அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ! இந்த பொங்கல் விடுமுறையில் குடும்பத்துடன் " சென்னை சங்கமம்" நிகழ்சிகளை அசோக்நகர் பார்க்கி ல் பார்த்து ரசித்தோம் . என் 1 1/4 வயது பேத்தி, கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் ஆகிய கிராமிய நிகழ்சிகளை ரசித்து பார்த்ததுடன் நடுநடுவே அவளும் கையை காலை அசைத்து டான் ஸ் செய்ததை கூட்டத்தில் பலரும் ரசித்தனர். எனக்கும் K. M. Devi புத்தடி மாரியம்மன் கோ வில் திருவிழா நினைவிற்கு வந் தது.
மேலும் காயத்திரி கிரிஷ், சைந் தவி & வினயா ஆகியோரின் "கர்நாடி க் துக்கடா" நிகழ்ச்சிகளும் ரசிக்கும்படியா க இருந்தது. குறை ஒன்றும் இல்லை என்று அவர்கள் பாடினாலும், நிகழ்ச்சிக்கு வந்த பெரும் கும்பலை சமாளிக்க "organaisers " செய்திருந்த ஏற்பாடு போதாது. சிறு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தாய்மார்கள் போவதற்கும் வருவதற்கும் உள்ள குறுகிய ஒரே வழியில் மிகவும் சிரமப்பட்டார்கள்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் பொது மக்கள் சௌகரியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
மாலி.
எங்கள் சந்தேகம் : சங்கமம் = Fusion?
இன்று காலை KTV இல், நல்ல தமிழ்ப் பாடல்களை ஒருவர் பாட, மூன்று பெண்கள் நடனமாட, நாதஸ்வரம் தவில் - ஜதி சேர்க்க - மிகவும் இரசிக்கக் கூடிய சங்கமம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.