நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
9.5.25
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி
1985 ல் பாரதிராஜா முதல் மரியாதையைத் தொடங்கியபோது அந்தப் படம் இவளவு பெரிய வெற்றியைப் பெற்று பேசுபொருளாகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.
மேக்கப் இல்லாமல் சிவாஜியை இயல்பாக நடிக்க விட்டு ஒரு புதிய பாணியை உருவாக்கினார் பாரதிராஜா. இந்தப் படம் சுத்தமாக நன்றாக இல்லை, ஜெயிக்காது என்று இளையராஜா, வைரமுத்து இருவரும் நம்பினாலும், படத்தில் தங்கள் பங்கை செவ்வனே செய்ய மறக்கவில்லை என்பதை பாரதிராஜா அவர்களிடமே கேட்டிருந்திருக்கிறார்.
சிவாஜி பாத்திரத்தில் முதலில் ராஜேஷும், பின்னர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் எஸ் பி பாலசுப்ரமணியமும் யோசிக்கப்பட்டு, SPB க்கு தேதிகள் இல்லாத காரணத்தால் சிவாஜியை அணுகி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சிவாஜி சொல்லி இருந்ததையும் எல்லோரும் அறிவீர்கள்.
இன்று இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள். மலேஷியா வாசுதேவன், எஸ் ஜானகி பாடிய பாடல்கள். வைரமுத்து பாடல்கள். இளையராஜா இசை.
இந்தப் படத்தில் SPB பாடல் எதுவும் பாடவில்லை என்பதும் ஒரு செய்தி.
முதல் பாடல் கரகரப்ரியா ராகத்தில் அமைந்த 'பூங்காற்று திரும்புமா..'
வாங்க ஜீவி ஸார்.. இத்தனை நாட்கள் இவை தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதைத் தேடுவதும் எளிது. கூகுளில் தேடினால் விளக்கம் கொடுத்து விடும். இது கீழே விளக்கம் தேடிக் கொடுத்திருக்கிறேன்.
வளர் பருவங்களின் விளக்கம்:
பிள்ளை பருவம்: இது ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 6 வயது வரை உள்ள காலம். இந்த காலத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சி மிகவும் தீவிரமாக இருக்கும். வளரிளம் பருவம் (விடலைப் பருவம்): இது 10 வயது முதல் 19 வயது வரையிலான காலம். இந்த காலத்தில் உடல் மற்றும் மன ரீதியான பல மாற்றங்கள் நிகழும். நடுத்தர வயது: இது 20 வயது முதல் 60 வயது வரையிலான காலம். இதில், ஒருவரின் முழு வளர்ச்சி அடைந்திருக்கும் காலம் எனலாம். முதுமை: இது 60 வயதுக்கு மேற்பட்ட காலம். இதில், உடல் மற்றும் மன ரீதியான சில மாற்றங்கள் ஏற்படும்.
ஆண்களின் பருவங்கள்:
பாலன் (1-7 வயது): முதல் பருவமாக இது கருதப்படுகிறது. மீளி (8-10 வயது): இது பாலனைத் தொடர்ந்து வரும் பருவமாகும். மறவோன் (11-14 வயது): இது மீளிக்குப் பிறகு வரும் பருவமாகும். திறவோன் (15 வயது): இது மறவோனுக்குப் பிறகு வரும் பருவமாகும். விடலை (16 வயது): இது திறவோனுக்குப் பிறகு வரும் பருவமாகும். காளை (17-30 வயது): இது விடலைக்குப் பிறகு வரும் பருவமாகும். முது மகன் (30 வயதுக்கு மேல்): இது காளைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
பெண்களின் பருவங்கள்:
பேதை (5-7 வயது): இது பெண்களின் முதல் பருவமாகும். பெதும்பை (8-11 வயது): இது பேதைக்குப் பிறகு வரும் பருவமாகும். மங்கை (12-13 வயது): இது பெதும்பைக்குப் பிறகு வரும் பருவமாகும். மடந்தை (14-19 வயது): இது மங்கைக்குப் பிறகு வரும் பருவமாகும். அரிவை (20-25 வயது): இது மடந்தைக்குப் பிறகு வரும் பருவமாகும். தெரிவை (26-31 வயது): இது அரிவைக்குப் பிறகு வரும் பருவமாகும். பேரிளம்பெண் (32-40 வயது): இது தெரிவைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
வளர் பருவங்களின் முக்கியத்துவம்: வளர் பருவங்கள் ஒருவரின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த பருவங்களில், ஒருவரின் தனித்தன்மையும், திறமைகளும் வெளிப்படும். மேலும், இந்த பருவங்களில் ஒருவரின் கல்வி, வேலை மற்றும் உறவுகள் போன்ற பல விஷயங்களும் தீர்மானிக்கப்படும்.
ஸ்ரீராம்.... பேரிளம்பெண் - 32-40 வயது ஓகே. அதற்குப் பிறகு பெண்களுக்கு வயது வாரியாக எந்தப் பகுப்பும் கிடையாதா? ஆண்கள் 30 வயசு ஆயிடுச்சுனா முதுமகன் ஆயிடறானா? அதான் சின்னப் பசங்க, எல்லோரையும் வகை தொகை இல்லாமல் 'பெரிசு' என்ற கேடகரியில் அடக்கிடறாங்களா?
சிவாஜி சிவாஜியாக நடிக்காமல் சும்மா பக்கத்து வீட்டு மனிதர் போல் வந்துட்டுப் போகும் இந்தப் படத்துக்கு நிகரில்லை எனலாம். எத்தனை முறை பார்த்திருக்கேனோ இந்தப் பாடல்களுக்காகவே. இதில் தான் சிவாஜி நடிக்காமல் வாழ்ந்திருக்கார்.
நெஞ்சிருக்கும் வரை சின்னமனூரில் பார்த்தேன். மூன்று தெய்வங்கள் கல்யாணம் ஆனப்புறமா அயனாபுரம் சயானியில் பார்த்தோம் என் கடைசி நாத்தனார் முதல் முதலாகச் சென்னைக்கு வந்திருந்தப்போக் கூட்டிப் போனோம்.
மனதில் பதிந்த இந்த இரண்டு பாடல்களைப் பற்றி எழுதுவதற்கு முன்,
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மா மானே அல்லது வா மானே என்றுதானே கேட்ட நினைவு, இல்லைனா பாடும்போது பிழை வருமே என யோசித்துப் பாடலைத் திரும்பக் கேட்டேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
படம் நூறு நாட்களைத் தாண்டியது. கஷ்டப்பட்டு தாண்டியதுபோல, நூறாவது நாள் போஸ்டரில் சிவாஜி பாறாங்கல்லை (இளவட்டக்கல்) கஷ்டப்பட்டுத் தூக்கும் படத்தைப் போட்டிருந்தார்கள்.
மறக்க முடியாத திரைப்படம்! சிவாஜி ராதா காதலை ரசிக்கவே நிறைய பேர் திரும்பத்திரும்ப இந்தப் படம் பார்க்கச் சென்றார்கள்! அப்போதெல்லாம் வீடியோ ரெகார்டர் வசதி உண்டு. சிவாஜி ராதா காட்சிகளை மட்டும் எடிட் செய்து நானும் என் தோழிகளும் திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறோம்!! என் அக்கா கணவர் சிவாஜி போலவே ஊர் நாட்டாண்மை-தோற்றமும் சிவாஜி மாதிரியே! இந்தப்படம் வெளிவந்த போது என் அக்கா கணவர் இறந்து போனார். இந்தப்படத்தை, அதன் காட்சிகளைப்பார்க்கும்போதெல்லாம் என் அக்கா கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகி விட்டன இந்தப்படம் வெளி வந்து!!
வெடல புள்ள-ன்னா?
பதிலளிநீக்குadolescent.
நீக்குதமிழில்?
நீக்குவாங்க ஜீவி ஸார்.. இத்தனை நாட்கள் இவை தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதைத் தேடுவதும் எளிது. கூகுளில் தேடினால் விளக்கம் கொடுத்து விடும். இது கீழே விளக்கம் தேடிக் கொடுத்திருக்கிறேன்.
நீக்குவளர் பருவங்களின் விளக்கம்:
பிள்ளை பருவம்:
இது ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 6 வயது வரை உள்ள காலம். இந்த காலத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சி மிகவும் தீவிரமாக இருக்கும்.
வளரிளம் பருவம் (விடலைப் பருவம்):
இது 10 வயது முதல் 19 வயது வரையிலான காலம். இந்த காலத்தில் உடல் மற்றும் மன ரீதியான பல மாற்றங்கள் நிகழும்.
நடுத்தர வயது:
இது 20 வயது முதல் 60 வயது வரையிலான காலம். இதில், ஒருவரின் முழு வளர்ச்சி அடைந்திருக்கும் காலம் எனலாம்.
முதுமை:
இது 60 வயதுக்கு மேற்பட்ட காலம். இதில், உடல் மற்றும் மன ரீதியான சில மாற்றங்கள் ஏற்படும்.
ஆண்களின் பருவங்கள்:
பாலன் (1-7 வயது):
முதல் பருவமாக இது கருதப்படுகிறது.
மீளி (8-10 வயது):
இது பாலனைத் தொடர்ந்து வரும் பருவமாகும்.
மறவோன் (11-14 வயது):
இது மீளிக்குப் பிறகு வரும் பருவமாகும்.
திறவோன் (15 வயது):
இது மறவோனுக்குப் பிறகு வரும் பருவமாகும்.
விடலை (16 வயது):
இது திறவோனுக்குப் பிறகு வரும் பருவமாகும்.
காளை (17-30 வயது):
இது விடலைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
முது மகன் (30 வயதுக்கு மேல்):
இது காளைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
பெண்களின் பருவங்கள்:
பேதை (5-7 வயது):
இது பெண்களின் முதல் பருவமாகும்.
பெதும்பை (8-11 வயது):
இது பேதைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
மங்கை (12-13 வயது):
இது பெதும்பைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
மடந்தை (14-19 வயது):
இது மங்கைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
அரிவை (20-25 வயது):
இது மடந்தைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
தெரிவை (26-31 வயது):
இது அரிவைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
பேரிளம்பெண் (32-40 வயது):
இது தெரிவைக்குப் பிறகு வரும் பருவமாகும்.
வளர் பருவங்களின் முக்கியத்துவம்:
வளர் பருவங்கள் ஒருவரின் உடல், மன மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த பருவங்களில், ஒருவரின் தனித்தன்மையும், திறமைகளும் வெளிப்படும். மேலும், இந்த பருவங்களில் ஒருவரின் கல்வி, வேலை மற்றும் உறவுகள் போன்ற பல விஷயங்களும் தீர்மானிக்கப்படும்.
ஸ்ரீராம்.... பேரிளம்பெண் - 32-40 வயது ஓகே. அதற்குப் பிறகு பெண்களுக்கு வயது வாரியாக எந்தப் பகுப்பும் கிடையாதா? ஆண்கள் 30 வயசு ஆயிடுச்சுனா முதுமகன் ஆயிடறானா? அதான் சின்னப் பசங்க, எல்லோரையும் வகை தொகை இல்லாமல் 'பெரிசு' என்ற கேடகரியில் அடக்கிடறாங்களா?
நீக்குஅதற்கு தான் சொல்வது இதையெல்லாம் ரொம்ப ஆராயக்கூடாது!
நீக்குவணக்கம்! முதல் மரியாதையில் மலேஷியா வாசுதேவன் குரல் சிவாஜிக்கு நன்றாக பொருந்தும்.
பதிலளிநீக்குஆம். குறையில்லாமல் இருந்தது.. வாங்க பானுக்கா. வணக்கம்!
நீக்கு//முதல் பாடல் காரகரப்ரியா ராகத்தில் அமைந்த 'பூங்காற்று திரும்புமா..'// இனிப்பு கரபிரயாவும் உண்டா?
பதிலளிநீக்குஎவ்வளவு பார்த்தாலும் ஏதேனும் ஒன்று தப்பி விடுகிறது! காரத்தைக் குறைத்து விட்டேன்!
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க..
வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஏதோ இவர்கள் தான் சிவானியைக் கண்டெடுத்த மாதிரி பேசுவார்கள்..
பதிலளிநீக்குஇதற்கு முன்னரே சில படங்களில் ஒப்பனை இன்றி நடித்துள்ளார்.
அவற்றுள் நெஞ்சிருக்கும் வரை, மூன்று தெய்வங்கள்...
ஆம். நினைவில் இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் மிக இயல்பாக நடித்திருந்தார் நடிகர்திலகம் என்பதையும் மறுக்க முடியாது!
நீக்குசிவாஜி சிவாஜியாக நடிக்காமல் சும்மா பக்கத்து வீட்டு மனிதர் போல் வந்துட்டுப் போகும் இந்தப் படத்துக்கு நிகரில்லை எனலாம். எத்தனை முறை பார்த்திருக்கேனோ இந்தப் பாடல்களுக்காகவே. இதில் தான் சிவாஜி நடிக்காமல் வாழ்ந்திருக்கார்.
நீக்குநெஞ்சிருக்கும் வரை சின்னமனூரில் பார்த்தேன். மூன்று தெய்வங்கள் கல்யாணம் ஆனப்புறமா அயனாபுரம் சயானியில் பார்த்தோம் என் கடைசி நாத்தனார் முதல் முதலாகச் சென்னைக்கு வந்திருந்தப்போக் கூட்டிப் போனோம்.
நீக்குரசிக்கத் தக்க பதிவு..
பதிலளிநீக்குநன்றி செல்வாண்ணா.
நீக்குமனதில் பதிந்த இந்த இரண்டு பாடல்களைப் பற்றி எழுதுவதற்கு முன்,
பதிலளிநீக்குவேருக்கு வாசம் வந்ததுண்டோ மா மானே அல்லது வா மானே என்றுதானே கேட்ட நினைவு, இல்லைனா பாடும்போது பிழை வருமே என யோசித்துப் பாடலைத் திரும்பக் கேட்டேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
இல்லை.
நீக்குஇரண்டு மா வோ வா வோ வராது.
அந்த இடத்தில் மலேஷியா வாசுதேவன் குரலைக் குழைத்து வளைக்கிறார்.
படம் நூறு நாட்களைத் தாண்டியது. கஷ்டப்பட்டு தாண்டியதுபோல, நூறாவது நாள் போஸ்டரில் சிவாஜி பாறாங்கல்லை (இளவட்டக்கல்) கஷ்டப்பட்டுத் தூக்கும் படத்தைப் போட்டிருந்தார்கள்.
பதிலளிநீக்குஇருநூறு நாட்கள் ஓடிய சில்வர் ஜூப்லி படம். விக்கி தகவல்.
நீக்குஇந்தப் படத்தை மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கில், மூன்று நாள் தொடர்ந்து பார்த்தேன் (எம்.எஸ்.ஸி இண்டர்னல் எக்ஸாமுக்கு தயாராகாமல்)
நீக்குநான் சினிப்ரியாவில் பார்த்ததாக ஞாபகம். ஒருமுறைதான் பார்த்தேன்.
நீக்குநான் தொலைக்காட்சியில் தான் முதல்/கடைசி எல்லாத் தரமும் பார்த்தேன். :)
நீக்குஇந்தப் பாடல்களின், ஏன் படத்தில் உள்ள எல்லாப் பாடல்களின் இனிமை பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன? நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஉண்மைதான். சிறு சிறு பாடல்களும் உண்டு - நாட்டுப்பாடல்கள், எசப்பாட்டு போல. இளையராஜா அனுபவித்து போட்டிருப்பார்.
நீக்குஇந்த இளையராஜா..... மிகச் சாதாரண பின்னணியிலிருந்து எப்படி இவ்வளவு ஞானம், திறமை பெற்றார்? பூர்வ ஜென்ம புண்ணியம் என்பது இதுதானோ?
நீக்குகடவுள் அருள் இன்றி வேறு என்ன? அவரும் அதைத்தான் சொல்வார். எப்படி வருகிறது என்று எனக்கு தெரியாது அதுவாக வந்து விடும் என்பார்.
நீக்குமறக்க முடியாத திரைப்படம்! சிவாஜி ராதா காதலை ரசிக்கவே நிறைய பேர் திரும்பத்திரும்ப இந்தப் படம் பார்க்கச் சென்றார்கள்! அப்போதெல்லாம் வீடியோ ரெகார்டர் வசதி உண்டு. சிவாஜி ராதா காட்சிகளை மட்டும் எடிட் செய்து நானும் என் தோழிகளும் திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறோம்!!
பதிலளிநீக்குஎன் அக்கா கணவர் சிவாஜி போலவே ஊர் நாட்டாண்மை-தோற்றமும் சிவாஜி மாதிரியே! இந்தப்படம் வெளிவந்த போது என் அக்கா கணவர் இறந்து போனார். இந்தப்படத்தை, அதன் காட்சிகளைப்பார்க்கும்போதெல்லாம் என் அக்கா கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகி விட்டன இந்தப்படம் வெளி வந்து!!
வாங்க மனோ அக்கா.... என்ன என்ன நினைவுகளை எல்லாம் கொண்டு வருகிறது பாடல்கள்! மறக்க முடியாத நினைவுகள் தான். நன்றி.
நீக்குபடம் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்ட படம்.
பதிலளிநீக்குபாடல்களும் அருமையாக இருக்கும்.
இன்றைய பாடல்பகிர்வுக்கு நன்றி.
இப்போதும் பேசப்படும் படம் தான். நன்றி மாதேவி.
நீக்குநாட்டாமையார் செய்வதை அவரோட வீட்டுக்கார அம்மா செய்திருந்தால்?..
பதிலளிநீக்குபடத்திலா, நிஜத்திலா?
நீக்குபாடல் இரண்டும் அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குமலேஷியா வாசுதேவன் நல்ல பாடகர்.
வாங்க கோமதி அக்கா.. வணக்கம். மலேஷியா வாசுதேவ'னும்' நல்ல பாடகர்! அவரை புகழ்பெறச் செய்தது இளையராஜாதான்.
நீக்குவளர் பருவங்களின் விளக்கம் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்கு