தினமும் சமைத்து சமைத்து அலுத்துப் போனவர்களுக்கு சமையல் என்பது ஒரு நித்திய கடமையாகி ஏதோ சமைத்தோம், வந்தோம் என்கிற நிலை ஏற்பட்டு விடும். எல்லோருக்கும் அல்ல என்றாலும் பெரும்பாலானோருக்கு....
ஆண்களுக்காவது 60 வயதில் ஓய்வு என்று ஒரு நிலை வரும். பெண்களுக்கு இது கொஞ்சம் ஒத்துவராத விஷயம்! இந்த மாதிரி சமயங்களில் நடுவில் யாராவது வந்து சமைத்தால் அவர்களுக்கு ஒரு ரிலீஃப் தான்.
ஆனால் ரிலீஃப் என்று சொன்னாலும், வீட்டில் உள்ளவர்கள் திடீரென ஒரு நாள் மாறுதலாய் வந்து விழும் ருசியைப் பார்த்து 'ஆஹா ஓஹோ' என்றால் ரிலீஃபுக்கு பதில் அவர்களுக்கு லேசான எரிச்சல் ஏற்படுவதும் உண்டு.
இந்த நிலை சமீபத்தில் எங்கள் வீட்டில் வந்தது. சேனைக்கிழங்கு வாங்கி வந்தால் அப்பாதான் சமைக்க வேண்டும் என்பார்கள் மகன்கள். பெரும்பாலும் டிமிக்கி கொடுத்தாலும் அவ்வப்போது வளைந்து கொடுத்து செய்வதும் உண்டு!அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்கெனவே முன்பு பகிர்ந்திருந்த கோஃப்தா வடிவில் செய்திருந்ததை கொஞ்சமே கொஞ்சம் மாற்றி கட்லெட் வகையில் இந்தமுறை செய்தேன். நீங்களும் இப்படி செய்திருப்பீர்கள்!
தோல் நீக்கிய சேனைக்கிழங்கை நன்கு அலம்பி சுத்தம் செய்து கொண்டு குக்கரில் நான்கைந்து விசில் வைத்து இறக்கி நன்றாக கட்டியின்றி மசித்துக் கொள்ளவேண்டும்.
அதனுடன் இரண்டு மூன்று பச்சை மிளகாய், மூன்று இணுக்கு கறிவேப்பிலை, கொஞ்சம் கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாய் நறுக்கிச் சேர்க்கவேண்டும்.
பொடியாய் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவேண்டும்.
கொஞ்சம் அரிசிமாவு... தேவையானால் ஒரு ஸ்பூன் ரவா
இஞ்சி பூண்டு பேஸ்ட்..., கொஞ்சம் கரம் மசாலா
எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு கொண்டு வரவேண்டும்.
பிறகு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டிக்கொண்டு (கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டால் ஒட்டாது) வடைபோல உள்ளங்கையில் வைத்து லேஸாக பிரெஸ் செய்து தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கார்ன்ஃப்ளவர் மாவை தண்ணீரில் கலக்கி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் கார்ன்ப்லேக்ஸ் எடுத்துக் கொண்டு மிக்சியில் கொரகொரவென அரைத்துக் கொள்ளவேண்டும். தட்டி வைத்த வடைகளை கார்ன்ஃபிளார் கரைத்த நீரில் தோய்த்து, கார்ன்ஃப்லேக்ஸ் கொரகொரப்பில் (இவற்றை படம் எடுக்க மறந்து விட்டேன்!) புரட்டி எடுத்து அரை மணிநேரம் ஃபிரிஜ்ஜில் வைக்கவேண்டும்.
அப்படியே உடனே எண்ணெயில் போட்டால் கார்ன்ப்ளெக்ஸ் உதிர்ந்துவிட வாய்ப்பிருப்பதால் ஃபிரிஜிஜ்ஜில் வைத்துப் போட்டால் உதிராது. வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒரு ஐடியா சொன்னார். அதாவது மொத்த மாவையும் சப்பாத்தி போல சம அளவில் இட்டுக்கொண்டு ஒரு சிறு கப் வைத்து 'கட்' செய்து எடுத்து விடலாம் என்று சொன்னது நடைமுறையில் சரி வரவில்லை.
ஒவ்வொன்றாக உருட்டிதான் தட்டிக்கொண்டேன்.
கார்ன்ஃபிளேக்ஸில் புரட்டிய பிறகு....
உருட்டி, தட்டி எடுத்த வடைகளை கார்ன்ஃப்ளவர் நீரில் நனைந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. ஈரத்தால் கொழகொழத்து கொஞ்சம் வடிவம் மாறியது. நேரிடையாக கார்ன்ஃப்லேக்ஸ் மாவில் புரட்டி இருக்கலாம். அரை மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்திருந்து, பிறகு எடுத்து எண்ணெயில் பொறித்து எடுத்தால் சேனைக்கிழங்கு நக்கெட்ஸ் ரெடி. சாப்பிட்டால் ருசியோ ருசி என்று மகன்கள் கொண்டாடினார்கள்!
தக்காளி சாஸ் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். மறந்து விட்டது. அதற்குத் தேவையும் இருக்கவில்லை! மேலே கொரகொரப்பாகவும் உள்ளே நைஸாகவும், காரம், மணம், குணத்துடன் சிறந்து விளங்கியது!
நான் இப்படி முயற்சிப்பவற்றை வீட்டில் பெருக்க வரும் பெண்மணி பார்த்தவாறிருப்பார். இதையும் பார்த்தார். செய்ததும் டேஸ்ட்டும் பார்த்து முகம் மலர்ந்தார். மறுபடி ஒருமுறை செய்முறை சொல்லி சரி பார்த்துக் கொண்டார். அடுத்த முறை வரும்போது தான் சமையல் வேலை செய்யும் ராமச்சந்திரா டாக்டர் வீட்டில் இதை செய்து கொடுத்து பாராட்டுதல்கள் வாங்கினாராம்! டாக்டர் ப்ரீத்தம் என்னையே பாராட்டியது போல மகிழ்ந்து போனேன்.
சேனை நக்கெட்ஸ் பார்க்கவே நன்றாக இருக்கிறது. மருமகளின் கை வண்ணமோ என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குமருமகள் பாஸ்தா வில் பிஸ்தா. அதைத்தவிர, பொதுச்சமையலும், பிரியாணி, புலாவ் போன்றவையும் செய்வார். நேற்று ஐஸ்க்ரீம் செய்திருந்தார். என்னால்தான் சாப்பிட முடியவில்லை. இருமல். அருமையாக இருந்தததாம். எல்லோரும் சொன்னார்கள்.
நீக்குசேனை நக்கெட்ஸ் என்பதைக் காட்டிலும் சேனை கட்லெட் என்பது பொருத்தமாய் இருக்கும். செய்முறை நன்று. KFC சிக்கன் நக்கெட்ஸ் போன்று செய்ததாய் தோன்றுகிறது. கார்ன் பிளவருக்கு பதிலாக அவல் உபயோகிக்கலாம்.
பதிலளிநீக்குJayakumar
வைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது! சுவையில்தான்! இதற்கு முன் உருண்டையாய் போட்டு பொரித்தெடுத்த ஞாபகத்தில் இப்படிப் பெயரிட்டேன்! அவல் ஒருமுறை உபயோகித்துப் பார்க்கிறேன்!
நீக்குநேற்று food festival ஒன்றிர்க்குச் சென்றோம், அங்கு boiled yam என்று ஒன்று வாங்கினோம். அதில் உப்பு,சப்பு எதுவும் இல்லாமல் இனிப்பாக வேறு இருந்தது. என் மகள் அதை வீட்டிற்கு கொண்டு வந்து, வெங்காயம், ப.மிளகாய், கரம் மசாலா சேர்த்து சூடாக்கினாள். நன்றாக இருந்தது. உங்கள் செய்முறையில் செய்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆமாம். இப்படியும் செய்திருக்கலாம். அல்லது அதோடு வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி பச்சையாக போட்டு..
நீக்குவேணாம் boiled yam எப்படி இருக்கும் என்று தெரியாமல் நான் உளறக்கூடாது!
முருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா சரணம்.. வாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குசேனைக் கிழங்கு பற்றிய சமையல் குறிப்பு அருமை..
பதிலளிநீக்குவாழ்க நலம்
நன்றி. வாழ்க நலம்.
நீக்குசேனைக் கிழங்கு வெந்திருந்தாலும் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது..
பதிலளிநீக்குஅரிப்பை ஏற்படுத்தி விடும்...
எனக்கு கிழங்கு வகைகள் ஒத்துக் கொள்வதில்லை
அதென்னவோ சமீப காலங்களில் சேனை அரிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒருவேளை வாங்கிய உடனே சமைக்காமல் கொஞ்ச நாள் வைத்திருந்து சமைப்பதால் இருக்கலாம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குசேனை நக்கட்ஸ்/கட்லெட் செய்முறை நன்று.
பதிலளிநீக்குநாங்கள் பெரும்பாலும் சேனையை சிறிது சிறிதாக கட் செய்து நன்கு வறுத்த கறியமுதாகச் செய்வோம். திருமண விசேஷங்களில்தான் சேனை சிப்ஸ், எரிகொள்ளி போன்றவற்றைச் சுவைப்பது.
வாங்க நெல்லை... எரிகொள்ளியும் எரிசேரியும் ஒன்றா என்று தெரியவில்லை. நாங்கள் எரிசேரி செய்வோம். நீங்கள் சொன்ன வகைகள் எப்போதும் செய்பவைதானே... இது வித்தியாசமாக செய்து பார்க்கத் தோன்றியது!
நீக்குஏரிசேரி வாழைக்காய், சேனையும் சேர்த்து செய்யலாம். அந்த வறுத்த தேங்காய்பூ, மிளகு வாசனையுடன் நன்றாக இருக்கும். இறுதியில் அதில் விடும் தேங்காய் எண்ணெய் மணத்துடன் நன்றாக இருக்கும். நான் கூட என் வலைப்பூவில் அதை ஒருதடவை செய்து படங்களுடன் பகிர்ந்ததாக நினைவு.( எ. பியிலா என்பதும் நினைவில்லை)
நீக்குஸ்ரீராம் எரிகொள்ளி வேறு, எரிசேரி வேறு.
நீக்குஎங்க பக்கம் எரி கொள்ளி - வற்றல் மிளகாய், வெந்தயம் தேங்காய் எண்ணையில் வறுத்து, தேங்காயுடன் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, புளித்தண்ணியில் ஏதாச்சும் காய்கள் போட்டு வெந்து கொண்டு அரைத்த விழுதைக் கரைத்து விட்டு சிலர் விழுதில் கொஞ்சம் அரிசியும் வைத்து அரைப்பதுண்டு... சேர்த்துக் கொதித்ததும் தேங்காய் எண்ணையில் கடுகு கறிவேப்பிலை தாளிப்பது....எரி கொள்ளியை தேங்காய் அரைச்ச குழம்பு என்றும் எங்க பக்கங்களில் சொல்வதுண்டு.
இதன் சகோதரிகளாக, எரிகொள்ளி மோர்க்குழம்பு, மோர்க்குழம்பு வகைகள் செய்வது உண்டு....எபியில் நான் எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
கீதா
கமலாக்கா நீங்க உங்க ப்ளாக்ல போட்ட நினைவு எனக்கு,.
நீக்குகீதா
ஆமாம் கமலா அக்கா... மிளகு வாசனையுடன் எரிசேரி சூபபராக இருக்கும். வாழைக்காய் போட்டு செய்ததில்லை.
நீக்குஆமாம் சகோதரி. சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால், வாழையும், சேனையும் சேர்த்துத்தான் எப்போதும் வீட்டில் செய்வோம். தனித்தனியாகவும் சில சமயம் அமைவதுண்டு. (அதில் ஏதாவது ஒன்று அன்று வீட்டிற்கு வராமல் கடையில் இருந்தால்:))) .) எரிசேரி பதிவை நினைவு வைத்து நீங்கள் நினைவாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.
நீக்குநீங்கள் சொல்லும் எரிகொள்ளியை நாங்கள் எரிவுள்ளி என்போம். நீங்கள் சொன்ன அதே பக்குவந்தான். இதை நான் எ. பியில் எழுதி ருந்தது நினைவுக்குள் உள்ளது.
ஸோ எரிகொள்ளி என்பது மோர்க்குழம்பு வகையறாதான் என்று தெரிகிறது. சிறு மாற்றங்களுடன். என் பாஸ் மோர்க்குழம்பில் ஜித்தியாக்கும்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களுக்கு நீங்கள் சேனைக்கிழங்கை வைத்து செய்த புது விதமான ரெசிபி அருமை. படங்களும், படிப்படியான செய்முறைகளும் அமர்க்களமாக உள்ளது.படங்களில் சேனையின் மொறுமொறுப்பு நன்றாகத் தெரிகிறது. கிழங்கு வகை என்பதால், எண்ணெய் அதிகம் குடிக்குமோ ?
/ஆண்களுக்காவது 60 வயதில் ஓய்வு என்று ஒரு நிலை வரும். பெண்களுக்கு இது கொஞ்சம் ஒத்துவராத விஷயம்! இந்த மாதிரி சமயங்களில் நடுவில் யாராவது வந்து சமைத்தால் அவர்களுக்கு ஒரு ரிலீஃப் தான்.
ஆனால் ரிலீஃப் என்று சொன்னாலும், வீட்டில் உள்ளவர்கள் திடீரென ஒரு நாள் மாறுதலாய் வந்து விழும் ருசியைப் பார்த்து 'ஆஹா ஓஹோ' என்றால் ரிலீஃபுக்கு பதில் அவர்களுக்கு லேசான எரிச்சல் ஏற்படுவதும் உண்டு./
உண்மை... பெண்களின் மனநிலையை நன்கு உணர்ந்திருக்கிறீர்கள் . அது வேறொன்றுமில்லை. இதைச் சாக்கிட்டு நம்மை புறக்கணித்து விடுவார்களோ என சுயபச்சாதாபம் அதுவாகவே மேலோங்கி விடும்.
சேனை கறி, மசியல், கூட்டு வறுவல் என்பது போன்ற பல வகைகள் செய்துள்ளேன். .இப்படி செய்ததில்லை. சில சேனைகள் தொண்டை யை அரிக்கும். சற்று வெள்ளை கலரில் இருந்தால், சீக்கிரம் வேகுவதுடன் சாப்பிடும் போது தொண்டையில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும். கொஞ்சம் சிகப்பு கலந்திருந்தால், நறுக்கும் போதே கைகளில் அரிப்பு வந்து விடும். அதை சமைக்கும் போது புளிக்கரைசல் இட்டு சமனபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிடவே முடியாமல் போய் விடும்.( பின்னே சேனை என்றால் சும்மாவா? எத்தனை போர் வித்தைகளை அது வளரும் போதே கற்று வந்திருக்கும்? :))).)
பகிர்வு அருமையாக இருந்தது. தங்கள் மகன்கள் இம்மாதிரியான உணவைதான் விரும்புவார்கள். செய்த அன்றும் விரும்பி சாப்பிட்டிருப்பார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் தங்களுக்கு வீட்டில் பணி செய்பவரின் மூலமாக கிடைத்த பாராட்டுக்களுக்கும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// து வேறொன்றுமில்லை. இதைச் சாக்கிட்டு நம்மை புறக்கணித்து விடுவார்களோ என சுயபச்சாதாபம் //
நீக்குஇதை ஏற்க முடியவில்லை கமலா அக்கா. 'ஒரு நாள் செஞ்சுட்டா ஆச்சா... டெய்லி செஞ்சு பாரு' என்னும் தார்மீகக் கோபம்.
மேலும் ஒரே சுவையை சாப்பிட்டுக் கொண்டிருபப்வர்களுக்கு சட்டென ஒரு மாறுதல் சுவை கொடுத்த உடன் ஆஹா ஓஹோ என்பார்கள். இதையே கொஞ்சநாள் தொடன்கிர்த்து கொடுத்தால் பாஸ் தரும் பழைய சாதத்துக்கு செம அப்ளாஸ் கிடைக்கும்!
சொல்ல மறந்து விட்டேன். ஆச்சரியகரமாக எண்ணெய் அதிகம் குடிக்கவில்லை.
நீக்குசேனை நக்கெட்ஸ்/கட்லெட் சூப்பர்!!!! நன்றாக இருக்கும் என்றும் தெரியும்!!!
பதிலளிநீக்குநல்லா வந்திருக்கு ஸ்ரீராம். நீங்க சொன்னாப்ல, அதுல கார்ன்ஃப்ளவர் கரைத்ததில் புரட்டி அது தேவையில்லை. டைரக்ட்டா ப்ரெட் க்ரம்ப்ஸ் பொடி,, இல்லைனா ரஸ்க் பொடி, இல்லைனா நீங்க சொல்லியிருக்கும் கார்ன்ஃப்ளேக்ஸ் பொடியில் புரட்டினாலே போதும். அந்தக் கிழங்கு கலவையில் ஈரம் இருக்குமே. இல்லைனா ரொம்ப கெட்டியாகப் பண்ண வேண்டும்.
நம்ம வீட்டில் முன்னர் மகன் சின்னவனாக, இளைஞனாக!!!!!!! இருந்தப்ப....இப்படி சேனை, உருளை, கருணை எல்லாத்திலும் செய்ததுண்டு.
சேனையைப் போல, கருணையும் கடிக்குமே! அதனால கொஞ்சம் ஆம்சூர் பொடி சேர்த்துக் கொள்வதுண்டு இல்லைனா எலுமிச்சை சாறு.
இன்னொன்று, சேனைக்கிழங்கை வாங்கியதும் செய்யாமல் கொஞ்சம் அப்படியே போட்டுவிட்டு 4, 5 நாட்கள் கழித்துச் செய்தால் அரிப்பு குறையும்....அல்லது வராமலும் இருக்கும்.
கீதா
வாங்க கீதா... நீங்கள் சொல்வது போல பிரெட் க்ரம்ப்ஸ் முதல் ரஸ்க் அது இது என்று உபயோகிக்கலாம். எண்ணெய் அதிகம் குடிக்கவில்லை. எப்பவுமே சேனை, கருணை ஆகியவற்றை வாங்கிய உடன் செய்யாமல் மெள்ளத்தான் செய்வது வழக்கம்.
நீக்குஒரு சிந்தனை தமிழில் மெல்ல, மெள்ள இரண்டுமே ஒரே பொருள் தருகிறது இல்லை? இல்லை ஏதும் வித்தியாசம் இருக்குமோ?!
நம்ம வீட்டில் எனக்கு ரிலீஃப் கிடைத்துச் சாப்பிடும் போது பாராட்டிக் கொண்டே சாப்பிடுவேன்!!!!! போனஸ், ஊக்கம் கொடுப்பது செய்தவங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. இல்லையா? ஸ்ரீராம் என்ன சொல்றீங்க? அடுத்த வாட்டி ஒரு ரிலீஃப் எடுத்துக்கலாமே ஹிஹிஹி...எல்லாம் வின் வின் தான்!
பதிலளிநீக்குகீதா
அந்த ரிலீஃப் எப்போ கிடைக்கும்? அதைப்பற்றி கூட கொஞ்சம் எழுத ஆசை. வம்பாயிடும்!
நீக்குசேனை நக்கலெட்ஸ் செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. படங்களைப்பார்த்தாலே சுவையும் தெரிகிறது.
பதிலளிநீக்குநறுக்கும் போதே சேனை கைகளில் அரிப்பதால்தான் அதற்கு இந்த சுவை வருகிறதோ :) எங்கள் வீட்டிலும் சேனை பிடிக்கும்.
கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு இந்த அரிப்பு பிரச்னை இதுவரை வந்ததில்லை. சமயங்களில் ஒரு மாதிரி வாசனை அடிக்கும். இப்போது அதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். நன்றி மாதேவி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குசேனை நக்கெட்ஸ்/கட்லெட் நன்றாக இருக்கிறது, செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குகுழந்தைகள் விரும்பி சாப்பிட்டால் செய்த களைப்பு தெரியாது.
//வீட்டில் உள்ளவர்கள் திடீரென ஒரு நாள் மாறுதலாய் வந்து விழும் ருசியைப் பார்த்து 'ஆஹா ஓஹோ' என்றால் ரிலீஃபுக்கு பதில் அவர்களுக்கு லேசான எரிச்சல் ஏற்படுவதும் உண்டு.//
எப்போதாவது செய்யும் அப்பாக்கள் நல்ல பேர் எடுப்பது மகிழ்ச்சிதான். நான் ஊரில் இல்லாத போது தான் என் கணவர் செய்து கொடுப்பார். அப்போது அப்பா செய்து கொடுத்தவைகளை புகழ்வார்கள் பிள்ளைகள். அப்போது உங்களுக்கு செய்து கொடுப்பார்கள் அம்மாவுக்கு மட்டும் கிடையாது என்று கொஞ்சம் கோபம் ஏற்படும்.
நாள் முழுவதும் கூட இருக்கும் அம்மாவை விட காலை போய் மாலை வரும் அப்பாவை பார்க்க குழந்தைகள் மகிழ்ச்சியில் குதித்து அப்பாவிடம் போகும். அப்போது ஏற்படும் செல்ல கோபம் போலதான் இதுவும்.
நாமே செய்து நாமே சாப்பிடுவதில் சுவை இல்லை என்று தோன்றும். நான் சமைக்கும்போது சாப்பிட பெரிய ஆர்வம் ஏற்படாது.
நீக்குஅம்மா அப்பாவுக்கும் கூட லேசான பொறாமை வருமா! செல்லமாகத்தான்!
சேனையை வாங்கியவுடன் சமைக்க கூடாது, கொஞ்சம் நாளாகி விட்டால் அரிப்பு இருக்காது. புது கிழங்கு அரிக்கும்.
பதிலளிநீக்குசேனையை வேக வைத்து காரம், சின்னவெங்காயம் , கடுகு கருவேப்பிலை எல்லாம் போட்டு பிசைந்து சின்ன சின்னதாக தட்டி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்வேன். அதை மழை காலத்தில் காய்கள் கிடைக்காத போது வறுத்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.
திருவெண்காட்டில் தொடர் மழை காலத்தில் காய் வராது அப்போது எல்லாம், வெயில் காலத்தில் போட்ட உருளை வேக வைத்து காய வைத்த வற்றல், வாழைக்காய் அப்பளம், வெங்காயவடகம் , கத்திரி வற்றல், கொத்தவரை வற்றல், மோர் மிளகாய் ,அவல் வடகம் எல்லாம் கை கொடுக்கும்.
ஆஹா.. இப்படி எல்லாம் கூட சேனையை பாதுகாத்து வைத்துக் கொள்ளலாமா? புதிய தகவலை இருக்கிறதே....
நீக்குஅட ! இங்கே கேரளாக்கடையில் ஃப்ரோஸன் சேனை கிடைக்கிறது. செஞ்சுறலாம் !!!!
பதிலளிநீக்கு