1951 இல் வெளிவந்த ஓரிரவு திரைப்படம் நடிகர் கே ஆர் ராமசாமியின் நாடகக்குழுவுக்காக அறிஞர் அண்ணாவால் எழுதித்தரப்பட்ட கதை. ஏ வி எம் நிறுவனம் அதைப் படமாக்க முனைந்தபோது ஏற்கெனவே அண்ணாவின் இரண்டு படைப்புகள் அவர்களால் படமாக்கப்பட்டிருந்தன. 'நல்ல தம்பி' மற்றும் 'வேலைக்காரி'!