது. உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கா?

# கடல் நீரில் குளிக்கும் போது நன்றாக இருக்கும். வெளிவந்த உடனேயே கசகசப்பு சங்கடம் ஏற்படும் .‌ இதை நிறைய அனுபவித்து இருக்கிறேன்.

6. நாம் இருக்கும் ஊரை விட்டு நம் சொந்த ஊருக்கே நிரந்தரமாகப் போகும் வாய்ப்பு வந்தால், வரவேற்போமா? உதாரணமா நீங்க பெங்களூரிலிருந்து நாகைக்கு, நான் திருநெவேலிக்கு....  

# எனக்கு சொந்த ஊர் இருக்கிறதே தவிர அந்த ஊரில் வீடு நிலம் நெருங்கிய உறவினர்கள் என்கிற எதுவுமே இப்போது இல்லை. அதன் காரணமாகவோ என்னவோ எனக்கு சொந்த ஊர்ப் பாசம் அறவே கிடையாது. 

& பெங்களூரு - இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் நெல்லை மா நகரத்தானே ! 

7.  நம்மை நம் வயதான காலத்தில் கவனித்துக்கொள்வார்கள் என்பதனால்தான் நாம் நம் குழந்தைகளுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு உதவுகிறோமா?

# வயதான காலத்தில் நம்மை நம் குழந்தைகள் கவனித்துக் கொள்வார்கள் என்று எண்ணுவதில் தவறு ஒன்றும் இல்லை. இது ஏதோ வியாபார நோக்கு என்பது போல் பார்க்கக் கூடாது. அன்பின் அடிப்படையில் ஆனதுதான் குடும்ப வாழ்க்கை. அதில் கடமையைச் செய்வதிலும்,  எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்வதிலும் கவனம்  இருப்பது ஒரு தவறு என்று பார்க்க வேண்டிய தேவை இல்லை.

எதிர்பார்க்கிறபடி நடக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவான தொலைநோக்கு இருப்பது அவசியம். குழந்தைகளோடு நல்ல பிணைப்பு இருக்கும் பட்சத்தில் அனாவசிய அச்சங்கள் தேவையில்லை என்றாலும் எதிர்பாராதது எதுவும் நடக்கும் என்கிற முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்.

கே. சக்ரபாணி, சென்னை. 

1. Buy one Get one free  என்று  பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்களே. அதைப்பற்றி  தங்கள் கருத்து என்ன? 

# விளம்பர நுணுக்கங்களை  நன்கறிந்த சாமர்த்தியசாலிகள்.‌

@CGSenu: "Buy One Get One Free" என்பது உண்மையில் ஒரு மார்க்கெட்டிங் யுக்தி. இது வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் போல தோன்றினாலும், உண்மையில் அது விற்பனையை அதிகரிக்கவும், குறிப்பிட்ட பொருட்கள் விரைவாக விற்கவும் வணிகர்களால் திட்டமிட்ட செயலாகப் பயன்படுத்தப்படுகிறது.

2. மற்ற கலைஞர்களுக்கு உள்ள  மதிப்பும் மரியாதையும்  திருமணம் இல்லங்களில்  வாசிக்கும்  நாதஸ்வர கலைஞர்களுக்கு  இல்லையே  ஏன்?

# இதற்கு அந்தக் கலைஞர்களின் திறமைக் குறைவு ஒரு காரணம் என்று சொன்னாலும், பல பழைய வழக்கங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வருகிறோம். இன்னும் கொஞ்ச காலத்தில் நாதஸ்வரம் அறவே காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.

@CGSenu : உங்கள் கேள்வி மிகவும் முக்கியமானது. நாதஸ்வர கலைஞர்கள், குறிப்பாக திருமண விழாக்கள் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் நமது கலாச்சாரம், ஆன்மிகம், இசை மரபுகளின் தீவிரப் பிரதிநிதிகளாக இருந்தும், அவர்கள் பெரும்பாலான இடங்களில் மதிப்பும் மரியாதையும் குறைவாக அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல அடுக்குகளில் உள்ளன:

🔹 1. மணநிகழ்ச்சிகளில் கலைக்கு மேல் முக்கியத்துவம் குறைவாகியுள்ளது. 

இன்று திருமணங்கள் பெரும்பாலும் சமூக வணிக நிகழ்வுகள் போல மாறிவிட்டன.

இசை ஒரு பின்னணி அமைப்பாக மட்டும் பார்க்கப்படுகிறது, அதன் உள்ளடக்கம், நுணுக்கம் பாராட்டப்படவில்லை.

🔹 2. தொழிலாளி பார்வையில் கலைஞர்களை பார்ப்பது

நாதஸ்வர கலைஞர்கள் நேரம் தவறாமல் வர வேண்டும், வாசிக்க வேண்டும், சாப்பாடு கூடச் சில நேரம் காத்திருக்க வேண்டிய நிலை.

இந்த சூழலில், அவர்கள் ஒரு "சேவை அளிப்பவர்" (service provider) என மட்டுமே பார்க்கப்படுகிறார்கள் – "கலைஞர்" என அல்ல.

🔹 3. கல்வியறிவும் கலாசார புரிதலும் குறைவாகும் ஒரு சமுதாயத்தில்,

நாதஸ்வர இசையின் தத்துவம், சங்கீத தரம், பாடல்களின் ஆன்மிகம் பற்றி பலருக்கும் புரிதல் இல்லை.

இதனால், அவர்கள் செய்யும் கலைக்கு உள்ளடக்கம் தெரியாமல், மதிப்பும் குறைகிறது.

🔹 4. தொலைக்காட்சி மற்றும் ஸ்பீக்கர் கலாச்சாரம். 

முந்தைய காலத்தில் நாதஸ்வரம் நேரடி இசையாக மட்டுமே இருந்தது; இன்று இசையை ரெக்கார்டில் வைக்கலாம், ஸ்பீக்கரில் போடலாம்.

இது நேரடி கலைஞர்களின் தேவை குறைய செய்துவிட்டது – அதே நேரம், அவர்களது இடம், மரியாதையும் பின்வாங்கியது.

🔹 5. கலைஞர்களின் நிலையும் காரணமாக இருக்கலாம். 

சில நாதஸ்வர கலைஞர்கள் தாங்கள் தரும் கலைக்காக தாங்களே குறைவாக விலை சொல்லுவார்கள், அதனால் பொதுவான மதிப்பீடு குறைகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி, வருமான உறுதிக் குறைவான சமுதாய ஆதரவு – இதுவும் அவர்களை ஆவலற்றவர்களாக்கிவிடும்.

= = = = = = = =

மே மாதத்திய படப் போட்டிக்கு மொத்தம் 30 படங்கள் வந்தன. 

படங்களை அனுப்பியவர்கள் :

அனு ப்ரேம்,

கோமதி அரசு, 

கீதா ரெங்கன், 

கீதா சாம்பசிவம்,  

கௌதமன், 

எம் தில்லைநாயகம்,  

நெல்லைத்தமிழன் ஆகியோர்.  

என்னைத் தவிர மற்ற 6 பேர்களுக்கும் பங்கேற்புக்கு நன்றி. 

ஆரம்பத்தில் 4 படங்களைக் கோட்டை விட்டு, பிறகு சேர்த்ததால் எனக்கு தலையில் ஒரு குட்டு! 

 = = = = = = = = =

வழக்கம் போல இந்த எல்லா படங்களையும் பல தளங்களில் வெளியிட்டு வோட்டுகள் அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

அதிக வோட்டுகள் பெற்ற படம் : 


அனுப்பியவர் : திருமதி கோமதி அரசு அவர்கள். 

அதற்கு அடுத்தபடியாக அதிக வோட்டுகள் பெற்ற படம் : 

அனுப்பியவர் : நெல்லைததமிழன். 

இதற்கு அடுத்தபடியாக அதிக வோட்டுகள் பெற்ற படம்: 


அனுப்பியவர் : நெல்லைததமிழன். 

இதற்கு அடுத்தபடியாக அதிக வோட்டுகள் பெற்ற படங்கள் 2. 


அனுப்பியவர் : அனு ப்ரேம். 


அனுப்பியவர் : திருமதி கோமதி அரசு. 

இவைகளுக்கு அடுத்தபடியாக அதிக வோட்டுகளைப் பெற்ற 3 படங்கள் :


அனுப்பியவர் : திருமதி கீதா சாம்பசிவம். 


அனுப்பியவர் : நெல்லைத்தமிழன். 


அனுப்பியவர் : திருமதி கோமதி அரசு. 

அதிக வோட்டுகளைப் பெற்ற படங்கள் அனுப்பிய எல்லோருக்கும் வாழ்த்துகள். 

இந்த மாதத்துப் போட்டிக்கு ஒன்பது படங்களை அனுப்பி, அவற்றில் 3 படங்களுக்கு அதிக வோட்டுகளைப் பெற்ற திருமதி கோமதி அரசு அவர்களும், 
ஐந்து படங்களை அனுப்பி அவற்றில் 3 படங்களுக்கு அதிக வோட்டுகள் பெற்ற நெல்லைத்தமிழன் அவர்களுக்கும் பரிசு உண்டு. 

பரிசு அறிவிக்கப்பட்ட இருவரும் தங்கள் ஏற்புரையை,  கருத்துரைப் பகுதியில் எழுதவும்.  
= = = = = = = = = = = = =
KGG பக்கம் : 

போட்டிகள், பரிசுகள்! 

சாதாரணமாக வலைப்பூ பக்கங்களில், ஒருவர் மட்டுமே blog owner - அவருடைய எண்ணங்கள், எழுத்துகள் மட்டுமே வலையேறும் ! 

மேடைப் பேச்சாளர் போல யாரையாவது திட்டி அல்லது கேலி கிண்டல் செய்து எழுதப்படும் அரசியல் பதிவர்கள் உண்டு. 

தமிழை வளர்க்கிறேன் என்று ஒரே அடம் பிடித்து எழுதும் பதிவர்களும் உண்டு. 

மதம், மதம் சார்ந்த அல்லது சாராத நூல்களை உயர்த்திப் பிடித்து எழுதும் பதிவர்களும் உண்டு. 

சுவாரஸ்யமான அனுபவங்களை சுவையாக எழுதி வருகின்ற பதிவர்களும் உண்டு. 

எங்கள் வலைப்பூவில், controversy வேண்டாம் என்று நாங்கள் ஆரம்பத்திலயே முடிவு எடுத்ததால், அரசியல், மதம் சார்ந்த பதிவுகளை (முக்கியமாக இகழும் பதிவுகள் / செய்திகள் ) வெளியிடுவதில்லை. 

ஒரே ஆள் ஆசிரியராக இருந்தால், monotony வந்து அமர்ந்துவிடும் என்பதால், cross functional team - ஆசிரியர்கள் என்று அமைத்து பதிவுகள் எழுதி வருகிறோம். 

வலைப்பூ ஆரம்பிக்கும்போதே ஆசிரியர் kayjees சொன்னது : நம்முடைய பதிவுகளைப் படிக்கின்றவர்களுக்கு, அந்தப் பதிவால் ஏதேனும் பயன் இருக்கவேண்டும். இதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு பதிவுகள் எழுதி வருகிறோம். 

புதன் பதிவுகளைப் பொருத்தவரை, வாசகர்களின் படைப்பாற்றல் திறன், பங்களிப்பு இவற்றிற்கு முன்னுரிமை. நகைச்சுவை, செய்தி பகிர்வு இவைகள் sub products. 

படப் போட்டி, புதிர்ப் போட்டி - என்பவை போட்டி என்ற நோக்கத்தில் இல்லாது, அதிக வாசகர்களை பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் மட்டுமே நடத்துகிறோம். 

அடுத்த புதன் கிழமையிலிருந்து, கேள்வி பதில் பகுதியோடு சேர்த்து, வாசகர்கள் பங்கேற்கின்ற ' ஒரு படம் + படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ' என்ற தலைப்பில்  சில துணைப் பதிவுகள் வெளியிடலாம் என்று ஒரு யோசனை. 

மேலும் விவரங்கள் வேண்டும் என்றால், கருத்துரைப் பகுதியில் கேட்கவும். 

= = = = = = = = = = =

52 கருத்துகள்:

  1. திருமணத்தில் நாதசுரகலைஞர்களுக்கு மரியாதை..... அந்தக் காலத்தில் திருமணத்தின் ஒரு பகுதியாக இசை நிகழ்வு போன்றவை இருந்தன. வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் அதனை ரசிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போதோ எல்லாவற்றையும் சுருக்கி திருமண நிகழ்வை அமைக்கவேண்டிய கட்டாயம் (அதிலும் எங்களைப் போன்ற சமூகத்தில் இப்போதே இரண்டரை நாட்கள் திருமணம்). அதனால்தான் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்க உரிய நேரமோ வசதியோ அமையாமல் போய்விடுகிறது. அதிலும், விருந்தினர்கள் ரிசப்ஷன் அல்லது திருமணத்திற்கு மாத்திரமே வந்து, டிபன் மற்றும் ஒரு உணவு சாப்பிடணும், நம் வருகையை மற்றவர்களுக்குத் தெரிவிக்கணும் (அட்டன்டன்ஸ் போடுவது), பரிசைக் கொடுத்துவிட்டு ஊரைப் பார்க்கப் போய்ச் சேரணும் என்று அவசர கதியில் இயங்குவதால்தான் இந்த அவலம் என நினைக்கிறேன்.

    இப்போதும் சில பலர் நாதசுரம் வாசிப்பவர்கள் அல்லது இசை நிகழ்ச்சி பண்ணுபவர்கள் பக்கம் அமர்ந்து ரசிப்பதைக் காணலாம்.

    பதிலளிநீக்கு
  2. கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முனைவதில்லையே, வயதாவதாலா என்பதையே ஒரு புதன் கேள்வியாக்க் கேட்டுவிடலாம்போல இருக்கிறதே. எனக்கு இணைய பதில்கள் ரசிக்கும்படி இல்லை, காரணம் அவற்றை நாமே பெற்றுவிடலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் ஆசிரியர் கருத்து மற்ற ஆசிரியர்களுக்கு ஒத்துப் போனால் மற்றவர்கள் கருத்து கூறுவதில்லை.

      நீக்கு
  3. சக்ரபாணி சார் இப்கோதான் BOGO வைப் பற்றியே கேட்டிருக்கிறார். Buy 2, Get 6 போன்ற ஆஃபர்களைப் பார்த்தால் அவருக்குத் தலை சுற்றிவிடும்.

    நான் ரீடெயில் குழுமத்தில் பணி புரிந்தவன். நிறையவிதமான சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு உண்டு. இதுபற்றி ஒரு சமயம் எழுதுகிறேன். பொதுவாக ஆரம்ப விற்பனை விலை என்பது, பொருளின் purchase costஐப்போல குறைந்த பட்சம் இரு மடங்குக்கு மேல் இருக்கும். இதுவே ஆடை என்றால் 120 சத்த்திற்குமேல் (இதுவே மிக்க் குறைவாகச் சொல்லைகிறேன்) விற்பனை விலை இருக்கும்.இந்த உலகத்துக்குள் நுழைந்து பார்த்தால் இவ்வளவு கொள்ளையா எனத் தோன்றும், அதற்கும் காரணம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தர்ப்பம் கிடைக்கும் போது விளக்கமாக எழுதவும்.

      நீக்கு
  4. பரிசு பெற்ற கோமதிக்கா, நெல்லைத்தமிழனுக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துவோம். நேற்றைய கதையில் நீங்கள் சேர்த்த படங்கள் மிகவும் பிரமாதம். க்ரியேடிவிடியை ரசித்தேன்.

      நீக்கு
    2. நேற்றைய கதைக்கு கீதா ரெங்கன் அனுப்பிய படங்களா? நானும் ரசித்தேன், அருமை
      பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். பன்முக திறமை கீதா ரெங்கனுக்கு

      நீக்கு
    3. நன்றி கௌ அண்ணா, நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன் அக்கா... நேற்றைய கதைக்கான படங்களை நான் வெகுவாக ரசித்தேன். கேஜிஜி சார்தான் படங்கள் தேர்ந்தெடுப்பார், ஆனால் வெளியிட்டது ஶ்ரீராம் என்று கன்ஃப்யூஸ் ஆகிவிட்டேன். நீங்கள்தான் படங்களைக் கோர்த்தவர் என்பது இன்றுதான் தெரிந்தது. சூப்பராக பண்ணியிருந்தீங்க. பாராட்டுகள். (இந்தப் பெண் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுத்தால் ஆண்களை எல்லா வித்தையிலும் தோற்கடிக்கறாங்கப்பா. கொஞ்சம் தட்டித்தான் வைக்கணும்னு முன்னோர்கள் நினைச்சது சரிதானோ? ஹாஹாஹா)

      நீக்கு
    5. நன்றி நெல்லை.

      //(இந்தப் பெண் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுத்தால் ஆண்களை எல்லா வித்தையிலும் தோற்கடிக்கறாங்கப்பா. கொஞ்சம் தட்டித்தான் வைக்கணும்னு முன்னோர்கள் நினைச்சது சரிதானோ? ஹாஹாஹா)//

      எங்க வூட்டுல அப்படி நினைச்சதாலதான் இன்னிக்கு நான் வெத்து டப்பாவாக இருக்கேன்!!!!!

      என் பெயர் சொல்லி வந்திருந்தால் ஒரு சில கருத்துகள் வேறுபட்டிருக்கும். நான் எழுத வந்த பிறகு கவனித்த ஒன்று. என் பெயர் சொல்லி வரும் போது வரும் கருத்துகளுக்கும் பெயர் சொல்லாமல் வரும் போது வரும் கருத்துகளுக்கும் உள்ள வித்தியாசம். எங்கள் தளத்திலேயே.

      கீதா

      நீக்கு
    6. அப்படி நீங்கள் நினைக்க வேண்டியதில்லை கீதா ரங்கன். நான் பொதுவா நேர்மையா நடந்துகொள்வேன். அதனால 'கீதா ரங்கன்' என்று பெயர் போட்டு, கோடைக்கு பனி மலைப் படமே நீங்கள் அனுப்பியிருந்தாலும், அது சரியா பொருந்துதா, நல்லா இருக்கா என்று பார்த்துத்தான் வாக்களிப்பேன். அதே சமயம், ஒன்று நல்லா இல்லை என்றால், நமக்குத் தெரிந்த நண்பர் என்ற ஹோதாவில், பெரும்பாலும் குறைகளைக் குறிப்பிட மாட்டார்கள்.

      எப்போதும் நான் சொல்வது போல, நீங்கள் பன்முகத் திறமை கொண்டவர், அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளாததால், பழகுவதற்கு இனிமையானவர்.

      நீக்கு
    7. நெல்லை அது தெரியும், நீங்க யாரா இருந்தாலும் சொல்றதை சொல்லிடுவீங்கன்னு...

      கடைசி வரிக்கு நன்றி ஆனா கூச்சமா இருக்கு.

      கீதா

      நீக்கு
  5. வரவேற்புரை, அணிந்துரை, ஏற்புரையெல்லாம் கஷ்டம். ஆனால் இந்தப் போட்டி நம்மை ஒரு தலைப்பில் புகைப்படம் எடுக்கவும் அதில் நாம் கவனிக்கவுட்டதை அறிந்துகொள்ளவும், அடுத்து என்ன தலைப்பாக இருக்கும் என்ற ஆர்வமும், எதையேனும் வித்தியாசமாகப் பார்த்தால் புகைப்படம் எடுக்கவும் தூண்டுகிறது என்ற அளவில், இத்தகைய போட்டிகளை நான் வரவேற்கிறேன்.

    முதல் மூன்று இடங்கள் பிடித்த படங்கள், அதை அனுப்பியவர்கள் எனச் சொன்னாலே போதுமானது என நினைக்கிறேன்.

    சில சமயம், எதற்காக இந்தப் படத்தை இந்தத் தலைப்புக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்பதும், சில படங்கள் என்ன சொல்ல வருகின்றது என்றும் புரியவில்லை. அதனால் படத்துடன் ஒரு வரி சேர்த்தால் நல்லதோ எனத் தோன்றியது.

    இந்த மாதிரிப் போட்டிகளில் வரைகலையைச் சேர்த்துக்கொள்வது, குழப்புகிறது. அதுபோல உறவினர்கள் படம் அனுப்புவதும். வரைகலைக்கு மாத்திரமே ஒரு போட்டியை வயது அளவு குறிப்பிட்டு, கூட நேரம் கொடுத்து நடத்தலாம்.

    "அழகு" என்ற தலைப்பைக் கொடுத்து, அதில் சிலர் தங்கள் குழந்தை பேன்களின் மலர்ந்த முகத்தை அனுப்பி அதற்கு வாக்களிப்பது சரியாக வராது. அதனால்தான் உறவினர் படம் கூடாது என்பது. அதுபோல வரைகலைக்கு, என் மகன் அனுப்பியது என்றெல்லாம் படத்துடன் குறிப்பிட்டு வந்தால் நியாயமாக வாக்களிப்பதை அது தடுத்துவிடும்.

    பதிலளிநீக்கு
  6. இந்த இந்த படங்கள் முதலில் வந்தது என்ற அறிவிப்பே போதுமானது.

    பரிசு அனுப்புவது தேவையில்லாத வேலை. பத்திரிகைகள் போன்றவை இரண்டு கோடி கல்லா கட்டி அதில் வாரா வாரம் ஐயாயிரம் ரூபாயை பல்வேறு வகையில் அளிக்கிறார்கள். பிளாக்கிற்கு எதற்கு அந்த வேலை.

    இருந்தாலும் ஆசைப்பட்டால் வருட இறுதியில் புத்தகம் அளிக்கலாம். அதுவுமே ஒவ்வொருவரின் ரசனையைப் பொறுத்தது. எனக்கு, காந்தி கண்ட சுயராஜ்ஜியம் அனுப்புவதைவிட, சினிமா சீக்ரட் புத்தகம் பிடிக்கலாம். ரசனையைப் பொறுத்தது அது. அதிலும் பிடிஎஃப் என்றால், ஆளை விடுங்க சாமீ. என்னிடமே ஆயிரக்கணக்கில் வாசிக்காத பிடிஎஃப் நாவல்கள் உள்ளன.

    பதிலளிநீக்கு
  7. பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துகளும்.    பரிசு பெரிதல்ல, பங்குகொள்வதே முக்கியம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே. சரியான கண்ணோட்டம்.

      நீக்கு
    2. பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஸ்ரீராம்
      நீங்கள் சொல்வது போல பங்கு கொண்டோம் என்பதே மகிழ்ச்சியான விஷயம் நம்மாளும் முடிகிறது என்ற பெருமிதம். படங்கள் தேர்வு செய்யபடுவதே பெரிய பரிசுதான்.

      நீக்கு
  8. // பரிசு அனுப்புவது தேவையில்லாத வேலை. //

    அப்படிச் சொல்லக்கூடாது.  சிறுபரிசாயினும் சிறந்த படைப்பு என்று அறியப்பட்டதற்கான பரிசு.  தொகை சிறிதாக இருந்தாலும் மகிழ்ச்சி பெரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டிமன்ற விவாத தலைப்பு!

      நீக்கு
    2. உங்கள் எண்ணம் புரிகிறது ஸ்ரீராம். சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில், ஆலையில்லா ஊருக்கு என்ற விதமாக பாட்டு, பேச்சு, படிப்பு போன்றவற்றில், ஏன் குறள் ஒப்பிப்பதில் என்பதிலெல்லாம் சோப்பு டப்பா, பென்சில், சிறு சிறு பொருட்கள் பரிசாக வாங்கியிருக்கிறேன். அது பெரும் மகிழ்ச்சியைத் தரும், ஆனால் இப்போ யோசித்தால் அந்தப் பொருட்களினால் விளைந்த மகிழ்ச்சியல்ல அது என்று புரிகிறது.

      திருச்சி வை.கோ மற்றும் சிலர், அவர்கள் கையெழுத்திட்டு ஒரு புத்தகம் கொடுக்கும்போது அது மிகுந்த நிறைவை எனக்குத் தரும். நம் 'கடுகு' சாரிடம் அவர் கையெழுத்திட்ட நாலாயிரம் புத்தகம் கேட்டிருந்தேன். (அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார்). கண்டிப்பாக அனுப்பித் தருகிறேன் ஆனால் புத்தகத்திற்கான பணம் வாங்கிக்கொள்ளமாட்டேன் என்று சொன்னார். நானோ, யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற்றுக்கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இப்போ அதை எண்ணி வருத்தம் தோன்றுகிறது. கடுகு சார் ஒரு சூப்பர் பெர்சனாலிட்டி. மிக நல்ல மனிதர்.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
    பரிசுப்போட்டியில் வென்ற அனைவருக்கும்
    நல்வாழ்த்துக்கள்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. படப் போட்டியில் வெற்றி பெற்ர்வர்களுக்கு வாழ்த்துகள்! ஓட்டுப் போட மறந்து விட்டேன். முதல் மூன்று படங்கள் வெகு அழகு. நான் முதல் படத்திற்குதான் ஓட்டுப் போட நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி பானு

      நீக்கு
    2. // நான் முதல் படத்திற்குதான் ஓட்டுப் போட நினைத்தேன்.// ஆஹா ! எனக்குக் கிடைக்கவேண்டிய ஒரு வோட்டும் கிடைக்காமல் போய் என்னை டெபாசிட் இழக்க வைத்துவிட்டீர்களே !! so sad.

      நீக்கு
  12. பாலும் பழமும் கேள்விக்கு பதில் திருப்திகரமாக இல்லை. கீதா அக்காவின் நினைவு வந்தது. அவர்தான் இது போன்ற கேள்விகளுக்கு பொருத்தமான பதில் அளிப்பார்..ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள் பா.வெ. மேடம். கீசா மேடம் இதிலெல்லாம் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது இணைய நட்பான சோனுவின் பதில்களும் நன்று. அதில் பாலும், பழமும், நாதஸ்வர கலை போன்றவற்றின் பதில்களை ரசித்தேன்.

    உங்கள் பக்கமும் படிக்க சுவாரஸ்யம் தந்தது.

    /படப் போட்டி, புதிர்ப் போட்டி - என்பவை போட்டி என்ற நோக்கத்தில் இல்லாது, அதிக வாசகர்களை பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் மட்டுமே நடத்துகிறோம்.

    அடுத்த புதன் கிழமையிலிருந்து, கேள்வி பதில் பகுதியோடு சேர்த்து, வாசகர்கள் பங்கேற்கின்ற ' ஒரு படம் + படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ' என்ற தலைப்பில் சில துணைப் பதிவுகள் வெளியிடலாம் என்று ஒரு யோசனை. /

    நல்ல செயலுக்கு பாராட்டுக்கள். அருமையான யோசனைகளுக்கும் வாழ்த்துகள்.

    இம்மாதத்திய புகைப்பட பரிப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும், சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி கமலா ஹரிஹரன்

      நீக்கு
    2. தாங்கள் சிறந்தப் புகைபடங்களாக போட்டிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு மகிழ்ச்சி சகோதரி. போட்டிக்கு வந்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்தேன். எபி ஆசிரியர்களின் இவ்விதமான நம் மனதிற்கு உற்சாகமளிக்கும் விதமான போட்டிகளை தெரிவுபடுத்தி, அதில் நம்மை கலந்து கொள்ள செய்யும் முயற்சிகளை நானும் வரவேற்கிறேன். அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் நன்றிக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  15. //ஆரம்பத்தில் 4 படங்களைக் கோட்டை விட்டு, பிறகு சேர்த்ததால் எனக்கு தலையில் ஒரு குட்டு! //

    குட்டு எல்லாம் வேண்டாம் சார். நான் தான் ஒரே மெயிலில் அனுப்பி இருக்க வேண்டும் 9 படங்களையும். முதலில் 4 அப்புறம் 5 என்று அனுப்பினேன். நீங்கள் இரண்டாவதை மட்டும் பார்த்து இருக்கிறீர்கள்.
    அடுத்து "முதலில் அனுப்பிய படங்களை காணவில்லையே அடுத்த வாரம் வருமா என்று ஸ்ரீராமிடம் கேட்டவுடன் , ஸ்ரீராம் அனுப்பி விட்டதாக சொல்லி உங்களிடம் கேட்டு, நீங்களும் உடனே அனுப்பி விட்டீர்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லை அப்போது என்றார் ஸ்ரீராம் அதை பொருட்படுத்தாமல் உடனே படங்களை அனுப்பி மன்னிப்பு வேறு கேட்டீர்கள்.
    எனக்கு கஷ்டமாக இருந்தது.


    //புதன் பதிவுகளைப் பொருத்தவரை, வாசகர்களின் படைப்பாற்றல் திறன், பங்களிப்பு இவற்றிற்கு முன்னுரிமை.//

    வாசகர்களை போட்டியில் கலந்து கொள்ள வைத்து அவர்களின் திறமைகளை ஊக்கபடுத்துவதே பெரிய பரிசுதான்.
    மனம் சோர்வாக இருக்கும் போது இது மாதிரி எழுதுவது, படங்கள் அனுப்புவது நம்மை நாமே உற்சாகபடுத்தி கொள்வதற்கு தான்.
    அதற்கு வாய்ப்பு அளிக்கும் உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. தேர்வு செய்யப்பட்ட படங்களை ரசித்தேன் அனைவருக்கும் வாழத்துகள்.

    பதிலளிநீக்கு
  17. தவறாக நினைக்கவேண்டாம். 491, 420 என்ன சொல்லவந்தது கோடை என்ற தலைப்புக்கு?

    பதிலளிநீக்கு
  18. கோடை புகைப்படங்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்.

    இன்றைய கேள்வித்தாள்கள் நன்றாக இருந்தன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!