அம்மிணிக் கொழுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மிணிக் கொழுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.4.15

'திங்க'க்கிழமை : அம்மிணிக் கொழுக்கட்டை


பிள்ளையார் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி நோன்பு சமயங்களில் செய்யப்படுவது கொழுக்கட்டை.
 
    
           Image result for கொழுக்கட்டை images                          Image result for கொழுக்கட்டை images
 
செய்வது சற்றே கடினமான ஒன்றுதான்.   அரிசி மாவுப் பதம் ஒழுங்காய் வரவேண்டும்.  இல்லாவிட்டால் கிண்ணம் ஒழுங்காய் வராது.  உடைந்து உடைந்து போகும்.  ஆவியில் வைத்து எடுக்கும்போதும் விரிசல் விழும்.  தேங்காய், வெல்லம் ஏலக்காய் சேர்த்து இனிப்புப் பூரணம் வைத்துத் தித்திப்புக் கொழுக்கட்டையும்,  உளுந்து ஊறவைத்து அரைத்து, உதிர்த்து, காரம், பெருங்காயம் சேர்த்து பூரணம் சேர்த்து காரக் கொழுக்கட்டையும் செய்வோம்.  எனக்கு மிகவும் பிடித்த பண்டம் இந்த இரண்டும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.   சொல்லப் போனால் அ.கொ கூட எல்லோருக்கும் தெரிந்திருக்கும்!    
 

           Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images                       Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images
 
இது போலக் கொழுக்கட்டை செய்யும்போது பூரணம் தீர்ந்து மாவு மீந்து விடும்.  அப்போது செய்வதுதான் அம்மினிக் கொழுக்கட்டை.   சில சமயங்களில் இதற்கு டிமாண்ட் அதிகமாகி விடும்!
 
மீந்து போன (கிளறி வைத்த) கொழுக்கட்டை மாவில் தோசை மிளகாய்ப்பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்குப் பிசைந்து வித விதமான வடிவங்களில், ஆனால் சிறிய அளவுகளில் (சரியாக வேக வேண்டுமே) செய்து வேக வைத்து எடுத்து விடுவோம்.
 
                                                                   
                                                                  Image result for கொழுக்கட்டை images

இதில் பச்சை மிளகாய் அரைத்து விட்டு, கொத்து மல்லி அரைத்து விட்டு, லேசாக எலுமிச்சைச் சாறு பிழிந்து கூட (கூழ் வடகம் வாசனை, ருசி வரும்) வடிவங்கள் செய்து ஆவியில் வேகவைத்துச் சாப்பிடலாம்.






படங்கள்   :   இணையம்.