The Times of India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Times of India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.4.12

பெண்ணென்றால் . . .

                       
நேற்று செய்திகள் பார்த்த  பொழுது, கேட்ட பொழுது, அதன் தாக்கம் கொஞ்சம் இருந்தது. 

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் படம் பார்த்ததும், மனம் மிகவும் துயருற்றது. 

பல ஆண்டுகள் முன்பு, சென்னையில், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த எம் எல் சி ஒருவரின் வீட்டில், அந்த எம் எல் சி யின் மனைவி, தன்னுடைய மருமகள் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பெற்றார் என்பதற்காக, அந்த மருமகளை, திரும்ப வீட்டிற்கு அழைத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். 

அந்தக் கொடுமைகளை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது, இந்தச் செய்தி. ஒரு குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு, ஆணின் ஜீன்ஸ் அதிக காரணம் என்று படித்திருக்கின்றேன். அப்படி இருக்க, பெண்ணாகப் பிறந்த அந்த கள்ளம் கபடமில்லாத, அழகிய பிஞ்சு முகத்தை, காயப் படுத்த எப்படி ஒரு தகப்பனுக்கு மனம் வந்தது? 

என்ன மதம், என்ன ஜாதி, படித்தவரா அல்லது படிக்காதவரா என்ற வீண் வாதங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், இது முற்றிலும் மனிதத் தன்மை அற்ற செயல் என்பது விளங்கும். 

பெண் குழந்தைக்கு, இந்தக் காயங்களை ஏற்படுத்திய அப்பாவிற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? 

Photo : Courtesy : The Times of India.