# T20 கிரிக்கெட் என்பது ஒரு கேளிக்கையே தவிர, முழுவதுமான விளையாட்டுப் போட்டி அல்ல. அரைகுறை ஆடை நடனம் என்பது கேளிக்கையின் உச்சகட்டம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். அதை ஏன் பெண்கள் மட்டுமே ஆடுகிறார்கள் என்பது பதில் தெரிந்து கேட்கப்படும் கேள்வி என்பதால் தனியாக பதில் தரவில்லை.
& சியர் லீடர்ஸ் - கூட்டத்தின் ஆரவாரத்தை ஒருங்கிணைத்து ஒருமுகமாக்க சில அழகிய முகங்களும், ஆட்டமும்!
சியர் லீடர்ஸாக குறைந்த உடையில் ஆட ஏன் பெண்கள் மாத்திரமே செலெக்ட் செய்யறாங்க? மைதானத்தில் உள்ள பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்?
# பெண்களை கவர்ந்திழுக்க ஏன் ஆண்கள் அரைகுறை ஆடை நடனம் ஆடக்கூடாது என்ற கேள்விக்கு சரியான விடை ஒரு பெண் தரக்கூடும். சாதாரணமாக ஆண்களுக்கு மிடுக்கும், பெண்களுக்கு நளினம் - அழகு - கவர்ச்சி என்றும் வைத்துப் பார்ப்பது நமது பாரம்பரியம் . கண் கவர் காட்சிகளை தேடி தேடி பார்ப்பது என்பது இதுவரை ஆண்களின் ஏகாதிபத்தியமாக மட்டுமே இருந்திருக்கிறது. சம உரிமை வாதம் பேசும் பெண்கள் ஒருவேளை இதிலும் ஆண்களுக்கு சரி நிகர் சமானமாக போட்டிக்கு வரலாம் - என் அபிப்பிராயத்தில் அது விரும்பத்தக்கதல்ல.
& இங்கே பாருங்க -
இந்த சீன் படத்தில் வந்த சில நொடிகளையே நம்மால் சகிக்க முடியவில்லை. ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்திலும் இப்படி ஆண்கள் ஆட வந்தால் வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்!
நீங்கள் தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தைச் சுவைத்திருக்கிறீர்களா? இலங்கையின் தயாரிப்பு சாப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் கேரளாவிலும் தயாரிக்கப்படுவதைக் கண்டேன்.
# பல நாட்களுக்கு முன் தென்னை வெல்லம் சுவைத்துப் பார்த்திருக்கிறேன்.
& கிடைக்கவில்லை - என் வீட்டிற்கு நீங்க வரும்போது கொண்டுவரவும்.
ஒருவர் இன்னொருவருக்கு தானம் செய்ய எது முக்கியத் தேவை?
# ஈகைப் பண்பு.
& பொருளும், மனமும், நல்ல குணமும் போதும்.
ஏஐ டூல்களைப் பயன்படுத்துபவர்கள் ஏன் எபியில் தாங்கள் அறிந்துகொண்டதை எழுதக்கூடாது?-எபியில்.
# ஏ ஐ அறிந்தோர் முன் வரலாம்.
& டெக்னிகல் சமாச்சாரங்கள் பிளாக் பதிவுகளில் எடுபடாது. பிளாக் படிப்பவர்கள் பெரும்பாலோர் டைம் பாஸ் செய்ய மட்டுமே பிளாக் பக்கம் வருபவர்கள். இங்கே வகுப்பு நடத்தினால் எல்லோரும் கட் அடித்துவிட்டு ஓடிவிடுவார்கள்!
அனேகமா எல்லோரும் இனிப்புகளை மிகவும் விரும்புவது ஏன்? -உடல்நிலைக்கு பயந்துகிட்டு ஒதுக்கிவைப்பவர்களை விட்டுடலாம்
# பிறந்த குழந்தைக்கு நாவில் தேன் அல்லது சர்க்கரை தடவி அதன் வாழ்க்கையைத் துவக்கி வைக்கிறோம். இனிப்புதான் குழந்தை முதலில் சுவைப்பது. எனவே இனிப்பில் மனம் செல்வது இயல்பாக நிகழ்கிறது.
@CGSenu :
மூளையில் டோப்பமின் சுரப்பு (Dopamine release)
இனிப்புகள் சாப்பிடும் போது, மூளையில் "பரிசுக்கான ரசம்" என்று சொல்லப்படும் டோப்பமின் சுரக்கிறது.
இது மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்துகிறது.
அதனால், மீண்டும் மீண்டும் இனிப்பை நாடுகிறோம்.
இனிப்பு சாப்பிடுவது உணர்ச்சி தேவையால் உருவாகலாம்.
நாம் வாழும் இடமே காட்டை அழித்து உருவானதுதான் எனும்போது இயற்கையை பாதுகாக்கணும் Global Warming என்று புலம்புவது போலித்தனமில்லையா?
# தேவைக்கு மேல் எடுத்துக் கொள்வது அபரிக்ருஹம் என்கிற பாவம் என்று நம் சாத்திரங்கள் சொல்கின்றன. தேவையான அளவுக்கு மட்டும் காடுகளை அழித்து அதில் மனிதன் குடியேறுவது தவறல்ல. ஆதிமனிதர்களுக்கு வேண்டுமானால் நவீன சவுகரியங்கள் தேவையில்லாமல் இருக்கலாம். தற்காலத்தில் மனித ஜாதி பல வசதிகளை எதிர்நோக்கி வாழ்கிறது என்பதால் ஓரளவுக்கு இயற்கை வளங்களை ஆக்கிரமித்து வாழ வேண்டிய தேவையும் தவிர்க்க இயலாததாகிறது.
ஒருத்தர் ஹோட்டல் வைத்து 10 ரூபாய்க்கு (அல்லது அடக்கவிலைக்கு) சாப்பாடு போடுகிறார். பலர் வந்து சாப்பிடறாங்க. அது அவருக்கு புண்ணியம் என்று வைத்துக்கொண்டால், அந்த ஹோட்டலினால் சுற்றியிருக்கும் பல ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டு, அந்த ஹோட்டல் ஓனர்களுக்கு, அதனால் அங்க வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் நஷ்டம், அவருக்கு பாவமாக வந்து சேராதா? (எவரேனும் நல்லது செய்தால் அதைக் கெடுப்பதற்காக கேள்விகேட்டால், அது பாவக்கணக்காகாதா என்று என் மனசாட்சி கேட்குது)
# பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எந்தக் காரியம் ஆனாலும் அதில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் . அதாவது ஒருவருக்கு நல்லது வேறு ஒருவருக்கு (பலருக்கு ?) நல்லது அல்லாதது என்கிற வகையில்தான் இருக்கும். இதை சீர்தூக்கிப் பார்த்து நல்லது அதிகம் இருக்கிற காரியத்தில் ஈடுபடுவது உத்தமம். இது நமது சாஸ்திரங்கள் சொல்லுகிற நீதி.
அடக்க விலைக்கு மேல் மிகக் குறைந்த லாபம் வைத்து ஒருவர் விற்பதால் பலருக்கு நன்மை விளையும். அதே சமயம் தொழிலில் போட்டியாக இருப்பவருக்கு அது நடஷ்டத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. சீர் தூக்கிப் பார்க்கும் போது , நன்மை அதிகம் இருப்பதால் அடக்க விலைக்கு விற்பவருக்குப் பாவம் சேராது.
அதிக லாபம் வேண்டும் என்று அதிக விலை வைத்து விற்பவருக்கு ஏற்கனவே பாவக்கணக்கு அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது அல்லவா ?
சங்கராச்சாரியார் போன்ற குருமார் விளக்கம் சொல்ல வேண்டிய கேள்விகளை எல்லாம் எங்களிடம் கேட்பது நியாயமா ?
ஜெயகுமார் சந்திரசேகரன் :
சரவணபவன் சாம்ராஜ்யத்தையே வீழ்த்திய ஜீவஜோதி தற்போது என்ன செய்கிறார்?
# இந்த முக்கியமான கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.
& 'ராஜகோபால் சிறை தண்டனை அனுபவிக்காமல் இறந்துபோய்விட்டாரே' என்ற ஆதங்கத்தில் அவர் இருந்ததாக 2019 செய்திகள். நக்கீரன் கோபால், 'ஜீவஜோதி பா ஜ க வில் சேர்ந்தார்' என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு டுபாக்கூர் செய்தி வெளியிட்டிருந்தார் !
பின் குறிப்பு 1: ' சரவணபவன் சாம்ராஜ்யத்தையே வீழ்த்திய ஜீவஜோதி' என்பது தவறு. சரவண பவனை வீழ்த்தியது அந்த அதிபரின் பெண்ணாசை.
பின் குறிப்பு 2: பொறுமை இருந்தால், ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த காண்கேள் (link) தகவலைப் பாருங்கள்.
கே சக்ரபாணி, சென்னை:
முன்பெல்லாம் உலக அழகி என்றால் கிளியோபாட்ரா என்றும் அதன் பின் ஐஸ்வர்யா ராய் என்று பேசப்படுகிறது. அதற்கு பின் யார் பெயரும் பேசப்படவில்லை. சரிதானே? ( உடனே நம் engalblog life member அனுஷ்கா தமன்னா என்று சொல்லாதீர்கள்)
# குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பேரும் அவ்வளவு அழகில்லை என்பது என் எண்ணம். அழகு காண்பவர் கருத்து.
&
2. முன்பெல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணுபாக்க வரும்போது பெண் வீட்டில் பஜ்ஜி சொஜ்ஜி செய்வார்கள். இப்போதும் இந்த வழக்கம் தொடர்கிறதா? ஆனால் இதுவரை யாரும் அல்வா குடுத்ததாக கேள்விப்படவில்லை!
# விருந்து வந்தால், இப்போதும் எப்போதும் சிற்றுண்டி உபசாரம் இல்லாமல் போகாது. அதுவும் கல்யாண விஷயமாக வந்தால் கட்டாயம் இருந்தாக வேண்டும். சொஜ்ஜி பஜ்ஜி என்பது சும்மா எதுகை மோனை.
& இப்போ எல்லாம் கல்யாணத்துக்கு பெண் கிடைப்பதே அரிதாக உள்ளது. அப்படி இருக்கையில் பொண்ணு பார்ப்பதாவது, சொஜ்ஜி பஜ்ஜியாவது! வாய்ப்பே இல்லை!
= = = = = = =
KGG பக்கம்:
1) ஞாபகம் இருக்கட்டும் - மே மாதத்து படப்போட்டிக்கான தலைப்பு : ' கோடை காலம்'
படங்கள் வந்து சேர வேண்டிய இறுதி தேதி : மே 19, மாலை ஆறுமணி.
இதுவரை 6 படங்கள் வந்து சேர்ந்துள்ளன.
அனுப்பியவர்களுக்கு நன்றி.
- - - - - - - -
2) பாண்டிச்சேரி பயணப் படங்கள் (செவிக்கு உணவு இல்லாதபோது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - போட்டிப் படங்கள் இல்லாதபோது, பாண்டிச்சேரி படங்கள் தலை காட்டும்!)
அலையே வா,
அருகே வா!
பாதங்கள் நனைத்து,
பரவசப்படுத்து !
மீதி படங்கள், பிறகு!
= = = = = = = = = =
அலைகடல் படங்கள் மிக அழகு. கடலை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
பதிலளிநீக்குஒவ்வொரு செட் (அதாவது, ஏழோ, பத்தோ அல்லது பதினாலோ) அலைகளுக்கு அப்புறம் பெரிய அலை வருமாமே. கவனித்திருக்கிறீர்களா?
இதுவரை கவனித்தது இல்லை. இனிமே கவனிக்கிறேன்.
நீக்குகடைசிப் படம் என் பெண் எனக்கு பரிசாக வரைந்துகொடுத்த ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்கிறேன்.
பதிலளிநீக்குகடல் படங்கள் நிறைய நீங்கள் பகுர்வதால், கடல், அலை என்ற தலைப்புகளில் போட்டி வராது என்று நம்பலாமா?
படம் பகிரவும். அந்தத் தலைப்புகளில் போட்டி வராது. ஆனால் 'கோடை காலம்' என்னும் தலைப்பிற்கு வாசகர்கள் கடற்கரைக் கூட்டங்களை படம் எடுத்து அனுப்பினால் - வேறு வழி இல்லை!
நீக்குசக்ரபாணி சார் கேள்வி அவரது அனுபவமின்மையை உணர்த்துகிறதோ? ஹாஹா
பதிலளிநீக்குசொஜ்ஜி பஜ்ஜி சாப்பிடுபவர்கள்தானே முந்தைய ஜெனரேஷனில் அல்வா கொடுத்துக்கொண்டிருந்தார்கள்? (ஊருக்குப் போய் கலந்து பேசி லெட்டர் போடறோம்)
டக் எனச் செய்யக்கூடிய டிபன் சொஜ்ஜி பஜ்ஜி. உப்புமா பண்ணிக் கொடுத்தால் அங்கேயே பெண்ணை ரிஜக்ட் செய்யும் அபாயம் இருந்தது. என்ன சொல்றீங்க?
:)))) ஹா ஹா !!
நீக்குகனகா படம் போட்டவர் யூடியூபைப் பார்ப்பதில்லை போலிருக்கு. சில வருடங்கள் முன்பு கனகாவின் லேடஸ்ட் படங்கள் காணொளி வெளியாகி தூக்கத்திலும் பயமுறுத்தியது தெரியாதா?
பதிலளிநீக்குதெரியும். ஆனாலும் அந்தக் காலத்து கிளிக்கு - அந்தக் காலத்து கனகாவே போதும் என்று நினைத்தேன்!
நீக்குகிளியோபாட்ராவின் படம் என்று குழம்பி ஜூலியஸ் சீசரின் படத்தை வெளியிட்டுவிட்டாரோ? கணவனும் மனைவியும் ஒரே மாதிரியா இருப்பாங்க?
பதிலளிநீக்கு:))) இருக்கலாம்! கிளி, 'மார்க் ஆண்டனி'யின் மனைவி அன்றோ ?
நீக்குதன் அரியணையைத் தக்கவைக்க சீசரின் உதவியை நாடி அவனுடைய காதலி ஆனாள். பிற்பாடு தன்னுடைய இளைய சகோதரனை மணந்தாள். (அரியணைக்குப் போட்டி வராது என்பதால்) அவளுக்குப் பிறந்த மகனுக்கு ப்தாலமி சீசர் என்று பெயராம். இது நன்றிக்கடனா இல்லை சீசருக்கைப் பிறந்ததா என்று அவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
நீக்குதெளிவாக இருந்தேன்; இப்போ குழம்பிட்டேன் !!
நீக்குஜெயகுமார் சார் சமீபத்தில் கரகாட்டக்காரன் படத்தைப் பார்த்திருப்பாரோ? அதனால்தான் காரை வைத்திருந்த ஆளை.... டைப் கேள்வி கேட்டிருக்கிறாரோ?
பதிலளிநீக்கு:)))) அந்தக் காலத்து ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. கிருபானந்த வாரியார், ரா கோ அண்ணாச்சியிடம் 'ஜோதியில் ஐக்கியமாகவேண்டும்' என்று அடிக்கடி சொன்னதை, அண்ணாச்சி
நீக்குஇப்படி எடுத்துக்கொண்டுவிட்டார் போலிருக்கு!
நேற்றைய செவ்வாய் கதைக்கு ஜீவி சார் நிறைய கருத்துகள் கொடுத்திருக்கிறார். சிறுகதை பற்றிய புரிதல், அவர் எண்ணம் என ரசனையாக உள்ளது. இது மற்றவர்களின் கவனத்திற்கு
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//இந்த சீன் படத்தில் வந்த சில நொடிகளையே நம்மால் சகிக்க முடியவில்லை. ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்திலும் இப்படி ஆண்கள் ஆட வந்தால் வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்! // வாய் விட்டு சிரித்து விட்டேன்.
பதிலளிநீக்கு:)))) நன்றி!
நீக்குஎன்னுடைய முக்கியமான கேள்விக்கும் பதில் தந்ததற்கு நன்றி. மண்ணாசை, பெண்னாசை, பொன்னாசை ஆகிய மூன்றையும் விட்டு விட்டால் பேரின்பம் அடையலாம்!!!
பதிலளிநீக்குஅதே, அதே!!
நீக்குஇஸ்லாத்தில் நன்கு வாழ்ந்தவருக்கு சொர்கத்தில் 72 இளம் கன்னியர் பரிசாக்க் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பேரின்பம் என்றால் என்ன என்பதை ஜெயகுமார் சாரும், அதே அதே சபாபதே போட்ட கேஜிஜி சாரும் விளக்குவார்களா?
நீக்குஆளை விடுங்க சாமி! நான் வரலை இந்த விளையாட்டுக்கு!
நீக்குநானும் இந்த விளையாட்டுக்கு வரலை. இது போன்று எல்லா மதங்களிலும் முரண்பாடுகள் காணும். கிருஷ்ணர் ஆடாத ஆட்டமா?
நீக்குJayakumar
இந்து சமயத்தில் (பாரதீய மதங்களில்) மாத்திரம் பேரின்பம் என்ற ஒன்று உண்டு. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றுமே, அதனை அடைந்ததும் உடனே மறைந்துவிடும். பிறகு இன்னும் அதிகமான ஒன்றில் அல்லது வேறொன்றில் ஆசை வைக்கும் (ஒரு பெண் போனால் அடுத்த பெண், ஒரு மண் கிடைத்தால் இன்னொரு மண், பொன்னுக்கும் அதுவே அளவுகோல்). இந்த மாதிரி சிறிய நேரமே நமக்கு இன்பம் தருபவை சிற்றின்பம். பேரின்பம் என்பது நமக்கு இன்பத்தைத் தொடர்ந்து தரக்கூடியது, அதாவது அந்த இன்பம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கக்கூடியது. அதனால் இந்த மூன்று ஆசையை விட்டுவிட்டால் நம்மால் பேரின்பத்தை நோக்கிப் பயணிக்க முடியும். இந்த விளக்கத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன்.
நீக்குநீங்களே இப்போ சொல்லிட்டீங்க ! நன்றி.
நீக்குபலரும் இந்த ராஸ லீலையைக் கிருஷ்ணர் பெண்களோடு சேர்ந்து அடித்த கொட்டம் என்பதாகவே நினைச்சுக்கறாங்க. :( முழுச் சரணாகதி, தன்னையும் தன் உடலையும் மறந்து கண்ணன் ஒருவனே நாம், நாமே கண்ணன் என்னும் நிலைக்குப் போவதைக் குறிப்பது தான் அது. திரௌபதி சபையில் மானபங்கப்படுத்தப் பட்டபோது முதலில் கண்ணனை அழைத்தாலும் தன்னுணர்வு அவளுக்கு இருந்தது. பின்னர் தன்னையும் தன் நிலையையும் மறந்து இரு கரங்களையும் மேலே தூக்கிக் கண்ணா, நீயே சரணம் எனக் கூவியதும் தான் கண்ணன் அருள் புரிந்தான் எனச் சொல்லுவார்கள்.
நீக்குhttps://sivamgss.blogspot.com/2009/05/blog-post_24.html
நீக்குhttps://sivamgss.blogspot.com/2009/05/blog-post_27.html
நீக்கு__/\__
நீக்கு//மன அழுத்தம், துக்கம் போன்ற சமயங்களில் "comfort food" போல இனிப்புகள் வேலை செய்கின்றன.//அதனால்தான் இறப்பு நிகழ்ந்த நாளில் கூட பாயசத்தோடு உணவு பரிமாறுவார்கள். அது மட்டுமல்ல காரியம் செய்யும் பன்னிரெண்டு நாட்களும் தினமும் ஒரு இனிப்பு உண்டு. இது கொண்டாட்டம் இல்லை, இனிப்பு இங்கே comfort food.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி!
நீக்குஇறப்பில் இனிப்புப் போடும் சம்பிரதாயத்துக்கு வயசு பார்ப்பது உண்டு. இளவயதெனில் இனிப்பெல்லாம் போட மாட்டார்கள். 50 வயதுக்கும் மேலாக ஆகி இருந்தால் கொஞ்சம் ஓகே எனப் பாயசம் மட்டும் இருக்கும். இறந்தவர்/இறந்தவள் 60க்கும் மேல் ஆகிப் பேரன், பேத்தி எடுத்திருந்தால் பத்து நாட்களும் இனிப்பு, பாயசம், ஒன்பதாம் நாள் பணியாரம் போடுவதுனு எல்லாமும் இருக்கும். இள வயது எனில் ஆச்சுனு பண்ணிடுவாங்க. என் கடைசி ஓர்ப்படி இறந்தப்போ நாங்க வைதீகக் காரியங்களை மட்டும் மைத்துனனை வைத்து விடாமல். இல்லைனா வைதிகக் காரியங்கள் மட்டுமே.
நீக்குவார்த்தைகள் விடுபட்டிருகின்றன. காப்பி, பேஸ்ட் பண்ணியதில் முன்னர் எழுதின பகுதி கிடைக்கலை.
நீக்குஆனாலும், உட்கருத்து புரிகிறது.
நீக்குஇங்கே கனடாவில் சமீபத்தில் பஞ்சவடி என்னும் ஒரு இந்தியன் ஸ்டோர்ஸுக்குச் சென்ற பொழுது Coconut sugar என்று ஒரு பாட்டிலை பார்த்தேன். வாங்காததால் சுவைக்க முடியவில்லை.
பதிலளிநீக்குதேங்காய் பர்பியோ?
நீக்குஹாஹாஹா இல்லை கௌ அண்ணா, பீட் ரூட் சுகர்னு எல்லாம் வருவது போல, கோக்கனட் சுகர்னு வருது பௌடராக இருக்கும் brown நிறத்தில் ப்ரௌன் சுகர் போன்று. coconut palm sugar என்று பனைவெல்லம் போன்றே தயாரிக்கறாங்க.
நீக்குகீதா
வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தக் கூடாதுன்னு சர்க்கரைவியாதிக்காரங்களுக்குச் சொன்னதும், வெல்லம் பனைவெல்லம் / சர்க்கரை நல்லது, கோகோனட் சர்க்கரை நல்லது, தேன் நல்லதுன்னு சும்மானாலும் மார்க்கெட்டில். இது எதுவுமே சர்க்கரைவியாதிக்காரங்களுக்கும் சரி, உடல் வெயிட் ஏறாம பார்ப்பவங்களுக்குமம் இருக்கறவங்களுக்கும் சரி நல்லதில்லை
நீக்குகீதா
தகவல்களுக்கு நன்றி.
நீக்கு//இது எதுவுமே சர்க்கரைவியாதிக்காரங்களுக்கும் சரி, உடல் வெயிட் ஏறாம பார்ப்பவங்களுக்குமம் இருக்கறவங்களுக்கும் சரி நல்லதில்லை// கீதா ரங்கன் க்கா என்ன சொல்றாங்கன்னா, இவையுமே சிற்றின்பங்கள்தாம். அதனை விட்டுவிட்டு பேரின்பத்தை நோக்கிச் செல்லுங்கள் என்கிறார் (அப்படியா?)
நீக்குஹாஹாஹா நெல்லை, இந்த உலகில் வாழும் வரை, நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்ந்தாலே பே......................ரின்பம் தானே! சொல்லுங்க.
நீக்குகீதா
பம் பம் பம் ஆரம்பம், ..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த சீன் படத்தில் வந்த சில நொடிகளையே நம்மால் சகிக்க முடியவில்லை. ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்திலும் இப்படி ஆண்கள் ஆட வந்தால் வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்! //
பதிலளிநீக்குசிரித்து முடியலை!!!!!
கீதா
:))) இரசிப்புக்கு நன்றி!
நீக்குஇது என்ன Racist commentஆ இருக்கு. பெண்கள் ஆடினால் அழகு, ஆண்கள் ஆட்டம் போட்டால் அசிங்கம் என்று சொல்வது போல இருக்கே
நீக்கு:))) It is appreciation.
நீக்குநெல்லை, ஏ ஐ உட்படுத்தி கதைகள் வேணா எழுதலாம். எழுதியதுண்டு. மற்றபடி டெக்னிக்கல் சாமாச்சாரங்கள் பதிவு எழுதினால் கொட்டாவிதான் வரும்.
பதிலளிநீக்குஇந்த பாக், இந்தியா டென்ஷன் என்னைப் பாடாய்படுத்துகிறது. அன்னிக்கு தீவிரவாதிகள் மக்களைச் சுட்டுக் கொன்னாங்க...மனித உயிர்கள்னு சொல்லறோம். இப்ப போர்னு வந்தாலும் மனித உயிர்கள்தானே போகப் போகின்றன குறிப்பாக அப்பாவி மக்கள், குழந்தைகள் என்று. அன்னிக்கு 26 அல்லது 29 இப்ப இதை விடக் கூடுதல் உயிர்கள் இல்லையா? போர் னாலே பதைப்புதான்.
ஏ ஐ ஏ ஐன்னு என்னெத்துக்கெல்லாமோ பய்ன்படுத்தும் போது அதே ஏ ஐ யை போருக்குப் பயன்படுத்தினாலோன்னு!!!!! யோசனை ஓடுகிறது. இது எப்படி வொர்க்கவுட் ஆகும்...என்று பல சிந்தனைகள்!
கீதா
பயங்கரவாதிகள் தாக்கியது அப்பாவி இந்தியர்களை. இந்தியா இதுவரை தாக்கியுள்ளது பயங்கரவாதிகளை மட்டுமே.
நீக்குதி/கீதாவின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பலரும் மதச்சார்பின்மை என்னும் பெயரில் தீவிரவாதிகளுக்கும் பரிவு காட்டுவது சரியில்லை. இந்த மதச் சார்பின்மை என்னும் வார்த்தையையே எடுத்துடணும். சாப்பிட்டுக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்! பாவம், என்ன பாவம் செய்தார்கள்?
நீக்குஆம், இப்போ நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது :((
நீக்கு& டெக்னிகல் சமாச்சாரங்கள் பிளாக் பதிவுகளில் எடுபடாது. பிளாக் படிப்பவர்கள் பெரும்பாலோர் டைம் பாஸ் செய்ய மட்டுமே பிளாக் பக்கம் வருபவர்கள். இங்கே வகுப்பு நடத்தினால் எல்லோரும் கட் அடித்துவிட்டு ஓடிவிடுவார்கள்!//
பதிலளிநீக்குஅதே அதே கௌ அண்ணா
கீதா
:))) நன்றி.
நீக்குபின் குறிப்பு 1: ' சரவணபவன் சாம்ராஜ்யத்தையே வீழ்த்திய ஜீவஜோதி' என்பது தவறு. சரவண பவனை வீழ்த்தியது அந்த அதிபரின் பெண்ணாசை. //
பதிலளிநீக்குசூப்பர் சூப்பர்!!!!!! அதேதான்.
கீதா
நன்றி.
நீக்குபாண்டிச்சேரி படங்கள் எல்லாமே அருமை. அதிலும் அந்தப் படகு இருக்கும் படம், கடைசிப்படம் சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
நன்றி, நன்றி!
நீக்குகேள்விபதில்கள் நன்று.
பதிலளிநீக்குஉலக அழகிகள் ரசனை. பகிர்ந்தது எல்லாம் பழைய உலக அழகிகள் :))
பாண்டிச்சேரி கடல் படங்கள் அருமையாக உள்ளன.
பாராட்டுக்கு நன்றி!
நீக்குபாண்டிச்சேரிக்குப் போகலையேனு ஆதங்கம் வரும் படங்கள். மற்றபடி எனக்கு ஐஸ்வர்யா ராயை விடவும் வேறு சில பெண்களின் அழகு கண்ணையும் கருத்தையும் கவர்ந்திருக்கிறது. நளினம், நளினம் என்பார்களே அந்த நளினம் ஐஸ்வர்யா ராயிடம் இல்லை எனத் தோன்றும், அந்த அசாத்திய உயரமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
பதிலளிநீக்குஆம்!
நீக்குபெண் பார்த்தல் என்னும் நிகழ்வு 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இல்லை எனலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. பெண்ணும் பிள்ளையும் பேசி முடிவு செய்து விட்டுப் பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்கிக் கொண்டு திருமணம் நடக்கிறது. முன்னெல்லாம் திருமண ஏற்பாடுகளில் பெரியவங்க செய்யறது தான். இப்போல்லாம் பெண்ணின் விருப்பங்கள், பிள்ளையின் விருப்பங்களுக்கு ஏற்பவே நடக்கின்றன.
பதிலளிநீக்குஆம், உண்மை. என் பையனுக்காக நாங்கள் பெண் பார்க்கச் சென்றது, 2005 ஆம் ஆண்டு. கல்யாணம் 2006.
நீக்குகேள்வி, பதில்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபின்னூட்டங்களும் , அதற்கு பதில்களும் நன்றாக இருக்கிறது.
பாண்டிச்சேரி படங்கள் அருமை.
அகக்கடல் அமைதி - ஆனால் அலைகடல் பொங்குகிறது! //
பொன்னியின் செல்வி பாடல் நினைவுக்கு வருகிறது.
கடற்கரையில் நின்று அலையை கால் நனைக்க வரச்சொல்லும் கவிதையும் நன்றாக இருக்கிறது. மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட படமா ? சூரிய வெளிச்சம் தெரிகிறது.
கடல் படங்கள் அருமை..
காலை நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.
நீக்குபாராட்டுக்கு நன்றி.
நீக்குமேக உருவில், சூரியனை மறைத்து செல்பவர் யார்? இலங்கை நோக்கி செல்லும் அனுமனோ ?//
பதிலளிநீக்குஇந்த படமும்,
//ஆரவாரமாக வந்து, கால் நனைத்து கடல் திரும்பும் அலை
கரையில் விட்டுச் செல்லும் நுரைகள் ஆவலோடு காத்திருக்கும்
அடுத்த அலை தங்களை கடலூருக்குத் திரும்ப அழைத்துச் செல்லும் என்று! //
இந்த படமும் அதற்கு எழுத பட்ட வரிகளும் அருமை.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
நீக்குகொஞ்சம்... கொஞ்சமே தான் லேட்டாகிட்டேன்... போன கிழமையே 2 கிளவி சே செ டங்கு ஸ்லிப்பாகுதே கேள்வி வச்சிருந்தேன்.. கேட்க முடியவில்லை... இம்முறை கேட்டிடுவேன்.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் சுவாரஷ்யம், கடல் மேகப் படங்கள் அழகு...
எனக்கு கடலின் அடியிலும்... வானத்துக்கு மேலேயும், புரோகிராம் பார்க்க மிகவும் பிடிக்கும்... பார்த்துக்கொண்டே இருப்பேன்.
நன்றி! நன்றி !!
நீக்குலேட்டாகிட்டேனோ தெரியவில்லையே, லேட் எனில் அடுத்த புதனில் சேருங்கோ கெள அண்ணன்.....
நீக்குஎன்னுடைய கொஸ்ஸ்ஸ்ஸ்சன்ஸ்...
1. இப்போ எங்களுக்கு சில இடத்துக்குப் போனால் மனதுக்கு புத்துணர்வு ஏற்படும், மகிழ்ச்சி கிடைக்கும், எனக்கு சூப்பர்மார்கட், காய்கறிச் சந்தை இப்படி இடங்களுக்குப் போவது மிகவும் பிடிக்கும், றிலாக்ஸ் ஆகவும் இருக்கும் மனதுக்கு, அதனால போய்ச் சுற்றுவது உண்டு... இது பொழுது போக்கல்ல. சிலருக்கு ரெஸ்ரோரண்ட் போய்ச் சாப்பிடுவது,, நண்பர்களோடு அரட்டை... இப்படியான விசயங்கள்..
இப்படி உங்களுக்கு மனதுக்கு மிக மகிழ்ச்சிதரும் விசயம் எது?
2.நீங்கள் பயப்பிடும் விசயம் எது? இப்போ எனக்கு புழு வகை எனில் பயமென்பதில்லை... ஆனா நாடி நரம்பெல்லாம் கூசும் நடுங்கும் தேகம், பார்க்கவே முடியாமல் இருக்கும் எங்காவது படத்தில் பார்த்தால்கூட கண்களை மூடிவிடுவேன்... ஆனா பாம்பு பல்லி ஓணான் எல்லாம் பயமில்லை:)..
அடுத்து மனநலம் குன்றியோர், வெறிகாரர்.. இவர்கள் ரோட்டால வந்தால் நடுங்கி திசைமாறி, பக்கம் மாறி எல்லாம் ஓடியிருக்கிறேன் இப்படி உங்களுக்கு???
3. என் மனதில் இருந்த கேள்விதான் ஆனா இப்போ நெ தமிழனின் போஸ்ட்டால இன்னும் நினைவாகி உடனே கேட்டிடலாமே என நினைக்கிறேன்...
இந்த இந்து சமயமும் சைவ சமயமும் ஒன்றா?, நம் சமயத்தில் உங்களுக்கு தெரிந்து என்ன என்ன சமயங்கள் உள்ளன அதாவது வைஸ்ணவம், சமண சமயம் இப்படியானவற்றைக் கேட்கிறேன்....
இப்போ கிறிஸ்தவ மதம் எனப் பொதுவாகச் சொல்கின்றனர், அதனுள் பல பிரிவுகள் உண்டு, அதுபோல இவற்றுக்குப் பொதுவான சொல் எது? இதில் எனக்கு தடுமாற்றம் உண்டு? இந்து சமயம் என்பதா சைவம் என்பதா என... இதுபற்றி கொஞ்சம் விளக்கம் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.