சில நாட்களாக திருமணம் போன்ற விசேஷங்களில் சில மாறுதல்களை கவனித்து வருகிறேன். அதில் ஒன்று இந்த மாறுதல்
காலை டிஃபன் முடிந்து (இட்லி சுமாராக இருந்தாலு, பொங்கல் நன்றாக இருந்தது. சாம்பார் சற்றே கெட்டியாக கூட்டு போல பரிமாறினார்கள். ஒரே ஒரு சட்னி!) எல்லோருக்கும் பழச்சாறு கொடுக்கும் நேரம்.
பழச்சாறு கொடுப்பவர் பழச்சாறு கோப்பைகளை டிரேயில் அடுக்கிக் கொண்டு, கொடுத்துவிட்டு வரும் அதே நேரம் அவர் பின்னாலேயே மக்கள் குடித்துவிட்டு போடும் காலி கோப்பைகளை சேகரிக்க ஒருவர் வாளியுடன் வருகிறார்.
கீழே குப்பை சேர விடுவதில்லை.
பிளஸ், தானாகவே அவ்வப்போது வந்து ஏஸியை சோதித்து சரி செய்யும் மண்டப ஊழியர். ஹோமப்புகை பாதிக்காமல் இருக்க முன்னும் பின்னும் நடந்து மேடை முன் இருக்கும் ஏ ஸி க்களை நிறுத்தி, ஒரு சாய்வாக ஜன்னல் திறந்து, பின் பக்கம் வந்து ஏ ஸி அளவைக் கூட்டி கடமையாக பிஸியாகவே இருந்தார்.
நான் சென்ற இந்த மண்டபத்தில் மேலுமொரு ஏற்பாடு. மண்டபத்துக்குள் யாரும் செருப்பு அணிந்து செல்லக்கூடாது. பாதுகைகளை விட்டுச்செல்ல அப்படியே எதிர்த்தாற்போல் பெரிய இடம். அங்கு விட்டுச் செல்லலாம். அங்கேயே காஃபி குடிக்கலாம்!
தளிகை பட்டப்பா என்று சொன்னார்கள். அவர் இல்லையென்றும், அவர் பிள்ளைகள்தான் கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். எனக்குத் தெரியாது. ஆனால் முதல் பந்திக்குச் சென்றும், ஏற்கெனவே பரிமாறி வைக்கப்படவில்லை என்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
கீழே நிற்கிறார், அவர் சாத்தமுது சாதிப்பவர். அதாவது ரசம் பரிமாறுபவர். சாதாரணமாக நிறைய ஜனங்களுக்கு ரசம் சாதம் சாப்பிடும்போது ரசத்தை ஒரு கப்பில் கேட்கும் பழக்கம் இருக்கிறது. எனக்கும்! சாதாரணமாக நாம் அப்படிக் கேட்கும்போதுதான் கப்பைத் தேடிக்கொண்டு ஓடுவார் பரிமாறர். சமயங்களில் அபப்டியே அஸ்திராயப்பட் ஆகிவிடுவார்! அதிருஷ்டம் இருந்தால் கப்புடன் வருவார். ஆனால், இவர் பாருங்கள், கையில் பத்துப் பனிரெண்டு கப்புகளுடன் தயாராக இருக்கிறார். ரசம் கேட்டால் உடனே புன்னகையுடன் ( இது உண்மையிலேயே சொல்லபப்ட்ட வேண்டியது) ஊற்றிக் கொடுக்கிறார். நான் கலக்காமல் தெளுவாக ஊற்றச் சொன்னேன். முகம் சுளிக்காமல் கொடுத்தார்.
தயிரை ஒரு கப்பில் கொடுத்து விட்டார்கள். போதாமல் மோர் கொடுங்கள் என்றால் இன்னொரு கப் தயிர் சாதித்தார்கள்! பெரிய சைஸ் ஆவக்காய் ஊறுகாய்!
நல்ல ஏற்பாடு.
முகூர்த்தம் என்று குறிப்பிடப்பட்ட சமயத்திலிருந்து முக்கால் மணி கூட்டி டிரைவருக்கு சொல்லி இருந்தேன். அறுபது வயது மாப்பிள்ளை ஒரு பக்கம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அவர் சரிபாதி இன்னொரு மூலையில் ஒரு குழுவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். So calm! ஆனால் அவர்கள் சொன்ன அந்த முகூர்த்த நேரம் தாண்டிதான் அபிஷேகமே நடந்தது. கர்நாடகாகாரர்கள் அப்படிதான் செய்வார்கள் என்று பேசிக்கொண்டார்கள். முகூர்த்த நேரத்தோடு சம்பந்தபப்டுத்தி மொய் கொடுத்து கிளம்ப நினைத்தவர்கள் திட்டமெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம்! நாங்கள் மொய்யை உறவினரிடம் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆனோம்.
இன்று மாலை முதல் திங்கள் மதியம் வரை வெளியில் சாப்பாடு! இரண்டு கல்யாணங்கள். ஆனால் வியாழன் மாலை சங்கீத் என்றார்கள். அதில் சென்று சத்தத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்து விட்டேன்! வெள்ளி அதிகாலை முகூர்த்தம் முடிந்துதான் மாலை வரவேற்பாம். அருகில் இருந்தாலாவது சென்று டிஃபன் சாப்பிட்டு வரலாம்!! தூரம்! எனவே வெள்ளி மாலை முதல் உண்ணும் கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஐடியா! சனிக்கிழமை காலை முதல் அடுத்த திருமணம். திங்கள் அமாவாசை என்பதால் சனி ஞாயிறு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து திங்கள் காலை கட்டு சாதத்தைத் துறந்து ஞாயிறு இரவே வீடு திரும்ப வேண்டிய நிலைமை!
============================================================================================
1941 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தில் 11 ஆம் நம்பரில் என்ன இருக்கிறது என்று பாருங்கள்!
==============================================================================================
இந்த வார கேள்வி!!ஒரு வேண்டாத நண்பர் வழியில் பார்த்துவிட்டு உங்கள் வீட்டுக்குத்தான் திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு வீட்டுக்கு வருகிறேன் என்கிறார். உங்களுக்கு அவர் வருவதில் இஷ்டமில்லை. எப்படி அவரை அவாய்ட் செய்வது என்றும் தெரியவில்லை. என்ன செய்வீர்கள்?
=============================================================================================
பழைய பின்னூட்டங்கள் வரிசையில்... 2019
ஏகாந்தன் ஸார் : ஏற்கனவே ஒரு தடவை, லாசரா வந்து போனதைக் கவனித்தேன். இன்னிக்கு தி. ஜா. -வா.. வரட்டும் !
பானு அக்கா : தொடர்கதையா? வெல்கம்! வெல்கம்! தி.ஜானகிராமன் சாயல் தெரிகிறது. விகடனில் வெளியான முத்திரை கதைகள் பற்றி செய்தியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களை படிக்கும் பொழுதே சிலிர்க்கிறது. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள்! என்னவொரு பொற்காலம்! ஹூம்!
ஜீவி ஸார் :
குடும்ப காலைச் சூழலில் தொடர் ஆரம்பம். ஆரம்பமே மனத்திற்கு இதமாக இருந்தது.
நவீன கதையெல்லாம் கட்டுரை எழுதுகிற பாணி தான். இதிலிருந்து மீட்டு எடுத்து உணர்வு பூர்வமாக கதை பின்னுகிற பழைய பாணிக்கு எடுத்துச் செல்ல இந்தத் தொடர் போலவான எழுத்து முயற்சிகள் உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு பலமளிக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.
'கிருஷ்' ஸார் : ஆனந்த விகடனில் பிலஹரி எழுதிய கதைகளைப் படித்த நினைவிருக்கிறது. இப்போது தேடினால் இவரைப்பற்றி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஜீவி என்னுடன் கா'' விட்டு மாதங்கள் ஆகிறதே! followers list இலிருந்து அவராகவே இரண்டுபதிவுகளிலும் விலகிக் கொண்டுவிட்டார் என்பதால் படித்திருந்தால் என்கிற உங்களுடைய கேள்விக்கு, அவரை வரமாட்டார் பதில் தரமாட்டார் என்று இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். [ இது 'சுவாசிக்கப் போறேங்க' என்னும் அவர் பதிவில் எனக்கு பதிலளிக்கும்போது]
வல்லி : இப்படி சர்க்கரைப் பொங்கல் , அக்காரவடிசில்,வெண்ணெய் போட்ட தயிர் சாதம் எல்லாம் சேர்த்துக் கொடுத்தால் எப்படி ஜீரணிப்பது ஸ்ரீராம்.
ஞாயிற்றுக்கிழமையும் பாதி கொடுத்தால் இன்னும் நிதானமாக அனுபவிப்போமே.
வெங்கட்: குழப்பாப்பம் - குழப்பம்?
ஸ்ரீராம் : முன்னர் குமுதத்தில் "பிளான் பட்டாபி" என்றொரு சித்திரத்தொடர் வந்தது. செல்லம் படங்கள். அதில் ஹோட்டலில் "கொழுக்கட்டை வேண்டுமா? இடியாப்பம் வேண்டுமா?" என்று சர்வர் கேட்டதும் ஒரு கனவான் (அவர் பெயர் சட்டென மறந்து விட்டது... ஷிரோத்கர் என்று நினைவு..) "வாட் கொழு? வாட் இடி? ஒரே குழப்பாப்பம்..." என்பார். அது மறக்கவில்லை.
மறந்தது என்ன? அந்தக்கதையை எழுதியது யார் என்று!
கீதா :ஸ்ரீராம் உங்களுக்கு ஒன்று நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதீத ஈகோ உள்ளவர்கள் மனதளவில் ரொம்ப வீக்காக இருப்பார்கள் அதை மறைக்க அந்த ஈகோவைத் தங்கள் கேடயமாகப் (அதாவது அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டு!!!!!!) பயன்படுத்திக் கொண்டு இருப்பாங்க...குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாத கேஸாக...
எனக்குத் தெரிந்து விசாலி போல வைராக்கியமாகக் கடைசிவரை இருப்பவர்களும் உண்டு. இல்லை பிரிந்து போகும் பெண்களும் உண்டு. இல்லை வைராக்கியம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு வைத்துக் கொண்டு மீண்டும் சகஜமாக இருக்கும் பெண்களையும் பார்க்கிறேன் ஸ்ரீராம். சங்கரன் அளவு இறுக்கமாக இல்லைதான் நான் பார்த்த குடும்பங்களில்...ஆனால் இது போன்ற வார்த்தைகள் எல்லாம் அதான் சங்கரன் விடும் வார்த்தைகள் அதையும் விட அதிகமான அசிங்கமான வார்த்தைகளை அதுவும் அடிக்கடி விடும் ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த சமயம் பிறகு அந்த கணவன் மார்கள் கொஞ்சம் இயல்பாகவும் இருப்பதால் பெண்களும் என்னதான் அவமானப்பட்டாலும் கொஞ்சம் டேக் ஈசியாக தங்கள் மனதை டைவேர்ட் செய்து கொண்டு சகஜமாகப் போய்விடுகிறார்கள்.
பானு : மனிதர்களில் பலருக்கு கோபத்தை எப்படி கையாளுவது என்று தெரியாது. அதுவும் கொடும் சொற்களால் மனைவியை வாட்டாத கணவன்மார்கள் உண்டா? ஸ்ரீராமன் உட்பட(நான் சொல்வது ராமாயண ஸ்ரீராமன்). கீதா அக்கா ஒப்புகொள்ளாவிடிலும் கம்பனும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் மறந்து, மன்னிப்பதில்தான் வாழ்வதின் சிறப்பு இருக்கிறது. அப்படி செய்திருந்தால் விசாலியின் பாத்திரம் இன்னும் உயர்ந்திருக்குமோ?
ஆனால் எதையும் உபதேசம் செய்யாமல் நடந்தது, நடந்தபடி எழுதியிருக்கும் உங்கள் நடை(அப்படி எழுதுவது ரொம்ப கஷ்டம்) மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!
கீதா அக்கா : "ஜனகனின் புத்திரியே!, உன்னை நான் மீட்டது என் கெளரவத்தை நிலைநாட்டவே. இந்த யுத்தம் உன்னைக் கருதி மேற்கொள்ளப் பட்டது அல்ல. என்னுடைய தவங்களினால் தூய்மை பெற்றிருந்த நான் அவற்றின் வலிமை கொண்டும், என் வீரத்தின் வலிமை கொண்டும், இக்ஷ்வாகு குலத்திற்கு நேரிட்ட இழுக்கைக் களைவதற்காகவும், என் வரலாற்றை இழுக்கில்லாமல் நிலைநாட்டவுமே,அவதூறுகளைத் தவிர்க்கவுமே உன்னை மீட்கும் காரணத்தால் இந்தப் போரை மேற்கொண்டேன். இனி நீ எங்கு செல்லவேண்டுமோ அங்கே செல்வாய்! உன் மனம்போல் நீ செல்லலாம். இதோ என் இளவல் லட்சுமணன் இருக்கின்றான், அல்லது பரதனுடனோ நீ யாரோடு வேண்டுமானாலும் வாழலாம்!"//
இவை நான் ராமாயணம் எழுதிய போது வால்மீகியில் இருந்து எடுத்துக்காட்டிய வார்த்தைகள். ஸ்ரீராமன் தன் மனைவியை வார்த்தையால் வாட்டியதாகத் தான் நான் சொல்லி இருக்கேன். இதை எங்கேயும் எப்போவும் மறுத்ததில்லை. என்னோட ஒரே கருத்து சீதை அக்னிப்ரவேசத்தில் புகுந்தது தானாகத் தான் என்பதே! ராமன் செய்யச் சொல்லவில்லை. அக்னியில் புகுந்து நீ நிரூபித்துக்காட்டு என ராமன் எங்கேயும் சொல்லவே இல்லை.
கீதா சாம்பசிவம் : நேரடியாக இல்லைனாலும் ஸ்ரீராமனின் இத்தகைய சுடுசொல் தான் சீதையைத் தீக்குளிக்கவும், பின்னாட்களில் பூமியில் மறையவும் வைத்தது. இத்தனைக்கும் மனமொத்த தம்பதியராகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவனின் நிர்ப்பந்தங்கள் புரிந்த மனைவியாகத் தான் சீதையும் இருந்திருக்கிறாள். ஆனாலும் பிரிவு வரவில்லையா? இங்கே பிரியாமல் குழந்தைகளுக்காக வேண்டியும் சமூகத்தின் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளவும் விசாலி ஓர் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போய்விட்டாள்.
இங்கே சங்கரன் தான்பணி ஓய்வு பெற்றபின்னராவது தன் அகங்காரத்தை மறந்துவிட்டு மனைவியிடம் தனிமையில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். தவறு செய்தது அவர். பாதிக்கப்பட்டது விசாலி. இந்த லக்ஷணத்தில் விசாலி அவருக்கு மன்னிக்கும் சந்தர்ப்பம் கொடுக்கலைனு இன்னும் அவள் மேல் குற்றம். அதான் வாழ்க்கை பூராக் கொடுத்திருந்தாளே! மகன், மருமகள், பேத்தி எல்லோரும் சென்றபின்னர் இருவரும் தனியாக இருந்த சமயங்களை இந்த சங்கரன் என்ன செய்தார்? வீணாகத் தானே கழித்தார்? இந்த அழகில் இசையை ரசிக்கிறாராம்.
ஏஞ்சல் : நற்குணங்களை பிறவிக்குணங்களாக கொண்டாடுவதில் தவறில்லை .துஷ்ட குணங்கள் களை போன்றவை அவற்றை ஆரம்பத்திலேயே வெட்டிடனும் .அதோட இந்த பிறவிக்குணம் அவர் மகனுக்கும் ஜீன்ஸ் வழியே வந்திருந்தா ??
இங்கே உண்மை சம்பவம் ஒரு ஆந்திர பெண் பெற்றோர் பார்த்து மணமுடித்தது கணவன் கொஞ்சம் ஊதாரி முன் கோபி தான சொல்வதை கேட்கவேண்டுமென்ற குணமுள்ளவன் .பெண் வீட்டார் அவசரப்பட்டுவிட்டனர் .ஆனால இருவரிலும் தவறு இருக்கு .பெண்ணின் தவறு அவசரப்பட்டு இவனை திருமணம் செய்தது .பெண்ணுக்கு குழந்தை பிறந்தது ஆனாலும் கணவனுடன் ஒப்புரவாகவில்லை பாஸ்போர்ட் குழந்தைக்கு பெர்த் சர்டிபிகேட் செய்யும்போது இந்த சோ கால்ட் பிறவி கோபக்கார கணவன் என்ன செய்தான் தெரியுமா //இவளுக்கு நிறைய நட்புக்கள் இருக்கு இது எனது குழந்தை இல்லை ..//அந்த பெண் தீயாய் எரிந்துபோனா மனதளவில் உடனே டி என் ஏ டெஸ்ட் எடுத்து ப்ரூவும் செய்து காட்டினா இந்த பிறவி கோபக்காரனை ..இப்படிப்பட்ட கோபக்காரங்களை மன்னிப்பது விஷத்தை குடிப்பதற்கு சமம் .அதோடு டைவர்ஸ் அப்பளை செஞ்சுட்டா
அதிரா : //இந்த அழகில் இசையை ரசிக்கிறாராம்.///
ஹா ஹா ஹா ஆங்ங்ங் விட்டிடாதீங்கோ கீசாக்கா அதானே:)).. வல்லிம்மாவும் அஞ்சுவும் நம்மட கட்சியாம்:))..அ டம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு:)) ஹா ஹா ஹா.மன்னிப்பு மன்னிப்பு என்கிறீங்களே?:)).. எப்பவும் பெண்கள்தான் மன்னிக்கோணும் என ஏன் எதிர்பார்க்கிறீங்க?.. இள வயதில தப்பே பண்ணாத மனைவியை இவர் மன்னிச்சாரா?.. எதுக்காக அப்படி கண்டபடி திட்டினார்ர்?:).. இப்போ மன்னிப்பது தேவ குணம் அசுர குணம் அந்தக் குணம் இந்தக்குணம் என எப்பூடிக் குரல் எழுப்பினாலும் வேலைக்காகாது.. மன்னிச்சால் மட்டும் என்ன பண்ணுவார்.. உடனே மனைவிக்கு தாஜ்மகால் கட்டிடுவாரோ..? இன்னும் வேலை வாங்குவார்ர்.. அதைச் செய் இதைச் செய் என...இப்போகூட அவர் எதையாவது கேட்டு மனைவி மன்னிக்காட்டில் பறவாயில்லை.. தப்பு என கொஞ்சமாவது இறங்கி வரலாம்ம்..//தான் பேசிய சில வார்த்தைகளை சொல்லி விசாலியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றும் அவருக்கு. ஆனால் அவள் அதற்கு எந்த இடமும் தரவில்லை. அந்த வாய்ப்பு வருவதை முடிந்தவரை தடுத்தே வந்தாள்.///இதென்ன இது அவ என்ன வேற்றுக் கிரகத்திலயா இருக்கிறா?:).. யாருமில்லாத நேரத்திலயாவது தடாரெனக் கால்ல விழலாமெல்லோ நெல்லைத்தமிழன் மாதிரி:).. ஹா ஹா ஹா ஏன் எங்கட வீட்டிலும் நடக்கும் பிளீஸ் பிளீஸ் என.. அப்போ பிரச்சனை உடனே தீர்ந்திடுமே:))..இது இப்பவும் ஈகோ.. மனிவியிடம் பேச என்ன அப்பொயின்மெண்ட் வைக்கிறாரோ?:).. அவ மன்னிப்பு கேட்பதற்கு இடமே தரவில்லையாம் கர்ர்ர்:)).. இன்னும் கணவன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என உழைக்கிறாவே அதுவே தேவ குணம்தானாக்கும்:))..ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊ ஹொட்டா ஒரு கப் வூட் அப்பிள் ஊஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).நல்லவேளை எதிர்க்கட்சியினர் நித்திரையாகிட்டினம்:)வழமையாக கீசாக்கா பெண்களுக்கு எதிர்க் கட்சியிலயே நிற்பா:) ஆனா பாருங்கோ அம்பேரிக்கா போகும்போது பிரித்தானியாக் காத்துப் பட்டதால நம் கட்சியில் சேர்ந்திட்டா ஹா ஹா ஹா..
நெல்லை : /இனி அமுதா வயசுக்கு வந்தென்ன வராட்டி என்ன:))// - தன் மூத்த பையனிடமே தங்கின அம்மா, அவனின் மனைவியை கொஞ்சம் படுத்தினார். கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருந்தால்தான் பையனிடமே இருக்கமுடியும் என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். மற்ற பையன்களிடம் சென்று அவர் இருந்ததில்லை (தன் தின வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தொடரணும் என்பதால்). கடைசியில் படுக்கையில் இருந்தபோது, 'உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேனோ' என்று மூத்த மருமகளைக் கேட்டாராம். அதற்கு அந்த மருமகள், 'அப்படியெல்லாம் இல்லையம்மா' என்று சொன்னாரம். என்னிடம் அதைச் சொன்னவர், 'அவரிடம் ஆமாம் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருந்துவிடப்போகிறது. கஷ்டப்படுத்தும்போது தோன்றாதது கடைசி காலத்தில் தோன்றி என்ன புண்ணியம்' என்றார். [அப்படி எல்லாம் இல்லையம்மா என்பதற்கு பதில் அதனால் என்னம்மா. என்று சொல்லி இருந்தால்]
ஸ்ரீராம் : ஆணிடம் அகங்காரம் அல்லது அகம்பாவம் என்பது பிறவிக்குணம்! விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்கள் அடங்கியே ஜெயிப்பவர்கள். ஆண்கள் அந்தக் கலை அறியாதவர்கள்.
சிலபேர் மகிழ்ச்சியா வாழ்வதையே பாவம் என்று நினைத்து விடுகின்றனர். சுலபமாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களிடம் எதையாவது விளக்கிச் சொன்னால் அவர்கள் சொல்லும் விளக்கங்கள் ஆயாசமாய் இருக்கும்.
நெல்லை : நல்லவேளை ஸ்ரீராம்... இந்தக் கதையை விவாதிக்க எல்லோரையும் நேரே அழைத்து கலந்துரையாடல் நிகழ்த்தியிருந்தீங்கன்னா... கீசா மேடம் நிச்சயம் ஒரு கம்போடதான் அங்கு வந்திருப்பாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு இந்த சங்கரன் மீது. ஹா ஹா.
ஆஹா... சங்கரன் மாதிரி எனக்கும் எப்பவும் தனிமையா எங்கேனும் போய்விடணும்னு பல வருடங்களாத் தோணும் ஆசை. சாதாரணமா சாப்பிட பணம் இருக்கு. போதும்.... பந்தங்களிலிருந்து விலகி எங்காவது போலாமா... ஹரித்வார், ரிஷிகேஷ் மாதிரி.. என்று தோணும்.. தோணுது.. குடும்ப பந்தம் என்பது முடிவுறாத சுழல் அல்லவா?
இங்க பதினாறு வருஷம் படுக்கையில் இருந்த கணவனை கண்ணும் கருத்துமா அவர் இறக்கும் வரை பார்த்துக்கிட்ட தேவசேனாக்கள் (டைரக்டர் ஶ்ரீதர் மனைவி) வெகு வெகு அபூர்வமாகிட்ட உலகமாக அல்லவா இருக்கு
நிறைய பேர் கதை நாவல்கள்ல என்ன உபயோகம் இருக்கு? கொஞ்சம் டைம் பாஸ் தவிர என்று நினைத்துவிடுகிறார்கள். அதனால, எழுத்தாளர்னா, ஓ இவர் எழுத்தாளராம்டா என்று கடந்துவிடுகின்றனர்.
அவங்க காலம், சமூகம் பற்றிக் காட்டும் கண்ணாடிகள்.
இத்தகைய கதைகள் ஓரிருவர் மனதை அசைத்துப் பார்த்தாலும் எழுதியதன் நோக்கம் நிறைவேறிடும். இது அத்தகைய தகுதி பெற்ற கதை. பாராட்டுகள் ஶ்ரீராம். இதற்குத் தலைப்பு தேவையில்லை. கடலில் பெய்த மழை, திக்குத் தெரியாத, இலக்கில்லா வாழ்வு, பாலைவனப் பூக்கள் என்று எந்தத் தலைப்பும் இடலாம்
ஏகாந்தன் : பொதுவாக வந்துபோகிற எபி கதை இல்லை இது என்று முதல் பகுதியிலேயே தெரிந்ததில் சந்தோஷம்! திரும்பவும் படித்துப்பார்த்தேன். உறவுகளில் ஆங்காங்கே காணப்படும் உளவியல் சிக்கல்களைத் தீண்டியிருக்கிறீர்கள். இந்தமாதிரி ’உறவாடா உறவுகள்’ இப்படித்தான் முடியும். ‘சுபம்’ஆக முடித்திருந்தால் ஒட்டவைத்ததாக இருந்திருக்கும். அந்த ‘ஸ்டீரியோ டைப்’-இல் மாட்டாமல் தப்பித்துவிட்டீர்கள்! எங்களையும் காத்துவிட்டீர்கள்!
இத்தகைய தம்பதிகளும் சமூகத்தில் இருக்கிறார்கள். மனைவிமார்கள் தங்களின் சுயம் சிதைக்கப்பட்ட நிலையில், துக்கங்களைத் தாங்கிக்கொண்டு தொடர்கிறார்கள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார்கள். உழைக்கிறார்கள். ஓரமாகப் படுத்துத் தூங்குகிறார்கள். ஒரு நாள் போய்விடுகிறார்கள்..இலகுவாகச் சென்ற கனமான கதை. நன்றி.
கீதா : ஸ்ரீராம் ஜீவி மாமா சொல்லிருப்பது கதையில் பார்த்தேன்...நீங்க நம்ம ஜீவி அண்ணாவைத்தான் அங்கு சொல்லிருக்கீங்க நு முதல்ல நினைச்சு கருத்தும் வேர்ட்ல எழுதி வைச்சிருந்தேன் ஸ்ரீராம்...அப்புறம் நாம தப்பா சொல்லிடக் கூடாதேனு அதை விட்டுவிட்டேன்...கதை வாசிக்கும் போதே தோன்றிவிட்டது...
அதுவும் நான் அத்தனை அலசி அலசி வாசித்தேன் ஹா ஹா ஹ ஹ ஹாஅஅப்புறம் நீங்க சொன்னதைப் பார்த்ததும் நான் அவர் கமெண்டைக் கண்டுக்காம போயிட்டேன்னு நினைச்சு தேடினேன்...அப்ப நான் நினைச்சது சரிதானா!!!!! நன்றி நன்றி ஸ்ரீராம்....இனி தோன்றியதை சொல்லிடனூம்!!!ஹா ஹா ஹா ஹா ஹா நோட் பண்ணிக்கிட்டேன்....
ஸ்ரீராம் : இன்னும்கூட ஒரு சிறுகுறும்பு இருக்கு கீதா...!
==========================================================================================
சமீபத்தில் குடும்ப வாட்ஸாப் குழுமத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்குவது பற்றிய செய்தியைப் பகிர்ந்திருந்தேன். அதற்கு என் (ஒன்றுவிட்ட) தம்பி "சீன தயாரிப்புகளிலேயே நீடித்து உழைப்பது, உத்தரவானமானது இதுதான் போல" என்று கொடுத்திருந்த பதில் ரசித்து, சிரிக்க வைத்தது.
==========================================================================================
குடும்பக் குழுமத்தில் சும்மா பொழுதுபோக்க, அரட்டை அடிக்க வேண்டி பகிர்ந்த சில படங்கள்..
==============================================================================================
பழைய வரிகளாயினும் இன்றும் உண்மைதானே!
கண் மூடிக்
காத்திருக்கிறேன்
கனவுகளுக்காக
காதலி மட்டுமல்ல
காத்திருந்தால்
வருவதேயில்லை
'ரெற்றோ கவிதைகள்' என்று ஒரு முகநூல் பக்கம். நிறைய கன்னாபின்னா கவிதைகள் அங்கு இடம்பெறும். நான் அங்கு எழுதிய ஒன்று!
பெற்றோர் யாரென
தெரியவில்லை
உற்றார் உண்டா என்றும்
தெரியவில்லை
முற்றோதும் முனிவர்களுக்கும்
புரியவில்லை
கற்றோர் இருக்கும் சபையிலும்
கண்டுபிடிக்க
முடியவில்லை
மற்றோர் யாரும் கூட
எடுத்து உரைக்கவில்லை
அப்படி
என்னதான் பொருள்
இந்த
ரெற்றோ கவிதைகளுக்கு!
=====================================================================================================
பழைய புத்தகங்கள்...
விரைவில் இந்தக் கதை நம் தளத்தில் வெளியாகும்! இப்போது டைப்பாகிக் கொண்டிருக்கிறது!
மதுரை கிருஷ்ணமூர்த்தி ஸார் நினைவில் மனம் தோய்ந்தது. பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னை மீது பரிபூரண பக்தி கொண்டவர்.
பதிலளிநீக்குவிலகாமல் அவர் எழுத்துக்களை வாசித்துக் கொண்டு தான் இருந்தேன். குமுதம், ஆசிரியர் எஸ்.ஏ.பி பற்றிய அவர் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு அவரோடு மல்லுக்கட்டியதுண்டு. அவ்வளவே. மறக்கவே முடியாத அருமையான நண்பர்.
வாங்க ஜீவி ஸார்... கிருஷ் ஸார் அப்போதே மறைந்து விட்டார் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். என் மீதும் அன்பு கொண்டவக்கார் அவர். மதுரை வரும்போது வாருங்கள் என்று அலைபேசி எண், அட்ரஸ் கொடுத்திருந்தார். பார்க்க முடியாமலேயே போயிற்று.
நீக்குசிறைவாசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பழக்கப்பட்ட பிளாக்குகள் அவை என்றால் வியாழக்கிழமை என்றாலே மனச்சிறையில் அடைபடும் எங்கள் பிளாக் இது.
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா.. நன்றி ஜீவி ஸார். கரையாளர் சிறை பற்றி எழுதிய புத்தகம். ராஜாஜி, வி வி கிரி, சஞ்சீவரெட்டி, மட்டப்பாறை வெங்கட்ராமையர், இன்னும் பலரோடு சிறையில் இருந்த அனுபவம் பற்றி 1941 ல் எழுதிய புத்தகம்.
நீக்குரெற்றொ கவிதை அற்புதமாக அமைந்து விட்டது.
பதிலளிநீக்குரெற்றோ என்றால் என்னவென்று தேடிய பொழுது வாழ்க்கையே சினிமாவாக ஆகிப்போன அவலத்தில் சூர்யா நடித்த படம் அது என்று பதில் கிடைத்தது.
பேசாமல் புதனாரிடம் கேட்டிருக்கலாமே என்று நினைத்த பொழுது இதையெல்லாமா கேட்பது என்ற கூச்சம் தடுத்தது.
சூர்யா நடித்தது ரெட்ரோ. அது இப்போது. ரெற்றோ சில வருடங்களாக முகநூலில் இருப்பது!!
நீக்கு'அந்த மாதிரிப் பெண் என்று தெரிந்து விட்டது' என்று சொல்லி விட்டு மனுஷர் எந்த மாதிரியெல்லாம் பில்டப் கொடுக்கிறார், பாருங்கய்யா!
பதிலளிநீக்குஆஹா.. அதை பெரிதாக்கி படித்து விட்டீர்களா? சஸ்பென்ஸ் போயிடுமே... அப்போ வெளியிட வேண்டாமா?!!!
நீக்கு'பெரிதாக்கி', 'சிறிதாக்கி' -- என்ன ஆக்கினாலும் இருக்கிறது தானே தெரியும்? என்னமாய் எழுதுகிறார்கள் என்ற ரசனையில் சொன்னேன். துணிந்த பின் மனமே, யாரோ சொன்னார்கள் என்று
நீக்குபின் வாங்கல் எதுக்கு? ம்?..
உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. கடற்கரையில் சுண்டல் வாங்கினால் கூட தூக்கிப்போடும் முன்பு அந்த பேப்பரில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கும் வம்சம் நாம்!
நீக்குஎன் மகள் திருமணத்துக்கு பட்டப்பாதான். எனக்கு இஷ்டமில்லை. வேறு வழியில்லாமல் வைத்தேன். எல்லோரும் மிகவும் புகழ்ந்து சந்தோஷமாகச் சென்றார்கள். எதிலும் ஒரு ஒழுங்கு. எந்த ஒரு நிகழ்விலும், விளக்கு எங்கே, பூ எங்கே, கோலம் ஆச்சா?, விரத பட்சணம் வந்தாச்சா? எல்லாம் சரியா இருக்கா?, பிடிசுத்திப் கோட வந்தாச்சா என்று ஒரு கேள்வியும் எழவில்லை. கட்டுச் சாதம் வரைக்கும் நிஜமாகவே அசத்திவிட்டார்கள். மறக்க முடியாத செர்வீஸ்.
பதிலளிநீக்குஒரே ஒரு குறை எங்களிருவருக்கும். பெண்ணின் பெற்றோர்கள் என்பதால் நிம்மதியாக ரசித்து எல்லா வேளைகளிலும் சாப்பிட முடியலை. நாலு வேளைகள் சாப்பிடவே போகலை, அவ்வளவு பிஸி.
கீதா ரங்கன் திட்டம் போட்டு அதே நாளில் தில்லியில் திருமணம் வைத்துக்கொண்டு வராத்தும், ஶ்ரீராம் குடும்பம் அல்ப காரணத்தை முன்னிட்டு வரமுடியாத்தும் மறக்காது.
வாங்க நெல்லை.. உணவு வகைகள் ஓஹோவென்று இல்லாவிடினும் குறை சொல்லும் அளவு இல்லை.
நீக்குஎங்கள் மகன் திருமணத்தில் நாங்கள் எதையும் மிஸ் செய்யவில்லை, நாந்தி காலை டிபன் தவிர!
//ஶ்ரீராம் குடும்பம் அல்ப காரணத்தை முன்னிட்டு வரமுடியாத்தும் மறக்காது.//
மன்னித்துக் கொள்ளுங்கள் நெல்லை. எழ முடியாத அளவு ஜுரம். அப்புறம் விளக்கம் சொல்ல நான் அழைத்தபோது நீங்கள் கோபத்தில் என் போனையே எடுக்கவில்லை அப்போது.
உங்கள் கோபம் நியாயமானது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்... நீங்க பையன் பெற்றோர். உங்களுக்கு டென்ஷன் கிடையாது
நீக்குஅதுவும் உண்மைதான் நெல்லை. ஆனால் இந்த கான்டராக்ட் காலத்தில் அவ்வளவு டென்ஷன் கூட தேவை இல்லையே நெல்லை!
நீக்குகீதா ரங்கன் திட்டம் போட்டு அதே நாளில் தில்லியில் திருமணம் வைத்துக்கொண்டு வராத்தும், //
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
//ஶ்ரீராம் குடும்பம் அல்ப காரணத்தை முன்னிட்டு வரமுடியாத்தும் மறக்காது.//
நெல்லை, நிஜமாகவே அன்று ஸ்ரீராமுக்கு ரொம்ப உடம்பு முடியவில்லை. எழுந்திருக்க முடியாத அளவு கஷ்டப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.
கீதா
நெல்லை, அபப்டிச் சொல்ல இயலாது, இப்பலாம் பையன் தரப்பிலும் டென்ஷன் இருக்கத்தான் செய்கிறது.
நீக்குஅதை எழுதி வைச்சிருக்கேன்....வழக்கம் போல....எப்ப வருமோ தெரியலை...
கீதா
பையன் தரப்பில் என்ன டென்ஷன்? ஒன்றும் கிடையாது. வந்தமா, வந்த விருந்தினர்களை வரவேற்றோமா, எல்லாரும் சாப்பிட்டாங்களா என்று பார்த்தோமா, எல்லோருக்கும் தாம்பூலம் கொடுத்தோமா என்று அக்கடான்னு இருக்கலாம் (விழாவில் அவங்களோட மேடை பார்டிசிபேஷன் மிகவும் குறைவு.)
நீக்குபெண் வீட்டுக்காரர்கள்தாம், குறை வந்துவிடக்கூடாதே, அந்த அந்த நேரத்தில் அதற்குரியவைகளைச் செய்யணுமே என்று டென்ஷனில் இருப்பார்கள். எங்கள் கேடரர் பட்டப்பா, நிறைய விதத்தில் உதவிவிட்டார். அவர் சம்பந்தமாக கொஞ்சம்கூட எங்களுக்கு டென்ஷன் கிடையாது.
இன்னொரு திருமணத்தில், விரதத்திற்கு அப்பத்திற்குப் பதில் குழிப்பணியாரம், மேடைக்கு விளக்கு கொண்டுவந்து கொடுக்காதது, நேரத்திற்கு அந்த அந்தப் பொருட்கள் வராதது என்று ஏகப்பட்ட சொதப்பல்கள்.
பையன் தரப்பில் பதட்டம் கிடையாது என்னும் உங்கள் பக்க நியாயம் புன்னகைக்க வைக்கிறது! பெண் வீட்டார் சொதப்பினால் பையன் வீட்டு உறவிலும் சலசலப்பு எழும். அதுமுதற்கொண்டு ஒவ்வொரு செயலிலும் அதே அளவு பதட்டம் இருக்கும்.
நீக்குவெட்டின காய்கள் என்னவாயின என்பதை மற்ற படங்களுக்கும் தந்திருக்கலாம்.
பதிலளிநீக்குசெய்திருக்கலாம். சிலவற்றில் சேர்த்திருந்தேன்.
நீக்குபின்னூட்டங்களுக்கான கதையை ஒரு வாரம் பகிர்ந்திருந்தால் (பின்னூட்டங்கள் இல்லாமல்), தற்காலம் எவ்வளவு வறண்டிருக்கிறது என்று புரிந்திருக்கும்.
பதிலளிநீக்குஅப்படிக்கூட நினைத்தேன், நினைத்திருக்கிறேன்!
நீக்குநகைச்சுவை பகுதி ரசிக்கவேயில்லை.
பதிலளிநீக்குஅச்சச்சோ...
நீக்குகொரானா காலம்.... எப்படியோ சில பல இழப்புகளுடன் கடந்துவிட்டோம்.
பதிலளிநீக்குமீண்டும் கொரானாவா?
தன் ஆயுதங்களை பாகிஸ்தானை வைத்துச் சோதித்துப் பார்த்துக்கொள்வதைப் போல, பயோவெப்பனையும் அப்படியே சோதிக்காமல் இருந்தால் சரிதான்.
இப்போது வரும் கொரோனாக்கள் ஆபத்தில்லாதவை என்றுதான் தோன்றுகிறது. தமிழகத்தில் 96 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு, முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்கிறது தமிழக சுகாதாரத்துறை.
நீக்குPandemicன் தன்மையே அதுதானே? முதல் முறை மிகவும் கடுமையாக இருக்கும், பின்னர் அதன் தீவிரம் குறைந்து கொண்டே வந்து, சில வருடங்களுக்குப் பிறகு அங்கொன்றும்,இங்கொன்றுமாக எப்போதாவது வரும் என்றார்களே.
நீக்குஎன்னவோ போங்க... இனி அது இல்லாமல் காலம் தள்ள முடியாது போல!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்குமும், நன்றியும்.
நீக்குகுண்டூசியும் சேஃப்டி பின்னும் உருவம் மாறியதில்லை. அவைகளின் உபயோகம் எப்போதும் உண்டு.
பதிலளிநீக்குஉண்மை. ஸ்டேப்ளர் பின்னும்!
நீக்குஒரு பழைய எஸ் எம் எஸ் நினைவுக்கு வருகிறது.
நண்பர்கள் ஸ்டேப்ளர் பின் போலவாம். இணைத்து வைத்திருப்பது போலவே, பிரிந்து சென்றாலும் தங்கள் தடத்தை விட்டுதான் செல்வார்களாம்!
நல்ல உவமானம். அதுபோல், "தாய்க்குப் பின் தாரம்" ஆனால், தாய்க்கு பின்னாளில் முள்ளாக குத்தும் "பின்" னாக இருக்காமல், அந்த தாயின் பாதையில் கணவனுக்கு உபகாரமாக நடந்திருந்து அவன் வாழ்க்கையை செழிப்பாக்க உதவியாக இரு என்பதாக அர்த்தமென நாங்கள் அடிக்கடி முன்பு (கேலியாகவோ, பிறர் சொல்லி கேட்டறிந்த விஷயமாகவோ) சொல்வோம். :))
நீக்குஓ.. அப்படி வேற இருக்கா?
நீக்குஉணவு பாக்கெட்டுகளில் ஸ்டாப்ளர் பின் இருந்தால் முதலில் அதை ஜாக்கிரதையாக அகற்றி குப்பையில் போட்டபிளகுதான் உணவைத் தொடுவேன்
நீக்குஸ்டேப்ளர் பின் எப்போதாவது குத்தி ரத்தம் வரவைக்குமே. நண்பர்களுக்கு நல்ல உவமானம்தான்
இப்போதெல்லாம் உணவு பாக்கெட்டுகளில் ஸ்டேப்ளர் பின் போடுவதை தவிர்த்து வருகிறார்கள். ஒரு மெஷினை வைத்துக் கொண்டு 'சொய்ங்' என்று ஒட்டி விடுகிறார்கள்!
நீக்குசரியான சாப்பாட்டு ராமன். ஹோட்டல் சாப்பாடு, தினசரி சாப்பாடு, கல்யாண சாப்பாடு என்று சாப்பாட்டு விவரனைகளுக்கும், படங்களுக்கும் பஞ்சமில்லை. அதிலும் இந்த பதிவு படங்கள் நிறைய சேர்க்கப்பட்டு படப்பதிவு ஆகி விட்டது.
பதிலளிநீக்குகேள்வியே தப்பு. வேண்டாதவர் எப்படி நண்பர் ஆவார். அவரை வீட்டுக்கு வருவதை தவிர்க்க ஒரே போடு "நான் நடந்து போகிறேன்" என்பது தான். நடை என்றால் யாரும் கூட வரமாட்டார்கள்.
கதை என்ன என்று அறியாமல் பின்னூட்டங்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த பின்னூட்டங்கள் பதிவுக்கு கனம் சேர்த்த மாதிரி இருக்கிறது. ரேற்றோ கவிதை எதுகை மோனையுடன் நன்றாக இருக்கிறது.
பொக்கிஷம் சுமார்.
மொத்தத்தில் "இலகுவாகச் சென்ற கனமான" பதிவு பின்னூட்ட விவாதங்களால்.
Jayakumar
நான் சாப்பாட்டு ராமன் என்பதை மிகவும் லேட்டாக தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் JKC ஸார்... படங்கள் நிறைய இருப்பதால் பதிவு பெரிதாக இருப்பது போல தெரிந்தாலும் பெரிதில்லை!!
நீக்குவேண்டாதவர் என்றால் தவிர்க்க நினைப்பவர் என்று சொல்லலாம். அவருக்கு அது அது தெரியாதல்லவா?!!
கதை என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வருகிறதல்லவா? எனக்கே நான் என்ன எழுதி இருந்தேன் என்று நினைவில் இல்லாமல் இருந்து, சென்று படித்தபின் தெரிந்து, தெளிந்து கமெண்ட்ஸ் மட்டும் இங்கு ஷேர் செய்திருக்கிறேன்!!
இலகுவாக சென்ற கனமான பதிவு : ஹா.. ஹா.. ஹா...
நன்றி JKC ஸார்.
எபி பின்னூட்டங்களில் நான்றிந்த குறை ஒன்று உண்டு. யாராவது எதையாவது மாறுபட்டு அவதானித்து ஆரம்பப் பகுதியில் பின்னூட்டமிட்டார்கள் என்றால் ஆடு தாண்டுகிற கதையாக அந்தக் கருத்தே தொடர்வதுண்டு. அந்த வழக்கம் தப்பால் இந்தப் பதிவிலும் தொடர்ந்திருக்கிறது. அவரவர் வாசிப்பில் உணர்ந்த வேறு பட்ட
பதிலளிநீக்குசுவை கொண்ட பின்னூடங்கள் பதிவை அலங்கரித்தால் பதிவிடுகிறவர் கொள்ளும் அக்கறைக்கு ஈடு கொடுக்கிற மாதிரி அதுவே தனிக்களையைக் கொடுத்து அழகாக இருக்கும்.
// யாராவது எதையாவது மாறுபட்டு அவதானித்து ஆரம்பப் பகுதியில் பின்னூட்டமிட்டார்கள் என்றால் ஆடு தாண்டுகிற கதையாக //
நீக்குஇது எபி என்றில்லை, எல்லா தளத்திலும் உண்டு. இங்கும் கொஞ்சம் இருக்கிறது.
கமலா அக்கா, கீதா ரெங்கன், கோமதி அக்கா போன்றோர் அனைத்தையும் படித்து அவரவர் கருத்தை, அது முரணாக இருந்தாலும் பதிவிடுவார்கள். JKC ஸார் வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான்!
ஜீவி அண்ணா, ஸ்ரீராம் சொல்லியிருப்பது போன்றுதான்....
நீக்குகருத்துகளைப் போட்டுவிட்டுத்தான் மற்றவர்களின் கருத்தைப் பார்ப்பதே.
அதிலும் முரண் கருத்துகளும் பதியப்படும்.
கீதா
கீதா
//ஆடு தாண்டுகிற கதையாக அந்தக் கருத்தே தொடர்வதுண்டு. // அப்படித் தோன்றவில்லை ஜீவி சார். நம் கருத்தைப் பதிவு செய்தபிறகு பிறருடைய கருத்துகளைப் படித்து அதற்கும் தோன்றினால் என் கருத்தை எழுதுவேன்.
நீக்குஎதற்கு இந்த வம்பு என்றெல்லாம் நினைத்து சிலர், 'சிவ சிவ' 'சரணம் சரணம்' என்று கடவுள் பிரார்த்தனையை முதல் கருத்தாகப் பதிந்துவிடுகிறார்கள். என்ன சொல்றீங்க?
கருத்துகளை முழுமையாக, நேர்மையாக பதிபவர்கள் லிஸ்ட்டில் உங்கள் பெயர் விட்டு விட்டேனே நெல்லை...
நீக்குஆமாம்....நெல்லை...தன் கருத்துகளைச் சொல்லிவிடுவார். நேர்மையா...ஜேகே அண்ணாவை நீங்களே சொல்லிட்டீங்க...
நீக்குபானுக்கா வந்தாங்கனா....சொல்ற விஷயங்களுக்கு நேரடியா சொல்லிட்டுப் போவாங்க.....கீதாக்கா, ஏஞ்சல் வந்தாங்கனா அவங்களும்...
கீதா
ஹாஹாஹா... எப்போதுமே லிஸ்ட் போட்டால் பலர் விட்டுப்போய்விடுவார்கள். அதனால், சட்டென மனதில் தோன்றுவது என்று சேர்த்துக்கொண்டால் பாதுகாப்பு.
நீக்குவம்புகள் முற்றாமல் இருப்பதற்கு இறைவனை இறைஞ்சுவது தவறா? ஹா ஹா ஹா. இன்றைய கருத்துகள் அனைத்தும் அவரவர் எண்ணங்களோடு 👌ஆக உள்ளது.
நீக்குஇதிலேயே வம்பு வந்து விடுகிறது பாருங்கள்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முல் பகுதியில் கல்யாண சாப்பாடு அலசல் நன்றாகவே இருக்கிறது. படித்து ரசித்தேன். முன்பு குறையாக தென்பட்டவை இப்போது நிறைவாகவே மாறியிருப்பது நல்ல விஷயம். (உதாரணம்.. சாப்பிட ஆட்கள் வருவதற்கு முன்பை இலையில் பரிமாறாமல் இருப்பது.) அதுபோல் கால் செருப்புடன் மண்டபத்தில் செல்லக்கூடாதென்பதும்.. ஆனால், நம் செருப்பை தொலைத்து விடும் அபாயமும் இதில் உண்டு. (இதுபோல் எனக்கும் அந்த அனுபவம் ஒருதடவை வந்துள்ளது.சென்னையில், புதுச் செருப்பை ஒரு திருமணத்திற்கு அன்றுதான் போட்டு கொண்டு சென்று விட்டு, வரும் போது வீடு வரை வெறுங்காலுடன் நடந்து வந்தேன். உடனே வேறு செருப்பு கிடைக்காத ரகம் என் அதிர்ஷ்டம். அட...! எனக்கெனப் பார்த்து இப்படி ஆக வேண்டுமா? என பல நாள் புலம்பலுடன்.. இது மலர்ந்தது இன்றைய தங்கள் பதிவில் திருமண மண்டபத்தின் செருப்பு ஏற்பாடு தகவல் கண்டு. .ஹா ஹா ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செருப்பு தொலைந்தால் பீடை விட்டது என்பார்கள். நமது துரதிருஷ்டம் அதோடு கழண்டு போகும் என்று ஆறுதல் சொல்வார்கள்! நான் இதுவரை செருப்பைத் தொலைத்ததில்லை! சிலர் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு போட்டு வருவதற்கு என்றே பழைய செருப்பு ஒன்று வைத்திருப்பார்கள். எனினும் செருப்பை கழற்றி போட்டுவிட்டு மண்டபத்தினுள் செல்லும் கல்யாணங்கள் சொற்பதிலும் சொற்பம்!
நீக்குகதையை பகிராமல் பின்னூட்டங்களை மட்டும் பகிர்ந்திருப்பது, சமையலை பகிராமல், வெட்டிய காய்களின் படங்களை மட்டும் பகிர்ந்திருப்பது, மாலனின் கதையில் பாதி.. இப்படி எல்லாமே பாதி பாதியாக... ஏன்?
பதிலளிநீக்குகதையை பின்னர் பகிரலாம் என்றுதான். அதற்கு ஒரு முன்னோட்டம் போல இருக்கும்! காய்கறி போட்டோஸ் பாதிப்பாதி அல்ல. அவை நறுக்கும் ஸ்டைலை "தம்பட்டம்" அடித்துக்கொள்ள! மாலன் கதை முழுவதுமாக எழுத்து ரூபத்தில் நமது தளத்தில் மிக விரைவில் கிடைக்கும்.
நீக்குஐயங்கார் கல்யாணங்களில் பட்டப்பா சமையல் ஒரு அந்தஸ்து! பட்டப்பா கிடைத்து விட்டார் என்று திருப்தியாகவும், பெருமையாகவும், சொல்லிக் கொள்வார்கள். பல கேடரர்ஸ் எட்டு முதல் பன்னிரெண்டு க்ரூப் வைத்துக் கொண்டு மண்டபத்திற்கு ஏற்றார் போல் ஆட்களை அனுப்புவார்களாம்.
பதிலளிநீக்குஎனக்கென்னவோ பெயர் இருக்கும் அளவு சுவை இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டும் சொல்ல முடியாதுதான்!
நீக்குஉண்மைதான். பட்டப்பா என்பது ஒரு அந்தஸ்து. என் உறவினர்கள் சிலர் சொன்னார்கள், 70லிருந்து பட்டப்பாதான் எல்லா திருமணங்களுக்கும் என்று. (இப்போ உள்ளவர், அப்போ சின்னப் பையன் என்றெல்லாம் சொல்லிப்பார்கள்)
நீக்குஎங்களுக்கு 10 பேருக்கு ஆசாரமாக தளிகை பண்ணமுடியுமா என்று கேட்டதற்கு அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார். அவங்க ப்ரொஃபஷனலா வேலை செய்கிறார்கள்.
ருசி, நம்ம நேரம், அமைவது என்று பலதைப் பொறுத்துள்ளது
எங்கள் கேட்டரர்ஸ் அதற்கும் ஒத்துக்கொண்டுள்ளார்கள் . இந்தத் திருமணத்திலும்.
நீக்குநான் வைத்த கேட்டரர் வேறு. சனிக்கிழமை நான் சுவைக்கப்போகும் கேட்டரர் வேறு.
ஓ பட்டப்பாவா!!! ஐயங்கார் சமூகத்தில் பட்டப்பா சமையல் என்றால், "ஓ!" என்று சொல்லப்பட்டு, அது அந்தஸ்து அடையாளமாகப் பார்க்கப்படும். எங்கள் குடும்பத்தில் ஒரு வீட்டில் அவங்க வீட்டு எந்த நிகழ்வுக்கும் இவர்தாமன். அதை அவங்க பெருமையுடன், அதாவது தங்கள் அந்தஸ்தைச் சொல்லும் விதத்தில் சொல்வது எனக்கு இது எனக்கு ஒவ்வாத ஒன்று. நான் புன்சிரிப்போடு கடந்துவிடுவேன்.
பதிலளிநீக்குசாப்பாடு ஓகே. சென்னையில் எந்த கேட்டரரும் செய்யும் மோர்க்குழம்பு எனக்குப் பிடிப்பதில்லை எந்த நிகழ்விலும். தனியா சேர்த்துச் செய்யறாங்க.
ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் பரிமாறுதல் பற்றிய பாயின்ட்ஸ் நானும் அதற்கு வாக்களிப்பேன்.
எங்கள் உறவினர் வீட்டு நிகழ்வில் என்னை தாம்பூலம் கொடுக்கும் இடத்தில் - அவங்க ஏற்கனவே பெண்களை நிறுத்தியிருப்பாங்க இருந்தாலும் நாம் நம் வீட்டினரைக் கவனித்துக் கொடுக்க என்னை நிறுத்தியிருந்தாங்க. அப்ப அந்தப் பெண்களிடம் பேசினேன். அவங்க பட்டப்பா க்ரூப் தானாம் வேறு கேட்டரர் க்ரூப்பிற்குச் செல்வதில்லையாம். சிலர் ஃப்ரீலான்ஸ் செய்வதுண்டாம் ஆனால் இவங்க இதே க்ரூப்தானாம். மதியம் இது முடிந்ததும் மாலை வேறு ஒன்றிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க. யூனிஃபார்ம் உண்டு.
கீதா
// சென்னையில் எந்த கேட்டரரும் செய்யும் மோர்க்குழம்பு எனக்குப் பிடிப்பதில்லை எந்த நிகழ்விலும். தனியா சேர்த்துச் செய்யறாங்க. //
நீக்குஎனக்கும் பிடிக்காது. என்னைப்பொறுத்தவரை என் பாஸ் செய்யும் மோர்க்குழம்புதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது போலவே அவியலும்.
தின்னவேலி மோர்க்குழம்பா, பாஸ் செய்வது? அப்படிச் சொல்லுங்க தென்னகத்து அவியல், மோர்க்குழம்பு போல இல்லை சென்னைப் பக்கங்களில் செய்வது...
நீக்குஎனக்குத் திருனெல்வேலி, கேரளத்தில் செய்யும் அவியல் பிடித்தமான ஒன்று. மோர்/தயிரை கொட்ட மாட்டாங்க.
கீதா
அது போல மற்றொன்று, சென்னை கேட்டரர்ஸ் செய்யும் புளியோதரை - ம்ம்ம்ம்ம் தான்
நீக்குகீதா
தின்னவேலியா, திங்காதவேலியா தெரியாது!! பாஸ் அவர் அப்பாகிட்டேயிருந்து கத்துக்கிட்டது! கேரட் பச்சடியும் நல்லா இருக்கும்.
நீக்கு// சென்னை கேட்டரர்ஸ் செய்யும் புளியோதரை - ம்ம்ம்ம்ம் தான் //
நீக்குஅதன் பெயர் புளியோதரை இல்லை. புளியாவிரை ! அப்படிதான் சொல்வாங்க...
இந்தப் பட்டப்பாவை, திருவல்லிக்கேணியில் அவர் வீட்டிற்குச் சென்று, என் தங்கையின் பெண் கல்யாணத்திற்குப் பேசச் சென்றிருந்தேன். ரொம்ப வருஷம் முன்பு. என் தங்கை திருவனந்தபுரம், "சென்னைக்காரா சம்பந்தி என்னவோ பட்டப்பா பட்டப்பான்னு சொல்றாளே, அவரைப் போய்ப் பார்த்து என்ன ரேட்னு கேட்டு சொல்லறியான்னு...." போய்க் கேட்டேன், என் தங்ககைக்கு அவர் ரேட் சரிப்பட்டு வரவில்லை.
பதிலளிநீக்குகீதா
என்ன ரேட் சொன்னார் என்று தெரிந்தால் சௌகர்யமாக இருக்கும். இதோ சனிக்கிழமை நான் செல்லும் திருமணத்தில் கேட்டரர் அந்தக் குடும்பத்தின் ஆஸ்தான கேட்டரர். நன்றாக இருக்கும். சுவையாக இருக்கும். தரமாக இருக்கும். என் பாஸை முதலில் பார்த்தால், அல்லது மகன்களை முதலில் பார்த்தால் நான் வரவில்லையா என்று விசாரிப்பார். அவரை ஒவ்வொரு முறையும் ஐட்டம்வைஸ் அபிப்ராயம் சொல்லி பாராட்டுவேன்.
நீக்கு12-18 லட்சம்.
நீக்குமாதம்பட்டி (நான் வெஜ் காரர்கள் அழைப்பர்) ரிசப்ஷன் மாத்திரம் 40 லட்சம் நெல்லையில் ஒரு திருமணத்தில்
நீக்குமெனுவில் நாம் செய்யும் மாறுதல்களுக்கேற்ப ரேட் கூடும், குறையும். எங்கள் கேட்டரர் கொஞ்சம் குறைந்த செலவிலேயே நன்றாகச் செய்து நல்ல பெயர் வாங்கினார்!
நீக்குஸ்ரீராம், சாப்பாட்டு மேளான்னு சொல்லுங்க!!!!! பாருங்க அதிலும் ஒரு தடங்கல்...திங்கள்!!!!!!
பதிலளிநீக்குபரவால்ல கிடைச்சவரை என்சோய்!!!!!
கீதா
கிடைத்த வரை லாபம்! கொஞ்சம் கூச்சம் பார்க்கவில்லை என்றால், அலைச்சல் பார்க்கவில்லை என்றால் இன்று மாலை சங்கீத்தும், நாளை முகூர்த்தமும் கூட சென்று சுவைத்து வரலாம்!!
நீக்குகால் செருப்புதான் பயமுறுத்துது, ஸ்ரீராம். நம்ம செருப்பு காணாமப் போயிடுச்சுனா? அதாவது திருட்டு என்று சொல்லலை....தெரியாம சிலர் மாத்திப் போட்டுடுவாங்க...ஒரே மாதிரி இல்லை கலர் இப்படி இருந்தால்...
பதிலளிநீக்குபேசாம செருப்பு ஷெல்ஃப் ஒன்று வைச்சுடலாமோ?!!!! அதில் டோக்கன் கார்டும் வைச்சு!!!!! ரொம்ப ஓவர் திங்கிங்????!!!
கீதா
செருப்பு தெரியாமல் மாற்றி போட்டுக்கொண்டு போவது என்பது பொய். நம் செருப்பு காலில் மாட்டும்போதே சொல்லும், நம்முடையதுதான் என்று! வேறு செருப்பை காலில் மாட்டினால் கால் உடனே எச்சரிக்கும்..'புதுசா இருக்குப்பா.. நம்மாளு இல்லே'ங்கும்!
நீக்குஸ்ரீராம், இது சமீபத்தில் நடந்த ஒன்று. நான் எழுதி வைச்சிருக்கேன்...சில்லு சில்லாய் ல,
நீக்குஅங்கு சொல்கிறேன்,
கீதா
அங்கே பதிவாய் போறேன்னு சொல்றீங்களா?
நீக்குஅட! 11 ஆம் நம்பரில் எங்கள் 'ப்ளாக்'!!!!
பதிலளிநீக்குஎதிர்காலத்தில் இப்படி ஒரு தளம் உருவாகும் என்று நினைச்சிருப்பாங்களா?!!!
கீதா
தெரிஞ்சிருக்கு பாருங்க... அதை நான் பார்ப்பேன்னும் தெரிஞ்சிருக்கு!
நீக்குபொருளடக்கம் வாசிக்கத் தூண்டும் தலைப்புகள்! சுதந்திரப் போராட்ட சமயம் என்பதால் அந்த நிகழ்வுகளும் இடம் பெறும் தலைப்புகள்.
பதிலளிநீக்குபொன்னுக்குட்டி - கதையாக இருக்குமோ?
கீதா
இல்லை. சிறைச்சாலை அனுபவங்கள். பெரிய புகழ்பெற்ற ஆள்களுடன் அனுபவங்கள். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது பகிர்கிறேன்.
நீக்குபின்னூட்டங்களில் இருந்து கதை என்ன என்று தெரிந்துவிட்டது ஸ்ரீராம். அழகான கதை, கதையின் முடிவும் நினைவிருக்கு. மூன்று பகுதிகளாக வந்தது இல்லையா? பாலமுரளியின் பாடல்களை நினைவு கூர்ந்து கொண்டே கடைக்குச் செல்லும் கதாபத்திரம் சங்கரன்....விசாலிக்கும் சங்கரனுக்கும் இடையே இடைவெளி...அதில் வந்து செல்லும் மைத்ரேயி, மருமகளின் அம்மா.
பதிலளிநீக்குமுடிவு எனக்குப் பிடித்திருந்தது. பலருக்கும் பிடிக்காது!!!!
தலைப்பில்லாத கதை!!! ஆனால் கருத்துள்ள கதை.
கீதா
ஆமாம். அதேதான்.. அதேதான்!
நீக்குஐயையோ! என் நினைவாற்றலுக்கு என்ன ஆயிற்று? அது என்ன கதை என்று சுத்தமாக நினைவில் இல்லையே???:((
நீக்குகதையில் வரும் ஜீவி எனும் கேரக்டர் நம்ம ஜீவி அண்ணா என்று தோன்றியதைச் சொல்லாமல்...உங்க கருத்து கண்டு ஆஹா நாம கரீக்டுதான்னு...
பதிலளிநீக்குஅந்த இன்னொரு குறும்ம்பு என்ன என்று பார்த்துவிடுகிறேன் இப்பவாச்சும்...
கீதா
பார்த்து விட்டீர்களா சகோதரி!
நீக்குஹாஹாஹா ஆமாம் சகோதரரே!!!!
நீக்குகீதா
ஆகா.. இது கொஞ்சம் கிண்டல் பாணியோ.? ஹா ஹா ஹா. அது என்ன கதையின் சாராம்சம் என நானும் படித்து விட்டு வருகிறேன்.
நீக்குஇன்னுமா படிக்கவில்லை நீங்கள்!
நீக்குஅதற்கு என் (ஒன்றுவிட்ட) தம்பி "சீன தயாரிப்புகளிலேயே நீடித்து உழைப்பது, உத்தரவானமானது இதுதான் போல" என்று கொடுத்திருந்த பதில் ரசித்து, சிரிக்க வைத்தது. //
பதிலளிநீக்குசிரித்து முடியலை!!!!!! அவங்க தயாரிப்புள் இப்ப சமீபத்துல இளிச்சனவே!!! நான் கைதட்டிக் கொண்டாடினேன்...அப்படிப் போடுங்க நம்மவங்களேன்னு நம்ம நாட்டைக் கொண்டாடிய தருணங்கள்!!
தமிழ்நாட்டுல சமீபத்திய கொரோனா டேட்டா வந்துச்சு. பெங்களூர்லருந்து செய்தி எதுவும் கூகுள் எனக்குச் சொல்லலையே!!!
ஒரு வேளை கூகுளே ரகசியமா வைச்சிருக்கோ!?
கீதா
மேலே நம்பர் தப்பா சொல்லி இருக்கேன். 96 இல்லே, 66.
நீக்குகார்த்திகேயன் சொல்லியிருப்பதை வரவேற்கிறேன். எதற்கு நம்மை மாற்றிக் கொள்ளணுமோ அதற்கு மாற்றிக் கொண்டால் போது எல்லாத்துக்கும் மாற்றிக்கணும்னு இல்லை. காலத்துக்கேத்தாப்ல. நம்மால உபயோகமா இருக்க நெனைச்சாலே போதும் இதுலதான் கெத்தா இல்லாம நாம மாறிக்கணும்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். ஆனால்; பாருங்க.. எதிர்க்கட்சிகாரங்க சொல்றாங்க.. அடஜஸ்ட் செய்து போகணும்னு. நாணலையும், ஊற்றப்படும் பாத்திரத்துக்கேற்ப ஷேப் மாறும் தண்ணீரையும் உதாரணம் காட்டறாங்க...
நீக்குஎல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்து போனா வாழ்க்கையே இல்லை. ஒருவர் மட்டும் அட்ஜஸ்ட் செய்வது போல ஆகிடுமே. அப்ப மத்தவங்க?
நீக்குஅட்ஜஸ்ட் செய்யறப்போ சில சமயங்களில் இளிச்சவாயாக ஆகிவிடுகிறோம். we are taken advantageous or for granted.
விட்டுக் கொடுப்பதற்கும், நம்மை மாற்றிக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டுதானே? ஒரு சில விஷயங்களில் நாம் விட்டுக் கொடுப்பதால் நாம் நம்மை மாற்றிக் கொண்டுவிட்டோம் என்பதில்லையே. இதில் நான் எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ பிரச்சனை வராமல் இருக்க விட்டுக் கொடுக்கிறேன் என்பதையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிவிடுவதாகச் செயல்படலாம் இல்லையா?
ஊழல் செய்யறதுக்கும் அட்ஜஸ்ட் செய்து போக முடியுமா என்ன? வீட்டில்தான் சொல்கிறேன்!!!!
கீதா
எல்லாவற்றுக்குமே எதிர்க்கருத்து இருப்பது போல இதற்கும் ஒரு பொன்மொழி வைத்திருக்கிறார்கள்!
நீக்கு"விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போனதில்லை; கெட்டுப்போனவர்கள் வீட்டுக் கொடுத்ததில்லை.
நறுக்ஸ் - சூப்பர் ஸ்ரீராம். ரொம்ப அழகா கட் பண்ணறீங்க காய்களை.
பதிலளிநீக்குஅந்த வெண்டைக்காய் நெடுக்காக நறுக்கியிருப்பது எனக்குப் பிடித்த ஒன்று. இப்படிச் செய்த ஒரு மசாலா எபியில் திங்கவில் வந்திருக்கு.
கீதா
நன்றி கீதா. மாறுதலாய் செய்வது எப்போதுமே நான் விரும்புவது.
நீக்குகாதலி மட்டுமல்ல கனவுகளும் காத்திருந்தால் வருவதேயில்லை//
பதிலளிநீக்குகவிதையை ரொம்ப ரசித்தேன், ஸ்ரீராம்
கனவுக்கெல்லாம் காத்திருக்கவா முடியும்....அது எப்ப வரும் எப்ப போகும்னு தெரியாதே! அது போல காதலின்ற அந்த ஒப்பீடு நல்லாருக்கு!
கீதா
ஹிஹிஹி.. அதைத்தானே நானும் சொல்லி இருக்கிறேன்!
நீக்குஎன்னதான் பொருள்
பதிலளிநீக்குஇந்த
ரெற்றோ கவிதைகளுக்கு!//
இந்தக் கவிதையையும் ரசித்தேன், ஸ்ரீராம்..வித்தியாசமான சிந்தனை.
ஆனா பாருங்க ஸ்ரீராம், இந்த ரெற்றோ கவிதைள் உங்களுக்கு நிறைய விஷயம் சொல்லுமே. இல்லையா?....வீட்டிலுள்ள ரெற்றோக்களும் சரி, ரெற்றோ பொருள்களும் சரி, கறுப்பு வெள்ளையாக பல கதைகள் சொல்லும்.
கீதா
கொஞ்சம் விளக்குங்க... மற்றபடி நன்றி கீதா.
நீக்குஸ்ரீராம், ரெற்றோ என்றால், பழைய பாணி, நாகரீகம்....இப்படித்தானே? ஓல்ட் இஸ் கோல்ட் என்பது போல எடுத்துக் கொண்டாலோ? அப்ப அந்த பாணில சொல்றது இல்லையா?
நீக்குகீதா
ஸ்ரீராம், ரெற்றோ என்றால், பழைய பாணி, நாகரீகம்....இப்படித்தானே? ஓல்ட் இஸ் கோல்ட் என்பது போல எடுத்துக் கொண்டாலோ? அப்ப அந்த பாணில சொல்றது இல்லையா?
நீக்குகீதா
இல்லை, எனக்கு அர்த்தம் தெரியாது.
நீக்குRetro / ரெற்றோ என்றால் பழைய பாணி, பழைய பாடல்கள்....பழைய கல்சர்...ஒரு சில புதிய கதைகளில். ட்ராமா சினிம்மாக்களில் ரெற்றோ எஃபெக்ட் கொண்டு வருவது...இப்படி. பின்னோக்கிச் செல்வது என்றும்...
நீக்குசில புதுப் பாடல்களில் கூட பழைய பாடல்கள் பயன்படுத்திய கருவிகளை இசைத்து அந்தப் பாணியைக் கொண்டு வர முயற்சி செய்யறாங்க இல்லையா அது போல...
கீதா
oho...
நீக்குஜீ வி அண்ணாவின் அந்தக் கதை - மகாராணி....அது கூட ரெற்றோ எஃபெக்ட் கதை எனலாம்..
நீக்குரெற்றோ என்பதை வின்டேஜ் / vintage என்றும் சொல்வதுண்டு. நான் எம்ப்ராய்டரி தெரிந்துகொண்டு போட்ட போது இந்த vintage எம்ப்ராய்டரி என்று தெரிந்து கொண்டதுண்டு. vintage cars என்றும் சொல்வது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
இப்பலாம் கல்யாண ஃபோட்டோக்களில் ரெற்றோ எஃபெக்ட் கொண்டு வருவது ஃபாஷன். கறுப்பு வெள்ளைல...சில தை மாற்றி
கீதா
புரிந்தது.
நீக்குதிரு வி க - டிட் பிட் - சுவாரசியமான தகவல். பாரதி பொதுவாகவே உணர்ச்சிவசப்படும் மனிதர்...அதனால்தான் மிகப் பெரிய படைப்பாளியாக இருக்க முடிந்தது. அவர் இப்படி இருக்க முடிந்ததற்கு முதற்காரணம் அவரது மனைவிதான்!
பதிலளிநீக்குகீதா
கவிஞர்களே உணர்ச்சிமயமானவர்கள்.
நீக்குடாக்டர் ஜோக் புன்சிரிக்க வைத்தது.
பதிலளிநீக்குகீதா
:))
நீக்குமாலன் கதை என்ன ஒரு நடை! ஒரு பெண்ணின் தோற்றத்தை வைத்து மற்றொரு கதாபாத்திரத்தின் மனதில் ஓடும் எண்ணங்களை எவ்வளவு அழாகச் சொல்கிறார்!
பதிலளிநீக்குசீக்கிரம் போடுங்க ஸ்ரீராம். வாசிக்க வேண்டும். ஒன்று கதையின் சுவாரசியம். மற்றொன்றுக்கு ஒரு காரணம் உண்டு,
கீதா
ஓ மைகாட் .. நீங்களும் படிச்சுட்டீங்களா? பாதி கதை இப்பவே படிச்சுட்டீங்களே... வெளியிடும்போது மீதியை மட்டும் வெளியிட்டால் போதுமல்லவா?
நீக்குஇல்லை, முழுசும் போடுங்க. எல்லாரும் படிச்சாங்களான்னு தெரியாதே...
நீக்குகீதா
சரி.. நீங்கள் சொல்கிறீர்களே என்று முழுசும் வெளியிடுகிறேன்!
நீக்குஇந்த வாரக் கேள்வி - இதுக்கு மேலேயே எழுத நினைச்சு இடையில் எழுந்து போனதால், அடுத்ததுக்குத் தாவியிருக்கிறென்.
பதிலளிநீக்குவேண்டாத 'நண்பர்' - ஒரு கேள்வி எழுந்தது. நண்பர் எனும் போது வேண்டாத என்பது அங்கு எப்படி?
பரவால்ல. இப்ப வேண்டாதவர்னும் எடுத்துக்கொள்ளலாம். 'ண்' எடுத்துவிட்டால் 'நபர்'
என் பதில் இதுவாக இருக்கும் - நாம இன்னொரு நாள் வைச்சுக்கலாமா? ஓகே ....என்று நேரடியாகவே சொல்லிவிடலாம். அதற்கும் மீறி அந்த நபர் இல்லை வந்துவிட்டுப் போறேன்னு அடம் பிடித்தால்...
சாரிங்க...உடனே வேறு இடத்துக்குப் போகணும். ....நானே உங்களை அழைக்கிறேன் நீங்க அப்ப வாங்கன்னு (அப்புறம் அழைக்கறதும் வேண்டாததும் நம்ம கையில்தானே!!!!)
கீதா
இப்ப அவருக்கு நாம அவாய்ட் பண்றோம்னு தெரிஞ்சுடும் இல்லையா?
நீக்குஸ்ரீராம், அவருக்குத் தெரியாதே உங்க அடுத்த ப்ரோக்ராம்!!!!
நீக்குகீதா
நாம அவாய்ட் பண்ணறோம்ன்றது தெரியாம நடிக்கணும் அம்புட்டுத்தான்...
நீக்குகீதா
// ஸ்ரீராம், அவருக்குத் தெரியாதே உங்க அடுத்த ப்ரோக்ராம்!!!! //
நீக்குசொல்லி இருக்கேனே.. வீட்டுக்குத்தான் போறோம்னு தெரிஞ்சு...
// நாம அவாய்ட் பண்ணறோம்ன்றது தெரியாம நடிக்கணும் அம்புட்டுத்தான்... //
நீக்குஆமாம்!
எப்படி அவரை அவாய்ட் செய்வது என்றும் தெரியவில்லை. என்ன செய்வீர்கள்?//
பதிலளிநீக்குஉடனே கையில் மொபைல் இருந்தால், வீட்டுக்குக் கூப்பிடறாப்ல இல்லைனாஅ கால் வருவது போன்று எடுத்துப் பேசி.....ஓ அப்படியா ....சரி வாங்கிட்டு வரேன்...திரும்ப அலையணுமே...டி நகர் வரை போகச்சொல்றியா....சரி சரி போய் பார்க்கறேன்...
இல்லைனா... வர கால் போலனா...அப்படியா? எங்க எந்த இடம்? ஓ சரி நான் வரேன்...ஒன் அவர்ல வரேன்...
சம்பந்தப்பட்ட நபருக்குப் புரிந்தால் ஓகே இல்லைனா இந்தக் காரணங்களைச் சொல்லி....ஹிஹிஹி
கீதா
ஆங்.. இது நல்ல ஐடியா!
நீக்குஸ்ரீராம் மாட்டவைக்கிறார் என்று தெரியாமல் ஐடியாவைச் சொல்லிட்டாங்களே. இனி இந்த ஐடியா என்னிடம் உபயோகித்தால் அலர்ட் ஆகிடுவேனே
நீக்குசேச்சே.. நான் அப்படி இல்லை நெல்லை.. யாரை வேனுமானாலும் கேட்டுப்பாருங்க...
நீக்குநினைச்சேன் நெல்லை....அடுத்து இங்க வந்து ஸ்ரீராம் கிட்ட சொலல்ணும்னு நினைச்சேன்..."ஸ்ரீராம் பார்த்துட்டே இருங்க நெல்லை வந்து என்னை காலை இழுக்கப் போகிறார்னு..."
நீக்குமேல போய்ட்டு இங்க வந்தா........ஹாஹாஹா
நெல்லை நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்....அப்படிச் செஞ்சதும் இல்லை. இதெல்லாம் நம்ம வீட்டுல செய்யறவங்க சிலர்கிட்ட கத்துக்கிட்டது....அடப் பாவிங்களா இப்படியுமா என்று வியந்து நான் பார்த்த விஷயங்கள். அதை சும்மா ஸ்ரீராம்கிட்ட அந்தக் கேள்விக்காகச் சொன்னது!!!
ஆனா ஸ்ரீராமும் அப்படிச் செய்ய மாட்டார்!!!! நானும் செய்ய மாட்டேன்!!
கீதா
மற்றொன்று, நம் நட்புகளை நாம நம்பணும். இல்லைனா அது நட்பே இல்லை! கண்டிப்பாக நம் மீது நல்ல நட்புடன் இருக்கறவங்க உண்மைய சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பாங்க நடிக்கணும்னு தேவையே இல்லை.
நீக்குஎந்த ஒரு உறவுக்கும் இது பொருந்தும்!
கீதா
ஸ்ரீராம் கேட்டதில் அர்த்தம் இருக்கு. நானா இருந்தால், இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்லிடுவேன். அது சரி... உறவுகளோ நட்புகளோ வீட்டுக்கு வருவதை, ஓ.. இன்னைக்கு வேலை அதிகமாயிடுமே, பொழுது போக்க முடியாதே என்று நினைப்பவர்கள் தற்காலத்தில் அதிகமாகிறார்களோ?
நீக்குஹாஹா நெல்லை இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொன்னாலும் நகராதவங்க இருக்காங்க. அதாவது தவிர்க்க நினைக்கும் நபர்களிடம்...
நீக்குகீதா
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட நண்பனைப் பார்க்கும்போது இருக்கிறது அவனுக்கு!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பின்னூட்டங்களின் கதையை என்னால் கிரஹிக்க இயலவில்லை. பின்னூட்டங்களை வைத்து கதையை யோசித்தேன். ராமர், சீதை வருவதை கண்டு இராமாயணமோ, இல்லை அது சம்பந்த பட்ட வேறு கதையோ என தீர்மானிக்கவும் இயலவில்லை. இதில் என் பின்னூட்டம் என்னவென்றும் உங்கள் பதிலை வைத்து நினைவுக்கு வரவில்லை. நடுவில் விசாலி, சங்கரன் என்ற பெயர் வேறு வந்ததால், இராமாயணத்திலிருந்து இறங்கி வந்தேன். பேசாமல் நீங்கள் அந்தக்கதையையும் மறுபடியும் வியாழன் கதம்பத்தில் ஒரு வித்தியாசமாக வெளியிட்டிருக்கலாம்.( சுருக்கமாகவேனும் )
கவிதைகள் அருமை. ரெற்றோ பொருள் கருத்துரையில் சகோதரி கீதாரெங்கன் மூலம் தெரிந்து கொண்டேன். முதல் கவிதை நன்றாக உள்ளது. கனவுகளும் நாம் எதிர்பாராத சமயத்தில் வந்து, எதிர்பாராத விதத்தில் மறந்தும் போகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பின்னூட்டங்களை வைத்து உங்களுக்கு கதை ஞாபகம் வரவில்லை என்றால் ஓகே, இயற்கை. கதை எழுதிய எனக்கே கதை நினைவில்லாமல்போய் அங்கு சென்று படித்து வந்தேன். அப்போதுதான் அங்கிருந்து பின்னூட்டங்களைக் கடத்தி வந்தேன்!
நீக்குஇன்று இந்த மாதிரி ஜானரில் கனவு காணவேண்டும் என்று செட் செய்து வைத்துக் கொள்ளும் மெஷினை சீனர்கள் கண்டுபிடித்து விட்டார்களாமே...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் காய்கறிகள் அழகாக நறுக்கி வைத்து அதை பதிவிட்டிருப்பதை மிக மிக ரசித்தேன். நீங்கள் காய்கறிகள் சிறப்பாக நறுக்குவதில் வல்லமை மிகுந்தவர் என அன்றொரு நாள் பதிவில் நீங்கள் சொன்னதை இன்று கண்கூடாக கண்டு மனம் மகிழ்ந்தேன். காய்கறிகள் ஒவ்வொன்றும் தன் முழுமையான அழகைப் பெற்றதில் மனம் மகிழ்ந்து போயிருக்கும்.
பாகல் ஜுஸ் ஆகட்டும். வாழைப்பூ உசிலியாகட்டும். அனைத்தும் அழகு. கோஸ் தலையில். உ. கி. நர்த்தனமாடும் அழகையும் ரசித்தேன். உண்மையிலேயே எனக்கு இன்று இதைப்பார்த்து வயிறே நிறைந்து விட்டது போங்கள்.
கோரானா மறுபடியும் வருகிறதா? பயமுறுத்த மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை போலும்.
நகைச்சுவைகளை ரசித்தேன். இன்று கதம்பம் பல வித்தியாசங்களுடன் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// நீங்கள் காய்கறிகள் சிறப்பாக நறுக்குவதில் வல்லமை மிகுந்தவர் என அன்றொரு நாள் பதிவில் நீங்கள் சொன்னதை//
நீக்குவரவர எனக்கு மறதி ஜாஸ்தி லாஜிக் கொண்டிருக்கிறது. எப்போது சொன்னேன் என்று எனக்கு நினைவில்லை!
கொரோனா பலவீனமாக மறுபடி ஒரு ரவுண்டு வர தயாயிருக்கிறது.
பாகல் ஜூஸ் இல்லை, பாகற்காய், வெங்காயக்கறி! காலை டிபனுக்கு பதில் சாப்பிடுவேன்!
நன்றி கமலா அக்கா.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா, வணக்கம்.
நீக்குகல்யாண வீட்டு அனுபவங்கள் அருமை.
பதிலளிநீக்குபரிமாறுபவர்கள் பார்த்து பார்த்து பரிமாறினால் அவர்களை பாராட்ட் வேண்டும். நமக்கு வேண்டியதை கேட்டு அளவாய் உண்ணலாம். உணவை வீணாக்காமல்.
செருப்பு கல்யாணவீட்டின் அழகை கெடுக்கிறது. அதற்கு செருப்பு வைக்க ஸ்டாண்ட் வைத்தால் அதில் வரிசையாக வைக்கலாம்.
பரிமாறுபவர்கள் பரிமாறும் அழகோடு, சாப்பிடுபவர்கள் தேவை இல்லாததை வேண்டாம் என்று சொல்லப் பழக வேண்டும். யார் வீட்டு காசோ என்பது போல வீண் செய்யக் கூடாது. சாப்பிட்டு முடித்த பந்தியில் நிறைய இலைகளில் நிறைய ஐட்டங்கள் தொடப்படாமலேயே அப்படியே இருப்பது கண்களை உறுத்தும்/
நீக்கு//சாப்பிடுபவர்கள் தேவை இல்லாததை வேண்டாம் என்று சொல்லப் பழக வேண்டும்.// ஒரு திருமணத்தில் என்னோடு அமர்ந்து சாப்பிட்டவர் பொரியலை கேட்டு வாங்கி போட்டுக் கொண்டு வீணாக்கினார். எனக்கு புரியவில்லை, கோபமும் வந்தது. வயதில் பெரியவர் என்பதால் வாயை மூடிக்கொண்டிருந்தேன்.
நீக்குஒரு புத்தகத்தில் 11 ஆம் நம்பரில் என்ன இருக்கிறது என்று பாருங்கள்!//
பதிலளிநீக்குபார்த்தேன், எங்கள் ப்ளாக் பார்த்து வியந்தேன்.
//உங்களுக்கு அவர் வருவதில் இஷ்டமில்லை. எப்படி அவரை அவாய்ட் செய்வது என்றும் தெரியவில்லை. என்ன செய்வீர்கள்?//
அதுதான் தெரிவது இல்லை. கீதா உங்களுக்கு சொன்னது போல செய்து தவிர்க்கப்பார்க்கலாம்.
ஹா... ஹா.. ஹா... விடைக்கு மார்க் கிடையாது. பிட் அடித்து விட்டீர்கள்!
நீக்குபழைய பின்னூட்டங்கள் படித்த போது எனக்கு நினைவு வரவில்லையே! நான் அந்த பதிவை படிக்கவில்லையோ ?அந்த 2019 பதிவின் சுட்டி கொடுத்து இருக்கலாம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஉங்கள் கமெண்ட் அங்கு பார்த்த நினைவில்லை அக்கா.
நீக்குசேஃப்டி பின் நல்ல கனமாக இருக்கிறதே! இப்போது கிடைக்கும் பின் கள் இவ்வளவு நன்றாக வருவது இல்லையே!
பதிலளிநீக்குகொரானா மீண்டும் வேண்டாம். ஆனால் மதுரையில் இப்போது எல்லோரும் மீனாட்சி திருவிழாவிற்கு பின் தொண்டைவலி, சளி, இருமல் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். வெயில் கடுமை ஒரு காரணம்.
அந்த சிம்ப்டம்ஸ் கோடைகாலத்தில் சகஜம்தானே அக்கா.. கொரோனா எப்பவுமே மக்களைக் குழப்பும்!
நீக்குஉங்கள் நறுகுஸ் படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது. அதன் வண்ணங்கள் கண்ணை கவர்கிறது.
பதிலளிநீக்குவாழைப்பூ உசுலியும், வெந்தைய குழம்பும் அருமையாக இருக்கிறது.
இது ஒரு தினசரி பொழுதுபோக்காகி விட்டது. ஒன்றிரண்டு பேர்கள் குழுமத்தில் பார்ப்பார்கள்!
நீக்குரெற்றோ கவிதைகள்' நீங்களும் அங்கு கவிதை எழுதி ரெற்றோ கவிதை எப்படி பிறந்தது என்று கேட்டூ விட்டீர்களா? அதற்கு பதில் கிடைத்ததா?
பதிலளிநீக்குபழைய புத்தகபகிர்வில் நகைச்சுவையும் , கதை , செய்திகள் என்று படித்தேன்.
பதில் எல்லாம் கிடைக்காது. லைக் கூட கிடைக்காது!!! இப்போது பகிர்ந்துகொண்டுவரும் இ பே நகைச்சுவை முடிந்தால்தான் அடுத்த செட்! அதுவரை இதைப் பொறுத்துக்கொள்ள வேணுமாய் கேட்டுக் கொ'ல்'கிறேன்!
நீக்குஇன்றைய கதம்பம் சுவையுடன் கலக்கலாக இருந்தது.
பதிலளிநீக்குபழைய பகிர்வு நகைச்சுவை யாக இருந்தது.
கவிதைகள் ரசனை.
நன்றி மாதேவி
நீக்குஎதற்காக பாகற்காய் சாப்பிடுகிறீர்கள்? டயபடீஸ் இருக்கிறது, அதுவும் ஆரம்ப நிலை அதற்காக என்றால் ப்ளீஸ் ஸ்டாப்! ஏனென்றால் பாகற்காய் மிகவும் வீர்யமுள்ளது, அதை ஆரம்பத்திலேயே தினசரி சாப்பிட ஆரம்பித்து விட்டால் மற்றவை உங்கள் உடம்பில் வேலை செய்யாதாம். வெந்தயம், வெண்டைக்காய், கோவைக்காய் பேன்ற எளிய மருந்துகள் போதும். இது ஆயுர்வேதம் தெரிந்த ஒருவர் கூறியது.
பதிலளிநீக்குஇல்லை பானு அக்கா.. சுகர், பாகற்காய் சாப்பிடணும் என்றெல்லாம் சாப்பிடுவதில்லை. அது எனக்குப் பிடித்த காய். அதனால் சாப்பிடுகிறேன். அதுவும் தினசரி அல்ல. ஒருநாள் காலை கேரட், பச்சையாக (அது சிவப்பாக அல்லவா இருக்கும் என்றெல்லாம் கேட்கக் கூடாது!) எலுமிச்சை பிழிந்து, பச்சை மிளகாய் ஒன்று கீறிப்போட்டு, பெருங்காயம் போட்டு சாப்பிடுவேன், அல்லது கத்தரிக்காய் கறி!!!! அல்லது ஏதாவது ஒரு கீரை ஒரு கப்.. இப்படி! சமயங்களில் தக்காளியும், வெங்காயமும் கூட அபப்டியே சாப்பிடுவேன். அப்புறம் வெள்ளரிக்காய்...இப்படி ஏதாவது ஒன்று. நன்றி உங்கள் ஆலோசனைக்கு.
நீக்குவெண்டைக்காய், வெந்தய்ம் போன்ற கொழகொழப்பான காய்கறிகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுமாம். கோவைகாயிலும் கொழகொழப்பு உண்டு.
பதிலளிநீக்குநான் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி காலை டிஃபன் சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி ஏதாவது. சமயங்களில் ஆகாது என்றாலும் ஆவக்காயை கொஞ்சம் நாக்கில் படச்செய்வேன். அல்லது ஒரு ஸ்பூன் மாகாளிக்கிழங்கு!
நீக்குரசத்தை கப்பில் கேட்கும் பழக்கம் எனக்கும் உண்டு:).
பதிலளிநீக்குஆண்டு 1941.. பக்கம் 11.. அட!!
கவிதைகள் அருமை.
சமயங்களில் நான் மோரும் அப்படி கேட்பேன்!!! நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு