பேராசைக் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசைக் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.7.15

99 ரூபாய்.



அதிகமாக ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன்.

 
கீழே ஒரு 50 ரூபாய் நோட்டும், அதற்குள் இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளும் பொதிந்தபடி கிடந்தது.
 
 
 
அதைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கையில் வைத்துக் கொண்டு நடந்தவன் சற்று தூரத்தில் ஒரு 5 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்தேன்.  என்னவோ தோன்ற மேலும் பார்த்துக் கொண்டே நடந்ததில் இரண்டு, இரண்டு ரூபாய் நோட்டுள்  கிடைக்கவும், என் எண்ணம் சரிதான் என்று புன்னகைத்தபடி மேலும் சுற்றுமுற்றும் பார்த்தபடி சுற்றி வந்தேன்.
 
நிச்சயம் 100 ரூபாய் இருக்க வேண்டும்.  அந்த ஒரு ரூபாய் இங்குதான் எங்கோ கிடக்க வேண்டும்.
 
புற்களுக்கு நடுவே பார்த்த படி நடந்தேன்.  ஒரு யு டர்ன் அடித்து அடுத்த லேனில் பார்த்தபடி நடந்தேன்.
 
 
இவ்வளவு கிடைத்தது, அது கிடைக்காதா என்ன!

 99 ரூபாய் இருக்கிறது என்றால், அந்த ஒரு ரூபாய் எங்கே?  இங்கேதான் எங்கோ கிடக்க வேண்டும்?  மற்ற நோட்டுகள் 'சட்சட்'டெனக் கிடைத்தது போல இதுவும் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பில் மீண்டும் மீண்டும் குனிந்து பார்த்துக் கொண்டே நடந்தேன்.
 

                                                              Image result for rupees in grass clip art images
 
கீழே கிடந்த சில சிறு குப்பைக் காகிதங்கள் கூட ஒரு ரூபாய் நோட்டோ என்று சந்தேகப் படவைத்து எடுத்துப் பார்க்கச் செய்தன.
 
அது கிடைக்காமல் திரும்பிச் செல்வதில் விருப்பமும் இல்லை.  எனவே தேடிக் கொண்டே மீண்டும் ஒரு சுற்று வந்தபோது அவர் எதிர்ப்பட்டார்.
 
"என்ன தேடறீங்க?"
 
"ஒரு ரூபாய்!" சொல்லி விட்டு அவரைப் பார்த்தேன்.  அவரும் ஏதோ தேடிக் கொண்டிருந்தார்.
 
"நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?"
 
"99 ரூபாய் சட்டைப் பையில் வைத்திருந்தேன்.  பொடிமட்டை எடுத்தபோது விழுந்திருக்க வேண்டும்.  அதைத்தான் தேடுகிறேன்.  ஒரு  ரூபாய்க்கு வாங்கிய பொடிமட்டைதான் சட்டைப்பையில் மிச்சம்"  என்றார்.

கையில் வைத்திருந்த 99 ரூபாயை அவரிடம் சேர்த்து விட்டு என் வழி நடந்தேன்!


                                                                    Image result for two men searching for something in a park clip art images 






படங்கள் :  இணையத்திலிருந்து.

7.7.15

சும்மான்னா ரெண்டாக் குடு!



ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?  பிறர் பொருளுக்கு ஆசைப் படுதல் ஒரு ரகம்.  தகுதிக்கு மீறி ஆசைப் படுதல் ஒரு ரகம்.

நடந்துபோகும் சாலையில் பணமோ பொருளோ கிடந்தால் எத்தனை பேர்கள் உரியவர்களிடம் சேர்ப்பிக்க நினைக்கிறார்கள்?

கைக்குக் கிடைக்கும் எதுவும் போதும் என்கிற மனம்தான் வருகிறதா?  பஸ் ஸ்டாப்பில் நின்றிருப்போம்.  பஸ் நிற்காமல் போனால் கோபம் வரும்.  ஒரு பஸ் நின்று, நாம் அதில் ஏறி விட்டபின் நிலைமை தலைகீழ்.  அடுத்தடுத்த நிறுத்தங்களில் பஸ் நின்று சென்றால், லேட் ஆகிறது, மெதுவாகச் செல்கிறது எனும் கோபம்.  பயணிகள் மேலே மேலே ஏறினால், நமக்கு சௌகர்யத்துக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று முணுமுணுப்போம்.  சுயநலம்.

கணவன் விற்கும் கடை இருந்ததாம்.  'இதைவிட நல்ல கணவன் வேண்டுமென்றால் மாடிப் பகுதிக்குச் செல்லவும்' என்ற போர்ட் இருந்ததாம்.  கடைசியில் 'உங்களைத் திருப்திப் முடியாது என்பதைச் சொல்லவே ஐந்தாவது மாடி' என்று ஒரு கதை வரும். 


இது ஆண்களுக்கும் பொருந்தும்.  ஆறுமாதம் பொறுத்திருந்தால் மொபைலும், மனைவியும் நல்ல மாடல் கிடைப்பார்கள் என்பது ஜோக்!


பேரம் பேசிக் கொண்டே வந்து, கடைக்காரன் வெறுப்பில் "சும்மாவே எடுத்துக்கிட்டுப் போய்யா"என்றால், "அப்போ ரெண்டாக் குடு" என்று கேட்கும் மனித மனம்.

ஒரு விவசாயி இருந்தானாம்.  தோட்டத்தில் ஒருநாள் அன்று பெய்த மழையில் எல்லா கீரைகளும், காய்களும், பூக்களும் வீணாகப் போயிருக்க, இன்றைய சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போயிற்றே என்று வருந்திய நேரம், ஒரு பாதுகாப்பான அமைப்பின் கீழ் ஒரு தாமரை மலர் மட்டும் பெரிதாக மலர்ந்து கண்ணைக்கவரும் வகையில் அழகாக இருந்ததைக் கண்டான்.

                                                          Image result for large lotus images

சோகமாக அதைப் பறித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். இந்த அடர்மழை பெய்யாமலிருந்திருந்தால் 100 வராகன் முதல் 200 வராகன் வரை இன்று வியாபாரம் நடந்திருக்குமே' என்று எண்ணமிட்டபடி நடந்தான்.


எதிரில் ஒரு மனிதன் வந்தான்.  இவன் கையிலிருந்த தாமரை மலரைப் பார்த்தவன் "50 வராகன் தருகிறேன்.  அந்தப் பூவைக் கொடு" என்றான்.


இரண்டு வராகன் பெறும் மலருக்கு 50 வராகனா?  திகைத்த விவசாயி அவனிடம் காரணம் கேட்டான்.

"இன்று புத்தரின் பிறந்த நாள்.  அதற்குத்தான் கேட்கிறேன்"

அவனிடம் பூவைத் தராமல் தாண்டி நடந்தான்.  எதிரில் குதிரையில் வந்த இன்னொரு மனிதன் "நூறு வராகன் தருகிறேன்.  அந்தப் பூவைக் கொடு.  புத்த பகவானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்" என்றான்.

ஆச்சர்யப்பட்டுப் போனான் விவசாயி.

அவனுக்கும் தராமல் தாண்டி நடந்தான் விவசாயி. எதிரே அந்நாட்டின் மந்திரி வந்தார்.  அவர் 1000 வராகன் தரத் தயாராக இருந்தார். 

அவருக்கும் மறுப்பாகத் தலையாட்டி விட்டு மேலும் நடந்தான்.

அரசவைக்குச் சென்றால் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தது அவனிடம்.

ஆனால் எதிரே புத்த பகவான் ஆலயம்தான் வந்தது.  உள்ளே நுழைந்தான்.
பிரம்மாண்டமான புத்தர் சிலையைக் கண்டு பிரமித்து நின்றான்.

                                                               Image result for lord buddha images


அருகே சென்றவன் அந்த மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றான்.

 
அமைதியாகத் திரும்பி நடந்தான்.

இதுவும் ஒரு மனம்.