நெல்லைத்தமிழன்:
1. கோடை காலம்னு சொல்றீங்களே... பாலைவனமுள்ள நாட்டிற்கு கோடைக்காலமேது, குளிர்காலமேது? அங்க பெரும்பாலும் பகல்ல கோடையாகவும் இரவில் குளிர்காலமாகவும்தானே இருக்கும்?
# நம்ம ஊரு பாலைவனம் அமைப்பின் கோடை காலம் என்று குறிப்பாக எதையும் சொல்ல மாட்டோம் என்பது சரிதான்.
2. ஐயோ.. வெயில் காலம் வரப்போகுதே என்று கவலைப்பட முக்கியக் காரணங்கள் என்னவாயிருக்கும்? ஆஹா வெயில் காலம் வந்துவிட்டதேன்னு சந்தோஷமடைய முக்கியக் காரணங்கள் என்னவாயிருக்கும்?
# கோடை காலத்தை கண்டு கலக்கம் அடைவதன் காரணம் சூடு வியர்வை. ஏசி காரணமாக அதிக மின்சார கட்டணம். மின்வெட்டு சமயத்தில் ஏற்படும் சங்கடம்.
கோடையை வரவேற்கக் காரணம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அதை முன்வைத்து மேற்கொள்ளப்படும் உல்லாசப் பயணம். நண்பர்கள் உறவினர்களின் சந்திப்பு.
& "ஐயோ.. வெயில் காலம் வரப்போகுதே!": ஸ்வெட்டர் வியாபாரிகள்!
"ஆஹா வெயில் காலம் வந்தாச்சு!": கோடையில் ஐஸ் கிரீம் ருசிப்பவர்களும், ருசிப்பவர்களை ரசிப்பவர்களும்!
3. உங்களுக்குப் பிடித்தது மழைக்காலமா, குளிர்காலமா இல்லை கோடைக்காலமா?
# எனக்குப் பிடித்தது குளிர்காலம்தான். காரணம் செலவில்லாமல் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம். ஏசி மின்விசிறி குளிர்பானம் என்று எந்தச் செலவும் இல்லை.
& சென்னை குளிர்காலமும், பெங்களூரு கோடைக்காலமும்!
கீதா சாம்பசிவம் :
சொந்த அண்ணா, தம்பி, அக்கா, தங்கை உறவெல்லாம் திருமணம் வரை இருக்கும் நெருக்கம் அவரவர் குழந்தைகள் என்றான பின்னர் விரிசல் ஏற்படுவது ஏன்? என்னளவில் சகோதரர், குழந்தைகளுடன் நெருக்கம் காட்டினாலும் அவங்க நெருங்குவது இல்லை. இதுவும் கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு!
# அந்தக்காலத்தில் குடும்பம் இந்த அளவு விரிவடையவில்லை. மேலும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் எல்லாரும் இருந்தார்கள். இப்போது போல அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று குடிபோகவில்லை. கோடை விடுமுறை என்று வந்தால் எல்லாரும் கூடி உல்லாசமாக இருந்த காலம். இப்போது அதற்கான வசதி வாய்ப்பு இல்லை என்று ஆனபின் நெருக்கம் எப்படி வரும் ?
& காலம் மாறும்போது, கண்ணோட்டங்களும், values மாறுவதும் சகஜம்தான்!
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சமயம் செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்படுகின்றனர். உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா?
# எல்லாருக்கும் அந்த அனுபவம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. ஆனால் சின்ன வயதில் அற்பக் காரணங்களுக்காக மிகச் சாதாரணமான தண்டனை. கேட்டதால் நினைவுக்கு வந்தது. மற்றபடி உறுத்தல் இல்லாத சம்பவங்கள்.
& ஒன்றா இரண்டா - நிறைய தண்டனைகள் சிறு வயதில் அனுபவித்துள்ளேன்.
ஆரம்பப் பள்ளி நாட்களில் நான் செய்யாத தவறுகள் பலவற்றிற்கும் பயங்கரமாக தண்டனை அனுபவித்துள்ளேன்.
நான் அப்படி ' செய்யாத தவறுகள்' இவைகள்தான்:
1) வீட்டுக் கணக்கு செய்யாதது.
2) வீட்டுப் பாடங்கள் எழுதாதது.
3) உண்மைகள் சொல்லாதது.
4) பரிட்சையில் அதிக மார்க் வாங்காத தவறு.
குறைந்த பட்ச தண்டனை : பெஞ்சு மேலே ஏறி நிற்பது.
அதிக பட்ச தண்டனை : பெஞ்சு மேலே ஏறி நின்று, அதிக மார்க் அல்லது முதல் மார்க் வாங்கிய மாணவி சந்திரலேகாவிடம், ஆசிரியர் சொல்படி குட்டு வாங்கியது.
சென்னை உங்களைக் கவர்ந்தது உண்டா? இப்போது சென்னையில் இல்லை என்பதால் வருத்தம் இருக்கா?
# சென்னை கவர்ந்தது உண்டு. இப்போது இல்லை. உறவுகள் பலர் இருக்கும் இடம் என்பதால் இன்றும் ஈர்ப்பு உண்டு. சூடு அழுக்கு அதிகம் இல்லாத பெங்களூர் பிடித்திருக்கிறது. இங்கும் குப்பை மேடுகள் உண்டு - ஆனால் அருகில் இல்லை.
& அந்தக் காலத்தில் சென்னை என்னைக் கவர்ந்த நாட்கள் : சென்னை இசைவிழா நாட்கள். இப்போது சென்னையில் இல்லையே என்னும் வருத்தம் எதுவும் இல்லை.
= = = = = = = = = = = =
நெல்லைத் தமிழன் கேட்டுள்ள பல கேள்விகள் & கே சக்ரபாணி கேட்டுள்ள சில கேள்விகளுக்கு பதில்கள், அடுத்த வாரம்.
= = = = = = = = = = =
KGG பக்கம் :
மே மாதத்து புகைப்படப் போட்டி - 'கோடை காலம்'
இந்த மாதத்துப் போட்டிக்கு 26 + 4 படங்கள் வந்துள்ளன.
கடந்த மூன்று போட்டிகளில், ஒவ்வொருவரிடமிருந்தும் வந்த படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டேன்.
இந்த மாதம் அப்படிச் செய்யவில்லை.
ஒருவரிடமிருந்தே 5 படங்கள் வந்திருந்தால், அவைகளை தொடர்ச்சியாக வெளியிடாமல், random numbers கொடுத்து வெளியிட்டுள்ளேன்.
வாசகர்கள் ஒவ்வொருவரும் எல்லா படங்களையும், நிறுத்தி, நிதானமாக, ஒவ்வொன்றாகப் பார்த்து, 'கோடை காலம்' என்ற தலைப்பிற்குப் பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு வோட்டுப் போடலாம்.
உங்களுக்குப் பிடித்த படங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் வோட்டுப் போடலாம்.
உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நீங்க வோட்டுப் போடலாம்.
உதாரணமாக :
என்னுடைய (kgg அல்ல ) வோட்டு : 405, 407, 409, 413, 419, 423, 425.
என் உதவியாளரின் வோட்டு : 401, 402, 406 ..
ஆனால், பொய் / கள்ள வோட்டுகள் வேண்டாம்! நிஜமாகக் கேட்டு, வோட்டு பதிவு செய்யுங்க!
ஒருவர் அதிகபட்சமாக 15 படங்களுக்கு வோட்டுப் போடலாம்.
ஆரம்பியுங்க வாக்குப் பதிவை!
இதோ - போட்டிக்கு வந்த படங்கள் :
சந்தேகங்கள் எதுவும் இருந்தால் கருத்துரைப் பகுதியில் கேட்கவும்.
= = = = = = = = = = =
AI மூலம் கிடைக்கும் படங்கள் எப்போதுமே அழகானவர்களை மட்டுமே கொண்டுள்ளதின் காரணம் என்ன? அதனுடைய உலகில் அழகு குறைந்தவர்களே இல்லையா?
பதிலளிநீக்குஅடுத்த புதன் கேள்வியா?
நீக்குஎன்னுடைய வோட் 425, 419, 413, 409, 407.
பதிலளிநீக்குJayakumar
நன்றி.
நீக்குஇந்த வார கேள்வி பதில் உப்பு, இல்லாமல் சப்பென்று இருக்கிறது.
பதிலளிநீக்குஅடுத்த வாரம் அறுசுவைகள் உண்டு.
நீக்கு//பின்னர் விரிசல் ஏற்படுவது ஏன்?// - முன்பு சேர்ந்திருந்தபோது ஒரே குடும்பம் என்ற நிலை. கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரியவர்களின் அறிவுரை, கண்டிப்பு, சேர்ந்தே வாழ வேண்டிய நிதர்சனம். அதனாலும் அடுத்த ஜெனரேஷனும் சேர்ந்தே நட்புடன் இருப்பதேலும் பெரிய பிரச்சனைகள் இல்லை.
பதிலளிநீக்குதனிக்குடித்தனம் எனும்போது மற்றவர்களைச் சாராததால் மனவேற்றுமை வருகிறது, குடும்ப அரசியல் நுழைகிறது. பொறாமை, பொய் எல்லாம் எட்டிப்பார்க்கிறது. தனிக்குடும்பம் என்றானபின் பணம் வசதி வாய்ப்பு, முன்னுரிமை பெறுகிறது
நல்ல கருத்து
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் ஷண்முகா
நீக்குகேள்வி பதில்கள் சிறப்பு
பதிலளிநீக்குநன்றி; வோட்டுப் போடவும்.
நீக்குகுவைத் நாட்டின் குளிரும் கோடையும் மறக்க இயலாதது
பதிலளிநீக்குஓ ! அப்படியா!
நீக்குஉறவுகளில் விரிசல் என்பதை விட பிளவு என்பதே சாலச் சிறந்தது..
பதிலளிநீக்குஅப்படியும் சொல்லலாமோ?
நீக்குஅப்படிச் சொல்லமுடியாது. நீர் அடித்து நீர் விலகாது என்று சொல்வதுபோல, விரிசல், ஏதேனும் விழாக்களில், குடும்ப நிகழ்வுகளில், துக்கத்தில் ஒன்று சேர்ந்துவிட வைக்கும். பிளவு என்பது நிரந்தரமாகப் பிளவுபடும். பொதுவா உறவுகளில் நிரந்தரப் பிளவு இருக்க வாய்ப்புகள் குறைவு
நீக்குகுளிர்தான் பிடித்த சீசன். மழைக்காலமும் ரொம்பப் பிடிக்கும் ஆனால் ரோட்டில் தண்ணீர் தேங்கக் கூடாது.
பதிலளிநீக்குஎனக்கு எப்பவுமே சென்னையின் மீது ஈர்ப்பு இருந்ததில்லை. இயற்கை சூழ் எங்கள் ஊர் ரொம்பப் பிடிக்கும், அருகில்தான் கேரளம்.
இப்போது பெங்களூர் பிடித்திருக்கிறது. ஆனால் என் உறவினர்கள் சென்னையில் ரொம்ப மிஸ் செய்வது மட்டும்தான் குறை.
கீதா
//மழைக்காலமும் ரொம்பப் பிடிக்கும் ஆனால் ரோட்டில் தண்ணீர் தேங்கக் கூடாது.// எனக்கும் மழை பிடிக்கும். ஆனால் அது தரையில் விழக்கூடாது ஹா ஹா ஹா
நீக்குபனிப் பொழிவு வேண்டுமானால் நம்மூரில் தரைத் தொடாமல் போகலாம். மழையும், வெய்யிலும் அவ்விதம் ஒத்துழைக்குமோ.?
நீக்கு//குளிர்தான் பிடித்த சீசன். // எனக்கும் குளிர் பிடித்த சீசன். ஆனால் வீட்டில் இருக்கும்போது அனுபவிக்கமுடியும் (பெண்களால் முடியாது). பயணத்தில் இருக்கும்போது, இன்னும் ஒரு நாலு மணி நேரம் தூங்கலாம் என்று நினைக்கமுடியாது. காலையில் 4 மணிக்குள் எழுந்துகொள்ளவேண்டியிருக்கும்.
நீக்குகமலா ஹரிஹரன் மேடம் வெயில் பற்றிச் சொன்னதும் என் நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி பயணத்தின்போது (வெயிலில்) மனைவி குனிந்துகொண்டு என் பின்னால் ஒடுங்கி ஒடுங்கி வந்தாள். ஏன் அப்படி வர்றே என்று கேட்டதற்கு, அப்ப்பா.. என்ன வெய்யில். உங்கள் நிழலில் ஒடுங்கி வர்றேன் என்றாள்.
நெல்லை குளிரை அனுபவிக்க வேண்டும் என்றால் தூங்கக் கூடாது!!!!! ஹாஹாஹா...அதில் நாம் அனுபவித்து நடக்க வேண்டும். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும்.
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. ரசித்தேன். முன்பு போல உறவுகள் சேர்ந்து வாழாமைக்கு, காரணம் மாறி வரும் உணவுகள் மட்டுமல்ல . அவரவர்களுடைய சுதந்திர எண்ணங்கள் செயல்படாமல்/ செயல்படுத்தமுடியாமல் போகிறதே என்ற சுதந்திர வேட்கையும் அடுக்கடுக்காக அடுக்கு மாடி குடியிருப்பில் கொண்டு போய் விடுகிறது. அன்பு தேய்ந்து, சிமிண்ட் கற்களுடன் பயணித்து நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. பாரதி இப்போது இருந்திருந்தால், "எங்கெங்கும் காணினும் அப்பார்ட்மெண்ட்டடா" என்று பாடியிருப்பார். அந்தளவிற்கு குடுபத்திற்கிடையே பிரிவினைகள் வந்ததற்கு மக்களின் சுயநலன்கள் முக்கிய காரணம்.
மற்ற கேள்வியும், அதற்குரிய பதில்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோடை, மழை, குளிர் என எந்த காலமுமே நம் உடம்பு தாங்குபடியான அளவுடன் இருந்தால் நன்றாக இருக்கும். இப்போது தீடிரென பல வருடங்களுக்குப் பின் இந்த கோடையில் பெய்த மழை கோடை வெப்பத்தை குறைத்துள்ளது. ஆனால், சற்று அதீதமாக இப்போது பெய்த இந்த மழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது கண்டு மனம் வருந்துகிறது. நாமும் இயற்கையோடு ஒத்துழைத்தால், அதுவும் நம்முடன் ஒத்துழைக்கும் அல்லவா.? தங்கள் பதில்கள் நன்று. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிலளிநீக்குவோட்டு போட வரமாட்டேங்கிறாங்க. ஒரு வேலை வோட்டுக்கு இவ்வளவு என்று சன்மானம் கிடைக்காததாலோ
Jayakumar
ஜெ கே அண்ணா, ஓட்டு இங்குதான் போட வேண்டும் என்று இல்லை. தனிப்பட்ட முறையிலும் கௌ அண்ணாவுக்குத் தெரிவிக்கலாம்.
நீக்குதேர்தல் ஓட்டு போடுவது போல, நாம எந்த நம்பருக்குப் போடுறோம் என்பது தெரியாமலேயே, அந்த நம்பர் படம் அனுப்பியவருக்குத் தெரியாமலேயே!!!
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த மாதம் கோடைகால படங்களுக்கென என் வோட்டு. 407, 408, 415" 416, 421, 424. இந்த தடவையும் போட்டிக்கான நான் என் கைப்பேசியில் எடுத்த சில படங்களை உங்களுக்கு அனுப்ப தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால், என் உடல்நல குறைவால் அவைகளை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப இயலாமல் போய் விட்டது. அடுத்த தேர்வு புகைப்படங்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசிறு வயதில் கோடை விடுமுறையை வரவேற்ற காலம் தாத்தா வீடு , மாமாவீடு பயணம், அடுத்து கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் உறவினர்கள் மற்றும் அவர்கள் கொடுத்து செல்லும் காசுகளை உண்டியலில் போட்டு சேர்த்து வைத்து விரும்பியதை வாங்குவது.
அடுத்து கல்லூரி ஆசிரியரை திருமணம் செய்த பின் விடுமுறை காலத்தை எதிர்பார்த்தேன், விடுமுறை விடும் போதுதான் அம்மாவீடு அத்தை வீடு போக முடியும். இப்போது குழந்தைகள் வரும் காலம் தான் விடுமுறை நாள் கொண்டாட்டம்.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. படத்துடன் ஒரு வரி எழுதி அனுப்பச் சொல்லலாமோ? அது படத்தை நன்கு புரிந்துகொள்ள உதவி செய்யும். சில படங்கள் சொல்வது என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
பதிலளிநீக்குகோடை காலத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் நீரில்லாமல் வறண்டு போய் இருந்த போது பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள் நானும் அதை படம் எடுத்து பதிவு செய்தேன். இப்போது எப்போதும் நீர் நிறைந்து இருக்கிறது.
பதிலளிநீக்குநீரில்லா கோயில் குளங்களை பார்க்கும் போது அவற்றிற்கு நீர் வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டது போல தெரிகிறது, குளத்தை சுற்றி இப்படி வீடுகள் இருக்கும் போது எப்படி நீர் வரும்?
கோடை காலத்தில் அருவியில் தண்ணீர் இல்லை, குளத்தில் தண்ணீர் இல்லை கோடை காலத்தில் மழையும், நீர் நீறைந்த குளமும் , அருவியில் நீரும் இருந்தால் சுற்றுலா சென்று பார்க்க மகிழ்ச்சி.
கோடை படம் அனுப்பியவர்களுக்கு வாழ்த்துகள்.
குற்றாலத்தில் அருவியில் நீர் இல்லாத போதுதான் மலையில் உள்ள சிற்பங்கள் தெரியும்.
பதிலளிநீக்குஇங்கு(கனடாவில்) இன்னும் கோடை துவங்கவில்லை. கோடைக்காலம் என்பதற்கு வற்றல்,வடாம் போடுவதை இங்கிருந்துகொண்டு புகைப்படமாக பகிர முடியாது, சில கோடைக்கால இண்டோர் கேம்ஸ்களை புகபபடமாக எடுக்க நினைத்திருந்தேன்.. செயல்படுத்தவில்லை.
பதிலளிநீக்கு*புகபபடமாக - புகைப்படமாக
நீக்குவெயிலோடு விளையாடி,வெயிலோடு உறவாடிய எனக்கு கோடைக்காலம்தான் புடிக்கும். மழையும் பிடிக்கும். குளிர்...நோ! சென்ற முறை இங்கு வந்தபொழுது பனிப்பொழிவை பார்த்தேன். How fortunate are we to born in India! என்றுதான் தோன்றியது.
பதிலளிநீக்குஎனக்கு பனிப்பொழிவைப் பார்க்க அவ்வளவு விருப்பம். பெண் எப்போ வர்றீங்கன்னு இப்போ கேட்கும்போது, எங்கு பனிப்பொழிவு இருக்குமோ, பனியில் நடக்க முடியுமோ அங்க போறதுக்குத்தான் என் விருப்பம் என்று சொல்லிட்டேன். எனக்கு அதுக்காகவே, 2-3 அடி பனி இருக்கும் கேனடா போகணும்னு ரொம்பவே ஆசை.... (சமீபத்தில் இந்தியா-சீனா எல்லை அருகே பனியில் நடந்தேன்.. திரும்பவும் போகணும் என்ற ஆசை வந்துவிட்டது)
நீக்குவாசகர்கள் மன்னிக்கவும். போட்டிக்கு வந்த படங்களில் மேலும் 4 படங்கள் விட்டுப் போயிருந்தன. அவற்றையும் இப்போது சேர்த்துள்ளேன். அடுத்த புதன் கிழமை வரை எப்போது வேண்டுமானாலும் இந்தப் பதிவின் கருத்துரைப் பகுதியில் வோட்டுப் போடலாம். நன்றி.
பதிலளிநீக்குஎன்னுடைய வோட்டுகளாக,
பதிலளிநீக்கு404, 405, 407, 409, 413, 415, 415, 415, 427, 430
நன்றி.
நீக்குஎன்னுடைய வோட்டுகள் ... 407,408,415
பதிலளிநீக்கு423 மற்றும் 428
நீக்கு