சில திருத்தங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில திருத்தங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.12.10

* அ தீ ம க


அமுதசுரபி தீபாவளிமலர்  எங்கள் டிசம்பர் ஒன்றாம் தேதி பதிவை மறந்திருக்கமாட்டீர்கள்.

அமுதசுரபி - தீபாவளி மலருக்கு அடுத்த இதழில், திரு அறந்தை மணியன் அவர்கள் எழுதியுள்ள ('ஆசிரியருக்குக் கடிதங்கள்' பகுதி) கடிதத்திலிருந்து ....

கே பி சுந்தராம்பாள் நடித்த 'பக்த நந்தனார்' படத்தின் பிரதிகளும், 'நெகட்டிவ்'வும் தீவிபத்தில் எரிந்து விட்டதாகவும், படம் வெளிவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை என்னவெனில், "அசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்" தயாரிக்க, கே பி எஸ் ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த, அப்படம், 1935 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றிருக்கிறது. பேராசிரியர் கல்கி, ஆனந்தவிகடனில் விமரிசனமும் எழுதியிருக்கிறார். "நந்தனார்" வேடத்தில் ஒரு பெண்மணி (கே பி எஸ்) நடித்ததை அப்போது ஏற்றுக்கொள்ளாத கல்கி, "நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருக்கின்றன" என்று நக்கலாகக் குறிப்பிட்டிருக்கிறார். படம் எரிந்து போய் வெளிவராதிருந்தால், கல்கி எவ்வாறு விமரிசனம் எழுதியிருக்க முடியும்? உண்மையில், எரிந்து போனதால், வெளிவராமல் போன படம்: "இன்பசாகரன்"! 

''ஜெமினியின் "நந்தனார்" படத்தில் தோன்றிய வி.கே.ராமசாமி...' என்று குறிப்பிட்டிருப்பது சரியல்ல. அப்படத்தில் வி.கே.ஆர் நடிக்கவில்லை. அவர் அறிமுகமானது ஏவி.எம். தயாரித்த 'நாம் இருவர்' படத்தில்தான்! 

நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு.

(*அ தீ ம க = அமுதசுரபி தீபாவளி மலர் கரெக்சன்ஸ்)
அமுதசுரபிக்கும், திரு அறந்தை மணியன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.