25.6.26

இவ்வளவு சிசுரூஷைக்கு பழகக் கூடாதே...!

 

எக்ஸ் ரே அறை வாசலில் நின்றபோது - இல்லை படுத்திருந்தபோது அந்தப் பெண் மறுபடி புன்னகையுடன் தோன்றினார்.  அருகே வந்தார்.  தலையை வருடி"நல்லா இருக்கீங்களா?" என்றார்.  யாரென்று தெரியாமலேயே "உம் " என்றேன்.  கையை அமுக்கி விட்டு சென்று விட்டார்.  

கவுனுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கிறேன்.  என்ன நல்லா இருக்கீங்களா வேண்டி கிடக்கிறது?

அவர் சென்றதும் பாஸ் அருகில் வந்தார்.  "யாருங்க அது?"

"யாருக்குத் தெரியும்?  லிஃப்டிலிருந்தே சிரிக்கறாங்க"

"அதானே..  யாராயிருந்தா உங்களுக்கென்ன..  தலையை தடவிட்டாங்க இல்லே?"  பாஸ் விரோதத்துடன் நகர்ந்து நின்று கொண்டது என்னை பாதிக்கவில்லை.  என் கவலை அறைக்குள் சென்றதும் எழுந்து நிற்பதில் இருந்தது.

உள்ளே சென்றதும் நல்லவேளை இருட்டு.   எழுந்து எப்படி சொல்கிறாரோ அப்படி போஸ் கொடுத்து எடுத்து முடித்துக் கொண்டு மறுபடி  வெளியே வந்து வராண்டாவில் பயணித்தபோது அந்தப்பெண் மறுபடி எதிர்ப்பட - இந்த முறை மஃப்டியில் இருந்தார்..  டியூட்டி முடிந்து விட்டது போலும் -  எதிர்ப்பட்டு புன்னகை+தலையசைப்புடன் கடந்து போனார்.  

"யார்மா நீ?"  யோசனையுடன் பயணத்தில் அறைக்குள் கொண்டு வரப்பட்டேன்.  உடனடியாக என் வழக்கமான ட்ரெஸ்ஸுக்கு மாறி விட்டேன்.

வந்து பார்த்த நர்ஸும் "சரி விடுங்க..  டெஸ்ட் கிஸ்ட்டுன்னு போகும்போது பார்த்துக்கலாம்" என்று சொல்லிப் போனார்.  என்னுடைய இந்த ஒத்துழையாமை இயக்கம் இரவுப்பணி நர்ஸுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.  ஆனால் அவர் அன்பாக அனுசரணையாக இருந்தார்.

சாப்பாடு வேண்டுமென்றால் அங்கேயே ஐந்தாவது மாடியில் ஒரு பிராஞ்சும், கேழே கேஷுவாலிட்டி எதிரே பெரிய உணவகமுமாக இலை கேட்டரிங் காரர்கள் கடை வைத்திருக்கரியார்கள்.  காஃபி ருசி பழுதில்லாமல் இருந்தது.

இதைத்தவிர ஒரு அலைபேசி எண் கொடுத்தார்கள்.  அதில் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து விட்டால் நமக்கான உணவு நம் அறைக்கு வந்து விடுகிறது.  கடைசியில் பில் செட்டில் செய்யும்போது கொடுத்துக் கொள்ளலாம்.

நான் போட்டிருந்தது பத்து லட்சத்துக்கான பாலிஸி என்பதால் தங்கும் அறை பெரிதாகவும் வசதியுடனும் இருந்தது.  ஒருவர்தான் கூட இருக்கலாம் என்றாலும், வாசலில் உள்ளே நுழையும் இடத்தில் ஏமாற்றிவிட்டு வந்து விட்டால் அறைக்குள் வந்து கேள்வி கேட்பார் யாருமில்லை.

மாத்திரை பற்றி சொன்னேன் இல்லையா?

இரவு மாத்திரைகளை அங்கிருந்து கொண்டுவந்து என் அறையில் வைத்து, ஒவ்வொன்றாக எடுத்து பேப்பரைப் பார்த்து சோதித்து கொண்டு வந்து கைகளில் தந்து  டம்ளரில் நீரையும் நீட்டினார்.

மாத்திரைகளை வாங்கி கொண்டு டம்ளர் நீரைப் புறக்கணித்தேன்.

நர்ஸ் சிறியதாக சலனம் அடைந்தார்.  மறுபடியும் ஏதோ வம்பு பண்ணப்போகிறேனோ என்பது போல என்னை குறுகுறுவென பார்க்க, 

பாஸிடம் "அந்த மில்டனைக் கொடு" என்றேன். 

"ஏன்?" என்றார் நர்ஸ்.  

"அட..  நான் 2020 ஏப்ரல் மாசத்துலேருந்து பச்சை தண்ணியே குடிக்கறதில்லம்மா..  வெந்நீர்தான்" என்றதும் "ஓகே ஓகே நானே தர்றேன்" என்று பாஸிடமிருந்து மில்டனை வாங்கி அதிலிருந்து வெந்நீரை டம்ளரில் சரித்து என்னிடம் நீட்டினார்!  

இதுவும் ஒரு மாதிரி நன்றாகத்தான் இருக்கு!  ஆனால் பழகிட்டா பாஸ் இப்படி எல்லாம் எடுத்துக் கொடுக்க மாட்டாரே...!  இவ்வளவு சிசுரூஷைக்கு பழகக் கூடாதே...!

ஆனால் மறுநாள் காலைமுதல் அவர்கள் செய்தது மிக அநியாயம்.  காலை பணிக்கு வந்த நர்ஸ் உள்ளே வந்து மாத்திரைகள் பெட்டியை எடுத்தார்.  மாத்திரைகளை டேபிளில் கொட்டி ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி எண்ணி வைத்து, பேப்பரில் சரிபார்த்து டிக் செய்தார். "நான் இன்னும் சாப்பிடவில்லை" என்றேன் மாத்திரை கொடுக்கப் போகிறாரோ என்று நினைத்து.

தலையாட்டி விட்டு தன் பணியைத் தொடர்ந்தார்.  அப்போதுதான் புரிந்தது  முதல் நாள் வைத்த மாத்திரைகள் அதே அளவில் குறையாமல் இருக்கிறதா என்று சோதிக்கிறார் என்று.  அவர்களுக்குத் தெரியாமல் நான் எடுத்து சாப்பிட்டு விடக் கூடாதாம்!

"சிஸ்டர்..  இது ரொம்ப ஓவரா இல்ல?  அப்படி நான் தப்பா சாப்பிடுவேனா?  என் உடம்பு மேல எனக்கு அக்கறை இருக்காதா?"

"ஸாரி ஸார்..   ரூல்ஸ்"

"என்ன ரூல்ஸோ.." எரிச்சலுடன் திரும்பிக் கொள்வதைத்தவிர வேறு வழி...


==========================================================================================

வெங்கட் தளத்தில் சமீபத்தில் எழுதிய வசனகவிதை ஒன்று..

படிப்பாரின்றி பரிதாபமாகக் 
காத்திருக்கின்றன 
நூலகத்தில் நூல்கள்.
தேற்றுவாரின்றி விசும்புகின்றன 
யாரும் பார்க்காதபோது!


- வாட்சாப் என்பார் ரீல்ஸ் என்பார் - அந்நாளின் 
புத்தகங்களின் சுவை அறியார்.

- எதையெதை எப்படியெப்படி உபயோகிக்க வேண்டுமோ - அதையதை
 அப்படியப்படி மட்டுமே உபயோகித்தல் நலம்.

============================================================================================

பவித்ரன், சரத்குமார் இணையில் வசந்தகால பறவை, சூரியன் ஆகிய இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு மறுபடி அவர்களையே போட்டு இன்னொரு படம் எடுக்க KT குஞ்சுமோன் விரும்பினாலும், அவர்கள் வெவ்வேறு படங்களுக்கு ஒப்பந்தமாகி, டேட் கிடைக்காமலிருக்க, ஸ்டில்ஸ் ரவியின் யோசனையின் பேரில் இதே படங்களில் துணை இயக்குனராக இருந்த ஷங்கரை இயக்குனராக வைக்கலாம் என்கிற யோசனையை குஞ்சுமோன் ஏற்க, இப்படியாகத்தானே ஷங்கருக்கு திரையுலகில் முதல் படம் கிடைத்தது!  

ஷங்கர் இந்தப் படத்தில் கமலை நடிக்க வைக்க விரும்ப, அவர் தான் ஏற்கனவே இதுபோல ஒரு படம் பண்ணியிருப்பதாகச் சொல்லி வாய்ப்பை மறுக்க, ஏற்கனவே தோல்விப்படங்களால் துவண்டு, சேவகன் என்கிற ஒரு படத்தை அவரே டைரக்ட் செய்து வெற்றி அடைந்திருந்த அர்ஜுனை அணுகி சம்மதம் பெற்றார் ஷங்கர்.  

ஜென்டில்மேன் உருவானது.  இதற்கு இசை அமைத்திருந்த ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்தில் மூன்று பாடல்களை தர்மவதி ராகத்தில் போட்டிருந்தார்.   ஒரே படத்தில் ஒரே ராகத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பாடல்கள்!  இன்று நான் பகிரும் பாடல்கொஞ்சம் நீலாம்பரி வாசனை அடிக்கும்!

என் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் என்
வீட்டு தென்னங்கீற்றை இப்போதே
கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே

 வாய்பாட்டு பாடும்
பெண்ணே மெளனங்கள்
கூடாது வாய் பூட்டு சத்தம்
எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

 வண்டெல்லாம்
சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம்
போட்டால் வண்டுகே
கேட்காது

 ஆடிக்கு பின்னாலே
காவேரி தாங்காது
 
ஆளான பின்னாலே
அல்லி பூ மூடாது ஆசை துடிக்கின்றதோ

 

சொல்லுக்கும்
தெரியாமல் சொல்லத்தான்
வந்தேனே சொல்லுக்குள்
அர்த்தம் போல சொல்லாமல்
நின்றேனே: சொல்லுக்கும்
அர்த்ததுக்கும் தூரங்கள்
கிடையாது சொல்லாத
காதல் எல்லாம் சொர்க்கத்தில்
சேராது

 எண்ணிக்கை
தீர்ந்தாலும் முத்தங்கள்
தீராது எண்ணிக்கை
பார்த்தாலே முத்தங்கள்
ஆகாது ம்ம் அனுபவமோ

என் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் என்
வீட்டு தென்னங்கீற்றை இப்போதே
கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே

 

 


====================================================================================

ஒரு முன்னுரை!  புத்தகப்பித்தன்.

இளமை வந்தது


கணையாழியின் கடைசிப் பக்கங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட எண்ணி அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.

ஆரம்ப இதழிலிருந்து எல்லாவற்றையும் ஒழுங்காகத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று ஒரு பேராசை. பல நண்பர்கள் எனக்கு எல்லாம் கொடுத்து உதவுவதாக வாக்களித்தார்கள். கிட்ட நெருங்கும்போது ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கொடுக்கவில்லை, என் கைவச மிருந்த கட்டுரைகளைக் கிடைத்த வரை வரிசைப்படுத்தி அதை வெளியிட்டேன்.

அதன் பிறகு இந்த அருமையான பத்திரிகையை நடத்தி வந்த திரு. கஸ்தூரிரங்கன் அவர்கள் டில்லியி லிருந்து சென்னைக்கே வந்துவிட்ட விவரம் அறிந்தேன். எப்படியும் அவரைச் சந்தித்துவிடுவது என்ற ஆவலில் ஒரு நாள் சுஜாதாவுடன் பெல்ஸ் சாலையில் உள்ள கணையாழி அலுவலகம் சென்றோம்.

பழைய சுட்டிடம், உள்ளே ஒரு அச்சுயந்திரம் ஓடும் ஓசை. ஒரு அறையில் நாலைந்து நாற்காலிகள். ஒரு மேஜை எதிரில் சுழலும் நாற்காலியில் சிரித்த முகத்துடன் துள்ளும் இளமை மிடுக்குடன் வீற்றிருக்கும் கஸ்தூரிரங்க னிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். எனக்கு அவரைச் சந்தித்ததில் கொள்ளை இன்பம். மணிக்கொடிக்குப்பிறகு இலக்கியமறு மலர்ச்சிக்குப் புதிய படைப்பாளிகளை உருவாக்கிவரும் ஒரு லட்சியவாதியை எப்படி வர்ணிப்பேன். நான் பதிப்பாளன் மட்டுமல்ல. எழுத்தாளனும்கூட. மாக்ஸிம்கார்க்கி முதன் முதலில் லெனினைச் சந்தித்த போதுஅவரை வர்ணிக்கத் துவங்குகிறார். 'ஸாக்ரட்டிஸினுடையது போன்ற தம் நெற்றியைத் துடைத்துக் கொண்டே அடித்தொண்டையில் அழுத்தமாக உச்சரித்துக் கொண்டே பேசினார் லெனின்' என்கிறார். நான் கஸ்தூரிரங்கனை உதயசங்கரைப்போல் நாட்டிய உடல் அமைப்பு கொண்ட வடிவழகர் என்று வர்ணிக்கிறேன். கலை எழில் ததும்பும் முகத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருடைய புத்திக்கூர்மை பளிச்சிடுகிறது. "இவ்வளவு புதுக்கவிதைகளை உங்கள் பத்திரிகையில் போடுகிறீர்களே அதற்கு வரவேற்பு எப்படி?' என்று கேட்கிறேன் . கையில் அச்சாகிக் கொண்டிருந்த கணை யாழியின் இதழ்களைப் புரட்டி ஒரு புதுக் கவிதையைப் படிக்கிறார் ஆஹாஹா! என்ன அழகு என்ன கருத்து! அவர் படிக்கும் விதத்திலே நம் இதயத்தை ஈர்க்கும் இன்பம் சொல்லித் தெரியாது! அந்தக் காலத்தில்கம்பன் கவிதைக்கு விளக்கம் சொல்லி சபையோரை மகிழ்வித்த ரசிகமணி டி. கே. சியின் நினைவு எனக்கு வருகிறது.  அன்று மரபுக் கவிதைக்கு டி.கே.சி சி. இன்று புதுக்கவிதைக்கு க.க. ரங்கன்.

கோப்பையில் டீ வருகிறது. நாங்கள் எல்லாம் (இன்னும்இரண்டு இளம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்) ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறோம். கணையாழியின் ஆரம்ப இதழ்களைக் கேட்கிறேன். பைண்டுவால்யூம்' களை அள்ளித்தந்தார். தூக்கிக்கொண்டு வெளியே வருகிறேன் சேப்பாக் ஸ்டேடியத்திலிருந்து மெல்லிய காற்று வந்து என்னைத் தழுவுகிறது. நான் புது மனிதனாக மாறும் உணர்வு பெறுகிறேன். நிலாகாயுது நேரம் நல்ல நேரம் என்று என் உதடு முணுமுணுக்கிறது. இரத்த ஓட்டத்தி ஒரு தனி வேகம். நான் என்ன திடீரென்று இருபத்திஐந்து  வயது குறைந்த இளையராஜாவாகி விட்டதை உணர் கிறேன். என்னைத் தொட்டுப் பார்க்கிறேன். உடல் வழுவழுப்பு குறையவில்லை. இளமை துள்ளாட்டம் போடுகிறது. இந்தக் கஸ்தூரிரங்கன் பலே பேர்வழி! சுஜாதாவிடம் 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி? என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு எனக்குக் கொடுத்த டீயில் அந்த ரசாயன சேர்க்கையை அளவோடு சேர்த்து விட்டார். மீண்டும் வாலிபம் வந்து விட்டது. முதுமையே போ போ இளமையே வா வா என்று இதயம் பாடுகிறது. புதுப்புது திட்டங்களைத் தீட்டுகிறது என் மனசு. இதோ உங்களுக்கு பாரதி முதல் சுஜாதா வரை' என்ற புதுக் கவிதைகளை விரைவில் தரப் போகிறேன்.இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாங்கள் செய்யப் போகும் செயல் திட்டங்களைக் கண்டு உலகமே பிரமிக்கப் போகிறது. க. க. ரங்கன் தினமணிக்கதிர் பொறுப்பாசிரியராகி சுஜாதாவின் பஞ்ச பூதக் கதைகளை வெளியிட்டுப் பல லட்சக்கணக்கான வாசகர்களைபடிக்கச் செய்துள்ளார். வெறும் சோற்றுக்கே போராடி வாழும் தமிழர் நெஞ்சில் வீரவாஞ்சியின் வரலாற்றை வெளியிட்டு தேசபக்தக் கனலை நெஞ்சில் கொழுந்துவிட்டு எரியச் செய்துவிட்டார். இன்னும் திட்டம் பலஉண்டு. இப்போது இது போதும்.

ஏதோ வாசகர்கள் டிசம்பர் மாத மழைக்கால குளிரில் நான் உளறுவதாக எண்ண வேண்டாம். சுஜாதாவின் "கம்ப்யூட்டரே கதை சொல்லு' என்ற புத்தகத்தில் 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?' என்ற கதையை நீங்கள் படித்தால் நான் எழுதியதின் உண்மை விளங்கும்.

-புத்தகப்பித்தன் - 1983

==========================================================================================

2014 ல் இதை நான் படித்த நாள் இன்று வரை முதல் எங்காகில் வீட்டில் இரவு வு சமையல் முடித்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் இருந்ததில்லை.
உபயோகமாக இருக்குமே என்று மறுபடியும் பகிர்கிறேன்.

***************************************

'காஸ் சிலிண்டர்' எப்போது வெடிக்கும்!

ஒரு காஸ் சிலிண்டர் எப்போது வெடிக்கும்;

காஸ் கசிவு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என, கூறும் அனைந்திந்திய பாரத் காஸ் வினியோகஸ்தர்கள் சங்க துணை தலைவர், சாமிவேலு:
''காஸ் சிலிண்டர்' எனும் சமையல் எரிவாயு உருளைக்குள் அடைக்கப்பட்டிருக்கும், 'புரோப்பேன், பூட்டேன்' ஆகியவை, திரவ வடிவில் தான் இருக்கும்.
ஆனால், அது அடுப்புக்கு, வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து, 'காஸ் லீக்' ஆகும் போது, அதை எளிதில் உணர, 'எத்தில் மெர்கேப்டன்' என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டு இருக்கும். இந்த ரசாயனம் தான், 'காஸ் லீக்' ஆவதை, வாசனை மூலம் எச்சரிக்கை செய்யும்.
எனவே, இவ்வாசனையை உணர்ந்ததும், உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால், சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம், காற்றை விட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும்.அப்படி கீழே தங்கியிருக்கும் காஸ் மீது, சிறிய தீப்பொறி பட்டாலும், பெரிய அளவில் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும்.
இப்படி, சிலிண்டரை சுற்றி தீ தொடர்ந்து எரிவதால், சிலிண்டரின் உட்புறம் உள்ள திரவநிலை எரிவாயு, அதிக அழுத்தம் அடைந்து, சிலிண்டரின், 'டெஸ்ட் பிரஷர்' எனும், அதிக பட்ச அழுத்தத்தை அடைந்து வெடிக்கிறது.காஸ் கசிவு ஏற்பட்டவுடன், தீ விபத்தை தடுக்க, சிலிண்டரின் மீதுள்ள, 'ரெகுலேட்டரை' கழற்றி விட்டு, சிலிண்டரின் மேல் பகுதியில் சிறு கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வெள்ளை நிற பிளாஸ்டிக் மூடியை, சிலிண்டரின் வால்வின் மீது பொருத்தி, விபத்தை தடுக்கலாம்.
பெரும்பாலான வீடுகளில் இரவு சமையல் முடித்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் துாங்கி விடுவதால் தான், 70 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. நைந்த, 'ரப்பர் டியூப்' பயன்படுத்துவதும் மற்றொரு காரணம்.
எனவே, தரம் குறைந்த பச்சை நிற ரப்பர் டியூப் பொருத்தியிருந்தால், ஆரஞ்சு நிற ரப்பர் டியூபை, வினியோகிப்பாளரிடம் பெற்று, அவர்களின் மெக்கானிக்கால் சரியானபடி பொருத்தித் தரச் சொல்லுங்கள்.ஒன்றுக்கு மேற்பட்ட அடுப்புகளை உபயோகிக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகளை எரிவாயு வினியோகிப்பாளரிடம் சரியாகக் கேட்டு செயல்படலாம்.
மேலும், 'காஸ் சேவர் மேக்னட்' போன்ற, அங்கீகாரம் இல்லாத எந்த உபகரணத்தையும், சிலிண்டரில் மாட்டி வைக்க கூடாது. காஸ் அடுப்பை தினமும் சுத்தம் செய்யாமல், எப்போதாவது கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்வது நல்லதல்ல; தினமும் வேலை முடிந்ததும், அடுப்பை துடைப்பது தான் நல்லது.

- தினமலர் சொல்கிறார்கள்' 2014

===============================================================================
இது மாதிரி வசதி நம்மூரில் எப்போதாவது வருமோ... வந்தால் நம்மூரில் சிலர் இந்த வண்டியையே தூக்கிக் கொண்டு ஓடினாலும் ஓடிவிடுவார்கள்!

==========================================================================================

ஒரு பழைய சினிமா விமர்சனம்..  அப்போது வந்ததுதான்...!

பட்டணத்தில் பூதம்
காதலரைப் பிரிப்பதும். கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும் மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை.அதுவே நமக்கு முழுநேரப் பொழுது போக்கு.

ஆகா! எத்தனை விதமான தந்திரக் காட்சிகள்! எத்தனை அழகான வண்ணக் காட்சிகள். பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! 

பத்திரிகை விளம்பரத்திலிருக்கும் சிவாஜியும் எம். ஜி. ஆரும் பாடுகிறார்களே!

படத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! துப்பாக்கிச் சண்டை ஆவி சுக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு... இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்!
நாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு. விருந்து சாப்பிட முடியாமல் இண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார்.

நீச்சல் உடையில் இருக்கும் கே. ஆர். விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படி யிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! வில்லன் பாலாஜி தோள்பட்டையை குலுக்கும் 'ஸ்டை'லுக்கு, கை குலுக்கி, "சபாஷ்' சொல்ல வேண்டும்.
முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்! பூநத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி! ஜெய் ரவீகாந்த்நிகாய்ச்!

======================================================================================

ஏற்கனவே எப்படியும் பார்த்திருப்பீர்கள்தான்...  இருந்தாலும்..












4 கருத்துகள்:

  1. கொத்துச்சாவி நகைச்சுவைதான் சட் எனப் படிக்க முடிந்தது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஸ்பத்திரி அனுபவம் ரசனையா எழுதியிருக்கீங்கன்னு சொல்லக்கூடாதோ?

    எனக்கும் தோன்றும், ஆஸ்பத்திரி, ஹோட்டல் ரிசப்ஷன், விமான நிலையம் இவற்றில் பணிபுரிய அழகு முக்கியத் தேவையோ என. இந்த நினைப்பை உடைத்தது பழைய ஏர் இந்தியா என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மனைவியிடம் நான் சொல்வது, நான் வழக்கமாகச் செய்யும் வேலைகளை நீ எடுத்துக்கொள்ளாதே. அதற்கு நான் பழகிவிட்டால் அது உன் வேலையாகிவிடும் என்று. என் உடைகளைத்்தோய்ப்பது, காயப்போட்டு எடுத்து வைப்பது என் இடங்களை சுத்தப்படுத்துவது , போன்ற பல வேலைகளை யார் செய்யவும் விட மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆஸ்பத்திரி விஷயமெல்லாம் மறங்க. அது மற்றவர்களுக்கு உற்சாகப்படுத்தாத விஷயம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!