8.5.25

முனைமுறியாமல் கடைசி எழுத்து தேஞ்சி கீழே விழாமல் தெளிவாக பேசுவீங்க

 

பானகமும் நீர்மோரும் எனக்கு நாகப்பட்டினத்தில்தான் முதல் அறிமுகம்.

தஞ்சையிலிருந்து ஒரு கோடை விடுமுறையில் நாகை சென்றோம் .  அம்மம்மாவும் அம்மப்பாவும் அங்கிருந்தார்கள்.  அம்மம்மா மொறுமொறு தோசை(யிலும்) ஸ்பெஷலிஸ்ட். என்னைக் முதலில் கவர்ந்தது அதுதான்.  அந்நாட்களில் குளிர்சாதனப்பெட்டி (எங்கள் வீட்டில்) கிடையாது என்பதால் தோசை மாவு இரண்டு நாட்களில் புளித்து விடும்.  அந்த புளித்த தோசை (அப்போது) எனக்குப் பிடிக்கும்.

இப்போது புளித்த தோசை கிடைப்பதில்லை.  காரணம் அம்மா இல்லை! வீட்டில் ஃபிரிஜ் இருக்கிறது! அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.  தோசை மாவை கொஞ்சம் தனியாக எடுத்து வெளியில் வைக்கச்சொல்லி புளிப்பு தோசை வார்க்கச் சொல்லி சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று.  இப்பவும் அப்ப போலவே பிடிக்குமா என்று சோதிக்க வேண்டும்!

சிறுவயது விருப்பம் இப்போதும் இருக்குமா என்று தெரியவில்லை.  சில விருப்பசுவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.  சிறுவயதில் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் அல்லது கறி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  இப்போதும் அந்த நினைவில் எனக்கு சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் இப்போது அதில் அவ்வளவு விருப்பம் தோன்றுவதில்லை.

பானகம் நீர்மோருக்கு வருகிறேன்.

நான் - நான் என்றால் நான் மட்டும் தனியாக அல்ல.  அம்மா, அண்ணன் தங்கையுடன்தான் - அங்கு சென்ற சமயம் கோடைத் திருவிழா தொடக்கம்.  அம்மன் கோவில் திருவிழாவா வேறு ஏதாவது கோவில் திருவிழாவா என்றெல்லாம் நினைவில்லை.  கேஜிஜி சொல்வார்.  அவர் அப்போது  இருந்தாரா, படிக்க அல்லது வேலைக்குச் சென்று விட்டாரா என்றும் நினைவில்லை!  நினைவிருக்கும் ஒரே விஷயம் ஆங்காங்கே நட்டிருந்த கம்பங்களும் கொடிகளும், பானகம், நீர்மோர்ப் பந்தல்களும்தான்.   ஐம்பதடிக்கு ஒரு பந்தல் இருக்கும்.  சாதாரண குடிநீர்ப் பந்தல்களும் இருக்கும்.

ஏதோ ஒரு மாமாவுடன் சென்று திருவிழா கண்டு, அங்கிருக்கும் பந்தல்களில் அவர்கள் வாங்கி கொடுத்த நீர்மோரும், பானகமும் பருகினேன்.  அப்படி ஒரு சுவைபானத்தை அதுவரை என் நா கண்டதில்லை.  இரண்டு மூன்று இடங்களில் குடித்தபிறகு இன்னும் வேண்டும் என்று கேட்டதற்கு 'பின்னால பீச்சி அடிக்கும்.. வா' ன்னு அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்கள்..

அப்போது அங்கு தயார் செய்து வழங்கப்பட்டவை உண்மையிலேயே ஒவ்வொரு பந்தலிலும் தரமான மோர் மற்றும் பானகம்.  நிச்சயமாக இப்போது வழங்கப்படும் நீர்மோர், பானகங்களில் அவ்வளவு தரம் இருக்கவே இருக்காது.  முதலில் அப்படி பல்வேறு இடங்களில் வழங்குகிறார்களா என்பதே கேள்விக்குறி.

எங்காவது ஓரிரண்டு இடத்தில கொடுக்கத் தொடங்கினால் மக்கள் பாய்ந்து சென்று ஆளாளுக்கு பாத்திரங்களில் ரொப்பிக்கொண்டு அல்லது அந்த குண்டானையே தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.  அரசியல் கட்சிகள் காட்டிய வழி.  தெனாலிராமன் வளர்த்த குதிரை போல இருக்கிறார்கள் மக்கள்.

வீட்டுக்கு வந்து சில மணிநேரம் ஓய்வெடுத்தபின் மாமாக்களுக்குத் தெரியாமல் மறுபடி அங்கு சென்று ஓரமாகவேவே நின்று முன்னாடி இருந்த சில பந்தல்களில் மறுபடி சுவைத்திருக்கிறேன்.  இதைத்தவிர தாத்தாவோ, மாமாவோ ஒரு  கூஜாவில் இதை நிரப்பிக்கொண்டு வந்து வீட்டில் பாட்டி, அம்மா போன்றோருக்கு தரும்போது புல்லுக்கும் கொஞ்சம் பொசியும்!

கரும்புச்சாறு...

இது எனக்கு முதலில் தஞ்சை ஹவுசிங் யூனிட்டில்தான் அறிமுகம்.

============================================================================================

மற்றவர்கள் மற்றவர்கள் 
என்று நாம் 
அயலார் பற்றி 
யார் யாரிடமெல்லாம் 
பேசிக் கொண்டிருக்கிறோமோ 
அவர்களே 
நம் முயற்சியில் அல்லாமல் 
நமக்கு 
மற்றவர்களாகி விடுகிறார்கள் 
கொஞ்ச நாளில் 
அல்லது 
நம்மை 
மற்றவர்கள் ஆக்கிவிடுகிறார்கள் 
============================================================================================

தொகுப்பிலிருந்து.....

நெஞ்சில் பூத்த பாசமலர்

என் சினிமா வாழ்க்கையில், 1960–ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு முதன் முதலாக ‘‘பாச மலர்’’ படத்திற்கு வசனம் எழுதினேன். அது என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

‘‘பாசமலர்’’ வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்றளவுக்கும் என் பெயருக்கு புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் படம், பசுமையான ‘‘பாசமலர்’’ படம்தான்.

இந்தப் பாசமலரைப் பறிப்பதற்கு நான் அதைத் தேடிச்செல்லவில்லை. அதுவாக வலிய என்னை நாடி வந்தது. நான் அதைப் பறித்துக்கொண்டேன். தரித்துக் கொண்டேன். அந்தச் சுவையான கதையை இங்கு சொல்கிறேன்.

1958–59களில் நான் தேவர் பிலிம்சின் ‘‘வாழ வைத்த தெய்வம்’’ படத்திற்கு முதன் முறையாக கதை – வசனம் எழுதி, அதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, என்னை எப்படியாவது சிவாஜிகணேசன் நடிக்கும் படங்களுக்கு எழுதச் செய்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சேர்ந்து திட்டமிட்டு அதில் முனைப்பாக இருந்தனர். என் அதிர்ஷ்டமும், யோகமும் அவர்கள் இருவருடைய வடிவங்களாக வந்தன!

‘‘பதிபக்தி’’, ‘‘பாகப்பிரிவினை’’ ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தொடர்ந்து சிவாஜி நடிக்கும் படங்களை இயக்கிப் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த டைரக்டர் ஏ.பீம்சிங்கிடம் என்னைப்பற்றி சாவித்திரியும், சிவாஜியிடம் ஜெமினியும் பரிந்துரைத்து, என்னை எழுத வைக்கவேண்டும் என்று ஏற்பாடு.

அந்தச் சமயத்தில்தான் ‘‘பாசமலர்’’ படத்தில் நடிப்பதற்கு ஜெமினியும் சாவித்திரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சாவித்திரி பீம்சிங்கிடம் என்னைப்பற்றிக்கூறி, ‘‘குடும்பக் கதைகளுக்கு அவர் மிக நன்றாக வசனம் எழுதுவார். அவரையே ‘பாசமலர்’ படத்திற்கு எழுதச் சொன்னால் நன்றாக இருக்கும்’’ என்று கூற, அதற்கு அவர், ‘‘நீங்கள் சொன்னால் அது சரியா இருக்கும். எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை. சிவாஜி ஒப்புக்கொள்ளணும். அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிட்டார்.

‘‘அதை சிவாஜிகிட்டே அவர் (ஜெமினி) சொல்லிக்குவாரு’’ என்றார் சாவித்திரி.

1959–ம் ஆண்டில் ஒருநாள். அன்றைக்கு ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் ஷூட்டிங் இல்லை. அதனால் நான் சாவித்திரி வீட்டிற்குச் சென்றேன். மூவரும் டிபன் சாப்பிட்டு முடித்து ‘கேரம்’ ஆடத்தொடங்கினோம். சாவித்திரி ஜெமினியைக் கேட்டார்:–

‘‘என்னங்க? பாசமலர் டயலாக் விஷயம் சிவாஜிகிட்டே சொல்லிட்டீங்களா?’’

ஜெமினி:– சொன்னேன். ‘புதுப்பையன்னு சொல்றே. பார்க்கலாம்’னு இழுக்குறான். அதோட (என்னைக்காட்டி) இவன் வேற சிவாஜிகிட்டே வரமாட்டேங்குறான்.

சாவித்திரி (என்னிடம்):– ‘‘ஏன் போகமாட்டேங்குறீங்க?’’

நான்:– ‘‘அண்ணி! அது பெரிய யூனிட்! நான் புதுசு. சிவாஜி என்னை ஏதாவது குறைவா பேசிட்டார்னா, அதைக்கேட்டு நான் பொறுக்கமாட்டேன். பதிலுக்கு ஏதாவது சூடா சொல்லிடுவேன். என்னைப்பத்தி ஒனக்கு நல்லா தெரியும். வீண் வம்பு எதுக்கு? வேண்டாம். எனக்கு தேவர் பிலிம்ஸ் இருக்கு. டப்பிங் படங்கள் இருக்கு. அது போதும்.’’

சாவித்திரி:– அதெல்லாம் சிவாஜி ஒண்ணும் சொல்லமாட்டாரு. அப்படிப்பாத்தா எப்படி முன்னேற முடியும்? நான் சொல்றதைக் கேளுங்கள். பேசாம இவரோட போங்க. கால்ஷீட்டெல்லாம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. திடீர்னு வேற ஒரு ரைட்டரை ‘பிக்ஸ்’ பண்ணிட்டாங்கன்னா, எங்க முயற்சி வீணாப்போயிடும். (ஜெமினியிடம்) இதோ பாருங்க. சிவாஜி எங்கே இருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டு, இவரை அழைச்சிக்கிட்டுப்போயி அறிமுகப்படுத்தி ‘பிக்ஸ்’ பண்ணிடுங்க. இப்பவே ரொம்ப லேட்டு. வளத்தாதிங்க.

ஜெமினி:– ‘‘சரி. இப்போ ஷூட்டிங்ல இருந்தாலும் இருப்பான். பேசமுடியாது. பன்னெண்டு மணிக்கு மேல ‘லஞ்ச்’ டயத்துக்கு முன்னால அழைச்சிக்கிட்டுப் போறேன்.’’

நான்:– ‘‘அண்ணே! அவசியமா? வேண்டாமே!’’

ஜெமினி:– நீ சும்மாருப்பா. நான் பாத்துக்குறேன்.’’

ஜெமினி, சிவாஜி பிலிம்சுக்கு போன் பண்ணி அவர் அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் இருப்பதாக அறிந்து கொண்டார்.

மதியவேளை! வலுக்கட்டாயமாக ஜெமினி என் கையைப்பிடித்து இழுத்துச்சென்று அவர் காரின் முன்சீட்டில் தள்ளி உட்கார வைத்து அவரே ஓட்டிக்கொண்டு போனார்.

அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோ! குறிப்பிட்ட ஒரு மேக்–அப் அறை! கதவைத் தட்டிவிட்டு ஜெமினி உள்ளே சென்றார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.

சிவாஜி சாப்பிட்டு முடித்த நிலையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அன்றைக்குத்தான் நடிகர் திலகத்தை நான் நேருக்கு நேராகப் பார்த்தேன். என் மனதிற்குள் மகிழ்ச்சி மலர்ந்தது!

சிவாஜி ஜெமினியைப் பார்த்து, ‘‘வாடா’’ என்று வரவேற்றார்.

(சிவாஜியைவிட ஜெமினி எட்டு வயது மூத்தவர். ஜெமினி பிறந்தது 1920–ல். சிவாஜி 1928. ஆனாலும் அவர் ஜெமினியை ஒருமையில்தான் அழைப்பார்.)

சிவாஜி:– (என்னைப்பார்த்து அலட்சியமாக) இவன் யாரு?

ஜெமினி:– அதாம்பா. ஏற்கனவே ஒங்கிட்டே சொன்னேன் பாரு –ஆரூர்தாஸ். இவன்தான்.

சிவாஜி (என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு):– ‘‘ஆரூர்தாஸ்!​  ஆரூர்னா….’’

நான்:– ‘‘திருவாரூர்.’’

சிவாஜி:– அட! நம்ம ஜில்லாக்காரன்! சினிமாவுக்குப் புதுசா வந்திருக்கே போலிருக்கு. இப்போ தேவர் பிலிம்சுக்கு எழுதுறதாவும், குடும்பக்கதைகளுக்கு நல்லா வசனம் எழுதுவேன்னும் இவன் சொன்னான். சாவித்திரியும் சொன்னதா பீம்சிங் சொன்னாரு.

அப்பா ஆரூரான்! இது ரொம்ப பெரிய படம். நான், இவன், சாவித்திரி நடிக்கிறோம். பீம்சிங் டைரக்ட் பண்றாரு. கண்ணதாசன் பாட்டு. விஸ்வநாதன் ராமமூர்த்தி மியூசிக். எல்லாம் பெரிய செட்டு! ​ நீ சின்னப்பையன். தாங்குவியா?’’

(‘தாங்குவியா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டால் என்னைச் சுட்டதுபோல ‘சுளீர்’ என்றது.)

நான் அவருக்குச் சொன்னேன்:– ‘‘அண்ணே! மடல் பெரிது தாழை. மகிழ் இனிது கந்தம். உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம். கடல் பெரிது மண்ணீருமாகா – அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்.’’

சிவாஜி:– ‘‘இதுக்கு என்னா அர்த்தம்?’’

நான்:– ‘‘மடல் பெரிது தாழை – தாழம்பூவோட மடல் பெரிசா இருக்கும். பெண்கள் ஜடையோட சேர்த்து வைச்சிப் பின்னிக்குவாங்க. அடுத்த நாளே அது வாடி வதங்கிப் போயிடும். எடுத்து எறிஞ்சிடுவாங்க. மகிழ் இனிது கந்தம் – மகிழம்பூ பாக்குறதுக்கு சின்னதா இருக்கும். பெண்கள் ஊசி நூல்ல கோர்த்து தலையிலே வச்சிக்குவாங்க, சாமி படத்துக்குப் போடுவாங்க… அது வாடிப்போனாலும் வாசனை போகாது.

கடல் பார்க்கிறதுக்குப் பெரிசா இருக்கும். ஆனால் உப்புத்தண்ணி. அதைக் குடிக்க முடியாது. அந்தக் கடலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஊத்து தோண்டினால் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். இன்னொண்ணு சொல்றேன்.’’

சிவாஜி:– ‘‘சொல்லு.’’

நான்:– ‘‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும். உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.’’

சிவாஜி:– ‘‘இது என்னா?’’

நான்:– ‘‘திருக்குறள்!’’

சிவாஜி:– ‘‘என்னா சொல்றாரு உன் திருவள்ளுவரு?’’

நான்:– ‘‘ஒருவருடைய உருவத்தைப் பார்த்து அவரை இகழாமல் இருக்கணும். ஏன்னா உருள்கின்ற பெரிய தேருக்கு சின்ன அச்சாணி காரணமா இருக்கிறது மாதிரியானவுங்களும் உண்டு. இன்னொரு குறள் சொல்லட்டுமா?’’

சிவாஜி:– ‘‘சொல்லு.’’

நான்:– ‘‘கொக் கொக்க கூம்பும் பருவத்து. மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.’’

சிவாஜி:– ‘‘அப்படின்னா?’’

நான்:– ‘‘கூம்பி, அதாவது ஒடுங்கிப்போய் இருக்கிற காலத்துல கொக்கு மாதிரி காத்திருக்கணும். நல்ல காலம் வரும்போது அந்தக் கொக்கு மீனைக் குத்துறது மாதிரி விரைந்து செயல்படணும்.

நான் அந்தக் கொக்கு மாதிரி இப்போ சந்தர்ப்பத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன். அது வரும்போது குத்தி எடுத்திடுவேன்.’’

சிவாஜி:– ‘‘நல்லா படிச்சிருக்க போலிருக்கு.’’

நான்:– ‘‘நிறைய படிச்சிருக்கேன். நான் தடுக்கி விழுந்து வசனகர்த்தாவாகலே; தமிழ் படிச்சிட்டு வந்திருக்கேன். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் படிச்சு புலவர் பட்டம் வாங்கி, தமிழாசிரியரா போகவேண்டியவன் தவறிப்போய் தலைவிதி காரணமாக சினிமாவுக்கு வந்திட்டேன்.

கும்பகோணத்துக்குப் போகவேண்டிய நான் திசை மாறி கோடம்பாக்கத்துல வந்து விழுந்திட்டேன்.

(இதைக்கேட்டு சிவாஜி ஒரு சிறு சிரிப்பு சிரித்தார்).

கடைசியாக உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமா?’’

சிவாஜி:– ‘‘சொல்லு. நீதான் சொல்லிக்கிட்டிருக்கே. நான் கேட்டுக்கிட்டிருக்கேன். நல்லாருக்கு. சொல்லு.’’

நான்:– ‘‘நான் பி.யு.சின்னப்பாவோட தீவிர ரசிகன். சின்ன வயசுல – மாணவப் பருவத்துல அவரோட நடிப்பையும், வசன உச்சரிப்பிலேயும் என் மனதைப் பறிகொடுத்தவன். சின்னப்பா செந்தமிழ் நாடக மன்றம் என்கிற பேரில் என் நண்பர்களைச் சேர்த்து நாடகம் நடத்தி இருக்கிறேன்.

அவர் நடித்த ‘‘கண்ணகி’’ படத்தை அவருடைய நடிப்புக்காகவும், இளங்கோவனுடைய அழகான வசனத்துக்காகவும் பல தடவை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

அந்தப் படத்தில் இருக்கிற இருபத்திரெண்டு பாட்டுகளும் மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம். இப்போ கேட்டாலும் சொல்லுவேன். இன்றைக்கு அதுபோல் அழகாக வசனம் பேசுவது நீங்கதான். உங்க வசன உச்சரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். முனைமுறியாமல் கடைசி எழுத்து தேஞ்சி கீழே விழாமல் தெளிவாக பேசுவீங்க.

நீங்க சொன்ன மாதிரி இது பெரிய செட்டுன்னு எனக்கு முந்தியே தெரியும். அந்த பயம் எனக்கு இல்லை. உங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா ஒரு அடி அடிச்சுக் காட்டுவேன். இது உறுதி. பரவாயில்லே. சந்தர்ப்பம் வரும்போது சந்திக்கிறேன். இப்போ உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம். வர்றேன்’’ என்று சொல்லி முடித்து, அடி எடுத்து வைத்து நகர இருந்த என்னைத் தடுத்தபடி சிவாஜி என் கையைப் பிடித்துக் கொண்டார்.

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ‘டென்ஷன்’ ஆகிவிட்ட அவர், சிகரெட்டை டிரேயில் திணித்து விட்டு ஜெமினியிடம் சொன்னார்.:

சிவாஜி:– ‘‘கணேசா! இவன் என்னடா என்னென்னமோ சொல்றான். இவன் சொல்லச் சொல்ல எனக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சு. அன்னிக்கு ‘‘பராசக்தி’’ படத்தில் இருந்து என்னைத் தூக்கிட்டு, எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியை வச்சு நான் நடித்திருந்த சீன்களை எல்லாம் மறுபடியும் ஷூட் பண்ண முயற்சி நடக்கிறதாக கேள்விப்பட்டு நான் கண்ணீர் விட்டேன்.

‘இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா இனி வாழ்நாள் முழுவதும் நாடக நடிகனாகவே இருந்து சாக வேண்டியதுதான். நடக்கிறது நடக்கட்டும். என்ன ஆனாலும் சரி. ஒரு அடி அடிச்சிக்​ காட்டணும்’னு என் மனதுக்குள்ளே முடிவு பண்ணிட்டேன்.

அன்னிக்கு எனக்கு ஒரு வெறி வந்திடுச்சு. அந்த வெறியை இப்போது இவன்கிட்டே பார்க்கிறேன்.

இவன் ஒரு ‘பாசமலர்’ இல்லை, பத்து ‘பாசமலர்’ எழுதுவான். அந்த அளவுக்கு இவன் கிட்டே சரக்கு இருக்கு. இவனை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நீ இவனைப் பத்தி சொன்னது சரிதான். பின்னிடுவான்.

நீ இப்பவே இவனை சிவாஜி பிலிம்சுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி தம்பி ஷண்முகத்துகிட்டே அறிமுகம் பண்ணி வச்சிட்டு, அட்வான்ஸ் வாங்கிக் கொடு. அதுக்குள்ள நான் அவனுக்குப் போன் பண்ணி சொல்லி விடுகிறேன். டைரக்டர் கிட்டேயும் சொல்றேன். ராஜாமணி பிக்சர்ஸ் மோகன், சந்தானம் அண்ணே கிட்ட நீ சொல்லிடு’’ என்றார். இதைக் கேட்டுக் கண் கலங்கிய நான், ‘‘நன்றி’’ என்று கரம் கூப்பினேன்.

சிவாஜி தொடர்ந்தார்:– ‘‘இப்போ நீ சொன்னே பாரு, அடிச்சிக்காட்டுவேன்னு. அடிச்சிக்​ காட்ட​ வேண்டாம். எழுதிக்காட்டு. அது​ போதும். ‘‘ஆல் த பெஸ்ட்’’ என்று கை குலுக்கினார்.

ஜெமினி என்னை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ஷண்முகத்தின் அறை! அப்போதுதான் தம்பி ஷண்முகம் சிவாஜியுடன் பேசிவிட்டு போன் ரிஸீவரை வைத்தார்.

ஜெமினியைப் பார்த்து ‘‘வாங்கண்ணே! இப்போதான் அண்ணன் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம்’’ என்று என் கையைப் பற்றிக் குலுக்கினார்.

‘சீனிவாசன்’ என்று கூப்பிட்டார். அவர் வந்தார். அவரிடம் ஆள்காட்டி விரலைக் காட்டினார். அவர் சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகி என்று பிறகு தெரிந்து கொண்டேன்.

என்னைப் பார்த்து ஷண்முகம், ‘‘நீங்க திருவாரூரா?’’ என்றார். ‘‘ஆமா’’ என்றேன். சீனிவாசன் ஒரு கவரைக் கொண்டுவந்து ஷண்முகத்திடம் நீட்டினார். அவர் அதை வாங்கி என்னிடம் கொடுத்து ‘‘நல்லா எழுதுங்க. இது ரொம்ப பெரிய படம். ஆல் த பெஸ்ட்’’ என்றார். ‘‘வித் யுவர் விஷ்ஷஸ். தேங்க்யூ’’ என்றேன்.

பொறுக்க முடியாத பசியுடன் புறப்பட்டோம். அபிபுல்லா ரோடு – சாவித்திரி வீடு.

‘‘சாவித்திரி!’’என்று சந்தோஷத்துடன் அழைத்தபடி ஜெமினி உள்ளே நுழைந்தார். சாவித்திரி சாப்பிடாமல் எங்களை எதிர்பார்த்து டைனிங் டேபிள் அருகில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து ‘‘என்ன ஓகேவா?’’ என்றார், பரபரப்புடன்.

ஜெமினி:– ‘‘டபுள் ஓகே. ஒங்கொழுந்தன் என்னென்னமோ சொல்லி சிவாஜியை அசத்திட்டான். சிவாஜி பிலிம்சுக்குப்போய் ஷண்முகத்துகிட்டே அட்வான்ஸ் வாங்கிக்கிட்டு வந்திட்டோம்.’’

அதைக்கேட்டு சாவித்திரி மலர்ந்த முகத்துடன்:– ‘‘எனக்குத் தெரியும். ஏன் இவ்வளவு டயமாகுதுன்னு நினைச்சேன். அப்பவே புரிஞ்சிக்கிட்டேன். கங்கிராஜ்லேஷன்ஸ்’’ என்று சொல்லி என் கையைப் பிடித்துக் குலுக்கினார். அந்தக் கையில் கவரை வைத்தேன். பிரித்து எண்ணினார். அப்பொழுதுதான் நானும் பார்த்தேன். பத்து நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைத்தன் கண்களில் ஒற்றிக்கொண்டு பக்கத்து அறைக்குள் சென்று தன் கைப்பையை எடுத்து வந்து அதைத்​ திறந்து, ஒரு நூறு ரூபாய் நோட்டு, ஒரு பத்து ரூபாய் நோட்டு மேலும் ஆறு ரூபாய்கள் ஆக 116 ரூபாய் எடுத்து கவரில் வைத்தார். (நாம் 101, 501, 1001 என்று கொடுப்பது போல, 116–ல் முடிகிற மாதிரி கொடுப்பது தெலுங்கு சம்பிரதாயம்.)

சாவித்திரி (என்னிடம்):– ‘‘பார்த்தீங்களா? இப்போ எங்க ‘சென்டிமென்ட்’படி ஆயிரத்து நூத்தி பதினாறு ரூபாய் ஆயிடுச்சு’’ என்று சொல்லி அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த சுவாமி படத்தின் அடியில் வைத்து என்னிடம் கொடுத்தார், சாவித்திரி.

விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய அதை வாங்கி என் கண்களில் ஒற்றிக் கொண்டேன். ஏதேதோ நிறைய பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் என்னால் இயலவில்லை. தடுமாறினேன். சொல் ஏதும் வராமல் நான் கல் ஆகிவிட்டேன்.

அப்போது சாவித்திரி சொன்னார்:– ‘‘பார்த்துக்கிட்டே இருங்க. இதில் இருந்து ‘கபகப’ன்னு மேல வந்திடுவீங்க. எங்களைவிட ‘பிஸி’ ஆகிடுவீங்க. உங்க திறமை பூராவையும் இந்த ஒரே படத்தில் காட்டி சிவாஜியைப் பிடிச்சிடணும். இந்தப் படத்தோட நூறாவது நாள் அன்னிக்கு இதே ஆயிரத்து நூற்று பதினாறு ரூபாய் நான் உங்களுக்கு என் அன்பளிப்பாக கொடுப்பேன். பிராமிஸ்’’ என்று என் கையில் அடித்தார். அப்போது ஜெமினி சொன்னார்:

ஜெமினி:– எனக்குத் தெரியும். அவன் நிச்சயம் உங்கிட்ட இருந்து அந்தப் பணத்தை வாங்கத்தான் போறான்.’’

ஜெமினி சொன்னது பலித்தது.

‘‘பாசமலர்’’ 25 வாரம் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. சாவித்திரி சொன்னது போலவே எனக்கு 1,116 ரூபாய் பரிசளித்து மகிழ்ந்தார்.

Source : தினத்தந்தி

====================================================================================

பழைய நினைவிலிருந்து....



==================================================================================

போட்டி...  ஐந்து லட்சம் பரிசு...  கமலாக்கா ரெடியா?

============================================================================

FaceBook லிருந்து...

அன்று மதியம் ஒன்றரை. எங்கள் பகுதி நூலகத்தில் இருந்தேன். நான் எடுத்துத் தந்த புத்தகங்களுக்கு எண் குறித்துக்கொண்டிருந்தார் அங்கு பணியாற்றும் பெண். அவர் முன் நாற்காலியில் அமர்ந்திருந்த நான் , வயிற்றுவலியைக் காரணங்காட்டி பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்த அவரது மகனோடு ஒலிக் குறைவில் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அவனோ கைபேசியே உலகமென்று , கழுத்தெழும்பு வளைய காணொளிக் காட்சியில் மூழ்கிக் கிடந்தான்.

அப்போது முப்பது வயதிற்குட்பட்ட ஒரு இளம்பெண், முதல் மாடியிலிருக்கும் அந்த நூலகத்திற்குள் வந்தாள்.  கையிலிருந்தக் கூடையை ஒரு ஓரமாக வைத்த இடம், எனக்குப் பக்கத்தில் தான்.
அந்தச் சின்ன வயர்கூடையில் குட்டிக் குட்டியாக மூன்று சில்வர் சம்படங்கள் கூடவே குட்டி டர்க்கீ துண்டும் இருந்தது. இவற்றோடு புசுபுசு பஞ்சோடு, பவுடர் கொட்டி வைக்கும் ஆரஞ்சுப் நிற டப்பா, மேல்வாக்கில் தன் உடம்பில் குச்சிக்குச்சியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் பற்கள்த் தெரிய நீட்டிக்கொண்டிருந்தது ஒரு சீப்பும்.
எத்தனையோ வருட இடைவெளிக்குப்பின் என்னைப் போல் ஒருத்தியெனப் பட்டது எனக்கு. இருக்கலாம் இதுபோல் நிறைய, பார்த்திருக்கவும் செய்திருக்கலாம். ஆனால் யார் யாரோ எதிரில் நடந்து போகும் சாலையில், அறிமுகவற்றவராக இல்லாத போதும், அந்த யாரோ ஒருவரைப் பார்த்ததும் புன்னகைக்க பிடித்திருப்பது போல் , எனக்கு இவளைப் பார்த்ததும் மீண்டெழுந்தது நினைவு. எல்.கே. ஜி படிக்கும் தன் மகளுக்கு உணவூட்டிவிட்டு வருவதாக அவளேதான் சொன்னாள், அதன்பின் பேசியபோது.
தான் காதல் கொண்டிருப்பவரின் பார்வையை , சற்றுத் தள்ளி நின்று பருகி , உணர்வெல்லாம் நிரம்பி வழியும் போது, அவர் விரல் (அவரவர் விருப்பம்) தொட நெருங்குகையில் உண்டாகும் மிதப்புணர்வோடான சிலிர்ப்பு நிலை கொண்டவராக ஒவ்வொரு ரேக்கின் முன்னும் நின்று நின்று நகர்ந்தாள் அவள் .எந்தவொரு புத்தகத்தையும் கையில் எடுக்கவில்லை.
அந்நூலகத்திற்கு புதியவள் போல. நான் கிளம்பப் போனேன். அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யும் நோக்கில்,பணியாளப் பெண் " ஏதாவது ஹெல்ப் வேணுமா? எந்த வகை புக்ஸ் நீங்க தேடுறது " என்றார்.
" இல்லை மேடம், எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது, சும்மா பார்த்துட்டுப் போலாமேன்னு தான் வந்தேன் " என்றாள்.
" அட,பார்த்துட்டுப் போகவா ...? அப்போ ஆங்கிலம் வாசிப்பீங்களோ? " என்று நான் கேட்க.
" வாசிப்பேன் ஓரளவுக்கு ...ஆனா சிரமமா இருக்கும் மீனிங் புரியுறதுக்கு, அதானால படிக்கிறதுயில்ல " என்றவர் .மேலும் அவராகவே...
" எனக்கு ஆந்திரா, இந்த வருஷம்தான் சென்னையில குடியேறியிருக்கிறோம். தெலுங்குதான் எழுதப் படிக்கத் தெரியும், தமிழ் பேசுவேன் அவ்வளவுதான். அங்க அடிக்கடி லைப்ரேரி போய்ப் பழக்கம், அதான் வந்துட்டேன் . இங்க நிறைய புக்ஸ் இருக்கு , ஆனா எனக்குத்தான் வாசிக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு " எனும் போது அவள் முகம் , பலத்தை ஏக்கத்தை பைக்குள் திணித்து அடைத்து வைத்தாற்போல் இருந்தது.
சும்மாவேனும் பார்த்துவிட்டு வரலாமே என்று நினைப்பதற்கு அது ஒரு பெரிய மால் ஆகவோ பொருட்காட்சியாகவோ இருக்க வேண்டுமாயென்ன?
வாசிப்பின் ருசியறிந்தவர்களுக்கு அது கிடைக்காதபோது, மனம் சப்பென்று ஆகிப்போகுமில்லையா? அதற்காகத் தான் வந்திருந்தாள் அவள். அது இயலாதபோது வெறும் வாசனையை மட்டும் நுகர்ந்து கொண்டிருக்கும் அவளிடம் " ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களைச் சந்திச்சது , சீக்கிரமே தமிழ் வாசிச்சிப் பழகிருவீங்க " என்றபடி அவள் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு கிளம்பினேன்.
பெண்களுக்கு அலமாரி நிறைய சேலைகள் மட்டுமில்ல புத்தகங்கள் இருந்தால் , அதைவிட பிடிக்கும்னு சொல்லனும்னு தோணுதா இப்பவாச்சும்.
(ம்ச்...ஒரு போட்டோ எடுத்திருக்கலாம் அவளோடு 😊😒)
கனகா பாலன் கந்தசாமி 25-12-24
====================================================================================================

படித்ததிலிருந்து.....


--  மீபத்தில் ரங்கூன் சென்றிருந்த பொழுது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிலிம் கம்பெனி முதலாளி ஒருவர் தமது படத்தை மறுநாள் காலை 8:30 மணிக்கு தமது சினிமா கொட்டகையில் எனக்கு மட்டும் காட்ட ஏற்பாடு செய்வதாகவும், பிறகு எனக்கு டெலிபோன் மூலம் தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார்.  அவர் எனக்கு தகவல்  தெரிவிக்க மறந்துவிட்ட போதிலும்,  அந்த சினிமா கொட்டகை ஆபரேட்டருக்கு மட்டும் தகவல் தெரிவித்து விட்டார். 

மறுநாள் காலை சரியாக எட்டரை  மணிக்கு ஆபரேட்டர் சினிமா கொட்டகையின் எல்லா கதவுகளையும் தாழிட்டுவிட்டு முதலாளியின் உத்தரவுப்படி படத்தை ஆரம்பித்து விட்டான்.  கொட்டகையில் ஆபரேட்டரை தவிர வேறு யாருமே இல்லை.  படம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. 

அன்றைய தினம் ஒன்பதரை மணிக்கு இந்த பிலிம் கம்பெனி முதலாளி ஆபீசுக்குச் சென்றேன். அவர் என்னை பார்த்ததும் "உங்களுக்காக இன்று படம் ஓடுகிறது" என்றார்.  "எனக்காகவா!" என்றேன்/ அவருக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது. " என்ன நீங்கள் இல்லாமல் உங்களுக்கு படத்தை காட்டுகிறார்கள்?" என்று கூறிவிட்டு சினிமா கொட்டகைக்கு படத்தை நிறுத்தும்படி டெலிபோன் செய்தார்.

--  நியூயார்க் நகரில் மாணவர்கள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டேன்.  அந்த விருந்தில் மாணவர்களே பரிமாறினார்கள். அங்கு கூடியிருந்த மாணவர்கள் 52 தேசங்களை சேர்ந்தவர்கள்.  அவர்கள் எந்த நாட்டினர் என்று ஒரு அச்சடித்த காகிதத் துண்டை குத்திக் கொண்டிருப்பதென்று ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

எனது மேஜையில் ஒரு குறும்புக்கார கிரேக்க பெண் உட்கார்ந்திருந்தாள். 

ஒவ்வொரு பாஷையிலும் "வந்தனம்" என்ற வார்த்தையை கற்றுக் கொள்வது எனது வழக்கம்.  அந்த கிரேக்க பெண்ணை பார்த்து "வந்தனம்" என்பதற்கு கிரேக்க பாஷையில் எப்படி சொல்வது என்றேன். அதற்கு அவள் "பியினே பினிக்ஸ்" என்று கூறினாள். 

ஒரு கிரேக்கமானவன் எனக்கு பரிமாறிய பொழுது அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே மிகுந்த அன்போடு பியினே பினிக்ஸ் என்றேன்.  அவன் முகம் சட்டெஎன்று மாறிவிட்டது.  அவன் என்னிடம் காதோடு காதாக "இனி இம்மாதிரி வார்த்தையை கூறாதே... பியினே பினிக்ஸ் என்றால் குளத்தில் விழு என்று அர்த்தம்.  இந்த தடவை உன்னை மன்னித்துவிடுகிறேன்" என்றான்.  

இந்தச் சம்பவம் நிகழ்ந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு பாரிசுக்கு சென்றேன்.  இந்த கிரேக்கப் பெண் பாரிஸில் படித்துக் கொண்டிருந்தாள். என்னை வரவேற்பதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தாள். அவளை கண்டதும் நான் முதலில் கூறிய வார்த்தை என்ன தெரியுமா? "பியினே பினிக்ஸ்"

A K செட்டியார் 1942 ல் எழுதிய 'பயண அனுபவங்கள்' என்கிற நூலிலிருந்து -

======================================================================================

,கிம்,,,கே கே கே கே 













141 கருத்துகள்:

  1. இன்றைய பகுதிகள் அனுத்தும் சிறப்பு, நகைச்சுவை பகுதி தவிர. அந்தக் காலத்துல ஒருவேளை இதற்கெல்லாம் சிரிப்பு வந்திருக்குமாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  நன்றி.   உண்மை.  சுதர்சன் பிளேடுன்னா பிளேடு போட்டிருக்கார்.  அப்போ கூட புன்னகைதான் வந்திருக்க வாய்ப்பு!  ஆனால் இப்படி எல்லாமும் வந்து நாம் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம்னு நினைவு படுத்திக்க வேண்டியிருக்கே....

      நீக்கு
    2. நகைச்சுவைகள்னா கோபுலு மாலி, ராஜூ போன்றவர்களுக்குப் பின்னரே மத்தவங்க. சாமா கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

      நீக்கு
    3. ஆமாம். சுதர்சன் ஜோக்ஸ் அப்பவே செம ப்ளேடாத்தான் இருக்கும்!

      நீக்கு
  2. நாகப்பட்டினம் என்ற வார்த்தையைப் படித்தவுடன், இன்று ஶ்ரீராமுக்குப் பதில் கேஜிஜி எழுதுகிறாரோ என்று நினைத்தேன். பல நினைவலைகளை ஏற்படுத்தியது. பூலான்குறிச்சியில் வருடத்திற்கு ஒரு தடவை வைக்கப்படும் பானகம் நீர்மோர் வினியோகம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​எனக்கென்னவோ பென்ச்மார்க் நாகை பானகம், நீர்மோர் தான்! முதல் சுவை.

      நீக்கு
    2. ஸ்ரீராம் எழுதி இருப்பது ஆச்சரியமா இருக்கு. வெயில் காலத்தில் பானகம் அடிக்கடி பண்ணுவதோடு ஸ்ரீராமநவமி , சித்திரை வருஷப்பிறப்பு அன்னிக்கெல்லாம் வீட்டில் பானகம் கட்டாயம் உண்டு. மதுரையில் நாலு ஆவணி மூலவீதிகள், மாசி வீதிகளில் கடைக்காரங்க எல்லோருமாச் சேர்ந்து பந்தல் போட்டு ஒரு நாளைக்கு ஒருத்தர் அல்லது இரண்டு பேராகப் பானகப் பானை, நீர்மோர்ப் பானை, சுண்டல் போன்றவை கொடுப்பாங்க. இப்போல்லாம் எப்படியோ தெரியலை. மதுரை வாழ்க்கையே மறந்து கொண்டு வருது இன்னிக்கு மீனாக்ஷி கல்யாணம், ராத்திரிப் பூப்பல்லக்கு இருக்கும். நாளைக்குத் தேர். சனிக்கிழமை எதிர்சேவை இருக்கலாம். அடுத்தநாள் அழகர் ஆத்தில் இறங்குவார். இந்தவருஷம் பட்டாசாரியார்கள் தேர்வில்லாமல் திராவிட மாடல்ல்காரங்க தேர்வில் அழகருக்குப் பச்சைப் பட்டாம் சம்பிரதாயத்தையே கெடுக்கறாங்க.

      நீக்கு
    3. மதுரையில் சித்திரைத் திருவிழா நாட்களில் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.நாங்கள் இருந்த ஏரியாவே கூட்டத்தால் குலுங்கும்.ரேஸ் கோர்ஸ் காலனி.

      அப்புறம் அப்பா, அண்ணன் ஆகியோர் மத்திய மதுரைக்கு குடிவந்தபின் நான் சென்னை வந்துவிட்டேன்,. எனவே இவற்றைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கவில்லை. நான் சுற்றிய வரையில் பானகம், நீர்மோர் கிடைக்கவில்லை.

      நீக்கு
  3. பாசமலர் பேரைப் பார்த்ததும் இது ஆரூர்தாஸ் பற்றியது என நினைத்தேன். ஆனால் இந்தப் பகுதி எனக்குப் புதிது. படித்ததில்லை. திரையுலகில் நுழைவது எவ்வளவு கஷ்டம் என்பதைப் புரியவைத்திருக்கிறார். புனை முறியாமல்... நல்ல சொல்லாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரூர்தாஸ் அப்புறம் நிறைய சிவாஜி படங்களுக்கு எழுதி இருக்கிறார்.  ஆனால் எவ்வளவு திறமைசாலி இல்லை?  சட்டென விஷயத்துடன் சிவாஜியிடம் வார்த்தையாட முடிந்திருக்கிறது...

      நீக்கு
    2. பாசமலர் பத்தி இத்தனை விஷயங்கள் படிக்கிறேன். ஆனால் இன்னமும் பார்த்ததே இல்லை. இதுவும் பாலும், பழமும் இரண்டும் பார்க்கவே இல்லை. பாலும் பழமும் படமாவது வைஜயந்தி மாலாவுக்காக ஹிந்தியில் பார்த்த நினைவு அரைகுறையாக.

      நீக்கு
    3. இன்னமும் பார்க்கவில்லை என்பது ஆச்சர்யம்.. இனி பார்த்தால் இன்னும் கிண்டல் செய்யத்தான் தோன்றும்.

      நீக்கு
  4. ரிக்‌ஷாக்காரன் புலம்பல், சமீபத்தில் ஏஐயினால் எல்லோருடைய வாழ்வே போயிடும் என எழுதியிருந்த அராத்தின் கட்டுரையை நினைவுபடுத்தியது. ஒவ்வொரு மாற்றமும் பல புதிய புதிய வாய்ப்புகளைக் கொண்டுவருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதேதான் நினைவுக்கு வந்தது.  ஆனால் அராத்து கட்டுரை நான் படிக்கவில்லை.

      நீக்கு
    2. அராத்துன்னா என்ன?

      நீக்கு
    3. அவர் ஒரு எழுத்தாளர். முன்னாள் பிளாக்கர்.

      நீக்கு
  5. சாவித்திரியின் உதவும் மனப்பான்மை, தாராளம் மனதைக் கவர்ந்தது. எனக்கு உதவ நினைத்த பெண்களின் நினைவு வந்தது. உதவ முயற்சித்தாலும் பலன் கிடைப்பது நம் விதியைப் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு உதவ நினைத்த பெண்களா... ஆ...

      அம்மா, அக்கா என்று ஜல்லியடிக்காமல் உண்மையைச் சொல்லுங்கள். எங்களுக்கும் பொழுது போகும்!

      நீக்கு
    2. தமன்னா கூட - நெ த வுக்கு உதவ நினைத்த சம்பவத்தை, என் கனவில் வந்து சொன்னார்.

      நீக்கு
    3. //தமன்னா கூட// ம்ஹ்ம்... அது ஒரு காலம். வருடங்கள் போகப் போக தமன்னா மனதிலிருந்து மறைந்துவிட்டார். ஒரு படத்தில் அட மஞ்சிமா மோஹனன் நல்லா அழகா இருக்காரே என்று நினைத்தேன். அது ஒரு பட அழகி என்று தெரியாமல். ஹா ஹா

      நீக்கு
  6. காக்க காக்க
    கனகவேல் காக்க

    பதிலளிநீக்கு
  7. பாசமலர் படத்தில் சிவாஜியும் ஜெமினியும் மோதிக்கொள்ளும் (மேலே
    படத்தில் காணும் காட்சி) இரண்டு பேரும் மாறி மாறி உக்கிரமாக
    சேலன்ஞ் பண்ணுகிற மாதிரி இரண்டு வரிகள் ஆங்கிலத்தில் ஆரூர்தாஸ் எழுதியிருப்பார். அற்புதமான அந்த வரிகள் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...   நீங்கள்தான் சொல்லுங்களேன்..     சொன்னால் நாங்களும் ரசிப்போம்.

      நீக்கு
  8. வேறு யாராவது வாசகர் ஏன் எபி மூத்த ஆசிரியர் குழுவினரில் யாராவது கூட சொல்கிறார்களா பார்ப்போம். இரவு நேரமாகி விட்டது. நாளை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யு டியூபில் சென்று பார்த்து விட்டு வருவது கடினமில்லை.  ஆனால் ஆறின கஞ்சியாகிவிடும். நீங்கள் சொல்லும்போதே சேர்த்து அதையும் சொல்லி சிலாகித்திருந்தால் ரசனையாய் இருந்திருக்கும்.

      நீக்கு

  9. பானகமும், நீர்மோரும், தண்ணீர்பந்தலும் வழி விட்டு குடிக்கும் நீருக்கு விலை என்றாகி விலைக்கு வாங்கும் நீர் நல் நீர் என்று மற்றவர்களும் (கவிதையில் உள்ள மற்றவர்கள்) குடிப்பார்கள். இது தான் காலத்தின் கோலம்.

    எல்லோரும் நல்லவரே
    நம்மவர் மற்றவர் என்ற
    பேதமில்லை,
    சப் கோ சன்மதி தே பஹ்வான்.

    இந்தியா காந்தியின் கொள்கைகளிருந்து படிப்படியாக மாறி வருகிறது என்பது புரிகிறது.

    ஆரூர்தாஸ் செய்தி சனிக்கிழமை கதை (உண்மை) க்கு முன்னோடியா? நல்லது.

    நெல்லை தொடங்கினார், KGG போட்டி வைத்து வளர்த்தார், நீங்கள் "நானும் உள்ளேன் அய்யா" என்று நடுவில் எட்டிப் பார்க்கிறீர்கள்..... பதிவில் புகைப்படங்களை சேர்ப்பது பற்றித்தான் கூறுகிறேன்.... இரன்டு படங்களும்"இறைவனை ஜோதி வடிவில் காண்கிறேன்" என்ற வள்ளலாரின் தத்துவத்திற்கு ஏற்ப உள்ளதாக தோன்றுகிறது.

    வரவர வியாழன் முக நூல் மறுபதிப்பு ஆகிற மாதிரி தோன்றுகிறது. சொந்த கற்பனைகள் குறைந்து வருவதாகவும் காண்கிறேன்.

    ஜோக்ஸ் கடி போதாது. புன்னகை போலும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வழி விட்டு குடிக்கும் நீருக்கு விலை என்றாகி விலைக்கு வாங்கும் நீர் நல் நீர் என்று//

      குடிக்கும் நீரை விலைகள் பேசி விற்கின்ற கூட்டம் இங்கே என்று யேசுதாஸ் குரலில் எம் ஜி ஆர் ஆக்ஷனில் படப்பாடலே வந்ததே....

      // எல்லோரும் நல்லவரேநம்மவர் மற்றவர் என்ற
      பேதமில்லை,
      சப் கோ சன்மதி தே பஹ்வான். //

      அந்த நிலையை நோக்கி மெதுவாக நகரும் கட்டத்தின் முதல் படிதான் இது!


      //இந்தியா காந்தியின் கொள்கைகளிருந்து படிப்படியாக மாறி வருகிறது என்பது புரிகிறது.//

      வேஷ்டி காட்டும் ஊரில் கோவணம் கட்ட முடியாது!


      //ஆரூர்தாஸ் செய்தி சனிக்கிழமை கதை (உண்மை) க்கு முன்னோடியா? நல்லது.//

      புரியவில்லை.  அதற்கும் இதற்கும்...?


      // நெல்லை தொடங்கினார், KGG போட்டி வைத்து வளர்த்தார், நீங்கள் "நானும் உள்ளேன் அய்யா" என்று நடுவில் எட்டிப் பார்க்கிறீர்கள்..... பதிவில் புகைப்படங்களை சேர்ப்பது பற்றித்தான் கூறுகிறேன்....  //

      புகைப்படங்கள் வெளியான வருடத்தைப் பார்த்தால்.....



      முகநூல் மறுபதிப்பு என்பது கந்தசாமி பதிவுகள் என்றால் இணையத்திலிருந்து அவர் எடுத்துக் பகிர்கிறார்.  நிறைய பொக்கிஷங்கள் அவர் வழியில் கிடைக்கின்றன.  சொந்தக் கருத்து என்பது முதல் அப்பகுதி மட்டும்தானே எப்போதும்?  இப்போதும் இருக்கிறதே....

      அடுத்த வாரம் பலத்த கடியாக கிடைக்கிறதா பார்க்கிறேன்!

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம். இன்றைய கதம்பம் படிக்க ஆரம்பித்ததும் வழக்கமாக தான் படித்ததில் ரசித்தவிஷயங்களை பின்னால்தானே ஸ்ரீராம் எழுதுவார், முதலில் அவருடைய எழுத்துதானே இடம்பெறும், இது யாருடைய எழுத்து என்று யோசிக்கும்படி வித்தியாசமாக இருந்தது ஸ்ரீராமின் எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே அக்கா..  அதே Font தானே உபயோகித்திருக்கிறேன்! 

      அது இருக்கட்டும், இது பாராட்டா, வேறு ஏதாவதா? 

      பாராட்டென்றால் இவ்வளவு நாள் எழுதியது சரி இல்லை என்று ஆகும்.  இலையென்றால் இன்று சரி இல்லை என்று ஆகும்!

      நீக்கு
  11. புளிப்பு தோசை (அதாவது அதீதமாகப் புளிக்காமல்) நல்லதுன்றாங்களே! Probiotic food என்று!!

    எனக்குப் பிடிக்கும் இப்பவும் பிடிக்கிறது. எனக்கு எல்லாமே பிடிக்கிறது அப்போதிலிருந்து இப்போதுவரை ஆனால் சிலதை தவிர்க்க வேண்டி இருப்பதால் தவிர்க்க வேண்டியதாகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ... சமீபத்தில் புளிப்பு தோசை சாப்பிட்டுப் பார்க்கவில்லை.  சீக்கிரமே முயற்சிக்கவே வேண்டும்!  என்ன, இரண்டு கரண்டி மாவையாவது தனியே வெளியே வைத்துவிட வேண்டும்.  அவ்வளவுதானே!  சத்து, நல்லது எல்லாம் அப்புறம்..   ருசி...   அதுதான் ஃபர்ஸ்ட்!

      நீக்கு
    2. சென்னை வெயிலுக்கு ரெண்டு நாள்லயே நல்லா புளிச்சிருமே.

      கீதா

      நீக்கு
    3. ரெண்டு நாளா..  ஒருநாள் போதுமே!  முயற்சித்து விடுகிறேன்.  பாஸ் கிட்ட சொல்றதை விட மருமகள் கிட்ட சொன்னா நினைவா நடக்கும்!

      நீக்கு
    4. குளிர்சாதனப்பெட்டியில் வைச்சாலே புளிப்பு வந்துடுதே? வெளியில் வைச்சால் இன்னமும் புளிக்கும். புளிச்ச தோசை மாவைச் சின்ன இலுப்பச்சட்டியில் குண்டு குண்டாக ஊற்றி வேக வைத்து மி.பொடியோடு சாப்பிட்டால் சொர்க்கம்.

      நீக்கு
    5. என்னோட கருத்துகளை யாரும் படிச்சதாத் தெரியலை. அதிலேயே வரும் மற்றக் கருத்துகளுக்கு பதில் இருக்கு. ஆனால் என்னோட கருத்துகளுக்குக் காணோம். போகட்டும் கமலா ஹரிஹரன் இன்னிக்கு லீவ் எடுத்திருக்காரா என்ன? காணோமே!

      நீக்கு
    6. மன்னிச்சுக்கோங்க கீதா அக்கா..

      பிரிஜுல வச்சாலும் புளிக்கிறது என்றாலும் அதற்கு நாட்கள் பிடிக்கும். அதற்குள் செலவுவு செய்தால் போதுமே.. ஒருவேளை,வேலையே இல்லை என்று பிரிட்ஜை ஆப் செய்து வைத்து விடுவீர்களோ... ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    7. கமலா அக்காவை மூன்று நாட்களாக காணோம்.

      1. வீட்டில் விருந்தினர் வருகை,. மகன் வந்திருக்கலாம்.
      2. .அவர்களோடு வெளியே சென்றிருக்கலாம்.
      3. உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்.

      மூன்றாவது காரணம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.

      நீக்கு
  12. ஆரூர்தாஸின் கட்டுரையை ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன் அது தினத்தந்தியில் வெளியான பொழுது படித்திருக்கிறேன். தினத்தந்தியில் சனிக்கிழமை வரும். வளசரவாக்கத்தில் சாவித்திரிக்கு ஒரு மாந்தோப்பு இருந்ததென்றும் அங்குதான் அவர் தன்னோடு இருந்த தன் பாட்டிக்கு சமாதி கட்டினார் என்றும், அதை விஜயசாமுண்டீஸ்வரி பார்க்க பிரியப்பட்டதால் ஒரு நாள் அவரை காரில் அழைத்துக்கொண்டு வளசரவாக்கம் முழுக்க சுற்றினாராம். ஆனால் வளசரவாக்கத்தில் நிறைய கட்டிடங்கள் வந்து, அந்த இடம் அடியோடு மாறி விட்டதால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் எழுதியிருந்தார். அந்த மாந்தோப்பை சாவித்திரி தன் பெயரில் பதிவு செய்ததில் ஜெமினிக்கு வருத்தமாம். அதற்கு முன் வாங்கிய சொத்துக்களை இருவர் பெயரிலும்தான் பதிவு செய்வார்களாம்.
    இவை எல்லாமே ஆரூர்தாஸ் எழுதியிருந்தவைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா..  சுவாரஸ்யமான தகவல்கள்.  சாவித்ரி மீதுதான் தவறு.  ஏற்கெனவே திருமணமான ஜெமினியை அவர் நாடி இருக்கக் கூடாது.

      நீக்கு
    2. ஒரு தவறு எப்படி இன்னொரு தவறை நியாயப்படுத்தும்? நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் ஜெமினியின்மீது தவறில்லை என்பதுபோலத் தொனிக்கிறது.

      நீக்கு
    3. ஜெமினி மீது தவறில்லை என்றும் சொல்ல முடியாது...  அவர் "எத்தனை தவறு"கள் செய்தாரோ...  ரேகாவைக் கேட்டால் வெடித்து விடுவார்!

      நீக்கு
    4. சாவித்திரி கணேஷ் இறுதி நாட்களில், கோமா நிலையில் இருந்தபோது அவருக்காக ஒவ்வொரு நாளும் ஆஸ்பத்திரிக்கு ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருப்பதாக ஜெமினி தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் புலம்பியதாக அவருடைய நண்பர் வட்டத்தில் அப்போது இருந்த என்னுடைய அலுவலக நண்பர் கூறினார்.

      நீக்கு
    5. ஜெமினியிடம் இல்லாத பணமா ?!!

      நீக்கு
  13. கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். தனிப்பட்ட அனுபவங்கள் மீக்கும் உண்டு இந்த மற்றவர்கள் நம் முயற்சி இல்லாமல் நாம் மற்றவர்களாகிப் போனது....

    எல்லோரையும் ஒரே போன்று நினைக்கலாம், நடத்தலாம் என்றாலும் சில சமயம் சிலரிடம் எல்லை போட்டுக் கொண்டு பழகுவது நல்லதாகிறதே! இது நாட்டிற்கும் வீட்டிற்கும் பொருந்தும்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையராஜா குரல்தான் நினைவுக்கு வருகிறது... 

      "அதுக்கெல்லாம் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும், ஞானம் வேண்டும்டோய்யா "

      நீக்கு
  14. ஜோக்குகள் உபயம் கல்கியா? சிரிப்பே வரவில்லை.
    பாசமலர் ஸ்டில்லில் வருத்தத்தையும், தர்மசங்கடத்தையும் எவ்வளவு அழகாக உணர்த்துகிறது சாவித்திரியின் முகம்!
    ஏ.கே.செட்டியாரின் அனுபவங்கள் சுவாரஸ்யம். மௌனராகம் நினைவுக்கு வந்தது.
    ரயில்வே போட்டி அறிவிப்பில் கமலா(அக்கா)வை மட்டும் ரெடியா என்று கேட்க காரணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோக்ஸ் இதயம் பேசுகிறது 1978 இதழ்கள்.

      என்ன இருந்தாலும் சாவித்ரி நடிகையர் திலகம் அல்லவா....

      போட்டி அறிவிப்பு ஒன்றைப் பார்த்து கமலா அக்கா அதில் கலந்து கொடினதை சென்ற வியாழன்களில் சொல்லி இருந்ததால்...! 

      யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், கலந்து கொள்ளவேண்டும் என்றுதானே இங்கு பகிர்ந்திருக்கிறேன்? 

      என்ன, நீங்கள் யாராவது  ஜெயித்தால் எனக்கு 25% கமிஷன்!  நான்தானே சொன்னேன்!

      நீக்கு
  15. கோடை விடுமுறை எந்த வருடம்? 1971 ஆகஸ்ட் முதல் நான் நாகை விட்டு சென்னை வந்துவிட்டேன். அதற்கு முன் என்றால் நாகையில் இருந்திருப்பேன்; அல்லது லீவுக்கு அண்ணன்கள் யார் வீட்டுக்காவது சென்றிருந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடமெல்லாம் நினைவில்லை.   ஏதோ இது நினைவில் இருக்கிறது.  அவ்வளவுதான்!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஆ இப்போ எனக்கு ஶ்ரீராமின் வயசு தெரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ஹா ஹா ஹா:)))

      நீக்கு
  16. கதம்பம் மிகவும் அருமை! அதுவும் பாசமலர் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  17. பழைய நாட்களின் பானகம் பற்றிய நினைவுகள் எனக்கும் மீண்டு வந்தன! அந்த வயதில் அது அத்தனை சுவையாக இருக்கும்!

    புளிப்பு தோசை சாப்பிட்டால் சர்க்கரை அளவு உயரும்! கபம் பெருகும்!!இது உண்மை தான் என்பதை அனுபத்தில் உணர்ந்திருக்கிறேன். என்னிடம் ஒரு மருத்துவர் பேசிய போது சர்க்கரை தனக்கும் தன் மனைவிக்கும் இருப்பதால் அரை கிலோ மட்டும் இட்லிக்கு அரைத்து 2 நாட்களில் அதை உபயோகித்து அடுத்தடுத்த நாட்கள் பொங்கல், உப்புமா என்று தொடர்ந்து அப்புறம் தான் மறுபடியும் இட்லிக்கு வருவதாகச் சொன்னார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன அக்கா..  ஒருதரம் சாப்பிட்டு பார்க்கப் போகிறேன்.  அவ்வளவுதானே! 

      // பொங்கல், உப்புமா என்று தொடர்ந்து அப்புறம் தான் மறுபடியும் இட்லிக்கு வருவதாகச் //
       
      ஏன்?  அவர்கள் வீட்டில் குளிர்ச்சாதனப்பெட்டி இல்லையாமே?!!

      நீக்கு
    2. அரை கிலோ அரிசியா? அரைத்த மாவு மட்டும் அரை கிலோவா? ஏனெனில் அரைக்கிலோவுக்கும் குறைவா அரிசி, உளுந்து போட்டு அரைச்ச மாவைத் தீர்க்கவே படாத பாடு படுகிறேனே!நானும் நடுவில் மாவை வைச்சுட்டு வேறே ஏதேனும் பண்ணுவேன். பொங்கல், உப்புமானு இல்லை, பெசஃர்ஃஅட் தோசை, கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சப்பாத்தி,என்று பண்ணுவேன். இதில் சிறுதானிய தோசைகள் பண்ணும்போது அரிசிமாவுக்குப் பதிலாக அரைத்த இட்லி மாவில் இருந்து இரண்டு கரண்டி எடுத்துப்பேன். அப்படியும் மாவு செல்வாகிறதில்லை நடுவில் கேழ்வரகு வெல்லத் தோசை, உப்பு தோசை, கோதுமை வெல்லத் தோசை உப்பு தோசைனு பண்ணுவதும் உண்டு. மாவு என்னமோ பத்து நாட்களாவது வரும்.

      நீக்கு
    3. நிச்சயம் ஓரிரு நாட்கள் ஆசைக்காக சாப்பிடுவது தவறில்லை,ஸ்ரீராம்!
      தொடர்ந்து புளித்தமாவில் செய்யும் தோசை, இட்லி தான் பிரச்சினை!
      ஒரு முறை நாட்டு மருந்து கடைக்கு கடுமையான ஜலதோஷத்திற்காக மருந்து வாங்கச் சென்றிருந்தேன். அங்கே தான் இரவில் இட்லி, தோசை சாப்பிடுகிறீர்களா என்று கேட்டு பழைய மாவில் அதுவும் இரவு சாப்பிடும்போது நெஞ்சில் கபம் பெருகும் என்று சொன்னார்கள். நான் வழக்கமாக செல்லும் கோட்டக்கல் மருத்துவரிடம் சென்று இதைச் சொல்லி விசாரித்தபோது அவர் தான் மேற்கண்டவற்றை சொன்னார்.
      குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும் மாவைப்பற்றித்தான் அவர் சொன்னார். ஃபிரெஷாக அரைத்த மாவில் தயாரித்த இட்லி மாவுக்கும் 2 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்த மாவுக்கும் எப்படி வித்தியாசம் வருமென்பதை அந்தந்த நாட்களில் fasting sugar பார்த்து தெரிந்து கொள்ளலாம்!

      நீக்கு
    4. நீங்கள் இரண்டுபேர் மட்டும் இருப்பதால் மாவு செலவாக மாட்டேன் என்கிறது கீதா அக்கா.. முந்தைய காலங்களை நினைத்துப் பாருங்கள்.. எவ்வளவு அரைத்தாலும் காணாது!

      நீக்கு
  18. நகைச்சுவை பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்டி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பு என் பேரில் இல்லை.  அப்போது வந்த ஜோக்ஸ்...   வரிசையாக பகிர்ந்து வருகிறேன்!

      நீக்கு
  19. //இந்தியா காந்தியின் கொள்கைகளிருந்து படிப்படியாக மாறி வருகிறது என்பது புரிகிறது.//

    வேஷ்டி காட்டும் ஊரில் கோவணம் கட்ட முடியாது!

    கௌபீனம் (கோவணம்)
    கட்டிய பிறகே வேஷ்டி கட்ட வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி  இப்பதான் ஜெட்டி போடறாங்களே...

      நீக்கு
  20. ///குடிக்கும் நீரை விலைகள் பேசி விற்கின்ற கூட்டம் இங்கே ///

    இன்றைய டமிளனுக்கு எல்லாமே தலைகீழ் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனவ நண்பன் எப்போ வந்தது?  அப்பவே வழக்கமான பழக்கம்தானே!  பழக்கமான வழக்கம்தானே என்று சொல்ல வேண்டுமோ?!

      நீக்கு
  21. ஆருர் தாஸ் - வாசிக்க வாசிக்க ரொம்ப சுவாரகியமாக இருந்தது.

    ஜெமினி சாவித்திரி இப்படி எல்லாம் இருந்திருக்காங்க என்பது உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இது மாதிரி இவர்கள் எழுதிய புத்தகங்களை நான் இணையத்தில் தேடிப் பார்ப்பேன்.  கிடைக்காது!  

      நீக்கு
  22. தாராசுரம் தானே படங்கள்!!!? படங்கள் சூப்பர்.

    அழகு மயிலாட என்று ஆடியபடியே வரவா//

    சிரித்துவிட்டேன். ஸ்ரீராம் நீங்க ஆடிக் கொண்டே வருவது போல கற்பனை வேற!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தக்கதீம்த...  தக்கதீம்த...   ஆ.....   தக்கதீம்த...  தக்கதீம்த ஆ..... மத ஸநிஸ மத ஸநிஸ மா பா....

      நீக்கு
  23. டிஜிட்டல் கடிகாரம் டிசைனா...போட்டியா....கமலாக்கான்னு பார்த்ததும் கதை எழுத ஏதாச்சும் போட்டியோன்னு நினைச்சேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கனகா அவங்க கடைசில சொன்னது போல....உடைக்குப் பதிலாகப் புத்தகம்...ஆஹான்னு இருந்துச்சு.

    நூலகம் போய் எவ்வளவு வருஷங்கள் ஆச்சுன்னு ஏக்கமும் கூடவே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் லைப்ரரி பக்கம் பொய் வருடங்களாச்சு...   ஒரு காலத்துல லைப்ரேரியையே பார்த்துக்கிட்டிட்டவன்..   அங்கதான் என் முதல் காதலி...   வேணாம்!

      நீக்கு
    2. எனக்கும் நூலகம் போய் எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது என்று தோன்றியது. பி.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்தபோது யூனிவர்சிட்டி லைப்ரரி போய் சுஜாதா மற்றும் பல நாவல்களை (காலேஜுக்கு கட் அடித்துவிட்டு) படித்தது நினைவுக்கு வந்தது. எனக்குப் போடவேண்டிய ஆப்சண்ட் எனக்கு அடுத்தவனுக்குப் போய்ச்சேர நான் தப்பித்தேன். (நிறைய நாட்கள்)

      நீக்கு
    3. நமக்கு அங்கு மட்டும்தான் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும் இடம். இப்போது இணையத்தில் இல்லாததே இல்லை!

      நீக்கு
  25. A. K செட்டியாரின் பயண அனுபவங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. பியனோ பினிக்ஸ் இந்த அனுபவத்தை வாசித்ததும். மௌனராகத்தில் ரேவதி, திருமணம் ஆகி தில்லிக்குச் சென்ற பிறகு தில்லியில், ஒரு ஹிந்திக்காரருக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பது நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. இடுக்கண் வருங்கால் நகுக, வாயில்லா ஜீவன்....புன்னகைக்க வைத்தன. பொன் மொழிகள் ஜோக்கின் வார்த்தையாடலை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நன்றி சொல்லக்கூடாது.  அவை என்னுடையவை அல்ல!!

      நீக்கு
  27. கதம்பம் கண்டோம் .

    ஜோக்ஸ் பட்டாசு, வாயில்லா ஜீவன் சிரிப்பைக் தந்தது.

    பதிலளிநீக்கு
  28. தலைப்புப் பார்த்ததும், ஶ்ரீராமுக்குத்தான் யாரோ சொல்லியிருக்கிறார்கள் என நினைச்சேன் ஹா ஹா ஹா.. ஏனெனில் ஶ்ரீராமுக்குத்தான் இப்படிப் பேசுவோர் அகப்படுவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   தலைப்பில்  வீ யை  கட் செய்திருக்கலாம் என்று தோன்றியது!

      நீக்கு
    2. கரீட்டூ.. "வா" போட்டிருக்கலாமோ.... லாமோ...லாமோ...:)

      நீக்கு
  29. பழைய சுவையோ? அது நம் இளமைக்காலத்தைப் போல தெரும்பக் கிடைக்கவே கிடைக்காது ஹா ஹா ஹா..

    இந்தப் பானகம்... கேள்விப்பட்டிருக்கிறேன், கதைகளில் பாடல்களில் பார்த்திருக்கிறேன், ஆனா நான் குடித்ததாக நினைவில்லை... இனிப்பாக இருக்கும்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானகம் பாடல்களிலா?  எந்தப் பாடல்?  பானகம் என்பது வாசனை போட்ட வெல்லத்தண்ணீர்!

      நீக்கு
    2. உப்பூடி எல்லாம் குறொஸ் குவெஸ்ஸன் கேய்க்கப்பிடா கர்:)).. காதில விழுந்திருக்கு ஆனா இதுவரை சுவைத்ததில்லையாக்கும்...

      நீக்கு
  30. அதெப்படி? ஶ்ரீராம் நீங்களும் இலங்கை மக்கள்போல அம்மம்மா.. அப்பம்மா எனத்தான் கூப்பிடிவீங்களோ? இப்போ உங்கள் மகனுக்குக் குழந்தை கிடைச்சால், நீங்கள் அப்பப்பா எனத்தான் பழக்குவீங்களோ?

    இது எப்படி தமிழ் நாட்டில் இருக்கு? ஆச்சரியமாக இருக்கெனக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசிக்கல்லி நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம்.  ஆக்சுவல்லி இலங்கை வானொலி "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள் Happy Birthday to you" ஞாபகத்தில்தான் அப்படி எழுதினேன்!

      சில ஊர்களில் அப்பத்தா என்பார்கள்.  அம்மாயி என்பார்கள்!

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ அதானே பார்த்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதுதான் எதுகை மோனை ஆக இருக்குமோ?:)))

      நீக்கு
  31. நானும் இதுவரை பொறுத்துப் பார்த்து விட்டேன். யாரும் நியூஸ் ரூம் பற்றி விசாரிக்கவில்லை. புல்டோசர் வந்து விட்டதா?

    நீங்கள் என்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை பார்ப்பதில்லை என்று தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... எங்கே ஞாபகப்படுத்தி விட்டால் மறுபடியும் போட்டு படுத்தி விடுவானோ என்று எல்லோரும் கம்மென்றிருக்கிறார்கள்!!!

      நானும் காத்திருந்தேன், பார்த்திருந்தேன்.  நீங்களும் கேட்கவில்லை.  அதுலயே பாதி புரிஞ்சுக்கிட்டேன்!

      உங்கள் மெயில்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  சிலவற்றை பாசிட்டிவுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஅ பாருங்கோ ஜே கே ஐயாவுக்கும் எனக்கும் மட்டுமேதான் அக்கரை சே சே டங்கு ஸ்லிப்பாகுதே அக்கறையாக்கும்:)))...

      நீக்கு
  32. புளித்தோசை கிடைக்குதில்லையோ? எங்கட வீட்டுக்கு வாங்கோ தாறேன் ஹா ஹா ஹா.. இந்தக் குளிருக்கு பொங்காது, பொங்கட்டுமே என 2 நாட்கள் வெளியே வச்சிருந்தால் பச்சைப்புளி புளிக்கும் பிறகென்ன ஆரும் சாப்பிட மாட்டினம், கஸ்டப்பட்டுச் செய்திட்டனே எனும் கவலையில நான் தான் கொஞ்சம் சுட்டு பிறகு அதை பிரிஜ்ஜில வச்சு பின்பு எறிவேன் ஹா ஹா ஹா..

    உடனே உணவை எறியக் கவலையாக இருக்கும், ஆனால் 2 நாட்கள் பிரிஜ்ஜில் வச்சு எறியும்போது கவலை இருக்கவே இருக்காது ஏனெனில் பழசைத்தானே எறிகிறேன் எனும் நினைப்பு ஹா ஹா ஹா.. இது பலபேரிடம்[பெண்களிடம்] இருக்குமென நினைக்கிறேன்.

    அதனால இப்போ பொயிங்காட்டிலும் பறவாயில்லை என, உடனே சுட்டு முடிச்சு கழுவிப்போடுவேன் பாத்திரத்தையும்.

    இலங்கையில நாங்கள் இருந்த காலத்தில தோசை இட்லி எனில் மாதம் 4 அல்லது 2 தடவை அதுவும் விரத நாட்களில் மட்டுமே[பொதுவா வெள்ளிக்கிழமை டின்னர்] இவற்றைச் செய்வோம், நிறைய செய்து, அப்படியே நிறைய சட்னி சாம்பாறு செய்து, அனைத்தையும் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் பக் பண்ணிக் குடுத்து முடிச்சிடுவோம்.

    இதேபோல அப்பம் எனில் சனி/ஞாயிறு காலை உணவாகச் செய்வோம் ஏனெனில் முட்டை அப்பம் செய்யோணுமெல்லோ:)... அம்மா செய்யச் செய்ய பக் பண்ணி தருவா, நான் தான் ஓடி ஓடி அருகில் 3 வீடுகளுக்குக் குடுப்பேன்[ இது கட்டாயமாக நடக்கும், அவர்களும் அப்படியேதான் தருவார்கள் நமக்கு].

    மற்றும்படி வச்சு சுடுவது, அடுத்த நாளும் செய்வது என்பது.. அப்படி ஒன்றிருக்கென்றே தெரியாது எனக்கு.... வெளிநாடு வந்துதான், எல்லோரோடும் இரண்டறக் கலந்து எல்லாமே வச்சு வச்சு சாப்பிடும் பழக்கம் உருவாச்சு[மிச்சம் பிடிக்கிறோமாம்:)], ஆனா இப்போ பழையபடி கொஞ்சமாக செய்து உடனேயே தீர்த்திட நினைத்து மாறி வருகிறேன், என்னில் ஒரு பழக்கம், மிஞ்சினாலும் பறவாயில்லை, போதாமல் போயிடக்கூடாதென அள்ளிப் போடுவேன்... இப்போ அதை மாற்றி வருகிறேன்.

    யூ ரியூப்பில் பார்க்கிறேன், 4 பெரியவர்கள் ஒரு குழந்தை.. மொத்தம் 12 வடைகள்[சின்ன வடைதான்] சுடுகிறார் அப்பெண்... நான் எனில் 40 வடைக்கு குறையாமல் சுடுவேன்... இன்னும் ஒரு வடை இருக்கோ எனக் கேட்டால், இல்லை எனச் சொன்னால் நான் கவலையாகிடுவேன்...

    ஆனால் இப்பழக்கத்தை மாற்ற நினைக்கிறேன் இப்போ... ஹையோ ஓவரா அலட்டிட்டமோ என்ன பண்ண:)) எழுத தொடங்கினால் வருதே:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பத்தில் முட்டையா?  பார்றா.... 
       
      வார்த்த (சுட்ட) தோசையை பிரிஜ்ஜில் வைத்து தூக்கிப் போடுவினம் என்று சொன்னபோது சிரித்திட்டன்.  ஓரு திப்பிச யோசனை.  அதை மறுநாள் பிரிஜ்ஜிலிருந்து எடுத்து துண்டு துண்டாக நறுக்கி எண்ணெயில் குழைத்த மிளகாய்ப்பொடியில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கலாமெல்லோ...

      எங்கள் வீட்டிலும் வடையோ, இட்லியோ, நிறையதான் செய்வோம்.  அதே கான்செப்ட்தான்.  யாரும் இன்னொன்று  என்று கேட்டு இல்லை என்று சொல்லக்கூடாது என்று...

      நீக்கு
  33. பழைய நினைவுக/ல் நன்று. நான் கரும்புச் சாறு முதன்முதலில் குடிச்சது 2003 ஆம் ஆண்டு கனடாவில்தான்.
    ஆனா எங்க?ள் வீட்டில் பெருஞ்சாதிக் கரும்பு, கடும் பேப்பிள் நிறத்தில் மொத்தமாக, பெரிசாக உயர்ந்து வளரும்.. நின்றது, சும்மாதான் சாப்பிட்டதுண்டு சாறாக என்றைக்குமே குடிச்சதில்லை.

    கவிதை.. கற்பனை உண்மைதான், ஆனா ஒரு மாற்றம்.. கொஞ்சநாளில் என்றில்லை.. அப்பவே அவர்களுக்கு நாம் "மற்றவர்கள்" தானே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்குள்ள கடைகளில் பிழியப்படும் கரும்பு ஆலைக்குச் செல்வது.  வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.  அதை  சக்க்க்க்க்க்க்க்க்கையாகும்வரை பிழிநெடுப்பார்கள்.  பிழியும்போது  லெமன், இஞ்சி வைத்து நசுக்குவார்கள்.  இரண்டு நாட்களுக்குமுன் குடித்த இடத்தில் அன்னாசித்துண்டு வைத்து நசுக்கிப் பிழிந்தார்கள்.

      நீக்கு
    2. என்னாது அன்னாசித்துண்டோ ஹா ஹா ஹா.
      மும்பாய் அவுரங்கபாத்தில மாட்டை சுற்றவிட்டு பிழிஞ்சு தந்தினம் குடிச்சோம், இன்னுமொரு இடத்தில் திரும்பிப் பார்க்குமுன், ஒரு ஜக்கில ஏதோ வைத்து டக்கென சாற்றில ஊற்றி விட்டார்.. சகரினாகா இருக்குமோ என சந்தேகம் வந்துது.. இனிப்புக்காக.

      நீக்கு
    3. மாட்டை வைத்து சுற்றுகிறார்களா? இங்கெல்லாம் கையால் சுற்றும் மெஷின் தான். முடிந்தால் பின்னர் ஃபோட்டோவோ, வீடியோவோ போடுகிறேன்.

      நீக்கு
    4. மஹாராஷ்ட்ராவில் உள் கிராமங்களில் எல்லாம் கரும்புச் சாற்றை மாட்டை வைத்துத் தான் எடுக்கிறார்கள். இன்னமும் அப்படியே இருக்கு என்பது அதிரா மூலம் தெரிகிறது. கரும்;பு, இஞ்சி, எலுமிச்சை, சில சமயம் எலுமிச்சைக்குப் பதிலாக பம்ப்ளிமாஸ் (கட்டாயம் அன்னாசி கூட பம்ப்ளிமாஸ் போடுவாங்க._ ஜூஸ் குடிச்சால் வடக்கே குடிக்கணும். சர்க்கரை எல்லாம் கிடையாது நாம் கேட்டால் மட்டும் ஐஸ். இல்லைனா அதுவும் போட்டுக் கெடுக்க மாட்டாங்க. மாதுளை ஜூஸ் அபாரமாக இருக்கும். இங்கே ஜூஸ் கடையில் மாதுளை ஜூஸில் பாலை விட்டுக் கெடுத்துடுறாங்க.முன்னரும் சொன்ன நினைவு.

      நீக்கு
  34. வழக்கமான பழக்கமோ! பழக்கமான வழக்கமோ

    நேற்று தஞ்சையில்
    தேரோட்டத்தின் போது பல்லாயிரக் கணக்கான பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன..

    ஊரெங்கும் காலி பாட்டில்கள்
    மினுமினுக்கும் தாள்கள்
    மட்டைத் தட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தேரோட்டத்தின் போது பல்லாயிரக் கணக்கான பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன.. //

      அடப்பாவிகளா...  சாமி திருவிழாவின்போதுமா?  மக்கள் மனதிலிருந்து நியாயம் தர்மம், குற்ற உணர்ச்சி  எல்லாவற்றையும் எடுத்து விடுவார்கள் போல.

      நீக்கு
    2. //ஊரெங்கும் காலி பாட்டில்கள்
      மினுமினுக்கும் தாள்கள்
      மட்டைத் தட்டுகள்///

      நான் யூஸ் பொட்டில்கள் என்றெல்லோ நினைச்சேன் ஹா ஹா ஹா.
      இம்முறை ஊருக்குப்போயிருந்தபோது, கோயிலில் கச்சான் வாங்கிச் சாப்பிட்டுப்போட்டு, கோதைக் கீழே போட முடியாமல் கை கூசியது, பழக்கப்பட்டு விட்டோமெல்லோ கீழே போடாமல்...

      நீக்கு
  35. பாசமலர் தொகுப்பு சுவாரஷ்யம், படிக்க இனிமையாக இருக்குது. ஆனா அந்தக் காலங்களில் ஹீரோ எனில் ஏதோ உலகத்திலேயே பெரியவர்கள்போல, கடவுள்போல தான் எல்லோரும் அவர்களை நினைத்திருந்தமாதிரி இருக்கு..

    இப்போதெல்லாம் அப்படி இல்லையே, குழந்தைகூட சிம்பிளாக ஹீரோக்களைக் கண்டால் பேசுகிறதே.. விஞ்ஞான வளர்ச்சியாலோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சுவாரஷ்யம் .. ஷ் வராது... ஸ்...

      // அந்தக் காலங்களில் ஹீரோ எனில் ஏதோ உலகத்திலேயே பெரியவர்கள்போல, கடவுள்போல தான் எல்லோரும் //

      சிவாஜி படங்களில் அப்படி சொல்ல முடியாது.  திருடனாக, நண்பனின் மனைவியை கவர்பவனாக, கொலைகாரனாக எல்லாம் நடித்திருக்கிறார். ஊமையாக, கோழையாக, மாற்றுத்திறனாளியாக...

      நீக்கு
    2. ஓ மை கடவுளே... ஷ் வராதோ... ஹா ஹா ஹா:)...
      நான் சொல்ல வந்தது, பொதுமக்களோடு தொடர்புகொள்வதை ஶ்ரீராம்... அவரைப் பார்ப்பதெனில் முடியாத விசயமெல்லோ..

      எங்கோ ரஜனி அங்கிள் சொல்லியிருக்கிறார் ஜே அம்மா படியால ஏறிப்போகும்போது அதற்காக எங்கோ போய் காத்திருந்து பார்த்தேன் என.. அப்படிச் சொன்னேன்.. இப்போ எல்லோரும் ஹீரோ எல்லோரும் ஹீரோயின் வீட்டுக்கு வீடு நடிப்பவர்கள் வந்துவிட்டனர், யூ ரியூப் ஓனர்களைப்போல ஹா ஹா ஹா.. அதனால மலிவாகி விட்டது என்றேன்:))

      நீக்கு
    3. ஆமாம்! நீங்கள் சொல்வது உண்மைதான். அந்தக் காலத்தில் அரிதாக இருந்த இந்த விஷயங்கள் எல்லாம் இப்போது மிகவும் எளிதாகி விட்டன.

      நீக்கு
  36. சிவாஜி அங்கிள் கேள்வி கேட்கும் விதம்... ஹா ஹா ஹா என்மனதிலும் அதே கேள்விதான் ஓடியதே[பிக்க்க்கோஸ் எனக்கும் புரியவில்லை அவர் சொல்வது:))]]

    ///சிவாஜி:– ‘‘சொல்லு. நீதான் சொல்லிக்கிட்டிருக்கே. நான் கேட்டுக்கிட்டிருக்கேன். நல்லாருக்கு. சொல்லு.’’///
    ஹா ஹா ஹா உண்மையில் இப்படித்தான் எனக்கும் இருக்கு:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு தமிழ் அறிவுடன் ஒருவர் வந்திருக்கிறார் என்றதும் அசந்து விட்டார் போல...  அல்லது முதல்முறையே பயமில்லாமல் பட்பட்டென்று பதிலளித்த விதம்...

      நீக்கு
  37. //பழைய நினைவிலிருந்து....//

    படங்கள் பார்க்க அஜந்தா, எல்லோறா குகைகள் பார்த்த நினைவு வருது, இப்படித்தான் அங்கும் .

    //போட்டி... ஐந்து லட்சம் பரிசு... கமலாக்கா ரெடியா?

    ///
    மீயும் மீயும் ரெடீ..ஈஈஈஈஈஈஈஈ:)... ஆயிரம் பொற்காசுகள்.. ஆயிரம் பொற்காசுகள் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியன் ரெயில்வே தளம் சென்று உங்கள் ஐடியாவை பகிருங்கள்.  கூகுள் செய்து விவரம் பெறுங்கள்.  பரிசு வெல்லுங்கள்.
        
      நான் சொன்ன நேரம் கமலா அக்காவையே இன்னும் காணோம்.  ஒருவேளை இப்பவே கிளம்பி போட்டியில் பங்குபெற சென்று விட்டாரோ என்னவோ...!

      நீக்கு
  38. உண்மையிலேயே ச்ச்ச்ச்ச்சும்மா பார்த்துவிட்டுப் போகத்தான் அப்பெண் வந்தாவோ லைபிரரிக்கு?:)) டவுட்டா இருக்கெனக்கு ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்?  நைஸாக நகர்த்திக்கொண்டு போக வந்திருப்பார் என்று சந்தேகிக்கிறீர்களா?

      அல்லது, 

      இங்கு வொர்க் பி;பிரம் ஹோம் செய்யும் ஐடி பணியாளர்கள் எல்லாம் ப்ராம்ப்ட்டாக ஆபீஸ் போகும் காரணமா? வெய்யில்-ஏஸி 

      நீக்கு
  39. //பெண்களுக்கு அலமாரி நிறைய சேலைகள் மட்டுமில்ல புத்தகங்கள் இருந்தால் , அதைவிட பிடிக்கும்னு சொல்லனும்னு தோணுதா இப்பவாச்சும்.//

    சத்தியமாக.. எனக்கும் படிக்கிறனோ இல்லையோ தமிழ்ப்புத்தகங்கள் நிறைய அடுக்கி வச்சு அதை அடிக்கடி புரட்டி தடவிப் பார்க்க ஆசை ... ரொம்பப் பிடிக்கும்... முன்பெல்லாம் கண் அங்கிளின் புத்தகங்கள் தேடி வாங்கிச் சேர்த்தேன், இப்போ எல்லாம் நெட் மயமானதும்... கிண்டில் க்கு மாறிட்டேன். ஆனாலும் வச்சிருக்கிறேன், ராணி, கல்கி எல்லாம் ஆராவது பழசு எறியப்போகிறேன் என்றால்... வேண்டாம் என்னிடம் தாங்கோ என லக்கேஜில போட்டு எடுத்து வந்து வச்சிருக்கிறேன்.. படிப்பதுதான்.. குறைவு.. ன்றே சொல்லலாம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லோருக்குமே இருக்கும் வியாதி போல..   கொரோனாவை விட மோசமான தொற்று வியாதி.  எத்தனை புத்தகங்கள் இன்னும் படிக்கப் படாமல் நம் கைபடக் காத்திருக்க, இன்னும் இன்னும் புதுசாக புத்தகங்கள் வாங்கிக்கொண்டு தசரதர் போல வருவோம்!

      நீக்கு
  40. //A K செட்டியார் 1942 ல் எழுதிய 'பயண அனுபவங்கள்' என்கிற நூலிலிருந்து -
    ///
    ஹா ஹா ஹா பழிவாங்கிட்டாராம்:)).. அந்த வயதிலும் பழிவாங்கும் எண்ணம்தானே மேலோங்கி நிற்குது.

    நகைச்சுவைத் தொகுப்பு அனைத்தும் அருமை. ஆனா எனக்கொரு கவலை, இப்படியான நகைச்சுவைகளை இப்பவும் எழுதுகிறார்களோ? எங்கும் காண முடிவதில்லையே..
    படங்களில்தான் நகைச்சுவை பார்க்கிறோம்..

    நான் டெய்லி 4,5 நகைச்சுவைத்தொகுப்பாவது பார்ப்பேன் ரிவியில்... மெயினா கவுண்டமணி-செந்தில் மற்றும் வைகைப்புயல்:))

    ஆனா வடிவேல் அங்கிள் பற்றி சமீபகாலமாக நல்ல பெயர்கள் வராததால் கொஞ்சம் அவர்மேல் கோமம் எனக்கு:)

    பரீட்சைக்கு சகுனம்:)) ஹா ஹா ஹா உண்மைதான் இப்பவும் இப்படி ஏதும் எனில் மனம் கொஞ்சம் சஞ்சலப்படும்தானே இல்லையா?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அதை பழி வாங்குகிறார் என்று நினைக்கிறீர்கள்?  நகைச்சுவை உணர்வு.

      இன்றைய நகைச்சுவைத் தொகுப்பை இவ்வளவு ரசித்திருப்பது நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்!!!

      கவுண்ட்டமணி அங்கிள் வொய்ஃப் முந்தாநாள் காலமாயிட்டாங்க தெரியுமா...  ரீயூஸ் பார்த்தீர்களா?

      நீக்கு
    2. தெரியும் ஶ்ரீராம் பார்த்தேன்... அவருக்கு இப்போ 87 ஆம், மனைவிக்கு 67 ஆம் என்ன கொடுமை பாருங்கோ.. கடவுள் ஏன் இப்படிச் சோதிக்கிறார் என நினைச்சேன்...

      நீக்கு
    3. என்ன ஒரு வயது வித்தியாசம், இல்லை?

      நீக்கு
  41. நியூஸ் ரூமை எடுத்து விட்டீங்கள், நன்றாக இருக்கு. ஏனெனில் வியாளன் எனில் ஒரு குடும்பக் கதைபோல இருக்கும், அதனுள் எதுக்கு சிவ பூசைக்கரடி போல நியூஸ் ரூம்?
    சனிக்கிழமை விருப்பமெனில் அதனை வந்து படிக்கலாம், ஏனையோருக்கு விடுமுறை ஹா ஹா ஹா.

    அத்தோடு, நீங்கள் நிறையக் கலப்படம் செய்திருக்கிறீங்கள் ஶ்ரீராம், அதாவது, போன கிழமைக்கு முந்திய சனியன்று, தலைப்பில் நியூஸ் பற்றி போட்டுவிட்டு, உள்ளே அழகிய சிறுகதை போட்டிருக்கிறீங்க... அப்படிச் செய்யாதீங்கோ.. தலைப்பைப் பார்த்துவிட்டு மக்கள் பலர் ஓபின் பண்ண மாட்டினம், நானும் பலதடவைகள் அப்படித்தான்.

    ஜே கே ஐயா அன்று சொன்னமையால போய்ப் பார்த்துக் கொமெண்ட்டும் போட்டேன், அவரும் நன்றி மறவாமல் அதுக்குப் பதில் போட்டார்...

    அப்போ மீ போட்டு வாறேன் இங்கும் சூப்பர் வெயில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அத்தோடு, நீங்கள் நிறையக் கலப்படம் செய்திருக்கிறீங்கள் ஶ்ரீராம், அதாவது, போன கிழமைக்கு முந்திய சனியன்று, தலைப்பில் நியூஸ் பற்றி போட்டுவிட்டு, உள்ளே அழகிய சிறுகதை போட்டிருக்கிறீங்க... /

      அதிரா  அது கனகாலமாய் வருதே...  தலைப்பிலேயே பாருங்கோ பொசிட்டிவ் செய்தி மற்றும் நான் படிச்ச கதை...  நீங்கள்தான் கவனித்ததில்ளை போல....  

      இப்போ சேர்த்த செய்திகளை ஓரமாய் போட்டு வைச்சிருக்கன்   உங்க கிட்ட தாறன்..  தூக்கி தேம்ஸ்ல போடுங்கோ...

      நீக்கு
    2. அச்சச்சோ.... தென்னையில தேள் கொட்டினதுக்கு பனையில நெறி ஏறிய கதையா இருக்கே இது ஹா ஹா ஹா..

      செய்தியில எதுக்கு பொஸிடிவ் நெகடிவ்... செய்தி எனில் சுடச்சுட அனைத்தையும் சொல்லோணும் அதனால எல்லாத்தையும் சனியிலேயே போட்டிடுங்கோ[நான் என்ன படிக்கவோ போறேன்.. இது அதிராவின் மைண்ட் வொயிஸ் ஹா ஹா ஹா]

      கதை எல்லாம் அன்று வேண்டாம் என்பது என் எண்ணம், செவ்வாய் வியாளனில் கதை பகிரலாம்தானே.

      நீக்கு
    3. //உயிருக்கு போராடிய சிறுவனை நொடியில் காப்பாற்றிய இளைஞர் மற்றும் நான் படிச்ச கதை///

      ஹா ஹா ஹா இப்போ போய்ப் பார்த்தேன் இப்பூடித்தான் இருக்கு, ஆனா புதினம் என்னவெனில் ஶ்ரீராம், சைட் பார் இல் அல்லது நோட்டிபிகேசனில் முதல் பாதியைத்தானே காட்டுது, போஸ்ட்டை திறந்தால் மட்டுமே முழுசும் காட்டும் இதனாலதான் நான் முடிவெடுத்திட்டேன் செய்தி மட்டும் என.. இப்போ ஜொள்ளுங்கோ அடிரால டப்பா?:))) ஹா ஹா ஹா

      நீக்கு
  42. ஆஆஆஆஆஆஆஆஆ மீ தான் 110 ஊஊஊஊஊஊஊ:))) 5 லட்சம் எனக்கே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு ஐந்து லட்சம் கொடுப்பார்களா

      நீக்கு
  43. சொல்ல வந்து மறந்த கவித...கவித.... எப்பவோ படிச்சு மனதில் மறக்காமல் இடம்பிடித்திருப்பது.... ஹைக்கூ..

    எப்பவுமே
    அமைதியா இரு..
    எல்லாம் இருந்தும்
    அமைதியாக இருக்கும்
    நூலகத்தைப்போல.....

    பதிலளிநீக்கு
  44. இன்றைய கதம்பம் நன்றாக இருக்கிறது.
    புளித்த மாவு தோசை, அம்மா நினைவு பகிர்வு எல்லாம் அருமை.

    "மாமனார் மெச்சிய மருமகள்."
    மருமகளிடம் சொன்னால் நினைவாக மாவை எடுத்து வைப்பார் என்றது கேட்டு மகிழ்ச்சி.

    //சிறுவயது விருப்பம் இப்போதும் இருக்குமா என்று தெரியவில்லை. சில விருப்பசுவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.//

    ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... வணக்கம். ஆமாம்.... சிறுவயது ருசிகள் /சிறுவயது என்ன, சமீப கால ருசிகளே மாறிக்கொண்டிருக்கின்றன இல்லையா!

      நீக்கு
  45. மற்றவர்கள் கவிதை யார் எழுதியது நீங்களா?
    எல்லோரும் நம் அவர்கள் என்று சொல்லி இருந்தால் எப்போதும் நம்மை மற்றவர்கள் ஆக்கி இருக்கமாட்டார்களோ என்ற சிந்தனையை தருகிறது கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கவிதை நான் எழுதியது தான். நம்மவர்கள் என்றுதானே அக்கா எல்லோருடனும் பழகுகிறோம்? ஆனால் காலப்போக்கில் மற்றவர்கள் ஆகிவிடுகிறோமே...

      நீக்கு
  46. ஆரூர்தாஸ் பற்றிய செய்தி படித்து இருக்கிறேன்.
    சாவித்திரியும் நிறைய சொல்லி இருக்கிறார் பேட்டிகளில் அதுவும் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற பழைய செய்திகள் சுவாரஸ்யமானவை இல்லையா?

      நீக்கு
  47. பழைய நினைவிலிருந்து கோயில் படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்த வரிகளும் அருமை.

    திருவெண்காடு, மாயவரத்தில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் பழக்கம் இருந்தது.
    என் கணவரும் நிறைய புத்தகங்கள் வாங்கி தருவார்கள். வார மாத இதழ்கள் வாங்குவோம், இப்போது இல்லை .படிப்பது குறைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய நூலக அனுபவங்களே தனி. இப்போது இருக்கும் வசதிகள் அப்போது இல்லை என்பதால் புத்தகங்கள் செய்தித்தாள்கள் வாசிக்க நூலகங்களே வசதி.

      நீக்கு
  48. அப்படியா?..
    கஞ்சி ஆறிடுத்துன்னா எப்ப வேணா சுட வைச்சிக்கலாம்.
    வாழைப்பழத்தை உரிச்சுக் கொடுத்தாத்தான் சாப்பிடுவதற்கு முடியுமா, என்னஹி..
    ஹி.ஹி.. யு ட்யூப்பிலோ, மூத்த எபி ஆசிரியர் குழுவிலோ கேட்டுத்தான் சொல்லுங்களேன், பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இருக்கட்டும் ஜி.வி சார்... இதே சிவாஜி கணேசன் இதே போல முதலாளியாகவும், இதே போல ஜெமினி கணேசன் தொழிலாளர் சங்கத் தலைவராகவும், இன்னொரு படத்தில் நடித்திருக்கிறார்கள்! அது என்ன படம் தெரியுமா?!

      நீக்கு
    2. அதெல்லாம் போகட்டும்.. 'சாய்ந்தாடம்மா... சாய்ந்தாடு கூடவா எங்ஙேயானும் ஓரத்தில் சுட்டிக் காட்ட நினைவுக்கு வரலே.
      அரட்டைலே இருக்கற ஆபத்து இது தான்! இழுக்கற பக்கமெல்லாம் மனசு இழுக்கப்பட்டு கடைசிலே எதுக்காக எதை ஆரம்பித்தோம்ங்கறதே மறந்து போயிடும்.. ஃபேஸ்புக்லே வேறு உறுப்படியா இருந்த வியாழனையும் அரட்டைக்களம்ன்னு அழைப்பு விட ஆரம்பிச்சிட்டாங்களா...

      நீக்கு
  49. அப்பா லட்டர் போட்டு இருக்கிறார், வாயில்லா ஜீவன் கொஞ்சம் சிரிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவையை ரசித்ததற்கு நன்றி அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!