15.7.26

S.ஜானகியின் குரலில் ரசித்த பாடல் எது? + சரோஜாதேவி 07

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் :

1. மதுவை எதற்காக ஒழிக்கவேண்டும்? ஜனநாயக நாட்டில், குறிப்பிட்ட சத மக்கள் மதுவை விரும்புகிறார்கள்.  அதனை ஒழிப்போம் என்றால் அந்த முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பாதா?  

# அளவாக குடிக்கத் தெரியாத மக்கள் பெரும்பாலாக இருக்கும்போது மதுவை ஒழிப்பதற்கும் ஒரு நியாயம் இருக்கிறது.

* சோமபானம், சுராபானம் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாக புழங்கி வருவதை அப்படி ஒழித்துவிட முடியுமா என்ன!  இதை எல்லாம் எப்படி கட்டுக்குள் வைத்திருந்தீர்கள் என்று ராஜராஜ சோழனை கேட்கவேண்டும்!

2.  அறிவியல் கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் மக்களை சோம்பேறிகளாக ஆக்குகிறதா?   

# " இந்த வேலையை எளிதாகச் செய்ய வழி சொல்லித் தருகிறோம்.  உங்கள் நேரத்தை வேறு வழிகளில் உபயோமாகச் செலவு செய்யுங்கள் "  என்றுதான் விஞ்ஞானம் சொல்கிறது .  அதை கேட்கும் அளவுக்கு நமக்கு புத்திசாலித்தனம் இல்லை. என்ன செய்வது ? Time saving leading to time wasting.

* இப்போதைய தலைமுறை வாழ்க்கையின் பாதி நேரத்தை தூக்கத்திலேயே கழிக்கிறது!

3. மக்களிடம் தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா?  அத்தியாவசிய தேவைகளுக்கு அதிகமாக. மற்றபடி ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றால், அதற்கு எத்தனை கோடிகள் இருந்தாலும், இன்னும் தேவை என்றுதான் தோன்றும்.

# மக்கள் தொகையில் ஒரு மிகச்சிறு சதவிகிதம் பேருக்குத்தான் நீங்கள் சொல்லுகிற மாதிரி அதிகப் பணவசதி  இருக்கும் . ‌ மிகப்பெரும்பான்மையான இல்லாதவர்கள் நம் கண்ணுக்குப் படுவதில்லை. இது ஒரு வருந்தத்தக்க விஷயம்.

* சேமிப்பு என்பது இப்போதெல்லாம் ரொம்பக் கம்மியோ என்கிற சந்தேகம் எனக்கு வரும்.

4. ஆட்டமேடிக் மெஷினில் செய்யும் முறுக்கு, வடை போன்றவை ருசியாக இருக்கிறதா இல்லை கையினால் செய்பவைகளில்தான் ருசி அதிகமா? உங்கள் கருத்து என்ன?

# கைப் பக்குவம் என்பதைத்தான் கை மணம் என்று சொல்கிறோம்.  எல்லாவற்றையும் அளவாக எடுத்து சரியாகச் சமைப்பதுதானே கை மணம் ? இதை ஒரு எந்திரம் சரியாகச் செய்யுமானால் அதில் ருசி குறைவதற்கு வழியே இல்லை. அப்படி குறைவதாகத் தோன்றினால் அது நமது கற்பனை.

* சப்பாத்தி மெஷினில் செய்யப்படும் சப்பாத்தி சாப்பிட எனக்குப் பிடிக்காது.  கையால் இட்டு தவாவில் இட்டு சுட்டு எடுக்கும் சப்பாத்திதான் பிடிக்கும்!

5. யூடியூப்ல, உயிர்வாழ மிக முக்கியமான 5 விஷயங்கள்,  ஹார்ட் அட்டாக் வரப்போகிறதா என்று சொல்லும் 3 அறிகுறிகள், 70க்கு மேல் நீங்க ஆரோக்கியமாக இருக்கீங்க என்பதற்கு 7 செயல்கள் என்றெல்லாம் அட்ராக்டிவ்வா தலைப்பு வச்சுட்டு, சட்டுப் புட்டுன்னு அந்த விஷயங்களைச் சொல்லாமல் அரை மணி நேரம் அறுக்கறாங்களே.. அதன் காரணம் என்ன?

# நீளமாகச் சொல்வது ஒரு சாமர்த்தியம் என்று நினைப்பதால்தான் இப்படி நடக்கிறது. ஒருவேளை சில பேருக்கு வளவள என்று படிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்குமோ ?

& இகற்கு நான்கு காரணங்கள் சொல்லலாம்! ஒன்று -  நாலு பேர் நம்மைப் பற்றி உயர்வாக நினைக்கவேண்டும் என்ற நினைப்பு. அந்த நினைப்பு வருவதற்கு ஐந்து காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று நாம் நமக்காகப் பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவார்கள் என்ற எண்ணம் அந்த எண்ணம் வருவதற்கு ஆறு காரணங்கள் சொல்லலாம் . அதாவது .. 

ஆ ! நெ த ஓடுகிறார் - யாராவது அவரைப் பிடியுங்கள்! 


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

S.ஜானகியின் குரலில் ரசித்த பாடல் எது?

# சிங்கார வேலனே தேவா .. 

ராசாவே உன்னை நம்பி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

& சிங்காரவேலனே தேவா 

இந்த மன்றத்தில் ஓடி வரும் 

சொர்க்கமே என்றாலும் .. அது நம்மூரு போல வருமா? 

இன்னும் பல உள்ளன 

* 'பைனரிலே பதில் சொல்லு'ங்கற மாதிரி இப்படி சிங்கிளா கேட்டா எப்படி...  அது கெடக்கு நெறைய....  இளையராஜா வருகைக்குப் பின் ஜானகி எல்லைகளைக் கடந்தார்.

= = = = = = 

படமும் பதமும் : 


ஸ்ரீராம்.

என்னவாக்கும் இது?!


நெல்லைத்தமிழன் : 


ஒரு முறை ஹைதராபாத்திற்கு அலுவலக விஷயமாக நான் பஹ்ரைனிலிருந்து வந்திருந்தேன்.அங்கு தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தேன்.  எனக்கு நல்ல ஆந்திரா வெஜிடேரியன் மீல்ஸ் சாப்பிடணும் என்று கொள்ளை ஆசை.  தங்கியிருந்த ஹோட்டலில் மதிய உணவு 750-800 ரூபாய் என்று நினைவு (2008 வாக்கில்). துரதிருஷ்டவசமாக நான் வெளியே பல இடங்களுக்குச் செல்லவேண்டி வந்ததால், மதிய உணவு சாப்பிட இயலவில்லை.  மேலே உள்ள படம் ஹுசைன் சாகர்.  என்னை மதிய உணவிற்கு வெளியே சூப்பர் இடத்திற்குக் கூட்டிச்செல்லப்போகிறேன் என்று நான் சந்தித்த கம்பெனியைச் சேர்ந்தவர் சொன்னார். நான் திரும்பத் திரும்ப, வேண்டாம், நான் ப்யூர் வெஜிடேரியன், அதனால் நல்ல வெஜிடேரியன் உணவகம் நானே சென்றுகொள்கிறேன் என்றேன். அவர், அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

இந்த சார்மினார் ஸ்தூபி, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, ஹைதிராபாத்தின் பழம்பெரும் சின்னம். இதனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நம் செல்லப்பா சார் நினைவு வரும். அவர்தான் அந்த இடங்களில் அவருடைய அனுபவங்களைப் பதிவு செய்திருந்தார்.  என்னைக் கூட்டிச் சென்றவர் இதற்கு அருகில் ஒரு புகழ்பெற்ற உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். அது முஸ்லீம் உணவகம். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. ஆனாலும் அவர், இங்கு வெஜிடேரியன் உணவும் கிடைக்கும் இது மிகவும் புகழ்பெற்றது என்று சொன்னார். இது அலுவலகப் பயணமாச்சே... மனதில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (எத்தனை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்) ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருடன் சென்றேன். எனக்கு நல்ல வெஜிடபிள் பிரியாணி மற்றும் ஒரு இனிப்பு ஆர்டர் செய்தார்.  சாப்பிட்டுத் தொலைத்தேன்.  மனதில் என்னடா இப்படி ஒரு தவறு செய்துவிட்டோமே என்று உறுத்திக்கொண்டே இருந்தது. இன்றைக்கும், அதாவது பல அனுபவங்களுக்குப் பிறகும், அத்தகைய ரெஸ்டாரண்டில் என்னால் நுழைய முடிவதில்லை. சிறிய வயதிலிருந்தே மனதில், சுத்தம் சுகாதாரம் பதிந்துபோய்விட்டது.


பிரியாணியைப் பற்றியும் ரெஸ்டாரண்ட் பற்றியும் சொல்லிவிட்டு படத்தைப் பகிராமல் இருக்கலாமா?  அதே நேரத்தில் 90களில் பாண்டிபஜார் அருகில் இருந்த பிரில்லியண்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் போஸ்டாபீஸ் சாலைகளில் மாலை 6 மணிக்கு மேல் கையேந்தி பவன்கள் வரும். அங்கு உணவு சாப்பிட்டிருக்கிறேன். முழுவதும் வெஜ்தான். உறுத்தல் இருந்ததில்லை. ஆமாம் அத்தகைய ருசியான உணவகங்கள் இப்போது எங்கே போய்விட்டன?

எ பி கமெண்ட் : 

ஆமாம், படத்தில் உங்கள் முகத்தில் அசௌகரியம் + சந்தேகம் தெரிகிறது! 

== = = = = == = = 

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை : 

முன்கதை சுருக்: 

பகுதி 01 :  பாபா ஒரு துப்பறியும் நிறுவனத்தில் private detective ஆக வேலையில் சேர்கிறான். நாநா என்பவரிடமிருந்து appointment கேட்டு - சந்திக்க நேரம் கேட்டு வாட்ஸ் ஆப் செய்தி வருகிறது. பாபா சம்மதிக்கின்றான். 

பகுதி 02 :  நாநா வருகிறான். சரோஜா மெமரி கார்ட் பற்றி விளக்குகிறான். பாபாவின் ஜாதகம் கேட்கிறான். பாபா உள்ளே சென்று ஜாதகம் கொண்டுவருகிறான். 

பகுதி 03 :  நாநா பாபாவிற்கான சரோஜா மெமரி கார்ட் உருவாக்கி, அதை இயக்கி ஒரு ஜோதிட முன் நிகழ்வை சொல்கிறான். 

பகுதி 04 : நாநா சொன்னபடியே பாபாவின் நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. 

பகுதி 05 : நாநா, பாபாவின் நெற்றிக்கு பெரிய கட்டுப் போட்டு, எதிர் வீட்டு விமலாவின் கடைக்கண் பார்வை பெற யோசனை சொல்கிறான். தெருவில் கூடிய கலாட்டா கும்பலை போலீஸ் வேன் ஏற்றிச் செல்கிறது 

பகுதி 06 : பாவனா நீ எந்திரி! நானாவின் வீட்டிற்கு வரும் பாபாவை வரவேற்பது, பாவனா என்னும் கம்ப்யூட்டர் பிம்பம். அதுதான் நானாவின் அந்தரங்கக் காரியதரிசி. பாவனாவால் படிக்க முடியும், கேட்க முடியும், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், யோசனைகள் சொல்லவும் முடியும். 

இனி 

பகுதி 07 : அறுஷ்கா & தமெனா !! 😄

" பாபா நீ வீணா ஃபோட்டோவை பாவனா பக்கத்துல இருக்கும் காமிரா முன் காட்டு" 

" பாவனா நீ வீணா ஃபோட்டோவை என் அமெரிக்க ஃப்ரெண்ட் ஆனந்துக்கு அனுப்பி வீணாவைப் பிடிச்சுருந்தா எனக்கு செய்தி அனுப்பச் சொல்லு. " 

பாபா வீணா ஃபோட்டோவை பாவனாவின் காமிரா கண்ணுக்கு முன் காட்டினான். 

" ஓ கே" என்றது பாவனா. 

" அனுப்பிட்டேன் பாஸ்" 

" பாவனா அறுஷ்கா வந்தாங்களா? இன்னைக்கு என்ன காலை டிஃபன்? பாபா காலையிலேயே ஆஸ்பத்திரி போறேன்னு சொல்லிட்டு வந்ததால இன்னும் ஒன்னும் சாப்பிட்டிருக்கமாட்டான். " 

" ஆமாம். இனிமேதான் டிஃபன் சாப்பிடணும்" என்ற பாபா " ஆமாம் அது யாரு அனுஷ்கா?" என்றான். 

" அனுஷ்கா இல்லை அறுஷ்கா - பாவனா வெச்ச பேரு - அவங்க ஒரிஜினல் பேரு எல். விஜயலட்சுமி. லஸ் கார்னர் லச்சுமணன் விஜயலச்சுமி. அவங்க நல்லா சமைக்கிறாங்கன்னு நான் சொன்னதால 'அறுசுவை அக்கா'ன்னு பட்டம் கொடுத்து அதைச் சுருக்கி அறுஷ்கான்னு ஆக்கிடுச்சு இந்த வாயாடி. அதோட சில சமயங்களில் அவங்க ஊர்வம்பு கதைகள் நிறைய சொல்லி அறுக்கறதுனாலயும் அந்தப் பேர்" 


" பாஸ் இன்னைக்கு உங்க ஃப்ரெண்ட் வருவார்னு நீங்க சொல்லியிருந்ததால உங்க ரெண்டு பேரையும் அங்கே வரச் சொல்லிட்டாங்க " 

" சரி. நாங்க போய் டிஃபன் சாப்பிட்டுவிட்டு வர்றோம். அப்புறம் சரோஜாதேவி மெமரி கார்டு டெமோ வெச்சிக்கலாம் " 

" பாவனா - வாசல்ல யாரு வர்றாங்க பாரு? " 

" பாஸ் நம்ம தமெனா வந்துருக்கு. இன்னிக்கு லேட் போலிருக்கு.வாசல் பெருக்கி தண்ணி தெளிச்சு கோலம் போட்டுட்டு உள்ளே வரும்." 

பாபா, " யாரு தமன்னாவா?" என்றான் குழம்பிப் போய்.‌

" வழக்கம் போல பாவனா வெச்ச பேருதான் தமெனா. அந்தப் பொண்ணு பேரு மைனா. அது தரைப் பெருக்கி மெழுகுவதால அதை செல்லமா தமெனான்னு சொல்லுவோம்!"

" பாவிகளா! உங்களுக்கு நடுவுல இருந்தா சீக்கிரமே எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும். வா போகலாம் டிஃபன் சாப்பிட" என்றான் பாபா. 

இருவரும் புறப்பட்டனர். வாசலில் ஓரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தாள். பாவாடை தாவணி அணிந்த பெண் ஒருத்தி.

" என்ன மைனா? நல்லா படிச்சுக்கிட்டு இருக்கியா? ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டியா? படிப்புல ஏதாவது சந்தேகம் இருந்தா பாவனா கிட்ட கேளு.‌ படிப்புக்கு என்ன பணம் வேண்டும்னாலும் பாவனா கிட்ட சொல்லி வை. நான் கொடுக்கிறேன் " என்றபடி பாபாவுடன் புறப்பட்டான் நாநா. 

" சரி அண்ணா " என்றாள் மைனா. 

" என் கார்ல போகலாமா இல்லை உன் காரா? " என்றான் பாபா. 

" காரெல்லாம் வேண்டாம். ரெண்டு காரும் இங்கேயே இருக்கட்டும். பக்கத்து தெருவுல இருக்கற ஹோட்டல்தான் நாம் போக வேண்டிய இடம். நடந்தே போயிடலாம். வா" என்றபடி நடந்தான் நாநா. 

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத சாதாரண ஆனால் சுத்தமான ஹோட்டல். முரளீஸ் கஃபே. 

கல்லாவில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயது ஆள், " வா நாநா - நீ ஃப்ரெண்ட் கூட வருவேனு விஜயா சொன்னாங்க. ஃப்ரெண்ட் பேர் என்ன?"

" பாபா. ஃப்ரெண்ட் மட்டும் இல்லே. பிசினஸ் பார்ட்னர் " 

" அடேடே அப்படியா! வெல்கம் சார். அடிக்கடி வாங்கோ." 

" பிசினஸ் எல்லாம் எப்படிப் போகுது?" என்று கேட்டான் நாநா. 

" எல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கு. பிசினஸை கொஞ்சம் மேம்படுத்தலாம்னு ஒரு யோசனை. " 

" சரி. நம்ம எக்ஸ்பர்ட் ஏகாம்பரத்தை வரச் சொல்கிறேன். அவருடன் பேசி என்ன செலவாகும்னு முடிவு செய்து எனக்கு செய்தி அனுப்புங்க முரளி" 

" சரி நாநா" 
**** 

உள்ளே சென்று ஒரு மின் விசிறிக்கு கீழே உள்ள மேஜை அருகில் நாற்காலிகளில் உட்கார்ந்தனர் இருவரும். 

" நாநா தம்பீ வாப்பா. இன்னிக்கு உங்க ஃப்ரெண்ட் வருவார்னு பாவனா சொல்லிச்சு. அவரு என்ன டிஃபன் சாப்பிடுவார்னு தெரியாததால நான் ஒன்றும் அங்கே கொண்டு வந்து கொடுக்கலை. இங்கேயே வந்து வேண்டியதை சாப்பிட்டுக்கலாம்னு பாவனா கைல சொன்னேன்" என்றார் விஜயா. 

"சரி அக்கா " என்றான் நாநா. 

பாபாவும் நாநாவும் வேண்டிய காலை உணவு வகைகளை இரசித்துச் சாப்பிட்டனர். 

கல்லா அருகே அவர்கள் வந்த போது முரளி, நாநாவிடம், " பில் பாவனாக்கு அனுப்பி , அது பேமெண்ட் பண்ணிடுச்சு " என்றார். 
**** 

வீட்டிற்கு வந்தனர் நாநாவும் பாபாவும். 

பாவனாவிடம் தமெனா சயன்ஸ் பாட சந்தேகம் ஏதோ கேட்டிருந்ததால் கம்ப்யூட்டர் திரையில் படத்துடன் விவரங்கள் பாவனா சொல்லிக் கொண்டு இருந்தது. 

அது முடிந்ததும் மைனா எழுந்தாள். 

" நான் போயிட்டு வரேன் அண்ணே" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். 

" பாவனா முரளீஸ் கஃபே எக்ஸ்பேன்ஷன் ப்ராஜெக்ட் பத்தி ஏகாம்பரம் கிட்டேருந்து தகவல் வந்தா எனக்கு அனுப்பு." 

" எஸ் பாஸ் " 

" சரி. இப்போ ச தே மெ கார்ட் டெமோ டைம். பாபா நான் இப்போ உருவிலிருந்து அருவமாகப் போகிறேன். பாத்துக்கோ" என்று சொன்னான் நாநா.‌

முன்பு சரோஜா மெமரி கார்டுக்கு கட்டிய மணிக்கட்டுப் பட்டையை விட சற்று பெரிய பட்டையைக் கையில் கட்டிக் கொண்டான். 

" இங்கே பார் இதில் நான்கு பக்கத்திலும் நான்கு பொத்தான்கள் உள்ளன. 

1) பவர் ஆன் / ஆஃப்

2) வைப்ரேட் (Vi) 

3) டி வைப்ரேட் ( DeVi) 

4) எமர்ஜென்சி 

முதலில் பவர் ஆன் செய்துவிட்டேன். 

அடுத்து வைப்ரேட். 

ஓ கே . ஸ்டெடி இப்போ டி வைப்ரேட்" என்று சொல்லி பொத்தானை அமுக்கினான் நாநா. 

உடனே ... 


(தொடரும்) 


ஸ்ரீராம் படம் விடை  :

92 கருத்துகள்:

  1. பனைமரம் பார்த்த உடனே தெரிந்துவிட்டது.

    பனைக் குடும்பத்தின் ஒரு மரத்திலிருந்துதான் இலைகளைப் பறித்து அதைக்கொண்டு அந்தமான் ஆதிவாசிகள் வீடுகளுக்கு கூரை வேய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. இங்கு ஏப்ரல் மே மாதங்களில் நுங்கு சுளைகள் கிடைக்கும். ஆறு நுங்கு ஐம்பது ரூபாய். சென்னையில் சில மாதங்கள் முன்பு தி நகரில், பாட்டிலில் கொடுத்த பதநீர் 120ரூ- சாப்பிட்டேன். இரண்டையும் சீசனில் சாப்பிட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் பயங்கர விலை

      நீக்கு
    2. நான் பெங்களூரில் இருக்கிறேன். நுங்கு வெட்டித்தரவங்க ஒரு நுங்கு காய் 40-59 சொல்றாங்க. நுங்கா மார்க்கெட்ல ஆறு வாரங்கள் கிடைக்கும்

      நீக்கு
    3. நான் இருக்கும் பகுதியில் எதுவும் கிடைப்பதில்லை!

      நீக்கு
    4. ம்ம்ம்ம் இங்கே கிடைச்சாலும் கோபுர வாசலோடு நின்னுடுவதால் வாங்கி வர யாரும் இல்லை! :( மாமாவை ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுட்டே இருக்கேன். :(

      நீக்கு
  3. எஸ் ஜானகி மிக நல்ல பாடகி மற்றும் நல்ல திறமை மிக்கவர். நிறைய பாடல்கள் அவர் பாடியது பிடிக்கும். முதலில் கவர்ந்தது ஹாஸ்டல் காலங்களில் கேட்ட, கிழவி குரலில் பாடிய பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டுக் குட்டி முட்டையிட்டு பாடலா!

      நீக்கு
    2. மனசுல இருக்கு வரமாட்டேங்குது. அவங்க பாலுவுக்கெல்லாம் ரொம்பப் பெரியவங்க என்பதை விஜய் டிவி நிகழ்ச்சிகளின்போதுதான் தெரிந்துகொண்டேன்.பத்பவிபூஷன் வாங்கிக்கிட்டிருக்கலாம். யாரோ தவறா ஆலோசனை சொல்லிட்டாங்க.

      நீக்கு
    3. // மனசுல இருக்கு வரமாட்டேங்குது.// அப்படி ஒரு பாடலா!

      நீக்கு
  4. எந்திரம் செய்யுமானால் ருசி குறைய வாய்ப்பில்லை... உண்மைதான். முதலில் இருக்காது என நினைத்தேன். சரவணபவனில் (88-95) எல்லா உணவகங்களிலும் ருசி அப்படியே ஒரே மாதிரி, சுவையாக இருந்தது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் சப்பாத்தி, தோசை எல்லாம் கையினால் செய்யற மாதிரி இருப்பதில்லை என்பதே உண்மை.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
    2. கமலா மேடம், நேற்றைய பதிவில் நீங்கள், "இடக்கரடக்கல் என்றால் என்ன?" என்று கேட்டிருந்தீர்கள். இடக்கரடக்கல் என்றால் என்ன பொருள் என்று எழுதியிருந்தேன், பார்த்தீர்களா?

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    /யூடியூப்ல, உயிர்வாழ மிக முக்கியமான 5 விஷயங்கள், ஹார்ட் அட்டாக் வரப்போகிறதா என்று சொல்லும் 3 அறிகுறிகள், 70க்கு மேல் நீங்க ஆரோக்கியமாக இருக்கீங்க என்பதற்கு 7 செயல்கள் என்றெல்லாம் அட்ராக்டிவ்வா தல/ப்பு வச்சுட்டு, சட்டுப் புட்டுன்னு அந்த விஷயங்களைச் சொல்லாமல் அரை மணி நேரம் அறுக்கறாங்களே.. அதன் காரணம் என்ன?/

    சட்டுப் புட்டுனு அதை முதலில் அவர்கள் சொல்லி விட்டால், நாம் உடனே அந்த செயல்களைச் செய்ய முனைந்து விடுவோமே என்ற பயந்தான் காரணமாக இருக்கும்..

    இரண்டாவது அந்த செயல்களினால் பலன் ஒன்றும் இருக்காது என்பதும் அவர்கள் கண்டறிந்த உண்மை.. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப யூடியூபில் ஒரு யோகா, சித்த மருத்துவர் சுகபேதி பற்றி காணொளி போட்டிருந்தார். குடல் சுத்தம் செய்ய. மனைவியின் எச்சரிக்கையை மீறி நம்பிச் செய்தேன். காணொளி பார்த்து எக்சர்சைஸ் செய்யலாம் மற்றும் வீட்டுக்கான குறிப்புகளை செய்து பார்க்கலாம். மற்றபடி பல யூடியூபுகளும் ஜல்லியடிப்பதுதான்..

      நீக்கு
    2. :))) + :)))) இரண்டு கருத்துகளுக்கும்!

      நீக்கு
    3. நல்லவேளையா நான் இதிலெல்லாம் ஆர்வம் கொள்வதே இல்லை. ஆனால் முகநூலில் வரும் இந்த ரீல்ஸ் என்னும் பிரச்னை தொடர்கிறது. அதை எப்படி நிறுத்துவது என்றே தெரியலை. கண்ட கருமாந்திரத்தை எல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டி இருக்கு. அதைப் போட்டு எல்லாம் பார்ப்பதில்லை. ரீல்ஸில் தெரிவதை வைச்சுச் சொல்றேன். அதை எப்படி நீக்குவது என்றே புரியலை. ஏனெனில் முக்கியமான அரசியல் செய்திகளும் இடம் பெறுகின்றன. :(

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய படமும் பதமும் நன்றாக உள்ளது. நான்வெஜ் உணவகங்களில் வெஜிட்டேரியன் உணவுகளும் இருப்பது இப்போது சகஜமாகி விட்டது. நமக்குத்தான் அதன் உள்ளே செல்ல ஒரு தயக்கம் வருகிறது. கரண்டிகளை மாற்றி விட்டால் என்ன செய்வது என்ற தயக்கத்துடன் ஒரு மாதிரி வாசனைகளும், நம்மை உள்ளே போக விடாமல் செய்து விடுகிறது.

    நீங்கள் கூறியபடி படத்தில் சகோதரர் நெ. த முகபாவமே அதைக் காட்டுகிறது.. அவர் அனுப்பிய மற்ற படங்களையும் ரசித்தேன்.

    சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அனுப்பியது அது பனைமரம் என்பது பார்த்தவுடனே தெரிந்தது. இன்றைய கதையின் ச. தே. மெ. கார்டு .உபயோகத்தால் மரம் உருமாறி முதலில் இலைகளை மட்டும் காட்டியது என்பதையும் இறுதியில் புரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரன் மேடம்... அந்த ரெஸ்டாரன்ட், வெஜ் போட்டிருந்தாலும் நமக்கான ரெஸ்டாரன்ட் கிடையாது. பலர் சுத்தமாக இருக்கமாட்டாங்க, இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டாங்க.

      நீக்கு
    2. கருத்துரைக்கு+ கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    3. ஓ. அப்படியா? நான் கூட இரண்டும் கலந்த உணவகம் என நினைத்து விட்டேன். சைவம் எனப் போட்டும் உங்களுக்கு என்ன சந்தேகம். ..? மேலும் பல உணவகங்களில் சுத்தம் காணப்படுவதில்லை. சில உணவகத்தில் தான் நம் எதிர்பார்ப்புபடி இருக்கிறார்கள்.

      நானும் நிறைய சுத்தம் பார்ப்பேன். அதனால் உறவுகளிடமிருந்து கேலிகள் பரிசாக கிடைக்கும். நான் வீட்டிலேயே அடிக்கடி சொல்லும் டயலாக். "சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லை."

      நீக்கு
    4. என் மனைவி ரொம்பவே சுத்தம் பார்ப்பா. சில நேரம் எனக்கு கடுப்பாகும்.

      நீக்கு
    5. சாப்பிடறதுக்கு தட்டை எடுத்துவிட்டேன்னா, கிச்சன் பாத்திரங்கள் தொடக் கூடாது, உள் பாத்திரங்களை சாப்பிட உபயோகிக்கக்கூடாது, கட் பண்ணிய மழங்களை என் பாத்திரங்களில்தான் போட்டு எடுத்துக்கிட்டுப் போகணும், இந்த நாள்ல இந்தந்த உணவு கிடையாதுன்னுலாம் பார்ப்பா.

      நீக்கு
    6. எனக்கும் எல்லா பாத்திரங்களிலும் சாப்பிடுவது பிடிக்காது. எச்சில் தட்டு, கிண்ணம், ஸ்பூன், எச்சில் பண்ணாத தட்டு, கிண்ணம், ஸ்பூன் என்று தனித்தனியாக வைத்திருப்பேன்.

      நீக்கு
    7. //நான் வீட்டிலேயே அடிக்கடி சொல்லும் டயலாக். "சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லை."//கமலா சொல்லுவது நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை. இதனால் எனக்குப் புக்ககத்தில் ரொம்பவே கெட்ட பெயர். என் குழந்தைகளும் அப்போல்லாம் இதெல்லாம் பார்ப்பாங்க என்பதால் ஏதோ ஓடியது. இப்போப் பெண் பார்ப்பாள்/பார்க்கிறாள். பையரால் பார்க்க முடிவதில்லை. ஆகவே நான் என் வரை அவங்க சாப்பிடும் முன்னர் சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வந்துடுவேன். அவங்க சாப்பிட்டு முடிச்சுச் சுத்தம் செய்யும்வரை அந்தப் பக்கமே போக மாட்டேன். :))))))) மாமா என்னை விட அதிகம் பார்ப்பார்/பார்த்தார் என்பதால் எங்களுக்குள் இதில் ஒற்றுமை அதிகம். :))))))

      நீக்கு
    8. நெல்லையின் ஹஸ்பண்டைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். அதோடு கூட பா.வெ. கூட என் பக்கம் இருப்பது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இன்னிக்கு வரைக்கும் நானும் எச்சல் தட்டு, ஸ்பூன், கரண்டி, பாத்திரம்னா தனியாத் தான் வைக்கிறேன்/வைப்பேன். பிரச்னையே இதில் தான் ஆரம்பிக்கும். எல்லாத் தட்டுக்களையும் எடுத்துக் கொண்டு எச்சில் பண்ணிச் சாப்பிடுவதில்லை. இதைப்பற்றிப் பதிவு கூடப் போட ஆரம்பிச்சேன். பின்னர் சில/பல எதிர்ப்புகள் வரவே விட்டுட்டேன். :(

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. உங்களுகெல்லாம் பிடித்த எல். விஜயலட்சுமி, அனுஷ்கா, தமன்னா எல்லோரையும் கதையில் உலாவ விட்ட பகுதிகளை ரசித்தேன்..

    அவர்களின் பெயர் மாற்றங்களை பாவனா (ஒரு பொறாமையால் இருக்குமோ.?) மாற்றியமைத்த காரணங்களும் அருமை. பாவனா மாதிரி ஒரு பெண் வீட்டில் இருந்து, நம் வேலைகளை கவனித்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று கற்பனை என் மனதுக்குள்ளும் வந்தது. இக்கால தொழிற்நுட்பத்துடன் நீங்கள் எழுதும் இந்தக் கதையை மிகவும் ரசித்துப் படித்தேன். ச. தே. மெ. கார்டு காணொளியும் நன்றாக உள்ளது. . கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை விடாமல் படிக்கும் ஒரே ஒருவர் நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrஅக்கிரமம், அநியாஅயம், அராஜகம். பழைய பதிவுகள் விட்டுப் போனதைத் தேடிப்பிடிச்சுப் பின்னர் தொடர்ந்து படித்து வரும் என் போன்ற ரசிகர்களைக் கண்டும் காணாமல் இருப்பது சரியா? முறையா, தர்மம் தானா?

      நீக்கு
    3. இப்படீல்லாம் எண்ணிக்கை போடாதீங்க. பேசாம நாநா தன் கணவனைக் கூப்பிட்டான், பாவனாவின் கணவன் மோகன் வந்தான்னுலாம் வரிகளை நுழைங்க. யார் யார் கண்டுபிடிக்கறாங்களோ அவங்கள்லாம் உருப்படியா படிக்கறாங்கன்னு அர்த்தம்

      நீக்கு
  10. ராஜராஜ சோழனை ஏன் கேட்கணும்? உங்க இளமைக் காலத்தில் சமூகம் எப்படி இருந்தது என்று யோசித்துப் பார்த்தாலே போதுமே.

    என் இளமைக் காலத்திலேயே சிகரெட் பிடிப்பது கெட்ட பழக்கமாகவும், குடி என்பது ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும். குடிப்பவர்கள் சிலர்தான், சமூகத்தில் கடைநிலையில் இருந்தவர்கள்.

    நேற்று என்னவோ பழைய சபாபதி படம் பார்த்தேன். (ஏவிஎம் பிரகதி பிக்சர்ஸ்). அதில் வசனம்... என்ன உங்க வீட்டில தேவிடியா கச்சேரியாமே... இது இரண்டு மூன்று இடங்களில் வருகிறது. ஒரு இடத்தில் பரதநாட்டியம் என வருகிறது. இப்போ நடிக நடிகைகளை அந்தக்காலத்தில் கூத்தாடி என்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ. சில வசனங்களை இந்தக் காலத்தில் mute செய்யவில்லையா!

      நீக்கு
    2. அது ஒண்ணும் கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை. தேவரின் அடியார் என்பதே திரிந்து இந்தக்காலத்துக்கு ஏற்றாற்போல் மாறி விட்டது. நல்ல வார்த்தையான நாற்றம் என்பது துர்நாற்றமாக மாறினாப் போல். :(

      நீக்கு
  11. குழாயடி (யூடியூப்) பார்ப்பதுண்டு..
    எதையும் பின்பற்றுவதில்லை..

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் பதில்களும் அருமை.
    இந்த மன்றத்தில் ஓடி வரும் பாடல் மிகவும் பிடிக்கும் மற்ற பாடல்களும் பிடிக்கும்.

    ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி, தூக்கமும் கண்களை தழுவட்டுமே இப்படி நிறைய பாடல்கள் பிடிக்கும். கணக்கில் அடங்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கில் அடங்காது... ஆம்!

      நீக்கு
    2. எனக்கும் ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி பாடலும், இந்த மன்றத்தில் ஓடி வரும் பாடலும் பிடிக்கும். இவர் P..B.S.udan இணைந்து பாடிய பல பாடல்கள் பிடிக்கும். பி.பி.எஸ். ஜானகி இணைந்து சொல்லியிருந்த ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
  13. கதை நன்றாக போகிறது. இந்த முறை கொஞ்சம் நகைச்சுவையாக போகிறது.

    //அறுசுவை அக்கா'ன்னு பட்டம் கொடுத்து அதைச் சுருக்கி அறுஷ்கான்னு ஆக்கிடுச்சு இந்த வாயாடி.//

    கெளதமன் சாருக்கு பிடித்த எல் விஜயலட்சுமி, பாவனா , ஸ்ரீராமுக்கு பிடித்த அனுஷ்கா , நெல்லைக்கு முன்பு பிடித்த தமன்னா எல்லோரும் கதையில் வந்து விட்டார்கள் வேறு பேர் உருமாற்றம் பெற்று.

    //சரி. இப்போ ச தே மெ கார்ட் டெமோ டைம். பாபா நான் இப்போ உருவிலிருந்து அருவமாகப் போகிறேன். பாத்துக்கோ" என்று சொன்னான் நாநா.‌//

    நாநாவும் அருவமாக உரு மாற்றம் பெற்று விட்டாரா?
    அருவமாக ஆகி விட்ட காணொளி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! கதையைப் படிக்கும் இரண்டாவது வாசகர்! நன்றி, நன்றி! ஒரே ஒரு சிறு திருத்தம் கௌதமன் சாருக்குப் பிடித்த எல் விஜயலட்சுமி அல்ல - கதை பெயரை சரோஜாதேவி என்பதற்கு பதில் எல் விஜயலக்ஷ்மி என்று வைத்திருக்கலாம் என்று கருத்து உரைத்தவர், ஜீவி அவர்கள். இப்போதெல்லாம் அவர் இந்தப் பக்கம் வருவதில்லை!

      நீக்கு
    2. எல்.விஜயலக்ஷ்மி ரசிகர் ஒருவர் ஜே.ரகுநாதன் நீண்ட நாட்களாக முகநூல் நண்பர். அவரோட முகநூல் பக்கம் இரண்டாவது முறையாக ஹேக் செய்யப்பட்டு இன்னமும் மீண்டு வரலை. எப்போ வருவாரோ? :(

      நீக்கு
  14. என்னவாக்கும் இது?!//

    ஸ்ரீராமும் பனைமரத்தின் அடிபாகத்தை மறைய வைத்து விட்டாரே!

    பதிலளிநீக்கு
  15. நெல்லைத்தமிழன் பகிர்ந்த புத்தர் படம், சார்மினார் ஸ்தூபிபடங்கள் நன்றாக இருக்கிறது.

    //வெஜிடபிள் பிரியாணி மற்றும் ஒரு இனிப்பு ஆர்டர் செய்தார். சாப்பிட்டுத் தொலைத்தேன்.//

    இப்படி சொல்லி விட்டீர்களே ! உணவத்திற்கு கூட்டிச்சென்றவர் படிக்க மாட்டார் நல்லவேளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இது தோன்றியது.

      நீக்கு
    2. நானெல்லாம் உள்ளேயே நுழைஞ்சிருக்க மாட்டேன். இப்படித் தான் ஜார்ஜ் டவுனில் ஒருத்தர் தேநீர் ஒரு ஓட்டலில் பிரபலம்னு அழைச்சுட்டுப் போனார். உள்ளே போய்ச் சுத்திமுத்திப் பார்த்தால் அது புஹாரி ஓட்டல். அம்புடுதான், ரெண்டு பேரும் வெளியே வந்துட்டோம். :(

      நீக்கு
    3. உண்மையைச் சொல்வதில் தயக்கம் என்? அப்போ அலுவலக பணி. அதனால் மறுக்க இயலவில்லை

      நீக்கு
  16. சில வாரங்களுக்கு முன்பு, கை பேசியில் எ.பி.யைத் திறந்த பொழுது, "எங்கள் பிளாக், இன்றைய புதன் பதிவில் கேள்வி பதில்கள் இடம் பெறுகின்றன, நெல்லைத் தமிழன்..... என்று கேட்டுள்ளார்" என்று பெண் குரல் பதிவை வாசித்தது.இது ஏ.ஐ.யின் வேலையா? வேறு யாருக்காவது இந்த அனுபவம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய செய்தியாக இருக்கிறதே! உண்மைதானா ??

      நீக்கு
    2. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

      நீக்கு
    3. இத்த கண்டிப்பாக பாவனாவின் வேலையாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். :))))

      நீக்கு
    4. கஹ மேடம்.. உங்களுக்கு கௌதமன் சார் மேல கோபமா? பாவனா நெல்லைத்தமிழன் பற்றி ஏன் ஆர்வம் கொள்ளப் போகிறார்? ஹா ஹா ஹா

      நீக்கு
  17. நெல்லையைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட வைச்ச கௌதமன் சார், பதில் கலக்கல்! பின்னிட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) நன்றி. ஆனா அவர் ஓடவில்லை! தைரியமாக நின்றுகொண்டு உள்ளார்!

      நீக்கு
    2. அப்படீங்கறீங்க? அங்கே ஓடி வரும் படம் இருக்கே?

      நீக்கு
    3. அங்கே வருவது யாரோ!

      நீக்கு
  18. மத்ததும் படிச்சுட்டு வரேன். * இந்த வாரம் ஸ்ரீராம் பழைய அடையாளத்துக்கு மாறிட்டார் போல.

    எனக்கும் ஜானகியின் "சிங்காரவேலனே" பாடலுக்கே முதல் இடம். அடுத்து அன்னக்கிளி பாடல்கள். எங்க பெண் அப்போக் குழந்தை 4 வயசு ஆகலை. நான் மதுரையில் இரண்டாவது பிரசவத்துக்கு வந்திருந்தேன். பள்ளியில் சேர்த்திருந்தேன் பெண்ணை. அங்கே ஸ்கூலில் உனக்கு என்ன பாட்டு பிடிக்கும், அம்மா என்ன சொல்லித் தந்தாங்கனு கேட்டதுக்கு இந்தப் பாடலைப் பாடி இருக்கா! சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எல்லோரும். :)

    பதிலளிநீக்கு
  19. //அறுஷ்கா & தமெனா !! 😄//

    அது சரி, இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஸ்ரீராம் ஒண்ணும் சொல்லலையா? அழுதிருப்பாரே? :P :P :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கதையைப் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  20. அது பனைமரம் என்பது பார்த்த உடனே தெரியுதே? இதிலெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இஃகி,இஃகி,இஃகி.

    பதிலளிநீக்கு
  21. நல்லா இருக்கே, நாநா அருவமான விதம். நல்ல ஸ்மார்ட்டா வேறே இருக்கார். அது சரி, கொஞ்சமானும் பயமா இருந்திருக்கணுமே? பயமாய் இல்லையோ? திரும்ப உருவமாகாட்டா என்ன செய்யறது? ரொம்பக் கவலையா இருக்கே! :)

    பதிலளிநீக்கு
  22. ஜானகி அவர்களின் பாடல்கள் பிடிக்குமை.

    பனை மரம் படம் பார்த்ததும் தெரிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  23. சற்றே காலந்தாழ்த்திய, பிறந்த நாள் வாழ்த்துக்கள் துரை செல்வராஜு சாருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு வாழ்த்துரைக்கு
      நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  24. ஜல் ஜல் ஜல்லெனும் சலங்கை ஒலி..
    சல சல சலவென சாலையிலே...

    பாசமாய்ப் பாடிய எஸ்.ஜானகிக்கு அன்பும், மரியாதையும்!

    பதிலளிநீக்கு
  25. கேள்விகளும் பதில்களும் நன்று. ஶ்ரீராம் கொடுத்த படம் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    அனுஷ்கா தமன்னா பெயர்களை இப்படியெல்லாம் மாற்றினால் ரசிகர்கள் மனது புண்படும்.

    இங்கே நுங்கு மூன்று 20/- ரூபாய்க்கு கிடைத்தது.. இப்போது அதிகம் இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!