பதிவாசிரியர் நினைத்தது:
வல்லிசிம்ஹன் குண்டு மல்லிகையையும், ஜீவி அசோகமித்திரனையும், ஜெகேயை எல்லோரும், எஸ்ரா, பாலகுமாரனையும் எல்லோரும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பினோம். சுஜாதா / சாரு நிவேதிதா குழப்பம் வரலாம் என்று நினைத்தோம். அசோகமித்திரன் கதைக்கு டல்பதடோ பெயர் உதவும் என்றும், மலையாள வாடை நீல பத்மநாபனையும், கண்டுபிடிக்க உதவும் என்று நினைத்தோம். குண்டுமல்லிகைக் கதை மணியனோடு குழப்பம் வரும் என்று எதிர்பார்த்தோம். ஜேகே எங்கள் ப்ளாக்கில் வந்ததால் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அந்த சப்ஜெக்ட் காட்டிக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். அப்பாதுரை அரு ரா தவிர மிச்ச எல்லாம் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்த்தோம். சில்வியா பெயர் சுஜாதாவின் சில்வியாவை நினைவுபடுத்தும் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை! இதெல்லாம் போக, ஒவ்வொரு பகுதியையும் முன் பின் அறியாமல் படித்ததில் சாரம் என்னவாக இருக்கும் என்று ஒரு ஆர்வம் வரவில்லை? இதைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்லவில்லை.