புதன், 6 ஜூன், 2018

என் கேள்விக்கென்ன பதில்? புதன் 180606


கடி :      
  


துரை செல்வராஜூ :

அதெப்படி ஒரே நேரத்தில ரெண்டு கருடன்!?....

ப: ஆனாலும் கொத்திச்சென்றது ஒன்றுதானே!


கீதா சாம்பசிவம் :

எனக்குச் சில, பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது! நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))) அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே! ஹூம், புதன் கிழமைனு சொலறீங்க! :))))))) கேஜிஜி சார், இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? 

ப: நீங்க என்ன வேண்டுமானாலும் நெனச்சுக்குங்க! என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க! 

கௌதமன் சார், வெங்காயத்தோட மணத்தக்காளி வற்றல் போட்ட குழம்பை அப்புறமா என்ன செய்தீங்க?

ப: சுத்தமா மறந்து போயிட்டேன். ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில், இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது!

கௌதமன் சார், தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க? பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா? அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார். ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க! இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?



ப: கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது. அவர், தியாகராஜரின் அம்மா சீதம்மா. (கணவரை இழந்தவராக இருப்பாரோ? கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் )
தியாகராஜரின் முதல் மனைவி, பார்வதி. பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது. தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில், பார்வதி காலமானார். பிறகு தியாகராஜர், இரண்டாம் தாரமாக, பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார். அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார். சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது, அகிலாண்டபுரம் குப்புசாமி (அ)ய்யா. அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா. இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால், தியாகராஜர் சந்ததி, அவரோடு முடிவுக்கு வந்தது. 


ஏகாந்தன் :

கீ சு அம்மா .. சரி, தெரிந்து கொண்டீர்! கமுக்கமா இருக்கலாமுல்ல? படம் போட்டு வேற மினுக்கணுமா, சின்னப்பசங்க உலாவுற எடத்துல?

ப: நீங்க எழுதியதைப் படித்தவுடன், இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது! 






(இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு. இதைப் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம்!) 

கீதா ரெங்கன் : 

நீங்கள் எந்த டிஷ் சமைப்பதில் கில்லாடி?

ப: ரா டிஷ். 


உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி? குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி, மற்றும் பிள்ளைகள் (கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும்.!!!)

ப: மனைவி என் சமையலை சாப்பிடுவார். நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து / ஆறுதான் பாராட்டுப் பெறும். மற்றவை ... பெயில் மார்க்.



திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை??? அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம், கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா? 

ப : பூசாரின் பாஷை எனக்குப் புரியாது. நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை ( உதாரணம் : மாங்காய் சாதம்) முயற்சி செய்து, வெற்றி கண்டிருக்கிறேன்.

துளசிதரன்

நீங்கள் சமீபத்தில் பார்த்த திரைப்படம்? 

ப: அமேசான் பிரைமில், எம் எஸ் தோனி. 

பிடித்தது பழைய படங்களா? புதிய படங்களா?

ப: பல பழைய படங்கள்; சில புதிய படங்கள்.

அதிரா :

கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?.. இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ?

ப: நான் கையில் கறுப்புக் கயிறு கட்டியுள்ளேன். காத்து, கருப்பு எதுவும் அடிக்காது. 

ஏஞ்சல் :

1,யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ? அது என்ன ரகசியம் ?

ப : உண்டு. அது ரகசியம். 


2,100 வருஷத்துக்கு முன் கௌதமன் சார் , 75 வருஷத்துக்குமுன் ஸ்ரீராம் எப்படி இருந்திருப்பாங்க ?

ப: அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும்! என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும்! 


3, உங்களுக்கே உங்கள்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் எது ?

ப : என்னுடைய நகைச்சுவை உணர்வு. 


4,10 தடவைக்கும் மேலே நீங்க அதிகமுறை பார்த்த திரைப்படம் ?


ப : காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை. ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால், சுமதி என் சுந்தரி படத்தை, அவர் செலவில், இரவு நேர, இரண்டாம் காட்சி பார்த்தேன். டி வி யில் என்றால், அந்தக் காலத்தில் TCP (Tambaram, Chrompet, Pallavaram?) சானலில் "காதலா காதலா " படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம். 

5, ரீசன்ட்டா எப்போ செல்பி எடுத்தீங்க ? யார் கூட ?

ப: மே 22 ஆம் தேதி. கேள்வி பதில் பகுதிக்காக. கூட யாரும் இல்லை. (நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க!)


6, சின்ன பிள்ளைலருந்து இப்போ வரைக்கும் நீங்க உடைச்ச விலையுயர்ந்த பொருள் எது ?

ப: ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில், கார்பென்ட்ரி பகுதியில், மரத்தை இழைத்துவிட்டு, 
Jack Plane ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன். நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது, தடுக்கப் போன என் கையும், அவன் கையும் பட்டு, UK make Jack Plane கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது. எனக்கு Rs 39.80 அவனுக்கும் Rs 39.80 அபராதம் விதித்தார்கள், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை.

7, அப்படி உடைச்சிட்டு நைசா போன பின் அடுத்து வருவர் மேல் பழி விழுமே அப்போ வரும் feeling ?


ப: அடுத்தவர் உடைத்த பழிகளும் என் மீது போடப்பட்டுள்ளன. நான் உடைத்தவைகளை மறுத்தது கிடையாது.


8, அலறி ஓட வைக்கும் உணவு ? இதில் விடைகள் உப்புமா ரவா பொங்கல் எழுதுவது தடை செய்யப்படுகிறது. 


ப: எப்பவோ ஒருமுறை, எங்கோ, "சாபுதானா வடா " என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து, திருமதியிடம், சொல்லச் சொல்ல அவர் செய்தார். அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி, மௌன அலறலுடன் ஓடிவிடுவேன்!
 
9, காக்காய் கடி என்கிறார்களே காக்கா எப்படி கடிக்கும் ?



ப: 'கால் , காலாய் கடி' என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன். அதாவது 1/4 of 1/4 (=1/16) பதினாறில் ஒரு பங்கு. 

10, உங்கள் ஹேர்ஸ்டைலை எத்தனை முறை மாத்தியிருக்கிங்க இதுவரைக்கும் ?

  

 
ப: ஏழாம் வகுப்பு படித்த காலத்தில், ஜான் கென்னடி போல வாரியிருப்பேன். அப்புறம் ஜெய்சங்கர், அப்புறம் ரஜினி, அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை. ஹூம்! 

11,சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ?
பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் :)

ப: குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய, நிறைய ! செங்கல் பொடியை, சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து, பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால், ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து, நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி  ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன்! சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு.



12, உங்களுக்கு ஒருத்தர் ஒட்டக சிவிங்கியை கொடுத்து ஒளிச்சி வைக்க சொன்னா எங்கே ஒளிச்சி வைப்பிங்க ?


ப: கெட்டுப் போகாம இருக்கணும்னா ஃபிரிட்ஜ்லதான் வைக்கணும். 

13,சொந்த குரலில் பாடியிருக்கிறீர்களா ? எங்கே ?


ப: எப்பவுமே சொந்தக்குரல்தான். வீட்டில், அதிகம் பாடியது குளியலறையில்! 

14, சின்ன சின்ன ஆசைகள் 3 ?

ப: 

1) முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை.

2) பாதாம் அல்வா செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இதுவரை முயன்றதில்லை. 

3) முந்திரி பகோடா செய்யவேண்டும் என்றும் ஆசைப்படுவது உண்டு. செய்ததில்லை 

( ஹி ஹி இதெல்லாம் சின்ன சின்ன ஆசை இல்லை! தின்ன தின்ன ஆசைகள்!) 
    
15 , ஏஞ்சல் /அதிரா குறைந்தது 6 வித்யாசம் கூறவும் .. ?

ப: என்னுடைய அனுமானத்தில் சொல்கிறேன். 
தவறாகவும் இருக்கலாம். 

ஏ கொஞ்சம் சீரியஸ் டைப். அ அப்படி அல்ல.
ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.
அ வாயாடி. ஏ அப்படி கிடையாது.
அ நகைச்சுவை உணர்வு அதிகம் ஏ ஊஹூம்!
அ எதையும் லைட்டா எடுத்துப்பார். ஏ சில சமயங்களில் பயங்கரமா ரியாக்ட் செய்வார்.
என் கேள்வி : அ வும் ஏ யும் ஒருவரை ஒருவர் சந்தித்தது உண்டா?

16, காதல் ஜோடிகளுக்கு உதவி அடிபட்ட அனுபவங்கள் ?

ப: உதவியதும் இல்லை, அடிபட்டதும் இல்லை.

இந்த வாரம் தெரிந்துகொண்டது: 

Dr Masaru Emoto வின் நீர் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 
     

      

103 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா கீதாக்கா,,எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹை மீ ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊ

    கௌ அண்ணா எப்போ போடுவார்னு எல்லாரும் கன்ஃப்யூஸ்டா இருக்காங்க போல...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள் சுவாரஸ்யம்....எல்லாம் வாசிக்கலை ரகசியத்தை மட்டும் வாசித்தேன்! அது ரகசியம்!!!

    பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ?!!! அதுதான் ஸ்பெஷலோ..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. 1) முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை.//

    கௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே. ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் KGG , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  9. துரை செல்வராஜூ ஸார்...

    http://www.dinamalar.com/news_detail.asp?id=2035028

    இந்தச் செய்தியை வாசித்தீர்களா? மன்னன் வருகைக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

    பதிலளிநீக்கு
  10. நல்லவேளை.. கொத்திச் சென்றது ஒரு கருடன்...

    மற்றதுக்கு பிரச்னை இல்லை...

    பதிலளிநீக்கு
  11. தியாகராஜ சரிதம் தெரிந்து கொண்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  12. // மன்னன் வருகைக்கும் இதற்கும்...//

    Fb ல் படித்தேன்.... ஒன்றும் புரியவில்லை...

    நள்ளிரவு 2.25 வரை அதைப் பற்றிய செய்தி தேடினேன்.. தென்படவில்லை...

    மீண்டும் கவனிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ஸ்ரீராம்...

    இச்செய்தியை தினத்தந்தியில் தற்போது தான் வாசித்தேன்....

    ராஜராஜன் வருவதற்கு முன்பு கூட இப்படி நேர்ந்திருக்கிறது....

    கோயிலின் பாதுகாப்பில் மேலும் கவனம் கொள்வது சிறந்தது...

    மேலும் சில விஷயங்கள் உள்ளன..

    அவற்றை மின்னஞ்சலில் பேசுவோம்...

    பதிலளிநீக்கு
  14. கௌதமன் சார், நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க! அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும்! ஆமா சொல்லிட்டேன்!

    பதிலளிநீக்கு
  15. //திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? // இதை ஆரம்பிச்சதே நீங்க தான்! நினைவிருக்கா? உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் "திங்க"ப் போட்டு வந்தேன். அது நினைவில் இருக்கோ? ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை! இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  16. //முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை// ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார்! ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க! ஹெஹெஹெஹெஹெ! இப்போக் கொஞ்சம் சீரியஸா!
    தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை (முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க) எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும். பரப்ப தி/கீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான். ஆனால் விரத நாட்களில் வெங்காயம், கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது. அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே. அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும். சரியா வரும். அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம்.

    அடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும். இம்முறையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம். முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன். நீங்க க.கு. என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// முதல் தோசையே பொரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா ஆ ஆ...வார்க்கலாம்...////

      இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டு அந்தத் தோசைக்கல் மறுபடியும் முரண்டு பிடித்தால்?...

      உடுக்கையடி உலக நாதனின் அருள்வாக்கு...

      நல்லநாளாகப் பார்த்து
      பரணியில் தூக்கிப் போட்டு விடவும்...

      நீக்கு
    2. கீசா மேடம்- நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்? சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா? ஹிஹிஹி

      நீக்கு
  17. இங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும். ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது!

    பதிலளிநீக்கு
  18. தோசை வார்த்துப் பார்த்துட்டு அதன் தாக்கம் என்ன என்பதை அடுத்த வாரம் சொல்லுங்க! :)))))))

    பதிலளிநீக்கு
  19. சின்ன, சின்ன ஆசைகள் கண்டு மலைத்தேன்.

    பதிலளிநீக்கு
  20. இடி தாக்கிய விஷயம் தானே. இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே! மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு. நான் சொல்வது அறுபதுகளில் .

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம்.

    ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு சுவையான பதில்கள்.

    சாபுதானா வடை - கேட்கும்போதே டெரரா இருக்கே! :)

    பதிலளிநீக்கு
  22. பல கேள்வி பதில்கள் சுவாரசியமாக இருந்தன.

    சாபுதானா வடா- நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை. அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை.

    பல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள்? அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  23. பாடலில் சிறப்பு ஹேமமாலினி வருகிறார்.

    , பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால், ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து,//

    நானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் "மக்கு" என்று.


    //நீங்கள் எந்த டிஷ் சமைப்பதில் கில்லாடி?

    ப: ரா டிஷ். //

    நல்ல பதில்
    ஏஞ்சல், அதிரா ஆறு வித்தியாசம் அருமை.

    என் கருத்து இருவரைபற்றி.
    ஏஞ்சல் அனைவரையும் அன்பால் அணைத்து செல்லும் தேவதை
    அதிரா அனைரையும் மகிழ்விக்கும் குழந்தை


    இந்த வாரம் தெரிந்துகொண்டது:

    Dr Masaru Emoto வின் நீர் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

    நானும் படித்தேன்

    பதிலளிநீக்கு
  24. அதிரா அனைவரையும் மகிழ்விக்கும் குழந்தை

    பதிலளிநீக்கு
  25. முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை.''

    தோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே ! அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம்.

    கீதாசாம்பசிவம் அவர்கள் சொன்னது போல் வெங்காயம் தடவி சுடலாம்.
    எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் (ஒட்டாமல் வரும் தோசை.)

    பதிலளிநீக்கு
  26. தியாகராஜரின் மாமியாராக இருப்பாரோ?
    மருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.(மரியாதை என்று சொல்வார்கள்)
    அல்லது உதவிக்கு இருக்கும் மூதாட்டியோ?
    அவர்களும் கிடு கிடு என்று யார் வந்தாலும் பார்க்க முன்னே வந்து விட மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  27. //காக்காய் கடி என்கிறார்களே காக்கா எப்படி கடிக்கும் ?//

    குழந்தைகள் தங்கள் உடையில் அந்த பண்டத்தை வைத்து மூடி கடித்து கொடுப்பார்கள் நண்பர்களுக்கு
    தன் எச்சில் படாமல் இருப்பதுதற்காக.

    காக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில்.

    பதிலளிநீக்கு
  28. //ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது!//

    மீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும். கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு
    அதில் எண்ணெய் தடவி தோசை சுடலாம். அடிக்கடி சுத்தமாய் கழுவி வைத்து கொள்ளலாம்.
    அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள். அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை.

    பதிலளிநீக்கு
  29. இவ்வார கேள்வி பதில்கள் சுவாரசியம்

    பதிலளிநீக்கு

  30. @கோமதி அக்கா தாங்க்ஸ் :)

    பதிலளிநீக்கு
  31. / ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.//

    ஹாஹாஆ :) மிகவும் சரி

    பதிலளிநீக்கு
  32. சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். :))))))
    ஹெஹெஹெஹெ. சில, பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன. நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும். :))))))

    பதிலளிநீக்கு
  33. ஏ கொஞ்சம் சீரியஸ் டைப். அ அப்படி அல்ல.//

    அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் :)

    மனம் வருந்தும் செய்திகள் படிச்சாலோ கேள்விப்பட்டாலோ அவ்ளோதான் ஒரு வரம் அழுவேன் .

    // ஏ சில சமயங்களில் பயங்கரமா ரியாக்ட் செய்வார்.//

    ஆவ்வ்வ் :) இங்கேயும் அப்படி நடந்திருக்கிறேனா ? ஐ மீன் பயங்கர ரியாக்ஷன் ?
    எங்கே எப்போது ?

    பதிலளிநீக்கு
  34. நெ.த. நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான்! பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு! அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும். சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க. அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன். ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும்! ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை. வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன். இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை!

    பதிலளிநீக்கு
  35. என்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும். ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி, பிறருக்கு உதவும் சுபாவம், வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள். இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். :))))

    பதிலளிநீக்கு
  36. // ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் //

    @கீதாக்கா ..கொஞ்சம் இல்லை நிறைய்ய்யவே :)

    பதிலளிநீக்கு
  37. கௌதமன் சார் :) நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி ,மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன்

    பதிலளிநீக்கு
  38. கேள்விகள் , பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எங்கே ஒப்பீடு செய்தேன்? சும்மா தோணினத சொல்லியிருக்கேன். ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும், முனிவர் மானாகப் பிறப்பதும், அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே!

      நீக்கு
  39. உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா? நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ, புத்தகத்திலோ கேட்டாலோ, படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ? என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி?

    பதிலளிநீக்கு
  40. ///கீதா சாம்பசிவம் :
    கேஜிஜி சார், இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? //

    ///ப: நீங்க என்ன வேண்டுமானாலும் நெனச்சுக்குங்க! என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க///

    ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்றி காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்:)).

    பதிலளிநீக்கு
  41. ////Angel said...
    ஏ கொஞ்சம் சீரியஸ் டைப். அ அப்படி அல்ல.//

    அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் :)

    மனம் வருந்தும் செய்திகள் படிச்சாலோ கேள்விப்பட்டாலோ அவ்ளோதான் ஒரு வரம் அழுவேன் .///

    சே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை:)) எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்:)).. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்:))..

    ஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு:))

    பதிலளிநீக்கு
  42. ///Angel said...
    / ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.//

    ஹாஹாஆ :) மிகவும் சரி///

    ஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே:))... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி:).. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா:)) நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன்:))

    [கரீட்டு பிக்கோஸ் மீ எப்பவும் பச்சைத்தண்ணி குய்க்கவே மாட்டனே:) ஹா ஹா ஹா)]

    பதிலளிநீக்கு
  43. ///கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி?

    June 6, 2018 at 12:22 PM///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்:))... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  44. //ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம்.// அதிரடி, என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை! அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார். "என் கடன் வம்பு செய்து கிடப்பதே!" :))))) நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும்! இப்போத் தானே பிறந்தேன்! :)))))

    பதிலளிநீக்கு
  45. //கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி?// ஹெஹ்ஹெஹெஹ்ஹெ! அதிரடி, நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு! அப்புறமாக் காலண்டர், பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன். ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா! அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார், இன்னிக்கு என்ன விசேஷம்னு! செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார். அதான் காலண்டரைப் பார்த்துப்பேன். :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.. பார்த்தது 2017ம் வருட காலண்டரா இல்லை 2018ம் வருட காலண்டரா என்ற சந்தேகம் வருமோ?

      நீக்கு
  46. // இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா// ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே! அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  47. // சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். :)))))) //


    ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா? அனுப்புங்கள் உடனே...

    // இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். :)))) //

    ஆமாம்... எங்களுக்கும். மறக்க முடியாதவர்களாகி விட்டார்கள்.

    // அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். //

    ஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.

    பதிலளிநீக்கு
  48. // ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா //

    அதுதான் அதிரா!

    பதிலளிநீக்கு
  49. //ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா? அனுப்புங்கள் உடனே...// என்னாது? ஜந்தேகமா? அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை! :) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  50. சந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா? அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா?!!!!! (நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் - கவனிக்கவும்!)

    பதிலளிநீக்கு
  51. //ப: அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும்! என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும்!///

    ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு:)).. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்:))..
    ஹையோ அந்த மனிசன்[பிள்ளையார்:)] கேட்டதெதையும் உடனே தர மாட்டார்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  52. //ஏ ஒல்லி. அ அவ்வளவு ஒல்லி இல்லை.//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ஆனா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா[ஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:))]...

    என்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் “அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும்:)) இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு” என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  53. //ஸ்ரீராம். said...
    // // அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். //

    ஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.//

    ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்குக் கெள அண்ணன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கிறார்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  54. //என் கேள்வி : அ வும் ஏ யும் ஒருவரை ஒருவர் சந்தித்தது உண்டா?//

    கிளவிக்கே கிளவியோ?:) ஹையோ கேள்:விக்கே கேள்வியோ?:)) நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்:))..

    அஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ?:)).. நேக்கு டிமென்ஷியா ஸ்ராட்:)) அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  55. //16, காதல் ஜோடிகளுக்கு உதவி அடிபட்ட அனுபவங்கள் ?

    ப: உதவியதும் இல்லை, அடிபட்டதும் இல்லை.//

    நான் நல்லா ஜெல்ப்பும் பண்ணுவேன்ன். ஒரு தடவை அடி பட்டதும் உண்டு:)).. புளொக்கில் சொல்கிறேன்:))

    பதிலளிநீக்கு
  56. ///தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை (முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க) எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும்///

    அபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர்:) இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட:)).. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்தான் நாங்க சொல்லுவோம்.

    பதிலளிநீக்கு
  57. கேள்வி பதில் பகுதியை பார்த்தவுடன் ஞாபகத்தில் வந்தது .... "நமக்கு நாமே !"

    பதிலளிநீக்கு
  58. நம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை:)) யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன்:)

    அதாவது.. அதிராவை விட அஞ்சு ஒரு அங்குலம் கட்டை
    அதிராவை விட அஞ்சு சரியான கறுப்பு
    அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  59. 1. கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா? இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்‌ஷன் என்ன?:).

    பதிலளிநீக்கு
  60. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. தியாகராஜர் வரலாறு அறிந்து கொண்டேன்.

    சகோதரர் இணையம் சரியாகி விட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  61. / அதாவது.. அதிராவை விட அஞ்சு ஒரு அங்குலம் கட்டை
    அதிராவை விட அஞ்சு சரியான கறுப்பு
    அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)..//

    :)) ஹாஹா ம்ம் இன்னும் நாலைஞ்சி வார்த்தை எடுத்து விடுங்க :) இது போறாது

    பதிலளிநீக்கு
  62. //என் கேள்வி : அ வும் ஏ யும் ஒருவரை ஒருவர் சந்தித்தது உண்டா?//

    அன்றொருநாள் தேம்ஸ் கரையோரம் சந்தித்தபோது

    http://4.bp.blogspot.com/-4KjemnW4wyY/UKedYa_2m-I/AAAAAAAAASI/RGQDAP5WBOk/s1600/fishbowl_640x480.jpg
    அதிராவின் மைண்ட் வாய்ஸ் //சே யாரிந்த கண்ணாடியை கண்டுபிடிச்சது கர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  63. //இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. //
    பேசினா என்றால் ..திட்டோ திட்டு என்று திட்டினார் என்று மீனிங் ..

    எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை அந்த படம் கர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  64. 1,மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ??

    2,உங்களுக்கு மிகவும் பிடித்த விலங்கினம் எது ? பதிலில் Homo sapiens வரக்கூடாது

    3,ஒரு நாள் முழுதும் நீங்க கண்ணுக்கு தெரியாம மாயமாகிட்டா என்ன செய்வீங்க ?

    4, உங்க LKG நர்சரி அனுபவங்களில் மறக்க முடியாத தோழி :)

    5, இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ?

    6,கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் /இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு
    வரம் கொடுத்தா எந்த கேரக்டர் ஆவீங்க ஏன் ?

    7, வீட்டில் நீங்க தலைவரா அல்லது தொண்டரா ?
    8, வாழ்க்கையில் நீங்கள் தைரியமாக செய்த ஒரு விஷயம் ?

    9, உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ??

    10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் எது ?

    பதிலளிநீக்கு

  65. 11, முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ?

    12, இப்போல்லாம் fusion என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ? இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ?

    13, ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் / புளி imli candies இவற்றில் எது சுவை அதிகம் ?
    14,உங்க வீட்டு டாக்டரம்மா அடிக்கடி உங்களுக்கு கொடுக்கும் ஹோம் மேட் மெடிசின் ?
    உதாரணம் ..நிலவேம்பு ஜூஸ் ,சூரணம் ,மிளகு பால் இவற்றை போல .
    15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க :))))) ?

    16, இதுவரைக்கும் பதில் சொல்லவே முடியாத கேள்வி ? கேட்டது யார் ?

    17, அப்பளம் vs பப்படம் என்ன வித்யாசம் ?

    18, நள பாகம் ஆண்களுக்குரியது என்கிறார்களே why ?

    ஒரே ஒரு நளன் சமையல் செஞ்சதை வச்சி எப்படி ஆண்கள்தான் பெஸ்ட் குக்ஸ் என்று முடிவுக்கு வரலாம் ?

    19, அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய jewels ,க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ?
    20, பாலசந்தர் படங்களில் உங்களது favourite படம் ?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 18. (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம், நிறைய பேருக்கு அல்லது கல்யாணம், காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன?

      நீக்கு
    2. ஏஞ்சலின் - 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா —- வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் (குழைசாதம் இல்லை) வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் — என்பதாக இருக்குமோ?

      நீக்கு
  66. எங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் :)

    பதிலளிநீக்கு
  67. இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  68. //இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்!//

    அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து:)) அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  69. ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்:)).. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ:)) அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:).. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  70. //15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க :))))) ?//
    யார் வீட்டுக் கண்ணாடியை எனச் சொல்லவே இல்ல?:))

    பதிலளிநீக்கு
  71. ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன..

    :)))

    பதிலளிநீக்கு
  72. கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ? அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  73. //ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன..

    :)))//

    நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  74. இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம். என்னென்னவோ செய்து பார்த்தார்களாம். அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!

    பதிலளிநீக்கு
  75. //அதிராவின் மைண்ட் வாய்ஸ் //சே யாரிந்த கண்ணாடியை கண்டுபிடிச்சது கர்ர்ர் :)//

    மம்மீஈஈஈஈஈஈ... கை உள்ளே போகுதூஊஊ:))

    [im]http://stuffpoint.com/cats/image/173276-cats-cat-and-fish.jpg[/im]

    பதிலளிநீக்கு
  76. //[im]http://stuffpoint.com/cats/image/173276-cats-cat-and-fish.jpg[/im] //

    404 Not Found!!!

    பதிலளிநீக்கு
  77. //அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!//

    ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிடந்திருப்பா ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  78. haa haa haa...அது பழக்கதோசத்தில் என் பக்கம் போடுவதைப்போல ஐ எம் போட்டு விட்டேன்:)) [im]

    பதிலளிநீக்கு
  79. IM கேன்சல் செய்து, பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  80. ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிடந்திருப்பா ஹா ஹா ஹா:))

    //
    கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  81. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) //


    புல்லு வழுக்கினா நான் என்ன பண்றது மியாவ்

    பதிலளிநீக்கு
  82. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  83. / பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!//

    ஆவ்வ் :) நம் புகழ் சென்னை வரைக்கும் பரவிடுச்சா :)

    அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை quilling இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க :) அவ்ளோ பேமஸ் நான் :)

    பதிலளிநீக்கு
  84. @நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் /பாட்டி மருந்து /கை வைத்தியம் / வார்த்தைகள் நினைவுக்கு வரல :)

    அந்த குழை சாதம் மட்டும் வேணாம் :) ஒப்புமை இல்லாதது அது :)

    பதிலளிநீக்கு
  85. (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி//

    ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா ஓடியாங்க கொஞ்சம் என் முன்னே நில்லுங்க உங்க பின்னாடி ஒளிஞ்சிக்கறேன் :)

    @:நெல்லை தமிழன் நீங்க இப்போ அடிக்கலாம் அதிரா வாங்கிப்பாங்க :)

    ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன் :)

    // பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:)..//ஆஹா சூப்பர்

    //
    நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:))

    June 6, 2018 at 7:59 PM//

    பதிலளிநீக்கு
  86. //10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் எது ? //

    ஓஹோ... இங்கிட்டு இந்தமாதிரி கேள்வி கேட்கணுமா.... இதோ...
    M1) மாதத்தில் பிடித்த 'வாரம்' எது ?
    M2) ஓராண்டில்(காலெண்டர் இயர்) பிடித்த 'மாதம்' என்ன ? (தமிழ், ஆங்கில வருடம்)
    M3) தமிழ் வருடம் 60ல் (பிரபவ, விபவ, சுக்ல,....) பிடித்த வருடம் எது ?
    M4) நீங்கள் பிறந்த தமிழ் வருடம் எது ?

    M in M1,M2 etc., represents none other than 'Madhavan'

    பதிலளிநீக்கு
  87. மாதவன்! பார்த்து ரொம்ப நாளாச்சு! சௌக்கியமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!