தொஸ்ஸு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொஸ்ஸு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.3.15

'திங்க'க்கிழமை : தொஸ்ஸு



சுடச்சுட விருந்து சாப்பிடப்போகும் அனுபவமே தனிதான்.  குழம்பு என்ன, கூட்டு என்ன, பொரியல் என்ன...  புதிதாய்ச் சமைத்து உடனுக்குடன் சாப்பிடுவது... ஆஹா...

சில சமயங்களில் வீடுகளில் நேற்றைய குழம்பு மிஞ்சி விடும்.  அவற்றை என்ன செய்வது?
தஞ்சையில் நான் படித்த பள்ளியில் ஆறுமுகம் என்று ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார்.  டிராயிங் வகுப்பில் வந்து போர்டில் ஏதாவது ஒரு படத்தை வரைந்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து நிறைய கதை சொல்வார், கதை அடிப்பார்.  சில சமயங்களில் வேறு ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் லீவென்றால் இவரை அனுப்புவார்கள்.  இவர் வந்து கதை சொல்வார்.
இவர் சொன்ன ஒரு சமையல் குறிப்புதான் 'தொஸ்ஸு'.  இது அவரே வைத்த பெயர் என்று நினைக்கிறேன்.
முதல்நாள் செய்து மீந்து போகும் குழம்பு, ரசம், பொரியலை எல்லாம் ஒன்றாகப் போட்டு (பொரியலை எப்போதும் சேர்க்க மாட்டார்கள் - சில சமயங்களில் சேர்ப்பார்கள்) புதிதாகக் கொதிக்க வைப்பதுதான் தொஸ்ஸு!

எங்கள் வீட்டில் அதுபோல ஆனால் வேறு மாதிரிச் செய்வது இந்த தொஸ்ஸு எனும்  பழங்குழம்பு! கார அல்வா!

முதல்நாள் மீந்துபோகும் சாம்பாரை,  - கவனிக்கவும் சாம்பாரைத்தான் - அதுவும் குறிப்பாக முருங்கைக்காய், அல்லது கத்தரிக்காய்ச் சாம்பாராக இருந்தால் இன்னும் சுவை.
 

                                                       Image result for sambar images
 
ஆனால் நாங்கள் சாம்பாரையும் ரசத்தையும் ஒன்றாக்குவதில்லை. சாம்பார் மட்டும்தான் எடுத்துக் கொள்வோம்.  காரக்குழம்பு எனும் வெந்தயக் குழம்பாயின் அதற்கு இந்த ட்ரீட்மெண்ட்டே தேவையில்லை. கொஞ்சம் சூடு பண்ணி அப்படியே சாப்பிடலாம்!  பருப்புக்குழம்புக்குத்தான் இது ஒத்து வரும்!
 
                                                                Image result for brinjal sambar 

ஏழெட்டு சின்ன வெங்காயங்களை நறுக்கிக் கொண்டு, அந்தப் பழங்குழம்பில் போட்டுக் கொள்வோம்.  (நாங்கள் முருங்கை, அல்லது கத்தரிக்காய் அல்லது முருங்கை, கத்தரிச் சாம்பார் என்றால் அந்தக் காய்கள் மட்டும்தான் போடுவோம். நோ வெங்காயம், நோ தக்காளி!) அந்தப் பழங்குழம்பைக் கொதிக்க வைப்போம்.  அடுப்பை ' சிம்'மில் வைத்து கிண்டிக் கொண்டே இருப்போம்.  அவ்வப்போது கொஞ்சமாய் நல்லெண்ணெய் ஊற்றிக் கொதிக்க வைப்போம்.  குழம்பிலிருக்கும் நீர்ச் சத்தெல்லாம் சுண்டி அல்வா பதத்துக்கு வரும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சுற்றி ஊற்றி இறக்கி வைத்து விடுவோம். 
 

                                                                              Image result for பழங் குழம்பு
 
எங்கள் டிராயிங் மாஸ்டர் சொன்ன தொஸ்ஸுவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.  தலைப்பு வைக்க ஒரு பெயர்க் கவர்ச்சிக்காக அதை உபயோகித்துக் கொண்டேன்.  அவ்வளவுதான்!

வீட்டில் இந்தக் குழம்புக்கு இருக்கும் வரவேற்பு இருக்கிறதே... அடடா....  அது தனிச் சுவை போங்க!  சில சமயங்களில் "அம்மா...  இன்னிக்கி பழங்குழம்பு வையேன்" என்றே கேட்குமளவு பிரசித்தம்.  எங்கள் வீட்டில் இந்தக் கார அல்வாவுக்கு வைத்திருக்கும் பெயர் சக்தி மசாலாக் குழம்பு!


படங்கள் :   "இணையம்தாங்க!"