பேசும் ஸ்டைல் நபருக்கு நபர் மாறுபடும். எனவே ஒவ்வொருவரும் ஒரு தனிப்பிறவி என்று துணிந்து சொல்லலாம். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இந்த விஷயத்தில் சற்று விசித்திரமானவர். ஒரு விஷயத்தில் ஆரம்பித்து கிளை பிரிந்து எங்கேயோ போய் விடுவார். அவர் சொல்ல வந்தது என்ன என்பதை நாம் இடை மறித்துக் கேட்டுக் கொண்டால்தான் ஆயிற்று. இல்லையேல் அரோகரா.
ஜோக் சொல்பவர்கள் வேறு விதம். அவர்கள் ஜோக் ஆரம்பித்து சொல்ல முடியாமல் சிரித்து, சிரித்து கண்ணில் நீர் வந்து .. கடைசியில் அந்த ஜோக் தண்ணியில் விழுந்த பொரிச்ச அப்பளம் மாதிரி இருக்கும். இதுக்குப் போய் இவ்வளவு அமர்க்களமா என்று அவருக்கே தோன்றும். " நேற்று பிரண்டு சொல்லும் போது படா தமாசா இருந்துச்சு சார் எனக்கு சொல்லத் தெரியல " என்று சொதப்புவார்.
என் நெருங்கிய உறவினர் எல்லாம் சரியாகச் சொல்லுவார். எழுவாயை மட்டும் சொல்ல மாட்டார். " காலைலே கிளம்பி போனானா திடீர்னு தந்தி வந்துடுச்சாம். அவசரம் அவசரமா ரயிலுக்கு ஓடினா டிக்கட் கிடைக்கலியாம். கடைசீலே ... என்ன யார்னா கேக்கறீங்க? அதான் நம்ம இவன் இருக்கானே அவன்தான் சார், நம்ம கூட பஸ்லே வருவானே வழுக்கைத் தலையா... " இப்படி போய்க் கொண்டு இருப்பார்.
பயங்கரமான விலாவரியாக சினிமா சீரியல் கதைகளை விவரிப்பவர் ஒரு ரகம்.
சும்மா எதிர் மறையா மட்டும் சொன்னா எப்படி? சிலர் இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசி விட்டுப் போக மாட்டார்களா என்று தோன்றும். அவ்வளவு சுவாரசியமாக பேசுவார்கள். சொன்ன ஜோக்கையே திருப்பிச் சொன்னால் கூட ரசித்துக் கேட்கலாம். அதாவது என்மாதிரியான மேதாவிகள்.
கை தட்டாதீங்க எனக்கு அப்லாஸ் பிடிக்காது!!!
அனானி